Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 13 Oct, 2025 | 11:57 AM இணையத்தில் வேகமாக அதிகரித்து வரும் நிதி மோசடி நடவடிக்கைகள் தொடர்பில் இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு (SLCERT) எச்சரிக்கை விடுத்துள்ளது. நிதி மோசடிகள் குறித்து கிடைக்கபெறும் பெரும்பாலான முறைப்பாடுகள் வெளிநாட்டு பங்குச் சந்தைகளில் அதிக இலாபம் கிடைக்கும் எனக் கூறி மக்களை ஏமாற்றும் நிதி மோசடிகள் என கணினி அவசர தயார்நிலை குழுவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியாளர் சாருக்க தமுனுபொல தெரிவித்தார். இந்த நிதி மோசடிகள் மூலம் 10 இலட்சம் முதல் 3 கோடி ரூபாய் வரையில் நிதி மோசடி செய்யப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் அளித்த முறைப்பாடுகளில் தெரியவந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். மேலும், இவ்வகையான இணைய நிதி மோசடிகளிலிருந்து பாதுகாத்துக்கொள்ள தேசிய அடையா…

  2. வவுனியா விமானப்படை முகாமில் உள்ள ராடர் மையத்தை அழிக்கும் நோக்கில் நேற்று முன்தினம் செயற்பட்ட விடுதலைப்புலிகளின் தற்கொலை தாக்குதல் அணியினர் வன்னி படைத்தலைமையகத்திற்கு அருகில் உள்ள சமனலகுளம் தமிழ் கிராமத்தில் இரண்டு நாட்கள் தங்கியிருந்தனர் என பாதுகாப்புத் தரப்பினருக்கு தகவல் வெளியாகியுள்ளது. வன்னி பாதுகாப்பு தலைமையகத்திற்கு கிழக்கில் காட்டு பகுதியை எல்லையாகக் கொண்ட சமனலகுளத்தில் உள்ள வீடு ஒன்றில் அங்கிருந்தவர்களை வெளியேற்றி விட்டு இவர்கள் தற்காலிகமாக தங்கியிருந்தாகத் தெரிவிக்கப்படுகிறது. செய்மதி தொலைபேசியூடாக வன்னியில் உள்ள புலித்தலைவர்களுடன் இந்த கரும்புலிகள் தொடர்புகளைக் கொண்டிருந்தனர் எனவும் தகவல்கள் கிடைத்துள்ளன. கரும்புலிகள் பயன்படுத்தியதாகக் கூறப்படும் செய்ம…

  3. கிளிநொச்சி மாவட்டத்தின் பயன்மிக்க விளை நிலங்களான மலையாள புரம், கிருஷ்ணபுரம் பகுதிகளிலுள்ள தமிழ் மக்களின் சுமார் 105 ஏக்கர் இற்கும் மேற்பட்ட விவசாய நிலங்களை கையகப்படுத்தியுள்ள படையினர், அதனை விவசாய நடவடிக்கைகளுக்குத் தயார்படுத்தி வருகின்றனர். பாரம்பரியமாக அங்கு விவசாயத்தில் ஈடுபட்டு வந்த தமிழ் மக்களை அந்தப் பக்கமே வரக் கூடாது என்று விரட்டியடித்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது: மலையாளபுரம், கிருஷ்ணபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள காணிகளில் மக்கள் கடந்த பல வருடங்களாக விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த பல மாதங்களாக நிலவிய வறட்சி ஓரளவுக்கு நீங்கி மழை பெய்திருப்பதால் தமது காணிகளை கால போகத்துக்கு தயார் படுத்தும் நோக்கத்துடன் விவசாயிகள் கடந்த ஓ…

