ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143584 topics in this forum
-
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா வின் வெற்றியையே அமெரிக்கா விரும்பி உள்ளது. இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் PATRICIA A. BUTENIS கடந்த ஜனவரி 22 ஆம் திகதி இலங்கை நிலைவரம் தொடர்பாக அமெரிக்க வெளியுறவு அமைச்சுக்கு அனுப்பி வைத்திருந்த ஆவணம் ஒன்றில் இருந்து இது அம்பலமாகி உள்ளது. விக்கிலீக்ஸ் இணையத்தளம் இந்த ஆவணத்தை வெளிவிட்டு உள்ளது. இதில் பொன்சேகாவுக்கும், பொன்சேகாவின் தேர்தல் வாக்குறுதிகளுக்கும் மிகவும் முக்கியத்துவம் கொடுத்து எழுதி இருக்கின்றார் அமெரிக்க தூதுவர். மனித உரிமைகள், அகதிகள், அரசியல் இணக்கப்பாடு,யுத்தக் குற்றங்களுக்கு பொறுப்புக் கூறல், அடுத்த கட்ட நடவடிக்கைகள் ஆகியன தொடர்பாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வாக்குறுதிகளை தேர்…
-
- 0 replies
- 794 views
-
-
யுத்தத்திற்குப் பின்னர் தடுமாறும் இலங்கை.! யுத்தத்திற்குப் பின்னரான நிலைமாறுகால சூழலில் நாடு தடுமாறி திணறுகிறது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார். மட்டக்களப்பு கல்வி வலயத்திலுள்ள தன்னாமுனை புனித ஜோசெப் கல்லூரியின் 143வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இடம்பெற்ற கல்லூரி தின நிகழ்வில் அதிதியாகக் கலந்துகொண்டு அவர் உரையாற்றினார். நேற்று கல்லூரி அதிபர் மரியான்தம்பி பற்ரிக் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வுகளில் போப்பாண்டவரின் இலங்கைக்கான பிரதிநிதி ஆயர் கலாநிதி பியரென் நுயன் வன் டொற், மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் கலாநிதி பொன்னையா ஜேசெப், கிழக்கு மாகாண இராணுவ கட்டளைத் …
-
- 2 replies
- 381 views
-
-
போர் பல்லாயிரம் பெண்களை விதவைகளாக்கி விட்டுள்ளது. கணவர்களை மட்டுமே நம்பிய மனைவிகளின் நிலமையோ நட்டாற்றில் தத்தளிக்கும் அந்தரமாய்ப் போயுள்ளது. நாளும் நம்மை நாடி வரும் குரல்களிலிருந்து கிடைக்கும் தகவல்கள் வறுமையின் கொடுமையும் வாழ்வு மீதான அவநம்பிக்கைகளுமாகவே இருக்கிறது. இந்தக்குரலுக்குரிய 40வயது அக்காவின் கணவன் 2007 மாவீரமாகிவிட்டார். 3பிள்ளைகளோடு தனித்துப்போனாள். பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கிவிடும் கனவோடு போராடும் இந்தப் பெண்ணுக்கு உதவிக்கு யாருமில்லை. நிம்மதியாய் படுத்துறங்கக்கூட ஒரு நிரந்தரமான கூரையில்லாது உக்கிய குடிசைக்குக் கீழ் மழைக்குளிர் பசியோடு வாழ்கிறார்கள். தற்காலிகமாக மழையிலிருந்து தம்மைக்காப்பாற்ற பொலித்தீனால் கூரையை மூடிக் கொண்டு வாழ்கிறார்கள். தனித்…
-
- 4 replies
- 1.2k views
-
-
2019 மார்ச் மாதத்துக்குப் பின்னர் அமெரிக்காவின் மனித உரிமை நிகழ்ச்சி நிரலுக்குள் சிறிலங்கா 2019 மார்ச் மாதத்துக்குப் பின்னர், சிறிலங்காவை, தனது மனித உரிமைகள் நிகழ்ச்சி நிரலுக்குள் அமெரிக்கா கொண்டு வரும் என்று ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த வாரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் உலகத் தமிழர் பேரவையின் தலைவர் மற்றும் குழுவினர், அமெரிக்காவின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான முதன்மை பிரதி உதவிச் செயலர் அலிஸ் வெல்ஸ் அம்மையாரைச் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தனர். இதன் போதே, 2019 மார்ச் மாதத்துக்குப் பின்னர், சிறிலங்காவை, தனது மனித உரிமைகள் நிகழ்ச்சி நிரலுக்குள் அமெரிக்கா கொண்டு வரும் என…
