Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கருணா விவகாரத்திற்கு பொறுப்பேற்று ரணில் விக்கிரமசிங்க என்னை பதவி விலகுமாறு கேட்டுக்கொண்டார்- என்னை பலிக்கடாவாக்கினார் : அலிஷாஹிர் மௌலானா By Sayanolipavan 7 வருடங்களிற்கு முன்னர் எனது கட்சி தலைவர் எனது உயிரை பணயம் வைக்கும் நிலையை ஏற்படுத்தினார், எனக்கு துரோகமிழைத்தார். இதனை காப்பாற்றிக்கொள்வதற்காக என்னை பலிக்கடாவாக்கினார். அதன் பின்னர் நான் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகவேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். இவ்வாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அலிஷாஹிர் மௌலானா டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் நான் வெறுமனே அவரது உத்தரவுகளை மாத்திரம் பின்பற்றினேன், நாட்டிற்கு நல்லது என நினைத்ததை மாத்திரம் செய்தேன் என அவர் தெரிவித்துள்ளார். அவர் தெரிவ…

    • 5 replies
    • 529 views
  2. சென்னையில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்ட புரட்சிகர விடுலை முன்னணி உறுப்பினர்கள்- நினைவேந்தல்! ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தியாகிகள் தின நிகழ்வு ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி பத்மநாபா மன்றத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் இரா.துரைரெட்ணம் தலைமையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வு இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது. கொரோனா நிலைமைகளைக் கருத்திற் கொண்டு, சுகாதார வழிமுறைகளுக்கமைவாக குறிப்பிட்ட சிலரின் பங்களிப்புடன் மேற்படி நிகழ்வு இடம்பெற்றது. 1990.06.19 அன்று இந்தியாவின் சென்னையில் ஈழமக்கள் புரட்சிகர விடுலை முன்னணியின் செயலாளர் நாயகம் பத்மநாபா உட்பட 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட அன்றைய தினத்தை தியாகிகள் தினமாகப் பிரக…

  3. யாழ் மாவட்டத்திற்குரிய நாடாளுமன்ற ஆசனம் ஒன்று குறைக்கப்பட்டு கம்பஹா மாவட்டத்திற்கு வழங்கபடவுள்ளது யாழ் மாவட்டத்திற்குரிய நாடாளுமன்ற ஆசனம் ஒன்று குறைக்கப்பட்டு அதனை கம்பஹா மாவட்டத்திற்கு வழங்கவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.அதனடிப்படையில், 2020ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர் பட்டியலுக்கமைய யாழ்ப்பாணத்தில் இருந்து தெரிவாகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைவடைகிறது என தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி கம்பஹா மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட ஆசனங்களின் எண்ணிக்கை 18 ல் இருந்து 19 ஆகவும், யாழ். மாவட்ட இட ஒதுக்கீடு 7 இல் இருந்து 6 ஆகவும் குறைந்துள…

  4. இலங்கையில் புலனாய்வு பணிக்காக மீண்டும் அழைக்கப்படும் முன்னாள் படையினர்! June 18, 2021 நாட்டை இராணுவ மயப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றவர்களைப் புலனாய்வுத் தகவல்களைச் சேகரிப்பதற்காக நியமிக்க இலங்கை இராணுவம் ஒரு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது. கடந்த 08 ஜூன் 2021 அன்று மேற்கு கட்டளைப் பிராந்தியத்திற்கு உட்பட்டபிரதேசங்களிலுள்ள காலாட்படை அணிகளுக்குஇரகசிய உத்தரவு ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அந்த உத்தரவில் பணிக்கு மீண்டும் திரும்ப விருப்பமுள்ள முன்னாள் படை வீரர்களின் தகவல்களை ஜூன் 14க்கு முன்னதாக அனுப்பி வைக்கும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னோக்கிச் செல்லும் உத்தி என்ற பெயரில் ச…

