ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143562 topics in this forum
-
உன்னிச்சைக் கிராமத்தில் பள்ளிவாயலுக்கு தீ வைப்பு. உன்னிச்சைக் கிராமத்தைச் சேர்ந்த பெண் கோடரியினால் நேற்று மாலை வெட்டித் தாக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து உன்னிச்சைக் கிராமத்தில் 03 வீடுகள், ஒரு கடை ,பள்ளிவாயல் என்பன தீ மூட்டப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளது. தாக்கப்பட்ட குறித்த பெண்ணின் வீடு நேற்று சுமார் 12.30 மணிக்குப் பிறகு முற்றாக சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அப்பெண் வளர்த்து வந்த ஆடுகளுக்கும் எரியூடடப்பட்டுள்ளதாகவும் இதேவேளை உன்னிச்சை முஹ்யித்தீன் ஜூம்மாப் பள்ளிவாயலுக்கும் இரவோடு இரவாக தீ வைக்கப்பட்டுள்ளதுடன் பள்ளியின் முன்பகுதி முற்றாக எரிந்துள்ளதாகவும் மேலும் ஏனைய பகுதிகள்; சேதமடைந்துள்ளதாகவும் உன்னிச்சை இருநூறுவில் முஸ்லிம் நலன்புரிச் சங்கத் தலைவர் எம்.எஸ்.அப்த…
-
- 4 replies
- 748 views
-
-
05 Jun, 2025 | 12:17 PM ஈ.பி.டி.பி. உடனோ அல்லது பேரினவாத சக்திகளோடு புதிய கட்டமைப்பின் அனுமதியின்றி யாராவது பேசவோ செயற்படவோ முனைந்தால் அவர்கள் தாமாகவே வெளியேறலாம் அல்லது விலக்கப்படுவார்கள் என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். தமிழ்த்தேசிய பேரவை சுயாதீனமாகவும் இயங்கும். நாற்காலிகளை அலங்கரிப்பது நோக்கமல்ல. சித்தார்த்தன் டக்ளஸை அணுகியது எம்முடன் கூட்டில் உள்ள எவருக்கும் தெரியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். ஈ.பி.டி.பி. உடனோ பேரினவாத சக்திகளோடு பேச முற்படுபவர்கள் தாமாக வெளியேறலாம் அல்லது புதிய கட்டமைப்பிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் - கஜேந்திரகுமார் | Virakesari.lk
-
- 1 reply
- 278 views
-
-
தேர்தல் நடத்தப்படவுள்ள வடமத்திய மாகாணத்தின் பொலன்னறுவை மாவட்டத்தில் பிள்ளையான் குழுவினர் 15 முகாம்களை அமைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த 15 முகாம்களின் பிள்ளையான் குழுவைச் சேர்ந்த 500 பேர் ஆயுதங்களை கொண்டுள்ளதாகவும் சேனபுர என்ற இடத்தில் உள்ள முகாமில் மாத்திரம் ஆயுதம்தாங்கிய 150 பேர் உள்ளதாகவும் கூறப்படுகிறது. கடந்த கிழக்கு மாகாண தேர்தலின் போது, பிள்ளையான் குழுவினர் ஆயுதங்களுடன் தமிழ் கிராமங்களுக்குச் சென்று பல்வேறு அழுத்தங்கள் மற்றும் அச்சுறுத்தல்களில் ஈடுபட்டதுடன் தேர்தலுக்கு பின்னர் முஸ்லீம் பிரதேச மக்களை தாக்கியதுடன் முஸ்லீம் பிரதேச வர்த்தகர்கள் உட்பட பலரை கொலை செய்துள்ளனர். இதன் காரணமாக மோதல்கள் நடைபெற்ற இடங்களில் காவல்துறையினர் ஊரடங்குச் சட்டத்தை …
-
- 0 replies
- 902 views
-
-
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, சற்றுமுன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அவருக்கு ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாகவே அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் என அவர் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றாக அச்செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன. இதேவேளை, மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொள்ளவிருந்த, கூட்டு எதிரணியினரின் கூட்டம் நடைபெற ஏற்பாடாகியுள்ள ஹைட் மைதான வளாகத்தில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில், பொல்லுகளுடன் சிலர் அலைந்து திரிவதாகக் கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமையவே, அப்பகுதியின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, குறித்த மைதானத்தை அண்டிய பகுதிகளிலுள்ள வீதிகளும் பொலிஸாரால் மூடப்ப…
