Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழீழ ஏதிலிகளின் மடல்கள் “நேஷனல் போஸ்டின்” மனக்கதவை தட்டியது அனலை நிதிஸ் ச. குமாரன் கனேடிய தேசிய ஆங்கிலப்பத்திரிகையான “நேஷனல் போஸ்ட்" என்ற வலதுசார் கொள்கையுடைய பத்திரிகை முதன் முதலில் தமிழீழ ஏதிலிகளின் கண்ணீர் மல்கிய மடல்கள் மூலமாக தனது மனக்கதவை திறந்து அவர்களுக்கு ஆதரவான கட்டுரையை பிரசுரித்துள்ளது. அடிமேல் அடிவைத்தால் அம்மியும் நகரும் என்ற பழமொழியை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது நேஷனல் போஸ்ட் பத்திரிகையின் மனமாற்றம். இந்த மனமாற்றம் எத்தனை காலம் நீடிக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். நேஷனல் போஸ்ட் பத்திரிகை கடந்த பல வருடங்களாக ஈழத்தமிழருக்கு எதிரான கட்டுரைகளையே எழுதி வந்துள்ளது. குறிப்பாக, ஈழத்தமிழர் என்றால் அவர்கள் அனைவருமே புலிகள் என்றும் …

    • 0 replies
    • 935 views
  2. கொழும்பு அரசு தவறு செய்கிறது வடக்கு, கிழக்கு மாகா­ணங்­க­ளைச் சேர்ந்த நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் வழங்­கும் பெயர்ப் பட்­டி­ய­லுக்­கும் இனி அரச வேலை வாய்ப்பு வழங்­கப்­ப­டும் என்று கொழும்பு அரசு அறி­வித்­துள்­ளது. சபை முதல்­வ­ரும் அமைச்­ச­ரு­மான லக் ஷ்மன் கிரி­யெல்ல நாடா­ளு­மன்­றத்­தில் இத­னைத் தெரி­வித்­துள்­ளார். இது தவறு. தன்னை நல்­லாட்சி அரசு என்று கூறிக்­கொள்­ளும் ஒரு அரசு அர­சி­யல் நிய­ம­னங்­களை வழங்­கு­வது எந்­த­வ­கை­யில் சரி­யா­னது? இது அர­ச­மைப்­பின் கீழ் இலங்­கை­யின் குடி­மக்­கள் ஒவ்­வொ­ரு­வ­ருக்­கும் வழங்­கப்­பட்­டுள்ள சம உரி­மை…

  3. அமெரிக்காவின் தடைகளினால்... இலங்கைக்கு, பாதிப்பில்லை – ஜூலி சங் ரஷ்யாவின் கச்சா எண்ணெய் மீது அமெரிக்கா விதித்துள்ள தடைகளால் இலங்கைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார். இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடிக்கு அமெரிக்கா வழங்கி வரும் ஆதரவு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். உலக நாடுகளுடன் இலங்கை எவ்வாறு இராஜதந்திர உறவுகளைப் பேண வேண்டும் என்பது தொடர்பில் அமெரிக்கா ஆலோசனை வழங்குவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார். அத்துடன், அது இலங்கை அரசாங்கத்தின் தீர்மானம் எனவும் அமெரிக்கத் தூதுவர் தெரிவித்துள்ளார். ரஷ்ய கச்சா எண்ணெய்…

    • 1 reply
    • 253 views
  4. வெலிக்கந்தையில் தமிழர் புனர் வாழ்வுக் கழக பணியாளர்கள் 5 பேர் கடத்தல் [செவ்வாய்க்கிழமை, 31 சனவரி 2006, 02:15 ஈழம்] [ம.சேரமான்] மட்டக்களப்பு வெலிக்கந்தையில் தமிழர் புனர்வாழ்வுக்கழகப் பணியாளர்கள் 5 பேர் அடையாளம் தெரியாத ஆயுதக் குழுவினரால் நேற்று திங்கட்கிழமை கடத்திச் செல்லப்பட்டுள்ளனர். மட்டக்களப்பிலிருந்து வவுனியாவிற்கு கணக்கியல் தொடர்பான பயிற்சிநெறி வகுப்பில் கலந்துகொள்வதற்காக மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்திலிருந்து வவுனியா நோக்கி சென்றுகொண்டிருந்தனர். அப்போது வெலிக்கந்தையிலுள்ள சிறிலங்கா இராணுவ முகாமை அண்மித்த பகுதியில் திங்கட்கிழமை நண்பகல் 1.00 மணியளவில் வெலிக்கந்தையடியில் வழிமறித்த அடையாளம் தெரியாத ஆயுதக் குழுவினர் 5 பேரை பலவந்தமாகக் கடத்திச் சென்றுள்ள…

