ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143608 topics in this forum
-
முன்னாள் போராளிகளுக்கு வினாக்கொத்து:இன உணர்வை சோதிக்கும் அரசு: ‘சமூகச் சிற்பிகளின் ஆய்வு - பகுதி1,2 [ ஞாயிற்றுக்கிழமை, 17 யூன் 2012, 08:27 GMT ] [ சிறப்புச் செய்தியாளர் ] ['புனர்வாழ்வு' அளிக்கப்பட்டு, சமூகமயப்படுத்தப்படுவதற்கு முன்னர், முன்னாள் விடுதலைப்புலிகள் போராளிகளிடம் கையளித்து நிரப்பப்படும் சர்ச்சைக்குரிய வினாக்கொத்து ஒன்று 'சமூகச் சிற்பிகள்' அமைப்பினரிடம் சிக்கியுள்ளது. அந்த வினாக்கொத்து ஏற்படுத்தவல்ல சமூக - அரசியல் - உளவியற் தாக்கங்களை ஆய்வு செய்கின்றனர் சமூகச் சிற்பிகள்]. இலங்கையில் கடந்த 30 ஆண்டுகளிற்கும் மேலாக இனமுரண்பாடு காரணமாக நீடித்திருந்த யுத்தம் 2009ம் ஆண்டு மே மாதத்தில் முடிவிற்கு கொண்டுவரப்பட்டிருந்தது. இதன் பின்னதாக, விடுதலைப் புலிக…
-
- 5 replies
- 1.3k views
-
-
அண்மைக் காலமாக முஸ்லிம் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து அரசாங்கம் எமக்கு உரிய தீர்வுகளை பெற்றுக்கொடுக்கும் வரையில் எந்தவொரு முஸ்லிம் உறுப்பினரும் அமைச்சுப் பதவிகளை பெற்றுக் கொள்ளப் போவதில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். அத்துடன் கிழக்கில் முஸ்லிம் - தமிழ் தரப்பினருக்கும் எழுந்துள்ள பிரச்சினைகளில் எமக்கு ஒரு நியாயமான தீர்வு கிடைக்கவேண்டும் என்றும் முஸ்லிம் உறுப்பினர்களின் நிலைப்பாடு குறித்து அறிவிக்க நாளை பிரதமருடன் முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உயர் பீடம் இன்று பிற்பகல் கட்சி தலைமையகமான தாருஸமாலில் கூடியது. கட்சியில் தலைவர் ரவூப் ஹக்க…
-
- 6 replies
- 1.3k views
-
-
-
இந்திய இராணுவமும் ஒட்டுக்குழுக்களும்சேர்ந்து தேசபக்தர்களை வேட்டையாடிக்கொண்டிருந்த காலம். மன்னார் மாவட்டத்தின் பாலக்குழிப் பிரதேசத்தில் யூலியனின் தந்தை இந்திய இராணுவத்தால் கைது செய்யப்பட்டார். பாடசாலைக்குள் புகுந்த இராணுவத்தினர் யூலியனைக் காட்டித்தரும்படி துப்பாக்கி முனையில் அச்சுறுத்துகின்றனர். அன்று பாடசாலை செல்லாத யூலியன் தப்பித்துக்கொள்கிறான். உடனடியாக முஸ்லிம் குடும்ப நண்பர் ஒருவரின் உதவியுடன் மறைமுகமாக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்படுகிறான். அங்கிருக்கும் நகைக்கடையொன்றில் தற்காலிகமாகப் பணிக்கமர்த்தப்படுகின்றான். முதல்நாள் கடைக்குச் செல்கிறான். அங்கிருக்கும் கதிரையொன்றில் அமர்ந்திருக்கின்றான். அங்குவந்த முதலாளி“கடைக்கு வேலைக்கு வந்தனி எப்படிக் கதிரையில் அமர்ந்திருக்கலா…
-
- 13 replies
- 1.3k views
-
-
ஏ-9 பாதை திறக்கப்படாவிட்டால் பேச்சுக்களுக்கான வாய்ப்புக்கள் இல்லை: தயா மாஸ்டர் [வெள்ளிக்கிழமை, 27 ஒக்ரொபர் 2006, 15:01 ஈழம்] [ச.விமலராஜா] யாழ். ஏ-9 பாதை திறக்கப்படுவதை நிராகரித்தாலோ அல்லது பாதையை திறக்க மறுத்தாலோ தொடர்ந்து பேச்சுக்கள் நடைபெறுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் தயா மாஸ்டர் தெரிவித்துள்ளார். ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு கிளிநொச்சியிலிருந்து தொலைபேசியூடாக அவர் தெரிவித்த கருத்து: மனிதாபிமான பிரச்சனைகளின் கீழ் பிரதானமாக இருப்பது ஏ-9 பாதை திறப்பு. யாழ். ஏ-9 பாதை திறக்கப்படுவதை நிராகரித்தாலோ அல்லது பாதையை திறக்க மறுத்தாலோ தொடர்ந்து பேச்சுக்கள் நடைபெறுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை.…
