Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த முதல் இலங்கையர் சிரியாவில் கடந்த வாரம் இடம்பெற்ற வான் வழித் தாக்குதலில் மரணமானார் என சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவ்வாறு மரணமானவர் 37 வயதான அபூ சுரையா சைலனி (இப்பெயர் அவரின் சொந்தப் பெயரல்ல ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் சேர்ந்த பின்னர் சூடிய பெயராகும்) என்பவராவார். கண்டியின் கலேவெலவில் கராத்தே பயிற்றுவிப்பாளராக இருந்த இவர், ஜீ.சி.ஈ. சாதரண தரப் பரீட்சையின் பின்னர் இஸ்லாமிய கொள்கைகளில் தீவிர ஈடுபாடு காட்டினார் என்றும் இதனால் பாகிஸ்தானின் சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய சட்டத்தை கற்று எல்.எல்.பி. பட்டம் பெற்றார் என்றும் கூறப்படுகின்றது. 6 பிள்ளைகளின் தந்தையான இவர் கராத்தே பயிற்சிகளை வழங்குவதற்காக மகரகமவிற்கும் அடிக்க…

    • 11 replies
    • 993 views
  2. 08 MAY, 2024 | 11:55 AM முப்படைகளிலும் பணியாற்றி ஓய்வுபெற்ற இராணுவ வீரர்களை ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளுக்குச் சுற்றுலா விசா மூலம் அழைத்துச் சென்று கூலிப்படைகளில் அமர்த்தும் மனிதக் கடத்தல் செயற்பாடு இடம்பெறுவதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. அவர்களில் சிலர் யுத்தத்தில் பலத்த காயமடைந்து ஆதரவற்ற நிலையில் பரிதாபமாக உயிரிழப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த மனித கடத்தல் செயற்பாடு தொடர்பில் ஏதேனும் தகவல் கிடைத்தால் 0117192142 அல்லது 0117192250 என்ற இலங்கை கடற்படைத் தலைமையக தொலைபேசி இலக்கங்களுக்குத் தகவல் வழங்குமாறு இலங்கை கடற்படை கோரிக்கை விடுத்துள்ளது. https://www.virakesari.lk/article/182955

  3. அம்பாறை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திடீர் எழுச்சி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினரை கதி கலங்கச் செய்துள்ளது என கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய அமைப்பாளரும் தேசியப்பட்டியல் வேட்பாளருமான ஏ.எம்.ஜெமீல் தெரிவித்துள்ளார். இம்முறை அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து போட்டியிடுகின்ற போதிலும் அது மூன்று சிங்கள பிரதிநிதித்துவங்களுக்கே வழி வகுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். சாய்ந்தமருதில் அமைந்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மாவட்ட தேர்தல் காரியாலயத்தில் புதன்கிழமை நடைபெற்ற இளைஞர்களுடனான சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் பே…

    • 0 replies
    • 538 views
  4. ஆர்.விதுஷா) நாடளாவிய ரீதியில் கடந்த சனிக்கிழமையிலிருந்து இன்று காலை 6மணி வரையான காலப்பகுதியில் 31 வாகன விபத்துக்கள் இடம் பெற்றுள்ளதுடன்அவற்றில் 42 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர்,பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்தார். பொலிஸ் தலைமையகத்தில் இன்று புதன் கிழமை இடம் பெற்ற ஊடகசந்திப்பின் போது இதனை தெரிவித்த அவர் புத்தாண்டு காலப்பகுதி சம்பவங்கள் குறித்து தகவல்கள் தருகையில் மேலும் கூறியதாவது, புத்தாண்டு காலமான 13 ஆம் திகதி தொடக்கம் இன்று முற்பகல் 6 மணிவரையிலான காலப்பகுதியில் மாத்திரம் 31 வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளதுடன் 42 பேர் வரையில் விபத்துக்களில் சிக…

