ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143308 topics in this forum
-
வடக்கில் சுனாமி நினைவேந்தல் நிகழ்வுகளை சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நடாத்துவதற்கு அனுமதி கடந்த 2004 ஆம் ஆண்டு பாதிப்பை ஏற்படுத்திய ஆழிப்பேரலை சுனாமி இயற்கை அனர்த்தத்தினால் காவு கொள்ளப்பட்டோரின் 16 ம் ஆண்டு நினைவு நிகழ்வு நாளை இடம்பெறவுள்ளது.இந்நிலையில் தற்போது நாட்டில் உள்ள கொரோனா தொற்று அச்ச நிலைமை காரணமாக ஒன்று கூடல்கள் மற்றும் பொது நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த சுனாமி இடரால் உயிரிழந்தோரை நினைவு கூரும் நிகழ்வுகளை அப்பகுதி சுகாதார பிரிவினரின் அனுமதியுடன் மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையான மக்களுடன் குறித்த நிகழ்வுகளை நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். இதேவேளை தற்போதுள்ள…
-
- 1 reply
- 388 views
-
-
கேகாலை ஆயுர்வேத வைத்தியர் கைதுசெய்யப்படுவார்- சுகாதார அமைச்சின் சிரேஸ்ட அதிகாரி எச்சரிக்கை Rajeevan ArasaratnamDecember 25, 2020 கேகாலை ஆயுர்வேத மருத்துவர் தம்மிகபண்டார மருந்துவிநியோகத்திற்காக பெருமளவு மக்களை ஒரே இடத்தில்; பெருமளவில் காணப்படும் நிலையை ஊக்குவித்தால் அவர் கைதுசெய்யப்படுவார் என கேகாலை சுகாதார மருத்துவ அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார். விதிமுறைகளை மீறியமைக்காக கேகாலை வைத்தியருக்கு எதிராக எதிhகாலத்தில் நடவடிக்கை எடுக்கப்படலாம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணரட்ண தெரிவித்துள்ளார். மருந்தினை பெறுவதற்காக பெருமளவு மக்கள் வைத்தியரின் வீட்டின் முன்னாள் காணப்பட்டமை இது இரண்டாவது தடவை என தெரிவித்துள்ள அசேல குணவர்த்தன இதன் காரணமாக…
-
- 0 replies
- 362 views
-
-
ஒற்றுமைக்காக நல்லெண்ணத்தோடு முயற்சிக்கையில் குற்றங்காண்பதா?
-
- 0 replies
- 451 views
-
-
கடந்த 20 வருடமாக நாடாளுமன்றம் செல்லும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மக்களுக்கு எதனையும் செய்யவில்லையென நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்ட விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும் ,மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவரும்,நாடாளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று நடைபெற்றது. சர்வதேச விவசாயிகள் தினத்தினை முன்னிட்டு தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாயிகள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து இங்கு ஆராயப்பட்டது. அறுவடை காலத்தில் விவசாயிக…
-
- 11 replies
- 875 views
-
-
விக்னேஸ்வரன் தலைமையிலான கூட்டணியும் புதிய அரசியலமைப்பு வரைவை சமர்ப்பிக்கும் - சுரேஷ் பிரேமச்சந்திரன் (ஆர்.ராம்) தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான கூட்டணி புதிய அரசியலமைப்புக்கான முன்மொழிவுகளடங்கிய வரைவினை தனியாக சமர்ப்பிக்கவுள்ளதாக அக்கூட்டணியின் பங்காளிக்கட்சியான மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இந்தவரைவானது தமிழ் மக்கள் பேரவை, வடமாகாணசபை ஆகியதரப்பினரால் உருவாக்கப்பட்ட அரசியல் தீர்வு திட்டங்களையும், சி.வி.விக்னேஸ்வரனினால் தயாரிக்கப்படும் வரைவினையும் மற்றும் பங்காளிக்கட்சிகளின் முன்மொழிவுகளையும் ஒன்றிணைத்து மேம்பட்டதாக இறுதி செய்யப்…