-
- 0 replies
- 263 views
-
-
கேன்களில் எரிபொருள் விநியோகிப்பதற்கு தடை! பீப்பாய்கள் மற்றும் கேன்களில் எரிபொருள் வழங்குவது உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. பீப்பாய்கள் மற்றும் கேன்களில் எரிபொருளைப் பெறுவதற்காக நுகர்வோர் தன்னிச்சையாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கூடி, தேவையற்ற நெரிசல் மற்றும் வரிசைகளை உருவாக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூட்டுத்தாபனம் சுட்டிக்காட்டுகிறது. அதன்படி, மேற்கண்ட முடிவு எரிபொருள் நிரப்பு நிலையங்களின் உரிமையாளர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், அதற்கு மாறாகச் செயல்பட்டால், கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. போதுமான எரிபொருள் இருப்பு இரு…
-
- 0 replies
- 129 views
-
-
13 ஆவது அரசியல் திருத்தச் சட்டமும் தமிழரை ஏமாற்றும் சிங்களத் தந்திரத்தின் தொடர்ச்சியே! 1987 இல் சிறி லங்கா ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனா போட்ட அரசியல் கூழ் முட்டையே இலங்கையின் 13 வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டம் ஆகும்;. பரம்பரை பரம்பரையாகத் தமிழரை ஏமாற்றும் சிங்களத் தந்திரத்தின் தொடர்ச்சியே இந்தக் கூழ் முட்டையும். நேர்மையான தீர்வு காணும் எண்ணம் சிங்களத் தலைமைக்கோ ஜே.ஆருக்கோ இருந்திருக்குமானால் மூன்றில் இரண்டு பெரும்பான்மை கொண்டிருந்த மக்களவையில் வடக்கு கிழக்கு இணைந்த பிரதேசமாகத் தமிழர் தாயகத்தை பிரகடனப் படுத்தியிருக்கலாம். அப்படியான ஒரு வற்புறுத்தலை பிராந்திய வல்லரசு என நாட்டாண்மை பேசும் இந்திய அரசின் பிரதமரான ராஜீவ் காந்தியாலும் மேற்கொள்ள முடியவில்லை…
-
- 0 replies
- 470 views
-
-
யாழ்ப்பாணத்தில் காணமல் போன 590 பேர்களில் 472 பேர்களின் தொடர்பானஎந்தவிதமான தகவல்களும் இல்லை என்று மனித உரிமைகள் ஆணைக்குழுவின்யாழ்.பிராந்திய இணைப்பாளர் ரி.கனகராஜ் தெரிவித்துள்ளார். நாட்டில் எங்குமே இல்லாதவாறு கடந்த 2006, 2007, 2008 ஆம் ஆண்டுகளில்அதிகமானவர்கள் காணமல் போயுள்ளனர் என்றும் அவர் மேலும் சுட்டிக் காட்டியுள்ளார்.காணமல் பேனவர்களுடைய பதிவுகள் தொடர்பில் கருத்துத் தெரிக்கும் போதே அவர் இவ்வாறுதெரிவித்துள்ளார். இவ்விடையம் தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்.கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் 2006 ஆம் ஆண்டு காலப்பகுதியிலேயேஅதிகமானவர்கள் காணமல் போயுள்ளனர். இதற்கு அப்போது இருந்த அரசியல் நிலைப்பாடே காரணம். இக்காலப்பகுதியில் சுமார் 590 முறைப்பாடுகள் காணமல் போனவர்கள் தொடர்பில்மனி…
-
- 0 replies
- 360 views
-
-
வடக்கிலும் தெற்கிலும் இரண்டு கைவினைப் பொருட்கள் சார்ந்த கிராமங்களை அமைப்பதற்கு 50 மில்லியன் ரூபாவை இந்தியா முதலீடு செய்யவுள்ளது. ஸ்ரீலங்காவின் கைவினைதுறைக்கு உதவி வழங்கும் வகையில் அந்த துறையில் முதலிடுவதற்கு இந்தியா முன்வந்துள்ளது. தெற்கில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள கைவினை கிராமம் அடுத்த மாதம் திறந்து வைக்கப்படவுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராயலம் கூறியுள்ளது. திஸ்ஸமகாராமவில் அமைக்கப்பட்டுள்ள குறித்த கிராமத்தில் பயிற்சி வசதிகள் உள்ளதுடன், சுற்றுலாப் பயணிகளும் வருகை தரும் முக்கிய பகுதியாக இருக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இரண்டாவது கைவினை கிராமம் யாழ் நகரில் அமைக்கப்படுவதுடன், இவ்வருட இறுதிக்குள் அதன் நிர்மாணப் பணிகளை பூர்த்தி செய்ய முடியும் என இந்திய உயர்ஸ்…
