Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஜனவரி முதல் நாட்டில் உணவுத்தட்டுப்பாடு ஏற்படும் December 26, 2021 ஜனவரி மாதம் முதல் நாட்டில் உணவுக்குத் தட்டுப்பாடு ஏற்படுமெனத் தெரிவித்த அமைச்சர் பந்துல குணவர்தன மக்கள் தங்களுடைய வீட்டுத் தோட்டங்களில் ஏதாவது மரக்கறிக்களை பயிரிடவேண்டும் எனத் தெரிவித்துள்ளாா். மேலும் மிளகாய், கத்திரிச்செடி மற்றும் நிவித்தி போன்ற செடிகளை உடனடியாக வீட்டுத் தோட்டங்களில் பயிரிடுமாறும் அவா் அறிவுறுத்தியுள்ளார். https://globaltamilnews.net/2021/171043

  2. தமிழ்க் கட்சிகள் இந்திய பிரதமரிடம் முன்வைக்கவுள்ள கடிதத்தின் பொருள் மாற்றம் – சுமந்திரன் தமிழ்க் கட்சிகள் இந்திய பிரதமரிடம் முன்வைக்கவுள்ள கடிதத்தின் பொருள் மாற்றப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். இன்று(புதன்கிழமை) விசேட ஊடக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், “தமிழ் கட்சிகள் தமது கோரிக்கையாக தயார் செய்த கடிதத்தின் தலைப்பு ’13 ஆம் திருத்தத்தை அமுல் படுத்த கோருதல்’ என இருந்த நிலையில், தற்போது ‘தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகளை பூர்த்தி செய்வதும் இலங்கை இந்திய ஒப்பந்தமும்’ என மாற்றப்பட்டுள்ளது. ப…

  3. சுனாமி பேரலையில் உயிரிழந்தவர்களின் 17 ஆம் ஆண்டு நினைவேந்தல் December 26, 2021 சுனாமி பேரலை இடம்பெற்று இன்றுடன் 17 ஆம் ஆண்டுகள் பூா்த்தியடைந்துள்ளது. இந்தநிலையில் இலங்கையில் பல பாகங்களிலும் சுனாமி பேரலையில் உயிரிழந்தவர்களின் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று (26) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளன. அந்தவகையில் ஆழிப்பேரலையால் காவு கொள்ளப்பட்ட உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது. 17வது ஆண்டு நிறைவையொட்டி இந்த நினைவேந்தல் யாழ். பல்கலை வளாகத்தில் மாணவர்களால் அனுஷ்டிக்கப்பட்டது அத்துடன் இன்று யாழ்ப்பாணம் வடமராட்சியிலும் உடுத்துறை கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தினுடைய ஏற்பாட்டில் இன்ற…

  4. தமிழர்களின் கலை வரலாற்றில் விடுதலைப் புலிகளின் காலம் பொற்காலம் – சிறீதரன் தமிழர்களின் கலை வரலாற்றில் தமிழீழ விடுதலைப் புலிகளின் காலம் பொற்காலம் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். கலாலயத்தின் வெளியீடான விழுதொலிகள் இறுவட்டினை வெளியிட்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “போர் முடிந்ததன் பின்னரான காலப்பகுதியில் கலைஞர்கள் தங்களின் படைப்புக்களுக்கு உரித்தான அந்தஸ்து கிடைப்பதில்லை என்பதான ஒரு குற்றச்சாட்டு கலைஞர்களால் முன்வைக்கப்பட்டிருக்கிறது. உண்மைதான் எம்மவர்கள் இந்த மண்ணில் இருந்தபோது கலைகளையும் கலைஞர்களையும் வளர்க்க விடுதலைப் புல…

  5. ஊடகவியலாளர்களை விமர்சித்த சுமந்திரனுக்கு செருப்படி கொடுத்தார் ஆய்வாளர் நிலாந்தன் அரசியல்வாதிக்கு பக்குவம் வேண்டும்! அவையடக்கத்துடன் நடக்க வேண்டும்! சண்டைக்கோழிபோல ஒரு வெள்ளரியன் சேவல்போல இருக்கக்கூடாது எனவும் அறிவுரை

    • 54 replies
    • 3.1k views
  6. பிரபாகரனின் கல்வி அறிவைப் பற்றி கதைக்கும் பொன்சேகாவிற்கு சஜித்தின் படிப்பறிவு தொடர்பாக தெரியுமா? – சிவாஜி கேள்வி விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் கல்வி அறிவைப் பற்றி கதைக்கும் சரத் பொன்சேகாவிற்கு தமது கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் படிப்பறிவு தொடர்பாக தெரியுமா என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பினார். சரத் பொன்சேகா விடுதலைப் புலிகளின் தலைவர் தொடர்பாக தெரிவித்த கருத்து குறித்து இன்று (வெ…

