ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143638 topics in this forum
-
சர்வதேச தலையீட்டுக்கான அழைப்பின் பின்னணி நிலை 05.12.2007 கொழும்பிலும் சுற்றுப்புறங்களிலும் தமிழ்பேசும் மக்கள் அப்பட்டமாக பகிரங்கமாக இனஒடுக்கல் செயற்பாட்டுப் போக்கில் கைது செய்யப்படுவதும், ஆடு, மாடு மந்தைகள் போல அடைக்கப்படுவதும் கடுங் கண்டனத்துக்கு உள்ளாகியிருக்கின்றது. அரசுத் தரப்பின் நியாயப்படுத்தப்பட முடியாத இந்தக் கொடுங்கோன்மைப் போக்குக் குறித்து நாடாளுமன்றத்திலேயே ஜே.வி.பி., ஐ.தே.கட்சி போன்றன பகிரங்கமாகக் கண்டிக்கும் அளவுக்கு நிலைமை போய்விட்டது. ஏற்கனவே கொழும்பு விடுதிகளில் இருந்து தமிழர்களைப் பலவந்தமாக ஏற்றி வவுனியாவுக்குக் கடத்த முயன்ற நடவடிக்கைக்காக உயர்நீதிமன்றத்திடம் அரசுத் தரப்பு வாங்கிக்கட்டி மூக்குடைபட்டிருப்பதை ஜே.வி.பி. சுட்டிக் காட்டியிர…
-
- 0 replies
- 1.2k views
-
-
சொல்ஹெய்மின் வருகை யுத்தத்தை தடுக்குமா? * தினமும் நடைபெறும் சம்பவங்களானது முழு அளவிலான போரை நோக்கியே செல்கின்றது நாட்டில் முழு அளவிலான போர் இதுவரை வெடிக்காத போதிலும், பாரிய மோதலைத் தோன்றுவிப்பதற்கான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. தினமும் நடைபெறும் சம்பவங்கள் முழு அளவிலான போரை நோக்கியே செல்கின்றன. புதிய ஜனாதிபதியாக மகிந்த ராஜபக்ஷவும், புதிய இராணுவத் தளபதியாக லெப்.ஜெனரல் சரத் பொன்சேகாவும் பதவியேற்றது முதல் நிலைமை தலைகீழாகிவிட்டது. நிழல் யுத்தம் உச்சமடைந்து நிஜயுத்தமாகிக் கொண்டிருக்கிறது. இதனைத் தடுக்க நோர்வே அமைச்சரும் இலங்கைக்கான விசேட பிரதிநிதியுமான எரிக் சொல்ஹெய்மின் வருகை உதவுமா என்பதுதான் மிகப்பெரும் கேள்வியாகும். தற்போதைய சூழ்நிலையில் தினமும் …
-
- 1 reply
- 1.2k views
-
-
மட்டக்களப்பை ஆக்கிரமிக்கும் சிங்கள இராணுவத்தினர் பட்டிப்பாழை வட்டாரத்தில் உள்ள வரலாற்று சிறப்பு மிகுந்த தாந்தாமலை முருகன் கோயில் கற் சிலைகளை இடித்து சிதைத்துள்ளனர் கிழக்குப் பகுதியினர் இக்கோயிலை ' சின்ன கதிர்காமம்' கோயிலென்று அழைப்பது வழக்கமாகும். இதனை சுற்றியுள்ள 25 ஏக்கர் நில பகுதி, 1959-ஆம் ஆண்டில் சிலோன் நீதிமன்ற ஆணையினரால் சைவ புனித தளமாக முத்திரையிடப் பட்டது. தாந்தாமலை முருகன் கோயில், 1994-ஆம் ஆண்டு முதல் பன்னிரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக புலிகள் படையினரால் காக்கப்பட்டும் நன் முறையில் பராமரிக்கப்பட்டும் வந்தது. ஆனால், நடந்த போருக்குப் பின்னர் அது இலங்கை இராணுவ படையினரின் கைக்கும் கொழும்பு தொல்பொருள் ஆராய்ச்சி துறைக்கும் கைமாறிவிட்டது. இதனிடையே, இச்சைவ கோயிலுக…
-
- 7 replies
- 1.2k views
-
-