-
- 0 replies
- 296 views
-
-
பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் வழிபாடு செய்ய மீண்டும் தடை! யாழ்ப்பாணம் பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயம் 35 வருடங்களுக்கு பின்னர் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் ராணுவத்தினரால் மீண்டும் இன்று(28) முதல் தடைவிதிக்கப்பட்டுள்ளது. உட்குதியில் கட்டுமானப் பணிகள் இடம்பெற்று வருவதாகவும் அதனால் வழிபாடுகளை மேற்கொள்ள முடியாது என தெரிவித்து அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு யுத்தம் காரணமாக கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் திகதி ஆலய சூழலில் உள்ள பகுதிகளான பலாலியில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டனர். அதனை தொடர்ந்து அப்பகுதி இராணுவ உயர் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து கடந்த 35 வருட காலமாக உயர் பாதுகாப்பு வலயத்தினுள் காணப்பட்ட ஆலயத்திற்குள் சுதந்திரமாக சென்ற…
-
-
- 2 replies
- 146 views
-
-
வடமத்திய மற்றும் சபரகமுவ மாகாணசபைத் தேர்தல் நெருங்கும் சந்தர்ப்பத்தில் விடத்தல் தீவை இராணுவத்தினர் பூரணமாக கைப்பற்றியுள்ளதாக அரசாங்கம் செய்தி வெளியிடத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அரச படையினர் விடத்தல் தீவுப் பிரதேசத்தை ஏற்கனவே கைப்பற்றியுள்ள போதிலும், இறுதி நேரத்தில் இந்த அறிவிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது. எனினும் தமிழீழ விடுதலைப் புலிகள் குறித்த பிரதேசத்தை கைவிட்டுச் சென்றுள்ளதாகவும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன. http://isoorya.blogspot.com/ http://isoorya.blogspot.com/ http://isoorya.blogspot.com/ http://isoorya.blogspot.com/
-
- 0 replies
- 1.1k views
-
-
ஈஸ்டர் திருநாளில் ஒப்பற்ற அருள்கிட்ட பிரார்த்திக்கிறேன்.! மனித உயிர் ஒப்பற்றது என்பதனாலேயே அனைத்து தியாகங்களை விடவும் உயிர்த தியாகம் உன்னத தியாகமாகக் கருதப்படுகின்றது. மனிதாபிமானத்தையும் மிஞ்சிய தேவத்துவத்தினை அடைந்து கொள்வதற்காக யேசுக்கிறிஸ்துநாதர் செய்த மாபெரும் தியாகத்தின் புண்ணியத்தன்மையினை அனுஷ்டிக்கும் முகமாகவே உலகவாழ் கிறிஸ்தவர்கள் யேசுக்கிறிஸ்துநாதர் உயிர்த்தெழுந்த இந்த ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடுகின்றனர் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள ஈஸ்டர் தினச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். அந்தச் செய்தியில் மேலும், ஒருவர் மற்றவர் மீது காட்டும் அன்பு, கருணை மற்றும் கௌரவம் என்பவற்றிலேயே இயேசுக்சிறிஸ்துநாதர் உயிர்த்தெழுந்த ஈஸ்டர் திருநாளின் மகிம…
-
- 0 replies
- 410 views
-
-
அறுகம்பையில் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுப்பு! இலங்கையின் அம்பாறை மாவட்டத்தில் உள்ள அறுகம்பை பகுதிக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி இலங்கை அரசு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. குறிப்பாக ஊறணி பகுதியில் இருந்து பொத்துவில் நகரப்பகுதி வரை இராணுவம், பொலிஸார் மற்றும் கடற்படையினரின் தற்காலிக வீதி தடையுடன் கூடிய வீதி சோதனை சாவடி அமைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தபட்டுள்ளது. மேலும் முக்கிய சந்திகள், வர்த்தக நிலையங்களில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் புலனாய்வாளர்கள் என மூன்று அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இ…
