ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143559 topics in this forum
-
மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையினால் அமெரிக்காவிலிருந்து வருகை தந்து இந்து ஆன்மீகத்தை எமது சிவபூமியான இலங்கைத் திருநாட்டில் வளர்த்த ஆன்மீகத் துறவி சமாதியடைந்த வணக்கத்துக்குரிய ஸ்ரீமத் சுவாமி தந்திரதேவா மகராஜின் 63வது ஜனனதினம் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் தலைமையில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. காலை 8.30 மணிக்கு மட்டக்களப்பு பொலிஸ் நிலையம் முன்பாகவுள்ள சுவாமி தந்திரதேவா மகராஜின் திருவுருவச்சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு, பூசைகள் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு கோட்டமுனை அரசடிப் பிள்ளையார் ஆலயத்தில் பூசைகள் இடம்பெற்று அதனைத் தொடர்ந்து மங்கள விளக்கேற்றல் நிகழ்வு இடம்பெற்று பின்னர…
-
- 0 replies
- 204 views
-
-
பளையிலும் நூற்றுக்கணக்கான காணிகள் சீன நிறுவனத்துக்கு: அம்பலப்படுத்தினார் சுரேஷ் பிரேமச்சந்திரன் யாழ்ப்பாண மாவட்டம் பளை பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கர் காணிகளை சீன நிறுவனம் ஒன்றிற்கும், சிங்கள வர்த்தகர்களிற்கும் வழங்கும் நடவடிக்கையை கோட்டாபய அரசு முன்னெடுத்துவருவதாகவும் இதனை செய்யும்பொருட்டு பிராந்திய காணி சீர்திருத்த ஆணைக்குழு யாழ்ப்பாணத்தில் இருந்து அனுராதபுரத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறியுள்ளார். இன்று (18) யாழ்ப்பாணத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் சுரேஷ் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், பளை பகுதியில் காணி சீர்திருத்த ஆணைக்குழு…
-
- 1 reply
- 425 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் போர் நிறுத்தம் ஒன்றைச் செய்துகொள்வது தொடர்பாக இந்தியாவைச் சேர்ந்த வாழும் கலை நிறுவனத்தின் தலைவர் சிறீ சிறீ ரவிசங்கர் குருஜியுடன் எந்தவிதமான பேச்சுக்களையும் தாம் மேற்கொள்ளப்போவதில்லை என சிறிலங்கா அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்திருக்கின்றது. விடுதலைப் புலிகள் அமைப்புடன் எந்தவித பேச்சுக்களையும் நடத்துவதில்லை என்ற அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் எந்தவிதமான சமரசத்துக்கும் இடமில்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கும் அரசாங்க வட்டாரங்கள், இந்த விடயத்தில் மக்கள் மத்தியில் தவறான கருத்துக்களை உருவாக்குவதற்கு வாழும் கலை நிறுவனம் முற்படக்கூடாது எனவும் எச்சரித்திருக்கின்றது. கடந்த மாதத்தில் கொழும்பு வந்த சிறீ சிறீ ரவிசங்கர், அரச தலைவர் மகிந்த ராஜப…
-
- 0 replies
- 593 views
-
-
முல்லைத்தீவு கேப்பாப்புலவு பகுதியில் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள கால்நடைகளை மீட்டுத்தருமாறு அதன் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். முல்லைத்தீவு கேப்பாப்புலவு பகுதியில் பொதுமக்களுக்கு சொந்தமான காணிகள் அவர்களது பூர்வீக வாழ்விடங்கள் தொடர்ந்தும் படையினரின் ஆக்கிரமிப்பில் உள்ளது. இதனை விடுவித்து தங்களது வாழ்விடங்களுக்குச் சென்று வாழ்வதற்கான அனுமதியை பெற்றுத்தருமாறு தொடர்ந்து பல்வேறு போராட்டத்தினை இம் மக்கள் மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே, விடுத்த கோரிக்கைகளுக்கு அமைவாக கடந்த ஆண்டில் ஒரு பகுதி கால்நடைகளைப் பிடிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்ட போதும் அதன் அனுமதி உடனடியாக நிறுத்தப்பட்டது. ஆனால், தற்போது படையினரின் கட்டுப்பாட்…
-
- 0 replies
- 151 views
-
-