Published By: VISHNU 14 MAR, 2025 | 03:37 AM (ஆர்.ராம்) இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரனுக்கும், அமெரிக்க தூதுவர் ஜுலி சங் மற்றும் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல் வெஸ்லி ஸ்டீபன்ஸ் ஆகியோருக்கும் இடையில் இருவேறு சந்திப்புக்கள் இடம்பெற்றுள்ளன. கொழும்பில் உள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரகத்தில் வியாழக்கிழமை (13) நண்பகல் நடைபெற்ற சந்திப்பின்போது, சமகால நிலைமைகள் சம்பந்தமாக உரையாடப்பட்டதாக சுமந்திரன் குறிப்பிட்டார். குறிப்பாக, அரசியல் ரீதியாக தமிழ் மக்களின் நிலைப்பாடுகள், மத்திய அரசாங்கத்தின் செயற்பாடுகள் சம்பந்தமாக உயர்ஸ்தானிகர் மற்றும் அதிகாரிகள் கேட்டறிந்துகொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார். இதனையடுத்து நேற்று மாலை, அ…
-
-
- 30 replies
- 1.2k views
- 1 follower
-
-
[size=4]தவிர்க்கமுடியாத காரணத்தினால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மலேசியாவிற்கு விஜயத்தினை மேற்கொள்ள மாட்டார் என இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலக ஊடக பிரிவு தகவல் தெரிவித்துள்ளன. 8ஆவது உலக இஸ்லாமிய பொருளாதார மன்றம் ஏற்பாடு செய்துள்ள மாநாடு எதிர்வரும் டிசம்பர் 4ஆம் திகதி முதல் 6ஆம் திகதி வரை மலேசியாவில் நடைபெறவுள்ளது. அதன்படி இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்கு மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எனவே அந்த அழைப்பினை ஏற்று மகிந்த மலேசியாவிற்கு செல்வதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ள்பட்டிருந்தன ஆனாலும் தற்போது அவர் தவிர்க்க முடியாத காரணத்தினால் மாநாட்டில் கலந்து கொள்ள மாட்டார் என இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலக ஊடக பிரிவு அறிவித்துள்ளது. இதேவேளை, இலங்கையில் நடைபெற்ற யுத…
-
- 12 replies
- 1.2k views
-
-
மஹிந்த ராஜபக்ச நேற்று பிரித்தானிய பிரதம மந்திரி டொனி பிளயரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். லண்டனின் வடமேற்கு பிரதேசத்தில் அமைந்துள்ள பிளயரின் வாசஸ்தலத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. சந்திப்பானது தனிப்பட்ட சந்திப்பாக அமைந்திருந்ததாக பிளயரின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இதன்போது இலங்கையின் தற்போதைய அரசியல் நிலை தொடர்பாக பேசப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். வட அயர்லாந்தின் சமாதான முனைப்புகள் தொடர்பாக இதன்போது இரண்டு தலைவர்களும் கருத்துக்களை பறிமாறிக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்போது வெளிநாட்டு அமைச்சர் மங்கல சமரவீரவும் பங்கேற்றுள்ளார். http://pathivu.com/index.php?subaction=sho...t_from=&ucat=2&
-
- 2 replies
- 1.2k views
-
-
தியாகி பொன். சிவகுமாரனின் கனவுகளை நிறைவேற்றியவர் பிரபாகரன்: வெ.இளங்குமரன். தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இளைஞர்கள் ஈடுபட்ட எழுச்சிக்கு வித்திட்ட உரும்பிராய் பொன்.சிவகுமாரனின் கனவுகளை தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் நிறைவேற்றினார் என்று தமிழீழ கல்விக் கழகப் பொறுப்பாளர் வெ.