  5. தவ்ஜித் ஜமாத்துடன் கிழக்கு மாகாண ஆளுநருக்கு இருக்கும் தொடர்பு சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது! சுமந்திரன் தேசிய தவ்ஹீத் ஜமாத்துடன் தொடர்பு வைத்திருந்த அனைவரும் விசாரிக்கப்படவேண்டுமென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ.சுமந்திரன் தெரிவித்தார். இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது, இந்த தாக்குதல்கள் குறித்து எந்த ஒரு தனி சமூகத்தையும் விமர்சிக்க கூடாது. அவர்கள் மீது பிரயோகிக்கப்பட்டபோதும் இந்நாட்டு முஸ்லிம்கள் வன்முறையில் ஈடுபட்டதில்லை.அதனை நாங்கள் மதிக்கிறோம். தேசிய தவ்ஹீத் ஜமாத்துடன் கிழக்கு மாகாண ஆளுநருக்கு இருக்கும் தொடர்புகள் பல கேள்விகளை எழுப்புகிறது.அவர்கள் தொடர்பு வைத்திருந்த அரசியல்வாதிகள் மற்று…

  6. அனைத்து அசையும், அசையா சொத்துக்கள் தொடர்பில் விசேட வர்த்தமானி அறிவித்தல்! adminMay 25, 2024 அரச நிறுவனங்கள் உட்பட இலங்கை பிரஜைகளின் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் தொடர்பான தகவல்களை உள்நாட்டு இறைவரி திணைக்களத்திற்கு எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் வழங்க வேண்டும் என விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார். அத்துடன், இலங்கைப் பிரஜைகளின் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் மற்றும் வாகன உரிமைப் பரிமாற்றங்கள் தொடர்பான தகவல்கள் மற்றும் அதிகாரிகள் பயன்படுத்தும் தகவல்களையும் உள்நாட்டு இறைவரி ஆணையாளர் …

  7. கே 8 யுத்தப் பயிற்சி விமானம் எரிந்த நிலையில். சண்டே ரைம்ஸ் பத்திரிகையின் பாதுகாப்பு நிலவர ஆய்வாளர் இக்பால் அத்தாசின் தரவுகளின் படி 10 வானூர்த்திகள் முற்றாக அழிக்கப்பட்டும் சுமார் 14 வானூர்திகள் சேதமடைந்தும் உள்ளன. இவற்றில் சில மீள பயன்படுத்தப்பட முடியாத அளவுக்கு சேதமடைந்துள்ளன. 3 எம் ஐ 17 ரக உலங்கு வானூர்திகள் மட்டும் சேதங்கள் இன்றி தப்பிப்பிழைத்துள்ளன. வான்படைத்தளத்தில் மொத்தம் 27 விமானங்கள் இருந்துள்ளன. கிங்ராங்கொட விமானப்படைத்தளம் மீது தாக்குதல் நடக்க இருப்பதாக கிடைத்த புலனாய்வுத் தகவலுக்கு அமைய அங்கிருந்து அநுராதபுரத்துக்கு அனுப்பப்பட்ட வானூர்திகளும் இதில் அடங்கும். தாக்குதல் நடத்திய கரும்புலிகள் மீது தாக்குதல் நடத்த வந்த இராணுவ கவச வாகனம் ஒன்றும் சேதமடைந்து…

    • 29 replies
    • 6.9k views
  8. சிறிலங்காவின் தேசிய மனிதஉரிமைகள் செயற்திட்டத்துக்கு ஐ.நாவின் நிதியுதவியைப் பெறக்கூடாது என்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார். நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை சிறிலங்கா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கு இரண்டு நாட்கள் முன்னதாக, கடந்த புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலேயே சிறிலங்கா அதிபர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் தேசிய மனிதஉரிமைகள் செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு 150,000 டொலர் நிதியுதவியை பெறுவதற்கு அனுமதி கோரும் அமைச்சரவைப் பத்திரத்தை சிறிலங்கா அமைச்சர் மகிந்த சமரசிங்க சமர்ப்பித்திருந்தார். தேசிய மனிதஉரிமைகள் செயற்திட்டத்தை வரைதல், ஒருங்கிணைத்தல், கூட்டங்களுக்…

