Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யாழ்.பேருந்து நிலையத்தில் கஞ்சா வைத்திருந்த குடும்பஸ்தர் கைது கஞ்சாவை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் குடும்பஸ்தர் ஒருவர் யாழ். பஸ் நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர் யாழ்ப்பாணம் கந்தர் மடத்தைச் சேர்ந்தவர் எனவும் 46 வயதுடையவர் எனவும் பொலிஸாரின் விசார ணையில் தெரியவந்துள்ளது. நபர் ஒருவர் கஞ்சாவை வைத்திருப்பதாக பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படை யில் யாழ் பொலிஸ்நிலையத்தின் உப பொலிஸ் பரிசோதகர் சிறிகஜன் யாழ் பஸ் நிலையத்துக்கு சென்று சோதனை நடத்தியவேளை 1.10 கிராம் நிறையுடைய கஞ்சாவை நுகர்வுக்காக கையிருப்பில் வைத்தி ருந்ததன் பேரில் குறித்த நபர் நேற்றிரவு 8.20 மணியளவில் கை…

  2. வன்னியில் போரில் சிக்குண்டுள்ள மக்கள் வெளியேறுவதற்கு வசதியாக இலங்கை அரசாங்கமும் தமிழீழ விடுதலைப் புலிகளும் போர் இடைவெளி ஒன்றை நடை முறைப்படுத்த சம்மதம் தெரிவிக்கவேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை கோரிக்கை விடுத்துள்ளது. அதனை அமெரிக்காவும் பிரிட்டனும் ஆதரித்துள்ளன. இலங்கை விவகாரம் குறித்து ஐ.நா வின் பாதுகாப்புச் சபையின் சம்பிரதாய பூர்வமற்ற, உத்தியோக பூர்வமற்ற விவாதம் மூடிய கதவுகளுடன் நேற்று முன்தினம் வியாழக்கிழமை நடைபெற்றது. அதன்பின்னர் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான அதிகாரி ஜோன் ஹோல்ம்ஸ் மனிதாபிமான போர் இடைவெளி ஒன்றுக்கு இரண்டு தரப்புகளும் சம்மதிக்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்தக் கோரிக்கையை அ…

  3. 7000 கார்களுடன் வந்த ஜப்பானிய கப்பல் அம்பாந்தோட்டையில் பணயமாக தடுத்து வைப்பு-நெருக்கடியில் அரசு அம்பாந்தோட்டை துறைமுகத்தில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பணியாளர்களால், பாரிய ஜப்பானிய கொள்க லன் கப்பல் ஒன்று பணயமாகப் பிடித்து வைக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்குவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. சீன நிறுவனம் பொறுப்பேற்றால், தமது வேலைகள் பறிபோகும் என்று, அம்பாந்தோட்டை துறைமுக பணியாளர்கள் கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், கடந்த 5ஆம் நாள் இரவு, அம்பாந்தோட்டைத் துறைமுகத்து…

  4. காணி அதிகாரங்கள் பகிரப்பட வேண்டியது அவசியமானது – விக்னேஸ்வரன் மாகாணசபைகளுக்கு காணி அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டுமேன வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார். மாகாண அபிவிருத்தி சார்ந்த அதிகாரங்கள் பெரும்பாலும் மத்திய அரசாங்கத்திடமே இருக்கிறது. காணி உள்ளிட்ட அதிகாரங்களை மத்திய அரசாங்கம் பகிர மறுப்பதால், இது சார்ந்த பிரச்சினைகளுக்கு மாகாண சபைகளால் தீர்வு காண முடியாத நிலை காணப்படுகிறது என்று விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார். http://globaltamilnews.net/archives/10218