இளங்குமரன் தெரிவித்துள்ளார். "புலிகளின் குரல்" வானொலியில் இது தொடர்பாக வெ. இளங்குமரன் பகிர்ந்து கொண்ட தகவல்களின் தொகுப்பு: உரும்பிராயில் 1950 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 26 ஆம் நாள் பொன். சிவகுமாரன் பிறந்தார். யாழ். இந்துக் கல்லூரியில் உயர்கல்வி கற்றவர். அந்தக் காலகட்டத்தில்தான் தரப்படுத்துதல் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்தரப்படுத்தல் திட்டத்துக்கு எதிராகத் தொடங்கப்பட்ட தமிழ் மாணவர் பேரவையில் …
-
- 2 replies
- 1.2k views
-
-
அரசியல் வியூகங்களை ஆழமாய் அறிந்திருந்தவர் சு.ப.தமிழ்ச்செல்வன் FacebookTwitterPinterestEmailGmailViber வன்னிப் பெரு நிலப் பரப்பை விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து முற்றுமுழுதாக விடுவிப்பதற்கான பெரும் தாக்குதல்களை மகிந்த அரசும் படைகளும் ஆரம்பித்த காலப்பகுதியான 2007ஆம் ஆண் டின் நவம்பர் மாதம் 2ஆம் திகதியன்று அதிகாலை வேளையில் கிளிநொச்சி திருவையாறுப் பகுதியில் திடீரென பயங்கரமாக குண்டு வீச்சுத்தாக்குதல்களை வான்படை மேற்கொள்கின்றது. அதிகாலை 5.40 மணியளவில் அந்தப் பகுதியிலிருந்த விடுதலைப் புலிகளின் முகாம் மீது நடத்திய குண்டுவீச்சில் தமிழீழ விடுதலைப் புலிகளி…
-
- 1 reply
- 1.2k views
-
-
காலத்தின் கட்டாயத்தை உணர்ந்து ஒன்றுபடும் நேரம் வந்துவிட்டது; நான் கட்டிய வீட்டுக்குள் வர வெட்கம் எதற்கு? வவுனியா கருத்தரங்கில் ஆனந்தசங்கரி காலத்தின் கட்டாயத்தை உணர்ந்து நாம் அனைவரும் ஒன்று பட வேண்டிய நேரம் வந்துவிட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நான் கட்டிய வீடு. எனது வீட்டுக்குள் வர நான் வெட்கப்பட வேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு உரிமையுடன் கூறினார் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் வி.ஆனந்தசங்கரி. நேற்று முன்தினம் வவுனியா நகர சபை மண்டபத்தில் நடைபெற்ற சமகால அரசியல் கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஆனந்தசங்கரி இப்படிக் கூறினார். வன்னி மாவட்ட கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரான சிவசக்தி ஆனந்தனின் நெறிப்படுத்தலில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்க…
-
- 5 replies
- 1.2k views
-
-
இன்னும் எதுவரை எம்மவரின் உயிர்விலையை அனுமதிக்கபோகிறோம்.
-
- 1 reply
- 1.2k views
-
-
தமிழ் மக்கள் மீதான இன அழிப்பை நிறுத்தி சமாதானத்திற்கான சூழ்நிலையை இலங்கை அரசாங்கம் உருவாக்கவேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார். சமாதானப் பேச்சுவார்த்தைகள் மூலம் மட்டுமே இலங்கையின் இனப்பிரச்சினையை தீர்க்கமுடியும் என அவர் தெரிவித்துள்ளார். தமிழக அரச செயலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இவ்வாறு தெரிவித்த கருணாநிதி அங்கு மேலும் கூறியதாவது: அப்பாவி தமிழர்களை படுகொலை செய்வதையும் அவர்கள் மீது அடக்கு முறைகளை பிரயோகித்து இம்சைப்படுத்துவதையும் இலங்கை அரசு நிறுத்தி சமாதானத்திற்கான வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் இந்திய விஜயத்தின் போது இப்பிரச்சினையை மத்திய அரசாங்கத்தின் முக்கிய கவனத்திற்கு கொண்டு ச…
