Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. நாடளாவிய ரீதியில் ஊரடங்கை அமுல்படுத்தி எந்தப் பயனும் இல்லை – சுகாதார அமைச்சு by : Dhackshala http://athavannews.com/wp-content/uploads/2020/07/pavithra-vanniarachchi.jpg இலங்கையில் கொரோனா தொற்றை விரைவில் கட்டுப்படுத்தி, மீண்டும் ஒட்டுமொத்த உலகுக்கும் முன்மாதிரியான நாடாக இலங்கையை மாற்றுவோம் என சுகாதார அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். மேலும் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படாவிட்டால், அந்தப் பிரதேசங்களுக்கு ஊரடங்கைப் பிறப்பித்து எந்தவொரு பயனும் கிடையாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (புதன்கிழமை) உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “அரசா…

    • 0 replies
    • 289 views
  2. அவசரம்‍ கையொப்பமிடுங்கள் இலங்கையில் இடம்பெற்று வரும் மனித அவலங்களை முடிவுக்கு கொண்டு வருமாறு ஐ.நா. சபைக்கு வேண்டுகோள் URGENT PETITION. PLEASE SIGN. http://www.petitiononline.com/sgsl159/petition-sign.html http://www.petitiononline.com/sgsl159/petition-sign.html

  3. கனடிய நாடாளுமன்றத்தில் இடம்பெறும் அண்மைக்கால விவாதங்களின்போது சிறீலங்கா அரசின் போர்க்குற்றங்கள் மனித உரிமை மீறல்கள் ஜனநாயக விரோத செயல்கள் போன்றவை குறித்து அவ்வப்போது வாதப்பிரதிவாதங்கள் முன்வைக்கப்படுவது அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் கனடாவின் பிரதான கட்சிகளில் ஒன்றான லிபரல் கட்சியின் தலைவர் திரு.பொப் ரே தனது கேள்வி நேரத்தின்போது சிறீலங்கா தொடர்பான கேள்வியொன்றை முன்வைத்தார். சிறீலங்கா அரசு தொடர்ந்தும் மனித உரிமை மீறல்களை மேற்கொள்வதுடன் மனித உரிமை விடயத்தில் தோல்வியடைந்தும் இனங்களுக்கிடையில் நல்லிணக்கக்கத்தை உருவாக்குவது தொடர்பிலும் தோல்வியடைந்துள்ளது. இந்நிலையில் சிறீலங்காவில் நடைபெறுவதற்கு ஏற்பாடாகியிருக்கும் பொதுநலவாய நாடுகளுக்கான மாநாட்டைப் புறக்கணிக்கும் கன…

  4. வட மாகாண முதலமைச்சர் அறிவிக்காமல் வெளிநாட்டு விஜயம் செய்துள்ளதாகக் குற்றச்சாட்டு குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு வட மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் அறிவிக்காமல் வெளிநாட்டு விஜயம் செய்துள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. முதலமைச்சர் விக்னேஸ்வரன் தமது வெளிநாட்டு பயணம் தொடர்பில் மத்திய மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரேவிற்கு அறிவிக்கவோ அல்லது அனுமதி கோரவோ இல்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளதுடன் பதில் முதலமைச்சர் ஒருவர் நியமிக்க நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வட மாகாண முதலமைச்சர் கடந்த 14ம் திகதி வெளிநாட்டு பயணம் செய்துள்ளதாகவும் 29ம் திகதி வரையில் அவர் தங்கியிருப்பார் எனவும் தெரிவிக்;கப்படுகிறது. இ…

  5. ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் கொண்டுவரப்படும் இலங்கை மீதான் போர்க்குற்றச் சாட்டுத் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கக் கோரி இன்று ஒரு நாள் தொடர்முழக்க உண்ணாநோன்பு போராட்டம் நடைபெறுகிறது. கடந்த ஒரு மாதத்தில் தமிழகம் முழுவதிலும் பலவகையான போராட்டங்களை இதே காரணத்துக்காக நாம் தமிழர் கட்சி நடத்தி வந்தது. கடந்த மாதம் இதே போல் புதுவையிலும் ஒரு நாள் போராட்டம் நடைபெற்றது. புதுவை, கும்ப கோணம், திருச்சி முதலிய இடங்களில் நடைபெற்ற போராட்டங்கள் முத்திரை பதித்தன. இன்று பல்லாவரத்தில் நடைபெறும் போராட்டம் பல இயக்கங்களின் தலைவர்களையும் செயல்பாட்டாளர்களையும் ஒருங்கிணைத்து நடைபெறுகிறது. ஐ.நா.வில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா எதிர்க்க வேண்டுமென்று இலங்கை அரசு பலவித முயற்சிகளில் …

