Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழ் மக்களிற்கு அழிவை கொடுத்ததில் சிறிலங்காவின் இரண்டு பிரதான அரசியல் கட்சிகளுக்கும் பங்கு உண்டு.ஒருவர் மற்றவருக்கு சலைத்தவர் அல்ல என்ற ரீதியில் தமிழர்களிற்கு தீங்கை விளைவித்துள்ளனர்.அகிம்சை போராட்டத்தை அடக்குவதில் சிறிலங்கா சுகந்திரகட்சி முக்கிய பங்கு வகித்துள்ளது.ஆரம்பகாலங்களிள

    • 0 replies
    • 1.3k views
  2. மலேசிய நிருபர் வியாழக்கிழமை, ஆகஸ்ட் 26, 2010 உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் குறித்து டெல்லியில் இந்திய உளவுத்துறையால் நடத்தப்பட்டு வரும் காவல்துறை உயர் அதிகாரிகளின் மாநாட்டில், நாளை மறுநாள் மாலையில் விடுதலைப் புலிகள் - ஆதரவாளர்கள் மீது வருங்காலத்தில் எந்த மாதிரி நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும், எப்படி பிரச்சனைகளை கையாள்வது போன்ற முடிவுகள் எடுக்கப்பட உள்ளன என டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த கூட்டத்திற்காக தமிழகத்தில் இருந்து பல வி.ஐ.பி.களும்? பொலிஸ் அதிகாரிகளும் டெல்லிக்கு சென்றுள்ளனர். Eelanatham.net

  3. தமிழீழ விடுதலைப்புலிகளை இலங்கையில் தடைசெய்வது தொடர்பாக இலங்கையின் அமைச்சரவை இன்று மாலை (30.12.2008)ஆராய்வதாக ஏ எப் பி செய்திசேவை தெரிவித்துள்ளது.இன்று இடம்பெறும் கூட்டம் தொடர்பாக அரசாங்கத்தின் விசேட அமைச்சவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு இன்று இரவு 8 மணிக்கு இடம்பெறும் என எ.எப்.பி தெரிவித்துள்ளது. விரிவான செய்தி....விரைவில் http://www.tamilseythi.com/srilanka/breaki...2008-12-30.html

  4. [size=3]பராக்...! பராக்..! விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி...( PFLT ) தமிழகத்தில் .? சொல்கிறது கியூ பிரிவு..! ஈழதேசம் செய்தி..![/size] [size=3] விடுதலைப் புலிகளின் மக்கள் முன்னணி என்ற அமைப்பு தமிழகத்தில் இயங்கி வருகின்றன. இந்த அமைப்பு விடுதலைப் புலிகளின் அரசியல் அமைப்பு, இந்த அமைப்பின் நோக்கம் ' தமிழ் நாட்டையும் இலங்கையில் உள்ள ஈழத்தையும் ஒன்றாக இணைத்து தனி நாடு பெறுவதே ' என்று தமிழக உளவுத் துறையின் எஸ்.பி.சம்பத் குமார் இன்று தெரிவித்தார். சட்ட விரோத நடவடிக்கைகள் [/size][size=3] ( தடுப்பு ) தீர்ப்பாயம் விடுதலைப் புலிகளின் மீதான தடை நீட்டிக்கும் விசாரணை அமைப்பின் நீதிபதி வி.கே.ஜெயின் அவர்களிடம் இவ்வாறு கூறியுள்ளது தமிழ் நாட்டின் கியூ பிரிவு போலீஸ். [/size] [siz…

  5. இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் போர்க் குற்றங்களோடு சம்மந்தப்பட்டவர் என்று செயற்பாட்டாளர்களால் வர்ணிக்கப்படும் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவை தென் ஆப்பிரிக்காவுக்கான இலங்கைத் துணை தூதராக நியமிப்பதை அந்த நாடு ஏற்கவில்லை என்று ஒரு வழக்காடும் அமைப்பு தெரிவித்துள்ளது. சவேந்திர சில்வாவை தென் ஆப்பிரிக்காவுக்கு அனுப்பும் முடிவை அமைச்சரவை ஒப்புக் கொண்டுள்ளதை உறுதிப்படுத்தும் இலங்கை அமைச்சர் ஒருவர், தென் ஆப்பிரிக்காவின் தயக்கம் குறித்து தமக்கு தெரிவிக்கப்படவில்லை என்கிறார். இலங்கையின் இறுதி கட்டப் போரின் போது வன்னியில் படை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த 58 டிவிஷனின் கமாண்டரான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா மீது போர் குற்றச்சாட்டுகள் தொடர்ந்து சொல்லப்பட்டு வந்திருக்கின்றன. போருக்கு…