-
- 2 replies
- 1.2k views
-
-
பெண்கள் உரிமை தொடர்பான கருத்தரங்கு என தெரிவித்து இராணுவ முகாமிற்கு அழைத்துச் சென்றனர் பொதுமக்கள் விசனம்! ஞாயிறு, 21 டிசம்பர் 2008, 12:50 மணி தமிழீழம் [மகான்] மட்டக்களப்பு மாவட்டத்தில சகவாழ்வு மன்றத்தின் ஏற்பாட்டில் பெண்கள் உரிமை தொடர்பான கருத்தரங்கு என தெரிவித்து இராணுவத்தின் அதியுயர் பாதுகாப்பு வலயத்திற்குள் பெண்கள் அழைத்துச் சென்றதாக தொண்டு நிறுவனத்தின் மீது சீற்றம். பெண்கள் உரிமை தொடர்பான கருத்தரங்கு மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் பகுதியில் கடந்த புதன்,வியாழன்,வெள்ளி ஆகிய மூன்று தினங்களில் நடைபெற்றது. எனினும் வெள்ளி மாலை 4.00 மணியளவில் கருத்தரங்கு முடிவுற்றதும் 55 பெண்கள் அதியுயர் பாதுகாப்பு வலயமான வெபர் இராணுவ முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்…
-
- 0 replies
- 1.2k views
-
-
நோர்வேயை வெளியேற்ற வேண்டும் டொனி பிளேயரை இணைத்துக்கொள்ளக்கூடாது: ஜே.வி.பி. சமாதான செயற்பாடுகளில் இந்தியா, ஜப்பான் உட்பட எந்த நாடும் தலையிடக்கூடாது என்கிறது ஜே.வி.பி. பிரிட்டிஷ் பிரதமர் டொனி பிளேயர் தனது பதவிக் காலம் முடிந்தபின்னர் இலங்கையின் சமாதான செயற்பாடுகளில் மத்தியஸ்தராக செயற்பட இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரியவருகின்றது. அதனை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டோம். வெளிநாட்டவர்கள் இலங்கையின் பிரச்சினையில் ஆரம்பத்திலிருந்து தலையிட்டமையின் காரணத்தினாலேயே நாடு இன்று இக்கட்டான நிலையில் உள்ளது என்று ஜே.வி.பி. யின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார். நோர்வேயையும் சமாதான செயற்பாடுகளிலிருந்து வெளியேற்றவேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாங்கள் …
-
- 2 replies
- 1.2k views
-
-
இலங்கை போன்ற உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி நடைபெறும் நாடுகளுக்கு பயணம் செய்வதில் அவதானமாக இருக்குமாறு தனது நாட்டு பிரஜைகளுக்கு அமெரிக்கா பயண எச்சரிக்கை விடுத்துள்ளது. இவ்வாறான பெரிய நிகழ்வுகளின்போது தாக்குதல்களை நடத்துவது பயங்கரவாதிகளுக்கு இலகுவானதாக இருக்கும். இதன் காரணமாக இலங்கை, இந்தியா, பங்களாதேஷ் போன்ற நாடுகளுக்கு பயணம் செய்வதில் அவதானத்துடன் இருக்குமாறு அமெரிக்க இராஜங்கத் திணைக்களம் தனது நாட்டுப் பிரஜைகளுக்கு தெரிவித்துள்ளது. 2011ஆம் ஆண்டுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி பெப்ரவரி மாதம் 19ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 2ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இவ்வாறான தாக்குதல்கள் இடம்பெறும் என்பது பற்றிய குறிப்பான தகவல்கள் எதுவும் அமெரிக்காவிடம் இல்லை. இருந்த…
-
- 1 reply
- 1.2k views
-
-