  5. கொவிட் – 19க்காக சேகரித்த நிதியை வேறு தேவைக்கு பயன்படுத்திய வடக்கு ஆளுனர் June 18, 2021 வடமாகாண அரச உத்தியோகஸ்தர்களிடம் இருந்து கொவிட் -19 க்காக என சேகரிக்கப்பட்ட 2 கோடியே 38 இலட்ச ரூபாய் நிதியினை வடமாகாண ஆளுநர் சேகரிக்கப்பட்ட நோக்கை விட வேறு தேவைகளுக்கு ஒதுக்கி உள்ளமை அம்பலத்திற்கு வந்துள்ளது. கிளிநொச்சியை சேர்ந்த ஊடகவியலாளரான மு.தமிழ்ச்செல்வன் , தகவல் அறியும் உரிமை சட்டத்தின் ஊடாக எழுப்பிய கேள்வி மூலமே குறித்த விடயம் அம்பலத்திற்கு வந்துள்ளது. வடக்கு மாகாண அரச உத்தியோகத்தர்களிடம் ஆளுநரின் அறிவித்தலுக்கு அமைய கொவிட் 19 இற்காக திரட்டப்பட்ட 2 கோடியே 38 இலட்சம் ரூபா நிதியில் 30 இலட்சம் ரூபா நிதி தேசிய கொவிட் 19 நிதி…

  6. மட்டக்களப்பு கடல் பகுதியில் இறந்து கரையொதுங்கும் கடல்வாழ் உயிரினங்கள் 6 Views மட்டக்களப்பு கிரான்குளம் பகுதியில் உயிரிழந்த நிலையில் 3 கடல் ஆமைகளும் ஒரு டொல்பின் மீனும் இன்று கரையொதிங்கியுள்ளது. இன்னும் பல ஆமைகள் கடலில் மிதந்து வருவதாகதாக இன்று கடல் தொழிலுக்கு சென்று திரும்பிய மீனவர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த 21 ஆம் திகதி எம்.வி. எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் தீ பரவியதிலிருந்து இதுவரை 40 இற்க்கும் மேற்பட்ட கடலாமைகளின் உடல்களும் 05 டொல்ஃபின்களின் உடல்களும் இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் கரையொதுங்கியுள்ளன. கடற்றொழில் நீரியல்வள திணைக்கள அதிகாரிகள், கடல் சுழல் பாதுகாப்பு அதிகாரசபையின் உத்தியோகத்தர்…

  7. இன-மதவாத அரசியல் இல்லை என்ற கொள்கையின் அடிப்படையில் தேரர்கள் வாழவேண்டும் 36 Views தேரர்களாகிய நீங்கள், “இன-மதவாத அரசியல் இல்லை” என்று வாழ்ந்தாலே போதும்..! இந்நாடு உருப்படும்..! நாளாந்தம் கொடுமைகளின் மத்தியில் வாழ்ந்துகொண்டிருக்கும் அப்பாவி தமிழ், முஸ்லிம் மற்றும் அப்பாவி ஏழை சிங்கள மக்களும் உங்களை வாழ்த்துவார்கள்..! என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: வண எல்லே குணவன்ச தேரர், “பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது சம்பளத்தை பொது காரியங்களுக்காக அர்ப்பணிக்க வேண்டும்” என கூறுகிறார். நல்லது. ஆனால், உண்மையில் எனக்கு இந்த தேரர் இதை போதிக்க தேவையில்லை. …

    • 1 reply
    • 529 views
  8. (லியோ நிரோஷ தர்ஷன்) கொழும்பு துறைமுக நகரத்துடனான சமீபத்திய முன்னேற்றங்களைத் தொடர்ந்து இலங்கை தனது இருதரப்பு ஒத்துழைப்பை கவனத்தில் கொள்ள வேண்டும் என இந்தியா தெரிவித்துள்ளது. கடல்சார் பாதுகாப்பை உள்ளடக்கிய பகிரப்பட்ட பரஸ்பர இருதரப்பு சிறப்பு ஒத்துழைப்பை நினைவில் கொள்ள வேண்டும் என்று இந்தியா எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது. டெல்லியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இந்திய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர்அரிந்தம் பக்ஷி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இந்தியாவின் பாதுகாப்பை கருதி துறைமுக நகரின் நகர்வுகள் குறித்து அவதானித்து வருகின்றோம். குறிப்பாக துறைமுக நகர் இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகுமா என்ற கோணத்தில் அவதானிப்பதாகவும் அவர…