    • 4 replies
    • 1.3k views
  6. விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை பூரணமாக இல்லாதொழிப்பதில் நடைமுறைச் சிக்கல்கள்: கெஹலிய ரம்புக்வெல்ல தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை இராணுவ ரீதியாக தோற்கடித்தாலும், போராட்ட இயக்கமென்ற வகையில் அதனை பூரணமாக இல்லாதொழிப்பதில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் காணப்படுவதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல சுட்டிக்காட்டியுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் வான் பலம் முற்றாக இல்லாதொழிக்கப்பட்டதாக கருத முடியாது எனவும், எந்த நேரத்தில் தாக்குதல் நடத்தினாலும் அதனை எதிர்கொள்ள படையினர் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்த கால எல்லையை உறுதியாக கூற முடியாது என அவர் தெரிவித்துள்ளார். இலங்கையின் இறைய…

  7. வவுனியாவில் பழந்தமிழ் கிராமங்கள் பல அரச அதிகாரிகளின் உறுதுணையுடன் சூட்சுமமான முறையில் திட்டமிட்ட முஸ்லீம் குடியேற்றத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டமை தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. வவுனியா A9 பிரதான வீதிக்கு அருகாமையில் அமைந்துள்ள நொச்சிமோட்டை கிராமத்தில் உள்ள பல காணிகளுக்கு காணிக் கச்சேரி என்ற பெயரில் மக்களை ஏமாற்றி காணிகளை அபகரிப்பதோடு அதில் முஸ்லீம் மக்களை குடியேற்றி தமிழர் இனப்பரம்பலை சிதைக்கும் முயற்சிகள் நடந்தேறிவருகின்றது. சுமார் 180 ஏக்கர் அளவிலான காணிகளுக்கு காணிக்கச்சேரி இடம்பெற்று அவற்றில் சுமார் 100 ஏக்கர் அளவிலான காணிகளுக்கு இப்பிரதேசங்களை ஒரு போதும் சேர்ந்திராத பிரதேச செயலாளரின் மனைவியின் உறவினர்கள் அண்ணனின் உறவினர்கள் என ஏறத்தாழ நூறு பேருக்…

    • 6 replies
    • 1.3k views
  8. இலங்கை இனப்பிரச்சினை விடயத்தில் அனைத்துலக சமூகம் தலையிடக்கூடாது என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் தெற்காசியப் பிராந்திய அதிகாரி றொபேர்ட் ஈவன்சிடம் ஜே.வி.பியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

  9. விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனுக்கு இன்று 55வது பிறந்தநாள். இதை முன்னிட்டு உலகெங்கும் உள்ள தமிழின உணர்வாளர்கள் பிரபாகரனின் பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்கள். இதேபோல் சேலத்தில் பெரியார் திராவிடக் கழகத்தினர், மனித உரிமைகள் அமைப்பினர், தமிழின உணர்வாளர்கள் போஸ்டர்கள் மற்றும் பேனர்கள் வைத்து பிரபாகரனின் பிறந்த நாளை கொண்டாடினர். சேலத்தில் வைக்கப்பட்டிருந்த பேனர்களை நேற்று இரவு போலீசார் அப்புறப்படுத்தினர். சில இடங்களில் போலீசாருக்கும் தமிழின உணர்வாளர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. போலீசார் பேனர்களை அப்புறப்படுத்தினாலும், கிச்சிப்பாளையம் என்ற கிராமத்தில் சுமார் 20 இளைஞர்கள் மீண்டும் மீண்டும் பிரபாகரனின் பேனர்களை வைத்து அவ்வழியே செல்லும் பொதுமக்களுக்கு இனி…