  4. சாதாரண பரீட்சையில் சித்தியடையாத மாணவர்களும் உயர்கல்வியை தொடரலாம்! 24-05-2016 03:34:00 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடையாத மாணவர்களும் உயர் கல்வியைத் தொடர சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு முஸ்லிம் மகளிர் பாடசாலை பரிசளிப்பு விழாவில் நேற்று பங்கேற்ற போது பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், சாதாரண தரப் பரீட்சையில் சித்தியெய்தாத காரணத்தினால் மட்டும் உயர் கல்வியைத் தொடரக்கூடிய சந்தர்ப்பத்தை முடக்கிவிடக் கூடாது. சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளின் பின்னரும் அனைத்து மாணவ மாணவியரும் பாடசாலையில் தொடர்ந்தும் கல்வி கற்க கூடிய வகையில் சட்டம் இயற…

  5. அக்கராயனில் புலிகள் நடத்தியது "வாயு" தாக்குதல்? பீதியில் சிறிலங்கா படை [புதன்கிழமை, 17 செப்ரெம்பர் 2008, 06:07 மு.ப ஈழம்] [செ.விசுவநாதன்] கிளிநொச்சி மாவட்டம் அக்கராயன் மற்றும் வன்னிவிளாங்குளம் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற மோதல்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய "வாயு" தாக்குதல்களினால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு 16-க்கும் அதிகமான சிறிலங்கா படையினர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. கொழும்பு ஆங்கில ஊடகமான டெய்லி மிரரில் இது தொடர்பாக இடம்பெற்றுள்ள செய்தி: கிளிநொச்சி மாவட்டம் அக்கராயன் மற்றும் வன்னிவிளாங்குளம் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற மோதல்களில் புலிகள் ஒருவகையான "வாயு"வை பயன்படுத்தி தாக்குதல் நடத்தினர். இதனால் பட…

    • 5 replies
    • 2.7k views
  6. மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாலியாறு கிராமத்தில் பிரதேசச் செயலாளரும், அயல் கிராம அலுவலரும் இணைந்து மக்களின் காணிகளை அபகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். 1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தேவன் பிட்டி, பாலியாறு கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கு வேளாண்மைச் செய்கைக்காக ஓர் ஏக்கர் வீதம் வழங்குவதற்கு உலக உணவுத்திட்ட செயலகத்தின் மூலம் காடுகள் துப்புரவாக்கி மக்களுக்கு வழங்குவதற்கான அனுமதியும் பெறப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. நாட்டில் ஏற்பட்ட யுத்த சூழ்நிலையால் இடம் பெயர்ந்து சென்ற மக்கள் மீள் குடியேற்றம் செய்யப்பட்டனர். குறித்த மீள் குடியேற்றத்தின் பின்னர் பல முறை அரச அதிகாரிகளி…

  7. (ஆர்.யசி) "கொவிட் -19" கொரோனா வைரஸ் தொற்றுநோய் தாக்கத்தை அடுத்து நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளில் எரிபொருள் தட்டுப்பாட்டையும், மருந்து பொருட்களின் தட்டுப்பாட்டையும் நாடு சந்திக்க நேர்ந்துள்ள நிலையில் இந்தியா வசமுள்ள திருகோணமலை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் எண்ணெய் குதங்களை தற்காலிகமாக பயன்படுத்திக்கொள்ள இந்திய அரசாங்கத்தின் அனுமதியை கோருகின்றது இலங்கை அரசாங்கம். அத்தோடு தெரிவுசெய்ய அவசியமான மருந்து வகைகளையும் இந்தியாவிடம் இருந்து பெற்றுக்கொள்ள அரசாங்கம் முயற்சிக்கின்றது. "கொவிட் -19" கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவல் காரணமாக நாட்டில் பாரிய பொருளாதார நெருக்கடியை சந்திக்க நேர்ந்துள்ளது. அத்தியாவசிய பொருட்களில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் அத்தியாவ…