    • 28 replies
    • 5.2k views
  5. இலங்கைத் தொழிலளார் காங்கிரஸின் சிரேஸ்ட உறுப்பினருமான ஜெகதீஸ்வரனின் வீடு கொள்ளையிடப்பட்டுள்ளது நுவரெலியா மாவட்டத்தின் அட்டன் நகரில் அமைந்துள்ள அவரது வீட்டில் இந்தக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கொழும்பு நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. சுமார் 15 லட்ச ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்கள் மற்றும் பணம் ஆகியன கொள்ளையிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த 16ம் திகதி மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொள்ளும் நோக்கில் குறித்த வீட்டை மூடிவிட்டு கொழும்பு சென்றதாகவும், மீண்டும் வீட்டிற்கு வந்த போது கொள்ளையிடப்பட்டமை தெரிய வந்ததாக முன்னாள் பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை அட்டன் காவல் துறையினர் மேற்கொண்டு வருவதாகவும், இதுவரையில் இந்த சம்பவத்…

    • 1 reply
    • 467 views
  6. இனக்கொலையாளியும் அரசபயங்கரவாதியுமான மகிந்த ராஜபக்ச தலைமையில் முள்ளிவாய்க்கால் அழிப்பு நாள் வெற்றி நாளாகக் கொண்டாடப்பட்டது. முள்ளிவாய்க்காலில் முடக்கப்பட்ட இலட்சக்கணக்கான அப்பாவித் தமிழ் மக்களை சாட்சிகளை முடிமறைத்துக் கொலைசெய்து அழித்துவிட்ட நாளைக் கொண்டாடும் கோரத்தை வெற்றி என்கிறது இலங்கை அரச பாசிசம். உலகின் அதிகார மையங்கள் அனைத்தும் இணைந்து அதிபயங்கரக் கொலையாளிகளான ராஜபக்ச குடும்பத்தை உருவாக்கிய இந்த நாள் மனித குலம் தோல்வியடைந்த நாள். இதே வேளை கொல்லப்பட்ட உறவினர்களுக்குக் கூட அஞ்சலிசெலுத்தும் அடிப்படை உரிமையை மறுக்கும் இலங்கை அரச பாசிஸ்டுக்கள் வடக்கையும் கிழக்கையும் இராணுவக்களைகளை விதைத்திருந்தனர். ஒவ்வொரு மூலையிலும் இராணுவமும் அரச படைகளும் ஒரு போரின் முன்னறிவைப்பைப் போ…

    • 4 replies
    • 1.5k views
  7. இலங்கையில் அவசரநிலை பிரகடனம் செய்த ரணில்: பிரதமர் அலுவலகத்தை கைப்பற்றிய போராட்டக்காரர்கள் 13 ஜூலை 2022, 07:44 GMT புதுப்பிக்கப்பட்டது 38 நிமிடங்களுக்கு முன்னர் இலங்கையின் பிரதமர் அலுவலகத்தை போராட்டக்காரர்கள் முழுவதுமாக கைப்பற்றியுள்ளனர். பிரதமர் அலுவலகத்திற்குள் நுழைந்த மக்கள் மகிழ்ச்சியில் செல்ஃபி எடுத்து கொண்டனர். பின்னர் ரணில் மற்றும் கோட்டபய ராஜபக்ஷவுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர் என்கிறார் கொழும்பில் உள்ள பிபிசி செய்தியாளர் டேசா வாங். இரண்டாம் மாடியில், பிரதமர் அலுவலகம் என்று எழுதி வைக்கப்பட்டிருந்த பலகைக்கு மேலே போராட்டக்காரர்கள் இலங்கையின் கொடியை ஏந்தி நின்றனர். போராட்டக்…

