ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143551 topics in this forum
-
தமிழர் படை உறங்கவில்லை - போராட்டம் தொடர்கிறது அண்மையில் தமிழீழத்தில் நடைபெற்ற தேர்தலில் தமிழீழ மக்கள் தமது அரசியல் விழிப்பை காட்டியுள்ளனர். அவர்கள் இந்த தேர்தல் மூலம் கூறிய செய்தி - நாம் என்றும் தமிழீழ கோரிக்கையுடன் தான் வாழ்கிறோம் என்பது தான், இது தமிழ் தேசிய முன்னணிக்கு கிடைத்த வெற்றியல்ல, தமிழ் மக்களை அழித்தவனுக்கும் (சிங்கள ஆட்சியாளர்கள்), தமிழ் ஈழம், தமிழ் தேசியம் என்று கூறிக்கொண்டு சிங்கள ஆட்சியாளர்களுடன் சேர்ந்து தமிழை அழித்து, தமிழர் போரரட்டத்தை அழித்து, தமிழர் விடுதலையை அழித்து இன்றும் தமிழர்களிடையே இருந்து கலாச்சார சீர்ரழிவு, கொலை, கொள்ளை, பாலியல் வல்லுறவு செய்து கொண்டிருபவர்களுக்கு கிடைத்த தோல்வி. இதை தமிழ் தேசிய முன்னணி அரசியல்வாதிகள் சிந்தித்து செயல…
-
- 0 replies
- 992 views
-
-
பளைப் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்தனர். இன்று அதிகாலை நெல்லியடிப் பகுதியில் இருந்து தென்னிலங்கைக்கு வெங்காயம் ஏற்றிச் சென்ற லொறியின் முன்பக்க ரயர் வெடித்து மரத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த இருவர் உயிரிழந்தனர். ஒருவர் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். மற்றையவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு அங்கு உயிரிழந்தார். இச்சம்பவம் பளைக்கும் புதுக்காட்டுச் சந்திக்கும் இடைப்பட்ட பகுதியில் இடம்பெற்றது. லொறிச் சாரதியான புத்தூர் வடக்கைச் சேர்ந்த குகதாசன் (வயது 59) என்பவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். கரணவாய் வடக்கு, கரவெட்டியைச் சேர்ந்த தெ.ரெங்கநாதன் அந…
-
- 7 replies
- 1.7k views
-
-
விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளின் புனரமைப்புகளுக்கும் சேர்த்தே இலங்கைக்கு நிதி வழங்கப்படுகின்றது: ஜப்பான் அரசு. இலங்கைக்கு இராணுவ ரீதியான உதவிகளை எவையும் வழங்கவில்லை என்கிறது ஜப்பான். மனிதாபிமான நடவடிக்கைகள், புனரமைப்பு மற்றும் மீள்கட்டுமான பணிகளுக்காக ஜப்பான் அரசாங்கம் இலங்கைக்கு தொடர்ந்தும் உதவிகளை வழங்கும். இலங்கையில் சமாதானம் ஏற்பட வேண்டுமென்றே நாம் விரும்புகின்றோம். இராணுவ ரீதியான உதவிகளையோ, ஆயுதங்களையோ இலங்கைக்கு ஒருபோதும் வழங்கவில்லை. எனவே, இலங்கைக்கான நிதியுதவிகளை குறைப்பதில்லை என்ற நிலையில் நாம் உறுதியாக உள்ளோம் என ஜப்பான் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது. சர்வதேச மனித உரிமை அமைப்பின் பிரதிநிதிகள் கடந்தவாரம் ஜப்…
-
- 5 replies
- 1.8k views
-
-
இன்று தேசியத் தலைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம் நிகழ்ந்த நாள் தலைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம் இந்நாளில் நிகழ்ந்தது (04-08-1987). தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் முதன் முதல் தமிழீழ மக்கள் முன் தோன்றி... உரையாற்றிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு இந்நாளில் நிகழ்ந்தது. தேசியத் தலைவரின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சுதுமலைப் பிரகடன உரை 1987 -08-04 1987ம் ஆண்டு ஜுலை மாதத்தில் ‘ஒப்பரேஷன் பூமாலை’ நடவடிக்கை இந்தியப் படைகளால் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து இலங்கையும் இந்தியாவும் தமக்கிடையில் ஒரு ஒப்பந்தத்தைச் செய்து கொள்ளத் தயாராகியிருந்தன. புலிகளின் தலைவர் பிரபாகரன் அப்பொழுது ஈழமண்ணில் தமது தலைமையகத்தை அ…
-
- 2 replies
- 806 views
-
-