  6. குற்றவாளிகள் பக்கச் சார்பின்றி விசாரணை செய்யப்பட வேண்டும் : கஜனின் தாய் தனது மகனின் உயிரிழப்பை வேறு நோக்கத்திற்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டாம் என கஜனின் தாயார் வேண்டுகோள் விடுத்துள்ளார். தனது மகனின் உயிரிழப்பை வேறு நோக்கத்திற்கு பயன்படுத்திக்கொள்ள சிலர் முயற்சிப்பதாக அண்மையில் படுகொலை செய்யப்பட்ட யாழ்.பல்கலைக்கழக மாணவன் நடராச கஜனின் தாயார் வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த மாதம் 20ஆம் திகதி யாழ். குளப்பிட்டி பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி யாழ். பல்கலைக்கழக மாணவர்களான நடராசா கஜன் மற்றும் பவுண்ராஜ் சுலக்ஷன் ஆகியோர் உயிரிழந்தனர். இந் நிலையில் குறித்த…

  7. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கை இராணுவத்துக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள போர் குற்றச்சாட்டுகளை முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா நிராகரித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அவர் இந்தக்குற்றச்சாட்டை மறுத்துள்ளார் சர்வதேச சமூகத்தினால் சுமத்தப்படும் போர்க் குற்றச்சாட்டுக்களை முற்று முழுதாக நிராகரிக்கின்றேன். இவ்வாறான குற்றச்சாட்டுக்களுக்கு எந்த சந்தர்ப்பத்திலும் பதிலளிக்கத் தயார். போர்க் குற்றச் செயல்கள் இடம்பெற்றதாக குறிப்பிடும் சர்வதேச சமூகம், எப்போது எங்கு அவை இடம்பெற்றன என்பதனை சுட்டிக்காட்டவில்லை. படைத் தளபதியாக செயற்பட்ட காலத்தில் இராணுவத்தின் ஒழுக்கத்தையும், கௌரவத்தையும் பாதுகாத்தேன். இராணுவத்தினர் மீதான மனி…

  8. அடக்குமுறைகளுக்கு மத்தியிலும் தாம் சார்ந்த மக்களின் குரலாகவே தமிழ்பத்திரிகைகள் ஒலித்தன-முதல்வர் விக்கி பாராட்டு பல்வேறு அடக்குமுறைகளுக்கு மத்தியிலும், தமிழ்ப் பத்திரிகைகள் தமது பத்திரிகை தர்மத்தைக்கை விட வில்லை. தாம் சார்ந்த மக்களின் குரலாகவே அவை எப்போதும் ஒலித்தன தற்போது நேரடியான யுத்தம் ஒன்று இல்லாவிட்டாலும்,மறைமுகமான யுத்தம் ஒன்றை,ஒடுக்குமுறை ஒன்றை நாம் எதிர்கொள்கி ன்றோம் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார் வாழ் நாள் சாதனையாளர் விருதுபெற்ற ஊடகவியலாளர் வீரகத்தி தனபாலசிங்கத்தின் பாராட்டு விழாவில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஒரு க…