-
- 0 replies
- 370 views
-
-
கோத்தாபய அரசின் ஊடக அடக்குமுறை – உதயனுக்கு எதிராக வழக்கு! தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்த நாளன்று அவரது புகைப்படத்தை பிரசுரித்தமை தொடர்பில் “உதயன்” பத்திரிகைக்கு எதிராக பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் பொலிஸாரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியால் இந்த வழக்கு இம்மாத ஆரம்பத்தில் தாக்கல் செய்யப்படடது. இந்நிலையில் இந்த வழக்கு மார்ச் 21 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட அமைப்பின் தலைவரது படத்தையும், சொற்களையும் பிரசுரித்தமை பயங்கரவாத தடை சட்டத்திற்கு உட்பட்ட குற்றம் என்று தெரிவித்தே இந்த வழக்கு தாக்கலாகியுள்ளது. கோத்தாபய அரசின் ஊடக அடக்குமுறை - உதயனுக்கு எதிராக வழக்கு!…
-
- 1 reply
- 553 views
-
-
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை அரசிடம் கையளிப்பு – அடுத்த வாரம் இலங்கை பதில் அனுப்பும் ஜெனிவாவில் மார்ச் மாதம் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரால் இலங்கை தொடர்பாக சமர்ப்பிக்கப்படவிருக்கும் விரிவான அறிக்கை கொழும்பு அரசுக்கு கையளிக்கப்பட்டுவிட்டது. அதற்கான இலங்கை அரசின் பதில் அடுத்த வாரமளவில் ஜெனிவாவுக்கு வழங்கப்படுவதற்காக கொழும்பில் உள்ள ஐ.நா. அலுவலகத்துக்கு கையளிக்கப்படும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் எம்.பியுமான எம்.ஏ.சுமந்திரனிடம் இத்தகவலை வெளியிட்டிருக்கின்றார் கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தூதரகத்தின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ஹனாசிங்கர். …
-
- 3 replies
- 950 views
-
-
கொரோனாவிலிருந்து மக்கள் விரைவாக விடுபட வேண்டும் – மன்னார் மறைமாவட்ட ஆயரின் விசேட செய்தி -காணொளி கொரோனா தொற்று விரைவாக ஒழிக்கப்பட வேண்டும். மக்கள் தொற்றில் இருந்து விரைவாக விடுபட வேண்டும் என நத்தார் காலத்திலே இறைவனை வேண்டுவோம் என மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்தார். மன்னார் மறைமாவட்டத்தின் நத்தார் திருவிழா தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “இவ்வருடம் நத்தார் திருவிழாவை நாங்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும். எமக்கு மகிழ்ச்சியை கொண்டு வரும் யேசுநாதர் பிறப்பு விழாவை நாங்கள் கொண்டாடுகின்றோம். இவ்வருடம் கோவிட் கொள்ளை நோய் காரணமாக பலர் துன்பப்படுகின்றனர். த…
-
- 0 replies
- 239 views
-
-
தமிழ் அரசியல் கைதிகளை உடன் விடுவிக்க வேண்டும்- வலி.மேற்கு பிரதேச சபையில் தீர்மானம் 28 Views தமிழ் அரசியல் கைதிகள் கொரோனாவின் பிடியில் சிக்கித் தவிக்கின்ற நிலையில், அவர்களை விடுவிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலி.மேற்கு பிரதேச சபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சகோதர சிங்கள மக்களும் முற்போக்கு சிங்கள அரசியல் தலைவர்களும் இந்த விடயத்தை மனிதநேய ரீதியில் அணுகி அரசுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் எனவும் வலி.மேற்கு பிரதேச சபை கோரிக்கை விடுத்துள்ளது. வலி.மேற்கு பிரதேச சபையின் 34 ஆவது கூட்டம் பிரதேச சபை மண்டபத்தில் தவிசாளர் த.நடனேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதன்போது, அரசியல் கைதிகளின் விட…