    • 4 replies
    • 699 views
  9. நா.தனுஜா இலங்கையிலிருந்து சீனாவிற்கு மீனுற்பத்தி மற்றும் கடலுணவுப்பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு, சீன சுங்கத்தின் பொது நிர்வாகப்பிரிவினால் அங்கீகாரமளிக்கப்பட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட சுகாதார சான்றிதழை ஏற்றுமதியாளர்கள் பெற்றிருக்கவேண்டும் என்று சீனத்தூதரகம் தெரிவித்துள்ளது. இலங்கையின் மீன் உற்பத்திப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கான புதுப்பிக்கப்பட்ட சுகாதாரத் தரச்சான்றிதழுக்கு சீன சுங்கத்தின் பொது நிர்வாகப்பிரிவு அங்கீகாரமளித்திருக்கிறது. இதன்மூலம் அனுமதியளிக்கப்பட்ட மீனுற்பத்திகள் மற்றும் கடலுணவுப்பொருட்கள் சீனாவின் போட்டிச் சந்தைக்குள் நுழைவதற்கும் இலங்கையின் வணிகங்கள் அவற்றின் உற்பத்தியை மேலும் விரிவாக்குவதற்கும் வாய்ப்பு ஏற்பட்டிருப்பதாக இலங்கையிலுள்ள சீனத…

    • 2 replies
    • 711 views
  10. கிளிநொச்சி, அக்கராயன் பிரதேசத்தில் அமைந்துள்ள கரும்புத் தோட்டக் காணியில் உடனடியாக விவசாய நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மணல் அகழ்வதற்கான அனுமதிகளை வழங்குவதன் மூலம் சட்டவிரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்துவது தொடர்பாகவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில், மாவட்ட செயலகத்தில் இன்று (18.09.2021) நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே, குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்றது. கரும்பு தோட்டமாக அடையாளப்படுத்தப்படுகின்ற சுமார் 196 ஏக்கர் விஸ்தீரனமான நிலப்பரப்பு, நீண்ட காலமாக சரியான பராமரிப்பு இன்றி காணப்படுகின்றது. குறித்த காணியில் பயிர்செய்கை நடவடிக்…

    • 2 replies
    • 413 views
  11. புதைக்கப்பட்ட விதுஷனின் உடலை மீளவும் தோண்டுமாறு மட்டக்களப்பு நீதிமன்றம் உத்தரவு Sayanolipavan இந்த சம்பவம் தொடர்பில் உயிரிழந்த சந்திரன் விதுஷன் எனும் இளைஞனின் சடலத்தினை தோண்டியெடுத்து இலங்கையிலேயே சிறந்த நிபுணத்துவம் வாய்ந்த பேராதனை பல்கலைக்கழக பேராசிரியர் முன்னிலையில் மீள் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இந்நிலையில் கடந்த 3ம் திகதி மட்டக்ளப்பு போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி ஏ.இளங்கோவன் அவர்களின் தலமையிலான சட்டவைத்தியர்களினால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில் குறித்த இளைஞன் அதிகளவான ஜஸ் போதைப்;பொருள் பைகளை வாயில் போட்டு விழுங்கியதன் காரணமாக உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் வெள…

  12. கொழும்பிலிருந்து யாழ். வந்த ரி.ஐ.டி.யினர் மறவன்புலவு சச்சியிடம் 2 மணி நேர விசாரணை June 18, 2021 சிவசேனைத் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தனைக் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வந்த பயங்கரவாதத் தடைப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று மாலை இரண்டு மணி நேரம் விசாரணைக்கு உட்படுத்தினார்கள். தயாரித்துக் கொண்டு வந்திருந்த வினாக்கொத்து ஒன்றினைக் கொண்டு 22க்கும் கூடுதலான கேள்விகளை மறவன்புலவு சச்சிதானந்தத்திடம் தொடுத்தனர். அதற்கான பதில்களைப் பதிந்து சென்றுள்ளார்கள். இந்த விசாரணைகள் சுமார் இரண்டு மணி நேரத்துக்கு நீடித்தது. சிவசேனை அமைப்புக்கும் விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் தொடர்பு இருக்கிறதா? என்ற கோணத்திலும் அவர்கள் விசாரணை அமைந்தது. இதுவரை காலம் சிவசேனை வ…

