Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ‘தமிழ்’ என்று சொல்லும் போதே தடங்கல் இருக்கும் என்பதை ஆளுநராக கடமையாற்றிய கடந்த 8 மாதங்களில் அறிந்து கொண்டதாக வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். ஆனால் அந்த தடைகளை உடைத்து மீண்டும் தலைதூக்கிய ஒரு தமிழ் தேசமாக, உலகம் எம்மை திருப்பி பார்க்ககூடிய ஒரு தேசமாக உலகிற்கு நன்மை செய்யகூடிய தேசமாக மாறவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். வவுனியாவில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற வடக்கு மாகாண பண்பாட்டு விழாவில் கலந்துகொண்டு கருத்த தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் உரையாற்றுகையில், “நான் கொழும்பிலே வாழ்ந்து, பணிபுரிந்து, வெளிநாட்டிலே கல்விகற்று, என்னுடைய வாழ்கையை எளிமையான பௌத்த சித்தாந்தத்தின் கீழாக வைத்திருந்தாலும் என்னுடைய ஆன்ம…

  2. ‘தமிழ்த் தலைமைகள் இரட்டை வேடம்’ எஸ்.நிதர்ஷன் தமக்கு தேவையானதைப் பெற்றுக்கொ ள்வதற்காக, தமிழ்த் தலைமைகள், இரட்டை வேடமிடுவதாகக் குற்றஞ்சாட்டிய வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா, அதனாலேயே பிரதமரின் மறப்போம் மன்னிப்போம் கருத்துத் தொடர்பாக அவர்கள் மௌனம் காப்பதாகவும் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெற்றுக்கொண்ட தமிழ் அரசியல் தலைமைகள்,இன்றைக்கு அந்த மக்களுக்காக அல்லாமல் அரசாங்கத்தைப் பாதுகாக்கின்ற வகையிலேயே செயற்பட்டு வருவதாகவும், அவர் குற்றஞ்சாட்டினார். கொக்குவில் பிரதேசத்திலுள்ள அவரது இல்லத்தில், நேற்று (24) நடத்திய ஊடகச் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித…

  3. ‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அம்பலப்படுத்துவதற்கான காலம் வந்துவிட்டது’ -க. அகரன், எஸ்.நிதர்ஷன் “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாதகமான செயல்களை அம்பலப்படுத்துவதற்கு, எமக்குக் கிடைத்துள்ள இறுதிச் சந்தர்ப்பம் இதுவாகும்” என, தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். மேலும், “சம்பந்தனிடம் இருந்து, தமிழ் மக்களையும், பொதுவாக இலங்கையர்களையும் காப்பாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது” எனவும் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில், அவர் நேற்று (04) வௌியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “இலங்கையர்கள், தமது இன வேறுபாடுகளைக் கைவிட்டு, தாங்கள் ஆழ்ந்த ந…

  4. Published by T Yuwaraj on 2022-02-02 19:22:59 இலங்கை மின்சார சபைக்கு உரித்தான மன்னார் “தம்பபவனி” காற்றாலை மின்னுற்பத்தி நிலையத்துக்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இன்று (02) முற்பகல் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார். மின்சாரத்தால் நாட்டை பலப்படுத்துதல், நிலையான மின் விநியோகம் மற்றும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களைத் துரிதப்படுத்துதல் போன்ற நோக்கங்களின் அடிப்படையில், 2014ஆம் ஆண்டில் இந்த “தம்பபவனி” காற்றாலை மின்னுற்பத்தி நிலையத்தின் நிர்மாணப் பணிகளுக்கான திட்டங்கள் வகுக்கப்பட்டன. இரண்டு பெரிய பருவக் காற்றுகளையும் எதிர்கொள்ளும் மன்னார் தீவின் தெற்குக் கடற்கரைப் பிரதேசத்தில், 13 கிலோமீற்றர் நீளம் மற்றும் 1…

