ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143647 topics in this forum
-
இலங்கை விவகாரங்களில் வெளிநாடுகள் தலையிடுவதை ஏற்க முடியாது – சீனத் தூதுவர் 5 Views “மனித உரிமைகள் சார்ந்த விடயங்கள், இன முரண்பாடுகளுக்கான தீர்வுகள் போன்ற விடயங்கள் இலங்கையின் உள்ளக விடயங்களாகும்.இதில் மக்கள் சீனக் குடியரசு ஒருபோதும் தலையீடு செய்யாது. ஏனைய நாடுகள் தலையீடு செய்வதையும் விரும்பாது” என இலங்கைக்கான சீனத் தூதரகத்தின் அரசியல் பிரிவுத் தலைவரும் ஊடகப் பேச்சாளருமான லு சொங் தெரிவித்தார். அத்துடன் மனித உரிமைகள் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது எனவும், இதடினப்படையில் சில நிகழ்ச்சி நிரல்கள் முன்னெடுக்கப்படுகின்றன எனவும் அவர் சுட்டிக்காட்டினார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்ஸிலின் மார்ச் மாதக் கூட்டத் தொடரில…
-
- 5 replies
- 708 views
-
-
எமது பொறுமைக்கும் ஓர் எல்லையுண்டு. எனவே, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா 10 ஆம் திகதிக்கு முன்னர் வழங்கப்படவேண்டும். இல்லையேல் இம்முறை போராட்டமானது வேறு வடிவில் அமையும் - என்று இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளரும், ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வடிவேல் சுரேஷ் எச்சரிக்கை விடுத்தார். நுவரெலியாவில் இன்று (31) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “இந்த நாட்டில் மாறி, மாறி ஆட்சிக்கு வந்த அரசுகள் எமது தொப்புள்கொடி உறவுகளை தொடர்ச்சியாக ஏமாற்றியுள்ள…
-
- 1 reply
- 718 views
-
-
மார்ச் மாதம் 31 முதல் ஒற்றை பயன்பாடு பொலித்தீனிற்கு தடை – வர்த்தமானி ஒரு தடவை மற்றும் குறுகிய காலத்திற்கு பாவனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் எதிர்வரும் மார்ச் மாதம் 31 ஆம் திகதி முதல் தடை செய்யப்படவுள்ளன. இந்த தடை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) சுற்றுச்சூழல் அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய, 20 மில்லிமீற்றர் அல்லது 20 கிராம் நிறைக்கு குறைவான சிறிய பைகள், காற்றடைக்கப்படக் கூடிய விளையாட்டு பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளன. அத்தோடு பிளாஸ்டிக் காம்புகளுடனான கொட்டன் பட்ஸ் ஆகியனவும் குறித்த மார்ச் மாதம் 31 ஆம் திகதி முதல் இருந்து தடை செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. http://athavannews.com/மார்ச்-மாத…
-
- 0 replies
- 324 views
-
-
ஐக்கியநாடுகளுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் வழங்கிய வாக்குறுதிகளில் இருந்து நாடொன்று பின்வாங்கினால் அதற்கான விளைவுகளை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் – சுமந்திரன் நாடொன்று தீர்மானங்களை பின்பற்ற மறுக்கின்றபோது ஐநா சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்துதல் ஏனைய உறுப்புநாடுகள் சர்வதேசநியாயாதிக்கத்தை பயன்படுத்தவேண்டும் என வேண்டுகோள் விடுத்ததல் பயண தடைகளை விதித்தல் போன்ற நடவடிக்கைகளை எடுக்கின்றது என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் சண்டே டைம்சிற்கு தெரிவித்துள்ளார். நாங்கள் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையை வரவேற்கின்றோம்,மனித உரிமை ஆணையாளரின் அலுவலகத்திற்கு நாங்கள் அனுப்பிவைத்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் ஆணையாளரின் அறிக…
-
- 0 replies
- 291 views
-
-
மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை – கடும் சீற்றத்தில் கோத்தபாய சண்டே டைம்ஸ் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை குறித்து கடும் சீற்றமடைந்துள்ளார். ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை கடந்த காலத்தில் வேறு எந்த நாடு குறித்தும் வெளியான அறிக்கைகளை விட உள்ளடக்கத்தில்- தொனியில் முன்னொரு போதும் காணப்படாததாகவும் வழக்கத்திற்கு மாறானதாகவும் காணப்படுகின்றது என ஜனாதிபதியின் ஆலோசகர்கள் அவருக்கு தெரிவித்துள்ளனர். ஐநா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கைக்கு கடும் பதிலை கொடுப்பது குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி திங்கட்கிழமை கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டார். அரசாங்க தரப்பை சேர்ந்த பலர் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டனர். மனித உ…
-
- 3 replies
- 598 views
-
-
கலாநிதி முத்துக்கிருஸ்ணா சர்வானந்தனை வெளியேற்றியது யாழ்.பல்கலை யாழ்ப்பாண பல்கலைக்கழக பொருளியல் விரிவுரையாளரான கலாநிதி முத்துக்கிருஸ்ணா சர்வானந்தனை பல்கலைக்கழகம் வேலையை விட்டு விலக்கியுள்ளது. முன்னைய மைத்திரி கால அரசியலில் பின்கதவால் யாழ்.பல்கலைக்கழகத்தினுள் நுழைந்தவர்கள் கலாநிதி முத்துக்கிருஸ்ணா சர்வானந்தன் மற்றும் அகிலன் கதிர்காமர். துறை தொடர்பில் எந்தவித பரிச்சயமும் இல்லாத போதும் நல்லாட்சி மைத்திரி சிபார்சில் எவ்வாறேனும் யாழ்.பல்கலையினுள் நுழைந்துவிட வேண்டுமென முனைப்பாக இருந்தவர்கள் இவர்கள் இருவருமே. புலி நீக்க அரசியல் அரசசார்பற்ற அமைப்புக்களை களமிறக்கி கல்லா கட்டுவதென்ற தொழிலில் ஈடுபட்டவர்களுள் முக்கியமாவரான கலாநிதி முத்துக்கிருஸ்ணா சர்வானந்தனை…
-
- 3 replies
- 1.1k views
-
-
”தமிழ் தேசியம் என்கின்ற கட்சிகளுடன் சேர்ந்து பயணிப்பதில் ஆட்சேபனை இல்லை” : டக்ளஸ் தமிழ் தேசியம் என்கின்ற கட்சிகளுடன் சேர்ந்து பயணிப்பதில் எனக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் மக்களுக்கு யதார்த்தமான அரசியலையே என்னால் முன்னெடுக்க முடியும் அதற்கு அவர்களால் ஒத்துப் போக முடியுமோ? என கேள்வி எனக்குள் இருக்கிறது என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற பொதுமக்கள் மற்றும் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தமிழ் தேசியக் கட்சிகள் என கூறுபவர்கள் மக்களின் பிரச்சினைகளை தீராப் பி…
-
- 0 replies
- 267 views
-
-
தொழிலாளர் தேசிய சங்கத்தில் இருந்து ஒதுங்கியுள்ளேன் January 31, 2021 பெருந்தோட்டத் தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்குவதே சிறந்த தீர்வாக அமையும் என்று தொழிலாளர் தேசிய முன்னணியின் பொதுச்செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம். திலகராஜ் தெரிவித்தார். ஹட்டனில் இன்று (31.01.2021) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, ” நான் றாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட்ட காலப்பகுதியில் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயம் தொடர்பில் முக்கிய 3 பிரேரணைகளை முன்வைத்திருந்தேன். இதில் குறிப்பாக சம்பள விவகாரத்தில் அரசாங்கம் தலையிட வேண்டும் என்பதனை இரு பிரேரண…
-
- 0 replies
- 242 views
-
-
