ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143576 topics in this forum
-
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இடம்பெற்ற பல்வேறு மோதல் சம்பவங்களில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 9 படையினர் காயமடைந்துள்ளனர் என்று சிறிலங்காப் படைத்தரப்பு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 779 views
-
-
சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்ட தமிழ் இளைஞனை 10 வருடங்கள் விசாரணை இன்றி சிறையில்.. வைத்திருந்துவிட்டு.. 2005 இல் மைத்திரியை கொல்ல வந்ததாக.. கடந்த ஆண்டில்.. தான்.. 10 வருட சிறைத்தண்டனை விதித்த விநோதத்தை மறைக்க அவருக்கு சொறீலங்கா சிங்கள சனாதிபதி இன்று பகிரங்க மன்னிப்பு வழங்கி அந்த தமிழ் அரசியல் கைதியை விடுதலை செய்தார் என்ற செய்தியோடு.. Jenivan, now aged 36, was taken into custody in April 2006, accused of being part of an attempt a year earlier to kill Mr Sirisena, who was then a senior cabinet minister. He was sentenced by the Polonnaruwa High Court only in July last year. In pardoning him, Jenivan's lawyer said the president had taken into account the…
-
- 12 replies
- 1.3k views
-
-
அதிரடி அறிவிப்பை வெளியிட்ட நீதியமைச்சர்! சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பான வழக்கு விசாரணைகளை விரைவில் நிறைவு செய்வதற்காக புதிய வேலைத்திட்டங்களை தயாரிக்கவுள்ளதாக நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். துஷ்பிரயோகம் இடம்பெற்ற தினத்திலிருந்து வழக்கு தாக்கல் செய்யப்படுவதற்கு சுமார் 05 வருடங்கள் செல்வதாக அவர் குறிப்பிட்டார். காலம் தாழ்த்தி வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு சாட்சி வழங்கப்படும் போது பாதிக்கப்பட்ட சிறுவர்களினால் சம்பவம் தொடர்பான முழுமையான தகவல்களை நினைவில் வைத்துக் கொள்ள முடியாத நிலை ஏற்படுமெனவும் அவ்வாறு இடம்பெறும் போது குற்றவாளிகள் தப்பிக்கக்கூடிய சந்தர்ப்பங்கள் காணப்படுவதாகவும் நீதியமைச்சர் கூறினார். அத்துடன் சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் தொ…
-
- 0 replies
- 146 views
-
-
23.04.08 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காலக்கணிப்பு தற்காலிக முகவரி: http://www.yarl.net/video/video_002.html
-
- 1 reply
- 2.3k views
-
-
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசுடன் “உறுதியாகவும் வெளிப்படையாகவும்“ பேச்சு நடத்தியுள்ளதாக பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் வில்லியம் ஹேக் தெரிவித்துள்ளார். சிறிலங்கா வெளிவிவகார அமைச்சருக்கும், பிரித்தானிய வெளிவிவகார அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு கடந்த செவ்வாய்க்கிழமை லண்டனில் இடம்பெற்றுள்ளது. இந்தச் சந்திப்புத் தொடர்பாக, பிரித்தானிய வெளிவிவவார அமைச்சர் வில்லியம் ஹேக் தனது அதிகாரபூர்வ ‘ருவிற்றர்‘ பக்கத்தில், செவ்வாய்கிழமை இரவு தகவல் வெளியிட்டுள்ளார். “சிறிலங்கா வெளிவிவகார அமைச்சருடன் இன்று கரிசனைகுரிய எல்லா விவகாரங்கள் தொடர்பாகவும் உறுதியாகவும் வெளிப்படையாகவும் கலந்துரையாடியுள்ளேன்“ என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார். …
-
- 0 replies
- 896 views
-
-
பலாலி இராஜேஸ்வரி ஆலயத்திற்கு அருகிலுள்ள படைமுகாம்களை அகற்றும் இராணுவம் [ Wednesday,13 January 2016, 05:30:14 ] ஜனாதிபதி மற்றும் பிரதமர் கலந்துகொள்ளவுள்ள தேசிய பொங்கல் விழா நடைபெறவுள்ள பலாலி இராஜேஸ்வரி ஆலயத்திற்கு அருகில் அமைந்துள்ள படைமுகாம்களை அகற்றும் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. படைமுகாம்களை அகற்றும் நடவடிக்கையானது அப்பகுதியினை விடுவிப்பதற்காக மேற்கொள்ளப்படுகின்றதா? அல்லது ஜனாதிபதி பிரதமர் கலந்துகொள்ளும் நிகழ்வு இடம்பெறும் பகுதியை படைமுகாம்கள் அற்ற பகுதியாகக் காட்டுவதற்கு எடுக்கப்படும் முயற்சியா என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இராணுவ அதி உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் உள்ள பலாலி கண்ணார் …