  5. 4 கைதிகளின் உடல்களை அடக்கம் செய்வதா? இல்லையா? - தீர்ப்பு இதோ! மஹர சிறை மோதலில் உயிரிழந்த நான்கு பேரின் சடலத்தை தகனம் செய்ய வத்தளை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மஹர சிறை மோதலில் உயிரிழந்த 11 பேரின் பிரேத பரிசோதனைக்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவினால் தயாரிக்கப்பட்ட விசேட அறிக்கை இன்று (16) மஹர நீதவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. அதில் நான்கு பேரின் பூதவுடல்களை அடக்கம் செய்ய இடமளிப்பதா? இல்லையா? என்பது தொடர்பான தீர்ப்பு இன்று மதியம வழங்கப்படவிருந்த நிலையில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார். இந்த மோதல் காரணமாக 11 கைதிகள் உயிரிழந்த நிலையில் அவர்களில் 8 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்து. அதன்படி, குறி…

  6. புதிய மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் 64 பேருக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் எம்யுமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கொழும்பில் உள்ள ஐ.நா உயர்ஸ்தானிகராலயத்தின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தமிழ் அரசியல் கைதிகள் 64 பேருக்கு தொற்று! | NewUthayan

  7. உலகத் தமிழர்களிடம் தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார். இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்து இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் நேற்று ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ், ஈழத் தமிழரைப் பாதுகாக்க எந்த தியாகமும் செய்யத் தயாராக இருப்பதாக இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் மீது வானூர்தி மூலமாகவும், பீரங்கிகள் மூலமாகவும் குண்டுகளை வீசி படுகொலை செய்து வந்த ச…

  8. யாழ்ப்பாண சிங்கள ராணுவத்தின் தளபதி மகிந்த ஹத்துருசிங்கவின் கட்டளைப்படி கஜபாகு படைப்பிரிவின் இரண்டாவது கட்டளையிடும் அதிகாரியான மேஜர் பத்திரண தலமையிலான இராணுவக்குழுவே யாழ் உதயன் பத்திரிக்கையாலயத்தை எரித்ததாக சிங்கள இணையத்தளமான லங்கா ஈ நியூஸ் செய்தி வெளியிட்டிருக்கிறது. அது மேலும் தெரிவிக்கையில், மகிந்த ஹத்துருசிங்கவுக்கு மிகவும் நெருக்கமான மேஜர் பத்திரன, ஹத்துருசிங்க மனநோய் சிகிச்சை பெற்று வந்த வேளையில் அவருக்குத் தேவையான உதவிகளை வழங்கிவந்ததாகவும், இதனாலேயே அவரிடம் இந்த தாக்குதல் வேலை ஒப்படைக்கப்பட்டதாகவும் கூறப்பட்டிருக்கிறது. அச்செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, உதயன் பத்திரிக்கையாலயம் மீதான தாக்குதலுக்கு ஒரு சில வாரங்களுக்கு முன்னர் ஹத்துருசிங்க தலமையில் நடை…

  9. திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு சொந்தமான காணியை அபகரிக்க பௌத்த பிக்கு முயற்சி December 29, 2020 மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு சொந்தமான காணியை ‘மாதோட்ட’ விகாரையின் பிக்கு அபகரிக்க முயற்சித்து வருகின்றார். இந்நிலையில்,வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் இன்று குறித்த பகுதிக்குச் சென்று பார்வையிட்டுள்ளார். மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு சொந்தமான 5 ஏக்கர் காணி சைவ மங்கையர் கழகத்துக்கு 99 வருட குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டது. குறித்த காணியானது நீண்ட காலமாக திருக்கேதீச்சர ஆலயத்தின் பராமரிப்பில் இருந்து வந்துள்ளது. இக் காணியானது நாட்டில் ஏற்பட்ட இடப் பெயர்வு காரணமாக இராணுவம் அவ் இடத்தில் நிலை கொண்டது. அதன் பின்னர்…

