ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143612 topics in this forum
-
கர்ப்பிணித் தாய்மார்களின் சுவாசப்பாதையின் ஊடாக பிளாஸ்டிக் கருவுக்குள் நுழைவதாகவும் அது ஆபத்தான நிலைமை எனவும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மருத்துவ பீட உடற்கூறியல் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி சஜித் எதிரிசிங்க தெரிவித்துள்ளார். ஒவ்வொருவரும் ஒரு வாரத்தில் ஐந்து மில்லி கிராம் அளவு மைக்ரோ பிளாஸ்டிக் நுகர்வதாக டாக்டர் சஜித் எதிரிசிங்க கூறுகிறார். நுரையீரல் புற்றுநோய், சிறுநீரகப் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய் போன்ற பல்வேறு நோய்கள் மைக்ரோ பிளாஸ்டிக்கை உட்கொண்ட பிறகு ஏற்படுவதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. இலங்கை வித்யாபிவர்தன சங்கமும் சுற்றாடல் நீதி மையமும் இணைந்து தயாரித்த “விஷ நச்சு ஆய்வு” இதழின் முதலாவது இதழ் வெளியீட்டு விழா நேற்று (10) வித்யாபிவர்தன சங்க ம…
-
- 0 replies
- 386 views
- 1 follower
-
-
ஈழம்.. கொடூரமும் கொலையும்! ஈழம் கருவறுக்கப்பட்டு இரண்டாவது வருடம் நெருங்கும் வேளையில், அங்கே நடந்த கொடூரங்களை அம்பலப்படுத்தும் விதமாக விசாரணை அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது ஐ.நா. நிபுணர் குழு. நினைக்கவே நெஞ்சு நடுங்கவைக்கும் நிகழ்வுகளை உலகத்தின் முன்னால் ஆதாரங்களுடன் வைத்து, இலங்கையின் கோர முகத் திரையைக் கிழித்து இருக்கும் அந்த அறிக்கையின் தமிழாக்கம் தகிக்கத் தகிக்க இங்கே... நினைத்துப் பார்க்க முடியாத கொடும் துயரத்தோடும் மிகுந்த சர்ச்சைகளோடும் முடிவுக்கு வந்தது இலங்கைப் போர்! விடுதலைப் புலிகள் அமைப்புக்கு எதிராக நடத்தப்பட்ட 27 ஆண்டு கால துப்பாக்கிச் சண்டை நிறைவுக்கு வந்திருப்பதாக, இலங்கையின் பெரும் பகுதி மக்களும், உலகின் பல்வேறு தரப்பினரும் நம்ப…
-
- 6 replies
- 2.4k views
-
-
இரணைமடுக்குளத்திலிருந்து யாழ்ப்பாணத்துக்கு குடிநீர் வழங்கினால் மாத்திரமே புனரமைப்பதற்கான நிதி ஒதுக்கீடு செய்யமுடியும் என்றிருந்த நிலை மாற்றப்பட்டு, எந்தவித நிபந்தனைகளும் இல்லாது குளத்தினைப் புனரமைக்க ஆசிய அபிவிருத்தி வங்கி கடனுதவி வழங்க முன்வந்துள்ளது என வடமாகாண விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், நீர்வழங்கல், உணவு வழங்கல், சுற்றாடல், மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். சுன்னாகம் குடிநீரில் கழிவு எண்ணெய் பரவியுள்ளமை தொடர்பான வாராந்தக் கூட்டம் அமைச்சரின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்றது. அதன்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், இரணைமடுக்குளத்தை நம்பி விவசாயம் மேற்கொள்ளும் விவசாயிகள், …
-
- 1 reply
- 445 views
-
-
பரீட்சை வினாத்தாளில் எழுத்துப்பிழைகள் நாடாளாவிய ரீதியில் இரண்டாம் தவணைப்பரீட்சைகள் இடம்பெற்று வரும் நிலையில் வவுனியா வடக்கு கல்வி வலயத்தினால் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட இரண்டாம் தவணை தரம் 4 சுற்றாடல் பரீட்சை வினாத்தாளில் எழுத்துப்பிழைகளைக் காணக்கூடியதாக உள்ளதாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். வினாத்தாள்கள் அச்சிடுவதற்கு முன்னர் பரிசீலனை மேற்கொள்ளப்படவில்லை என்பதை இது எடுத்துக்காட்டியுள்ளது என பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இவற்றை திருத்தி மாணவர்களுக்கு சரியான சொற்களை வழங்கவேண்டிய பொறுப்பு தமிழர்கள் அதிகமுள்ள கல்வி வலயங்களையே சாரும் எனவும் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த காலங்களிலும் இவ்வாறான நில…