-
- 1 reply
- 554 views
-
-
20 Feb, 2025 | 05:38 PM தையிட்டி விகாரை போராட்டம் தொடர்பாக செல்வராஜா கஜேந்திரன், வாசுகி சுதாகரன், வேலன் சுவாமிகள் உள்ளிட்டோர் 20ஆம் திகதி வியாழக்கிழமை பலாலி பொலிஸ் நிலையத்தில் வாக்கு மூலம் அளித்துள்ளனர். தையட்டி விகாரையில் கடந்த 12 ஆம் தேதி மேற்கொண்ட போராட்டத்து தொடர்பில் விகாரையின் பிக்கு வழங்கிய முறைப்பாட்டிற்கு அமைய பொலிசாரால் குறித்த வாக்குமூலம் பெறப்பட்டது. வாக்கு மூலம் அளிப்பதற்காக மூவரையும் வியாழக்கிழமை 12 மணிக்கு சமூகம் அளிக்குமாறு தெரிவித்த பொலிசார் இரண்டு மணித்தியாலங்களுக்கு மேல் அவர்களை காத்திருக்கச் செய்து அதன் பின்னர் அவர்களிடம் வாக்கு மூலம் பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. தெல்லிப்பழைப் பிரதேச செயலாளர் யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டங்களில் குறித்த வ…
-
- 0 replies
- 238 views
-
-
சுவிசின் சூரிச் மாநகரில் சுவிஸ் வாழ் தமிழர்களின் சார்பில் மே நாள் நிகழ்வு மிகப் பேரெழுச்சியுடன் நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 585 views
-
-
வலி வடக்கு மக்களை மீளக் குடியேற்றக்கோரி தெல்லிப்பளை துர்க்கையம்மன் ஆலய முன்றலில் இடம்பெற்ற ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் கலந்துகொண்டு திரும்பிய பருத்தித்துறை சுப்பர் மடம் முகாமில் வாழும் மக்கள் சென்ற மினி பஸ் மீது மோட்டார் சைக்கிளில் வந்த ஒட்டுக்குழு ஈபிடிபியினர் கல்லெறிந்து தாக்குதல் மேற்கொண்டதுடன் பஸ்சில் சென்ற மக்கள் மீதும் ஒயில் ஊற்றியுள்ளனர். சுன்னாகம் புகையிரதக் கடவைக்கு அண்மையாக இன்று முற்பகல் 11.30 மணியளவில் மூன்று மோட்டார் சைக்கிளில் முகத்தை மூடி வந்த ஆறு பேரே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். சுன்னாகத்திலிருந்து மோட்டார் சைக்கிளில் பஸ்ஸைத் தொடர்ந்து விரட்டி வந்த இவர்கள் புன்னாலைக்கட்டுவன் சந்திக்கு அண்மையாக வைத்து பாரிய கல்லினால் மினிபஸ் மீது தாக்கியதில் பஸ்ஸின் பி…
-
- 15 replies
- 1.8k views
-
-
அப்பாவி ஆடுகள் மீது பாயும் அமெரிக்க ஓநாய் [14 - May - 2008] பழ.நெடுமாறன் "இந்தியாவிலும் சீனாவிலும் மக்களின் உணவுப் பழக்கத்தில் ஏற்பட்டுள்ள மேம்பாடே உலகம் முழுவதும் உணவுத் தானியங்களின் விலையேற்றத்திற்கு முதன்மையான காரணம்" என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கொண்டலிசா ரைஸ் கூறியிருந்தார். அவரைத் தொடர்ந்து அதே குற்றச்சாட்டை அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் டபிள்யூ புஷ் எதிரொலித்திருக்கிறார். "இந்தியாவில் நடுத்தர வகுப்பினர் 35 கோடி பேர் இருக்கிறார்கள். இவர்களின் எண்ணிக்கை அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையைக் காட்டிலும் அதிகம். செல்வம் பெருகும்போது சிறந்த உணவு வேண்டும். சிறந்த ஊட்டச்சத்து வேண்டும் என்று கேட்கத் தொடங்குவார்கள். இதனால், தேவை அதிகரிக்கிறது. தேவை அதிகரிப்பதால் …
-
- 1 reply
- 1.5k views
-
-
[size=4]கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளினால் அந்தக் கட்சி பிளவுபடும் நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.[/size] [size=4]எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில், அந்த கட்சியின் மாகாண சபை உறுப்பினர்கள் மூன்று பேர் கட்சியில் இருந்து விலகி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைய உள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் தைலேஸ்வரராஜா தெரிவித்துள்ளார். அத்துடன் தானும் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து விலக உள்ளதாகவும் இதுகுறித்து மகிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துப் பேசவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையானின் அரசியல் செயற்பாடுகளை புரிந்து கொள்ள…