  10. வன்னிப் பகுதிக்கு பத்திரிகையாளர்கள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது:எல்லைகள் அற்ற பத்திரிகையாளர் சங்கம் மீண்டும் புகார் வீரகேசரி வாரவெளியீடு 4/12/2009 9:50:05 AM - இலங்கையின் வடபகுதியில் குறிப்பாக ஆயிரக்கணக்கான தமிழ் பொதுமக்கள் சிக்குண்டிருக்கும் வன்னிப் பகுதிக்கு பத்திரிகையாளர்கள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்படுவதாக எல்லைகளற்ற பத்திரிகையாளர் சங்கம் மீண்டும் இலங்கை அரசின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது. வன்னியில் பாதுகாப்பு வலயத்திற்குள் இரண்டு பத்திரிகையாளர்கள் இறந்துள்ளனர். இது இலங்கை பாதுகாப்புப் படை பொதுமக்களுக்கு எதிராக யுத்த குற்றங்களை புரிகின்றது என்ற குற்றச்சாட்டுக்கு வலுவூட்டுவதாகவே உள்ளது. யுத்த வலயங்களில் பத்திரிகையாளர்கள் பாதுகாக்கப்பட வேண்டும்…

  11. அரசியலமைப்புக்கு முன்னர் தேர்தல்முறை மாற்றம்? (ரொபட் அன்­டனி) நல்­லாட்சி அர­சாங்­க­மா­னது புதிய அர­சி­ய­ல­மைப்பு வரைபை கொண்­டு­வ­ரு­வ­தற்கு முன்­ப­தாக தற்­போ­தைய அர­சி­ய­லமைப்பின் 20 ஆவது திருத்த சட்­ட­மாக தேர்தல் முறை­மாற்­றத்தை கொண்­டு­வ­ரு­வது குறித்து அவ­தானம் செலுத்­தி­யுள்­ள­தாக தெரி­ய­வ­ரு­கி­றது. புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்கும் பணிகள் மும்­மு­ர­மாக இடம்­பெற்று வரு­கின்ற நிலையில் அதி­லுள்ள பல்­வேறு விட­யங்கள் தொடர்பில் அர­சியல் கட்­சி­க­ளி­டையே இது­வரை முழு­மை­யான இணக்­கப்­பாடு எட்­டப்­ப­ட­வில்லை. எனினும் தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் அனைத்து அர­சி­யல்­கட்­சி­களும் பொது­வா­ன­தொரு இணக்­கப்­பாட்டில் இருக்­கின்­றன. இதன…

  12. A group of Tamil women, who were concerned about the genocide of Eelam Tamils in Sri Lanka, have staged a fast unto death in Chennai from last Monday (13th April, 2009). Twenty women are on fast unto death and another hundred are on continuous hunger strike. They are demanding UPA Chairperson Sonia Gandhi to take steps to stop the genocidal war in Sri Lanka. செவ்வி தமிழில் Get Flash to see this player. Get Flash to see this player. Courtesy:TamilNational.Com

    • 2 replies
    • 901 views
  13. இலங்கையின் எதிர்க்கட்சி தலைவருடனான சந்திப்பு மன்னார் மக்களுக்கு எந்தவிதமான பிரயோசனமும் இல்லாத ஒரு சந்திப்பாக அமைந்ததாக மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவரான அருட்தந்தை ஈ. செபமாலை அவர்கள் தெரிவித்துள்ளார். மன்னார் ஆயரின் முன்பாக மன்னார் பிரஜைகள் குழுவைச் சேர்ந்தவர்கள் ஞாயிற்றுக்கிழமை மன்னாருக்கு விஜயம் செய்த எதிர்க்கட்சிதலைவர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து அவரிடம் மன்னார் மாவட்ட மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து முறையிட்டிருக்கிறார்கள். பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டின் பேரில் மன்னாரில் காணாமல் போனர்களின் உறவினர்களும் தமது குறைகளை அங்கு முன்வைத்திருக்கிறார்கள். அது குறித்து பிரஜைகள் குழுவின் தலைவரான அருட்தந்தை இ . செபமாலை அவர்களிடம் கேட்டபோது, தாம் காணிகள் பிரச…