    • 0 replies
    • 348 views
  8. மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் சோதனை என்ற போர்வையில் முன்னாள் பெண் விடுதலைப் புலிகளின் வீடுகளுக்கு இரவு நேரங்களில் இராணுவத்தினரும் இராணுவ புலனாய்வாளர்களும் செல்வதனால் அந்த பெண்களும் அவர்களின் குடும்பத்தினரும் அச்சத்தில் உறைந்துள்ளனர். குறிப்பாக புனர்வாழ்வு பெற்று வீடு திரும்பிய திருமணமாகாத முன்னாள் விடுதலைப் புலி பெண் போராளிகளின் வீடுகளுக்கே இவர்கள் இரவு நேரங்களில் சென்று, குறிப்பிட்ட அந்த பெண் அங்கு உள்ளாரா என சோதனை செய்வதுடன் சிலரை தங்களுடைய முகாமிற்கு விசாரணைக்காக வருமாறும் அழைப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு புனர்வாழ்வு பெற்று வீடு திரும்பிய முன்னாள் ஆண் போராளிகளை சோதனை செய்ய அவர்களின் வீடுகளுக்கு பகல் நேரங்களில் செல்கின்ற இராணுவத்தினர், பெண் போராளிகள…

  9. மஹிந்த ராஜபக் ஷவின் பாதுகாப்பினை குறைக் கும் சூழ்ச்சித் திட்டத்தின் பின்னணியில் இந்தியா மற்றும் மேற்குலக சக்திகளே உள்ளன என்று பாராளுமன்ற உறுப்பினர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். ராஜகிரியவில் அமைந்துள்ள என்.எம்.பெரேரா நிலையத்தில் நேற்று இடம்பெற்ற கூட்டு எதிர் கட்சியின் ஊடக சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே பாராளுமன்ற உறுப்பினர் கெஹேலிய ரம்புக்வெல்ல மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்தும் கூறுகையில், மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு குறைப்பு விவகாரம் தொடர்பில் அரசாங்கம் பல்வேறு காரணங்களை கூறி வருகின்றது. ஏனைய தலைவர்களை போன்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை குறிப்பிட முடியாது . ஆசிய வலயத்தை எடுத்துக் கொண்டாலும் மஹிந…

    • 2 replies
    • 223 views
  10. ஈழத் தமிழர்களுக்காக உண்ணாவிரதம்-திரளும் புதுக் கூட்டணி!- தட்ஸ் தமிழ் சென்னை: ஈழத் தமிழர்களைக் காக்கக் கோரியும், அவர்கள் மீதான ராணுவ அடக்குமுறையைக் கண்டித்தும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஏற்பாடு செய்துள்ள உண்ணாவிரதப் போராட்டம் தமிழக அரசியல் அரங்கில் பரபரப்பையும், பல எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது. தேரத்ல் நெருங்க நெருங்க தமிழக அரசியலில் என்னென்ன கூட்டணிகள், எப்படி எப்படி உருவாகப் போகிறதோ என்ற எதிர்பார்ப்பு எகிறிக் கொண்டே போகிறது. டீக் கடை, சலூன் கடை, பஸ் ஸ்டாப், அலுவலகங்கள் என எங்கு பார்த்தாலும் இதுகுறித்த அலசல்களில் வாக்காளப் பெருமக்கள் படு மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். விஜயகாந்த்துடன் யார் சேருவார்கள், பாமக என்ன ஆகும், கம்யூனிஸ்டுகளை யார் சேர்த்துக் கொள்வா…

  11. யுத்தத்தின் பின்னர் பிளக்கும் கோதபாயவும் அமெரிக்காவில் சந்தித்தனர் – விக்கிலீக்ஸ் 28 அக்டோபர் 2012 விசேட தமிழாக்கம் குளோபல் தமிழ்ச் செய்திகள் யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் இலங்கைக்கான அமெரிக்க முன்னாள் தூதுவர் ரொபர்ட் பிளக்கும், பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவும் அமெரிக்காவில் சந்தித்ததாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கை;கான அமெரிக்கத் தூதரக அதிகாரிகளினால் அந்நாட்டு ராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி வைத்த அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. பெருமளவலான இடம்பெயர் மக்களை துரித கதியில் மீள் குடியேற்ற வேண்டுமென ரொபர்ட் பிளக், பாதுகாப்புச் செயலாளரிடம் கோரியுள்ளார். தமிழ் சமூகத்துடன் அரசியல் நல்லிணக்கம் ஏற்படுத்திக் கொள்ள…