உருத்திரபுரம் பகுதியில் அமைந்துள்ள உருத்திரபுரீசுவரர் ஆலய பகுதியை தொல்லியல் என்ற பெயரில் ஆக்கிரமிக்க முயற்சி 25 Views கிளிநொச்சி மாவட்டத்தின் உருத்திரபுரம் பகுதியில் அமைந்துள்ள உருத்திரபுரீசுவரர் ஆலய சூழலிலும் தொல்லியல் அடையாளம் இருப்பதாகக் கூறி தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் பொலிஸாருடன் இணைந்து ஆராய்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முல்லைத்தீவு குருந்துார் மற்றும் படலைக்கல்லு (கல்யாணணிபுர) ஆகிய பகுதிகளில் தொல்பொருள் ஆராய்ச்சிகள் என்ற பெயரில் தமிழ் மக்களின் பூர்விக அடையாளங்கள் அழிக்கப்பட்டன. அதே போல் நிலாவரை கிணறு பகுதிகளிலும் இந்நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2…
-
- 2 replies
- 509 views
- 1 follower
-
-
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் 9 உள்ளூராட்சி உறுப்பினர்கள் கட்சியிலிருந்து நீக்கம்! 22 Views யாழ்.மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தரப்புடன் இணைந்து செயற்பட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உள்ளூராட்சி உறுப்பினர்கள் 9 பேர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கொள்கைக்கு எதிராக செயற்பட்டதாக ஒன்பது உறுப்பினர்களுக்கு எதிராக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி நடவடிக்கை எடுத்துள்ளது. இதில் மாநகர சபையைச் சேர்ந்த உறுப்பினர்களும், நல்லூர் பிரதேசசபையைச் சேர்ந்த மூன்று உறுப்பினர்களும் கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்ட…
-
- 1 reply
- 775 views
-
-
(இராஜதுரை ஹஷான்) கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய விவகாரத்தில் பௌத்த மதத் தலைவர்கள் ஒருமித்து தமது நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும். தனி சிங்கள தலைவர் தலைமையிலான அரசாங்கத்தை தோற்றுவிக்க பௌத்த தேரர்கள் முன்னின்று செயற்பட்டுள்ளார்கள். எனவே அரசாங்கம் பௌத்த தேரர்களின் கருத்துக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்தார். பொதுபல சேனா அமைப்பின் காரியாலயத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் , தேசிய வளங்களை பாதுகாப்போம், பிற நாட்டவர்களுக்கு அவற்றை தாரைவார்க்க மாட்டோம் என்பது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதான தேர்தல் பிரச்சாரமாக தேர்தல் காலங்களில்…
-
- 0 replies
- 300 views
-
-
கே .குமணன் முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையிலிருந்த தமிழர்களின் வழிபாட்டு அடையாளங்கள் காணாமலாக்கப்பட்டமைக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்குத் தொடரப்படும் என தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அதேவேளை இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, அவரோடு சேர்ந்தவர்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கொன்றினையும் தொடரவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். குருந்தூர் மலையில் தமிழர்களின் வழிபாட்டு அடையாளங்கள் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் வழக்கொன்றினைத் தொடர்வது தொடர்பில், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், மற்றும் கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் …
-
- 3 replies
- 477 views
-
-
முதலைமச்சர் வேட்பாளராக மாவை சேனாதிராஜா வடக்கு மாகாணத்தின் முதலைமச்சர் வேட்பாளராக தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவை களமிறக்க வேண்டும் என தமிழரசுக் கட்சியின் உயர்மட்டக்குழு இன்று சனிக்கிழமை தீர்மானித்துள்ளது. இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் உயர்மட்டக்குழு வவுனியாவில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் வடக்கு மாகாணத்தின் முதலமைச்சர் வேட்பாளராக தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா அவர்களே போட்டியிடவேண்டும் என முன்மொழிந்த போது எவரும் அந்த தீர்மானத்தை எதிர்க்காததால் அந்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. முதலைமச்சர் வேட்பாளராக மாவை சேனாதிராஜா | Virakesari.lk