  8. வவுனியா மாவட்டத்திலுள்ள பெரியதம்பனை கிராமம் போரினால் முழுமையாகவே அழிந்து எலும்புக் கூடாகக் காட்சியளிக்கின்றது. கடந்த வாரம் வவுனியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் இந்தக் கிராமத்துக்குச் சென்ற போது அதிர்ச்சியான காட்சிகளையே பார்க்க முடிந்தது. மீள்குடியேற்றம் என்பது வெறும் பெயரளவுக்குத்தான் என்பதையும் இங்கு காணக்கூடியதாக இருந்தது. மக்கள் எந்தவிதமான உதவிகளும் இல்லாமல் தமது வாழ்க்கையை எவ்வாறு மீளக்கட்டியெழுப்புவது எனத் தெரியாது எதிர்காலம் கேள்விக்குறியான நிலையில் உள்ளனர். பேரியதம்பனை கிராமம் பெருமளவில் இந்துக்களையும் சிறிய அளவில் கிறித்தவர்களையும் கொண்டுள்ள போதிலும் மக்கள் மதங்களுக்கு அப்பாற்பட்டு ஒரு குடும்பம்போல் வாழ்ந்துவருகின்றனர். இக்கிராமமானது 1948ஆம் …

  9. சிங்­கப்பூர் பிர­தமர் இலங்கை விஜயம் சிங்­கப்பூர் நாட்டின் பிர­தமர் லீ சின் லுன் அடுத்த வருடம் ஜன­வரி மாதத்தில் உத்­தி­யோ­க­பூர்வ விஜ­ய­மொன்றை மேற்­கொண்டு இலங்­கைக்கு வர­வுள்ளார். சிங்­கப்பூர் பிர­த­மரின் இலங்கை விஜ­யத்­தின்­போது இரு நாடு­க­ளுக்­கு­மி­டையில் சுதந்­திர வர்த்­தக உடன்­ப­டிக்­கைகள் கைச்­சாத்­தி­டப்­ப­டு­மென தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் அழைப்­பா­ணை­யை­யேற்று இலங்­கைக்கு வரும் சிங்­கப்பூர் நாட்டு பிர­தமர் லீ சின் லுன், பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மற்றும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஆகி­யோ­ரு­டனும் அர­சியல் முக்­கி­யஸ்­தர்­க­ளுடன் கலந்துரையாடுவார் என்றும் அரசாங்க வட்டார…

  10. மார்ச்சில் கடும் அழுத்­தங்­களை பிர­யோ­கிக்­க­வுள்ள செயிட் ஹுசைன் (ரொபட் அன்­டனி) ஐக்­கி­ய ­நா­டுகள் மனித உரிமை பேர­வையின் 37 ஆவது கூட்டத் தொடர் எதிர்­வரும் பெப்ர­வரி மாதம் 26 ஆம் திகதி ஆரம்­ப­மா­க­வுள்ள நிலையில் மார்ச் மாதம் 21ஆம் ­தி­கதி நடை­பெ­ற­வுள்ள இலங்கை தொடர்­பான விவா­தத்­தின்­போது ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் செய்ட் அல் ஹுசேன் இலங்கை மீது கடும் அழுத்­தங்­களை பிர­யோ­கிப்பார் என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. மார்ச் மாதம் 21 ஆம் திகதி இலங்கை தொடர்­பான அறிக்­கையை வெ ளியி­ட­வுள்ள ஐக்­கி­ய­நா­டுகள் மனித உரிமை ஆணை­யாளர் செயிட் அல் ஹூசைன் இலங்கை மீது தனது விமர்­சனம் கலந்த அதி­ருப்­தியை வெளி­யி­டுவார் என எதிர்­பார்க்­கப்­ப­டு­…