-
- 3 replies
- 1.3k views
-
-
நாம் தமிழர் அமைப்பில் உள்ள இளைஞர்கள் சீருடை அணியாத ராணுவத்தினர் என தூத்துக்குடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இயக்குநர் சீமான் தெரிவித்தார். தூத்துக்குடியில் நாம் தமிழர் அமைப்பின் சார்பில் மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பாலவிநாயகர் சாலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு இயக்குநர் சீமான் தலைமை வகித்தார். தூத்துக்குடி மாவட்ட நாம் தமிழர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் பிரபு வரவேற்றார். இக்கூட்டத்தில் சிறப்புரை ஆற்றிய இயக்குநர் சீமான், என்னை யாரும் தலைவர் என்று அழைக்க வேண்டாம். அப்படி அழைத்தால் திரும்பவும் படம் எடுக்கச் சென்றுவிடுவேன். நம்முடைய நோக்கத்திற்காக நாம் தமிழர் ஆக ஒன்றிணைந்து போராடுவோம். அரசியல் சாக்கடைகளைப் பற்றி நாம் ப…
-
- 4 replies
- 1.3k views
-
-
திங்கள் 29-10-2007 18:15 மணி தமிழீழம் [தாயகன்] யாழ் - மன்னார் முன்னரங்க நிலைகளில் மோதல் யாழ் முகமாலை, மற்றும் மன்னார் முன்னரங்க நிலைகளில் தமது படையினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இன்று காலை மோதல்கள் இடம்பெற்றிருப்பாதாக பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் கூறியிருக்கின்றார். இந்த மோதல்களின்போது தமது படைத் தரப்பில் இருவர் காயமடைந்திருப்பதாகவும், விடுதலைப் புலிகள் தரப்பில் நால்வர் கொல்லப்பட்டிருப்பதாகவும் மேலும் கூறப்பட்டுள்ளது. எனினும், சிறீலங்காப் படையினரின் இந்தக்கூற்று தொடர்பாக விடுதலைப் புலிகள் தரப்பில் இருந்தும், சுயாதீனா வட்டாரங்களில் இருந்தும் எந்தவித தகவலும் வெளியிடப்படவில்லை. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 0 replies
- 1.3k views
-
-
தேர்தல்களில் தமது கட்சி வெற்றியீட்டியதாக கருதப்பட முடியாது என சமூக சேவைகள் அமைச்சரும், ஈ.பி.பி.டியின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்;ப்பாண மாநகரசபைக்கான தேர்தலில் தமது கட்சியைச் சேர்ந்த 9 வேட்பாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதனை ஓர் வெற்றியாக கருத முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாண மாநகரசபைக்காக ஈ.பி.டி.பி. 20 வேட்பாளர்களை களமிறக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. தேர்தல்களில் 17 ஆசனங்களை வென்றிருக்க முடியும் எனவும், சில காரணிகளினால் தம்மால் எதிர்பார்த்த இலக்கை அடைய முடியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே, இந்தத் தேர்தலில் வெற்றி கிட்டியதாக கருதப்பட முடியாது என அவர் தெரிவித்துள்ளார். எனினும், தேர்தல் தோல்வி…
-
- 5 replies
- 1.3k views
-
-
வெள்ளைக் கொடி வழக்கு விசாரணைக்காக இன்று நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்ட சரத் பொன்சேகாவை நெருங்கிச் செல்வதற்கு ஊடகவியலாளர்களை பொலிசார் அனுமதிக்கவில்லை. அவரைப் புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பதாக இருந்தாலும் தூரத்தில் இருந்தே எடுத்துக் கொள்ளுமாறு பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் கண்டிப்பான தொனியில் ஊடகவியலாளர்களிடம் எச்சரித்திருந்தார். அத்துடன் சரத் பொன்சேகா நீதிமன்ற வளாகத்தினுள் நுழைந்தவுடன் அவரை ஊடகவியலாளர்கள் உட்பட யாரும் நெருங்க முடியாத வண்ணம் சீருடை மற்றும் சிவில் உடை தரித்த பெருமளவான பொலிசார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். ஆயினும் பொலிசாரின் கடுமையான கண்டிப்பையும் மீறி ஊடகவியலாளர்கள் சரத் பொன்சேகாவை நெருங்கிச் சென்று புகைப்படம் எடுத்திருந்தனர். பொன்சே…