  5. -என்.ராஜ் “யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 2019ஆம் ஆண்டில் 612 பேர் தற்கொலைக்கு முயன்று 105 பேர் உயிரிழந்துள்ளனர்” என, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்துத் தொடர்ந்துரைத்த அவர், 2019ஆம் ஆண்டில் தற்கொலைக்கு முயன்றவர்களின் எண்ணிக்கையானது, கடந்த நான்கு ஆண்டுகளினை விடவும் அதிகரித்தே கானப்படுகின்றது. இருப்பினும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு குறைவடைந்துள்ளதென்றார். “இவற்றின் அடிப்படையில் 2016ஆம் ஆண்டில் 578 பேர் தற்கொலைக்கு முயன்று அனுமதிக்கப்பட்டபோதும் அதில் 110பேர் உயிரிழந்தனர். 2017ஆம் ஆண்டில் 579 பேர் தற்கொலைக்கு முயன்று 59 பேர் உயிரிக்க ஏனையோர் காப்பற்றப்பட்டனர். இதேபோன்று 2018ஆம் ஆண்டில் 582 பேர் தற்கொலைக்கு…

  6. ‘தற்போதுள்ள அரசாங்கம் புதிய அரசாங்கம் இல்லை’ - எம்.ஏ.சுமந்திரன் வி.நிதர்ஷன் “தற்போதுள்ள அரசாங்கம் புதிய அரசாங்கம் இல்லை” எனத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், “பாராளுமன்றம் கலைக்கப்பட்டு, தேர்தல் நடத்தப்பட்டு, புதிய அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும்” என்றார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “நாட்டை மோசமான பொருளாதார நெருக்கடி தாக்கியிருக்கின்றது என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. அதை நிகழ்த்தியவர்கள், அதற்குப் பொறுப்பானவர்கள் அரசாங்கத்தில் தற்போதும் இருந்து கொண்டுதான் இருக்கின்றார்கள். “இதற்கு முக்கிய காரணமாக கூறப்படும் ஜனாதிபதி…

    • 2 replies
    • 327 views
  7. March 21, 2019 காங்கேசன்துறை ‘தலசெவன’ இராணுவ விடுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள 30 ஏக்கர் நிலம் இராணுவத்தால் சுவீகரிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பேச்சு நடத்தப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பில் பேச்சு நடத்த ஜனாதிபதியை அடுத்த வாரம் சந்திக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். வலி.வடக்கு காங்கேசன்துறை “தலசெவன இராணுவ விடுதியை” மையமாகக் கொண்டு அவ் விடுதியைச் சுற்றியுள்ள 30 ஏக்கர் நிலம் இராணுவ நிர்வாகத்தினது சுற்றுலாப் பயன்பாட்டிற்காக எடுத்துள்ள சுவீகரிப்பு ந…

  8. ‘தலை நிமிர்ந்து வாழ வேண்டும்’ - எஸ்.நிதர்ஷன் "நாட்டில் ஆட்சி மாற்றமொன்று ஏற்படுத்தப்பட்டு புதிய பாதையில் நாங்கள் பயணித்துக் கொண்டிருக்கிறோம். அதில் புதிய அரசியல் சாசனத்தை உருவாக்கி நாட்டில் சமத்துவதத்தையும் சமாதானத்தையும் ஏற்படுத்தி, தமிழ் மக்கள் சுயகௌரவத்துடன் தலை நிமிர்ந்து நிம்மதியாக வாழக் கூடிய சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும்" என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் தெரிவித்தார். இவற்றை நாம் அடைவதற்கு நாம் பலமாக இருக்க வேண்டும். அதற்கு நாம் தொடர்ந்தும் ஒற்றுமையாக ஒன்றாக இணைந்து பயணிக்க வேண்டுமென்றும் சம்மந்தன் குறிப்பிட்டார். உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்து…

    • 6 replies
    • 851 views
  9. -க. அகரன் “தலை முழுகுற அளவுக்கு நிலைமைகள் மாறும்” என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். வவுனியா மாவட்ட முன்பள்ளி ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் ஆசிரியர் கௌரவிப்பு நிகழ்வொன்று, இன்று வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. இந்‌நிகழ்வில்‌ கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், “இப்பொழுது தேர்தல் முடிந்திருக்கிறது. இந்த நாட்டிலே இரண்டு சமூகங்கள் வேறு வேறு நிலைப்பாட்டை கொண்டவர்களாக இருக்கிறார்கள். ஒன்று பெரும்பான்மை இனத்தை சார்ந்த ஒருவருக்கு தமிழ் சமூகம் தேசிய இனம் வாக்களித்தது. “அதே நேரத்திலே பெரும்பான்மை இனத்தை சார்ந்த ஒருவருக்கு சிங்கள தேசம் வாக்களித்தது. நாங்கள…