-
- 0 replies
- 134 views
-
-
http://www.sbs.com.au/dateline/story/related/aid/621/id/601527/n/Sri-Lanka-s-New-Wave
-
- 2 replies
- 814 views
-
-
சோலைகளை பாலைவனங்களாக்கும் அனல் மின் திட்டங்கள் இலங்கைக்குள் எவ்வாறு கொண்டு வரப்பட்டது என்பதை ஆராய வேண்டும். ஏனென்றால் முழு உலகமும் இன்று அனல் மின் திட்டங்களை முழுமையாக தடை செய்கின்ற நிலையில் இலங்கை அந்த மின் திட்டத்தை உள் வாங்குகின்றது என்றால் நிச்சயம் மர்மமான விடயங்கள் இருப்பதற்கான வாய்ப்புள்ளது. எவ்வாறாயினும் வருடத்தில் பெரும்பாலான நாட்கள் செயலிழந்து போகும் நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் பாதிப்புகளையே அந்த மக்களால் தாங்கிக்கொள்ள முடிவதில்லை. இலங்கை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இருக்கையில் முழு நாட்டிற்கும் மரக்கறிகளை வழங்கிய நுரைச்சோலையின் பனையடி மற்றும் நரக்கள்ளி பகுதிகளை சார்ந்த சுமார் 400 குடும்பங்கள் இன்று விவசாயத்தை தொலைத்து விட்டுள்ளனர். நுரைச்சோலை அனல் மின் …
-
- 0 replies
- 344 views
-
-
இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கிளிநொச்சியில் உள்ள அக்கட்சியின் மாவட்ட கிளைக்காரியாலயமான அறிவகத்தில் இடம்பெறுகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவருமான இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெறுகின்ற இக்கூட்டத்தில், ஜெனீவா தீர்மானத்திலிருந்து அரசாங்கம் முழுமையாக வெளியேறுகின்றமை மற்றும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முகங்கொடுப்பது குறித்து ஆராயப்படவுள்ளது. இதேவேளை, இன்று மாலை 5மணிக்கு நாடாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பாளர்கள் நியமனம் தொடர்பான கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இதன்போது மாவட்ட ரீதியாக தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் பட்டியல்கள் பெரும்பாலும் இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்ப…
-
- 1 reply
- 818 views
-
-
புலிகளின் போர் நிறுத்தம் உத்தியோகபூர்வமாக அறிவித்தல் கிடைக்கவில்லை - ரோகித போகல்லாகம செவ்வாய், 22 ஜுலை 2008 [செய்தியாளர் நிலாமகன்] தமிழீழ விடுதலைப் புலிகள் ஒருதலைப்பட்சமாக அறிவித்துள்ள போர்நிறுத்தம் தொடர்பாக அரசாங்கத்திற்கு உத்தியோகபூர்வ தகவல்கள் எதுவும் கிடைக்கப் பெறவில்லை என ரோகித்த போகொல்லாகம தெரிவித்துள்ளார். இன்றைய பாராளுமன்ற அமர்வில் விடுதலைப்புலிகள் அறிவித்த சார்க் மாநாடு குறித்த ஒருதலைப்பட்ச யுத்த நிறுத்த அறிவிப்புத் தொடர்பாக பல சூடான விவாதங்கள் நடைபெற்றன. தமிழீழ விடுதலைப் புலிகள் ஒருதலைப்பட்சமாக அறிவித்துள்ள போர்நிறுத்தம் தொடர்பாக அரசாங்கத்திற்கு உத்தியோகபூர்வ தகவல்கள் எதுவும் கிடைக்கப் பெறவில்லை, இந்த யுத்த நிறுத்தம் தொடர்பில் நோர்வே அரசாங…
-
- 0 replies
- 645 views
-
-
சிறிலங்காவுக்கு அண்மையாக இந்திய போர்க் கப்பல்கள் [திங்கட்கிழமை, 28 யூலை 2008, 05:39 மு.ப ஈழம்] [அ.அருணாசலம்] சிறிலங்கா கடற்பரப்புக்கு அண்மையாக இந்திய கடற்படையின் இரு போர் கப்பல்கள் நங்கூரமிட்டுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பில் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது: இந்திய கடற்படையின் போர் கப்பல்களான ஐஎன்எஸ் ரண்வீர், ஐஎன்எஸ் மைசூர் ஆகியன சிறிலங்கா கடற்பிரதேசத்திற்கு அண்மையாக நங்கூரமிட்டு நிற்கின்றன. கொழும்பில் நடைபெறும் சார்க் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளும் இந்தியப் பிரதமர் மற்றும் உயர் அதிகாரிகளின் பாதுகாப்பு கருதியே இக்கப்பல்கள் சிறிலங்காவுக்கு அண்மையாக நகர்த்தப்பட்டுள்ளன. இந்திய கப்பல்கள் சிறிலங்கா கடற்பிரதேசத்திற…