-
- 1 reply
- 1.3k views
-
-
அன்பளிப்பாகக் கிடைத்த பேரீச்சை விற்பனையில்! அரசியல் வாதிகளின் கைவரிசை இது ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு என சவூதி அரேபிய அரசினால் வழங்கப்பட்ட பல மெற்றித் தொன் பேரீச்சம்பழம் இப்பொழுது கொழும்பிலும் கிழக்கு மாகாணத் திலும் சந்தையில் விற்பனைக்கு வந் துள்ளதாம். ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சத்துணவு வழங்கும் திட் டத்தின் கீழ் பெருந்தொகையான பேரீச் சம்பழத்தை சவூதி அரசு வழங்கியுள் ளது. இவை அனைத்தும் பெற்றோலிய வளத்துறை அமைச்சர் ஏ.எச்.எம். பௌஸியிடமே ஒப்படைக்கப்பட்டன. இவ்வாறு கிடைக்கப் பெற்ற பேரீச் சம்பழம் உரிய முறையில் பங்கீடு செய் யப்படாததனால் அவை பொதுச் சந்தை யில் விற்பனை செய்யப்படுகின்றன என முறைப்பாடுகள் கிடைத்திருக்கின் றன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு…
-
- 1 reply
- 1.3k views
-
-
நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் பதவிப்பிரமாணத்தின் பின்னர் விடுத்த அறிக்கை: [Monday, 2013-10-07 13:10:22] என்னுடைய பதவியின் செயல்பண்புகளையும் கடப்பாடுகளையும் நான் நேர்மையுடனும் நம்பிக்கையுடனும் இயற்றுவேன் என்றுதான் இன்று காலை பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டேன். என்னுடைய பதவி வடமாகாண மக்கள் எனக்களித்த பதவி. தூரநோக்கின் அடிப்படையிலும் கிட்டியநோக்கின் அடிப்படையிலும் கடமையாற்றும்படி அவர்கள் எனக்கு ஆணை வழங்கியுள்ளார்கள். தூரநோக்கு எமது தனித்துவத்தை வலியுறுத்துவதாக அமைந்துள்ளது. அதனை அடைய நாம் எமது கடந்த காலப் போராட்டங்கள், அரசியல் அணுகுமுறைகள், அனுபவங்கள் யாவற்றிலிருந்தும் பாடங்களைக் கற்றே முன்னேற வேண்டி உள்ளது. இது சம்பந்தமாக இனங்களுக்கிடையே எழுந்துள்ள சந்தேகங்களை அக…
-
- 9 replies
- 1.3k views
-
-
வியாழக்கிழமை, ஏப்ரல் 21, 2011 இறுதி நேரம்வரை விடுதலைப்புலிகள் வைத்தியசாலைகளை தமது தேவைக்காக பாவிக்கவில்லை என நிபுணர் குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2009 தை மாதம் தொடக்கமே இலங்கை அரசு படைகள் வைத்தியசாலைகளை இலக்கு வைத்து தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. ஆனால் இந்த வைத்தியசாலைகள் மீதான தாக்குதல்களை கோத்தபாய புலிகளின் இராணுவ இலக்கு என குறிப்பிட்டிருந்தார். ஒரு கட்டத்தில் தாக்குதல் நடந்தது உண்மை ஆனால் புலிகள்தான் அங்கு இருந்தார்கள் எனவும் அங்கு பொதுமக்களோ நோயாளர்களோ இருக்கவில்லை எனவும் கூறியிருந்தார். தைமாதம் முல்லைத்தீவு வைத்தியசாலை மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் வீடியோ ஆதாரங்கள், மற்றும் கண்கண்ட சாட்சிகளால சர்வதேச செஞ்சிலுவை சங்க பணியாளர்கள் உள்ளார்கள் . இந்த ந…
-
- 1 reply
- 1.3k views
-
-