  9. மக்களுக்கு சேவையாற்றவே இருபதுக்கு ஆதரவளித்தேன் மக்களுக்கு சேவையாற்றுவதனை நோக்காக கொண்டே 20 ஆம் திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்தாக பாராளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்த குமார் தெரிவித்துள்ளார். பதுளையில் நேற்று (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறினார். பொதுஜன முன்னணி அரசாங்கம் எதிர்வரும் 10,15 வருடங்களுக்கு ஆட்சியில் இருக்கும் என எதிர்ப்பார்க்கலாம். இவ்வாறு இருக்கும் போது எதிர்க் கட்சியில் இருந்துக் கொண்டு மக்கள் நலன்சார் விடயங்களை முன்னெடுக்க முடியாது. எதிர்க் கட்சியில் இருந்துக்கொண்டு வெறுமனே கொள்ளை அரசில் பேசிக்கொண்டிருக்க முடியாது. கடந்த தேர்தல் காலத்தில் பல வாக்குறுதிகளை மக்களுக்கு வழங்கியுள்ளேன். அவ்வாறு வழங்கப்பட்ட உறுதிமொழியை காப்பாற்ற வ…

    • 2 replies
    • 670 views
  10. தரகு அரசியல் செய்யும் சுப்பிரமணிய சுவாமியின் பேச்சை கணக்கில் எடுக்காது அமெரிக்கா! - மனோ கணேசன் 'ஈழத்தமிழர் பிரச்சினையில் தலையிடுவதற்கு இந்திய ஜனதாக் கட்சியின் தலைவர் டாக்டர் சுப்பிரமணிய சுவாமிக்கு மக்கள் வழங்கிய ஆணை என்ன? தரகு அரசியல் செய்யும் இவரது பேச்சை அமெரிக்கா ஒரு பொருட்டாகக் கருதாது. அத்துடன், இலங்கை தொடர்பில் அமெரிக்கா தமது கொள்கைகளையும் மாற்றிக் கொள்ளாது' என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத் தொடரில் சிறிலங்கா மீது கொண்டு வரப்படவுள்ள பிரேரணை தொடர்பில் சிறிலங்கா அரசாங்கத்துடன் அமெரிக்கா பேச…

  11.  அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு கோரி கையெழுத்து போராட்டம் பல வருடங்களாக விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி, நேற்றுச் சனிக்கிழமை (12) வடமராட்சி பகுதியில் கையெழுத்து போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு கோரி, நாடு தழுவிய ரீதியில் கையெழுத்து போராட்டத்தினை அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு மேற்கொண்டு வருகின்றது. மேற்படி கையொழுத்துத் திரட்டும் பணி, வடமராட்சியின் வல்வெட்டித்துறை, நெல்லியடி, மருதங்கேணி, பருத்தித்துறை, குடத்தனைப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டது. இதில் ஏராளமான மக்கள் ஆர்வ…

  12. சிறிலங்கா அரசு மேற்கொண்டுள்ள தமிழினப் படுகொலையில் இன்று வியாழக்கிழமை கொல்லப்பட்டவர்களின் காட்சிகள் இவை. மனோ ரீதியாக பாதிக்கப்பட்ட எவரும் இந்தப் பக்கத்தை திறந்து பார்ப்பதை தவிர்க்கவும். சிறிலங்காவின் இனப்படுகொலைக்கு சாட்சிகளான இந்தக் காட்சிகளை நாங்கள் தணிக்கையின்றி இங்கு வெளியிட்டிருக்கின்றோம். http://www.sankathi.com/index.php?mact=New...nt01returnid=51 www.sankathi.com

    • 2 replies
    • 925 views
  13. கொழும்பு நகரத்துக்கு வருகை தருவது குறித்து சவேந்திர சில்வா தெரிவித்தது என்ன? Daya Dharshini கொழும்பு நகரத்துக்கு வருகை தருவதை முடிந்த வரை குறைத்துக்கொள்ளுமாறு இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அத்தியாவசியத் தேவைகளைத் தவிர ஏனைய விடயங் களுக்காகக் கொழும்பு நகரத்துக்கு வருகை தருவதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு அவர் தெரிவித்துள்ளார். மேல் மாகாணத்தில் அமுல்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் இன்று அதிகாலை 5 மணிக்குத் தளர்த்தப்பட்ட போதிலும் மாவட்டங்களுக்கு இடையிலான பயணங்களைத் தொடர்ந்து தவிர்க்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை மீறி நடந்தால் கொரோனா தொற்றாளர்களை…