-
- 0 replies
- 624 views
-
-
[size=4]கிழக்கு மாகாணசபைக்கு நடைபெற்ற தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. கல்குடா, மட்டக்களப்பு, பட்டிருப்பு ஆகிய மூன்று தொகுதிகளிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு 104,682 வாக்குகள் கிடைத்துள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலை விட சுமார் 38,000 அதிகப்படியான வாக்குகளுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முதலிடத்தைப் பெற்றுள்ளது. இதன்மூலம் 6 ஆசனங்களை வென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சாதனை படைத்துள்ளது. அதேவேளை, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு 64,190 வாக்குகள் கிடைத்துள்ளன. ஆளும்கட்சிக…
-
- 0 replies
- 563 views
-
-
ஐ.நா 32ஆவது கூட்டத் தொடரில் மங்கள விசேட உரை! ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 32 ஆவது கூட்டத் தொடரின் போது, இலங்கையின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. எதிர்வரும் ஜூன் மாதம் 13ஆம் திகதி முதல் ஜூலை மாதம் முதலாம் திகதி வரை நடைபெறவுள்ள இந்தக் கூட்டத் தொடரில் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹூசைன் இலங்கையின் உள்ளக விசாரணை பொறிமுறை குறித்த வாய்மூல அறிக்கையை வெளியிடவுள்ளார். குறித்த கூட்டத் தொடரில் கலந்துகொள்ளவுள்ள உயர்மட்ட தூதுக்குழு உள்ளக விசாரணைப் பொறிமுறை குறித்து சர்வதேசத்திற்கு தெளிவுபடுத்தவுள்ளது.அத்தோடு,உள்ளக விசாரணை பொறிமுறையின் வடிவத்தை …
-
- 0 replies
- 285 views
-
-
10 நாள் போர் நிறுத்தம் முடிந்ததும், விடுதலைப் புலிகள் பாரிய படை நகர்வொன்றை மேற்கொள்ளப் போகிறார்கள் என எந்த எழுத்தாளரும் எழுதவில்லை. நிழல் யுத்தம் செய்வதற்கு மாயமான்களை தேடுவது போல் தனியார் இணையத்தளமொன்றில் எம்மையெல்லாம் மிக கீழ்த்தரமாக விமர்சித்து, இறைவனின் குசும்பொன்று ஊர்ப் புதினத்தில் வந்தது. இத்தகைய அலட்டல்களை ஒரு புறம் ஒதுக்கி, எமது பணியை இன்னமும் வேகமாக முன்னெடுப்போம். ஒருதலைப்பட்ச போர் நிறுத்தப் பிரகடனம் மிகவும் சிறப்பாக முன்னெடுக்கப்பட்ட காலமறிந்த, இராஜதந்திர நகர்வாகும். ஓகஸ்ட் 4 ஆம் திகதி நள்ளிரவன்று பெரும்யுத்தமொன்றை விடுலைப் புலிகள் ஆரம்பிப்பார்களென்று தேசிய உணர்வு கொண்ட ஆய்வாளர்கள் எவருமே கூறவில்லை. இத்தகைய எதிர்பார்ப்பு சிங்கள தேசத்திற்கு இருக்…
-
- 62 replies
- 7.6k views
-
-
[size=3][size=1][/size] [size=1][size=4]மொழியும் கலையும் கலாச்சாரமும் வளம்பெற்று வளர்ச்சியும் உயர் மேன்மையும் அடையும் பொழுதே மனித வாழ்வும் சமூக உறவுகளும் மேன்மை பெறுகின்றன, தேசிய நாகரிகம் உன்னதம் பெறுகின்றது. இதைச் சொன்னவர் தேசியத் தலைவர் அவர்களே. விடுதலை என்ற இலட்சியத்திற்காகப் போராட்ட வாழ்வை மேற்கொண்ட இந்தப் புரட்சிகர இயக்கம் தமிழினத்தின் பன்முக பண்பாட்டு வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் அளித்தது.[/size][/size] [size=1][size=4]இந்தமட்டில் விடுதலைப் புலிகள் உலகின் பிற விடுதலை இயக்கங்களில் இருந்து வேறுபட்டவர்கள். அவர்களுடைய சாதனைப் பட்டியல் மிக நீளமானது. அவர்கள் நிகழ்த்திய சமூக மாற்றங்கள் நிரந்தரமானவை, வேற்று நாட்டு விடுதலை அமைப்புகளுக்கு முன்மாதிரியானவை.[/size][/size] …