-
- 7 replies
- 1.3k views
-
-
கிழக்கு மாகாணசபைக்கான முதலமைச்சர் விவகாரத்தில் அப்பதவிக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சர்பில் போட்டியிட்ட எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவைத் தான் நியமிக்க வேண்டுமென்ற முஸ்லிம் அமைச்சர்களின் வற்புறுத்தலுக்கு தான் ஒருபோதும் அடிபணியப் போவதில்லையென்றும் அதற்கு மேலும் அவர்கள் அதே நிலைப்பாட்டில் இருந்தால் பாரளுமன்று கலைக்கப்படுமென்றும் மஹிந்த எச்சரித்துள்ளார். கிழக்கு மாகாண முதலலைச்சராக நியமிக்கப்படப் போவது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவனான பிள்ளையானா அல்லது ஹிஸ்புல்லாவா என்ற போட்டி சூடு பிடித்திருந்த தருணத்திலேயே ஒரு சந்தர்ப்பத்தில் ஆத்திரமடைந்த மஹிந்த இவ்வாறு கூறியுள்ளார். முதலமைச்சராக ஹிஸ்புல்லா நியமிக்கப்படாமல், பிள்ளையான் நியமிக்கபட்டால், தங்களது பதவிகளை இ…
-
- 0 replies
- 1.1k views
-
-
கிளிநொச்சி மாவட்ட பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின் பணியாளர்கள் காலவரையறையற்ற பணிபகிஸ்கரிப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர். இன்று காலை முதல் தங்களது அலுவலகத்தினை மூடியதோடு 31 கிளைகள் மற்றும் இரண்டு உற்பத்தி ஆலைகள் என்பவற்றையும் மூடி பணி பகிஸ்கரிப்பில் ஈடுப்படுகின்றனர். கிளிநொச்சி மாவட்டத்தில் ஏனைய கூட்டுறவுச் சங்கங்களோடு ஒப்பிடுகையில் வளர்ச்சியிலும் செயற்பாட்டிலும் முதன்மை நிறுவனமாக இயங்கிய சங்கத்தில் மீள்குடியேற்றத்தின் பின்னர் சங்கம் மிக வேகமாக வளர்ந்து வந்ததோடு, வட மாகாணத்தில் சிறந்த பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கமாகவும் தமது சங்கம் திகழ்ந்துகொண்டிருக்கிறது. எனவே இந்தச் சங்கத்தில் ஊழல் மோசடி எனத் தெரிவித்து உள்ளக கணக்காய்வ…
-
- 0 replies
- 344 views
-
-
(எம்.எப்.எம்.பஸீர்) சட்ட விரோத கருத் தடை விவகாரம் தொடர்பில் குருணாகல் போதனா வைத்தியசாலையின் பிரசவ மற்றும் மகப்பேற்று பிரிவின் வைத்தியர் சேகு சிஹாப்தீன் மொஹம்மட் ஷாபிக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் நீதிவான் நீதிமன்ற விசாரணைகள் இன்று குருணாகல் பிரதான நீதிவான் சம்பத் ஹேவாவசம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதன்போது பிணையில் உள்ள வைத்தியர் ஷாபி மன்றில் ஆஜரகியிருந்தார். அவர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி வசந்த நவரத்ன பண்டாரவின் கீழ், சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீன், சைனாஸ் அஹமட், பசன் வீரசிங்க, ஹரித்த நவரத்ன பண்டார உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழுவொன்று ஆஜரானது. பாதிக்கப்பட்டதாக கூறப்படும் த…
-
- 2 replies
- 467 views
-
-
இலங்கையின் முதல் கேபிள் கார் திட்டம் தொடர்பான அப்டேட்! இலங்கையின் முதல் கேபிள் கார் திட்டத்தின் முதல் கட்டம் இந்த ஆண்டு ஒக்டோபர் மாதத்திற்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கைக்கான சீனத் தூதர் குய் ஜென்ஹோங் ஞாயிற்றுக்கிழமை (23) கம்பளை, அம்புலுவாவாவிற்கு இந்தத் திட்டத்தை ஆய்வு செய்வதற்காக விஜயம் செய்தபோது இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது. இந்த விஜயத்தின் போது, சீனத் தூதர் அம்புலுவாவா அறக்கட்டளையின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுராத ஜயரத்னவை சந்தித்தார். சீனத் தூதருடன் கலந்துரையாடிய எம்.பி. ஜெயரத்ன, 18 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சாத்தியக்கூறு ஆய்வு முடிக்கப்பட்ட இந்தத் திட்டம், சீன மற்றும் அமெரிக்க முதலீட்டாளர்களின் ஈடுபாட்டின் காரணமாக இப்போது யதார்த்தமாகி…
