Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. முகாம்களில் இருந்த மக்களிற்கு வீடுகளை தெரிவு செய்தது நான்! முகாம்களில் இருந்த மக்களிற்கு காணிகளை அடையாளப்படுத்தியதும் அவர்களிற்கு வீடுகளை தெரிவு செய்தது நான் எனவும், கோப்புகளை இறுதி நேரத்தில் கொடுப்பதால் அவர்கள் சந்தோசப்படப்புாவதில்லை எனவும் அங்கயன் இராமநாதன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நேற்று (04) இடம்பெற்ற நிகழ்வில் ஊடகங்களில் வெளியான செய்தி தொடர்பில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நேற்றைய தினம் நடைபெற்ற நிகழ்வுகளில் வேண்டும் என்றே நீங்கள் புறக்கணித்ததாக செய்திகள் வெளியாகி இருந்தது. அந்த செய்தி உண்மையானதா என அங்கயன் இராமநாதனிடம் ஊடகவியலாளர் வினவினார். அதற்கு பதிலளித்த அங்கய…

    • 1 reply
    • 306 views
  2. ரஞ்சன் அருண்பிரசாத் பிபிசி தமிழுக்காக இலங்கையில் 30 வருட யுத்தம் 2009ம் ஆண்டு முடிவுக்கு கொண்டு வரப்பட்டதன் பின்னர், நாடு பொருளாதார ரீதியிலும், பாதுகாப்பு ரீதியில் முன்னேற்றம் அடைந்து வந்த பின்னணியில், 2019ம் ஆண்டு நடத்தப்பட்ட ஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னர், மீண்டும் பல்வேறு பாதிப்புக்களை நாடு எதிர்நோக்க ஆரம்பித்தது. ஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னரான காலப் பகுதியில் இலங்கையின் பிரதான வருமானமான சுற்றுலாத்துறை முற்று முழுதாக பாதிக்கப்பட்டது. இலங்கை பொருளாதாரத்தில் எந்தவித பாரிய பிரச்சினைகளும் இல்லாமல் இருந்த காலம் 2018 வரைதான். 2018ம் ஆண்டு இலங்கைக்கு 23.34 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகைத் தந்த நிலையில், அந்த எண்ணிக்கை 2019ம் ஆண்டு ஈஸ்டர்…

  3. நவம்பர் 20ம் திகதி: போரினால் இறந்தவர்களுக்கான சிறப்பு நாளாக சிறப்பிப்போம்-வடக்கு கிழக்கு ஆயர்கள் பேரவை November 5, 2021 வரும் நவம்பர் 20ம் திகதி இலங்கையில் நடைபெற்ற 30 வருட கால போரினால் இறந்தவர்களை நினைவு கூர்ந்து மன்றாடுகின்ற சிறப்பு நாளாக சிறப்பிப்போம் என வடக்கு கிழக்கு ஆயர்கள் பேரவை அறிவித்துள்ளது. இது தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு வடிவம், https://www.ilakku.org/we-will-mark-a-special-day-for-those-who-died-in-the-war/

  4. சீன குடியரசின்... இராணுவத் தளங்களாக, இலங்கை உள்ளிட்ட நாடுகள் மாறுவதற்கு வாய்ப்பு – பென்டகன் இலங்கை உள்ளிட்ட சில நாடுகள் சீன குடியரசின் இராணுவத் தளங்களாக அல்லது வசதி வழங்கும் நிலையங்களாக மாறுவதற்கு பெரும்பாலும் இடமுள்ளதாக பென்டகன் தெரிவித்துள்ளது. பென்டகன் விடுத்துள்ள புதிய பாதுகாப்பு ஆய்வறிக்கையில் இந்த விடயம் தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை உள்ளிட்ட 13 நாடுகளில் தமது இராணுவத்திற்கு வசதி வழங்கும் நிலையங்களை ஸ்தாபிப்பதற்கு இடமுள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதன்படி, இலங்கை, கம்போடியா, மியன்மார், தாய்லாந்து, சிங்கப்பூர், இந்தோனேஷியா மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட 13 நாடுகளை சீனா இதற்காக பயன்படுத்துவதற்கு இடமுள்ளதாக அந்த அறிக்கையில…