  10. சென்னை (ஏஜெ‌ன்‌சி), புதன்கிழமை, 12 டிசம்பர் 2007 த‌மிழக‌ காவல்துறையில் உளவுத்துறை என்ற ஒரு அமைப்பு இருக்கிறதா என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் பிடிபட்டுள்ள விடுதலைப் புலிகளின் வாக்குமூலம் இந்தியாவையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் உதவியால் மேலும் ஒருவர் பிடிபட்டுள்ளார். அந்த நபரும் தஞ்சாவூரில், அதுவும் போலீஸ்காரர் ஒருவரின் வீட்டிலேயே 8 மாதங்கள் தங்கி இருந்ததாகவும் தெரிய வந்துள்ளது. விடுதலைப்புலிகளுக்கும் இங்குள்ள அரசியல் வாதிகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்றும், அவர்கள் பல வகையிலும் விடுதலைப் புலிகளுக்கு உதவுகிறார்கள் என்றும் எனக்க…

    • 2 replies
    • 1.3k views
  11. யாழ்.கஸ்தூரியார் வீதியில் உள்ள புல்லுக்குளப் பகுதியில் புதிய சந்தை தொகுதி ஒன்று யாழ். மாநகரசபையால் அமைக்கப்படுகின்றது. இதற்கான அடிக்கல் நேற்று மாலை நாட்டப்பட்டது. இந்நிகழ்வில் மாநகர ஆணையாளர் மு.செ.சரவணபவ, மாநகர மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா, யாழ்.அரச அதிபர் இமெல்டா சுகுமார் மாநகர சபை உறுப்பினர்கள் யாழ்.வணிகர் சங்கப்பிரதி நிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • 2 replies
    • 1.3k views
  12. Posted on : Thu Dec 13 10:15:00 2007 முல்லைத்தீவில் கடற்கொந்தளிப்பு முல்லைத்தீவுக் கடலில் கடந்த இரண்டு நாள்களாக கடும் கொந்தளிப்பு நிலை தொடர்கிறது. கடுமையான கடற்கொத்தளிப்பினால் நேற்று மீனவர்களின் படகு கவிழ்ந்ததில் வெளியிணைப்பு இயந்திரம் சேதமடைந் துள்ளது. படகில் சென்றவர்களைக் காப்பாற் றச் சென்றோர் படுகாயமடைந்துள்ளனர். முல்லைத்தீவு வண்ணாங்குளத்தைச் சேர்ந்த றஞ்சித் என்பவர் நேற்றுமுன் தினம் கடலில் போட்ட நண்டு வலையை எடுக்கச்சென்றபோது பெரிய அலை பட கைக் கவிழ்த்தது. (அ) http://www.uthayan.com/

  13. வெளிவிவகார அமைச்சருக்கு தண்டத் தொகை விதித்தது மாவட்ட நீதிமன்றம். சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகமவுக்கு 1 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் தண்டத்தொகையாக கொழும்பு மாவட்ட நீதிமன்றம் விதித்துள்ளது. சண்டே லீடர் நாளிதழ் தொடர்பான வழக்கு ஒன்றில் நீதிமன்றில் ரோகித முன்னிலையாகததால் நேற்று செவ்வாய்க்கிழமை இத்தண்டத் தொகை விதிக்கப்பட்டது. வெளிநாட்டுப் பயணத்தில் இருப்பதால் ரோகித போகல்லாகம நீதிமன்றில் முன்னிலையாகவில்லை என்று அவரது சட்டத்தரணி எஸ்.எல்.குணசேகர நீதிமன்றில் தெரிவித்தார். இதற்கு எதிர்த்தரப்பு சட்டத்தரணி ரொமேஸ் டி சில்வா கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். கடந்த டிசம்பர் 11 (2006), மார்ச் 14 (2007) மற்றும் நேற்று என மூன்று விசாரணைகளின் போதும் நீதிமன்றில் ரே…