  14. அரசாங்கத்தை கவிழ்க்க சில ஊடகங்கள் முயற்சிக்கின்றன – பிரதமர் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு சில ஊடகங்கள் முயற்சிப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்த ஆண்டுக்குள் அரசாங்கத்தை கவிழ்ப்பதாக சில தரப்பினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாகவும் எனினும், அரசாங்கத்தை கவிழ்ப்பது யதார்த்தமாகாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறான தடைகள் ஏற்படுத்தப்பட்டாலும் அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்கள் திட்டமிட்டவாறு முன்னெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஹம்பாந்தோட்டை துறைமுகம் உள்ளிட்ட முதலீட்டு உடன்படிக்கைகள் குறித்து அனைத்து தரப்பினரையும் தெளிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். http://globaltamilnews.…

  15.  ‘வீதியில் இறங்கும் மாணவர்களுக்கு அருணாச்சலத்தின் அருமை தெரியாது’ ஜே.ஏ.ஜோர்ஜ் ‘பல்கலைக்கழகங்களின் அருமை தெரியாததன் காரணமாகவே பல்கலைக்கழக மாணவர்கள், வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவது மட்டுமன்றி தமது காலத்தை வீணடிக்கின்றனர். அவ்வாறானவர்களுக்கு பொன்னம்பலம் அருணாச்சலத்தின் வரலாற்றை எடுத்துக் கூறவேண்டும்’ என மேல் மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய தெரிவித்தார். சேர்.பொன்னம்பலம் அருணாச்சலத்தின் 93ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி செயலகத்தில் உள்ள அன்னாரது உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு நேற்று அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே…

  16. வடக்கு , கிழக்கு மாணவர்கள் இராணுவப் பயிற்சி பெற வேண்டும். அவர்களுக்கு தமிழ் பேசும் அலுவலர்களே பயிற்சியளிக்க வேண்டும். இல்லையேல் பயிற்சிகளை புறக்கணிக்க வேண்டும் என்று சி.வி. விக்னேஸ்வரன் எம்.பி தெரிவித்துள்ளார். 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இராணுவப் பயிற்சி வழங்கப்படும் என்ற பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகரவின் கருத்து தொடர்பிலேயே இதனை தெரிவித்தார். இது தொடர்பான அவரது கேள்விக்கு பதில் அறிக்கையில், https://newuthayan.com/வட-கிழக்கு-மாணவர்கள்-இரா/ See more Previous article

  17. உலகத் தமிழ் உறவுகளே! உங்கள் அன்புப் பிள்ளை சீமான் பேசுகின்றேன் என விளித்து, புலம் பெயர் தமிழ மக்களிடம் இரு தடவைகள் இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசினார் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுச் சிறைவைக்கபட்ட, இயக்குனரும், தமிழுணர்வாளருமாகிய சீமான் ஒலிவடிவ உரையொன்றில் பேசுகின்றார். உரையின் சுருக்க எழுத்து வடிவமும், ஒலிவடிவமும் முறையே கீழேயுள்ளன. உலகத்தமிழ் சொந்தங்களே! நாம் பிறந்த சொந்த மண்ணிலே உறவுகளின் குருதி தினமும் ஆறாய்ப் பெருகி ஓடுகின்றது. சுpங்கள பேரினவாதமும் இந்திய வல்லாதிக்க சக்திகளும் குளிர்காய்ந்துகொண்டிருக்கி