  11. அந்திரக்ஸ்ஸை' இனங் காணும் கண்டுபிடிப்பு ஈழத் தமிழனின் தொழில்நுட்பம் புதிய சாதனை! * `நாசா', `பென்ரகன்' நிறுவனங்களும் முக்கிய விடயமென அங்கீகரிப்பு * யாழ்.மருத்துவ பீட விரிவுரையாளர் ச.சிவானந்தனின் கண்டுபிடிப்புக்கு அமெரிக்கா பெரும் வரவேற்பு உலகில் அவ்வப்போது தனது கைவரிசையை காட்டி வல்லாதிக்க அரசுகளை கூட கிலி கொள்ளச் செய்துவரும் `அந்திரக்ஸ்' (Anthrax) உயிர்கொல்லி குறித்த கண்டுபிடிப்பொன்றை மேற்கொண்டு ஈழத்தமிழர் ஒருவர் புதிய சாதனை படைத்துள்ளார். உயிரியல் சார் பயங்கரவாதத்தின் (Biological terrorism) ஆபத்தான ஆயுதமாகக் கருதப்படும் இந்த `அந்திரக்ஸ்' எம் கண்களுக்கு புலப்படாமலேயே எம்மை நெருங்கி பலியெடுக்கக் கூடிய நாசகார பொருளாகும். பழிதீர்ப்பதற்காக எதிரிக…

    • 10 replies
    • 2.7k views
  12. “நான் தங்கதுரையின் மகன்!” கரிகாலன் தங்கதுரை, குட்டிமணி, ஜெகன்… ஈழத் தமிழர் போராட்ட வரலாற்றில் இந்த மூன்று பெயர்களையும் யாரால் மறக்க முடியும்? சிங்கள இனவெறியின் கோர அடையாளங்களாக மூன்று உயிர்களும் வரலாற்றில் பதிந்துவிட்டன. மூன்று குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் வெவ்வேறு நாடுகளுக்குப் புலம் பெயர்ந்து சென்றுவிட, தங்க துரையின் குடும்பம் தமிழ்நாட்டில் வசித்தது. அந்த தங்கதுரையின் மகன் கரிகாலனுக்குக் கடந்த வாரம் சென்னையில் திருமணம்! வெலிக்கடை சிறைக் கலவரத்தில் மோசமான சித்ரவதையால் தங்கதுரை கொல்லப்பட்ட பிறகு, அப்போது தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர்., தங்கதுரையின் குடும்பத்துக்கு அரசு சார் பாக நந்தனத்தில் வீடு வழங்கி ஆதரவு அளித்தார். தங்கதுரையின் மனைவி நவமணி, தனத…

  13. கிழக்கு மாகாணத்தில் காணாமல் போனோரை விசாரணை செய்யும் மகிந்தவின் ஆணைக்குழுவின் அமர்வு காத்தான்குடி பிரதேச செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை ஆரம்பமானது. இந்த அமர்வு இம்மாதம் 9ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. காணாமல் போனோரை விசாரணை செய்யும் மகிந்தவின் ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற நீதிபதி மெக்ஸ்வல் பராக்கிரம பரணகம தலைமையில் இந்த அமர்வு நடைபெறுகின்றது. ஆணைக்குழுவின் விசாரணை காத்தான்குடியில் நாளை சனிக்கிழமையும், ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கட்கிழமை ஆரையம்பதி பிரதேச செயலக மண்டபத்திலும் இடம்பெறவுள்ளது. இந்த அமர்வில் சாட்சியங்களை பதிவு செய்வதற்காக முறைப்பாடு செய்தவர்களுக்கு ஆணைக்குழுவினால் அழைப்புக் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. அதற்கமைய இன்று 59 பேரும், நாளை 53 பேர…