சிறிலங்கா அதிபரின் சீனப் பயணத்திற்கான பின்னணி பொருளாதார ஒத்துழைப்பல்ல - ரொய்டர் [ புதன்கிழமை, 10 ஓகஸ்ட் 2011, 09:25 GMT ] [ நித்தியபாரதி ] 'பொருளாதார ஒத்துழைப்பு என்பது சிறிலங்கா அதிபரின் சீனப் பயணத்திற்கான பிரதான காரணியாக இருக்கவில்லை' இவ்வாறு Reuters செய்தி நிறுவனம் தனது செய்தி ஆய்வில் தெரிவித்துள்ளது. அதன் முழுவிபரமாவது, சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்தக் குற்றங்களை முன்னிறுத்தி மேற்குலக சக்திகளால் மேற்கொள்ளப்பட்டு வரும் அழுத்தங்களில் இருந்து தப்பிப்பதற்கான வழிவகையை தேடிக்கொள்வதன் பொருட்டு செவ்வாயன்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச சீனாவிற்குப் பணயம் மேற்கொண்டுள்ளார். அதேவேளையில், போட்டி நிறைந்த பொருளாதார உலகில் சிறிலங்காவின் பொருளாதாரத்தை பலப்படுத்து…
-
- 2 replies
- 693 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் அடை மழை: நூற்றுக் கணக்கானோர் இடம்பெயர்வு. முல்லைத்தீவு மாவட்டத்தில் பெய்துவரும் அடைமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக சுமார் நூறு பேர் வரையானே மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். முல்லைத்தீவில் 28 குடும்பங்களை சேர்ந்த 96 பேர் இவ்வாறு இடம்பெயர்ந்துள்ள நிலையில், அவர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) கொக்குத்தொடுவாய் மகாவித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அடைமழை காரணமாக வெள்ளநீர் வீடுகளுக்குள் புகுந்ததால் மக்களின் இயல்புவாழ்வு பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கொக்குத்தொடுவாய் வடக்கு, கருநாட்டுக்கேணி கிராம மக்கள் பெரும்பாலும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், தமது அடிப்படை தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியாத நிலையில் குறித்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேற…
-
- 0 replies
- 376 views
-
-
கோதபாய ராஜபக்ஷவை இந்து நாளேடு கண்டித்தது. இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோரரும், இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமான கோதபாய ராஜபக்ஷ, இந்தியாவின் ஹெட்லைன்ஸ் டுடே தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில் வெளியிட்ட கருத்துக்களை இந்தியாவின் ஹிந்து நாளேடு கண்டித்துள்ளது. ஆசிரியர் தலையங்கம் ஒன்றை அந்த ஏடு இன்று வெளியிட்டது. போரின் வெற்றியைத் தொடர்ந்து, இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பலம் நாடாளுமன்றத்தில் அதிகரித்துள்ளதாகவும், போரின் முன்பிருந்து நிலவிய தமிழர்களின் குறைகளைத் தீர்ப்பதற்கு அது வாய்ப்பாக அமைந்தாலும் அந்த விடயம் தொடர்பாக இலங்கை அரசு மிகக் குறைந்த நடவடிக்கைகளை மட்டும் எடுத்துள்ளமை, போரின்போது இலங்கைக்கு ஆதரவு வழங்கிய இந்தியா போன்று நண்பர்க…
-
- 23 replies
- 1.9k views
-
-
மத்திய அரசாங்கமானது வடமாகாணத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முஸ்தீபு செய்கின்றது என வட மாகாணத்திற்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் உதவி செயலாளரும் ,ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டத்தின் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளருமான ஹோலியாங் சு விடம் வடமாகண முதல்வர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார். அத்துடன் வடக்கில் இராணுவத்தை குறைப்போம் என்று கூறியவர்கள் தற்போது இராணுவம் குறைக்கப்படமாட்டாது கூறுவதுடன் காணமல் போனவர்கள் தொடர்பாக பிரச்சினைக்கு இதுவரையில் எந்தப் பதிலும் கிடைக்கவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகள் சபைய…
-
- 0 replies
- 912 views
-
-