    • 0 replies
    • 1.3k views
  18. இராஜதந்திர விலக்குரிமை இருந்தாலும், நோர்வே தூதுவருக்கு எதிராக வழக்குத் தொடுக்க முடியும் என்று கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சிறிலங்காவுக்கான நோர்வே தூதுவர் ஹில்டே ஹரால்ட்ஸ்டட், முன்னாள் நோர்வே அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம், நோர்வே வெளிவிவகார அமைச்சர் ஜோனாஸ் கார் ஸ்ரோர் உள்ளிட்ட 11 நோர்வே அதிகாரிகளுக்கு எதிராக, 98 மில்லியன் ரூபா நட்ட ஈடு கோரி கலாநிதி குமார் ரூபசிங்க சமர்ப்பித்துள்ள வழக்கின் மீதான விசாரணையின் போதே, கொழும்பு மாவட்ட நீதிபதி அமலி ரணவீர இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். சிறிலங்காவில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான திட்டங்களுக்கு 2008இல் குமார் ரூபசிங்கவின் நிறுவனத்துடன் நோர்வே மற்றும் பிரித்தானிய தூதரகங்களின் சார்பில் உடன்பாடு செய்து கொள்…

  19. ஈழத் தமிழர்கள் படும் இன்னல் கண்டு அவர்களுக்காக நீங்கள் குரல் கொடுத்து வருவதற்கு கனடா வாழ் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கனடியத் தமிழர் பேரவை நன்றி கூறுகின்றது. அன்னை இந்திராவின் பின் நீங்கள் ஈழத்தமிழ் மக்களின் இன்னல் கண்டு அவர்கள் துயர் துடைக்க நீங்கள் விழைவது - இக்கட்டான ஒரு வரலாற்றுக் காலகட்டத்தில் இருக்கும் ஈழத் தமிழ் மக்களுக்கு, அவர்கள் எதிர்காலம் பற்றிய நம்பிக்கையினைத் தருகின்றது" என்று கனடிய தமிழர் பேரவை தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 392 views
  20. சோனியா இன்று சென்னை வருகை: தீவுத் திடலில் தீவிர கண்காணிப்பு First Published : 10 May 2009 12:38:46 PM IST Last Updated : 10 May 2009 12:48:20 PM IST சென்னை, மே 10: தேர்தல் பிரசாரத்துக்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று மாலை சென்னை வருகிறார். தமிழகம், புதுவையில் தேர்தல் பிரசாரத்துக்காக சென்னைக்கு கடந்த 6-ம் தேதி சோனியா காந்தி வருவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், திடீரென அவரது வருகை மற்றும் பிரசார நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. எனினும், சென்னை தீவுத்திடலில் அமைக்கப்பட்டுள்ள, குண்டு துளைக்காத பிரமாண்ட பொதுக்கூட்ட மேடை, நிகழ்ச்சிகளைப் பார்வையாளர்கள் காணும் வகையில் அமைக்கப்பட்ட எலக்ட்ரானிக் திரைகள் மற்றும் இதர ஏற்பாடுகள் அகற்றப்படவில்லை. …

  21. நாட்டு மக்களிடத்தில் எவ்வித அக்கறையுமில்லாது வாழ்க்கைச் சுமையை அதிகரிக்கும் அரசாங்கம் தனது பிரச்சினைகளை மூடிமறைக்க பல காரணங்களை காலத்திற்கு காலம் கூறி தற்போது நூல் அறுந்த பட்டம் போல் உள்ளதென ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான கயந்த கருணாதிலக தெரிவித்தார். இராஜகிரியவில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், மஹிந்த சிந்தனை அரசாங்கம் நாட்டு மக்களிடம் எவ்வித அக்கறையும் இல்லாது மின் கட்டணம், எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் உட்பட அன்றாட வாழ்க்கைச் சுமைகளை அதிகரித…