    • 0 replies
    • 563 views
  10. தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் இருப்பை மறுதலித்து 21.07.2009 அன்று கே.பியை தலைவராகக் கொண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் ‘தலைமைச் செயலகம்’ என்ற பெயரிலான கும்பல் உருவாக்கப்பட்ட பொழுது அம்பாறையின் வனப்பகுதிகளில் இருந்ததாக அறியப்பட்ட ராம் மலேசியாவில் தங்கியிருந்தமை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 18.05.2009 அன்று முள்ளிவாய்க்கால் பகுதியை சிங்களப் படைகள் கைப்பற்றிய சில நாட்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அப்போதைய அம்பாறை மாவட்டத் தளபதி நகுலனுடன் சிங்களப் படைகளிடம் சரணடைந்த தென்தமிழீழத்திற்கான கட்டளைத் தளபதி ராம், தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு வலையமைப்பை உடைப்பதற்குத் தேவையான முழு ஒத்துழைப்புக்களையும் வழங்குவதற்கு இணங்கிய நிலையில் சிங்களப் புலனாய்வுப் ப…

    • 93 replies
    • 7.2k views
  11. ‘தலைவர்களின் செயற்பாடுகளே இன விரிசலுக்கு வழிவகுத்தது’ சுதந்திரத்துக்குப் பின்னரான பெரும்பான்மையினச் சமூகத்தின் அரசியல் தலைமைகள் தமது இருப்புக்காக மேற்கொண்ட இன ரீதியான செயற்பாடுகளின் தொடர்ச்சியே இனங்களுக்கிடையிலான விரிசல்கள் தற்போது அதிகரித்து வருவதற்கு பிரதான காரணமென்று, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் கைத்தொழில் வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். வத்தளை, ஹுணுப்பிட்டிய சாஹிரா மகா வித்தியாலயத்தின் புதிய நுழைவாயிலை இன்று (13) திறந்து வைத்து உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். பாடசாலை அதிபர் எம்.எம். கலீல் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், மக்கள் காங்கிரஸின் மே…

  12. ‘தவறி விழுந்தேன்’- இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கானதாக கூறப்பட்ட இளைஞன் வாக்கு மூலம் சுன்னாகத்தில் இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கானதாக தெரிவித்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞன், தவறி விழுந்ததாக சுன்னாக பொலிஸாருக்கு வாக்கு மூலம் அளித்துள்ளார். சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) இரவு, மோட்டார் சைக்கிளில் பயணித்த இராணுவத்தினரால் தாக்கப்பட்டதாக கூறி, உடுவில் ஆலடியைச் சேர்ந்த சிவலிங்கம் கமில்தாஸ் (வயது-22) என்ற இளைஞன், சிகிச்சைக்காக தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் நோக்குடன் சுன்னாக பொலிஸார் வைத்தியசாலைக்கு சென்று, இளைஞரிடம் விசாரணைகள…

  13.  ‘தஹம்’ பரீட்சைக்கு 39 கைதிகள் தோற்றினர் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டு மற்றும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகளில் 39 பேர், தஹம் பரீட்சைக்கு தோற்றியுள்ளனர் என்று சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. தஹம் பாடசாலை இறுதி சான்றிழதழ்ப் பரீட்சை 2016-2017, மார்ச் மாதம் 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் நடைபெற்றது. இந்தப் பரீட்சைக்கு தோற்றிய கைதிகள், சிறை செல்வதற்கு முன்னர் ஒருநாளேனும், பாடசாலைக்குச் சென்றதில்லை என்றும் அறியமுடிகிறது. தஹம் பாடசாலை இறுதி சான்றிதழ் பரீட்சையில் இவர்கள் சித்தியெய்தி…