-
- 1 reply
- 591 views
-
-
பீரீஸ் பொய்யுரைத்துள்ளார் – ஐ.நா காட்டம் ஐ.நாவின் நிபுணர் குழு வெளியிட்ட அறிக்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்துடன் பேச்சுக்களை மேற்கொண்டதாக சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ள கருத்து உண்மையல்ல என ஐ.நாவின் பேச்சாளர் மாட்டின் நெசக்கி தெரிவித்துள்ளார். ஐ.நா செயலாளர் நாயகத்துடன் தான் தொலைபேசியில் கலந்துரையாடியதாக பீரீஸ் சிறீலங்கா நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ள கருத்தில் உண்மையில்லை. கடந்த மாதம் 23 ஆம் நாளே பீரீஸ் இறுதியாக பான் கீ மூனுடன் தொலைபேசியில் பேசியுள்ளார். ஆனால் ஐ.நா 25 ஆம் நாளே தனது அறிக்கையை பகிரங்கமாக வெளியிட்டிருந்தது. ஆனால் இன்றுவரை சிறீலங்கா அரசு அறிக்கை தொடர்பில் தனது பதிலை தரவில்லை. அவர்கள் பதில் அளித்தால் நாம் அ…
-
- 0 replies
- 1.3k views
-
-
சிறிலங்கா சுதந்திரக் கட்சியை உடைப்பதற்கு, மேற்குலக நாடுகள் சதி செய்வதாகவும், அமெரிக்கப் புலனாய்வு அமைப்பான சிஐஏ இதுபோன்ற வேலைகளைச் செய்வது வழக்கமே என்றும் அமெரிக்கா மீது நேரடியாக குற்றம்சாட்டியுள்ளது சிறிலங்கா அரசாங்கம். கொழும்பில் நேற்று சிறிலங்கா சுதந்திரக் கட்சித் தலைமையகத்தில் நடத்திய செய்தியாளர் மாநாட்டில், உரையாற்றிய, அமைச்சர்கள், டிலான் பெரேரா மற்றும், மகிந்த யாப்பா அபேவர்த்தன ஆகியோர், நாட்டைக் குழப்பவும், கட்சிகளை உடைப்பதற்கும், மேற்குலக நாடுகள் சதி செய்வதாக குற்றம்சாட்டியுள்ளனர். “சிறிலங்கா நாடாளுமன்றத்தின் பலம்வாய்ந்த தனிப்பெரும் கட்சியாக உள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சியை உடைப்பதற்கு மேற்குலக சக்திகள் தம்மைப் பயன்படுத்துகின்றன என்பதைக் கூட, புரிந்துகொள்ளும் …
-
- 5 replies
- 644 views
-
-
செஞ்சிலுவைக் குழு மீது பழியைப் போடுகிறது அரசு இறுதிக் கட்டப் போரின் போது சரணடைய உள்ளவர்களின் பெயர்ப் பட்டியலைத் தரும்படி செஞ்சிலுவைச் சர்வதேசக் குழுவிடம் கேட்கப்பட்டது. அவர்கள் அதை வழங்கவில்லை. யுத்தக் களத்துக்குச் செல்வதற்கான அனுமதியை மட்டுமே அவர்கள் கோரினர். இதனாலேயே புலிகளின் தலைவர்கள் இறுதி நேரத்தில் சரணடைவதற்கு எடுக்கப்பட்ட முயற்சி தோல்வியில் முடிந்தது. இவ்வாறு அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை வெளியிடும் செய்தியாளர் மாநாடு நேற்று நடந்தது. இறுதிக்கட்டப் போரின் போது புலிகளின் தலைவர்கள் சரணடைவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை, பாதுகாப்புச் செயலர் மூர்க்கத்தனமாக நிராகரித்துவிட்டார் என்று "விக்கிலீக்ஸ்" இணையதள…
-
- 2 replies
- 1.1k views
-
-
ஜனாதிபதி – தமிழ்க் கூட்டமைப்பினர் இன்று சந்திப்பு! ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இடையிலான கலந்துரையாடலொன்று இன்று(09) பிற்பகல் நடைபெறவுள்ளது. ஜனாதிபதியின் அழைப்பின் பிரகாரம் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இந்த சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் தெரிவித்துள்ளார். http://www.samakalam.com/ஜனாதிபதி-தமிழ்க்-கூட்டம/
-
- 7 replies
- 432 views
-
-
அனைவரும் திரண்டு வாரீர். இடம்: Scarborough Civic Centre,150 Borough Drive, Scarborough காலம்: மார்ச் 4, ஞயிற்றுக்கிழமை பி.ப 5:45 தொடர்புகளுக்கு: கனடியத் தமிழர் பேரவை (CTC) 416 240 0078 http://www.neruppu.org/index.php?subaction...amp;ucat=1&