    • 0 replies
    • 331 views
  14. கேபி யிற்கு 100 ஏக்கர் காணி, கருணாவுக்கு ஆலை வளாகம் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆயுதக் கொள்வனவுக்குப் முன்னாள் பொறுப்பாளராக இருந்து பின்னர் இலங்கை அரசுடன் இணைந்து போராட்டத்தினை அழிப்பதற்கு இலங்கை இந்திய அரசுகளுக்கு பக்கபலமாக செயற்பட்ட கே.பி என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் தற்போது வெளிப்படையாக இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து தமிழ்த் தேசியத்தினை சிதைக்கும் வேலைத்திட்டங்களில் ஈடுபட்டுவருகின்றார். அவரைப் பயன்படுத்தி புலம்பெயர் தமிழ் மக்களின் ஒற்றுமையை சிதறடித்து அதன் மூலம் புலம் பெயர் தமிழ் மக்கள் ஒன்றிணைந்து இலங்கை அரசுக்கு எதிராக போர்க்குற்ற விசாரணைகளுக்கு அல்லது இனப்படுகொலைக்கு எதிரான விசாரணைகளுக்கு சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வற்புறுத்துவதனை…

  15. தப்பிச் செல்ல முயன்றவேளை பொலிஸார் சுட்டதாக கூறும்படி எச்சரித்தனர்:- உயிரிழந்தவரின் நண்பன் வாக்குமூலம் மோட்டார் வண்டியை தாம் நிறுத்தியதன் பின்னரே பொலிஸார் தனது நண்பன் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக, பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் பலியான இளைஞனின் நண்பன் தெரிவித்துள்ளார். எனினும் தாம் தப்பிச் செல்ல முயன்றவேளை பொலிஸார் தனது நண்பனை சுட்டுக் கொன்றதாக யாரேனும் கேட்டால் சொல்ல வேண்டும் என பொலிஸார் எச்சரித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். நேற்று இரவு மோட்டார் வண்டியில் சென்ற இளைஞன் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 23 வயதுடைய நபர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பில் அந்த மோட்டார் வண்டியில் சென்ற இளைஞனின் நண்பன் ஊடகங்களுக்கு தகவல் வழங்கும்போது மேற்க…

  16. ராஜபக்ஸவின் இருண்ட ஆட்சிக் காலத்தில் செய்யப்பட்ட கொலைகளுக்கு எதிராக நீதி நிலைநாட்டப்படும்… லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டு 9 வருடங்களும் நல்லாட்சி அரசு ஆட்சிக்கு வந்து 3 வருடங்களும் இப்துபோது கடந்து விட்டன. ராஜபக்ஸவின் இருண்ட ஆட்சிக் காலத்தில் செய்யப்பட்ட கொலைகளுக்கு எதிராக நீதியை நிலைநாட்ட நல்லாட்சி அரசு இன்றுவரை அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு வருகிறது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மூலம் வெளியிட்டிருந்தார். பிரதமர் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில், ஊழல் நிறைந்த அரசுக்கு எதிராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் தானும் கடந்த 2014ம் ஆண்டு நவம்பர் …

  17. தடைசெய்யப்பட்ட தங்கூசி வலையைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட மாட்டோம் என கூறி ஒரு கோடி பெறுமதியான வலைகளை மண்டைதீவு மீனவர்கள் தாமாக முன்வந்து எரித்துள்ளனர். இலங்கையில் தங்கூசி வலைகளைப் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந் நிலையில் மண்டைதீவு கடற்றொழிலாளர் சங்கத்தை சேர்ந்த 150 அங்கத்தவர்கள் இன்று காலை 10 மணியளவில் யாழ்.மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்துறைத் திணைக்களத்திற்கு வருகை தந்ததுடன் இன்றில் இருந்து தங்கூசி வலைகளைப் பயன்படுத்த மாட்டோம் என கையெழுத்து இடப்பட்ட கடிதம் ஒன்றினை கையளித்தனர். இதன்படி யாழ்.மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்துறைத் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் …