  5. மட்டக்களப்பு மாந்தீவு பறவைகள் சரணாலய பகுதிக்குள் விமானப்படை முகாம் அமைப்பு மட்டக்களப்பு மாவட்டத்தின் மத்தியில் உள்ள மாந்தீவு பறவைகள் சரணாலய பகுதிக்குள் விமானப்படை முகாம் ஒன்று புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள மாந்தீவு சரணாலயத்திற்குள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சொந்தமான தொழுநோய் வைத்தியசாலை மற்றும் முருகன் கோயில், கத்தோலிக்க தேவாலயம் உள்ளிட்டவையும் காணப்படுகின்றன. அத்தோடு இலங்கையில் வரலாற்று ரீதியாக குறித்த பிரதேசம் பறவைகள் சரணாலயமாக உள்ளது. இந் நிலையில் குறித்த பிரதேசத்தில் திடீரென விமானப்படை முகாம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதேவேளை மாந்தீவு பிரதேசத்திற்குள் செய்தி சேகரிக்க செ…

  6. சத்துருக்கொண்டான் படுகொலை நினைவுத்தூபியில் அஞ்சலி செலுத்தியவர்களுக்கு எதிராக விசாரணை! மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் படுகொலை நினைவுத்தூபியில் கடந்த 09-09-2021அன்று அஞ்சலி செலுத்தியவர்களுக்கு எதிராக பொலிஸ் விசாரணை முன்னெடுக்கப்படுவதாக மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் துரைசிங்கம் மதன் தெரிவித்தார். நேற்று மாலை மட்டக்களப்பு தலைமையக பொலிஸாருக்கு மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர்களான த.கௌரி மற்றும் துரைசிங்கம் மதன் ஆகியோர் அழைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். என்ன நோக்கத்திற்காக குறித்த அஞ்சலி நிகழ்வு கலந்துகொண்டமை விளக்கேற்றியமை குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக குறித்த…

  7. ஜனாதிபதி கோட்டாபய நாடு திரும்பினார் ஐ.நா. உச்சி மாநாட்டில் கலந்கொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் இலங்கை தூதுக்குழுவினர் நாடு திரும்பியுள்ளனர். டுபாயிலிருந்து அவர்கள் இன்று (வியாழக்கிழமை) காலை 08.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். ஐக்கிய இராச்சியத்தின் ஸ்கொட்லாந்து – கிளாஸ்கோவில் நடைபெறும் COP: 26 ஐக்கிய நாடுகள் அமைப்பின் காலநிலை மாற்றம்’ தொடர்பான மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடந்த 30ஆம் திகதி நாட்டிலிருந்து புறப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1248200

  8. மரக்கறிகளின் விலை 200 முதல் 300 ரூபாய் வரையில் அதிகரிப்பு! நாடு முழுவதும் உள்ள வர்த்தக நிலையங்களில், மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சில சிறப்பு அங்காடிகளில், போஞ்சி, கரட், லீக்ஸ் உள்ளிட்ட மரக்கறிகள் ஒரு கிலோவின் விலை 200 முதல் 300 ரூபாய் வரையில் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதேநேரம், விசேட பொருளாதார மையங்களிலும் கொழும்பு மரக்கறி சந்தையிலும் மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் மரக்கறிகளின் சில்லறை விலைகளும் அதிகரித்துள்ளதாக, நாடு முழுவதும் சில்லறை மரக்கறி வர்த்தகத்தில் ஈடுபடும் வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். https://athavannews.com/2021/1248304