    • 4 replies
    • 1.1k views
  9. சம்பந்தனின் ‘2016 இல் தீர்வு’ அரசியல் மறந்து கதைக்கும் ஒருவரின் கூற்று எனவும் 2016க்குள் எலும்புத் துண்டைத்தானும் சிங்களத்திடமிருந்து பெற்றுவிட முடியாது என தமிழரசுக்கட்சியின் நிறுவன உறுப்பினர் நாதன் ஐயா தெரிவித்துள்ளார். கஜேந்திரகுமார் அவர்களே தந்தை செல்வாவின் எண்ணங்களைச் மனதில் வைத்து செயற்படுவதாகவும், சம்பந்தன் தந்தையின் கொள்கைகளை மறந்து செயற்படுவதாகவும் கூறினார். தமிழ்லீடருக்கு வழங்கிய நேர்காணலில் மாவை, சுமந்திரன் மற்றும் முதல்வர் விக்கினேஸ்வரன் தொடர்பாகவும் தனது எண்ணங்களை வெளிப்படுத்திய நாதன் ஐயா தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பில் வன்னி மாவட்டத்தில் போட்டியிடுகிறார். வவுனியா நகர சபைத் தலைவராக இருந்த நாதன் ஐயா அதிலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னணியையும் விவரிக்கிறா…

    • 6 replies
    • 688 views
  10. மே 30 க்குள் மூன்று தேவாலயங்களும் மீள்நிர்மாணம் செய்யப்படும் (ஆர்.யசி) பயங்கரவாத தாக்குதலுக்கு உள்ளான மூன்று தேவாலயங்களையும் மே மாதம் 30 ஆம் திகதிக்குள் மீள் நிர்மாணம் செய்வதாகவும் பாதிக்கப்பட்ட சகல குடும்பங்களுக்கும் உயரிய சலுகைகளை அரசாங்கம் பெற்றுக்கொடுக்கும் என வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். தாக்குதலுக்கு உள்ளான தேவாலயங்கள் மீள் நிர்மாணம் செய்யும் வகையில் முப்படை பிரதானிகளுடன் பாராளுமன்றத்தில் நடத்திய கலந்துரையாடலில் அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில். அவர் மேலும் கூறியதானது, புனித உயிர்த்த ஞாயிறு தினத்தன்று பயங்கரவாத தாக்குதலுக்கு உள்ளான கொழும்பு கொச்…

  11. Published By: VISHNU 03 JUN, 2024 | 03:25 AM மட்டக்களப்பு மட்டிக்கழி கடற்கரைப்பகுதியில் ஆலைய தீ மிதிப்பின் போது மஞ்சல் குளிப்பதற்காக அமைக்கப்பட்ட அம்மன் பீடத்தைச் சுற்றியுள்ள காணியை மீன் வியாபாரி ஒருவர் சட்டவிரோதமாக அபகரித்து வாடி அமைத்து இந்து மதத்தை இழிவுபடுத்தும் செயலில் ஈடுபட்டுவருகின்றார். அதற்கு அதிகாரிகளும் உடந்தையாகச் செயற்படுவதை வன்மையாகக் கண்டிப்பதுடன் அதனை அகற்றாவிடில் மாநகர சபையை இந்து மக்கள் முற்றுகையிட்டு போராடப் போவதாக அந்த பிரதேச பொது அமைப்புக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மட்டிக்கழி அறநெறி பாடசாலை கட்டிடத்தில் ஆலைய பரிபாலன சபை மற்றம் பொது அமைப்புக்கள் ஒன்றிணைந்து ஞாயிற்றுக்கிழமை (02) இடம்பெற்ற ஊடக ம…