கே .குமணன் முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு குருந்தூர்மலை பகுதியில் அமைந்துள்ள குருந்தூர் குளத்தில் தூண்டில் போட்டு மீன்பிடிக்க சென்ற உள்ளூர் கிராம மக்களுக்கு இராணுவம் தடை விதித்துள்ளதோடு மீன் பிடித்த ஆறுமுகத்தான்குளத்தினை சேர்ந்த கிராமவாசிகளை தடிகளை கொண்டு மிரட்டி அனுப்பியுள்ள சம்பவம் கடந்த 16 ஆம் திகதி அன்று இடம்பெற்றுள்ளதாக மீன்பிடிக்க சென்றவர்கள் தெரிவித்துள்ளனர். குறித்த குருந்தூர் குளத்துக்கு அண்மையாகவுள்ள குருந்தூர் மலையில் தொல்லியல் ஆய்வுகளை இராணுவமும் தொல்லியல் திணைக்களமும் இணைந்து மேற்கொண்டுவரும் நிலையில், அப்பகுதியில் காவலரண் அமைத்து தங்கியுள்ள படையினர் வலைகளை கொண்டும் தூண்டில் போட்டும் குளத்தில் ஜப்பான் மீன்களை தாம் பிடித்து உண்டுவரும் நிலையில் வயித்…
-
- 0 replies
- 246 views
-
-
சிறிலங்கா அரசாங்கத்தின் காட்டுமிராண்டித்தனமான இனப்படுகொலையை சர்வதேசம் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்: கஜேந்திரன் வேண்டுகோள் சிறிலங்கா அரசாங்கத்தின் காட்டுமிராண்டித்தனமான அப்பட்டமான இனப்படுகொலையை சர்வதேசம் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். நேற்று சனிக்கிழமை நள்ளிரவு தொடக்கம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை வரை முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம் பெற்ற கண்மூடித்தனமான தாக்குதலில் 2000 ற்கும் அதிகமான பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டும் மேலும் பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் படுகாயமடைந்தும் உள்ளதாகவும் இந்தக் கணம் வரை சுமார் 850 ற்கும் அதிகமான காயமடைந்தவர்கள் வைத்திசாலை அமைந்துள்ள இடத்திற்கு வந்து சேர்ந்துள்ளதாகவு…
-
- 1 reply
- 413 views
-
-
சுதந்திரதினத்தன்று மாவட்ட செயலகம் முன்பாக அமைதி போராட்டம். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலான விபரங்களை வெளியிட வேண்டும் , அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் ஆகிய ஐந்து அம்ச கோரிக்கைகளை முன் வைத்து சுதந்திர தினத்தன்று போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக வடமாகாண சபை ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்து உள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , சுதந்திர தினத்தன்று யாழ்.மாவட்ட செயலகத்தின் முன்பாக அமைதி போராட்டம் ஒன்றினை முன்னெடுக்க உள்ளோம். வலிந்து கா…
-
- 0 replies
- 244 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் பகுதியில் உள்ள தற்காலிக மருத்துவமனை மீது சிறிலங்கா படையினர் இன்று முற்பகல் மீண்டும் நடத்திய அகோர எறிகணைத் தாக்குதல்களில் மருத்துவர், அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கப் பணியாளர், நோயாளர்கள் உட்பட 52 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 117 பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 295 views
-
-
13ஆவது அரசமைப்புத் திருத்தம் தொடர்பில் இலங்கை அரசுடன் இந்தியா முக்கிய பேச்சுகளை நடத்துமென இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தி தெரிவித்திருக்கிறார். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான குழு நேற்றுக்காலை புதுடில்லியிலுள்ள "ஜன்பத்' இல்லத்தில் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியைச் சந்தித்தது. அமைச்சர் ஆறுமுகனுடன் பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம், நாடாளுமன்ற உறுப்பினர் இராஜதுரை, முன்னாள் மாகாணசபை உறுப்பினர் மதியுகராஜா, அனுஷியா சிவராஜா ஆகியோரும், காங்கிரஸ் தரப்பில் மத்திய இணையமைச்சர் நாராயணசாமியும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர். இலங்கை அரசமைப்பின் 13 ஆவது திருத்தம் குறித்து இங்கு விரிவாகப் பேசப்பட்டதுடன் தமிழ் மக்கள…
-
- 1 reply
- 556 views
-
-
-
- 0 replies
- 288 views
-
-