-
- 0 replies
- 334 views
-
-
யாழ்.தையிட்டியில் தனியார் காணியையும் உள்ளடக்கி பாரிய விகாரைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது..! யாழ்.வலிகாமம் வடக்கு தையிட்டி பகுதியில் தனியார் காணியில் ஒரு பகுதியையும் எடுத்து “திஸ்ஸ விகாரை” அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டிருக்கின்றது. 100 அடி உயரத்தில் காங்கேசன்துறை திஸ்ஸ விகாரை அமைக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவித்தன.வலி.வடக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இந்த விகாரை அமைப்பதற்கு கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்ட நிலையில் நிரந்தக் கட்டடம் அமைக்க இடைக்காலத் தடை விதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் தையிட்டியில் திஸ்ஸ விகாரை அமைக்க இன்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவால் அடிக்கல் நடப்பட்டுள்ளது.…
-
- 13 replies
- 1.6k views
-
-
விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்க முடியாது என்று எல்லோரும் சொன்ன போரை வெல்ல இந்தியா உதவியது By கிருசாயிதன் இறுதிக் கட்டப் போரின் போது இந்தியாவுடனான நெருங்கிய உறவு விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்க உதவியது என இலங்கையால் மீண்டும் நினைவுபடுத்தப்பட்டுள்ளது.ஜனாதிபதியின் முன்னாள் செயலாளர் லலித் வீரதுங்க நேற்று (வெள்ளிக்கிழமை) இந்தியாவுடன் நடைபெற்ற கலந்துரையாடலின்போது, இந்த விடயத்தை அவர் நினைவு கூர்ந்தார்.அத்துடன், இரு தரப்பினரும் (இந்தியா-இலங்கை) ஒரே பக்கத்தில் இருப்பதை விவாதங்கள் உறுதி செய்துள்ளதாக லலித் வீரதுங்க குறிப்பிட்டார். அத்துடன், வெல்ல முடியாது என்று எல்லோரும் சொன்ன போரை வெல்ல இந்தியா தங்களுக்கு உதவியது என அவர் சுட்டிக்காட்டினார்.இதேவேளை, கொரோனா வைரஸுக்கு எ…
-
- 130 replies
- 10.4k views
-
-
விடுதலை புலிகளின் ஆயுதங்களை விற்க முற்பட்டவர்களுக்கு விளகக்கமறியல் விடுதலைப் புலிகள் பயன்படுத்திய துப்பாக்கிகள் மற்றும் வெடிகுண்டுகளை விற்க முயன்றதாக தெரிவித்து கைது செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் மற்றும் 15 ஒழுங்கமைக்கப்பட்ட குழு உறுப்பினர்களுக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சந்தேகநபர்களை எதிர்வரும் 12ம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு பிரதம நீதவான் மொஹமட் மிஹைல் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். விடுதலைப் புலிகளினால் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் வெடித்த குண்டுகள் மற்றும் டி 56 துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களையே சந்தேகநபர்கள் விற்கமுற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்ந…
-
- 2 replies
- 570 views
-
-