  12. பலாலி ஆசிரியர் கலாசாலைக் காணியும் கட்டடத் தொகுதியும் உள்ளடங்கிய வளாகம் கல்வி அமைச்சினால் பாதுகாப்பு அமைச்சுக்குக் கையளிக்கப்பட்டுள்ளது. இது வரை காலமும் கல்வி அமைச்சின் பொறுப்பில் இருந்து வந்த 54 ஏக்கர் விஸ்தீரணம் கொண்ட வளாகத்தைப் பாதுகாப்புத் தரப்பினர் எதிர் காலத்தில் பயன்படுத்தவுள்ளனர். பலாலி இராணுவமுகாம் மற்றும் விமான நிலையத்துக்குத் தெற்குப் புறமாகவும் சங்கானை வீதிக்கு வடக்குப் புறமாகவும் ஆசிரியர் பயிற்சிக்கான சகல கட்டுமானங் களுடன் 1950 ஆம் ஆண்டில் இருந்து பலாலி ஆசிரிய கலாசாலை செயற்பட்டுவந்தது. விசேட ஆசிரியர் பயிற்சிக்கான கலாசாலையாக இது விளங்கிவந்தது. ஆங்கிலம், விஞ்ஞானம், கணிதம், விவசாயம் மற்றும் தொழில்நுட்பப் பாடங்களைக் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு இங்கு பயிற…

  13. "இலங்கையின் தற்போதைய அரசியல் சாசனம் நீக்கப்படவேண்டும். புதிய அரசியல் சாசனம் நிறைவேற்றப்பட வேண்டும். அந்தப் புதிய அரசியல் சாசனத்தின் மூலம் தேசியப் பிரச்சினைக்கு முழுமையான தீர்வு கிட்டவேண்டும்.'' - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். திருகோணமலையில் நேற்று நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், "நாங்கள் தற்போது ஒரு வரட்டுத்தனமான போக்கைக் கடைப்பிடிக்க முடியாது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு எமது பிரச்சினை சர்வதேச மயமாக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை எமது பிரச்சினை தொடர்பாக 2012, 2013,…

  14. பொலிஸ் நிலையத்தில் சொகுசு வசதியுடன் காவலில் இருந்த தாவூத் உணவக உரிமையாளர் வவுனியா கனகராஜன்குளம் பொலிஸ் நிலையத்தினரால் கடந்த 30 ஆம் திகதியன்று கைது செய்யப்பட்ட தாவூத் உணவக உரிமையாளர் சகல வசதிகளுடனும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள புகைப்படம் வெளியாகியுள்ளது. கனகராஜன்குளம் பொலிஸ் நிலையத்தில் காவலில் வைக்கப்பட்டிருந்த தாவூத் உணவக உரிமையாளருக்கு ஏனைய கைதிகளுக்கு வழங்கப்படாத வசதி வாய்ப்புக்கள் வழங்கப்பட்டுள்ள புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. குறித்த சந்தேக நபர் ஒரு சிறைக்கைதி போல் இல்லாமல் காவலிலுள்ளவருக்கு தலையணை, கைத்தொலைபேசி, சுடுதண்ணிப் போத்தலில் தேனீர் என்பன சிறைக்கூடத்தில் வழங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. குற்றஞ்சாட்டப்பட்ட சந்…

    • 1 reply
    • 793 views
  15. http://www.yarl.com/videoclips/view_video....e2fe5614f42ba98

  16. தமிழ் பிள்ளைகளை பலவந்தமாக அமைப்பில் இணைத்துள்ளார் சஹரான்: சுமணரத்ன தேரர் தமிழ் பிள்ளைகளை பலவந்தமாக அழைத்துச் சென்று தனது அமைப்பின் சஹரான் இணைத்துள்ளார் என்றும் இந்த விடயங்கள் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றும் மட்டக்களப்பு, மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் தெரிவித்தார். மட்டக்களப்பில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே சுமணரத்ன தேரர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “இலங்கையில் ஏற்பட்டுள்ள குண்டுத்தாக்குதல்களினால் அனைவரது இயல்பு வாழ்க்கையும் இன்று பாதிப்படைந்துள்ளது. இந்தப் பிரச்சினை ஏற்பட்டவுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் …