  9. இந்து மத ஸ்தலங்களில், பௌத்த எச்சங்கள்... அடையாளம் காணப்படுவதாலேயே சிக்கல் நிலை ஏற்படுகின்றது – அனுர இந்து மத ஸ்தலங்களில் தொல்பொருள் ஆய்வுகளை மேற்கொள்ளும்போது பௌத்த எச்சங்கள் அடையாளம் காணப்படுவதாலேயே, இங்கு சிக்கல் நிலை ஏற்படுகின்றது என தொல்லியல் திணைக்கள பொது முகாமையாளர் அனுர மனதுங்க தெரிவித்தார். கிளிநொச்சி பூநகரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வடக்கு கிழக்கில் உள்ள தொல்லியல் சின்னங்கள் திட்டமிட்டு அழிக்கப்படுவதாக மக்கள் மத்தியில் கருத்து நிலவுகின்றமை தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது தொடர்ந்தும் தெரிவித்த அவர், “புராதான சின்னங்கள் தொடர்பாக பாதுகாக்கவும் அது தொடர்பாக ஆராய்ச்சி செய்வதற்குமே எமது திணைக்களம் இர…

  10. ”தொல்லியல் செயற்பாடுகள் மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற வேண்டும்”; அமைச்சர் டக்ளஸ் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் தமிழ் மக்களின் தொல்லியல் சின்னங்களையும் பண்பாட்டு விழுமியங்களையும் பாதுகாக்கும் வகையில் அகழ்வாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவிற்கும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையில் இன்று இடம்பெற்ற சிநேகபூர்வ சந்திப்பின் போதே மேற்குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடற்…

  11. உலகம் முழுவதிலும் உள்ள இந்துக்கள் இன்று தீபாவளி பண்டிகையினை சிறப்பாக கொண்டாடுகின்றனர். அந்த வகையில் நீண்ட கால கொரோனா பெருந்தொற்று முடக்கத்திற்கு பின்னர் இலங்கை வாழ் இந்துக்களும் தீபதிருநாளை இன்று கொண்டாடினர். வாழ்க்கை செலவுகள் அதிகரித்துள்ள போதும் பெரும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மதியில் இம் மக்கள் பண்டிகையை தத்தம் குடும்பங்களுடன் கொண்டாடி மகிழ்ந்தனர். இதேவேளை தீபதிருநாளை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள கோவில்கள் விசேட பூஜை வழிபாடுகளும் இடம்பெற்றன. பிரதமரின் தலைமையில் இடம்பெற்ற தீபாவளி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் அலரி மாளிகையில் இந்து சமய அறநெறிப் பாடசாலை மாணவர்களோடு தீபாவளிப் பண்டிகை …

  12. வடக்கு மக்களின் வாழ்வை வலுப்படுத்த இராணுவம் ஆதரவு வழங்கும் November 5, 2021 வடக்கு மக்களின் அன்றாட வாழ்க்கையை வலுப்படுத்த இராணுவம் தனது பூரண ஆதரவை வழங்கும் என வடமாகாண ஆளுநரிடம் , இராணுவ தளபதி உறுதி அளித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு சென்ற இராணுவ தளபதி சவேந்திர சில்வா நேற்றைய தினம் வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவை சந்தித்து கலந்துரையாடினார். அதன் போது, வடமாகாண மக்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்துவது தொடர்பில் இரு தரப்பினரும் நீண்ட நேரம் கலந்துரையாடிய நிலையில், வடக்கு மக்களின் அன்றாட வாழ்க்கையை வலுப்படுத்த இராணுவம் தனது பூரண ஆதரவை வழங்கும் என இராணுவ தளபதி உறுதி வழங்கினார். https://globaltamilnews.net/2021/168209