-
- 1 reply
- 808 views
-
-
முறையான அதிகாரப் பகிர்வின் மூலம் அரசியல் தீர்வுக்கு ஆதரவு : இரா.சம்பந்தன் வியாழக்கிழமை, 19 மே 2011 02:25 பயனாளர் மதிப்பீடு: / 0 மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது இந்தியாவிடம் உறுதி அளித்தபடி முறையான அதிகாரப்பகிர்வின் மூலமாகத் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுக்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமாயின் நாம் அதற்குத் தேவையான சகல ஒத்துழைப்பையும் வழங்குவோம். என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். இந்திய அரசுக்கு இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாக உறுதியளித்துள்ள விடயங்கள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் நிலைப்பாடு தொடர்பாக பத்திரிகையாளர் கேட்டபோதே அவர் இதனைத் தெரிவி…
-
- 0 replies
- 748 views
-
-
மூதூர் வெள்ளந்தாங்கி அணை உடைப்பெடுத்ததால் திருகோணமலைக்கும் மூதூருக்கும் இடையேயான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை- மூதூர் பிரதான வீதிக்கு மேலாக வெள்ளம் பாய்ந்து செல்கிறது. அத்துடன் வெள்ளந்தாங்கி அணையை அண்மித்த நாவற்குழி மற்றும் அப்பிரதேசத்திலுள்ள தாழ்நில பகுதிகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. www.tamilmirror.lk/136522#sthash.8CvCwMoI.dpuf
-
- 0 replies
- 328 views
-
-
தென்னிலங்கை மீனவர்கள் வடக்கிலேயே தங்கிவிட கூடாது: தேசிய ஒத்துழைப்பு இயக்கம் தென்னிலங்கை மீனவர்கள் வடக்கிற்கு பருவகால தொழிலுக்காக வரலாம். ஆனால் அவர்கள் வடமாகாணத்திலேயே நிரந்தரமாக தங்கியிருக்க முயற்சிப்பதை நாம் கண்டிக்கிறோம் என, தேசிய ஒத்துழைப்பு இயக்கத்தின் இணைப்பாளர் அ.ஜேசுதாஸ் கூறியுள்ளார். வடமாகாண மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து நேற்று யாழ்.ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அ.ஜேசுதாஸ் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், “தென்னிலங்கை மீனவர்கள் வடமாகாணத்தில் தங்கியிருக்கும் இடங்களில் நடைபெறும் சம்பவங்கள் நல்லிணக்கத்திற்கு பாரிய அச்ச…
-
- 0 replies
- 234 views
-
-
சவீந்திரா டீ சில்வாவை வெளியேற்றுமாறு அமெரிக்க அரசிடம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை மனு! Published on May 23, 2011-7:46 pm · No Comments இனப்படுகொலை, போர்க்குற்றங்கள், மனிதத்துக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதற்கான ஆதாரங்களின் அடிப்படையில், ஐ.நா.வுக்கான சிறிலங்காவின் நிரத்தர பிரதிநிதி பிரிகேடியர் சவீந்திரா டீ சில்வா மீது நடவடிக்கை எடுத்து அவரை நாட்டை விட்டு வெளியேற்றுமாறு கோரி அமெரக்கா அரசிடம் மனு ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், அமெரிக்க பல்கலைக்கழகத்தின் UNROW மனித உரிமைகளுக்கான சட்ட ஆலோசனை நிறுவனம், SPEAK மனித உரிமைகளுக்கான முன்னெடுப்பு மையம் ஆகியன இணைந்து இந்த கோரிக்கையை அமெரிக்க அரசிடம் முன்வைத்துள்ளன. சிறிலங்கா இராணுவத்தின் …
-
- 2 replies
- 702 views
-
-
கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள காடுகளில் தேக்கு மரங்கள் அனுமதிப்பத்திரமின்றி வெட்டப்பட்டு கடத்தப்படும் நடவடிக்கைகள் அதிகரித்து காணப்படுவதாக கிளிநொச்சி பொலிஸார், வியாழக்கிழமை (01) தெரிவித்தனர். தேக்கு மரங்களை வாகனங்களில் கடத்துபவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி, அவர்களுக்கெதிராக சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. கடந்த 30ஆம் திகதி 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான 3 தேக்கு மரக்குற்றிகளை கன்ரர் ரக வாகனத்தில் கடத்திச் சென்ற சந்தேகநபர் கைது செய்யப்பட்டு, கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட வேளை, நீதவான் எம்.ஐ.வகாப்தீன் 1 இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் செல்ல அனுமதியளித்தார். மேலும், கடத்தப்பட்ட தேக்குமரம் நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் மேல…
-
- 0 replies
- 358 views
-
-
குடும்பத்தை வாழ வைத்த மாகாணசபை உறுப்பினர்கள்: புதிய கட்சியின் முதலாவது அதிரடி தாக்குதல்! August 24, 2018 வடமாகாணசபை உறுப்பினர்களின் தனிப்பட்ட ஆளணி தொடர்பான விபரங்கள் நேற்று வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. வடமாகாணசபையின் அனேக உறுப்பினர்கள் தமது குடும்ப உறுப்பினர்களையே தனிப்பட்ட ஆளணியில் நியமித்து வைத்திருந்ததை இது அம்பலப்படுத்தியிருந்தது. இது குறித்து தமிழ்பக்கத்திற்கு மேலதிக சில சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்துள்ளன. அவற்றை வாசகர்களுடன் பகிர்கிறோம். அண்மையில் ரெலோவில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பிக்கும் கணேஸ் வேலாயுதத்தின் அதிரடி தாக்குதலே இந்த தகவல் வெளியானதன் பின்னணி. புதிய கட்சி ஆரம்பித்தாயிற்று, மாகாணசபை தேர்தலும் நெருங்குகிறது, கூட்டமை…
-
- 4 replies
- 1.1k views
-
-
சிறையில் பெண் உயிரிழந்த சம்பவம் : வெலிக்கடை பொலிஸ் பொறுப்பதிகாரி இடமாற்றம் பெண் ஒருவர் தடுப்புக் காவலில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் வெலிக்கடை பொலிஸ் பொறுப்பதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கடந்த மே மாதம் 11ஆம் திகதி கைது செய்யப்பட்ட பதுளையைச் சேர்ந்த 41 வயதான ராஜகுமாரி என்ற பெண் வெலிக்கடை பொலிஸ் காவலில் இருந்த போது உயிரிழந்துள்ளார். குறித்த பெண் தங்க நகைகளை திருடிச் சென்றுள்ளார் என்ற முறைப்பாட்டின் அடிப்படையில் வெலிக்கடை பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் காவலில் இருந்தபோது குறித்த பெண் தாக்கப்பட்டதாகக் கூறி, அவரது மரணம் குறித்து உறவினர்கள் சந்தேகம் எழுப்பினர். பின்னர் வெலிக்கடை பொலிஸில் கடமையாற்றிய ஏழு ப…
-
- 0 replies
- 153 views
-
-
சபை ஒத்திவைப்புவேளை பிரேரணைக்கு பதிலளித்து கெஹலிய உரை சவுதி அரேபியாவில் அண்மையில் சிரச்சேதம் செய்யப்பட்ட 4 இலங்கையர்களை அந்தத் தண்டனையிலிருந்து மீட்க இலங்கை அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையென்ற குற்றச் சாட்டையும் மறுத்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு மற்றும் நலனோம்பு அமைச்சரான கெஹலிய ரம்புக்வெல்ல, அந்நாட்டு சட்ட திட்டங்களுக்கு ஏற்பவே மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டினார். பாராளுமன்றத்தில் வெள்ளிக் கிழமை நடைபெற்ற சவுதி அரேபியாவில் சிரச்சேதம் செய்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட 4 இலங்கையர்கள் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தின் இறுதியில் பதிலளிக்கும் போதே அமைச்சர் ரம்புக்வெல்ல இவ்வாறு தெரிவித்தார். லக்ஷ்மன் …
-
- 1 reply
- 926 views
-
-