    • 0 replies
    • 234 views
  14.  ‘தாஜுதீனின் எலும்புகள் அனுப்பப்பட்டமைக்கான பதிவுகள் இல்லை’ மனித எலும்புகளை வழங்கும் போது தமக்கு வழங்கப்பட்ட பட்டியலில், வசீம் தாஜுதீனின் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை எனவும் சட்ட வைத்திய அதிகாரி அலுவலகத்திலிருந்து எலும்புகள் வழங்கப்படும் போது பின்பற்றப்படும் விதிமுறைகளைக் கட்டுப்படுத்துவதற்கு, தெற்காசிய தொழில்நுட்ப மற்றும் மருத்துவ கல்வியகத்துக்கு (SAITM) எந்தவித அதிகாரமும் கிடையாது எனவும் தெரிவித்துள்ள SAITM, வசீம் தாஜுதீனின் எலும்புகள் எவையும் SAITM-க்கு அனுப்பப்பட்டதற்கான பதிவுகள் எவையும் தம்மிடம் இல்லை எனவும் தெரிவித்துள்ளது. தற்போது புலனாய்வுப் பிரிவினரால் முன்னெடுத்துச் செல்லப்படும் வசீம் தாஜுதீனின் கொலை வழக்குத் …

  15. ‘தானாக கனியும் பழத்தை தடியால் தட்டுவது தவறு’ மகேஸ்வரி விஜயனந்தன் “தேசியப் பிரச்சினைக்குத் தீர்வைக் காண்பதற்கே இந்த அரசாங்கத்தை உருவாக்கினோம். ஆகையால், அதனைச் செய்து முடிப்பதற்காக சரி, இந்த அரசாங்கம் இன்னும் சில நாட்களுக்கு உயிர்வாழவேண்டும்” என்று தெரிவித்த அமைச்சர் மனோ கணேசன், “தானாகக் கனியும் பழத்தை தடியால் அடித்து கனிய வைக்க வேண்டுமா” என்றும் கேள்வியெழுப்பினார். “அவ்வாறு கனிய வைக்கவேண்டியதில்லை. அவ்வாறு செய்தால் பிரச்சினைகள் தான் அதிகரிக்கின்றது. அதனூடாக அரசாங்கத்துக்குள் பிளவைஏற்படுத்துகின்றோம்” என்றும் அவர் தெரிவித்தார். “நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த அமைச…

  16. ‘தாமரை கோபுரம்’ நிர்மாணப் பணிகள் ஒக்டோபர் மாதத்தில் நிறைவு கொழும்பு ‘தாமரை கோபுரம்’ நிர்மாணப் பணிகள் எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில், உத்தியோகபூர்வ திறப்பு நிகழ்வு இந்த வருட இறுதியில் இடம்பெறும் என ஆங்கில ஊடகமொன்று கூறியுள்ளது. 350 மீட்டர் உயரமான இந்தக் கோபுரம், தெற்காசியாவிலேயே அதிக உயரமான கட்டடமாக திகழும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கோபுரத்தில் இருந்து தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் வானெலி ஒலிபரப்புகள் சேவைகள் என்பன தொழிற்படவுள்ளன. இதன் மூலம் சகலரும் தரம் வாய்ந்த ஒலி மற்றும் ஒளிபரப்புகளை பெறமுடியும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கோபுரத்தில் பல விற்பனை அங்காடிகள், விருந்தகங…

    • 2 replies
    • 742 views
  17. ‘தாய்நிலம்’ ஆவண பட நிகழ்வில் கலந்துகொள்ள அனைவருக்கும் அழைப்பு: சம்பந்தன்- விக்னேஸ்வரன் கூட்டாக ஆரம்பித்து வைப்பர். September 25, 202 தமிழ் மக்களின் தாயகமான வடக்கு-கிழக்கில் காலம் காலமாக அரசாங்கங்கள் மேற்கொண்டுவரும் நில அபகரிப்பை ஆதாரபூர்வமாக எடுத்துக்காட்டும் ‘தாய்நிலம்: நில அபகரிப்பு – இலங்கை வாழ் தமிழ் மக்களின் உண்மையான பெருந்தொற்று ( ThaaiNilam: Land Grabbing – The Real Pandemic for the Tamils in Sri Lanka) என்ற ஆவணப் படம் எதிர்வரும் சனிக்கிழமை மாலை இலங்கை நேரப்படி 5.30 மணிக்கு ( லண்டன் நேரம் பிற்பகல் 1.00 மணி, டொரண்டோ மற்றும் நியுஜேர்சி நேரம் காலை 8 மணி) திரையிடப்படவுள்ளது. இந்த ஆவணப்படத்தை சோமீதரன் இயக்கியுள்ளார். இந்த ஆவண பட திரையிடல் நிகழ்வை தொடர்…