    • 0 replies
    • 375 views
  14. அரசாங்க அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டிருந்த நிகழ்வொன்றில் பாரிய குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளதாக பிபிசி கூறுகிறது. ஒரு மசூதிக்கு அருகில் இக்குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. வெடிப்புக்கான உண்மைக் காரணம் தெரியவில்லை. இச்சம்பவத்தில் பலர் கொல்லப்பட்டுள்ளதாக பிபிசி கூறுகிறது. Several killed in Sri Lanka blast Breaking News Several people are reported killed in a massive explosion near a mosque in southern Sri Lanka, police say. It is not clear what caused the blast which took place in the town of Akuressa, 160km (100 miles) from the capital, Colombo. Local residents said several government officials and ministers were attending a …

  15. வவுனியாவடக்கில் யானைகள் பெரும் அட்டகாசம் வவுனியா வடக்கு நெடுங்கேணி பகுதியில் நேற்றுமுன்தினம் (20.11.2016) இரவு தோட்டத்திற்குள் புகுந்த யானைகள் அங்கிருந்த இரண்டு ஏக்கர் பப்பாசி மரங்களுக்கு சேதம் விளைவித்துள்ளது. இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்.. நேற்று முன்தினம் இரவு நெடுங்கேணி சிவாநகர் ஐயனார் கோவில் பகுதியிலுள்ள தோட்டங்களுக்குள் உட்புகுந்த காட்டு யானை கள் அங்கிருந்த பயிர்கள் பப்பாசிச் செய்கைகளுக்குள் உட்புகுந்து சேதம் விளைவித்துள்ளதாக பொதுமக்கள் தெரிவித்து ள்ளனர். இந்த யானைகள் அடிக்கடி இவ்விடத்திற்கு வந்து இங்குள்ள பயிர்களுக்கு சேதம் விளைவித்து வருவது தொடர்பாக அதிகாரிகளின் கவனத்தி…

  16. இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றச்செயல்கள் தொடர்பில் 'அனைத்து நாடுகளும் ஏற்கக்கூடிய சுதந்திரமான நம்பகமான விசாரணை அவசியம்' என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் இந்தியாவினால் இன்று கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இலங்கைக்கு எதிராக அமெரிக்காவின் தீர்மானம் மீதான வாக்கெடுப்பு ஜெனீவாவிலுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தற்போது இடம்பெற்று வருகின்றது. இதன்போது இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தில் இந்தியா திருத்தம் கொண்டு வந்துள்ளது. இதை அமெரிக்கா ஏற்றுக் கொண்டுள்ள நிலையில் தீர்மானம் மீதான வாக்கெடுப்பு இடம்பெற்று வருகின்றது. இந்தியா கொண்டுவந்துள்ள திருத்தத்தில் 'இலங்கைக்கு எதிராக சுயேச்சையான, சுதந்திரமான விசாரணை தேவை…

  17. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை பிரணாப் ‐ ப.சிதம்பரத்தை சந்தித்து பேச்சுவார்த்தை : எதிர்வரும் மார்ச் 22ஆம் திகதி ஐக்கியநாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இந்தியாவில் அதன் வெளியுறவுச் அமைச்சர் பிரணாப் முகர்ஜியையும் உள்துறை அமைச்சர் பழனியப்பன் சிதம்பரத்தையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளார். இந்தியா செல்லும் அவர் இந்திய மனித உரிமைகள் ஆணையத்தில் பிரதான உரையையும் ஆற்றவுள்ளார். தற்போது நேபாளத்தில் தங்கியுள்ள அவர் நீண்டகாலமாக அங்கு நடைபெற்று வந்த மாவோயிஸக்கிளர்ச்சி முடிவுக்கு வந்த பின்னர் உள்ள மனித உரிமை நிலைமைகள் பற்றி மதிப்பீடு செய்யவுள்ளார். ஐந்து நாட்கள் நேபாளத்தில் தங்கியிருக்கும் அவர் 22ஆம் திகதியே இந்தியா செல்லவுள்ளார். 2005இல் நேபாளத…