  13. ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணி குறித்து நீதியமைச்சர் ஜனாதிபதிக்கு இடையில் சந்திப்பு? நீதியமைச்சர் அலி சப்ரி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணி தொடர்பாக தனது கவலைகள் குறித்து கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்காட்லாந்தில் இருந்து நாடு திரும்பிய ஜனாதிபதியை சப்ரி நேற்று சந்திப்பார் என தகவல் கிடைத்ததாக ஆங்கில ஊடகமொன்று தெரிவித்துள்ளது. எவ்வாறிருப்பினும் அவர்கள் எப்போது சந்திப்பார்கள் என்ற சரியான திகதி உடனடியாகத் தெரியவில்லை எனவும் கூறப்படுகிறது. ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ தொடர்பான வரைவை தயாரித்து அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதத்துக்குள் இறுதி அறிக்கையை சமர்பிப்பதற்காக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார …

  14. (இராஜதுரை ஹஷான்) லாப் சமையல் எரிவாயு விநியோக நிறுவனம் 12.5 கிலோகிராம் நிறையுடைய எரிவாயு சிலிண்டரின் விலையை கட்டம் கட்டமாக 4000ஆயிரம் ரூபா வரை அதிகரிக்க முயற்சிக்கிறது. கொழும்பில் உள்ளவர்கள் மரவள்ளி கிழங்கை கூட அவித்து சாப்பிட முடியாத நிலை தோற்றம் பெறும். அத்தியாசிய பொருட்களின் விலை நியாயமற்ற வகையில் அதகரிக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்க்கட்சியும் பொறுப்பு கூற வேண்டும் ஏனெனில் நாட்டில் தற்போது பலமான எதிர்க்கட்சியொன்று கிடையாது என நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பின் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்தார். நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பின் காரியாலத்தில் வியாழக்கிழமை (4 )இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற…

  15. வடக்கை மையமாகக் கொண்ட வடகிழக்கு அரசியல் பரப்பு ‘விசித்திரமானது-மனோ November 3, 2021 வடக்கை மையமாக கொண்ட வடகிழக்கு அரசியல் பரப்பு “விசித்திரமானது” என நேற்று மீண்டும் ஒருமுறை அறிந்து சிலிர்த்துக்கொண்டேன் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தனது முகநூலில் தெரிவித்துள்ளார். அவரது முக நுார் பக்கத்தில் இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில், “13ம் திருத்தம்” பற்றி வாயை திறந்தாலேயே, “இந்திய-மேற்குலக கைக்கூலி” என ஒரு கும்பல் தயவு தாட்சண்யமில்லாமல் கூறுகிறது. நான் என்னை நம்பும் மக்களுக்கு தான் “கைக்கூலி”..! இதை திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டே இருக்க வேண்டுமா? 13 என்பது முழுமையான தீர்வென்றோ, அது…

  16. “ஒரு நாடு ஒரு சட்டம்” வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்ய வேண்டும்- ஆயர்கள் பேரவை கோரிக்கை November 3, 2021 ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ எனும் செயலணியொன்றை நேற்று முன்தினம் உருவாக்கியுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சே அதற்குத் தலைவராக சர்ச்சைக்குரிய பௌத்த பிக்குவான பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை நியமித்துள்ளமை பாரிய சர்ச்சைகளைத் தோற்றுவித்துள்ளது. இலங்கையினுள் ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ என்பதைச் செயற்படுத்துதல் தொடர்பாகக் கற்றாராய்ந்து அதற்காகச் சட்டவரைவொன்றைத் தயாரித்தல் மற்றும் நீதி அமைச்சினால் இதுவரை இதற்குரியதாக தயாரிக்கப்பட்டுள்ள சட்ட வரைவுகள் மற்றும் திருத்தங்களைக் கற்றாராய்ந்து அவற்றின் பொருத்தம் மற்றும் தகுந்த திருத்த…

  17. அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் கட்டுப்பாட்டு விலைகள் நீக்கம்! அத்தியாவசியசீனி, பருப்பு, கோழி இறைச்சி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் கட்டுப்பாட்டு விலையை நீக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு அமைய சீனி, பருப்பு, கோழி இறைச்சி, செமன், சோளம், பெரிய வெங்காயம், கோதுமை மா, உருளைக்கிழங்கு மற்றும் பால்மா மற்றும் உள்ளிட்ட பல அத்தியாவசிய பொருட்களின் கட்டுப்பாட்டு விலைகள் நீக்கப்பட்டுள்ளது. பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினால் வௌியிடப்பட்ட 7 வர்த்தமானி அறிவித்தல்கள் இந்த விஷேட வர்த்தமானி அறிவிப்பின் ஊடாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. …