தமிழர் புனர்வாழ்வு கழகம் டென்மார்க்கின் நிலவர அறிக்கை! நிலவர அறிக்கை 23.02.2008 http://tamilvoice.dk/images//trodk_press_release_230208.pdf சிறிலங்கா அரசு தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினுடைய வங்கிக் கணக்குகளை 2006 செப்டம்பர் மாதத்துடன் முடக்கி கொண்டதோடு அதன் தொடர்ச்சியாக 2007 நவம்பர் மாதத்தில் தடையும் செய்து கொண்டது அதேகாலப் பகுதியில் அமெரிக்காவும் தனது நாட்டிலுள்;ள தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினுடைய வங்கி கணக்குகளை முடக்கி கொண்டதுவும் நாம் அவைரும் அறிந்ததே. இதன் பின்ணணியில் எமக்கெதிரான வலுவான குற்றச்சாட்டுக்கள் ஏதும் அற்ற நிலையிலும் தமக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது என்ற ஒரே காரணத்தை முன்வைத்து கொண்டும் டென்மார்க் காவல்துறையினர் 2007 நவம்பர் மாத நடுப்பகு…
-
- 1 reply
- 1.2k views
-
-
அமெரிக்காவின் 460 மில்லியன் டொலர் நிதியுதவி சிறிலங்காவுக்கு கிட்டுமா? சிறிலங்காவின் அரசியல் குழப்பங்களினால், அமெரிக்காவின் பல மில்லியன் டொலர் நிதியுதவி வழங்கும் திட்ட உடன்பாடு கையெழுத்திடும் நிகழ்வு அடுத்த மாதம் நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மிலேனியம் சவால் அமைப்பு, மூலமாக சிறிலங்காவுக்கு 460 மில்லியன் டொலர் நிதியுதவியை வழங்க அமெரிக்கா முடிவு செய்திருந்தது. சிறிலங்காவின் போக்குவரத்து துறையை அபிவிருத்தி செய்வதற்காக, வீதி வலையமைப்புகளை தரமுயர்த்துவதற்கும், கொழும்பு பெருநகர பேருந்து முறையை ஒழுங்கமைப்பதற்கும் இந்த நிதி செலவிடப்படவிருந்தது. இதற்கமைய 300 கி.மீ நீளமான நகர மற்றும் மாகாணங்களுக்கு இடையிலான வீதிகளை புனரமைப்ப…
-
- 0 replies
- 1.2k views
-
-
பிரான்சில் தடையை மீறி பேரணி: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு [திங்கட்கிழமை, 20 ஒக்ரோபர் 2008, 06:00 மு.ப ஈழம்] [ஐரோப்பிய நிருபர்] பல தடைகளையும் மீறி ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் ஒன்றுதிரண்டு பிரான்சில் நேற்று ஞாயிற்றுக்கிழமை தமது உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளனர். பிரான்சின் தலைநகரான பாரிசில் றிபப்பளிக் சதுக்கத்தில் தொடங்கி பாஸ்டில் சதுக்கம் வரையில் நடத்தப்படவிருந்த பேரணிக்கு பிரான்ஸ் காவல்துறை அனுமதி வழங்க மறுத்துவிட்டது. எனினும், பல்லாயிரக்கணக்கான மக்கள் தன்னெழுச்சியாக அறிவிக்கப்பட்டிருந்த இடத்தில் திரளத்தொடங்கினர். இதில் அங்கு வந்திருந்த பிரெஞ்சு மக்களும் கலந்து தமிழ் மக்களுக்கு ஆதரவு தெரிவித்தனர். பலமுறை அனுமதி மறுக்கப்பட்ட போதும் காவல்துறையின் தடைகளையும்…
-
- 6 replies
- 1.2k views
-
-