விக்கினேஸ்வரன் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை டெனீஸ்வரன் வாபஸ் பெறவேண்டும்; சட்டத்தரணிகள் கோரிக்கை BharatiSeptember 13, 2020 சட்டத்தரணி டெனிஸ்வரன், முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் விக்கினேஸ்வரனுக்கு எதிராக தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை மீளப்பெறுமாறு அரசியல் அவதானிகள், தமிழ் தேசிய ஆர்வலர்கள் மற்றும் தமிழ் சட்டத்தரணிகள் பலர் அவரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது. சட்டத்தரணி டெனிஸ்வரன் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டமை தவறானது என்றும் அவரை மீள அமைச்சராக உள்வாங்குமாறும் மேன்முறையீட்டு நீதிமன்றம் 29.06.2018 அன்று வழங்கிய இடைக்காலக் கட்டளையை செயற்படுத்த தவறிவிட்டார் என சட்டத்தரணி டெனிஸ்வரன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கொன்றை நீதியரசர் வ…
-
- 13 replies
- 1.3k views
- 1 follower
-
-
டெல்லி: தமிழர்களின் முழு திருப்திக்கு ஏற்ப அதிகாரத்தை பகிர்ந்தளிக்க இலங்கை அதிபர் ராஜபக்சே உறுதி அளித்திருக்கிறார். இதற்கான நடவடிக்கைகளை அவர் துவங்கியிருப்பதாகவும் கூறியிருக்கிறார். என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவதை நிறுத்த வேண்டும். தற்காலிக போர் நிறுத்தத்தையாவது மேற்கொள்ள வேண்டும் என இலங்கையை தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். இதுதொடர்பாக முதல்வர் கருணாநிதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார் மன்மோகன் சிங். அதில் அவர் கூறியிருப்பதாவது: இலங்கையில் நடைபெற்று வரும் நிகழ்வுகள் குறித்து தாங்கள் கடந்த மாதம் 22-…
-
- 6 replies
- 1.3k views
-
-
தமிழ்மாறன், கொழும்பு 05/11/2009, 15:20 விசாரணைக்காக சென்ற செல்வம் அடைக்கலநாதன் இதுவரை வீடு திரும்பவில்லை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மீதான விசாரணைகள் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் நடத்தி முடிக்கப்பட்ட பின்னரும் அவர் வீடு திரும்பவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நேற்று புதன்கிழமை இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய செல்வம் அடைக்கலநாதனை கட்டுநாயக்க வானூர்த்தி நிலையத்தில் பயங்கரவாதத் தடுப்பு பிரிவினர் விசாரணைகள் நடத்தியிருந்தனர். பின்னர் நேற்று மாலை கொழும்பு திவெலவிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கட்டிடத்தொகுதியில் சென்ற பயங்கரவாதத் தடுப்பு பிரிவினர் இவரைச் சந்தி…
-
- 4 replies
- 1.3k views
-
-
செவ்வாய் 27-11-2007 10:10 மணி தமிழீழம் [மயூரன்] மாத்தளை கலபிட்டிய பகுதியில் மின்மாற்றி தகர்ப்பு மாத்தளை கலப்பிட்டிய பகுதியில் நேற்று இரவு மின்மாற்றி ஒன்று இனம் தெரியாத நபரால் கைக்குண்டு வீசி தகர்க்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இதனையடுத்து அக்கிராமம் முழுவதற்குமான மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 0 replies
- 1.3k views
-
-
இந்திய வங்கி ஒன்றிடம் இருந்து தேசிய சேமிப்பு வங்கியின் ஊடாக சிறிலங்கா அரசாங்கம் மேலும் 50 மில்லியன் டொலர்களை கடனாகப் பெற்றுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.3k views
-
-