  18. ‘திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில்... பேருந்து இயங்காது – இப்போதே ஊர்களுக்கு செல்லுங்கள்’: பேருந்து உரிமையாளர்கள் சங்கம்! நாட்டில் நிலவும் டீசல் தட்டுப்பாடு காரணமாக, புத்தாண்டு பண்டிகையை கொண்டாடும் வகையில், கிடைக்கப்பெற்றுள்ள பேருந்துகளில் ஏறி தமது சொந்த ஊர்களுக்கு செல்லுமாறு இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் மக்களிடம் தெரிவித்துள்ளது. இந்த விடயம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, போதிய எரிபொருள் வழங்கப்படாவிட்டால், எதிர்வரும் திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் பேருந்துகளை இயக்க முடியாது என தெரிவித்தார். நாட்டில் கடந்த சில நாட்களாக தனியார் பேருந்து தொழில்துறை வீழ்ச்சியடைந்துள்ளதால்…

  19. Published By பெரியார்தளம் On Wednesday, June 6th 2012. Under பெரியார் முழக்கம், முதன்மைச்செய்திகள் அனைத்து தமிழர் சிக்கல்களுக்குக் காரணம் ‘திராவிடம்’ என்ற சொல் தானா? எந்த ஒரு மனிதரையும் ஒற்றை அடையாளத்தில் பொருத்தி விட முடியுமா? என்று பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கேட்டுள்ளார். அடுக்கடுக்கான கேள்விகளோடு கொளத்தூர் மணி விடுத்துள்ள அறிக்கை. இன்றைய நிலையில் சமுதாயத்தில் நிலவும் ஏராளமான சிக்கல்கள் உரிய அளவுக்கு கவனிக்கப் படாமலும், கவனத்துக்கு வந்தாலும் அதைத் தீர்ப் பதற்கான உரிய நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப் படாமலும் உள்ளன. சமூக தளத்தில் சாதிய அடக்குமுறைகள்; தீண்டாமை வன்கொடுமைகள்; அரசுத் திட்டங்களே சாதிய ஆதிக்கத்திற்கு சாதகமாக தீட்டப்படுதல்; தேர்ந்தெடுக…

  20. ‘திருக்கோவில் பிரதேசத்தினை காப்போம் “மாபியாக்களை விரட்டுவோம்” பேரணியும் ஆர்ப்பாட்டமும்…. அம்பாறை, திருக்கோவில் பிரதேசத்தில் இல்மனைற் அகழ்வு வேலைகள் முன்னெடுக்கப்படவுள்ளமை திருக்கோவில் கரையோரப் பிரதேசத்தை அழிவுக்கு உட்படுத்தும் என கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் திருக்கோவில் கரையோரப் பிரதேசம் பாரிய அழிவுகளை சந்திக்கும் அபாயம் உள்ளதாகவும் இதனை உடனடியாக அரசாங்கம் தடுத்து நிறுத்த வேண்டுமெனக் கோரியும், திருக்கோவில் பிரதேச மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு பாரிய பேரணியையும் ஆர்ப்பாட்டத்தையும் நடத்தி உள்ளனர். இந்த ஆர்ப்பாட்டம், ‘திருக்கோவில் பிரதேசத்தினை காப்போம் – “மாபியாக்களை விரட்டுவோம்” எனும் தொனிப்பொருளில் இன்று (27.12.17) இடம்பெற்றத…

  21. தனது ‘சிங்கபாகு’ திரைப்படத்தை சட்டவிரோதமாக பதிவுசெய்து சமூக ஊடகங்களில் பதிவேற்றியமை தொடர்பாக, திரைப்பட இயக்குநரும் இலங்கை திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் (FDGSL) தலைவருமான சோமரத்ன திஸாநாயக்க திரையரங்குகளில் போன்கள் பயன்படுத்துவதை தடை செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளார். . “தேவையற்ற சூழ்நிலைகளைத் தவிர்க்க எங்களால் முடிந்ததைச் செய்ய வேண்டும். திரையரங்குகளில் மொபைல் போன்களை தடை செய்வதுதான் நாம் செய்ய முடியும். அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் உள்ள திரையரங்குகளில் இத்தகைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இலங்கை ஏன் பின்பற்ற முடியாது ” என்று திஸாநாயக்க ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார். “ஒரு திரைப்படத்தை ரசிக்க மக்கள் திரையரங்குகளுக்குச் செல்கிறார்கள். ஒரு திரைப்படத்தின் உணர…