-
- 0 replies
- 276 views
-
-
இனவாதிகளின் பிடிக்குள் அரசாங்கம்; கனத்தை எதிர்ப்புப் போராட்டத்தில் ஹக்கீம் ஆவேசம் December 24, 2020 ஜனாஸா எரிப்புக்கு எதிரான போராட்டத்தின் வீரியத்தைக் கண்டு இந்த அரசாங்கம் இனவாத கும்பலின் கெடுபிடிகளிலிருந்து விடுபட்டு, சர்வதேசம் முழுவதிலும் நடைமுறைப்படுத்தப்படும் கொவிட் – 19 தொற்றினால் இறப்பவர்களை நல்லடக்கம் செய்வதற்கு அனுமதியுண்டு என்கின்ற தீர்மானத்தை அங்கீகரித்து, வர்த்தமானி அறிவித்தலை இனியும் காலம் தாழ்த்தாமல் மாற்றிவிட வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். பொரளை, பொது மயானத்திற்கு அருகில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற அமைதிப் போராட்டத்தில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரி…
-
- 5 replies
- 1.1k views
-
-
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை துறைமுகத்திட்டத்தை கப்பல் துறை அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன, யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புகுழு இணைத்தலைவர் அங்கஜன் இராமநாதன் மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரால் நேற்று (23.12.2020) கண்காணிப்பு விஜயம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அவ் விஜயத்தின் போது காங்கேசன்துறை - காரைக்கால் இடையே ஆன கப்பல் சேவைக்கு ஆய்வு செய்யப்பட்டது.இவ்விஜயத்தின் போது ஊடகத்திற்கு கருத்து தெரிவித்த அமைச்சர் அடிப்படை வேலைகளை முடித்து கொண்டு விரைவில் துறைமுகம் திறக்கப்படும் என்றார். இவ் அபிவிருத்தி திட்டமானது 45.27 மில்லியன் (அமெரிக்க டொலர்) ரூபாய் செலவில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. காங்கேசன்துறை துறைமுகம் ம…
-
- 4 replies
- 850 views
-
-
(நா.தனுஜா) கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களைத் தகனம் செய்யவேண்டும் என்ற வர்த்தமானி அறிவித்தல் சுமார் 9 மாதங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டது. கடந்த ஒன்பது மாதகாலமாக முஸ்லிம்களின் ஜனாஸாக்களைத் தகனம் செய்யமுடிந்தது என்றால், இப்போது மாத்திரம் ஏன் இது பிரச்சினையாக இருக்கின்றது? என்று சிங்கள ராவய அமைப்பின் பொதுச்செயலாளர் மாகல்கந்தே சுதந்த தேரர் கேள்வி எழுப்பியிருக்கிறார். கொழும்பில் இன்றைய தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியதாவது: கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்வதா? அல்லது தகனம் செய்வதா? என்ற சர்ச்சையொன்று தற…
-
- 1 reply
- 443 views
-
-
யாழ் நகர் கழிவுநீர் வாய்க்கால்கள் மாநகர சபையினரால் சுத்தம் செய்யப்பட்டது! வாடிகால் துப்புரவின் போது மலை போல் குவிந்த பிளாஸ்டிக் கழிவுகள்.