வடக்கு கிழக்கில், தடுப்பூசி ஏற்றும் பணி ஆரம்பித்து வைக்கப்பட்டது January 30, 2021 வடக்கு மாகாண வைத்தியசாலைகள் ஊடாக மருத்துவ சேவையாளர்கள் உள்ளிட்ட சுகாதாரத் துறையினருக்கு கொவிட் -19 தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை இன்று சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது. கொவிட் -19 நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடும் மருத்துவ சேவையாளர்கள் மற்றும் சுகாதாரத் துறையினர்கள் நால்வருக்கு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தடுப்பூசி ஏற்றும் பணி ஆரம்பித்து வைக்கப்பட்டது. வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர், மருத்துவர் த.சத்தியமூர்த்தி ஆகிய இருவரும் போதனா வைத்தியசாலையில் வைத்…
-
- 0 replies
- 391 views
-
-
முன்னேற வேண்டுமாயின் முழு இலங்கையையும் விற்பனை செய்ய வேண்டும் என துறைமுக அதிகார சபையின் தலைவரும், முன்னாள் இராணுவ தளபதியுமான தயா ரத்நாயக்க கூறியதாக சிங்கள பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கையை அபிவிருத்தி செய்ய வேண்டுமாயின் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை மாத்திரமல்ல முழு இலங்கையையும் விற்பனை செய்ய வேண்டும் என அவர் கூறியதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையின் அரசியல்வாதிகள் மற்றும் ஊடகவியாளர்களுடன் நாட்டை முன்னேற்றுவது என்பது கஷ்டமான காரியம் என்பதால், முழு நாட்டையும் விற்பனை செய்து விடுவது நல்லது எனவும் தயா ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது. https://www.tamilwin.com/politics/01/267611?ref=home-latest
-
- 5 replies
- 1.2k views
-
-
இலங்கை சிறந்த அரசாக சர்வதேச ரீதியில் அங்கீகாரம் பெற்றுள்ளது! - ரஷ்யா ஜனநாயகம், இறையாண்மை மற்றும் சமூக நோக்குடைய சிறந்த அரசாக சர்வதேச ரீதியில் இலங்கை அங்கீகாரம் பெற்றுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. ரஷ்யாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அந்நாட்டின் வௌியுறவுத்துறை அமைச்சின் பேச்சாளர் மரியா ஜாகரோவா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடக சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “ ரஷ்யா மற்றும் இலங்கைக்கு இடையிலான இருதரப்பு உறவுகள் தொடர்ச்சியாக ஆக்கபூர்வமானதாகவே காணப்படுகின்றது. அத்துடன் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச ரீதியான விவகாரங்களில் இலங்கையுடனான அரசியல் உறவுகளை நாம் உயர் மட்டத்தில் தொடர்ந்து பேணி வருகின்றோம். மேலும் ரஷ்யா…
-
- 1 reply
- 1.1k views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்திற்கான கொரோனா தடுப்பூசி ஏற்றும் பணிகள் இன்று முதல் ஆரம்பம் 15 Views மட்டக்களப்பு மாவட்டத்திற்கான கொரோனா தடுப்பூசி ஏற்றும் பணிகள் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மேற்ப்பார்வை தாதியர் ஒருவருக்கு முதலாவது தடுப்பூசி இன்று காலை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஏற்றப்பட்டது. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் க.கலாரஞ்சனி தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பிரதி பணிப்பாளர்,வைத்தியசாலையின் வைத்தியர்கள்,தாதியர்கள் கலந்துகொண்டனர். மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் கடமையாற்றும் சுமார் 2 ஆயிரம் ஊழியர்களுக்கு இந்த தடுப்பூசி…
-
- 0 replies
- 316 views
-
-