  17. அமெரிக்காவில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் சொத்துக்கள் முடக்கப்பட்டமை கவலைக்குரியது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 751 views
  18. 'ரிஷாத்துக்கு எதிரான பிரேரணை ஐ.தே.க., சு.க., கூட்டமைப்பின் ஆத­ர­வுடன் நிறை­வேறும்' வணிகம் மற்றும்கைத்தொழில் அமைச்சர் ரிஷாத் பதி­யு­தீ­னுக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணை­யா­னது அர­சியல் பழி­வாங்­க­லுக்­காக கொண்­டு­வ­ரப்­பட்­டது அல்ல. அது தேசிய பாது­காப்­பிற்­கா­கவே கொண்­டு­வ­ரப்­பட்­டது. எனவே ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி, ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி , தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு மற்றும் ஐக்­கிய தேசிய கட்சி உறுப்­பி­னர்­க­ளதும் வாக்­கு­க­ளுடன் பெரும்­பான்மை ஆத­ர­வுடன் அந்த பிரே­ரணை நிறை­வேற்­றப்­படும் என்று ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மஹிந்­தா­னந்த அளுத்­க­மகே தெரி­வித்தார். ரிஷாத்­துக்கு எதி­ராக சபா­நா­ய­க…

  19. யாழ் மாநகர சபையின் பொங்கல் விழாவை ஒட்டிய நிகழ்வுகள் இன்று ஆரம்பமாகின. thx

  20. மன்னாரில் சிறுபோக நெற்செய்கைக்கான காணிகள் வழங்கப்படுவதில் அநீதி May 27, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் மன்னார் மாவட்டத்தில் சிறுபோக நெற்செய்கைக்கான காணிகள் வழங்கப்படுவதில் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் குறிப்பிட்டுள்ளனர். மன்னார் – கட்டுக்கரை குளத்து நீரினைப் பயன்படுத்தி இம்முறை சுமார் 1,710 ஏக்கர் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அரச நெற்செய்கைக் காணிகள் மன்னார் மாவட்ட கமநல சேவைகள் திணைக்களத்தினரால் சிறுபோக செய்கைக்காக விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளன.2009ஆம் ஆண்டிற்கு முன்னர் கட்டுக்கரைக் குளத்தின் நீர் மட்டத்திற்கேற்ப, மாவட்டத்திலுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் சிறுபோக நெற்செய்கைக்க…

  21. இலங்கைப் பிரச்சினையில் இந்தியாவின் பாத்திரமென்ன? இலங்கையின் இனப்பிரச்சினையில் இந்தியாவின் பாத்திரத்தைப் பற்றி தொடர்ச்சியாகப் பலரும் எழுதியும் பேசியும் வருகின்றனர். இதில் இந்திய அரசுக்கான கோரிக்கைகள், கண்டனங்கள், ஆலோசனைகள், நட்புடன் தெரிவிக்கப்படும் கவனிக்க வேண்டிய விடயங்கள், சுட்டிக் காட்டுதல்கள், குற்றச்சாட்டுகள், வசைகள், ஆதரவுகள் என பல வகைகள் உள்ளன. இந்தக் கருத்துகளை இலங்கைத் தமிழர்கள், சிங்களத் தரப்பினர், இந்தியர்கள், அதிலும் தமிழகத்தைச் சேர்ந்தோர், பிறத்தியார் எனப்படும் வெளியுலகத்தினர் என பலரும் வெளிப்படுத்தி வருகின்றனர். இந்தக் கருத்துகளில் சில முக்கியமானவை. பொருட்படுத்தத்தக்கவை. இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளுக்கிடையிலான உறவு, இந்த நாடுகளில் ஏற்படவேண்டிய…