Sunday, August 21, 2011, 22:14 இந்தியா, உலகம் அமெரிக்காவில் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் தூக்கு தண்டனை ரத்து செய்வதற்காக கை எழுத்து பிரச்சாரம் நடைப்பெற்றது பெரும் கவனத்தை ஈர்த்தது. சான் பிரான்சிஸ்கோ விரிகுடா பகுதி தமிழர்கள் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியர்வர்களின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி பிரிமான்ட் நகரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சான் ஒசே, சன்னிவேல் உட்பட அருகில் இருந்த பல நநரங்களில் இருந்து தமிழர்கள் குடும்பத்துடன் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்ததை காண முடிந்தது. பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியர்வர்களின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரிய கோரிக்கை மனுவில் கையொப்பங்களை சேகரித்தனர். இந்திய தூதரகத்தின் மூலம் இந…
-
- 1 reply
- 665 views
-
-
பிரித்துப் பார்ப்பது தவறு! கொழும்பிலிருந்து தமிழரை வெளியேற்றியமை பெரும் வாதப்பிரதிவாதங்களுக்கு உள்ளான விடயமாகியுள்ளது. ஒருபுறத்தில் வெளியேற்றுதலுக்கான கண்டனமும் மறுபுறத்தில் வெளியேற்றுதலுக்கான மன்னிப்புக் கோருதலும் நிகழ்ந்தன. தமிழரை வெளியேற்றியமை குறித்து எழுந்த பலமான கண்டனங்களைத் தொடர்ந்து பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கா மன்னிப்புக் கோரிய அதேவேளை கடும் நிபந்தனைகளுடன் வெளியேற்றப்பட்டவர்களை மீண்டும் கொழும்புக்குள் கொண்டு சென்றமையும் ஏற்கனவே அதிகம் பேசப்பட்ட விடயங்கள்தான். ஆயினும் இது தொடர்பான வாதப்பிரதிவாதங்கள் முற்றுப்பெற்றுவிட்டதாக இல்லை. ஒருபுறத்தில் ஆளும் கட்சியில் ஒருதரப்பினர் அத்தகையதொரு மன்னிப்புக் கோரவேண்டியதில்லை. அமெரிக்காவோ அன்றி மேற்கு நாட…
-
- 1 reply
- 1.2k views
-
-
கௌரவமான ஓய்வுக்குத் தயாராகும் ஜனாதிபதி சிறிசேன ? ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது தற்போதைய ஐந்து ஆண்டு பதவிக்காலத்தையும் முழுமையாகப் பூர்த்திசெய்துவிட்டு இரண்டாவது பதவிக்காலத்துக்கு மக்களின் ஆணையைக்கேட்பதற்கு தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்றுதீர்மானித்திருப்பதாக அவரது குடும்ப வட்டாரங்கள் கூறியதாக லங்கா இணையத்தள செய்திச்சேவையொன்று தெரிவித்திருக்கிறது. விடுமுறையில் தற்போது குடும்பத்தினருடன் தாய்லாந்து சென்றிருக்கும் ஜனாதிபதி சிறிசேன அங்கு அவர்களுடன் தனது அரசியல் எதிர்காலம் குறித்து ஆராய்ந்ததாகவும் இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைவரம் குறித்து கடுமையான கவலையை அவர் வெளிப்படுத்தியதாகவும் அந்த வட்டாரங்கள் கூறியதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஜனாதிபத…
-
- 0 replies
- 400 views
-
-
27 NOV, 2023 | 08:17 PM இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே புதன்கிழமை மூன்று நாள் விஜயமாக வடக்கு மகாணத்திற்குச் செல்லவுள்ளார். இந்த விஜயத்தின் முதன் நாளான நாளையதினம் மதவாச்சியில் பாடசாலைகளுக்கான உதவித்திட்டங்களை கையளிக்கவுள்ளதோடு, அதனையடுத்து மன்னார் பியர் பகுதிக்கும், பின்னர் திருக்கேதீச்வரர் ஆலயத்துக்கும் செல்லவுள்ளார். தொடர்ந்து முதன்நாளின் இறுதி நிகழ்வாக இரவு நேர விருந்துபசாரத்துடன் வடக்கு மாகாண அரசியல்தரப்பினரைச் சந்தித்து உரையாடவுள்ளார். இரண்டாவது மற்றும் மூன்றாம் நாளான 30ஆம் மற்றும் முதலாம் திகதிகளில் நயினாதீவுக்குக்கான விஜயமொன்றை அவர் மேற்கொள்ளவுள்ளதோடு நயினை நாகபூசனி அம்மன் ஆலயத்துக்கும், நாகவகாரைக்கும் விஜயம்…
-
- 8 replies
- 794 views
- 1 follower
-
-
முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு வழங்கப்பட்ட தூக்குத் தண்டனையை ஆயுள்தண்டனையாக மாற்றுமாறு தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதற்கு ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சுவாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம், ‘’இது மோசமான முன்னுதாரணம். இதற்காக உயர்நீதிமன்றத்தை நாடியது தவறானது. இது உச்சநீதிமன்றத்தால் கண்டனத்துக்குள்ளாகும்’’ என்று அவர் தெரிவித்துள்ளார். http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=60613
-
- 0 replies
- 762 views
-
-
பாதுகாப்பு, நீதி அமைச்சுகள் ஒத்துழைக்கவில்லை – அதிபர் ஆணைக்குழு குற்றச்சாட்டு APR 25, 2015 | 2:31by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் காணாமற்போனோர் குறித்த விசாரணைக்கு சிறிலங்காவின் பாதுகாப்பு மற்றும் நீதி அமைச்சுக்கள் ஒத்துழைக்கவில்லை என்று சிறிலங்கா அதிபரால் நியமிக்கப்பட்ட காணாமற்போனோர் குறித்து விசாரிக்கும் ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கடந்த 10ம் நாள் சிறிலங்கா அதிபரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பாக, ஆணைக்குழுவினால் ஊடக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், “சிறைச்சாலைகள், தடுப்பு முகாம்கள், அகதி முகாம்கள் அல்லது புனர்வாழ்வு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் பற்றிய விபரங்களை வெளியிட…
-
- 0 replies
- 247 views
-
-
உள்நாட்டு கறுவாப்பட்டைக்கு சீன சந்தையில் அதிக கேள்வி நிலவுகின்றது. இதனால் வருடாந்தம் இரண்டு பில்லியன் டொலர் பெறுமதியான கறுவாவை சீனாவிற்கு அடுத்த வருட தொடக்கத்தில் இருந்து ஏற்றுமதி செய்வதற்கான சந்தர்ப்பம் கிட்டியுள்ளது. இந்த ஏற்றுமதியானது நாட்டின் கறுவா சந்தைக்கு பெரும் அனுகூலமாகும் என கறுவா அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஜனக்க லிந்தர தெரிவித்துள்ளார். பல வருடங்களாக முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளின் பலனாக அண்மையில் ஜனாதிபதியின் சீன விஜயத்தின்போது இதற்கான அனுமதி கிடைத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/284112
-
- 0 replies
- 269 views
- 1 follower
-
-
மாமனிதர் ஊடகவியலாளர் தர்மரெத்தினம் சிவராமின் 10ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, இன்று பிற்பகல் 3 மணியளவில் அவரது பிறந்த ஊரான மட்டக்களப்பில் மாநகரசபை மண்டபத்தில் ஆரம்பமானது. இவ் நினைவேந்தல் நிகழ்வை வடக்கு, கிழக்கு, தெற்கு ஊடக அமைப்புகள் ஏற்பாடு செய்துள்ளனர். இந்த நினைவேந்தல் நிகழ்வு மௌன வணக்கத்துடன் மலரஞ்சலி செலுத்தப்பட்டு ஆரம்பமானது. ஆவணப்பட வெளியீடும் நடைபெற்றது. 'சிவராமுடனான நாட்கள்' என்ற தலைப்பில் வீரகேசரி குழுமத்தின் ஆலோசகர் வி.தேவராஜா, 'ஊடகங்களின் சுதந்திரம்' என்ற தலைப்பில் சுதந்திர ஊடக இயக்கத்தின் அமைப்பாளர் சுனில் ஜெயசேகர, 'இனிய நண்பன்' என்ற தலைப்பில் ஊடக சுதந்திரத்துக்கான செயற்பாட்டு இயக்கத்தின் அமைப்பாளரும் லேக்ஹவுஸ் நிறுவன முகாமைத்துவ பணிப்பாளருமான…
-
- 2 replies
- 1.4k views
-
-
வருடத்தின் முதலாவது நாடாளுமன்ற அமர்வு – எதிர்க்கட்சி தலைவர் பதவி தொடர்பில் தீர்மானம்! வருடத்தின் முதலாவது நாடாளுமன்ற அமர்வு இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ளது. இன்றைய தினம் எதிர்க்கட்சித் தலைவர் பதவி குறித்து இறுதி முடிவு அறிவிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்றம் இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் 1 மணிக்கு பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் கூடவுள்ளது. இவ்வருடத்தின் முதலாவது அமர்வென்பதால், சம்பிரதாயபூர்வமாக நிகழ்வுகள் ஆரம்பமாகவுள்ளன. இன்றைய தினம் பார்வையாளர்களின் கூடம் மீண்டும் திறக்கப்படவுள்ளது. கடந்த காலங்களில் நாடாளுமன்றில் இடம்பெற்ற சர்ச்சைகளைத் தொடர்ந்து பொதுமக்கள் பார்வைக்கூடம் மூடப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று மீண்டும் திறக்கப…