-
- 0 replies
- 128 views
-
-
தமிழ்நாடு செல்லவிருந்த மேலும் 70 அகதிகள் தலைமன்னாரில் கைது [வெள்ளிக்கிழமை, 15 செப்ரெம்பர் 2006, 19:47 ஈழம்] [து.சங்கீத்] சிறிலங்காப் படைகளின் அடாவடித்தனங்களிலிருந்தும் கொலை மிரட்டல்களிலிருந்தும் தப்பிக்கும் நோக்கத்துடன், தமிழ்நாட்டிற்கு அகதிகளாச் செல்வதற்கு என தலைமன்னாரில் படகுக்காகக் காத்திருந்த 70 பேரை, சிறிலங்கா கடற்படை கைது செய்துள்ளது. 17 குடும்பங்களைச் சேர்ந்த, பெண்கள் குழந்தைகள் உட்பட மொத்தம் 70 பேர் கைதாகினர். 19 பெண்களும், 27 குழந்தைகளும் இதற்குள் அடங்குவர். இவர்களுடன், இரு படகோட்டிகளும் கைதாகினர். தலைமன்னார் சிறிலங்கா காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட இவர்களை, மன்னார் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு அழைத்து வந்தனர். இவர்களை விசாரித்த மேலதிக…
-
- 0 replies
- 739 views
-
-
எம்.ஏ.எம்.நிலாம்- பொத்துவிலில் முஸ்லிம் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தினால் முஸ்லிம்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் பதற்றநிலை இன்னமும் தணிந்தபாடாக இல்லை. சம்பவத்தையடுத்து முரண்பாடான தகவல்களே வெளியிடப்பட்டு வருகின்றன. இது முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் அரசு மீதான பலத்த சந்தேகத்தையே தோற்றுவித்துள்ளது. இந்தப் படுகொலைகளின் பின்னணி என்னவாக இருக்கும். யார் இதனைச் செய்தார்கள் என்பதைக் கண்டறிந்து முஸ்லிம் சமூகத்தின் சந்தேகத்தைப் போக்க வேண்டியதும் இதன் சூத்திரதாரிகள் தண்டிக்கப்பட நடவடிக்கை எடுக்க வேண்டியதும் அரசாங்கத்தின் கட்டாயக் கடப்பாடாகும். இந்தப் படுகொலைகள் தொடர்பாக அரசு தொடர்ந்து கூறிவரும் காரணங்களை முஸ்லிம் மக்கள் முற்று முழுதாகவே நிராகரித்துள்ளனர். ஆனால், அர…
-
- 0 replies
- 758 views
-
-
கிளிநொச்சியில் கடந்த இரண்டாம் திகதி பாடசாலை மாணவர்கள் 28 போ் கடத்தப்பட்டது குறித்து தப்பிவந்த மாணவர்கள் மூலமாக வெளியில் தெரியவந்துள்ளது. கடத்தப்பட்ட 28 மாணவர்களில் 27 போ் தப்பிவந்துள்ளனர். அவர்கள் மூலமாக மாணவர்கள் கடத்தப்பட்ட செய்தி வெளியில் தெரிந்துள்ளது. அதே நேரம் எஞ்சிய ஒரு மாணவரின் நிலை குறித்து நேற்று மாலை வரை எதுவித தகவல்களும் கிடைக்கவில்லை என்றும் தெரிய வந்துள்ளது. கடந்த இரண்டாம் திகதி காலைவேளையில் கடத்தல் சம்பவம் நடைபெற்றுள்ளது. எட்டுப் போ் கொண்ட குழுவொன்றே மாணவர்களைக் கடத்தி பஸ்ஸொன்றில் அழைத்துச் சென்றுள்ளனர். கடத்தியவர்கள் ஆயுதங்களுடன் காணப்பட்டதாக கடத்தப்பட்டு தப்பி வந்த மாணவர்கள் தெரிவித்துள்ளனர். கடத்தல்காரர்களைக் கண்டுபிடிக்க பொலிசார் விசாரணை…
-
- 1 reply
- 592 views
-
-
இன்று காலை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற, மாகாணசபை உறுப்பினர்களுடனான இலங்கைக்கான அமெரிக்க பிரதி பிரதி பிரதம திட்டப்பணிப்பாளர் உடனான சந்திப்பு. http://www.pathivu.com/news/33651/57//d,article_full.aspx