அணிசேரா நாடுகள் பொதுவான சவால்களை கூட்டாக எதிர்கொள்ள வேண்டும் - ஜீ.எல்.பீரிஸ் 27 மே 2011 பயங்கரவாத ஒழிப்பு உள்ளிட்ட பொதுவான சவால்களை எதிர்கொள்வதில்.. அணிசேரா நாடுகள் பொதுவான சவால்களை கூட்டாக எதிர்கொள்ள வேண்டும் என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். அணிசேரா நாடுகளின் 16ம் வெளிவிவகார அமைச்சர்கள் மாநாட்டில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக பயங்கரவாத ஒழிப்பு உள்ளிட்ட பொதுவான சவால்களை எதிர்கொள்வதில் அணி சேரா நாடுகள் உலக அரங்கில் முக்கிய பங்களிப்பை வழங்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு அறிக்கை தொடர்பில் அணி சேரா நாடுகள் அமைப்பின் உறுப்பு நாடுகளுக்கு வெளி…
-
- 1 reply
- 453 views
- 1 follower
-
-
மகிந்தவின் திட்டத்துக்கு இராணுவம் ஒத்துழைக்காது – அனுரகுமார திசநாயக்க JAN 05, 2015 | 5:36by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இராணுவத்தைப் பயன்படுத்தி அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்ள முயன்றால், பொதுமக்களுடன் இணைந்து ஜேவிபி அதற்கெதிராக போராடும் என்று ஜேவிபியின் அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார். “தோல்வியுற்றாலும் ஆட்சியை ஒப்படைக்கமாட்டோம் என்று அரசாங்கம் கூறுகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே இந்த தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. அவ்வாறாயின், தோல்வியுற்றவர் அடுத்த இரண்டு ஆண்டுகள் நாட்டை ஆள, வெற்றி பெற்றவர் பொலன்னறுவவில், வீட்டுக்குள் முடங்கியிருக்கும் நிலை ஏற்படும். உலகில் இதுபோன்று வேறேங்கும் நடந்துள்ளதா? மகிந்த ராஜபக்ச இராணுவத்தைப்…
-
- 1 reply
- 682 views
-
-
சிறிலங்கா அதிபருக்கு ஒருவாரம் முன்னதாகவே பிறந்தநாள் வாழ்த்து – சீன அதிபரின் அதிரடி சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு சீன அதிபர் ஷி ஜின்பிங் பிறந்தநாள் வாழ்த்துச் செய்தியைக் கொடுத்தனுப்பியுள்ளார். சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் செப்ரெம்பர் 3ஆம் நாள் 67 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடவுள்ளார். இந்த நிலையில், சீன அதிபர் ஷி ஜின்பிங் கொடுத்தனுப்பிய வாழ்த்துக் கடிதத்தை, சிறிலங்கா அதிபரிடம் கடந்த செவ்வாய்க்கிழமை சீனத் தூதுவர் செங் ஷியுவான் நேரில் சென்று கையளித்துள்ளார். அதில், எமது இருதரப்பு உறவுகளின் அபிவிருத்திக்கு நான் மிகுந்த முக்கியத்துவத்தை வழங்கியிருக்கிறேன், சீன-சிறிலங்கா மூலோபாய ஒத்துழைப்பு கூட்டை மேலும் புதிய உயரத்த…
-
- 0 replies
- 481 views
-
-
[ஞாயிற்றுக்கிழமை, 18 மார்ச் 2007, 04:43 ஈழம்] [அ.அருணாசலம்] ஓமந்தை, மணலாறு, மன்னார் ஆகிய பகுதிகளில் உள்ள சிறிலங்காப் படையினரின் முன்னரங்க நிலைகளில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை படையினரால் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் மீது வலிந்த தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இத்தாக்குதல்கள் சிறிலங்கா அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட 57 ஆவது படையணியைச் சேர்ந்த சிறப்பு காலாட் படையின் பட்டலியன் துருப்புக்களும் இராணுவத்தினரின் சிறப்பு அணியினரும் ஈடுபட்டதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. இப்படையணிக்கு சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்ட பின்னர் கடந்த வெள்ளிக்கிழமை அதன் முதலாவது தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டது. இதன் போது 4 சிறப்பு படையினர் கொல்லப்பட்டதாகவும் 23…
-
- 17 replies
- 3.6k views