  22. 2019 செப்டெம்பர் 17 செவ்வாய்க்கிழமை, பி.ப. 05:34 -என்.குகன் எதிர்வரும் காலங்களில், யாழ்ப்பாண மாநகர சபையால், மாநகர சபையின் வருடாந்த நிகழ்ச்சி நிரலின் கீழ், தியாக தீபம் திலீபனின் நினைவு நாள் நிகழ்வு முன்னெடுக்கப்படவுள்ளதாக, யாழ்ப்பாண மாநகர சபை மேயர் இமானுவேல் ஆர்னோல்ட் தெரிவித்தார். அத்துடன், மிக விரைவில் திலீபனின் நினைவு தூபியும் நவீன முறையில் அமைக்கப்படுமெனவும், மேயர் கூறினார். http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/திலீபனின்-நினைவேந்தல்-நிகழ்வை-இனி-மாநகர-சபை-முன்னெடுக்கும்/71-238700

    • 0 replies
    • 426 views
  23. ‘தீர்ப்பை மாற்ற மாட்டேன்’; ‘சண்டித்தனத்துக்கு சளைக்கேன்’ ஜே.ஏ.ஜோர்ஜ் சபாநாயகர் கடும் உத்தரவுகளையும் கட்டளைகளையும் பிறப்பித்தார். அவைக்குள் பொலிஸார் வரவழைக்கப்பட்டனர். இதேவேளை, நாடாளுமன்றத்தில் சிரேஷ்ட உறுப்பினர்களில் ஒருவரான தினேஷ் குணவர்தன, அவையிலிருந்து வெளியேற்றுவதற்கு பெயர் குறிப்பிடப்பட்டமை போன்றவை இலங்கை நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் பதிவாகியிருந்தன. நாடாளுமன்றம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில், நேற்று பிற்பகல் ஒரு மணிக்கு கூடியது. சபாநாயகரின் அறிவிப்பின் போது, விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியை நாடாளுமன்றத்துக்கு தனிக்கட்சியாக அங்கிகரிக்கமுடியாது என்று பல உதாரணங்களையும் விளக்கங்களையும் அளித்து தனது தீர…

  24. ‘தீர்விலிருந்து தமிழ் மக்களைத் திசை திருப்ப சதி’ “கடந்த சில மாதங்களாக வட மாகாண சபையில் ஏற்பட்டுள்ள குழப்பம், தமிழ் மக்களைத் திசை திருப்பும் சதியே தவிர, வேறு எதுவும் அல்ல என்று வடக்கு முன்னாள் விவசாய அமைச்சரும், மாகாணசபை உறுப்பினருமான பொ.ஐங்கரநேசன் குற்றம் சாட்டியுள்ளார். பொ. ஐங்கரநேசனுக்கு ஒதுக்கப்பட்ட பிரமாண அடிப்படையிலான நன்கொடை நிதியில் இருந்து வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு திருநெல்வேலி இந்து வாலிபர் சங்க மண்டபத்தில் நேற்று முன்தினம் (07) இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே ஐங்கரநேசன் இவ்வாறு குற்றம் சாட்டியுள்ளார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், “நீண்ட …

  25. நாட்டில் கோட்டாபய அல்ல யார் ஜனாதிபதியாக அல்லது பிரதமராக ஆட்சிக்கு வந்தாலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நியாயமான நீதி கிடைக்கும் வரை தமது போராட்டம் தொடருமென, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கங்களின் தலைவிகள் தெரிவித்தனர். சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையொட்டி, எதிர்வரும் 30ஆம் திகதி கல்முனையில் இடம்பெறவுள்ள மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பு, திருக்கோவில், தம்பிலுவில் பொது சந்ததைக் கட்டத் தொகுதியில் அமைந்துள்ள அவர்களின் மாவட்ட அலுவலகத்தில் இன்று (12) இடம்பெற்றது. இந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அம்பாறை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத் தலைவி தம்பிராசா ச…

    • 0 replies
    • 320 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.