  12. கொவிட்-19இன் அச்சம் இன்னும் நீங்கவில்லை என்பதால், இருமல், காய்ச்சால் பாதிக்கப்பட்டோர், புகையிரதங்களில் பயணிக்கவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக கருத்துத் தெரவித்து ரயில்வே திணைக்களத்தின் பொதுமுகாமையாளர் திலந்த பெர்ணான்டோ, பயணிகளின் பாவனைக்காக, 23 புகையிரதங்கள் இயங்க ஆரம்பித்துள்ளதாகவும் இவை, விசேடமாக அரசாங்க உத்தியோகத்தர்களுக்காகவும் அத்தியாவசிய சேவை பணியாளர்களுக்காவும் என, கொழும்பு மாவட்டத்துக்குச் செல்லும் மற்றைய மாகாணங்களைச் சேர்ந்தவர்களுக்காகவே இயக்கப்படுவதாகவும் அவர் கூறினார். எனவே, ரயில்லே நிலையத்துக்கு வருகை தருவோர், உகந்த ஆவணங்களைக் கொண்டிருக்கவேண்டும் என்றும் பருவக்காலச் சீட்டைக் கொண்டிருப்போர், இந்த மாதத்துக்கென்று புதுப்பிக்கத் தேவையில்…

    • 0 replies
    • 307 views
  13. 26 Nov, 2025 | 06:34 PM யாழ். நெடுந்தீவிலிருந்து உயர்தரப் பரீட்சை விடைத்தாள்கள் மீண்டும் வட மாகாண கல்வி அமைச்சுக்கு விமானப்படை ஹெலிகொப்டர் மூலம் கொண்டுசெல்லப்பட்டது. சீரற்ற காலநிலை காரணமாக வட மாகாணத்தின் நெடுந்தீவில் அமைந்துள்ள தேர்வு மையத்திலிருந்து க.பொ.த. உயர்தரப் பரீட்சை விடைத்தாள்கள் இலங்கை விமானப்படையினரால் இன்று (26) விமானப்படைக்குச் சொந்தமான பெல் 212 ஹெலிகொப்டர் மூலம் வட மாகாண கல்வி அமைச்சு அலுவலகத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டது. நெடுந்தீவிலிருந்து வடக்கு கல்வி அமைச்சுக்கு ஹெலிகொப்டரில் கொண்டுசெல்லப்பட்ட உயர்தரப் பரீட்சை விடைத்தாள்கள் | Virakesari.lk

  14. மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்த அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச பொலிஸாரின் உதவியைப் பெறவேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க அரசிடம் நேற்று நாடாளுமன்றில் வேண்டுகோள் விடுத்தார். இலங்கைப் பொலிஸாரின் விசாரணை மீது நம்பிக்கை வைக்க முடியாது என்றும் அவர் சொன்னார். மேற்படி குண்டுத் தாக்குதல் தொடர்பாக விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு உரையாற்றியபோது ரணில் இது தொடர்பாக மேலும் கூறியவை வருமாறு: ஜானக பெரேராவுக்கு உரிய முறையில் பாதுகாப்பு வழங்கப்படாமையே அவர் கொல்லப்பட்டமைக்குக் காரணம். இவருக்கு புலிகளிடமிருந்தும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளிடமிருந்தும் கொலை அச்சுறுத்தல் உள்ளது என்று நாம் பாதுகாப்பு அமைச்சிடம் தெரிவித்த…