    • 5 replies
    • 1.1k views
  18. கோட்டாபயவுக்கு ஏற்பட்ட நிலை: புகலிடம் வழங்க முன்வராத உலக நாடுகள் கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி பதவியில் இருந்து விலகி ஒரு மாதம் நிறைவடையவுள்ள நிலையில், அவருக்கு உலகில் எந்த நாடும் அரசியல் புகலிடம் வழங்க இதுவரை முன்வரவில்லை என தெரியவருகிறது. குடியுரிமை பெற்றிருந்த அமெரிக்கா கூட புகலிடம் வழங்கவில்லை கோட்டாபய ராஜபக்ச குடியுரிமை பெற்றிருந்த அமெரிக்கா கூட அவருக்கு புகலிடம் வழங்கவில்லை. அத்துடன் இந்தியா தனது நாட்டுக்கு வரவும் அவருக்கு அனுமதி வழங்கவில்லை. இந்த நிலையில், தற்போது சிங்கப்பூரில் தங்கியிருக்கும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய அங்கு மேலும் 14 நாட்கள் தங்கியிருக்க விசா அனுமதி கோரியிருந்தார். இந்த கோரிக்க…

    • 7 replies
    • 545 views
  19. அர்ஜூன மகேந்திரனுக்கு எதிரான நடவடிக்கை சிங்கப்பூர் பிரதமருடன் ஜனாதிபதி கலந்துரையாடுவார் ? லியோ நிரோஷ தர்ஷன் இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நாளை திங்கட்கிழமை இலங்கை வரும் சிங்கப்பூர் பிரதமர் லீ ஷியன் லூங்வுடனான சந்திப்பின் போது அர்ஜூன் மகேந்திரனுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துரையாடவுள்ளார். இரு நாடுகளுக்கு இடையிலான நீண்டகால நட்புறவின் அடிப்படையில் இந்த விடயத்தை கையாள்வார்கள் எனஎதிர்பார்க்கப்படுகின்றது. இலங்கை மத்திய வங்கி பிணைமுறிகள் பற்றிய ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் மத்திய வங்க…

  20. யாழ்ப்பாணம் கோப்பாய் கிறிஸ்தவக்கல்லு}ரி மாணவன் சிறீலங்காப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுப்பிட்டி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த செல்லத்துரை ரமேஸ்கண்ணா (15) என்பவரே இவ்வாறு படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். நேற்று பிற்பகல் 5.00 மணியளவில் சிறுப்பிட்டி நோக்கி உறவினர்களுடன் சிற்று}ர்தி ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்தவேளை வழியில் மறித்து சிற்று}ர்தியை சோதனையிட்ட சிறீலங்கா படையினர் குறித்த மாணவனிடம் சிறீலங்கா தேசிய அடையாள அட்டை இல்லை எனக்காரணம் காட்டி அவரைக்கைது செய்துள்ளனர். க.பொ.த(சாஃத) பாPட்சைக்கு தோற்றுவதற்காக மட்டுமே 16 வயதுடையவர்களுக்கு தேசிய அடையாள அட்டை பெற்றுக்கொள்ள வேண்டுமென சிறீலங்காவில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. nitharsanam

  21. காத்தான்குடியில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மஹிந்த பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ காத்தான்குடியில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் தாமரை மொட்டுச் சின்னத்தில் காத்தான்குடி நகர சபைக்கு போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திலேயே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொண்டார். காத்தான்குடி நகர சபையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் தலைமை வேட்பாளராக போட்டியிடும் ஏ.எல்.எம்.நவாஸ் தலைமையில் இடம்பெற்ற மேற்படி தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஸ்ரீலங்…

  22. சர்வதேச அழுத்தம் நீதியானதா? ஐரோப்பிய ஒன்றியம் தமிழீழ விடுதலைப் புலிகளின் மீது தடை விதித்திருக்கிறது. இத் தீர்மானம் அனைத்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளாலும் ஒரே மனதுடன் ஏற்கப்பட்டிருக்க வேண்டும். முன்னர் பி(F)ன்லாந்து, டென்மார்க், சுவீடன் ஆகிய நாடுகள் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. அமெரிக்க ஐக்கிய நாடுகள் (USA), ஐக்கிய இராச்சியம் (UK) இரண்டினதும் அழுத்தத்துக்கு அந்த மூன்று நாடுகளும் அடிபணிந்ததால் இத்தீர்மானம் அனைத்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளாலும் ஒரே மனதுடன் ஏற்கப்பட்டது. இது செய்தி. சர்வதேச அழுத்தங்கள் ஏன் உபயோகிக்கப் படுகின்றன? எப்படி உபயோகிக்கப் படுகின்றன? அவை நீதியானவையா? அவை பாரபட்சம் அற்றவையா? அண்மைக்கால நிகழ்வுகள் சிலவற்றைக் கீழே காணலாம். பொருளில்லார்க்கு இவ்வுலகம…