-
- 0 replies
- 465 views
-
-
மட்டக்களப்பு மாநகர முதல்வரானார் சரவணபவன் மட்டக்களப்பு மாநகர சபை முதல்வராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் தியாகராஜா சரவணபவன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு மாநகர சபை முதல்வரைத் தெரிவு செய்வதற்கான அமர்வு இன்று காலை கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் சலீம் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது, மாநகர முதல்வர் பதவிக்கு தியாகராஜா சரவணபவனின் பெயரை முன்மொழிந்தது. தமிழர் விடுதலைக் கூட்டணி, சார்பில் சிவலிங்கம் சோமசுந்தரம் முன்னிறுத்தப்பட்டார். இதையடுத்து நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், 25 வாக்குகளைப் பெற்றுக் கொண்ட, தியாகராஜா சரவணபவன் மாநகர முதல்வராக தெரிவு செய்யப்பட்டார். இவருக்கு ஆதரவாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஐதேக, ஈபிடிபி …
-
- 0 replies
- 330 views
-
-
அரச அனுமதியுடன் நூற்றுக்கு மேற்பட்ட தமிழ் சிறுவர்கள் கிழக்கு மாகாணத்தில் கடத்தல்!K-Faction எனப்படும் ஒட்டுக்குழுவினரால் நூற்றுக்கு மேற்பட்ட, கிழக்கு மாகாணத்தின் ஆண்கள் மற்றும் சிறுவர்கள் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் அனுசரணையுடன் கடத்தப்பட்டுள்ளதாக அசோசியேற்றேர்ஸ் செய்தி நிறுவனம் (AP) தெரிவித்துள்ளது. கட்டாய நிர்ப்பந்தத்தின்பேரில் கடத்தப்பட்டவர்கள் அனைவருக்கும் யுத்தத்திற்கான பயிற்சிகள் கொடுக்கப்பட்டு வருவதாகவும், கடத்தப்பட்ட சிறுவர்களின் வயது பன்னிரண்டு வரை உள்ளதாகவும், சாட்சிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள், உறவினர்களைப் பேட்டி கண்டபோது இதனை அறியக்கூடியதாக இருந்தது என அசோசியேற்றேர்ஸ் செய்தி நிறுவனம் கூறியுள்ளது. கருணா குழுவினருக்கு ஆதரவு வழங்குவதன் மூலம் ஸ்ரீலங்க…
-
- 1 reply
- 912 views
-
-
ஈழ இனப்படுகொலை நிழற்பட ஆவணம்”என்ன செய்யலாம் இதற்காக?” வெளியீட்டு விழாவில் அண்ணன் சீமான் ஆற்றிய உணர்ச்சி உரை.ஆவண படங்களின் தாக்கத்தால் அவரது பேச்சில் அனல் தெரித்தது .காணொளி -- தமிழ் நாட்டிலிருந்து தமிழ் தேவன் (நாம் தமிழர்) 9940024227
-
- 10 replies
- 2.2k views
-
-
விஜயகலா மகேஸ்வரன் தொடர்பாக அவதூறான செய்தி – சுயாதீன ஊடகவியலாளரிடம் விசாரணை குளோபல் தமிழ்ச் செய்தியாளர் சிறுவர் மகளீர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தொடர்பாக அவதூறான செய்தி வெளியிட்டமை தொடர்பில் ஊடகவியலாளரை இணையத்தள குற்றவியல் (சைபர் க்றைம்) விசாரணைக்குழு விசாரணை மேற்கொண்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் இருந்து சுயாதீன ஊடகவியலாளராக கடமையாற்றும் த.வசந்தரூபனையே இணையத்தள குற்றவியல் (சைபர் க்றைம்) விசாரணைக்குழுவினர் இன்று (11) யாழ்.மாநகர சபையில் வைத்து விசாரணை முன்னெடுத்துள்ளனர். இணையத்தளம் ஒன்றில் மகளீர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தொடர்பாக அவதூறான செய்தி பிரசுரித்த குற்…
-
- 0 replies
- 384 views
-
-
-