    • 2 replies
    • 1.3k views
  14. முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க அடுத்தவாரம் இந்தியா செல்லவுள்ள நிலையில், அவருடன் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர ஆகியோரும் இணைந்துகொள்ளவுள்ளதாக மிகவும் நம்பகரமான தரப்புத் தகவல்கள் மூலம் தெரியவருகிறது. இந்தியாவில் நடைபெறும் விசேட மாநாடொன்றில் கலந்துகொள்வதற்காகவே இவர்கள் இந்தியா செல்கின்றனர். எனினும், கருத்தரங்கின் பின்னர் இந்திய உயர்மட்ட அரச அதிகாரிகளை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் தலைமையில் முன்னெடுக்கப்படும் சர்வதேச அமைப்பொன்றின் முதலாவது மாநாடு ஏப்ரல் 07ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை இந்தியாவில் நடைபெறவுள்ளது. http://www.saritham.com/?p=5…

    • 8 replies
    • 1.3k views
  15. நாகை மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு : இலங்கை கடற்படையினர் அட்டூழியம் நாகை : நாகை அருகே கடலில் மீன்பிடித்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் படுகாயம் அடைந்ததை அடுத்து அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்திவருகின்றனர். இந்நிலையில், நாகப்பட்டினம் அருகே அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த 6 மீனவர்கள் கோடியக்கரை அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், அந்த மீனவர்களை சுற்றி வளைத்து துப்பாக்கியால் சுட்டதில், பாபு என்ற மீனவர் படுகாயமடைந்தார். இதனையடுத்து, அவரை அங்கிருந்து மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இந்த சம்பவம் அறிந்…

  16. இலங்கையில் நிரந்தர கடற்படை முகாம் அமைக்கும் திட்டம் கிடையாது என சீனா அறிவித்துள்ளது. இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நிரந்தர கடற்படை முகாம்களை அமைப்பதற்கு சீனா முயற்சி மேற்கொண்டு வருவதாக வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை என சீன பாதுகாப்பு அமைச்சர் லியாங் கான்கில் தெரிவித்துள்ளார். சிங்கப்பூரில் நடைபெற்று வரும் பத்தாவது ஆசிய பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு முகாம் அமைக்கப்பட வேண்டுமென்றால் ஏற்கனவே திட்டமிடப்பட்டிருக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பாகிஸ்தானின் குட்வாரிலும், இலங்கைத் துறைமுகம் ஒன்றிலும் கடற்படை முகாம்களை அமைப்பதற்கு சீனா ஆர்வம் காட்டி வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டிர…

    • 1 reply
    • 1.3k views
  17. கிழக்கில் சிறீலங்கா இராணுவத்தினரின் இரண்டாம் கட்ட இராணுவ நடவடிக்கைகள் விரைவில் ஆரம்பிக்க இருபதாக சிறீலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத்பொன்சேகா அறிவித்துள்ளார். கிழக்கில் விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதிகள் நோக்கிய இராணுவ நடவடிக்கைகள் விரைவில் முன்னெடுக்கப்படும் என தெரிவித்துள்ள சரத்பொன்சேகா திருமலை படுவான்கரை மற்றும் தொப்பிக்கல பகுதிகள் நோக்கியே இவ் ஆக்கிரமிப்பு நடவடிக்கைள் முன்னெடுக்கப்படும் எனவும் இப்பொழுது அதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை விடுலைப் புலிகளினால் ஆயுதப் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ள சிங்கள புலிகளுக்கு எதிராகவும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். இவர்களே தென…

  18. Posted on : 2007-06-08 தமிழருக்கு எதிரான ஒடுக்குமுறையின் மற்றொரு கொடூர வடிவம் இது! ஈழத் தமிழர்களை அவர்களது பாரம்பரிய பிரதேசத்தில் வறுத்தெடுத்து வதைக்கும் அரச ஒடுக்குமுறை, இப்போது தலை நகரிலும் அவர்களை கருவறுக்கும் தனது வேலையைக் கனகச் சிதமாக முழு அளவில் ஆரம்பித்து விட்டது. கொழும்பு விடுதிகளில் தங்கியிருக்கும் தமிழர்கள் நித் திரைப் படுக்கையில் இருந்து உடுத்த உடையோடு கால் நடைகள் போல அள்ளிச் செல்லப்படும் கொடூரம் முழுத் தமிழினத்துக்கும் இழைக்கப்பட்டிருக்கும் பெரும் அவமான மாகும். மாற்று இனத்துப் பிச்சைக்காரர்கள் கூட தலைநகர் வீதியோரங்களில் கேட்பாரின்றி விசாரிப்பாரின்றி ஆனந் தமாக, சாவகாசமாகப் படுத்துத் தூங்கி மகிழும்போது தமிழர்கள் மட்டும் அவர்கள் தமிழர்களாகப் பிறந்த க…