-
- 0 replies
- 158 views
-
-
புதுக்குடியிருப்பில் காணி அபகரிப்பு; மீட்டுத்தருமாறு கிராம மக்கள் ஜனாதிபதிக்கு கடிதம் [ Wednesday,10 February 2016, 05:34:32 ] நானாட்டான் - புதுக்குடியிருப்பு, சூரிய கட்டைக்காடு கிராமத்தில் காணிகள் உரிய முறையில் எல்லையிடப்பட்டுள்ளதா என பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் எவரும் வருகை தந்து பார்வையிடவில்லை என அக்கிராம மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். இந்த விடயம் தொடர்பில் அக்கிராம மக்கள் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர். நானாட்டான் புதுக்குடியிருப்பு கிராமத்தில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 12 ஆம் திகதி எல்லைக்கற்கள் போடப்பட்ட இடங்களை நில அளவைகள் திணைக்களத்தினால் அனுப்பப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டனர். குறித்த எல்லைக்கற்கள் சரியான…
-
- 0 replies
- 194 views
-
-
தென் தமிழீழத்தில் அரசின் பயங்கரவாதம் ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
- 0 replies
- 1.4k views
-
-
சட்டவிரோதமாக வாகனங்களைப் பயன்படுத்தியவர்களின் பெயர் பட்டியல் விரைவில் வெளியாகும் - ஜனாதிபதி வாகனங்களை இறக்குமதி செய்து அவற்றைப் பதிவுசெய்யாமல் பயன்படுத்திய முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களது பட்டியலொன்றை விரைவில் வெளியிடவுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். கந்தளாய் நகரில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மாகாண சபைக்குச் சொந்தமான வங்கிக்கணக்கிலிருந்து அநாவசியமாகப் பணத்தை பெற்று அரசாங்கத்துக்கு நட்டம் ஏற்படுத்தியமைக்காக ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சர் கைதுசெய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அந்த வங்கிக் கணக்கை நிறைவுறுத்தி பணம் பெறுமாறு தாமே அவருக்கு அறிவுறுத்தல் வழ…
-
- 0 replies
- 144 views
-
-
சிறிலங்கா ஆழ ஊடுருவும் அணியினர் மீது புலிகள் தாக்குதல் [செவ்வாய்க்கிழமை, 03 யூன் 2008, 07:19 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] வவுனியா மேற்கில் குஞ்சுக்குளத்துக்கும் மூன்றுமுறிப்புக்கும் இடையில் சிறிலங்கா ஆழ ஊடுருவும் அணியினர் மேற்கொண்ட தாக்குதல் முயற்சியை தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்துள்ளனர். அப்பகுதியில் நேற்று திங்கட்கிழமை பிற்பகல் 2:00 மணிக்கு சிறிலங்காப் படையின் ஆழ ஊடுருவும் அணி தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்தது. அவர்கள் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தி அவர்களின் நடவடிக்கையை முறியடித்து விரட்டியடித்துள்ளனர். இதில் படைத்தரப்புக்கு இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன. இத்தாக்குதலின் போது சிறிலங்காப் படையினரிடம் இருந்து ரி-56 - 2 ரக …
-
- 0 replies
- 1k views
-
-
ராஜபக்சவின் மோசடி குறித்து ஆராய ஹம்பாந்தோட்டைக்கு ரணில் விஜயம் [ Saturday,20 February 2016, 03:11:23 ] ராஜபக்சக்களின் அரசியல் கோட்டையாகக் கருதப்படும் ஹம்பாந்தோட்டையில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அபிவிருத்தித் திட்டங்களில் இடம்பெற்றுள்ள மோசடிகள் குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேரில் சென்று ஆராயவுள்ளார். ஹம்பாந்தோட்டைக்கு பிரதமர் ரணில் இன்று சனிக்கிழமை விஜயம் செய்கின்றார். மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிகாலத்தில் அங்கு முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களை முழுமையாக ஆராயவுள்ளார். யோஷித்த ராஜபக்ச விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் மஹிந்த ராஜபக்சவின் அபிவிருத்தித் திட்டங்களை பிரதமர் நேரில் சென்று ஆராயவுள்…