புதன், 01 ஜூன் 2011 20:30 . தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பையும் அதன் கடந்த கால செயல்பாடுகளையும் கட்டமைப்பு வளர்ச்சியினையும் போற்றிப் புகழ்ந்து உரையாற்றினார் இலங்கை தேசிய பாதுகாப்பு பிரிவின் தற்போதைய பணிப்பாளர் நாயகமாக திகழும் முன்னாள் இராணுவ மேஜர் ஜெனரல் கபில கெந்தவிதாரண. தான் கடந்த 30 வருடங்களுக்கு முன்னார் சாதாரண ஒரு சிப்பாயாக இலங்கை படையில் இணைத்ததாகவும் இன்று இந்த பதவி உயர்வுகளை பெற்று பல ஜனாதிபதிகள், பல அமைச்சர்கள், பல பாராளுமன்ற உறுப்பினர்கள், பல அரசியல்வாதிகளை கடந்து தான் இந் நிலைக்கு வளர்ச்சியடைந்ததாகத் தெரிவித்தார். தனது இந்த அபார வளர்ச்சிக்கு மிகப் பெரிய காரணமாக அமைந்தது புலிகளின் வளர்ச்சியே என ஆணித்தரமாகத் தெரிவித்து தன்னிறைவடைந்தார். …
-
- 3 replies
- 1.2k views
-
-
Jul 8, 2011 / பகுதி: செய்தி / இன அழிப்பு இராணுவத்தை தத்து எடுக்கும் இந்தியா -தமிழ்நெற் சென்ற புதன், வியாழன், வெள்ளி நாட்களில் முதலாவது “இராணுவமும் இராணுவமும்” நேரடிப் பேச்சுக்கள் நடைபெற்றன. சிறிலங்கா, இந்தியா இராணுவப் பிரதிநிதிகள் அந்த நாட்களில் சந்திப்பை மேற்கொண்டனர். தங்கள் இராணுவப் பயிலகங்களில் கூடுதலான இராணுவப் போதனாசிரியர்களின் சேவையைப் பரிமாறிக் கொள்வதற்கு இரு பகுதியினரும் ஒத்துக்கொண்டனர். இந்திய ஊடகச் செய்திகளின்படி சிறிலங்கா தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை “வெற்றிகரமாக” முடித்துள்ளபடியாலும் இந்தியா இன்னும் ஐம்மு – காஸ்மீர், வடகிழக்கு மாநிலங்களில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராகப் போரிட்டுக் கொண்டிருப்பதாலும் இரு பகுதி இராணுவத்தினரின் அனுபவப் பகிர…
-
- 4 replies
- 1.2k views
-
-
இளைஞர், யுவதிகளை ஏற்றிச் சென்ற இராணுவ வாகனம் விபத்துக்குள்ளானது! ஒருவர் பலி! 19பேர் படுகாயம்! Posted by admin On May 13th, 2011 at 4:48 pm / மட்டக்களப்பு தன்னாமுனையில் இன்று இடம்பெற்ற வீதிவிபத்தில் இளைஞர் ஒருவர் பலியானதுடன் 19 இளைஞர் யுவதிகள் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிகப்பட்டுள்ளனர். மேற்படி இளைஞர் யுவதிகள் சத்துருக்கொண்டானிலுள்ள பயிற்சி நிலையமொன்றில் ஒருவாரகால பயிற்சியை முடித்துவிட்டு மங்களகம எனும்இடத்தை நோக்கி சென்றுகொண்டிருந்தபோது அவர்கள் பயணித்த வாகனம் மரத்தில் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அவர்கள் பயணம் செய்த இராணுவ வாகனமொன்றே டயர்களில் காற்று இறங்கியதால் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. sari…
-
- 0 replies
- 1.2k views
-
-
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் ஊர்வலத்திற்குச் சென்னை மாநகர ஆணையாளர் தடைவிதித்திருப்பதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இது தமிழக அரசின் மனித நேயமற்றப் போக்கினையும் தமிழர் விரோதப் போக்கினையும் எடுத்துக்காட்டுகிறது. என தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் அறிக்கையொன்றை விடுத்துள்ளார். நன்றி : sankathi.com
-
- 2 replies
- 1.2k views
-
-