”இலங்கையில் தமிழர்” வரலாற்று நூல் நெதர்லாந்தில் வெளியிடப்பட்டது திங்கள், 25 ஆகஸ்ட் 2008 [தாயகன்] ”இலங்கையில் தமிழர்” என்ற முக்கிய வராலற்று நூல் நேற்றும், நேற்று முன்தினமும் நெதர்லாந்தில் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது. கலாநிதி முருகர் குணசிங்கம் எழுதிய இந்த நூல் முதன் முதலில் யேர்மனியில் வெளியிட்டு வைக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து பிரான்சில் வெளியிடப்பட்டது. நெதர்லாந்தைத் தொடர்ந்து சுவிற்சர்லாந்து, நோர்வே போன்ற ஏனைய பல ஐரோப்பிய நாடுகளிலும் இந்த நூல் வெளியிடப்பட இருக்கி்ன்றது. ஈழத் தமிழர்களின் வரலாற்றை ஆதராங்களுடன் முழுமையாக எடுத்துரைக்கும் இந்த நூலை, தமிழ் மக்கள் அனைவரும் படித்தறிய வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. பதிவு இந்த நூலை …
-
- 1 reply
- 1.3k views
-
-
மகிந்த ராஜபக்ஷவும் அவரது பட்டாளங்களும் லண்டனில் தங்கியுள்ள, விடுதியை முற்றுகையிட்டுப் போராட தமிழர்கள் தாயாரிவிட்டனர். அதற்கான அனுமதியையும் பொலிசார் வழங்கியிருப்பதாக அறியப்படுகிறது. இன்று மதியம் 1 மணி முதல் இரவு 8.00 மணிவரை இப்போராட்டம் நடைபெறும் என மேலும் அறியப்படுகிறது. லண்டனில் உள்ள டோச்சஸ்டர் ஹோட்டல், மற்றும் அதற்கு அருகில் நிற்கும் ஹில்டன் ஹோட்டல் ஆகிய இரண்டு இடங்களிலும் போராட்டம் நடைபெறவுள்ளது. மகிந்தரின் ஊடகப்பிரிவினர், ஹில்டன் ஹோட்டல் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் மகிந்தர் எங்கு தங்கியிருக்கிறார் என்பதனை, இந்த இரண்டு ஹோட்டல்களும் பரம ரகசியமாக வைத்திருக்கிறார்கள். இது தொடர்பாக அவர்கள் எவ்வித தகவல்களையும் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்க விடையமாகும் ! …
-
- 4 replies
- 1.3k views
-
-
16/06/2009, 16:35 [யாழ் செய்தியாளர் சிறீதரன்] வன்னி வான் பரப்பில் இப்பொதும் பறப்பில் ஈடுபடும் வேவு வானூர்திகள் சிறீலங்கா படையினரின் வேவு வானூர்திகள் தொடர்ந்தும் வன்னி வான் பரப்பில் பறப்பில் ஈடுபடுவதை அவதானித்துள்ளதாக யாழ்ப்பாணத்திலுள்ள மக்கள் தெரிவித்துள்ளனர். தமிழ் மக்களின் வாழ்வுரிமைப் போரை தாம் முற்றாக முடக்கிவிட்டோம் எனவும், போராளிகளை அழித்து விட்டோம் என்றும் கடந்த மாதம் 18ஆம் நாள் சிறீலங்கா அரசு அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பு வெளியாகி ஒரு மாதம் ஆகவுள்ள நிலையிலும், வன்னியில் வேவு வானூர்திகள் பறப்பு நடவடிக்கை இதுவரை நிறுத்தப்படவில்லை. போர் காலத்தில் பறப்பில் ஈடுபடுவது போன்று காலை முதல் மாலைவரை இந்த வேவு வானூர்தி பறப்பில் ஈடுபடுவது தமக்கு ஆச்சர…
-
- 0 replies
- 1.3k views
-
-
யாழில் 10 ஆயிரம் ஏக்கர் காணிகளை விடுவித்துள்ளோம் – ருவன் யாழ்ப்பாண மாவட்ட பாதுகாப்புப் படையினரால் 10 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட பொது மக்களின் காணிகள் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டுள்ளது என்று யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய தெரிவித்தார். பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தலைமையில் யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற கூட்டம் தொடர்பாக இன்று (18) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும், எதிர்காலத்திலும் பொதுமக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பாக நாம் ஆராய்ந்து வருகின்றோம். தற்போதைய நிலைமையில் காணி விடுவிப்பு தொடர்பாக எவ்விதமான முடிவும் எடுக்கப்படவில்லை. – என்றார். …
-
- 8 replies
- 1.3k views
-
-