Saturday, January 15th, 2011 | Posted by admin இந்தியாவிடம் சவால் விடும் இலங்கை கடற்படை தளபதி இலங்கை கடற்படை அதிகாரிகள் இந்திய மீனவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதை முடிந்தால் ஆதாரத்துடன் நிரூபிக்குமாறு புதிய கடற்படைத் தளபதி சோமதிலக திஸாநாயக்க இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். புதிய கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்ட பின்னர் இன்றைய தினம் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட போதே அவர் இந்த கோரிக்கையை முன்வைத்தார். இலங்கையின் 17ஆவது கடற்படைத் தளபதியாக சோமதிலக திஸாநாயக்க பாதுகாப்பு செயலாளரால் அண்மையில் நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. Short URL: http://thaynilam.com/tamil/?p=1939
-
- 4 replies
- 958 views
-
-
இராணுவ சோதனைக் கெடுபிடிகள் அதிகாலை வேளையில் அதிகரிப்பு யாழ்.குடாநாட்டு பிரதான வீதிகளில் - அதிகாலை வேளைகளில் இராணு வத்தினர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர்.அதிகாலை 4 மணி, 5 மணி வேளைகளில் இராணுவத்தினர் வீதிகளில் செல்வோரை வழிமறித்து கடும் சோதனைக்குட்படுத்துவதுடன், எங்கு வேலை செய்கிறாய், எங்கு போகிறாய் என விசாரிப்பதோடு, உடற்சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் மோட்டார் சைக்கிள் மற்றும் வாக னங்களின் இலக்கங்களை பதிவு செய்தும் வருகிறார்கள். இந்தச் சோதனைக் கெடுபிடிகளால் அதிகாலை வேளைகளில் வியாபாரம், வைத்தியசாலை மற்றும் அரச திணைக்களங்களுக்கு கடமைக்கு செல்வோர் குறித்த நேரத்துக்கு செல்லமுடியாது பல இன்னல்களை அனுபவித்து வருவ தோடு, அதிகாலையில் பயணம் செய்யும்போது பீதி…
-
- 0 replies
- 1.1k views
-
-
இது கதையல்ல நிஜம்: நான் சாகலாம் நாங்கள் சாகக் கூடாது! – ஒரு போராளியின் சாட்சியம் – தொடர் 9 நித்திரை கொள்ளவே விடாது தூவாணம் அடித்தது. வீடு முழுக்க ஒரே ஒழுக்கு. என்ன செய்வது சமாளிக்கத்தான் வேண்டும் என்று நினைத்தவாறே அப்படியே தரையில் படுத்து நித்திரை கொண்டேன். திடீரென்று ஏதோ எனது காலை நக்கிறமாதிரியிருந்தது. கண்ணைத்திறந்து பார்த்தேன். ஒரு நாய்க்குட்டி. எனக்கு மனதுக்கு சந்தோசமாக இருந்தது. அந்த நாய்க்குட்டியையும் தூக்கிப் பக்கத்தில் வைத்துக்கொண்டு நித்திரை கொண்டேன். அதுவும் எனக்குப் பக்கத்தில் படுத்துவிட்டது. வாய் பேசாத ஜீவன் என்றாலும் அந்த நேரத்தில் ஒரு துணையைப் போல உணர்ந்தேன். விடியப் போகுது பகலில் நடமாடவே முடியாது ஒரு மறைப்பும் இல்லை. வேறொரு வீட்டுக்குள் போய…
-
- 0 replies
- 1.3k views
-
-
தியாக தீபம் திலீபன் அவர்களின் 27ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்ச்சியும், தென் தமிழீழத்தில் 1990ம் ஆண்டு செப்டம்பர் திங்களில் நடாத்தப்பட்ட படுகொலைகளின் 24ஆம் ஆண்டு நினைவுகூரல் கவனயீர்ப்பு ஒன்று கூடலும் இம்மாதம் (செப்டம்பர்) 26ஆம் நாள் வெள்ளி காலை 10 மணியிலிருந்து மாலை 8 மணி வரை 10 Downing Street முன்பாக நடைபெற உள்ளது. காலை 10 மணிக்கு அடையாள உணவுத் தவிர்ப்புப் போராட்டத்துடன் தியாக தீபம் அவர்களின் நினைவு வணக்க ஒன்றுகூடல் ஆரம்பமாகும்.பின்னர் மாலை 5 மணியளவில் உண்ணா நிலைப் போராட்டம் நிறைவுக்கு வர அதனைத் தொடர்ந்து தியாக தீபம் திலீபன் அவர்களுக்கான வணக்க நிகழ்ச்சிகளும் கறுப்பு செப்டம்பர் படுகொலைகள் நாள்கள் நினைவு கூரலும் இடம்பெற உள்ளன. எமது தாயகத்தை இந்திய வல்லாதிக்கம் ஆக்…