  7. மொட்டு கூட்டுக்குள் இருந்து விமல், வாசு, கம்மன்பில வெளியேற்றம்? பஸில் வியூகம்! அமைச்சர்களான விமல்வீரவன்ச, உதய கம்மன்பில மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகிய மூவரையும் அமைச்சரவையில் இருந்து நீக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம், நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளாரென அரசியல் வட்டாரங்களை மேற்கோள்காட்டி சிங்கள இணைய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. பஸில் ராஜபக்ச அமெரிக்கா பயணிப்பதற்கு முன்னர் இது தொடர்பான யோசனையை ஜனாதிபதியிடம் முன்வைத்துள்ளாரெனவும், இவர்கள் மூவரையும் வைத்துக்கொண்டு நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாதெனவும் பஸில் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளாரென அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. 2022 ஜ…

  8. ஏழு மலையானை வணங்கும் நீங்கள் நியாயமாக நடந்துகொள்கின்றீர்களா? - மகிந்தவிடம் மனோ கேள்வி "எடுத்தற்கெல்லாம் திருப்பதி ஏழு மலையானை மனைவி, பிள்ளை குட்டிகளுடன் நாடும் நீங்கள், ஏழு மலையானை வணங்கும் இந்நாட்டு இந்துக்களுக்கு நியாயமாக நடந்து கொள்கின்றீர்களா?" என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி, பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் கேள்வி எழுப்பியுள்ளார். பிரதமர் மகிந்த தனது மனைவி மற்றும் இளைய மகன் குடும்பத்தினருடன் திருப்பதி ஏழு மலையானை நேற்று முன்தினம் வழிப்பட்ட படங்கள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன. இது தொடர்பில் தனது சமூக ஊடகத் தளத்தில் பதிவொன்றை இட்டுள்ள மனோ எம்.பி, "நல்லதுதான். எங்கள் கடவுள் எங்களுக்கு மட்டுமே என்று …

  9. ஐ.நா வரவு - செலவுத்திட்டத்தில் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் பொறிமுறைக்காக ஒதுக்கப்படவுள்ள நிதி மற்றும் ஆளணியில் குறைப்பைச் செய்வதற்கு தீவிர முயற்சி (நா.தனுஜா) ஐக்கிய நாடுகள் சபையின் 2022 ஆம் ஆண்டிற்கான வரவு, செலவுத்திட்டம் தொடர்பான விவாதம் நடைபெற்றுவருகின்றது. இவ்வரவு, செலவுத்திட்டத்தில் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் பொறிமுறைக்காக ஒதுக்கப்படவுள்ள நிதி மற்றும் ஆளணியில் குறைப்பைச் செய்வதற்கு சீனா மற்றும் ரஷ்யா ஆகிய பாதுகாப்புச்சபை உறுப்புரிமை நாடுகளும் இலங்கையும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றன. இருப்பினும் அவற்றின் முயற்சிகளைத் தோற்கடித்து மனித உரிமைகள்சார் செயற்திட்டங்களுக்கு உரியவாறு நிதியொதுக்கப்படுவதை உறுதிசெய்யவேண்டும் என்று ஐ.நா உறுப்பு நாடுக…

  10. ஆலய வளவில் தேரரின் சடலத்தை எரித்த ஞானசார தேரர் மீது சட்டம் பாயாது: மனோ! முகநூலில் பதிவிடும் தமிழ் இளைஞர்களின் வீட்டுக்கு பொலிஸ் வருகிறது செயலணியின் பெயரை ஒரு நாடு, ஒரு சட்டமல்ல, ஒரு ஆளுக்கு ஒரு சட்டம் என பிரேரிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இந்து ஆலய வளவில் பெளத்த தேரரின் சடலத்தை எரித்தவர் மீது சட்டம் பாயாது என்றும் ஆனால், முகநூலில் எதையாவது சிறுபிள்ளைத்தனமாக எழுதி விடும் தமிழ் இளைஞர்களைத் தேடி வீட்டுக்கு பொலிஸ் வருகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ள அவர், “அமைச்சர் அலி சப்ரியை பதவி விலகுமாறுக் கூறும் ஞானசார தேரரை, ஜனாதிபதி செயலணிக்கு ஜனாதிபதிதான் நியமித்தார். அமைச்சர் அலி…