ஐ.நாவில் நெருக்கடியை ஏற்படுத்தவே வடக்கு, கிழக்கில் போராட்டம்.! - பதறுகின்றது கோட்டா அரசு ஜெனிவாவில் எதிர்வரும் மாதங்களில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 46 ஆவது கூட்டத் தொடரில் இலங்கைக்கு நெருக்குவாரங்களை ஏற்படுத்தும் நோக்குடனே வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் சிவில் சமூக அமைப்புக்கள் செயற்பட்டுக்கொண்டு வருகின்றன. அதற்கமையவே எதிர்வரும் 3 ஆம் திகதி முதல் 6 ஆம் திகதி வரை வடக்கு, கிழக்கில் கவனயீர்ப்புப் போராட்டங்களை நடத்துவதற்கு அந்த அமைப்புக்கள் உத்தேசித்துள்ளன." - இவ்வாறு அமைச்சரவை இணைப் பேச்சாளரும் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்படும் அடக்குமுறைகளைக் கண்டித்து எதிர்வரு…
-
- 1 reply
- 890 views
-
-
எமது கடல் இறைமையை எவருக்கும் தாரை வார்க்க முடியாது!- மூத்த கடலோடி அண்ணாமலை சீற்றம் இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடித்து வருகின்றமை தொடர்கதையாகி வருகிறது.இந்தியாவின் சில அரசியல்வாதிகளும், பெரு முதலாளிகளும் படகு முதலாளிகளாக இருந்து கொண்டு மீன்பிடி தொழிலாளிகளை இலங்கை கடற்கரைக்கு சென்று மீன்பிடித்து வருமாறு விரட்டுவதாகவும் இதனால் எமது மீனவர்களின் பெறுமதி மிக்க வலைகள் அறுக்கப்படுவதுடன், எமது மீன்வளமும், மீன்களின் வாழிடங்களும் அடியோடு அழிக்கப்பட்டு வருகின்றது. இதனால் சிறிய படகுகளில் இன்றும் மீன்பிடித்து வரும் எமது மீனவர்கள் தொடர்ந்தும் வறுமையில் சிக்கி வருகின்றனர். அவர்களின் வாழ்வாதாரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றது.அத்து…
-
- 2 replies
- 810 views
-
-
2019 ஏப்ரல் மாதம் 21ம் திகதி பயங்கரவாத தாக்குதல் ஒன்று இடம்பெறப் போவதாக கிடைத்த வெளிநாட்டு உளவுத் தகவல் தொடர்பில் அரச உளவுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன கண்டிப்பாக, அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபாலவை அறிவுறுத்தி இருப்பார் எனவும், அவ்வாறு அவர் அறிவுறுத்தவில்லை என கூறுவது நம்பும் படியாக இல்லை எனவும் சி.ஐ.டி.யின் முன்னாள் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர கூறினார். உயிர்த்த ஞாயிறு தினம் இடம்பெற்ற தொடர் தற்கொலை தாக்குதல்கள், அதன் பின்னர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் முஸ்லிம்களை இலக்கு வைத்த வன்முறைகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார். க…
-
- 0 replies
- 429 views
-
-
வடக்கு , கிழக்கு மாணவர்கள் இராணுவப் பயிற்சி பெற வேண்டும். அவர்களுக்கு தமிழ் பேசும் அலுவலர்களே பயிற்சியளிக்க வேண்டும். இல்லையேல் பயிற்சிகளை புறக்கணிக்க வேண்டும் என்று சி.வி. விக்னேஸ்வரன் எம்.பி தெரிவித்துள்ளார். 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இராணுவப் பயிற்சி வழங்கப்படும் என்ற பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகரவின் கருத்து தொடர்பிலேயே இதனை தெரிவித்தார். இது தொடர்பான அவரது கேள்விக்கு பதில் அறிக்கையில், https://newuthayan.com/வட-கிழக்கு-மாணவர்கள்-இரா/ See more Previous article
-
- 1 reply
- 776 views
-
-
(நா.தனுஜா) நாட்டின் அனைத்துப் பிரஜைகளுக்கும் கொரோனா வைரஸ் தடுப்பூசியை வழங்குவதற்கு அவசியமான நிதியினளவு 8 பில்லியன் ரூபாவாகும். ஆனால் அண்மையில் இடம்பெற்ற சீனி இறக்குமதியின் ஊடாக சுமார் 10 பில்லியன் ரூபா ஊழல் இடம்பெற்றுள்ளது. இத்தகைய செயற்பாடுகளின் ஊடாக நாட்டின் பொருளாதாரத்தை மீளவலுப்படுத்த முடியாது என்று பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க சுட்டிக்காட்டியுள்ளார். http://cdn.virakesari.lk/uploads/medium/file/144140/champika.jpg அநுராதபுரத்தில் 27 ஆம் திகதி புதன்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கூறியதாவது: அமெரிக்க…
-
- 2 replies
- 761 views
-