-
- 0 replies
- 254 views
-
-
சனி 14-07-2007 23:37 மணி தமிழீழம் [மயூரன்] புலிகளின் அறிவித்தலை அடுத்து சிறீலங்கா பொருளாதராத்தில் பாரிய தாக்கம் ஸ்ரீலங்காவின் பொருளாதார நிலைகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என விடுதலைப்புலிகள் அறிவித்துற்றமை ஸ்ரீலங்காவின் பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்று தீடிரென வீழ்ச்சி அடைந்துள்ளது. அமெரிக்க டொலரின் பெறுமதி 111 ரூபா 80 சதமாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இன்னும் சில தினங்களில் டொலரின் பெறுமதி 120 ரூபாவரை உயர்வடையும் என பொருளியல் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதேவேளை பங்கு பரிவர்தனையும் நேற்றைய தினம் மிகவும் மந்தமடைந்துள்ளதாக பங்கு சந்தை வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. …
-
- 1 reply
- 1.7k views
-
-
அடுத்த ஜனாதிபதியாக குமார் சங்கக்கார? வெளியானது அதிரடித் தகவல்! Gokulan சிறிலங்காவின் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பிரபல விளையாட்டு வீரர் குமார் சங்கக்கார போட்டியிடுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக உள்மட்டத் தகவல்கள் கசிந்துள்ளன. ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் பொது வேட்பாளராக குமார் சங்கக்கார களமிறக்கப்படலாம் என கொழும்பிலிருந்து வெளியாகியுள்ள தகவல்கள் கூறுகின்றன. இலங்கையின் பிரபல விளையாட்டு வீரரும் சர்வதேச ரீதியில் குறிப்பிடத்தக்க சாதனையாளராகவும் விளங்குகின்ற குமார் சங்கக்காரவை அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவதன்மூலம் கணிசமானளவு மக்களின் வாக்குகளைப் பெறக்கூடிய வாய்ப்புக்கள் காணப்படும் என ஐக்கிய தேசிய முன்னணி கருதுவதாக க…
-
- 4 replies
- 1.1k views
-
-
இந்தியாவையும், அமெரிக்காவையும் நம்புவதால் தமிழ் மக்களுக்கு விமோசனம் இல்லை – விக்கிரமபாகு! Published on September 19, 2011-9:50 am இந்தியாவையும், அமெரிக்காவையும் நம்புவதால் தமிழ் மக்களுக்கு எந்தவித விமோசனமும் கிடைக்கப் போவதில்லை; அதுதான் உண்மையும் கூட என்று தெரிவித்திருக்கிறார் புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன. இதேவேளை, தமிழர் பிரச்சினைகளைப் பயன்படுத்தி தனது நாட்டுக்கு ஆதாயம் தேட முனைபவர்களின் மாயைக்குள் தமிழ்த் தலைமைகள் சிக்கிவிடக்கூடாது என்று எச்சரிக்கிறார் ஜனநாயக சோஷலிசக் கட்சியின் தலைவர் ஸ்ரீதுங்க ஜெயசூரிய. தமிழர் பிரச்சினை தொடர்பில் இந்திய அரசு இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற…
-
- 1 reply
- 494 views
-
-
நாளை சுமார் 1,200 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளது January 20, 2019 முல்லைத்தீவிற்கு நாளை செல்லவுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் போதைப்பொருள் தடுப்புவாரத்தினை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு நாளை திங்கட்கிழமை முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் இடம்பெறவுள்ளது. இதன்போது படையினர் வசமுள்ள சுமார் 1,200 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது கடந்த வருடம் டிசம்பர் 31 ஆம் திகதிக்குள் படையினர் வசமுள்ள காணிகளை விடுவிக்க வேண்டுமென ஜனாதிபதி படைத்தரப்பினருக்கு வழங்கிய பணிப்புரைக்கமையவே இவ்வாறு காணிகள் விடுவிக்கப்படவுள்ளன. அதற்கமைய யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மாவட்டங்களிலுள்ள 1208.27 ஏக்கர் தனியார், மற்று…