  11. கற்பிட்டி சவக்காலையில் வைக்கப்பட்டிருந்த யோசுநாதரின் திருச் சொரூபம் கீழே அடித்து நொருக்கப்பட்டுள்ளமை அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கற்பிட்டி சென். மேரிஸ் வீதியிலுள்ள கிறிஸ்தவ சவக்காலையில் உள்ள செபம் படிக்கும் மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த யோசுநாதரின் திருச் சொரூபம் நிலத்தில் கீழே அடித்து நொறுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன், குறித்த சவக்காலையில் அடக்கம் செய்யப்பட்டவர்களின் அடையாளத்திற்காக பெயருடன் புதைக்கப்பட்ட சுமார் 40 சிலுவைகள் (குருஸ்) இதன்போது சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர். இந்த சம்பவம் தொடர்பில் நேற்று (23) இரவு தமக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய, இன்று (24) வெள்ளிக்கிழமை ச…

    • 1 reply
    • 284 views
  12. வரலாற்றுத் தொன்மைவாய்ந்த பூநகரி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கெளதாரிமுனை கணேசா கோவிலில், தொல்லியல் திணைக்களத்தால் அகழ்வாராய்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறித்த கோவிலில் வரலாற்றுத் தொன்மையான சான்றுகள் இருக்கக்கூடும் என்ற ரீதியில் யாழ். பல்கலைக்கழக வரலாற்றுத்துறை ஓய்வுநிலைப் பேராசிரியர் பரமு புஸ்பரட்ணம் தலைமையிலான யாழ். பல்கலைக்கழக தொல்லியல் துறை நான்காம் வருட மாணவர்கள் தொல்லியல் திணைக்களத்துடன் இணைந்து கோவில் வளாகப் பகுதிகளில் அகழ்வுப்பணியை ஆரம்பித்துள்ளனர். தொல்லியல் திணைக்களத்தினுடைய புனர்நிர்மாணங்களுக்குப் பொறுப்பான பிரதிப்பணிப்பாளர் வருணி ஜெயதிலகவும் இந்த அகழ்வாய்வுப்பணியில் இணைந்துள்ளார். பூநகரி கணேசா கோவிலில் அகழ்வாராய்வு ஆரம்பம்! - உதயன் | UTHAYA…

    • 1 reply
    • 250 views
  13. அம்பாறை திருக்கோவில் பொலிஸ் நிலையத்திற்குள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிசூட்டு சம்பவத்தில் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் உயிரிழந்துள்ளதுடன், நால்வர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று இரவு நடைபெற்ற இந்த துப்பாக்கிசூட்டு சம்பவத்தில் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி உட்பட நான்கு பேர் படுகாயமடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். குறித்த பொலிஸ் நிலையம் விசேட அதிரடிப்படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், துப்பாக்கிச்சூட்டு நடாத்திய பொலிஸ் உத்தியோகத்தரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் காரணமாக அப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவுவதுடன், மக்க…

  14. (இராஜதுரை ஹஷான்) எதிர்வரும் வருடம் நிச்சயம் முழு நாடும் உணவு தட்டுப்பாட்டை எதிர்க்கொள்ள நேரிடும். அதனால் விவசாயத்துறையுடன் தொடர்புடைய தரப்பினர் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என சுற்றாடற்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். சேதன பசளை திட்டம் சிறந்ததாக காணப்பட்டாலும் அது சவால்மிக்கது. நல்லாட்சி அரசாங்கத்திலும் சேதன பசளை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு கட்டம் கட்டமாக செயற்படுத்தப்பட்டது. ஒரு தடவையில் இரசாயன உரம் தடை பாவனை மற்றும் இறக்குமதி தடை செய்யப்பட்டதனால் விவசாயத்துறை பாரிய சவாலை எதிர்க் கொண்டுள்ளது. தற்போதைய நிலையில் எதிர்வரும் காலங்களில் உணவு தட்டுப்பாடு ஏற்படும் என பொருளாதார மற்றும் துறைசார் நிபுணர்களின் எதிர்வு கூறலை ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளேன்.…

  15. தமிழக மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்து யாழில் போராட்டம் December 24, 2021 இந்திய இழுவைப்படகு மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனம் உட்பட பல்வேறு மீனவ அமைப்புக்களின் ஏற்பாட்டில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ் மாவட்ட செயலகத்தினை முற்றுகையிடப்பட்டு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளன முன்றலில் இருந்து கடற்றொழிலாளர்களால் ஆரம்பிக்கப்பட்ட பேரணி யாழ் மாவட்ட செயலக முன்றலில் நிறைவடைந்தது. அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களை கைது செய், நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்யக்கூடாது, கைது செய்த படகுகள…