  22. விஜ­ய­கலா ஹெலியில் பாரா­ளு­மன்றம் வரு­வது அர­சாங்­கத்­துக்கு தெரி­ய­வில்­லையா.? (க.கம­ல­நாதன்) பாரா­ளு­மன்ற உறுப்­பினர் விமல் வீர­வன்­சவை வாகன துஷ்­பி­ர­யோக குற்­றச்­சாட்டின் பேரில் கைது செய்­துள்ள நல்­லாட்சி அர­சாங்­கத்­தி­ன­ருக்கு யாழ். மாவட்டப் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் விஜ­ய­கலா மகேஸ்­வரன் ஹெலி­கொப்­டரில் பாரா­ளு­மன்றம் வரு­வது தெரி­ய­வில்­லையா என தேசிய சங்க சபை கேள்வி எழுப்­பி­யது. சிறு தவ­றுக்­காக விமல் வீர­வன்ச சிறையில் அடைக்­கப்­ப­டுவதை விடவும் மத்­திய வங்கி விவ­கா­ரத்தில் நேரடித் தொடர்­பு­டைய பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­கவும் முன்னாள் மத்­திய வங்கி ஆளு­ந­ருமே ஒரே சிறையில் அடைக்­கப்­பட வேண்­டி­ய­வர்கள் என்றும் தேசிய …

  23. நீதி, சமாதானத்தை நிலைநாட்ட அரசாங்கம் தன்னை அர்ப்பணித்துள்ளது பயங்கரவாதத்தை தோற்கடித்து நாடு சட்டத்தின் ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது எனவும் நீதியையும் சமாதானத்தையும் பலப்படுத்த அரசாங்கம் தம்மை அர்ப்பணித்துள்ளதாகவும் ஆளும் கட்சியின் பிரதம கொரடா அமைச்சர் தினேஷ் குணவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்தார். சட்டத்தின் முன்னிலையில் சகலரும் சமம் என தெரிவித்த அவர் கே.பி.க்கு எதிராக குற்றச்சாட்டு இருந்தால் அதனைப் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். இலங்கை இந்திய உடன்படிக்கையின் கீழ் பாரிய குற்றவாளிகளுக்கும் ஐ. தே. க. மன்னிப்பு வழங்கியது என தெரிவித்த அமைச்சர் தாய்நாட்டுக்கு எதிராக செயற்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியினருக்குக்கூட அரசாங்கம் …

    • 0 replies
    • 395 views
  24. கடந்த காலத் தவறுகளை சரிசெய்வதற்கு ஐ.நா.வுக்கு சந்தர்ப்பம்- நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/Minister-ManikaVasagar-Transnational-Government-of-Tamil-Eelam.jpg கடந்த காலத் தவறுகளை சரி செய்வதற்கு ஐ.நா.வுக்கு ஒரு சந்தர்ப்பம் வாய்த்துள்ளதாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது. அந்தவகையில், உலகெங்கும் போரினாலும் இனப் படுகொலைகளினாலும் பாதிக்கப்பட்டவர்கள் தமக்கான நீதியினைப் பெற்றுக்கொள்வதில் ஐ.நா.வின் தேவை தற்போது கேள்விக் குறியாகியுள்ள நிலையில், இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் முன்பு நிறுத்துவதன் மூலம் கடந்த காலத் தவறுகளை சரிசெய்வதற்கு ஐ.நா.வுக்கு தற்போது வாய்ப்புக் கிட்டியுள்ளத…

    • 0 replies
    • 179 views
  25. கனேடிய மக்களே குயின்ஸ் பார்க்குக்கு விரையுங்கள். இன்று சிங்களவர்களால் வி.புலிகளுக்கு எதிராக ஒர் ஊர்வலம் ஒன்றை நடாத்த திட்டமிடப்பட்டுள்ளதாக வானொலி செய்தி ஒன்று கூறுகிறது. எனவே இவர்களின் போராட்டத்தை முறியடியுங்கள் உறவுகளே. அத்தோடு கிங்ஸ்ரன் வீதியில் உள்ள புத்த கோவில் ஒன்று அடித்து நொருக்கப்பட்டுள்ளது. இதன் மறுதலிப்பாக கொழும்பில் பதட்ட நிலையை தோற்றுவித்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.