கிழக்கு இளைஞர்கள் சிலரின் மனதில் கலீபா ஆட்சியை இலங்கையில் உருவாக்கும் எண்ணம் உள்ளது! - பிள்ளையான் By கிருசாயிதன் கலீபா ஆட்சியை இலங்கையில் உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் கிழக்கில் ஒரு சில இளைஞர் மத்தியில் உள்ளது எனவும் வெளிநாடுகளில் இயங்கும் அடிப்படைவாத அமைப்புகள் இலங்கையிலும் பெயர் மாற்றப்பட்டு இயங்கிக்கொண்டுள்ளதாகவும் ஆளும் கட்சி உறுப்பினர் பிள்ளையான் எனப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் சபையில் தெரிவித்தார்.பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பான மூன்றாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,எமது நாட்டில் கடந்த காலத்தில் எமது இனத்துக…
-
- 2 replies
- 579 views
-
-
தேவையென்றால் 13ம் திருத்தச் சட்டத்தை மாற்றலாம் - சரத் பொன்சேகா 02 ஜூலை 2013 தேவையென்றால் 13ம் திருத்தச் சட்டத்தை மாற்றலாம் என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். நாட்டுக்கு பாதக விளைவுகள் ஏற்படக் கூடிய அதிகாரங்கள் இருந்தால் 13ம் திருத்தச் சட்டத்தில் மாற்றங்கள் செய்வதில் தவறில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். முதலமைச்சருக்கு மோசமான அதிகாரங்கள் காணப்பட்டால் அதனை மாற்றியமைப்பது சரியானதே என அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் சகல இன மக்களினதும் உரிமைகளை உறுதி செய்யக் கூடிய வகையில் அரசியல் சாசனத்தில் மாற்றம் செய்யப்பட வேண்டுமேன அவர் வலியுறுத்தியுள்ளார். எவ்வாறெனினும், தற்போதைய சூழ்நிலையில் 13ம் திருத்தச் சட்த்தில் மாற்றங்களைச் செய்வது ஏற்றுக்கொள்ளக…
-
- 0 replies
- 348 views
-
-
யாழ் மக்களுக்கு இராணுவத் தளபதியின் வேண்டுகோள்! வெளிநாட்டு தொடர்புடைய தமிழ் மக்கள் சிலர் ராணுவத்திற்கு எதிராக பொய் பிரச்சாரம் செய்கிறார்கள் என யாழில் இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார். பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றிற்கு இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட வீட்டினை கையளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இன்றையதினம் யாழ்ப்பாண மாவட்டத்தில் யாழ்ப்பாண பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பெண் தலைமைத்துவத்தை கொண்ட கணவனை யுத்தத்தின் போது இழந்த ஒரு குடும்பத்தினருக்கு ஒரு வீட்டினை இராணுவத்தினரால் அமைத்து கொடுத்திருக்கின்றோம். அவர் தனது கணவனை இழந்த பின்னரும் தனது விடா முயற்சியின் காரணமாக சுய தொழிலினை வாழ்வாதாரமாக மேற்கொண்ட…
-
- 39 replies
- 3k views
-
-
கலப்பு நீதிமன்றம் இலங்கையில் சாத்தியமற்றது உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவே மாற்றுவழி என்கிறார் பிரதமர் ரணில் (க.கமலநாதன்) கலப்பு நீதிமன்ற கட்டமைப்பினை எமது நாட்டினுள் நிறுவுவது சாத்தியப்படாது. அதனை நிறுவவேண்டுமாயின் பொது வாக்கெடுப்புக்குச் சென்று மூன்றிலிரண்டு பெரும்பான்மையை பெறவேண்டும். ஆகவே மாற்று வழியாக உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை விரைவில் நிறுவவுள்ளோம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். சட்ட வாரத்தினை முன்னிட்டு இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் …
-
- 1 reply
- 220 views
-
-
கொரோனா: இந்தியாவைப் போல் இலங்கையும் மாறலாம் – பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை 13 Views இலங்கை இந்தியாவில் காணப்படும் கொரோனா வைரஸ் நிலைமையை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றது என பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பி.சி.ஆர் மற்றும் துரிதஅன்டிஜென் சோதனையை நாளாந்தம் பத்தாயிரம் என்ற அளவிற்கு அதிகரிக்காவிட்டால் இந்தியா தற்போது எதிர்கொள்ளும் நிலைமை போன்ற ஆபத்தான நிலை இலங்கையில் ஏற்படலாம் என பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் மகேஸ்பாலசூரிய தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், புத்தாண்டு கொண்டாட்டங்களிறகு முன்னர் சுகாதார விதிமுறைகளை முற்றாக புறக்கணிக்கப்ப…