வீட்டுப் பெண்கள் மீது குத்துச்சண்டை ஒத்திகை கி.பகவான் உடற்பயிற்சிக் கூடத்தில் உடற்பயிற்சியை மேற்கொண்ட பின்னர் வீட்டுக்குச் சென்றவர்கள், வீட்டிலிருந்த பெண்கள் மீது குத்துச்சண்டை ஒத்திகை பார்த்த சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. ஞாயிற்றுக்கிழமை (29) இடம்பெற்ற இந்த சம்பவத்தால், இரண்டு பெண்கள் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உடற்பயிற்சி கூடத்தில் செய்து பார்த்த உடற்பயிற்சியை, மதுபோதையில் வீட்டுக்குச் சென்று அங்குள்ள பெண்கள் மீது அதனைச்செய்து பார்த்தமையாலேயே இந்த விபரீதம் இடம்பெற்றுள்ளது. நாவற்குழி மற்றும் பெருங்குளம் பகுதியில் உடற்பயிற்சி…
-
- 1 reply
- 1.2k views
-
-
பிரசுரித்தவர்: NILAA June 24, 2011 தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இக்காலப் பகுதியில் டெலோ அமைப்பு கொழும்பில் ஒரு மாநாட்டை நடாத்த திட்டமிடுவதாக கதிரவன் இணையத்தளத்தின் சிறப்புச் செய்தியாளர் தெரிவிக்கின்றார். அண்மையில் பிரித்தானியாவில் இருந்து வருகை தந்த டெலோ அமைப்பின் மட்டக்களப்பு அமைப்பாளர் ஜனா என்றழைக்கப்படும் கோ.கருணாகரன் தலைமையில் சிவாஜிலிங்கம்,டெலோ அமைப்பின் முதல்வர் ஸ்ரீகாந்தா,மட்டக்களப்பின் டெலோ பொறுப்பாளர் பிரசன்னா ஆகியோர் நேற்றைய தினம் கொழும்பில் முக்கிய கூட்டம் ஒன்றை நடத்தியதாகவும் இக் கூட்டத்தில் டெலோ அமைப்புச் சார்பாக கொழும்பில் மாநாடு ஒன்றை நடத்துவதற்கு ஆலோசிக்கப் பட்டுள்ளதாகவும் தெரி…
-
- 0 replies
- 1.2k views
-
-
எந்த ஆவணங்களுமின்றி வீதியில் நடந்து சென்ற நாராயணனை வெள்ளை வான் கடத்தவில்லை என்றால் அது அவரது அதிஷ்டம்: மனோ கணேசன் [சனிக்கிழமை, 16 ஓகஸ்ட் 2008, 09:02 பி.ப ஈழம்] [க.நித்தியா] தேசிய அடையாள அட்டை மற்றும் சிறிலங்கா காவல்துறை பதிவு பத்திரம் எதுவும் இல்லாமல் கொழும்பு வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்த இந்திய பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகர் எம்.கே. நாராயணனை வெள்ளை வான் குழுவினர் கடத்தவில்லை என்றால் அதற்கு அவர் தனது குலதெய்வம் சிவபெருமானுக்கு நன்றி சொல்லவேண்டும் என்று மேல் மாகாண மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- இந்திய பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகர் எம்.கே. நாராயணன் சார்க் மாநாட்டு மண்…
-
- 4 replies
- 1.2k views
-
-
கிழக்கில் முளைக்கும் புத்தர்களால் சிறுபான்மையினர் மத்தியில் அச்சம் கிழக்கில் மீண்டும் சிங்கள- முஸ்லிம் கலவரமொன்றை தோற்றுவிப்பதில் ஒரு சக்தி மிக முனைப்புடன் செயற்பட்டு வருகிறது. காலத்துக்குக் காலம் முஸ்லிம்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் ஏதோவொரு திட்டத்தைத் தீட்டி கலவரங்களைத் தோற்றுவித்து வருகின்றனர். மிகக் கூடுதலாக சமய விவகாரத்தோடு சம்பந்தப்படுத்தியே பேரினவாத சிங்கள சக்திகள் முஸ்லிம் சமூகத்தைச் சீண்டிப்பார்க்கின்றன. சுதந்திரத்துக்கு முன்னரும் பின்னரும் இந்த அவலம் இடையிடையே தலைதூக்கவே செய்கின்றது. பௌத்த இனவாதச் சக்தியொன்று அதிலும் தீவிரப் போக்குக் கொண்ட சக்தியொன்று சிங்கள சமூகத்தை முஸ்லிம் சமூகத்துக்கெதிராகத் தூண்டிவிட்டு அதில் குளிர்காய்ந்து வருகின்றது. மு…
-
- 1 reply
- 1.2k views
-