-
- 39 replies
- 3.4k views
-
-
முல்லைத்தீவு கடற்பரப்பில் இருந்து இந்திய மீனவர்களை தாமே துரத்தியடிக்க வேண்டியிருக்கும் – முல்லைத்தீவு மீனவர்கள் எச்சரிக்கை முல்லைத்தீவு மீனவர்கள் நேற்று வெள்ளிக்கிழமை தமது கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து கடற்றொழில் செயற்பாட்டில் ஈடுபடும் இந்திய மீனவர்களை துரத்துவதற்காக படகுகளில் கடலுக்குச் செல்லத் தயாராகியிருந்தனர்.அப்போது அங்கு வருகை தந்த முல்லைத்தீவு மேலதிக அரச அதிபர் மற்றும், கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகளிடம் எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் எடுக்கவேண்டும் என முல்லைத்தீவு மீனவர்கள் அரச அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.தவறினால் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பாரிய போராட்டத்தில் ஈடுபடுவதுடன், இந்திய மீனவர்களை முல்லைத்தீவுக் கடற்பரப்பிலிருந்து தாமே துரத்தியட…
-
- 25 replies
- 1.5k views
-
-
நெதர்லாந்து மற்றும் துருக்கியின் தூதுவர்களை சந்தித்த தினேஷ் குணவர்தன! வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன நெதர்லாந்து மற்றும் துருக்கியின் தூதுவர்களை சந்தித்து தற்போதைய ஒத்துழைப்பின் பல பகுதிகள் குறித்து கலந்துரையாடினார். இக் கலந்துரையாடல் நேற்று முன்தினம் (22) இடம்பெற்றது. இது தொடர்பாக வெளிநாட்டு அமைச்சு நேற்று (23) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு: வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன நெதர்லாந்து மற்றும் துருக்கியின் தூதுவர்களை சந்தித்தார். நெதர்லாந்து தூதுவர் திருமதி. தன்ஜா கொங்க்க்ரிஜ்ப் மற்றும் துருக்கியின் தூதுவர் திருமதி. ஆர். டெமட் செக்கர்சியோக்லு ஆகியோரை 2020 டிசம்பர் 22ஆந் திகதி சந்தித்த வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன, தற்போதைய ஒத…
-
- 0 replies
- 308 views
-
-
தனிமைப்படுத்தல் விதியை மீறிய தவிசாளரை இடைநீக்கம் செய்தார் ஜீவன் தொண்டமான்! by : Benitlas http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2020/12/0000-720x450.jpg அக்கரபத்தனை பிரதேச சபை தலைவர் கதிர்ச்செல்வனை கட்சியிலிருந்து தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது. தனிமைப்படுத்தல் விதிமுறையைமீறி செயற்பட்டதாலேயே அவருக்கு எதிராக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள அக்கரபத்தனை பிரதேச சபை தவிசாளர் தற்போது அம்பாந்தோட்டையிலுள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில்…
-
- 0 replies
- 335 views
-
-
தமிழ் மக்களின் பிரச்சினை ஜெனீவாவில் எதிரொலிக்க ராஜபக்ஷ அரசே காரணம் – சந்திரிகா 33 Views வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகள் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் எதிரொலிக்க ராஜபக்ஷ அரசுதான் முழுப் பொறுப்பு. அதேவேளை, எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஜெனிவா அமர்வில் இலங்கை முஸ்லிம் மக்களின் விவகாரமும் அங்கு எதிரொலிக்கும் நிலைமையையும் இந்த அரசு ஏற்படுத்தியுள்ளது. இது இலங்கை மீதான சர்வதேச சமூகத்தின் அழுத்தத்தை மென்மேலும் அதிகரிக்கச் செய்யும். இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க சுட்டிக்காட்டினார். எதிர்வரும் ஜெனிவா அமர்வில் இலங்கை எதிர் நோக்கவுள்ள பிரச்சினைகள் தொடர்பில் கருத்துரைக்கும்போதே அவர் மே…