-
- 0 replies
- 311 views
-
-
(எம்.மனோசித்ரா) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஏற்பாடு செய்திருந்த இஃப்த்தார் நிகழ்வில் 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஆதரவளித்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரம் கலந்து கொண்டிருந்தமை சந்தேகத்தை தோற்றுவிக்கிறது. அரசாங்கம் அடுத்து கொண்டுவரவுள்ள சட்டமூலங்களுக்கு ஆதரவளிப்பதற்கு இவர்கள் தயாராகிறார்களா என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் கேள்வி எழுப்பினார். கொழும்பில் நேற்று வியாழனன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் , பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் இஃப்த்தார் நிகழ்வில் 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஆதரவளித்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரம் கலந்து கொண்டனர். இதில்…
-
- 1 reply
- 404 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான செயலகத்தின் பொறுப்பாளர் கே.பி. என்று அழைக்கப்படும் செல்வராசா பத்மநாதனை சர்வதேச பொலிஸாரின் உதவியுடன் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், கே.பி.யின் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்ற கற்பனையை கனவுலகத்திலேயே மட்டுப்படுத்துவோம் என்று வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்தார். வெளிவிவகார அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். http://www.swissmurasam.net/srilanka/14961...7-14-40-00.html
-
- 1 reply
- 1.2k views
-
-
சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சையை பெற்றுகொண்டு நாடு திரும்பியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா இன்று ஜனாதிபதியை சந்தித்து வணங்கி ஆசீர்வாதம் பெற்றுகொண்டார். (படங்கள்: நிசல் பதுகே) http://tamil.dailymirror.lk/--main/75971-2013-07-22-13-11-24.html
-
- 1 reply
- 633 views
-
-
தமிழீழத்தைப் பெற்றுக்கொள்ளவே ஐ.நா.வில் பிரேரணை தாக்கல் ஜெனிவாவில் முழங்கினார் சரத் வீரசேகர (ஜெனிவாவிலிருந்து எஸ்.ஸ்ரீகஜன்) தமிழீழத்தை அடைந்து கொள்ளும் நோக்கில் புலம்பெயர் தமிழர்கள் மேற்கொள்ளும் முயற் சியே ஐ.நா.மனித உரிமை பேரவையின் பிரேர ணையாகும். இதற்கு ஐ.நா.துணைபோகக்கூடாது என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர நேற்று ஜெனிவாவில் தெரிவித்தார். நேற்று இடம்பெற்ற ஐ.நா.மனித உரிமைபேரவை அமர்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்: புலம்பெயர் அமைப்புக்கள் தமிழீழத்தை அடைந்து கொள்ளும்நோக்கிலேயே ஐ.நா…
-
- 0 replies
- 261 views
-
-
இந்தோனேஷிய தடுப்பு முகாமிலிருந்து இலங்கையர்கள் தப்பியோட்டம் 27 ஜூலை 2013 இந்தோனேஷிய தடுப்பு முகாமொன்றிலிருந்து இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் தப்பிச் சென்றுள்ளனர். இந்தோனேஷியாவின் சுகாபுமி என்னும் தடுப்பு முகாமிலிருந்து இவ்வாறு இலங்கையர்கள் தப்பிச் சென்றுள்ளனர். மூன்று இலங்கையர்களும், மூன்று ஈரானியர்களும் இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த முகாமில் 66 புகலிடக் கோரிக்கையாளர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். தற்போது 60 புகலிடக்கோரிக்கையாளர்களே இந்த முகாமில் இருப்பதாகவும், ஆறு பேர் தப்பிச் சென்றுள்ளதாகவும் முகாம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். யாருக்கும் தெரியாமல் எவ்வாறு குறித்த இலங்கை மற்றும் ஈரானிய புகலிடக் கோரிக்கையாளர்கள் தப்பிச் ச…
-
- 0 replies
- 281 views
-
-