    • 12 replies
    • 1.3k views
  22. அமரர் வி.தர்மலிங்கம் அவர்களின் 30ஆவது நினைவுதினம் அனுஷ்டிப்பு தழிழரசுக்கட்சியின் மூத்த தலைவரும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் உடுவில்-மானிப்பாய் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஸ்வநாதர் தர்மலிங்கம் அவர்களின் 30ஆவது நினைவு தினம் இன்று அனுஸ்டிக்கப்பட்டது. 30ஆவது நினைவுதின நிகழ்வுகள் யாழ். தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத் தூபிக்கு அருகாமையில் நடைபெற்றது. குறித்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக தழிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும்,தர்மலிங்கத்தின் புதல்வருமான சித்தார்த்தன் கலந்து கொண்டு அவரது தூபிக்கு மலர் அஞ்சலி செலுத்தினார். - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=237864239102297545#sthash.yM8p9JWk.dp…

  23. June 3, 2019 நாட்டுக்கானதொரு அதிர்ஷ்டான பூஜையினையே முன்னெடுத்திருப்பதாக கூறியுள்ள அத்துரலியே ரதன தேரர் 30 ஆண்டு காலம் நாட்டில் காணப்பட்ட யுத்தத்தின் போது மாவிலாறு போராட்டத்திலிருந்து வெற்றி பயணத்தை ஆரம்பித்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார். எனவே நாட்டுக்கு கடமைப்பட்டவனாக தாம் இல்லை என்றும் தனது இந்த போராட்டத்திற்கு ஆதரவு வழங்க இங்கு வந்த அனைவருக்கும் நன்றி கூறுவதாகவும் கண்ணீருடன் தெரிவித்தமை அவரது ஆதரவாளர்களை நெகிழ்ச்சியடைய வைத்தது. ஹிஸ்புல்லா மற்றும் அசாத் சாலியின் பதவிவிலகலையடுத…

  24. Published By: DIGITAL DESK 7 21 JUL, 2024 | 11:47 AM (ஆர்.ராம்) அரசியலமைப்பில் காணப்படுகின்ற மாகாண சபை முறைமையை மீண்டும் முன்னெடுப்பதற்கு ஆட்சிப்பொறுப்பையேற்று சொற்பகாலத்துக்குள் நடவடிக்கைகளை முன்னெடுப்போம். எமது தேர்தல் விஞ்ஞாபனத்திலும் அம்முறைமை உள்ளடக்கப்பட்டுள்ளது என்று தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. யாழ்.வணிகர் கழகத்துக்கும் தேசிய மக்கள் சக்திக்கும் இடையிலான சந்திப்பு யாழ்ப்பாணத்தில் நடைபெற்றபோதே மேற்கண்ட விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சந்திப்பு தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளதாவதுரூபவ் யாழ்.வணிகர் கழகத்துடனான சந்தப்பின்போது, நாம் எமது பொருளாதாரக் கொள்கைகளை…

  25. 30 JUL, 2024 | 07:01 PM கடந்த 2023ஆம் ஆண்டில் 9,436 சிறுவர் மீதான பாலியல் துஷ்பிரயோகங்கள் பதிவாகியுள்ளதாக சிறுவர் பாதுகாப்பு அதிகாரி கீத் பிரேமரத்ன தெரிவித்துள்ளார். இணையவழி பாதுகாப்பு தொடர்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டுவதற்காக காலியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அதிகளவான சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்கள் மேல் மாகாணத்திலிருந்து பதிவாகியுள்ளன. அதன்படி, கொழும்பு மாவட்டத்திலிருந்து 1,124 சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்களும், கம்பஹா மாவட்டத்திலிருந்து 907 சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்களும், களுத்துறை மாவட்டத்திலிருந்து 548 சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்களும…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.