  19. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ கிளிநொச்சியில் தமிழில் உரை கிளிநொச்சியில் அமைச்சரவை கூட்டத்தை நடத்தியமையை போன்று அபிவிருத்தியையும் இந்த பிரதேசத்தில் முன்னெடுக்க தயாராகவுள்ளதாக சிறிலங்கா ஜனாதிபதி தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நடைபெற்ற பொதுமக்கள் சந்திப்பின் போது தமிழில் உரையாற்றிய அவர் இந்த கருத்தை வெளியிட்டார் இன்று காலை கிளிநொச்சியில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பிரதேசத்தின் அபிவிருத்தி குறித்தே கலந்துரையாடப்பட்டதாக அவர் குறிப்பிட்டார் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மொனராகலை. ஹம்பாந்தோட்டை ஆகிய பிரதேசங்கள், மிகவும் வறுமையான பிரதேசங்கள் என்ற தோற்றம் இருந்தது எனவும் எனினும் இனிமேல் அவ்வாறான நிலைமை இருக்காது என ஜனாதிபதி குறிப்பிட்டார் தமக்கு நாட்டு மக்கள்…

    • 4 replies
    • 1.3k views
  20. நாடு கடந்த பொறியில் சிக்குமா தமிழ்த் தேசியம்? அமெரிக்காவிலிருந்து ஓர் ‘ஆழமான வட்டம்’ சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கோத்தபாயவிற்கும் சிறிலங்காவின் புலனாய்வுத்துறையின் பிரதான அதிகாரிகளுக்கும் பல வருடங்களாக ஆலோசனை வழங்கிவருகிறது. இந்த ‘ஆழ்வட்ட’த்திலிருந்து மீளமுடியாத ஒரு பொறிக்குள்ளேயே கே.பி. சிக்கியதாக 2001 ஆம் ஆண்டிற்குப் பிறகு நடந்தேறிய விடயங்களை வரிசைக்கிரமமாக அடுக்கி ஆராயும்போது புலப்படுவதாக தமிழ்த் தேசிய இராணுவ விஞ்ஞான ஆய்வாளர்கள் சிலர் தீர்க்கமாக நம்புகின்றனர். குறிப்பாகஇ புலம்பெயர் சூழலில் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டில் உறுதியாய் நிற்போர் வெளிப்படுத்திய தாக்கம் காரணமாக குறித்த ‘ஆழ்வட்டம்’ சலனமடைந்தாலும் ‘பொறி’ சுதாகரிக்கப்பட்டு அடுத்த கட்டத்திற்கு நகர்த்தப…

  21. ஆதாரம் இல்லாத அவதூறுகளைத் தமிமர் மீது சுமத்தும் கனடா லிபரல் கட்சிக்கு தமிழர்கள் வாக்களிப்பதா? லிபரல் கட்சி தமிழர்களுக்கு அதரவுக் கட்சி என்று தமிழர்கள் லிபரலுக்கு வாக்கு அளிக்கின்றது மிகவும் வேதனைக்குரிய விடயமாகும். இவர்கள் தமிழர் வாக்குகளை கொள்ளையடிக்கப் பாசாங்கு செய்யும் கூட்டம் தான் என்பதைத் தமிழர்கள் உணரவேண்டும். இத்துடன் இணைக்கப்பட்டுள்ள லிபரல் கட்சித்தலைவர் எழுதிய புத்தகத்திலிருந்து ஒரு பகுதியைத்தருகின்றோம். தரக்குறைவான, ஆதாரப+ர்வமற்ற குற்றச்சாட்டுக்களை நாலாந்தர மனிதர்களின் பாணியில் அவரது புத்தகத்தில் எமுதியிருப்பது ஒரு அருவருக்கத்தக்க செயவாகும். இதே போல பலவிடயங்கள் இருக்கின்றன. தமிழர்கள் வீதியில் இறங்கிப் போராடியபோதெல்லாம் எவரும் இக்கட்சியிலிருந்து வந்து …

  22. The day a Tamil learned about hate Canadian Tamils mark 25 years since Colombo riots forced their flight Stewart Bell, National Post Published: Wednesday, July 23, 2008 http://www.nationalpost.com/todays_paper/s....html?id=672763 Stewart Bell இடம் இருந்து எமது போராட்டத்தின் முக்கிய நிகழ்வு ஒன்று பற்றி மிகவும் வரவேற்கத்தக்க ஒரு பார்வை.