  15. கடந்த சனிக்கிழமை இலங்கையில் இருந்து சென்ற 44 அகதிகள், தாம் சென்ற படகில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக இந்தோனேஷியாவில் தவித்துக் கொண்டிருந்த நிலையில் அவர்களை மீண்டும் அவுஸ்திரேலியாவிற்கு அனுப்பி வைக்க இந்தோனேஷிய அதிகாரிகள் தீர்மானம் எடுத்திருப்பதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இவர்கள் சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முற்பட்டுள்ளதாக லோக்ங்க (Lhoknga) மாவட்ட இராணுவத் தலைமை அதிகாரி தாருல் அமிக் தெரிவித்துள்ளார். குறித்த படகை சோதனைக்குட்படுத்திய போது முதியவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி தாய் ஒருவர் இருந்ததாகவும், தகுந்த பயணச்சீட்டுகள் கூட இவர்களிடம் இல்லை எனவும் கடற்படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இல…

    • 0 replies
    • 361 views
  16. 'உடுத்த உடுப்பு கூட இல்லை' - திட்வா புயலில் வீடு இழந்த குடும்பம் சந்திக்கும் துயர நிலை கட்டுரை தகவல் ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ''என் கணவர் கொழும்புல கஷ்டப்பட்டு வேலை செய்து, சாப்பிடாமல் கூட இருந்து அதிகாலை 3 மணிக்கு எல்லாம் போயிட்டு தான் கஷ்டப்பட்டு இந்த வீட்டை பெரிய வீடாக கட்டி எங்களையும் சந்தோஷமாக வைத்திருந்தாரு. இப்போ வீடு வாசல் இல்லாமல் கஷ்டப்பட்டு கொண்டிருக்கின்றோம்.'' என வீட்டை இழந்து தவிர்க்கும் கோகிலவதனி தெரிவிக்கின்றார். மாத்தளை மாவட்டத்திற்கு உட்பட்ட கல்மடுவ பகுதியில் வசித்து வருபவர் கோகிலவதனி. மூன்று பிள்ளைகளுக்கு தாயான கோகிலவதனியின் கணவர் தயாளன், கொழும்பில் கூலித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றார். திட்வா புயலின் தாக்கத்தி…

  17. தனது கட்சியின் ஆயுதப் பிரிவு உறுப்பனர்கள் 300 பேர் இராணுவத்தல் இணைந்து கொள்ளவிருக்கின்றனர் என்று இனத் துரோகி விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளான். சிங்கள ஊடகமொன்றிற்கு வழங்கியுள்ள பேட்டி ஒன்றிலேயே அவன் இதனைத் nரிவித்திருக்கிறான். அரசின் இராணுவப் படையிலும் சிவில் பாதுகாபப்புப் பிரிவிலும் தனது கட்சியின் உறுப்பினர்கள் இணைந்து கொள்ளவுள்ளனர். இதற்கு அரசின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. தனது கடசியின் ஆயுதப் பிரிவு உறுப்பினர்க்ள் தற்போது தங்களுக்கான ஆவணங்களைத் தயார்ப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். முதல் கட்டமாக இராணுவப் பிரிவில் 300 பேர் ஆயதப்பிரிவு உறுப்பினகளாக இணைந்து கொள்வர். ஏனைய அனைவரும் படிப்டியாக சேர்த்துக் கொள்ளப்படுவர். என்றும் அவ்வூடகத்திற்கு மேலும் தெர…

  18. [size=4][/size] [size=4]By Priyarasa 2012-11-06 11:36:53[/size] [size=4]ஆனைக்கோட்டை புளியங்கிணற்றடி பிள்ளையார் ஆலயத்தில் இருந்த சுவாமி வாகனங்கள் இரண்டு திருடப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஆலய நிர்வாகத்தினரால் முறையிடப்பட்டுள்ளது. இந்த வாகனகள் ஆலய வாகன சாலையில் வைக்கப்பட்டு இருந்ததாகவும் இதனை ஆலயத்தினுள் நுழைந்த திருடர்கள் மிகவும் நூதனமான முறையில் திருடிச் சென்றுள்ளதாகவும் தெரியவருகின்றது. ஆலய வாகன சாலையில் வைக்கப்பட்டு இருந்த குதிரை வாகனம் மற்றும் இடப வாகனம் என்பனவே இவ்வாறு திருடப்பட்டுள்ளன. இதுதொடர்பில் மானிப்பாய் பொலிசார் தீவிர புலன் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளார்கள்.[/size] [size=4]http://www.virakesar...al.php?vid=1484[/size]