  16. பயங்கரவாத தடைச்சட்டத்தில்திருத்தங்களை செய்வதற்கு அரசாங்கம் புலம்பெயர் தமிழர் அமைப்புகளுடன் இணைந்து செயற்பட்டுவருகின்றது என இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் கரன் அன்ரூசுடனான சந்திப்பின்போது அவர் இதனை தெரிவித்துள்ளார் பிராந்தியத்தின் கல்விக் கேந்திர மையமாக இலங்கையை மாற்றுவதற்கு உதவுவதாக அவுஸ்திரேலிய உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் திருமதி கெரன் அன்ட்ரூஸ் என்னிடம் தெரிவித்தார். என ஜனாதிபதி தெரிவித்துள்ளார் அவுஸ்திரேலியாவில் பட்டப்படிப்புகளைப் படிக்க விரும்பும் பிற நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு பொருத்தமான பாடநெறிகளின் ஆரம்ப கட்டத்தை இலங்கையில் தொடர்வதற்குத் தேவையான கல்வி நிறுவனங்களை இலங்கையில் நிறுவுவதன் மூ…

    • 6 replies
    • 503 views
  17. மீனவர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் கடற்றொழில் அமைச்சருக்கு எதிராக போராட்டம் வெடிக்கும் – சுகிர்தன் வடக்கு மீனவர்களின் பிரச்சினையை தீர்ப்பதற்கு கடற்றொழில் அமைச்சர் தகுந்த நடவடிக்கை எடுப்பாராக இருந்தால் அவருக்கு ஒத்துழைப்பு வழங்க தயார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ச.சுகிர்தன் தெரிவித்துள்ளார். ஆனால் மீனவர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை பொய்யாகவோ அல்லது நிறைவேற்றாவிட்டாலோ நாங்கள் கடற்றொழில் அமைச்சருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட வேண்டிய நிலை வரும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட மீனவர்களினால் இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் …

  18. ஒரு நாடு, ஒரு சட்டமல்ல, ஒரு ஆளுக்கு ஒரு சட்டம் -மனோ கணேசன் அமைச்சர் அலி சப்றியை பதவி விலக சொல்லும் ஞானசார தேரரை, ஜனாதிபதி செயலணிக்கு, இந்த ஜனாதிபதிதான் நியமித்தார். அமைச்சர் அலி சப்றியையும், கேபினட் அமைச்சராக இந்த ஜனாதிபதிதான் நியமித்தார் எனத் தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், இந்நிலையில், ஜனாதிபதியின் ஞானசாரர், ஜனாதிபதியின் அமைச்சரை பதவி விலக சொல்கிறார். இதென்ன கூத்து? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பில் முகநுாலில் தனது கருத்தை பதிவு செய்துள்ள மனோ கணேசன், “எதிர்கட்சி அரசியல்வாதிகள் இப்படி சொன்னால் அதில் ஒரு அரசியல் தர்க்கமாவது இருக்கும். அப்படியும் நான் அதை சொல்ல மாட்டேன். அரசை நாம் கடுமையாக எதிர்ப்பது என்பது வேறு.ஆனால் இ…

  19. (ஆர்.யசி) நீதி அமைச்சர் பதவியில் இருந்து அலி சப்ரி நீக்கப்பட வேண்டும், அவர் நீதி அமைச்சர் பதவியில் இருக்கும் வரையில் சஹரான் செய்த குற்றங்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொள்ள முடியாது என பொதுபல சேனா அமைப்பின் செயலாளரும், 'ஒரே நாடு ஒரே சட்டம்' ஜனாதிபதி செயலணியின் தலைவருமான கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். 'ஒரே நாடு ஒரே சட்டம்' ஜனாதிபதி செயலணியின் தலைமைத்துவம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளதுடன், நீதி அமைச்சர் உள்ளிட்ட ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ள நிலையில் அதற்கு பதில் தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார். 'ஒரே நாடு ஒரே சட்டம்' ஜனாதிபதி செயலணி உருவாக்கத்தின் போதும், அதில் என்னை தலைவராக நியமித்துள்ளதற்கும் பல்வேறு வி…