-
-
நீதிமன்றில் ஆஜரானார் விக்னேஸ்வரன் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மேன்முறையீட்டு நீதிமன்றில் ஆஜராகியுள்ளார். வடக்கு மாகாண போக்குவரத்து, உள்ளூராட்சி மற்றும் மீன்பிடித்துறை அமைச்சாராக பா.டெனீஸ்வரன் பதவி வகிக்க வேண்டும் என்று நீதிமன்றம் வழங்கிய உத்தரவை நடைமுறைப்படுத்தத் தவறியதன் மூலம் நீதிமன்றை அவமதித்த குற்றச்சாட்டின் பிரகாரமே முதலமைச்சர் விக்னேஸ்வரன் இன்று நீதிமன்றில் ஆஜராகியுள்ளார். நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் வட மாகாண முன்னாள் அமைச்சர் டெனீஸ்வரன் தாக்கல் செய்துள்ள மனுவொன்றை பரிசீலித்த போதே மேன்முறையீட்டு நீதிமன்றம் சி.வி. விக்னேஸ்வரன் மற்றும் வட மாகாண அமைச்சர்களான அனந்தி சசிதரன், கே.சிவநேசன் ஆகியோரை நீதிமன…
-
- 3 replies
- 1k views
-
-
ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகத்தை இலங்கையில் அமைக்க அனுமதிக்கப் போவதில்லை- அரசாங்கம் அறிவிப்பு ஜ22 - ஆயசஉh - 2007ஸ ஜகுழவெ ளுணைந - யு - யு - யுஸ -கே.பி.மோகன்- ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை அலுவலகத்தை இலங்கையில் அமைப்பதற்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லையென திட்டவட்டமாக நேற்று புதன்கிழமை அறிவித்திருக்கும் அரசாங்கம்இ இங்கு மனித உரிமை மீறல்கள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகள் நாட்டுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் போலிப் பிரசாரங்கள் என்றும் தெரிவித்துள்ளது. கொழும்புஇ கொள்ளுப்பிட்டியிலுள்ள தேசிய பாதுகாப்பு தகவல் நிலைய கேட்போர் கூடத்தில் நேற்று புதன்கிழமை காலை இடம்பெற்ற வாராந்தர பாதுகாப்பு செய்தியாளர் மாநாட்டில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அமை…
-
- 2 replies
- 823 views
-
-
Sunday, June 5, 2011, 19:28சிறீலங்கா வெளிநாடுகளில் உள்ள மூன்று தூதரகங்கள் இணைந்து கடந்த இரண்டாம் திகதி ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்திற்கு எதிரில் நடத்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தோல்வியடைந்தது சம்பந்தமாக, சம்பந்தப்பட்ட நாடுகளைச் சேர்ந்த இலங்கைத் தூதுவர்களை ஜனாதிபதி திட்டித் தீர்த்துள்ளார் . ஜேர்மனி, இத்தாலி, சுவிஸர்லாந்து ஆகிய நாடுகளில் இயங்கும் இலங்கைத் தூதரகங்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன. ஐரோப்பாவில் வாழும் இலங்கையர்களின் ஒன்றியத்தின் ஆர்ப்பாட்டம் எனத் தெரிவிக்கப்பட்ட போதிலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ், முஸ்லிம் மக்கள் கலந்துகொள்ளவில்லை. அத்துடன் ஆர்ப்பாட்டத்தில் போதுமான எண்ணிக்கையிலான மக்கள் கலந்துகொள்ளவில்லை எனவும் மிக சொற்பமான மக்களே…
-
- 1 reply
- 1.2k views
-
-
வடக்கு மாகாண சபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை இன்று கிளிநொச்சியினில் விபத்தில் படுகாயமடைந்துள்ளார்.இந்நிலையில் அவர் அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் இன்று மாலை இடம்பெற்ற விபத்திலே அவர் படுகாயமடைந்துள்ளார். எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் நிரப்புவதற்காக திரும்பியபோது பின்னே வந்த வாகனம் அவர் மீது மோதியதிலேயே படுகாயமடைந்துள்ளார். படுகாயமடைந்த அவர், கிளிநொச்சி வைத்தியசாலையில் தீவிரசிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். http://www.pathivu.com/news/36896/57//d,article_full.aspx
-
- 0 replies
- 494 views
-