எந்தவொரு இராணுவ வீரரையும் சந்தேக நபராக்க நான் தயாரில்லை: ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தத்தில் மனித உரிமைகளை மீறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் எந்தவொரு இராணுவ வீரரையும் சந்தேக நபராக ஆக்குவதற்கு நான் தயாராக இல்லை என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கூறியுள்ளார். குருணாகலையில் நேற்று (29) நடைபெற்ற பாடசாலை கட்டடத் திறப்புவிழாவொன்றில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது: “தாய்நாட்டுக்காகப் போரிட்ட வீரர்களைக் காப்பது ஒரு அரசின் பொறுப்பும் கடமையும் ஆகும். ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் நான் எனது கடமையைச் செவ…
-
- 0 replies
- 165 views
-
-
கொரோனா வைத்தியசாலைக்கு சென்று உணவின் தரம் குறித்து ஆராய்ந்த சாணக்கியன்! மட்டக்களப்பு பெரியகல்லாறு பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் சிகிச்சை பெற்றுவரும் வைத்தியசாலைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் இன்று(ஞாயிற்றுக்கிழமை) திடீர் விஜயம் செய்திருந்தார். கொரோனா வைத்தியசாலையில் கொரோனா நோயாளர்களின் பிரச்சனை தொடர்பாகவும் வைத்தியசாலையில் உள்ள குறைபாடுகள் மற்றும் பிரச்சனைகள் குறித்தும் அவர் இதன்போது ஆராய்ந்துள்ளார். குறித்த வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவின் தரம் குறித்து பலரும், இரா.சாணக்கியனின் கவனத்திற்கு கொண்டு சென்றிருந்தனர். இந்தநிலையில் குறித்த வைத்தியசாலைக்கு உணவினை விநியோ…
-
- 0 replies
- 307 views
-
-
கடந்த யுத்தத்தின் போது, தமிழ் மக்கள் அதிகளவாக கொல்லப்பட்டது, தொடர்பாக சிறிலங்கா அரசே முதற்கட்ட விசாரணைகளை நடத்த வேண்டும் என சிலி வலியுறுத்தியுள்ளது. சர்வதேச குற்றவில நீதிமன்றத்தில் புதிதாக இணைந்து கொண்ட நிலையில் இதனை தெரிவித்துள்ள சிலி, 'சிறிலங்கா அரசினால் அதனை செய்யமுடியாவிடின் விசாரணை தொடர்பாக எந்தவொரு அங்கத்துவ நாடோ, அல்லது எந்தவொரு தனி நபரோ விசாரணைக்கான கோரிக்கையை விடுக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளது. சிலி நாட்டின் தலைமை அமைச்சர் ஜோங் அன்ரனியா வியரா கல்லோ, சிறிலங்கா விவகாரத்தை பற்றி எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கையில் இதனை வலியுறுத்தியதுடன், கடந்த யுத்தத்தை 'தேசிய வாத கெரில்லா படைக்கு எதிரான யுத்தம்' என்று வர்ணித்திருக்கிறார். சிறிலங்காவின் இடைத…
-
- 0 replies
- 763 views
-
-
விமான நிலையங்கள் திறக்கப்பட்டன – கட்டாரில் இருந்து முதல் விமானம் இலங்கையை வந்தடைந்தது இலங்கையில் உள்ள அனைத்து விமான நிலையங்களும் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முதல் மீளத் திறக்கப்பட்டுள்ளன. பயணிகளின் வருகைக்காக விமான நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து கட்டார் நாட்டைச் சேர்ந்த இரண்டு விமானங்கள் இன்று கட்டுநாயக்கவைவந்தடைந்தன. அதன்படி, அதிகாலை 2.15 மணிக்கு 53 பேருடன் முதல் பயணிகள் விமானம் டோஹாவில் இருந்து நாட்டை வந்தடைந்துள்ளது. மே 21 ஆம் திகதிக்குப் பின்னர் நாட்டுக்கு வந்த முதல் பயணிகள் விமானத்தில் இருந்தவர்களில் பலர் வெளிநாட்டு பயணிகள் என்றும் விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், 116 பேருடன் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் யுஎல் 218 வி…
-
- 1 reply
- 298 views
-
-
புலம் பெயர் தமிழ்மக்களின் குழப்பங்களுக்கும் எதிர்கால நகர்வுகளுக்கும் பதிலளிக்கும் ஜெகத் கஸ்பார் அடிகளார் தெளிவான விபரமான ஒரு நேர்காணல் 1. தேசியத் தலைவர் பற்றிய குழப்பம் 2. நமக்குள் உள்ள தெவையற்ற முரண்பாடுகள் 3. நாடுகடந்த தமிழீழ அரசு 4. மற்றும் சமகால நகர்வுகள் நிச்சயமாக அனைத்துத் தமிழர்களும் கேட்டு தெளிவு பெறவேண்டும் நன்றி குமுதம் இணைப்புக்கு தமிழ்த்தேசியம்
-
- 15 replies
- 3.2k views
-