  18. சென்னையிலேயே தூதரகம் – சிறிலங்கா அறிவிப்பு சென்னையில் உள்ள சிறிலங்கா துணைத் தூதரகத்தை திருவனந்தபுரத்துக்கு இடம்மாற்றுவது குறித்து சிறிலங்கா ஆலோசித்து வருவதாக, வெளியான செய்திகளில் உண்மையில்லை என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. இந்தச் செய்தியில் உண்மையில்லை என்றும், அனைத்தும் வதந்திகளே என்றும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் றொட்னி பெரேரா தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள துணைத் தூதரகத்தை இடமாற்றம் செய்வது குறித்து எந்தத் தீர்மானமும் முன்னெடுக்கப்படவில்லை என்றும், அவ்வாறு இடமாற்றம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் சிறிலங்கா அரசுக்கு எதிராக நடத்தப்பட்டு வரும் போராட்டங்களை அடுத்தே, சென்னையில் உள்ள துணை தூதரகத்தை கேரளாவின…

  19. மட்டக்களப்பில் மலையகத்தைப் போன்று பனி மூட்டம் (வ.சக்திவேல்) மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பிரதேசங்களில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை தொடக்கம் பனிமூட்டம் காணப்பட்டது. இந்தப் பனிமூட்டம் வழமைக்கு மாற்றமாக மலையகத்தைப் போன்று படர்ந்திருந்ததைக் காண முடிந்தது. சூரியன் உதயமாகி கதிர்கள் பரப்பியிருந்தபோதும் பனிமூட்டம் காரணமாக இருள் கௌவி இருந்ததால் வாகனங்கள் முகப்பு வெளிச்சத்தைப் பாய்ச்சிக் கொண்டே பயணிக்க வேண்டியிருந்தது. இந்தப் பனி மூட்டம் வெள்ளிக்கிழமை (27) காலை 8 மணி வரை படர்ந்திருந்து மெல்ல மெல்ல அகன்றது. மட்டக்களப்பில் மலையகத்தைப் போன்று பனி மூட்டம் – Thinakkural

  20. Sri Lankan army ranks media freedom low priority THE sign on the army spokesman's wall rang the first alarm bells. Brigadier Udaya Nanayakkara had pinned his statement of faith to a map used to brief journalists visiting Sri Lanka: "It's the soldier, not the reporter, who has given us the freedom of the press," it began. It went on to say the soldier, not politicians, "ensures our right to Life, Freedom and the Pursuit of Happiness". I was recently in Sri Lanka to report on the final stages of a civil war that has been raging for a quarter of a century. As I write, 200,000 civilians are caught between the Sri Lankan army and the Tamil Tigers. U…

  21. புனர்வாழ்வு பெற்ற யுவதிகள் இருவர் கிளிநொச்சியில் காணாமற்போயுள்ளனா்! [Friday, 2013-03-29 13:02:24] கிளிநொச்சியில் புனர்வாழ்வு பெற்ற இரு யுவதிகள் கடந்த 2011ஆம் ஆண்டு தொடக்கம் காணாமல் போயுள்ளதாக யுவதிகளது பெற்றோரால் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. காணாமல் போனவர்களில் ஒருவர் புனர்வாழ்வு பெற்று விடுதலையான முன்னாள் போராளி என்றும் மற்றயவர் செஞ்சோலையில் இருந்து கல்வி கற்றவர் என்றும் அவர்களது முறைப்பாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. கிளிநொச்சி ஆனைவிழுந்தானைச் சேர்ந்த இ.ரோஹினி (வயது 23) கிளிநொச்சி திருநகரைச் சேர்ந்த கே.வினோதினி ஆகிய இருவருமே இவ்வாறு காணாமல் போனவர்களாவர். இது தொடர்பில் காணாமல் போன இ.ரோஹினியின் தாயார் தெரிவிக்கையில், 'தனது மகள் 2010ஆம் ஆண…