-
- 2 replies
- 887 views
-
-
பொறுப்புக்கூறலிலிருந்து அரசாங்கம் விலகாதவாறு பொறிமுறை தேவை : ஐ.நா.வதிவிட ஒருங்கிணைப்பாளரிடம் சுமந்திரன் கோரிக்கை (ஆர்.ராம்) மனித உரிமைகள், மனிதாபிமானச் சட்டங்கள் மீறப்பட்டமை தொடர்பான பொறுப்புக்கூறலிலிருந்து இலங்கை அரசாங்கம் விலகாதவாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள 46ஆவது கூட்டத்தொடரில் கொண்டுவரப்படவுள்ள பிரேரணை அமைய வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார். இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கருடன் நேற்று புதன்கிழமை பிற்பகல் சுமார் 45 நிமிடங்கள் கொழும்பில் உள்ள ஐ.நா.வதிவிட பிர…
-
- 0 replies
- 426 views
-
-
மருதனார்மடம் சந்தைக் கொத்தணியில் ஏற்பட்டுள்ள வைரஸ் தொற்றானது மிகவும் வீரியம் கூடியதாக காணப்படுகின்றது. இதனாலேயே குறுகிய காலத்தில் மிக அதிகமான நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே நாம் அனைவரும் சமூகப் பொறுப்புடன் அமைதியாக வீட்டிலிருந்து எமது பண்டிகைகளைக் கொண்டாடுவோம் என்றும் அவர் கேட்டுள்ளார். இதுதொடர்பில் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, எதிர்வரும் நாட்களில் கிறிஸ்துமஸ் மற்றும் புதுவருட பண்டிகைகள் கொண்டாடப்பட இருக்கின்றது. இச்சூழ்நிலையில் நாட்டில் கொரோனா தொற்று மிக வேகமாகப்பரவி வருகின்றது. …
-
- 1 reply
- 458 views
-
-
யாழ் மாநகரசபை முதல்வர் வேட்பாளராக இம்மானுவேல் ஆனல்ட் தவிர்ந்த வேறு ஒருவரை தமிழ் தேசிய கூட்டமைப்பு நிறுத்தினால், அவரை ஆதரிக்க தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம். நல்லூர் பிரதேசசபைக்கும் புதிய ஒரு வேட்பாளரை நியமித்தால், அவரையும் ஆதரிக்க தயாராக இருப்பதாக தெரிவித்தார். இன்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாண அலுவலகத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இதனை அறிவித்தார். “யாழ் மாநகரசபை முதல்வருக்கு இ.ஆனல்ட்டை தவிர்ந்த இன்னொருவரையும், நல்லூர் பிரதேசசபையின் தவிசாளருக்கு தியாகமூர்த்தி தவிர்ந்த இன்னொருவரையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளராக அறிவித்தால், அவர்களை ஆதரிக்க தமிழ் தேசிய மக்கள் முன்ன…
-
- 4 replies
- 736 views
-
-
20 நாள் குழந்தையின் உடல் தகனம் – வழக்குத் தாக்கல் 59 Views உயிரிழந்த நிலையில் உடல் தகனம் செய்யப்பட்ட 20 நாள் குழந்தையின் பெற்றோர் தங்கள் சட்டத்தரணி மூலமாக அடிப்படை மனித உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்துள்ளனர். கொரோனா தொற்றுக்குள்ளானதாக கூறப்பட்டு, 20 நாட்களேயான சிசுவொன்று பலவந்தமாக தகனம் செய்யப்பட்ட சம்பவம், இலங்கையை மாத்திரமன்றி, பல உலக நாடுகளில் சர்ச்சையை தோற்றுவித்திருந்தது. கோவிட் தொற்றினால் உயிரிழக்கும் தமது உறவினர்களின் ஜனாஸாக்களை தகனம் செய்ய வேண்டாம் என முஸ்லிம் மக்கள் தொடர்ச்சியாக கோரிக்கைகளை விடுத்து வந்தாலும், கொரோனா தொற்றில் உயிரிழக்கும் அனைவரது உடல்களையும் தகனம் செய்யும் கொள்கையை இலங்கை அரசாங்கம் தொட…
-
- 0 replies
- 251 views
-
-
பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவோரை பதிவு செய்யும் நடவடிக்கை ஒன்றை முன்னெடுக்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஊடகத்துறை அமைச்சின் கீழ் இந்த பதிவு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவிக்கின்றார். சமூக வலைத்தளங்களினால் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை தவிர்க்கும் நோக்குடனேயே இந்த திட்டம் முன்னெடுக்கப்படுவதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல குறிப்பிடுகிறார். சமூக வலைத்தள முரண்பாடுகளை கட்டுப்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாடு தம்மிடம் காணப்படுவதாகவும் அவர் கூறுகிறார். பட மூலாதாரம்,KELIYA RAMBUKWELLA FACEBOOK படக்குறி…
-
- 2 replies
- 496 views
-
-
பாலியல் வல்லுறவுக்கு உள்ளான, திருமணத்துக்கு முன் கருவுற்ற பெண்களின் குழந்தைகள் விற்பனை: இலங்கையில் அதிர்ச்சி பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, 'குழந்தைகள் பண்ணை' முறையால், 1980களில் இலங்கையில் தத்து எடுப்பது தற்காலிக தடைக்கு உள்ளானது. (சித்திரிப்புப் படம்) சட்டவிரோதமான முறையில் குழந்தைகளை விற்பனை செய்யும் வணிகம் (குழந்தைகள் பண்ணை) தொடர்பிலான பரபரப்பு தகவலொன்றை இலங்கை போலீஸார் நேற்று (செவ்வாய் கிழமை) வெளியிட்டனர். பாலியல் வல்லுறவுக்கு உள்ளான மற்றும் திருமணத்துக்கு முன் கருத்தரித்த பெண்களிடமிருந்து குழந்தைகளை பெற்று, இந்த சட்டவிரோத வணிகம் நடப்பதாக போலீஸார் தெரிவிக்கின்றனர…
-
- 2 replies
- 936 views
-
-
தொடர் மழையால் கிழக்கில் வெள்ளக்காடு http://static2.tamilmirror.lk/assets/uploads/image_3cce0e60f9.jpg கிழக்கு மாகாணத்தில், கடந்த 3 நாட்களாக தொடர்ச்சியாக பெய்துவரும் பலத்த மழை காரணமாக, அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டத்தின் பல பிரதேசங்களில் வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளதுடன், தாழ்நிலப் பிரதேசங்களில் உள்ள பல வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள், தமது வீடுகளை விட்டு வெளியேறி, உறவினர் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். கொரோனா வைரஸ் அச்சம் நிலவி வரும் இக்காலகட்டத்தில் மக்கள் மிகப்பெரும் அசௌகரியத்தை தற்போது எதிர்நோக்கி வருகின்றனர். முன்னதாக, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் 100 மில்லிமீற்றர் மழை வீழ்ச்…
-
- 3 replies
- 538 views
-
-
கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக இடம்பெற்ற சட்டவிரோத மணல் அகழ்வு காரணமாக ஏற்பட்ட பாரிய பள்ளங்களில் தற்போது மழை நீர் தேங்கி நிற்பதனால் அவை ஆபத்தான பிரதேசங்களாக மாறியுள்ளன என பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். சாதாரண நிலப்பரப்புகளாக காணப்பட்ட பிரதேசங்களில் கடந்த காலங்களில் சட்டவிரோத மணல் அகழ்வு கண்மூடித்தனமாக இடம்பெற்று வந்துள்ளது. இதனை கண்டித்து அவ்வவ்போது மாவட்டத்தில் போராட்டங்களும் இடம்பெற்றன. இருந்தும் சட்டவிரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்த முடியவில்லை, சட்டத்தை பாதுகாக்கின்றவர்களின் ஒத்துழைப்புடனும், அதிகார மற்றும் அரசியல் தரப்பின் ஆதரவுடனும் சட்டவிரோத மணல் அகழ்வு இன்றும் இடம்பெற்று வருகிறது. சட்டவிரோத மணல் அகழ…
-
- 1 reply
- 501 views
-