  19. Editorial / 2025 டிசெம்பர் 18 , பி.ப. 01:45 - 0 - 60 கண்டி, கம்பளையில் வெள்ள அனர்த்தத்தினால் அதிகம் பாதிக்கப்பட்ட கெலியோயா, எல்பிட்டிய மக்களுக்கு அடைக்கலம் கொடுத்த எல்பிட்டிய பொத்துகல் விகாரைக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் புதன்கிழமை (17) அன்று விஜயம் மேற்கொண்டு அதன் விஹாரதிபதி நாயக்க ஹாமதுருவை சந்தித்து நிவாரண உதவிகளை வழங்கி வைத்தார். இந்நிகழ்வின் போது, வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை இன வேறுபாடுகளுக்கு அப்பால் 10 நாட்களுக்கு மேல் தங்குமிட வசதிகளை வழங்கிய பெளத்த விகாரையின் விகாரதிபதிக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் றிஷாட் பதியுதீன் உள்ளிட்ட குழுவினர் நன்றியை தெரிவித்துக்கொண்டதுடன், …

  20. இலங்கை யுத்தம் உறுமுகிறது இந்தியா * ஆனால் முடிவு என்ன? விடுதலைப்புலிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் இராணுவ நடவடிக்கையை தடுத்துநிறுத்துவதற்கான இந்தியாவின் அரசியல் அழுத்தம் இலங்கை அரசாங்கத்தின் தீர்மானத்தில் அதிகளவு மாற்றத்தை ஏற்படுத்தாது. ஏனெனில், ஆசியாவின் நீண்டகாலக் கிளர்ச்சிகளிலொன்றான இந்தப் பிரச்சினையை தன்னால் முடிவுக்கு கொண்டுவர முடியுமென்று இலங்கை அரசு அதிகளவுக்கு நம்புகின்றது. உள்நாட்டில் தமிழ் அரசியல்வாதிகளின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் 1980 களில் மேற்கொண்ட அனர்த்தத்தை ஏற்படுத்திய தலையீட்டை திரும்பவும் மேற்கொள்ள இந்தியா தயங்குவதுடன் இராணுவ நடவடிக்கையை இலங்கை சுதந்திரமாக முன்னெடுக்க விட்டுள்ளது. இந்த இராணுவ நடவடிக்கையானது ஜனாதிபதி மகிந்த ராஜப…

    • 0 replies
    • 883 views
  21. தடுப்பிலுள்ள முன்னாள் போராளிகள் குடும்பங்களுக்கு சிங்களத்தில் கடிதங்கள் - பெற்றோர் திண்டாட்டம் 11 நவம்பர் 2012 தடுப்பிலுள்ள முன்னாள் போராளிகளின் குடும்பங்களுக்கு அனுப்பப்படுகின்ற கடிதங்கள் தனிச் சிங்களத்தில் உள்ளதால் பெற்றோர் செய்வதறியாது திணறுவதாக கூறப்படுகிறது. இறுதிக்கட்டப் போரின் பின்னர் இராணுவத்திடம் சரண்அடைந்த முன்னாள் போராளிகளில் பலர் இன்னமும் தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலரை விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் தொடர்பான விவரங்களைக் கோரி சிறைச்சாலை அதிகாரிகளால் உறவினர்களுக்குக் கடிதங்கள் அனுப்பப்படுகின்றன. அனுப்பப்படும் கடிதங்கள் அனைத்தும் தனிச் சிங்கள மொழியில் காணப்படுவதால் அதை வாசித்து அதில் உள்ள விடயங…