  23. அடுத்த ஜனா­தி­பதி தேர்­த­லுக்கு முன்னர் அர­சியல் தீர்வு தருவேன் உறு­தி­யாக கூறு­கிறார் பிர­தமர் ரணில் விக்கி­ர­ம­சிங்க (எம்.எம்.மின்ஹாஜ்) புதிய அர­சி­ய­ல­மைப்பு பணிகள் உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தலின் பின்னர் ஆரம்­ பிக்­கப்­படும். இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வு காணு­வதில் இரா.சம்­பந்தன் மாத்­தி­ர­மல்ல நானும் பல நெருக்­க­டி­களை சந்­தித்து வரு­கின்றேன். ஆகவே இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வு காண வடக்­கிலும் தெற்­கிலும் உள்ள எமது பிர­தி­வா­தி­களை இணைத்துக் கொண்டே நாம் பய­ணிக்க வேண்­டி­யுள்­ளது. இதன்­படி அடுத்த ஜனா­தி­பதி தேர்­த­லுக்கு முன்னர் அனை­வ­ரையும் ஒன்­றி­ணைத்து கொண்டு தேசிய பிரச்­சி­னைக்கு தீர்வு காண நட­வ­டிக்கை எடுப்போம் என பிர­தமர் ரண…

  24. சுற்றறிக்கையை ரத்து செய்யுமாறு முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு உயர் நீதிமன்றம உத்தரவு! வடமாகாண பிரதான செயலாளர் மற்றும் அவரது நிர்வாக குழுவினரின் அடிப்படை உரிமைகள் மீறப்படும் வகையில் வடமாகாண முதலமைச்சரால் விடுக்கப்பட்டதாக கூறப்படும் சுற்றறிக்கை ஒன்றை ரத்து செய்யுமாறு உயர் நீதிமன்றம் இன்று முதலமைச்சருக்கு உத்தரவிட்டது. வடமாகாண பிரதான செயலாளரினால் இந்த சுற்றறிக்கைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த மனு இன்று பிரதம நீதியரசர் மொஹான்பீரிஸ் தலைமையிலான மூன்று நீதியரசர்கள் அடங்கிய குழுவினால் பரிசீலிக்கப்பட்டது. முதலமைச்சரின் சுற்றறிக்கையின் மூலம் தமதும், தமது அலுவலக நிர்வாக குழுவினரதும் அடிப்படை உரிமைகள் மீறப்படுவத…

  25. தகு வே.பிரபாகரனை பெற்ற வீரப்பெண்மணி பார்வதி அம்மையார்: சிங்களர்கள் புகழாரம் November 8th, 2010 leaders_mother யாழ்ப்பாணத்தை சுற்றிப்பார்க்க வரும் சிங்களவர்கள் தேசியத்தலைவரின் தாயாரை தொட்டுவணங்கி உலகத் தமிழர்களின் ஒரே அடையாளமாக திகழ்ந்த பிரபாகரனை பெற்ற வீரப்பெண்மணி என்று சிங்களவர்களும் புகழ்ந்து செல்கிறார்கள். விடுதலைப்புலி தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளுக்கு தற்போது 82 வயதாகிறது. பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த ஜனவரி மாதம் அவர் தன் கணவர் வேலுப் பிள்ளையை இழந்தார். கணவர், மகன்கள், மகள்கள் யாரும் அருகில் இல்லாத நிலையில் தவித்த அவருக்கு சில மாதங்களுக்கு முன்பு உடல் நலம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து கனடாவில் உள்ள தன் மகள் வினோதி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.