-
- 2 replies
- 950 views
-
-
கடந்த 2 நாட்களில் அடுத்தடுத்து 10 பேர் மாயம்! நாட்டில் கடந்த 2 நாட்களில் அடுத்தடுத்து 10 பேர் காணமற்போயுள்ளனர் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இவ்வாறு காணாமற்போனவர்களில் வெலிபன்ன பத்தினியாகொட பகுதியைச் சேர்ந்த 2 வயதுச் சிறுமியும், கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த 14 வயதான பாடசாலை மாணவியொருவரும் அடங்குகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வரக்காபொலையைச் சேர்ந்த 26 வயதான நபரும், மொரட்டுவையைச் சேர்ந்த 57 வயதான பெண்ணும், முல்லேரியாவைச் சேர்ந்த 67 வயதுடைய நபரும், தம்பகல்லையைச் சேர்ந்த ஒருவரும், காரைத்தீவைச் சேர்ந்த 53 வயதான நபரும், வவுணதீவைச் சேர்ந்த 42 வயதான நபரும், மெதகமவைச் சேர்ந்த 40 வயதான நபரும் இவ்வாறு காணமற் போயுள்ளனர் எ…
-
- 1 reply
- 296 views
- 1 follower
-
-
வேதாரண்யம் மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை தாக்குதல் _ வீரகேசரி நாளேடு 9/26/2011 10:40:09 AM இலங்கைக் கடற்படையினரின் தாக்குதலுக்கு இலக்கான வேதாரண்யம் மீனவர்கள் மூவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வேதாரண்யத்தை அடுத்த புஷ்பவனம் மீனவர் கொலனியை சேர்ந்தவர்கள் மு. ஜெயபால், க. வீரமணி, சுந்தரமூர்த்தி. மூவரும் புஷ்பவனத்திலிருந்து கண்ணாடி இழைப் படகில் வெள்ளிக்கிழமை கடலுக்கு சென்றனர். அன்று இரவு சுமார் 11 மணியளவில் வேதாரண்யத்துக்கு கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அப்பகுதிக்கு படகில் வந்த இலங்கைக் கடற் படை யி னரில் இருவர், அவர்களின் படகில் ஏறி இரும்புக் கம்பியைக் கொண்டு மீனவர்களைத் தாக்கியுள்ளனர். மேலும் அவர்களிடமிருந்த ஐஸ…
-
- 0 replies
- 393 views
-
-
தமிழகத்தில் தஞ்சமடைந்த 83 இலங்கை அகதிகள் நாடுதிரும்பவுள்ளனர் இந்தியாவின் தமிழகத்திலிருந்து 83 இலங்கை அகதிகள் நாடு திரும்பவுள்ளனர். இம்மாதம் 31 ஆம் திகதி 39 குடும்பங்களைச் சேர்ந்த 83 பேர் நாடு திரும்பவுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தியாவிலிருந்து இரு விமானங்களில் இவர்கள் நாடு திரும்பவுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி தெரிவித்துள்ளார். இவ்வாறு நாடு திரும்பவுள்ளவர்களில் 34 ஆண்களும் 49 பெண்களும் உள்ளடங்குகின்றனர். யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களே இம்மாதம் 31 ஆம் திகதி நாடு திரும்பவுள்ளனர். இவர்களுக்கான இலவச விமான பயணச்சீட்டு வழங்கப்ப…
-
- 1 reply
- 292 views
-
-
Published By: DIGITAL DESK 3 22 JAN, 2024 | 06:41 PM இவ்வருடம் கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சையை நிறைவு செய்யும் மாணவர்களுக்கு ஆங்கில மொழி உட்பட தகவல் தொழில்நுட்பம் பற்றிய அறிவுடன் தொழில் கல்வியை கற்பிக்கும் வேலைத்திட்டம் பெப்ரவரி மாதம் முதல் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். உயர்தரக் கல்வியினை நிறைவு செய்யும் மாணவர்களை தொழில் கல்வியை நோக்கி வழிநடத்தும் நோக்கில், நாடளாவிய ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட 299 பாடசாலைகளில் இந்தத் தொழிற்பயிற்சித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இவ்வருடம் கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை பரீட்சைக்குத் தோற்றியுள்ள மாணவர்கள் பெப்ரவரி 9 ஆம் திகதிக்கு முன்னர் இந்த…
-
- 2 replies
- 409 views
- 1 follower
-