-
- 0 replies
- 307 views
-
-
அரசியல் நகர்வுகளால் கொழும்பு பரபரப்பில்!! அரசியல் நகர்வுகளால் கொழும்பு பரபரப்பில்!! தெற்கு அரசியல் பரபரப்பாகக் காணப்படும் நிலையில் நேற்றுக் காலை முதல் இரவுவரை முக்கியத்துவம் மிக்க சந்திப்புக்கள் கொழும்பில் நடந்துள்ளன. கூட்டரசின் அமைச்சரவைக் கூட்டம் முடிந்த பின்னர் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்களுடன் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன கலந்துரை…
-
- 0 replies
- 282 views
-
-
ஈழத் தமிழர் ஆதரவாளரான அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் டேனி டேவிசுக்கு 87 விழுக்காடு வாக்கு அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபைக்கான இல்லினாய்ஸ் 7 ஆம் மாவட்ட தேர்தலில் காங்கிரஸ் உறுப்பினர் டேனி டேவிஸ் 87 விழுக்காடு வாக்குகளைப் பெற்றுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட குடியரசுக் கட்சி வேட்பாளர், டேனி டேவிசின் கிளிநொச்சி பயணம் தொடர்பில் விமர்சனம் செய்து பரப்புரை மேற்கொண்டார். கடந்த 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் காங்கிரஸ் உறுப்பினர்களான டேனி டேவிஸ், டேனி எப்.கன்ட்ரெல் ஆகியோர் கிளிநொச்சிக்கு சென்று தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளை சந்தித்துப் பேசினர். -புதினம்- அவரின் வெற்றிக்கு எம் மக்களின் சார்பில் வாழ்த்துகின்றோம்.
-
- 1 reply
- 1.7k views
-
-
செந்தமிழைக் கலப்பு மொழியாக்க முயன்றால் நாம் தமிழர் கட்சி களத்தில் இறங்கிப் போராடும்! கணினித் தமிழ் பயன்பாடு - என்கிற போர்வையில், செந்தமிழ் மொழியில் கணினியில் சமக்கிருத ஒலிகளுக்கான தனி எழுத்து வடிவைத் திணிக்க நடக்கும் சதியை நாம் தமிழர் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. இலங்கையில் கலப்பினம் தான் இருக்கமுடியும் என்கிற இனவெறியன் ராசபட்சேவின் பாசிசக் கருத்துக்கும், கணினியில் கலப்பு மொழி அவசியம் என்கிற குழப்பவாதிகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை என்று நாம் தமிழர் குற்றஞ்சாட்டுகிறது. உலகிலுள்ள எல்லா மொழிகளிலும் உள்ள எல்லா ஒலிகளையும் உள்ளடக்கிய எழுத்து வடிவம், எந்த மொழியிலும் இல்லை. தங்கள் மொழியில் இல்லாத ஒலிகளுக்கான எழுத்துவடிவைத் தங்கள் மொழியில் உள்ள எழுத்துக்களைக் கொ…
-
- 0 replies
- 903 views
-
-
எல்லாவற்றுக்கும் போராடித்தான் வாழ வேண்டுமென்றால் எதற்காக அரசாங்கமும், ஆட்சியும் எல்லாவற்றுக்கும் போராடித்தான் வாழ வேண்டுமென்றால் எதற்காக அரசாங்கம்? எதற்காக ஆட்சி? எதற்காக அரசியல் சாசனம்? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் சமத்துவம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவாளர் வளாகத்தில் இன்று நடந்த மே தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில், இந்த அரசாங்கம் பதவிக்கு வரும்போது நல்லாட்சி அரசாங்கம் என்று தன்னைப் பிரகடனப்படுத்தக் கொண்டே வந்தது. நல்லாட்சிக்கான கூட்டாட்சி என்று தன்னை விளம்பரப்படுத்தியது.…
-
- 0 replies
- 341 views
-
-