    • 1 reply
    • 187 views
  18. துன்பங்கள் நீங்கி... இன்பங்களை, அடைந்து கொள்வதே... தீபாவளியின் நோக்கம் – ஜனாதிபதி அறியாமை இருளகற்றி மனதை ஒளிரச் செய்யும் ஞான ஒளியேற்றலையே தீபாவளித் திருநாள் குறிக்கின்றது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தீபாவளியினை முன்னிட்டு இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே ஜனாதிபதி இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். மேலும் குறித்த வாழ்த்துச் செய்தியில், ‘உலகலாவிய இந்துக்களால் கொண்டாடப்படும் பண்டிகைகளில் மிகவும் சிறப்புமிக்கதொன்றாக தீபாவளித் திருநாள் கருதப்படுகின்றது. இந்துக்களின் ஆன்மீக வழிபாடாகவும் பாரம்பரிய கலாசாரப் பெருவிழாவாகவும் காணப்படும் தீபாவளித் திருநாள் மூலம், வாழ்வின் துன்பங்கள் நீங்கி இன்பங்களை அடைந்துகொள்வதே நோக…

  19. மத்திய வங்கியுடன் 500 மில்லியன் அமெரிக்க டொலருக்கான நிதி ஒப்பந்தத்தில் இலங்கை கைச்சாத்து இலங்கை அரசாங்கமும் உலக வங்கியும் 500 மில்லியன் அமெரிக்க டொலருக்கான நிதி ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளன. உலக வங்கியின் தெற்காசியாவுக்கான உப தலைவர் ஹார்ட்விக் ஷாப்பர் மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல இன்று இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர். இலங்கையின் விவசாய விநியோகச் சங்கிலியை வலுப்படுத்தும் வகையில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இதன் மூலம், இலங்கையின் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள கிராமப்புற சமூகங்களில் வாழும் சுமார் 16 மில்லியன் மக்கள் பயனடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது. https://athavannews.com/2021/1248153

  20. தமிழ் தேச மக்களின் இருப்பையும் தேசியத்தின் அடையாளங்களையும் அழிக்க திட்டமிடுகின்றனர்-அருட்தந்தை மா.சத்திவேல் October 31, 2021 தமிழ்த் தேசிய அரசியலுக்கு எதிராக நின்ற சக்திகள் தமது தேவைக்காக புதிய கையாட்களை உருவாக்கி அவர்கள் மூலமாக தமிழ் தேச மக்களின் இருப்பையும் தேசியத்தின் அடையாளங்களையும் முழுமையாக அழிக்க திட்டமிடுகின்றனர் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். அவரால் இன்று வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அண்மையில் தமிழ் பேசும் மக்கள் கட்சிகள் என்று தம்மை அடையாளப்படுத்தி கொண்டோர்…

  21. மிகக் குறுகிய காலத்தினுள் மக்களின் எதிர்பைச் சம்பாதித்த அரசென்று சொன்னால் அது இதுவாகத் தான் இருக்கும் - சாணக்கியன்! November 4, 2021 நாங்கள் முப்படையை வைத்துக் கொண்டிருந்த காலம் போய் இன்று பத்து பாராளுமன்ற உறுப்பினர்களை வைத்துக் கொண்டே பேச்சுவார்த்தைக்குச் செல்லுகின்றோம். அவ்வாறு இருக்கையில் எமது பலம், பலவீனம் என்ன என்பதையும் நான் அறிந்திருக்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். நேற்று மட்டக்களப்பில் உள்ள மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,இந்த நாட்டில் தற்போதைய சூழ்நிலையில் வரலாறு காணாத…