  22. திருகோணமலையில் அமெரிக்காவின் தளம் அமைக்கப்படவுள்ளதோடு, இதன்மூலம் தெற்காசியாவின் பாதுகாப்பை தனது அதிகாரத்தின் கீழ் கொண்டுவர அமெரிக்கா முயற்சிப்பதாக சமசமாஜக் கட்சியின் பொதுச் செயலாளர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாடொன்றில் உரையாற்றுகையிலேயே பேராசிரியர் திஸ்ஸ விதாரண மேற்கண்டவாறு கூறினார். "மெகா பொலிஸ் " அபிவிருத்தி திட்டம் வடக்கில் முன்னெடுக்கப்படவிருந்தது. ஆனால் அரசாங்கம் அதனை திட்டமிட்டு திருகோணமலைக்கு இடமாற்றியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் திருகோணமலை துறைமுகத்தை அமெரிக்காவுக்கு தாரைவார்ப்பதாகும். அமெரிக்காவின் 7 ஆவது கடற்படையின் முகாமொன்று திருகோணமலை துறைமுகத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது. உலகம் பூர…

  23. ”சமஸ்டி முறையிலான அரசியல் தீர்வை தமிழரசுக் கட்சி கைவிடாது” தமிழ் மக்களின் மிக முக்கிய கோரிக்கையான சமஸ்டி முறையிலான அரசியல் தீர்வை இலங்கை தமிழரசுக் கட்சி ஒருபோதும் கைவிடாது என பாராளுமன்ற உறுப்பினர் இளையதம்பி சிறிநாத் தெரிவித்தார். மட்டக்களப்பில் உள்ள அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பிராந்திய அரசியலில் இந்தியாவை மீறி எந்த விடயங்களையும் செய்ய முடியாது என்பது கடந்த கால அரசியல் போராட்ட வரலாற்றில் எங்களுக்கு நன்றாக தெரியும். எனவே குறைந்த தீர்வாக இந்தியா கொண்டு வந்த 13வது திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள மாகாண சபை அதிகாரத்தை பெற்று அதை சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டு அடுத்த கட்ட நகர்வுகளை செய்ய வேண்டும். அதேவேளை தமிழ் மக…

  24. ஜனாதிபதி மஹிந்த கசகஸ்தானுக்கு விஜயம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் கசகஸ்தானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். இந்த விஜயத்தின்போது 24 நாடுகளின் அங்கத்துவத்தைக் கொண்ட ஆசிய தொடர்புகள் நம்பிக்கையை கட்டியெழுப்பும் அமைப்பின் மாநாட்டின் அவதானிப்பு நாடாக இடம்பெறுவது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுக்கவுள்ளார். அத்துடன் கசகஸ்தான் நாட்டின் ஜனாதிபதி உள்ளிட்ட முக்கியஸ்தர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதுடன் இருதரப்பு உறவுகளை கட்டியெழுப்புவது குறித்தும் கலந்துரையாடவுள்ளார். கசகஸ்தான் அரசாங்கத்தின் யோசனைக்கு அமையவே இந்த ஆசிய தொடர்புகள் நம்பிக்கையை கட்டியெழுப்பும் அமைப்பு 1992 ஆம் …

    • 2 replies
    • 341 views
  25. போரில் மஹிந்த ராஜபக்ஷே வெற்றி பெறவில்லை. போரில் அநியாயமே நடந்தது போரில் மஹிந்த ராஜபக்ஷேவோ , தமிழ் மக்களோ , சிங்கள மக்களோ வெற்றி பெறவில்லை. போரில் அநியாயமே நடந்தது. தற்போது சமாதானம் நிலவுகின்றது. அந்த சமாதானம் தொடர அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என வடமாகாண ஆளூநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்து உள்ளார். வலி. வடக்கில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் மீள குடியமர அனுமதி பத்திரம் வழங்கும் நிகழ்வு சனிக்கிழமை காங்கேசன்துறை புகையிரத நிலையம் அருகில் நடைபெற்றது. அந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் எமக்கு கூறி இருக்கின்றார்கள் உங்களுடைய…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.