இன்றைய யுத்தம் அற்ற சூழலில் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயம் மற்றும் நாகதீப விகாரை ஆகிய வணக்க தலங்களைத் தரிசிக்க வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து வருகின்ற நிலையில் இவ்வணக்கத் தலங்களை நோக்கிய கடற்பயணம் பேராபத்தானதாக மாறி இருக்கின்றது. பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் உயிரைப் பணயம் வைத்துத்தான் இத்தலங்களுக்கு சென்று வருகின்றார்கள். விடுமுறை காலமாகையால் இங்கு செல்ல வந்திருக்கும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகின்றது. நீண்ட கியூவில் காத்து நின்றுதான் படகுகளில் இடம் பிடிக்க வேண்டி உள்ளது. இப்பயணத்தை சீர் செய்ய சம்பந்தப்பட்ட அரசுத் தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். http://www.tamilcnn.com/index.php?option=c…
-
- 1 reply
- 1.3k views
-
-
இலங்கையில் தொடரும் வன்முறைகளால் பிரிட்டனுக்கு நேரடியான பாதிப்பு இலங்கை அரசாங்கம் மீது பிரிட்டன் எவ்வித நிர்ப்பந்தத்தையும் பிரயோகிக்கவில்லை. ஆனால் உலகமயமாக்கலின் கீழ் எந்தவொரு நாடும் தனியான தீவாக இயங்க முடியாது என இலங்கைக்கான பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகர் டொமினிக் சில்கொட் தெரிவித்தார்.இலங்கையில் இடம்பெறும் மோதல்கள் மற்றும் வன்முறைகளால் பிரிட்டனுக்கு நேரடியான பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாகவே நாம் இலங்கையின் சமாதான முயற்சிகளில் அக்கறை காட்டுகின்றோம் என்றும் சில்கொட் கூறினார். இலங்கையின் சமாதான முயற்சிகளில் பிரிட்டனின் செயற்பாடுகள் என்ற தலைப்பில் சர்வதேச கற்கைகளுக்கான பண்டாரநாயக்க நிலையத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே டொமினிக் சில்…
-
- 1 reply
- 1.3k views
-
-
கொழும்பில் பதற்றத்தை ஏற்படுத்திய வானூர்தி [வெள்ளிக்கிழமை, 25 ஏப்ரல் 2008, 06:02 பி.ப ஈழம்] [காவலூர் கவிதன்] சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு நகருக்கு மேலாக, திடீரென வானூர்தி ஒன்று பறந்ததைக் கண்ட பொதுமக்கள் பதற்றமடைந்து ஓடினர். கொழும்பு மத்திய பகுதியில் அமைந்துள்ள உயர் தொடர்மாடிக் கட்டடத்தில் நேற்று வியாழக்கிழமை இரவு பணியில் இருந்த பணியாளர்கள் சிலர், வானூர்தி ஒன்று பறந்து செல்வதை அவதானித்தனர். அப்பகுதியில் வானூர்தி எதுவும் அந்நேரத்தில் பறப்பதில்லை என்பதால் பதற்றமடைந்த பணியாளர்கள், அப்பகுதி மக்களுக்கு அறிவித்ததால் அங்கு பதற்றமும் குழப்பமும் ஏற்பட்டது. பின்னர் சிறிலங்கா வான்படைக்குச் சொந்தமான வானூர்திதான் அது என்று தெரிவிக்கப்பட்டதும் அப்பகுதி மக்களின் ப…
-
- 0 replies
- 1.3k views
-
-
முள்ளிவாய்க்கால் படுகொலை எச்சங்களை அழிப்பதில் கடந்த 06 மாதங்களாக இஸ்ரேல் நிபுணர்கள் நேரடியாக உதவி வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன. சர்வதேச பயங்கரவாதம் தொடர்பில் ஆலோசனை வழங்கும் பிரித்தானிய பிரஜை ஒருவரால் இந்த செய்தி கசிந்துள்ளது. சில நோக்கங்கள் கருதி அவரது பெயர் இங்கு குறிப்பிடப்படவில்லை. சிறிலங்கா அரசாங்கம் வன்னியின் இறுதிப்போரில் 2009 ஆம் ஆண்டு மே மாதத்தில் 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட தமிழ் மக்களை ஈவிரக்கமின்றி கொன்று குவித்தது. கூடவே போராளிகள் மற்றும் இளைஞர்களையும் சித்திரவதை செய்து கொன்றது. சிங்கள அரசின் இந்த இனப்படுகொலைகளையும் அப்பட்டமான போர் நிறுத்தங்களையும் அமெரிக்கா இந்தியா போன்ற நாடுகள் நூறு வீத சாட்சியங்களை வைத்திருந்தபோதும் அதனை தமது வாணிப மற்றும் பொருளாதார பூக…
-
- 2 replies
- 1.3k views
-