    • 1 reply
    • 273 views
  20. 2021 ஆம் ஆண்டின் இறுதிக்குள் உத்தியோகபூர்வ கையிருப்பு 3 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் வழிமுறைகள் 2021 இறுதியளவில் அலுவல்சார் ஒதுக்குகள் ஐ.அ.டொலர் 3 பில்லியனிற்கு மேலாகக் காணப்படுவதனை உறுதிப்படுத்தும் என்பதனை இலங்கை மத்திய வங்கியானது பொது மக்களுக்குத் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றது. கொவிட்-19 நோய்த்தொற்றின் பொருளாதாரத் தாக்கத்தினால் ஏற்பட்ட சிக்கல்களுக்கும் வெளிநாட்டுத் துறையின் பாதகமான அபிவிருத்திகளினால் ஏற்படுத்தப்பட்ட சவால்களுக்கும் மத்தியில் இலங்கைப் பொருளாதாரம் 2021 ஆண்டு முழுவதும் தாக்குப…

    • 4 replies
    • 464 views
  21. (ஆர்.யசி) நாட்டில் 70 வீதமான மக்கள் மிகவும் வறுமையில் வாழும் நிலைமை ஏற்பட்டுள்ளதாவும், எரிபொருள் விலை அதிகரிப்பு ஏனைய சகல செயற்பாடுகளையும் பாதிக்கும் எனவும் சுட்டிக்காட்டும் நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் அசேல சம்பத், இது நாட்டில் உணவு பஞ்சமொன்றை நோக்கி கொண்டு செல்லும் எனவும் தெரிவித்தார். நாட்டில் நாளுக்கு நாள் உருவாகிக்கொண்டுள்ள வாழ்வாதார நெருக்கடி நிலைமைகள் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், நாட்டின் இன்றைய நிலைமையில் பொதுமக்கள் பாரிய நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றனர். 70 வீதமான மக்கள் மிகவும் வறுமையில் வாழும் நிலைமை ஏற்பட்டுள்ளது. எரிபொருள் விலை அதிகரிப்பு ஏனைய சகல செயற்…

  22. (ஆர்.யசி) நாட்டின் நிதி நெருக்கடியை சமாளிக்க சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதற்கு அமைச்சரவையில் பெரும்பான்மை ஆதரவு கிடைத்துள்ள போதிலும், அரசாங்கத்திற்குள் ஒரு சில மாற்றுக்கருத்துகள் நிலவுகின்றன. இதனால் எதிர்வரும் ஜனவரி மாதம் 3 ஆம் திகதி கூடும் அமைச்சரவை கூட்டத்தில் இது குறித்த இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக அமைச்சரவை மட்டத்தில் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 3 ஆம் திகதி கூடும் அமைச்சரவை கூட்டத்திற்கு மத்திய வங்கி ஆளுநர் மற்றும் திறைசேரி செயலாளர் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. நிதி நெருக்கடி நிலைமைகள் மற்றும் டொலர் பற்றாக்குறை காரணமாக நாடு எதிர்கொண்டுவரும் சிக்கல்களை கையாள சர்வதேச நாணய நிதியத்தை ந…

  23. முல்லைத்தீவு – மூங்கிலாறு சிறுமியின் பிரோத பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்! முல்லைத்தீவு, உடையார்கட்டு வடக்கு – மூங்கிலாறு கிராமத்திலுள்ள 200 வீட்டுத் திட்டத்தில் வசித்த சிறுமி யோகராசா நிதர்சனாவின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது. சிறுமியின் பிறப்புறுப்பில் ஏற்பட்ட காயமே மரணத்திற்கான காரணம் என உறுதியாகியுள்ளது. தனது வீட்டிலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவிலுள்ள சகோதரியின் வீட்டிற்கு கடந்த 15 ஆம் திகதி காலை சென்ற நிதர்சனா மாலை வரை வீடு திரும்பாதமையால் குடும்பத்தார் தேட ஆரம்பித்தனர். பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய பொலிஸாரும் இராணுவத்தின…

  24. அழைப்பு விடுக்கப்படும் பட்சத்தில், தமிழ்பேசும் கட்சிகளின் ஒன்றிணைந்த கூட்டத்தில் இ.தொ.கா பங்கேற்கும் – ஜீவன் தொண்டமான்! இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸிற்கு அழைப்பு விடுக்கப்படும் பட்சத்தில், தமிழ்பேசும் கட்சிகளின் ஒன்றிணைந்த கூட்டத்தில் அது நிச்சயம் பங்கேற்கும் என இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். கொட்டகலையில் இன்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸிற்கு இன்னும் அழைப்பு விடுக்கப்படவில்லை. அதற்கு அரசியலும் காரணமாக இருக்கலாம். சம்பந்தன் ஐயா மூத்த அரசியல்வாதி. அவரை நாம் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.