-
- 3 replies
- 1.3k views
-
-
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி வேட்பாளர் தெரிவில் மும்முரம் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி இம்முறை பொதுத்தேர்தலில் வடக்கு, கிழக்கில் களமிறங்கவுள்ளதாக அதன் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.அத்துடன் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவராக சி.வி.விக்னேஸ்வரனும் செயலாளராக சிவசக்தி ஆனந்தனும் உப தலைவர்களாக சுரேஷ் பிரேமசந்திரனும் பேராசிரியர் சிவநாதனும், ஶ்ரீகாந்தாவும் அனந்தி சசிதரனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.கொள்கை பரப்புச் செயலாளர்களாக அருந்தவபாலன், சுரேஷ் பிரேமச்சந்திரன், ஶ்ரீகாந்தா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் வேட்பாளர் நியமனங்கள் இதுவரை முற்றுப்பெறவில்லை.யாழ்ப்பாணம், வன்னி, மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் ப…
-
- 0 replies
- 285 views
-
-
வன்னியில் பல்வேறு பிரதேசங்களையும் புலிகள் இயக்கத்தின் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டுள்ள அரச படையினர், தற்போது தொடர்ந்தும் வெற்றிகரமாக முன்னேறி வரும் நிலையில், புலிகள் இயக்கம் அதன் பத்திரிகை, வானோலி, தொலைக்காட்சி, இணையதளங்கள் மூலமும் மற்றும் ஆதரவு ஊடகங்கள் மூலமும் ஸ்ரீலங்கா அரசுக்கும் அரச படையினருக்கும் எதிரான பொய்யான ஊடக பிரசாரங்களைச் செய்து வருகின்றனா. இவற்றின் மூலம் ஸ்ரீலங்கா அரசுக்கு எதிரான கருத்துகளையும் நிலைப்பாட்டையும் சர்வதேச சமூகங்களுக்கிடையே உருவாக்குவதே புலிகள் இயக்கத் தலைமைத்துவத்தின் நோக்கமாகும். இவ்வாறு புலிகள் இயக்கம் அதன் மேற்படி ஊடகங்கள் மூலம் அரசு படையினரின் விமானத்தாக்குதல்கள், மல்ரிபரல் மற்றும் சூட்டுத் தாக்குதல்கள் காரணமாக மன்னார், வவுனியா, கிளிநொச்ச…
-
- 1 reply
- 1.9k views
-
-
ஐ.நா-வின் 'அச்சுறுத்தும் போக்குடைய நாடுகள்' பட்டியலில் இலங்கைக்கும் ஓரிடம்! அச்சுறுத்தும் போக்குடைய நாடுகள்' என ஐ.நா பட்டியலிட்டிருக்கும் பதினாறு நாடுகளில் இலங்கையும் இடம்பெற்றிருப்பதாக வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கை தகவல் வெளியிட்டுள்ளது. பழிவாங்கும் நோக்குடன் செயல்பட்டுவரும் பட்டியலிடப்பட்டிருக்கும் அந்நாடுகளின் அரசாங்கம் தண்டிக்கப்படாத நிலையிலேயே இருப்பதாக ஐ.நா-வின் அறிக்கை மேலும் சுட்டிக்காட்டியுள்ளது. இன்னிலையில், இலங்கை உட்பட அல்ஜீரியா, பஹ்ரைன், பெலாரஸ், சீனா, கொலம்பியா, ஈரான், கஜகஸ்தான், கென்யா, லெபனான், மலாவி, ருவாண்டா, சவூதி அரேபியா, சூடான், உஸ்பேகிஸ்தான் மற்றும் வெனிசுலா உள்ளிட்ட நாடுகளும் ஜூன் 2011 முதல் ஜூலை 2012 காலவரையை உள்ளடக்கிய ஐ.நா-வின் அறிக்கைய…
-
- 0 replies
- 1.1k views
-
-
சம்பந்தனுக்கு எதிராக காவல்துறையினர் விசாரணை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனுக்கு எதிராக காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கிளிநொச்சி காவல்துறையினர் இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கிளிநொச்சி பரவிபஞ்சான் கஜபா இராணுவ முகாமின் படைத்தளபதி உள்ளிட்ட சிலர் சம்பந்தனுக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளனர். இந்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கடந்த 16ம் திகதி எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், ஸ்ரீதரன் போன்றவர்கள் பரவிபஞ்சான் இராணுவ முகாம் அமைந்துள்ள பகுதிக்குள் அத்து மீறி பிரவேசிக்…
-
- 9 replies
- 885 views
-