    • 4 replies
    • 1.3k views
  23. குடாநாட்டில் படையினருடன் தொடர்புகள் வைத்திருப்போருக்கு எல்லாளன் படை எச்சரிக்கை யாழ் குடாநாட்டில் படையினருடன் தொடர்பு வைத்திருப்போருக்கு எச்சரிக்கை விடுக்கும் துண்டுப் பிரசுரங்களை எல்லாளன் படை வெளியிட்டுள்ளது. யாழ். குடாநாட்டில் படையினரின் கைக்கூலிகளாகவும் அடிவருடிகளாகவும் இருந்து தொடர்ந்து செயற்படுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கையினை எடுக்க உள்ளதாக தெரிவிக்கும் துண்டுப்பிரசுரங்களே எல்லாளன் படை என்ற பெயரில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. படையினருடன் உறவைப் பேணுவோர், உளவு சொல்வோர், படையினர் வழங்கும் ஆபாச இறுவெட்டுகளை இளைஞர்களுக்கு விநியோகிப்போர். இராணுவத்தின் அப்பக் கடைகளில் காலம் கழிப்போர், பெண்களை படையினருக்கு தொடர்பை ஏற்படுத்திக் கொடுப்போர் மற்றும் படையினரின் துணையுடன் க…

  24. இரத்தப் பரிசோதனைக்குப் பதில் விசர்நாய்க்கடி ஊசி மருந்து ஏற்றிய தாதி. காய்ச்சலுக்காக சிகிச்சை பெற வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சிறுவனொருவனின் இரத்த மாதிரியை பரிசோதிக்குமாறு வைத்தியர் வழங்கிய சீட்டை தவறாக வாசித்த தாதியொருவர், அவருக்கு விசர்நாய்க்கடிக்கான ஊசியை ஏற்றிய சம்பவம் ஒன்று அநுராதபுரம் வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. காய்ச்சலினால் பீடிக்கப்பட்ட நான்கு வயது சிறுவனை அவரது தாய் வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளார். இதன்போது சிறுவனை பரிசோதித்த வைத்தியர் இரத்தப் பரிசோதனை மேற்கொள்ளுமாறு மருத்துவ சீட்டு ஒன்றை வழங்கியுள்ளார். இந்தச் சீட்டைச் சரியாக வாசிக்காத தாதி அந்தச் சிறுவனுக்கு வேறொரு ஊசி மருந்தை ஏற்றியுள்ளத…

  25. மணலாறு "மைக்கல் முகாமை" கைப்பற்றியதாக இராணுவம் அறிவிப்பு! மணலாறு முன்னரங்கப் பகுதியிலுள்ள விடுதலைப் புலிகளின் ‘மைக்கல் முகாமை’ இராணுவத்தினரின் 59வது படைப்பிரிவினர் கைப்பற்றியிருப்தபாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. இந்த முகாம், முல்லைத்தீவுக் காட்டுப்பகுதியிலுள்ள முக்கிய முகாமொன்றுடன் நேரடியான தொடர்புகளைக் கொண்டமுகாம் எனப் பாதுகாப்பு அமைச்சுத் தகவல்கள் கூறுகின்றன. முல்லைத்தீவை நோக்கி இராணுவத்தினர் ஜனகபுரத்தின் ஊடாக முன்னேறிவருவதாகவும், மூன்று நாட்கள் தொடர்ச்சியாக இடம்பெற்ற மோதல்களைத் தொடர்ந்தே இராணுவத்தினர் மைக்கல் முகாமைக் கைப்பற்றியதாகவும் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக விடுதலைப் புலிகள் தரப்பில…

    • 0 replies
    • 1.3k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.