  13. மட்டக்களப்பு வாவியில் 1.5 மில்லியன் இறால் குஞ்சுகள் விடுவிப்பு June 18, 2021 மட்டக்களப்பு வாவியில் 1.5 மில்லியன் இறால்குஞ்சுகளை விடுவிக்கும் நிகழ்வு கடற்தொழில் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது. மட்டக்களப்பு வாவியின் பிள்ளையாரடி மற்றும் வவுனதீவு பகுதிகளில் இன்று காலை 4.00 மணிக்கு குறித்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வழிகாட்டலில் மட்டக்களப்பு மாவட்ட கடற்தொழில் திணைக்கள உதவிப் பணிப்பாளர் ருக்சான் குரூஸ் தலைமையில் குறித்த இறால் குஞ்சுகள் வாவியில் பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டன. இங்கு கருத்துவெளியிட்ட மாவட்ட உதவிப் பணிப்பாளர் ரூக்சான் குரூஸ்,மட்டக்களப்பு வாவியில் மீன்வளத்தை அதிகரி…

  14. முள்ளிவாய்கால் நினைவேந்தல்: கைது செய்யப்பட்ட 10 பேருக்கும் விளக்கமறியல் நீடிப்பு மட்டக்களப்பு- கல்குடா கடற்கரையில், முள்ளிவாய்கால் நினைவேந்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 10 பேரையும் மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு வாழைச்சேனை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. குறித்த 10பேரையும் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் நேற்று முன்தினம் (புதன்கிழமை) உத்தரவு பிறப்பித்துள்ளார். கடந்த மே மாதம் 18ஆம் திகதி, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் செய்வதற்கு எதிராக லவக்குமாருக்கு நீதிமன்ற தடை உத்தரவு பெறப்பட்டிருந்தது. ஆனாலும் அவர் உட்பட 10 பேர், நீதிமன்ற தடை உத்தரவை மீறி நாகர்வட்டை கடற்கரையில் முள்ளிவாய்க்காலில் உ…

  15. ’போலி தொலைபேசி அழைப்புகளுக்கு பலியாகவேண்டாம்’’ வீடுகளில் உள்ள நிலையான தொலைபேசிகளுக்கு அழைப்பு மேற்கொண்டு பொலிஸார் என தெரிவித்து மக்களிடம் பணம் கேட்டு அச்சுறுத்தும் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர். அவ்வாறான அழைப்புகள் குறித்து பொதுமக்கள் அவதானத்துடன், இருக்குமாறு பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண அறிவுறுத்தியுள்ளார். ஏப்ரல் - 21 தாக்குதல் சம்பவத்தை தொடர்புபடுத்தி இனந்தெரியாத நபர்களால் இவ்வாறான அழைப்புகள் பொதுமக்களுக்கு மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறு மேற்கொள்ளப்படும் அழைப்புக்களில் அதிகமானவை நிலையான தொலைப்பேசிகளுக்கு மேற்கொள்ளப்படுதாக பொலிஸாருக்கு முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டு…

  16. நம்பிக்கையில்லா பிரேரணை... சிறு பிள்ளையின் கடிதம் போல், பல பிழைகளை கொண்டுள்ளது – கம்மன்பில தனக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சிறு பிள்ளையின் கடிதம் போல் பல பிழைகளை கொண்டுள்ளது என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “நிதி அமைச்சரின் இணக்கப்பாட்டின் படியே எரிபொருள் விலையை அதிகரிக்க முடியும். அமைச்சரவையின் அனுமதி தேவை இல்லை. நான் அமைச்சராக பதவியேற்றது 2020 ஓகஸ்ட் மாதம். 2020 ஜனவரி மாதம் அல்ல என்பதை எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இந்த சந்தர்ப்பத்தில் ஞாபகப்படுத்த விரும்புகிறேன். இதில் கைச்சாத்திட்ட நாட…