  22. பிரதமரின் தீபாவளி வாழ்த்துச் செய்தி! மிக நீண்டகாலமாக எமது மக்களைப் பிரித்துவைத்திருந்த அனைத்து வேறுபாடுகளையும் களைவதற்குரிய தருணமாக இத்தீபாவளித் திருநாளைக் கொண்டாடுவோம் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ‘நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு’ எனும் அரசாங்கத்தின் தேசிய கொள்கைக்கு அமைவாக, ஒளி நிறைந்த வளர்ச்சிப் பாதை நோக்கி, பல தடைகளைத் தாண்டி நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம். அனைத்துத் துறைகளிலும் நம் தேசம் முன்னேற்றம் காண வேண்டும் என்பதே எம் அனைவரினதும் பெருவிருப்பாகும். இன்று உலகையே அச்சுறுத்திவரும் கொவிட்-19 நோய்த் தொற்றிலிருந்து …

  23. இராணுவத்தினரால் உருவாக்கப்பட்ட சேதன பசளை உற்பத்திகள் யாழ் மாவட்ட விவசாயிகளுக்கு அறிமுகம்! நச்சுத் தன்மையற்ற இயற்கைவழியில் இராணுவத்தினரால் உருவாக்கப்பட்ட சேதன பசளை உற்பத்திகள் யாழ் மாவட்ட விவசாயிகளுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. இன்று (புதன்கிழமை) மதியம் 1.30 மணிக்கு பலாலியில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாதுகாப்பு படைகளின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வாவினால் சேதன பசளை உற்பத்திகள்,கூட்டெருக்கள்,இலைக் கரைசல்கள் என்பன சம்பிரதாயபூர்வமாக விவசாயிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது. இலங்கையின் விவசாயத்திலே முழுமையாக சேதனப் பசளையினை உபயோகப்படுத்த வேண்டுமென்ற ஐனாதிபதியின் நோக்கத்திற்கமைவாக இராணுவத்தினரின் பங்களிப்புடன் தயாரிக்கப்பட்ட உற்பத்திகள…

  24. முகமாலையில் 316 ஏக்கர் காணி மக்களிடம் கையளிப்பு November 3, 2021 கிளிநொச்சி – முகமாலை பகுதியில், கண்ணிவெடி அகற்றப்பட்ட 316 ஏக்கர் காணி, இன்று (03) உத்தியோகபூர்வமாக மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கூட்டுறவுச் சங்கங்களின் இரண்டு தேங்காய் எண்ணெய் ஆலைகள், ஒரு தும்புத் தொழிற்சாலை, வெதுப்பகம் மற்றும் சேதனப் பசளை உற்பத்தி மையம் ஆகியனவும் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, கிராமிய வீடமைப்பு மற்றும் கட்டடவாக்க இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த, கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் உள்ளிட்டோர் கலந்துகொண்டு, குறித்த காணிகளை கையளித்துள்ளனர். யுத்த காலத்…

  25. வடமாகாண பாடசாலைகளுக்கு சிறப்பு விடுமுறை! வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை சிறப்பு விடுமுறை வழங்க மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா பணித்துள்ளார். வடக்கு மாகாண கல்வி அமைச்சுக்கு இதுதொடர்பான அறிவுறுத்தலை அவர் இன்று வழங்கியுள்ளார். நாளை (வியாழக்கிழமை) இந்துக்களின் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகின்ற நிலையில், பொது விடுமுறை நாளாகும். அதனால் மறுநாள் வெள்ளிக்கிழமையும் பாடசாலைகளுக்கு சிறப்பு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. நாளைமறுதினம் சிறப்பு விடுமுறை வழங்கப்படுவதனால் பதில் நாளாக வரும் நவம்பர் 13ஆம் திகதி சனிக்கிழமை பாடசாலைகள் இடம்பெறும் என்று மாகாண ஆளுநர் அறிவித்துள்ளார். https://athavannews.com/2021/1248157

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.