  22. மட்டக்களப்பு மாநகரசபையில் பெரும் அமளி? 115 Views மட்டக்களப்பு மாநகரசபையின் வரவு செலவு திட்ட அமர்வு இன்று மாநகர முதல்வரினால் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் அங்கு பெரும் அமளி ஏற்பட்டது. மட்டக்களப்பு மாநகரசபையின் வரவு செலவுத்திட்டத்திற்கான விசேட அமர்வு இன்று மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் நடைபெற்றது. இதன்போது தலைமையுரையினை தொடர்ந்து மாநகரசபை முதல்வர் வரவு செலவு திட்டத்தினை சமர்ப்பித்து அது தொடர்பிலான விளக்கவுரையினை நிகழ்த்தினார். அதனை தொடர்ந்து வரவு செலவுத்திட்டம் தொடர்பிலான விவாதங்கள் நடைபெற்றன. இதன்போது பலர் வரவு செலவு திட்டத்தினை வரவேற்று பேசியுடன் அதற்கு எதிரான கருத்துகளு…

  23. சமாதான உடன்படிக்கையை ஒரு தலைப்பட்சமாக கிழித்தெறிந்து விட்டு அடக்குமுறை யுத்தத்தை தமிழ்மக்கள் மீது ஏவி விட்ட மகிந்த ராஜபக்சே தற்போது புலிகளுக்கு சவால் விட்டிருக்கிறார். "தைரியமிருந்தால் புலிகள் மக்களை விட்டு வெளியே வந்து,இராணுவத்தை நேரடியாக சந்திக்க வேண்டுமாம்!". மக்கள் புலிகளுடன் இல்லாவிட்டால் ஜெயித்து விடுவாராம். கடந்த 3 வார காலமாக இராணுவம் பெற்ற சேதத்தை சமாளிப்பதற்காக சப்பை கட்டு கட்டுகிறார். புலிகள் என்ன வானத்திலிருந்து குதித்தார்களா? மக்கள்தான் புலிகள். புலிகள்தான் மக்கள். போராளியாக இருக்கும் மகன், மகளை விட்டு அவர்களுடைய குடும்பத்தார் எப்படி வெளியே வருவார்கள்? அவர்கள் தங்களுடைய தாயக நிலத்தில் இருக்க விரும்புகிறார்கள். அது தீவிரவாதமாம்? இவருடைய இராணுவம்…

  24. வடக்கு மாகாணக் கடற்பகுதியில் சிறீலங்கா இராணுவத்தினரின் உதவியுடன் மீன்பிடியில் ஈடுபட்டுவரும் தென்பகுதி மீனவர்களைக் கட்டுப்படுத்துவதற்கு ஆயுதம் ஏந்துவதைத் தவிர வேறு வழியில்லையென வடக்கு மாகாண மீனவ சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அட்டகாசங்களை விட கடலுடன் எவ்வித தொடர்பும் இல்லாத இராணுவத்தின் அட்டூழியங்கள் அதிகரித்து வருவதாகவும் பாதிக்கப்பட்ட வடபகுதி மீனவர்கள் குற்றம்சுமத்தியுள்ளனர். வடமாகாண கடற்தொழிலாளர் இணையம், வடமாகாண மீன்பிடி அமைச்சு மற்றும் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் வடமாகாண மீன்பிடி அபிவிருத்திக்கான இணைமுகாமைத்துவ செயற்பாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள ரில்கோ விடுதியில் நடைபெற்றது. இந்த நிகழ…

  25. அனலைதீவில் பசுவதை அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு! அனலைதீவில் சட்டத்துக்குப் புறம்பாக பசு மாடு ஒன்றை இறைச்சிக்கு கொலை செய்த நிலையில் கும்பல் ஒன்று தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அண்மைக்காலமாக பசு வதை அதிகரித்து வரும் நிலையில் இந்தச் சம்பவம் நேற்று(புதன்கிழமை) அனலைதீவு 5ஆம் வட்டாரத்தில் இடம்பெற்றுள்ளது. பசு மாட்டை இறைச்சிக்காக கொலை செய்த நிலையில் அந்த வழியால் சென்றவர்கள் கண்ணுற்றதால் கும்பல் அங்கிருந்து தப்பித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தீவகத்தில் கட்டாக்காலிகளாக திரியும் கால்நடைகளை சில கும்பல்கள் இறைச்சிக்காக அவற்றை கொலை செய்து இறைச்சிகளை யாழ்ப்பாணத்திற்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். குறித்த கும்பல்களுக்கு எதிராக…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.