  17. "எங்களின் கடலில் எங்களின் வளத்தினை நாங்கள் பயன்படுத்திக் கொள்வதற்கான அனுமதிகளைப் பெற்றுத் தாருங்கள்" என்று வடமாராட்சி கிழக்கு கடற்றொழில் சங்கங்களின் பிரதிநிதிகள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை முன்வைத்துள்ளனர். வடமாராட்சி கிழக்கு கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடும் நோக்கில் இன்று(17.06.2021) மருதங்கேணியில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, குறித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. வடமாராட்சி கிழக்கு பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற தடைசெய்யப்பட்ட சட்ட விரோத தொழில் முறைகளை கட்டுப்படுத்துவதுடன் பாரம்பரியமாக சிறுதொழிலில் ஈடுபடுகின்றவர்களை பாதிக்காத வகையில், பிரதேசத்தின் பெரும்பாலானவர்களின் நலன்களின்…

  18. கொரோனா தொற்றால் நாட்டில் பயணக் கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மக்கள் தொழில்களுக்குச் செல்ல முடியாமல் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். இவ்வாறான நெருக்கடிக்கு மத்தியில் எரிபொருள் விலை அதிகரிப்பு மிகப்பெரும் சிக்கலைத் தோற்றுவித்துள்ளது என பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு கடிதமொன்றில், எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலால், மீன் வளங்கள் அழிவடைந்து பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன. அந்தக் கப்பலால் கடல் வளம், சுற்றாடல், மீன் வளத்துக்கு ஏற்பட்ட பாதிப்பைக் கணக்கிட கூட முடியாத நிலையில் உள்ளது. இந்த நிலையில் எரிபொருள் விலை அதிகரிப்பு மீனவர்களின் வாழ்வில் மேலும் பாதிப்பை ஏற்…

    • 1 reply
    • 332 views
  19. முல்லைத்தீவில் சட்டவிரோத தொழில்கள் அதிகரித்துள்ளதாகவும் கடற்றொழில் நீரியல்வள திணைக்களமும் கடற்படையும் வேடிக்கை பார்ப்பதாகவும் மீனவர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தின் சாலை முதல் கொக்கிளாய் முகத்துவாரம் வரையான கடற்பரப்பில் அண்மை நாட்களாக சட்டவிரோத தொழில்கள் அதிகரித்துள்ளதாகவும் சட்டவிரோத தொழிலாளர்களால் தமது வலைகள் அறுக்கப்படுவதாகவும் கடலில் திருவிழா போன்று வெளிச்சம் பாய்ச்சி மீன் பிடித்தல் இடம்பெறுவதாகவும் திணைக்களமும் கடற்படையும் வேடிக்கை பார்ப்பதாகவும் இதனை உடனடியாக கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கோரியுள்ளனர். குறிப்பாக தாம் கடலில் இறங்கி தொழில் செய்யவே அச்சப்படுவதாகவும் அங்கு நங்கூரமிட்டு வெளிச்சம் பாய்ச்சி மீன் பிட…

    • 1 reply
    • 284 views
  20. தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் இலங்கையின் முயற்சிக்கு இந்தியா ஆதரவு வழங்கும் 6 Views “அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்துக்கு அமைவாகவும், ஐக்கிய இலங்கை என்ற கட்டமைப்புக்குள்ளும் சமத்துவம், நீதி, சமாதானம் மற்றும் கௌரவம் ஆகியவற்றுக்கான தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் இலங்கையின் நல்லிணக்கத்துக்கு இந்தியாவின் நிலையான ஆதரவு இருக்கும்.” என இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இன்று இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேவை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர். கொழும்பிலுள்ள இந்த…

    • 14 replies
    • 912 views
  21. இணையவழி கற்பித்தல் தோல்வி 2,000ற்கும் மேற்பட்ட பாடசாலைகளுக்கு சிக்கல் தொற்றுநோய் காலத்தில் பாடசாலை மாணவர்களுக்கு இணையவழியில் மேற்கொள்ளப்பட்ட கற்பித்தல் நடவடிக்கை வெற்றியளிக்கவில்லை என்பது அரசாங்க புள்ளிவிபரங்கள் ஊடாக தெரியவந்துள்ளன. கல்வி அமைச்சின் தரவுகளுக்கு அமைய, நாட்டில் 2,000ற்கும் மேற்பட்ட பாடசாலைகளில் இணைய வசதி இல்லையென்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக நாட்டின் முன்னணி ஆசிரியர் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றுநோயால் வீழ்ச்சியடைந்த பாடசாலை கல்வியைப் மேம்படுத்த, தோல்வியுற்ற இணையவழி கல்வி முறையை கைவிட்டு மாற்று திட்டம் தொடர்பான கல்விச் சீர்திருத்தங்களை கண்டறிவது தொடர்பில், கல்விச் சீர்திருத்தங்கள், திறந்த பல்கலைக்கழகங்கள் …