-
- 0 replies
- 354 views
-
-
மணலாறுப் பகுதியில் நான்கு முனைகளில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்டு வரும் முன்நகர்வுகளுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் தீவிர எதிர்தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதில் 15 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 25-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 689 views
-
-
ரெலோ அமைப்பின் அரசியல் பொறுப்பாளரும், த.தே. கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் இன்று இரவு பொலிஸாராலும், இராணுவத்தினராலும் கைது செய்யப் பட்டிருக்கின்றார். இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்டவர்களையும், படுகொலைச் சம்பவத்தையும் நினைவு கொள்ளும் வகையில், சுவரொட்டிகளை நெல்லியடி பகுதியில் ஒட்டிக்கொண்டிருந்துள்ளார். இதன்போது அங்கு வந்த பொலிஸாரும், படையினரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் என்ற அங்கீகாரத்தையும் வழங்காமல் கடுமையான முறையில் நடந்து கொண்டுள்ளனர். இதனை நகரப் பகுதியில் நின்றிருந்த சிலர் பார்த்துள்ளனர். இதன் பின்னர் சிவாஜிலிங்கத்தையும், அவருடனிருந்த 8 பேரையும் பொலிஸார…
-
- 10 replies
- 2k views
-
-
நான்கு பெண்கள் உட்பட ஆறு பேர் கைது ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற போர்வையில் கல்கிஸை பகுதியில் மிகவும் சூட்சுமமாக இயங்கி வந்த விபசார விடுதியொன்றினை சுற்றிவளைத்த பொலிஸார் நான்கு பெண்கள் அடங்கலாக ஆறு பேரை கைது செய்துள்ளனர். கல்கிஸை தொகுதி குற்றத்தடுப்புப் பிரிவு விசேட பொலிஸ் குழுவொன்று மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே இரண்டு ஆண்களும் நான்கு பெண்களும் கைது செய்யப்பட்டதுடன், அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்தார். குறித்த பகுதியில் விபசார விடுதியொன்று செயற்பட்டு வருவதாக கல்கிஸை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு தகவலொன்று கிடைத்துள்ளது. அ…
-
- 0 replies
- 757 views
-
-
சந்திரிகா குமாரதுங்க சுஸ்மா சுவராஜை சந்தித்து பேச்சுவார்த்தை குளோபல் தமிழ்ச் செய்தியாளர் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார். இன்று புதன்கிழமை இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சரின் பேச்சாளர் விகாஸ் ஸ்வரூப் இது குறித்த புகைப்படத்தை தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளதுடன் இலங்கையிலிருந்து இன்னொரு பழைய நண்பர் இந்தியா வந்துள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளார். http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/129591/language/ta-IN/article.aspx
-
- 0 replies
- 359 views
-
-
மத்திய வங்கி தயாரித்த தடயவியல் தணிக்கை தொடர்பாக சபாநாயகர் அறிவிப்பு விரைவில்! by : Jeyachandran Vithushan பிணைமுறி கொடுக்கல் வாங்கல் தொடர்பாக இலங்கை மத்திய வங்கி தயாரித்த தடயவியல் தணிக்கை அறிக்கையை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்குவது குறித்து சபாநாயகர் கரு ஜயசூரிய முக்கிய அறிவிப்பை வெளியிடவுள்ளனர். அந்தவகையில் எதிர்வரும் 21 ஆம் திகதி இதுகுறித்த அறிவிப்பினை சபாநாயகர் கரு ஜயசூரிய வெளியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2015ஆம் ஆண்டு பெப்ரவரி முதலாம் திகதி முதல் 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் திகதி வரையான காலப்பகுதியில் திறைசேரி பிணை முறி விநியோகம் தொடர்பாக அறிக்கை தயாரிக்கப்பட்டது. இந்த தடயவியல் கணக்காய்வு அறிக்கை …
-
- 0 replies
- 375 views
-