தென் கொரிய தூதுக்குழு தலைவர் பிரதி அமைச்சருக்கு டோஸ் தென் கொரியாவில் இருந்து வந்து, பிரதி அமைச்சருடனான சந்திப்புக்காக காத்திருந்த நிலையில், அமைச்சரின் குழு அரை மணிநேர தாமதமாக வர, கடுப்பாகிய குழுவின் தலைவர், போட்டுத் தாக்கி உள்ளார். ஒரு அமைச்சர் தாமதமாக வந்து, நொண்டி சாட்டுகளை சொல்லிக் கொண்டு இருப்பது தவறு. முன் கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட ஒரு சந்திப்புக்கு, நேரத்துடன் செல்லவேண்டும் என்பதை பாடசாலைகளிலேயே சொல்லிக் கொடுக்க வேண்டும். இது போன்ற பழக்கங்கள் தான், இலங்கையின் முன்னோக்கி செல்வதை தடுக்கின்றது என்று பொரிந்து தள்ளி விட்டார். வாங்கிக் கட்டிய அமைச்சரின் அப்பாவி முகம் இந்தாளுக்கு தலைவர் சொல்லியதை, மொழிபெயர்த்து சிங்களத்தில் யாராவத…
-
- 3 replies
- 645 views
-
-
இந்தியா:பேச்சு மூலமே தீர்வு!!!! ---------------------------- “இலங்கையில் மற்ற குடிமக்களுக்கு அளிக்கப்பட்டுள்ள உரிமைகளும் சலுகை களும் இலங்கையில் வாழும் தமிழர்களுக் கும் வழங்கப்பட வேண்டும். இலங்கைப் பிரச்சினைக்கு ராணுவ ரீதியாகத் தீர்வு காண முடியாது. பேச்சு வார்த்தை மூலம் தான் அரசியல் தீர்வு காண முடியும். அதன் மூலமாகத்தான் தமிழர்களின் உண்மையான உரிமைகளைக் காப்பாற்று வதற்குத் தேவையான அதிகாரப் பங்கீடு செய்து கொள்ளமுடியும் இதுவே இந்தியாவின் நிலை. ஒருங்கிணைந்த கூட்டாட்சி அடிப்படை யிலான இலங்கையில் தமிழர்களுடைய உரிமைகளைப் பாதுகாப்பதற்குரிய வகையில் இலங்கை இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணப் பட வேண்டுமென்ற இந்தியாவின் எண்ணம் ஆழமானது. தொடர்ந்து இருந்து வருவதும் அதுவே. இந்திய…
-
- 1 reply
- 827 views
-
-
இன்று தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தை சேர்ந்த ஏழு பணியாளர்களான கணேசலிங்கம் ஐயா, தங்கராசா ஐயா, பிரேமினி அக்கா, வசந்தன், கஜேந்திரன், சதீஸ்கரன், ரவீந்திரன் ஆகியோரின் ஐந்தாம் வருட நினைவு நாள். வெலிக்கந்தவில் வைத்து கருணா, பிள்ளையான் அணியினரால் அரச ஆதரவுடன் கடத்தப்பட்டு, சித்திரவதை செய்யபப்ட்டு கொலை செய்யப்பட்டனர். இவர்களுக்கும் இவர்களின் பின்னால் 2009 முள்ளிவாய்க்கால் இறுதிப்போர்வரை தம் உயிர்களை பணியின் போது அர்ப்பணித்த பொறுப்பாளர்கள், பணியாளர்களுக்கும் எனது இதய அஞ்சலிகள்.
-
- 1 reply
- 391 views
-
-
சிறிய குற்றங்களுக்கு சிறை தண்டனைக்குப் பதிலாக வீட்டுக் காவல் திட்டம்! சிறு குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்படும் சந்தேக நபர்களை அதற்கு பதிலாக வீட்டுக் காவலில் வைத்திருப்பது தொடர்பான சட்டங்களை கொண்டுவர நீதி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இவ்வாறான சந்தேகநபர்கள் சிறையில் பல்வேறு நபர்களுடன் பழகுவதுடன் கடுமையான குற்றவாளிகளாக சமூகமயமாகி விடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் இதனை அமுல்படுத்த திட்டமிட்டுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார். தொடர்புடைய சட்டங்களைக் கொண்டு வந்த பிறகு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் அத்தகைய சந்தேக நபர்களை, மூன்று அல்லது நான்கு மாதங்கள் அல்லது அதற்கும் மேலாக வீட்டுக் காவலில் வைக்க நீதிபதிகளுக்…
-
- 0 replies
- 299 views
-