  22. 4 மாத பயணக்கட்டுப்பாடு அல்லது கடுமையான ஊரடங்கு சட்டம் சுகாதார பணிப்பாளர் எச்சரிக்கை 4 மாதங்களுக்கு பயண கட்டுப்பாடுகளை நீடிப்பது அல்லது கடுமையான ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தி கடுமையான சட்டத்தை செயற்படுத்த நேரிடும் என பிரதி சுகாதார சேவை பணிப்பாளர் விசேட மருத்துவர் ஹேமந்த ஹேரத் எச்சரித்துள்ளார். பயண கட்டுப்பாடுகளை பொதுமக்கள் புறக்கணித்து செயற்பட்டால் இந்த நிலைமை ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். கடுமையான சட்டத்திட்டங்களை விதித்து கொவிட் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு முயற்சித்தால், அதனால் ஏற்படும் பொருளாதார பாதிப்பு மிக அதிகம் என அவர் கூறியுள்ளார். தொற்றினை கட்டுப்படுத்துவதென்றால் என்றால் அனைவரும் பயணக்கட்டுப்பாடினை உரிய முறையில் பின்பற்ற வேண்டும் என அவர் க…

  23. குருந்தூர்மலையில் இராணுவத்தினரின் பங்கேற்புடன் விகாரைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு June 17, 2021 சர்ச்சைக்குரிய அகழ்வாராய்ச்சி பணிகள் இடம்பெற்று வந்த முல்லைத்தீவு – குருந்தூர் மலையில் புனரமைக்கப்படும் குருந்தாவசோக விகாரைக்கான பொது மண்டபத்துக்கும் தொல்லியல் திணைக்கள அலுவலகத்துக்குமான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, இராணுவத்தினரின் பங்கேற்புடன் இடம்பெற்றுள்ளது. இந்த அடிக்கல் நாட்டும் நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை (13) முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜென்ரல் உபாலி ராஜபக்ஸவின் பங்கேற்புடன் இடம்பெற்றுள்ளது தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகத்தின் அனுமதியுடன், திணைக்களத்தின் திட்டங்களின்படி, குறித்த கட்டிடத்துக்கு அடிக்கல் நா…

    • 64 replies
    • 4.6k views
  24. தடுப்பூசி திருட்டு தொடர்பில் விசாரணை ஆரம்பம் 90,000 ரூபாய் பெறுமதியான சைனோபார்ம் தடுப்பூசிகள் திருடப்பட்டமை தொடர்பில் காலி குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. காலி, ஹபராதுவ சுகாதார வைத்திய அதிகாரியின் அலுவலகத்தில் இருந்த 30 தடுப்பூசிகள் திருடப்பட்டதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஹபராதுவ சுகாதார வைத்திய அதிகாரியின் முறைப்பாட்டிற்கு அமைய விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.https://www.tamilmirror.lk/செய்திகள்/தடபபச-தரடட-தடரபல-வசரண-ஆரமபம/175-274327

  25. மாவட்ட பொது வைத்தியசாலைகளை மத்திய அரசின் கீழ் கொண்டு வருவது அரசியலமைப்பை மீறும் செயல் – ப. சத்தியலிங்கம் மாவட்ட பொது வைத்தியசாலைகளை மத்திய சுகாதார அமைச்சின் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவர எடுக்கப்படும் நடவடிகையானது அரசியலமைப்பை அப்பட்டமாக மீறும் செயல் என வட மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரும் தமிழரசுக்கட்சியின் பதில் செயலாளருமான மருத்துவர் ப. சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். மத்திய அரசாங்கத்தின் கீழ் மாவட்ட பொது வைத்தியசாலைகளை பொறுப்பேற்பது தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 14/06/2021 ம் திகதியன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளென அரசாங்க தகவல் திணைகளத்தால் அறிவிக்கப்பட்டதன்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.