ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143667 topics in this forum
-
ஒருபோதும் தளர்வடையேன்! சாணக்கியன் சபதம் சர்வதேச சுயாதீன விசாரணை மேற்கொள்ளப்படும் போதே எமக்கு நீதிகிடைப்பது சாத்தியமாகும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். வட கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்திற்கு அனுப்பி வைத்துள்ள கடித்திலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். அவர் அனுப்பி வைத்துள்ள கடித்தில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டத்தை முன்னின்று நடாத்திய காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தாய்மாரில் 71 இற்கும் அதிகமானவர்கள் இறந்து போய் உள்ளதனை ஆவணப்படுத்தி, அதனை கையளிக்கும் வட கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் ஏற்பாட்டில் நடைபெற்ற கையேட்டு நிகழ்வில…
-
- 1 reply
- 548 views
-
-
கிறிஸ்தவர்கள், முஸ்லிம்களுக்கு நீதி கோரி யாழ்.நகரில் போராட்டம்.! கொரோனாத் தொற்றினால் உயிரிழக்கும் கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களின் ஜனாசாக்களை எரிப்பதை நிறுத்தக்கோரி நாடளாவிய ரீதியில் முனைப்புப் பெற்றுவரும் போராட்டத்தின் தொடராக யாழ்ப்பாணத்தின் நகர் பகுதியிலும் போராட்டம் நடைபெற்றுள்ளது. அரசே உனது பலத்தை சிறுபான்மையினர் மீது கட்டவிழ்க்காதே, கிறிஸ்தவ, முஸ்லிம்களின் மத விழுமியங்களில் கை வைக்காதே, கொரோனாவினால் மரணிக்கும் சிறிஸ்தவ, முஸ்லிம்களின் உடல்களை நல்லடக்கத்திற்கு அனுமதியளித்திடு போன்ற வாசகங்களை ஏந்தியவாறு போராட்டக்காரர் போராட்டத்தை முன்னெடுத்தனர். யாழ்.சமூகம் முன்னெடுத்த குறித்த போராட்டத்தில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்க…
-
- 10 replies
- 1.1k views
-
-
கொரோனாவால் இறந்தவர்களை அடக்கம் செய்ய வடக்கு , கிழக்கில் இரு இடங்கள் பரிந்துரை.! கொரோனா வைரஸ் தொற்று நோயால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வதற்குப் பொருத்தமான இரண்டு இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். நிலத்தடி நீர் மட்டம் மிக ஆழமாக இருக்கும் இரண்டு இடங்கள் அடையாளம் காணப்பட்டு அறிக்கையிடப்பட்டுள்ளதாகவும் நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கூறினார். மன்னாரில் மறிச்சுக்கட்டு மற்றும் கிழக்கு மாகாணத்தில் ஏரகம ஆகிய இடங்களில் நிலத்தடி நீா் மட்டம் 30 அடிக்குக் கீழே உள்ளது. இந்நிலையில் இந்த இடங்கள் கொரோனாவால் உயிரிழந்தவர்களைப் புதைக்க ஏற்றவை எனவும் அவர் கூறியுள்ளார். முஸ்லிம்களின் உடல்களை அடக…
-
- 5 replies
- 1.2k views
-
-
கொழும்பில் மாத்திரம் 78 கொரோனா நோயாளிகள் வீட்டில் மரணமடைந்துள்ளனர் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, கடந்த 6 மாதங்களில் கொழும்பு மாநகர சபை எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மட்டும் 78 பேர் தமது வீடுகளிலேயே மரணித்துள்ளதாக, கொழும்பு பிரதான சட்ட வைத்திய அதிகாரி அஜித் தென்னகோன் தெரிவித்தார். இக்காலப் பகுதியில் வீடுகளில் உயிரிழந்த 383 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களுக்கு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளிலேயே அவர்களில் 78 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்தமை கண்டறியப்பட்டுள்ளது. வீடுகளில் மரணிப்போருக்கும் பி.சி.ஆர். பரிசோதனைகளை முன்னெடுக்கும் நடைமுறை கடந்த ஜூன் மாதம் ஆரம்பிக்கப்பட்ட போதும் வீட்டில் உயிரிழந்த முதல் கொவிட் தொற்றாளர் கட…
-
- 0 replies
- 452 views
-
-
கிளிநொச்சியில் யானை உயிரிழப்பு: ஒருவர் கைது கிளிநொச்சி கல்மடு பிரதேசத்தில் யானை உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பகுதிக்கு கடந்த சனிக்கிழமை இரவு வந்த இந்த காட்டு யானை, வயலினை அழித்துள்ளதுடன் அப்பகுதியில் உயிரிழந்து கிடந்துள்ளது. இந்நிலையில் நேற்று காலை வயல் நிலத்தை பார்வையிட சென்ற பொது மக்கள் யானை உயிரிழந்திருப்பது தொடர்பில் கிராமசேவையாளர் ஊடாக வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். மேலும் உயிரிழந்த யானை, தந்தத்துடன் காணப்படுவதுடன் குறித்த பகுதி அடர் காட்டினை அண்மித்த பகுதி என்பதும் குறிப்பிடத்தக்கது. குறித்த யானை சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின் இணைப்பில் சிக்கி உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட…
-
- 0 replies
- 351 views
-
-
வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் நாளைய தினம் இலங்கைக்கு வருகை தர உள்ளதாக விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளார். பரீட்சார்த்த அடிப்படையில் நாளைய தினம் இருநூறுக்கும் மேற்பட்ட வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் மத்தள மகிந்த ராஜபக்ச விமான நிலையத்திற்கு வருகை தர உள்ளனர் என தெரிவித்துள்ளார். நாளைய தினம் பிற்பகல் இந்த சுற்றுலாப் பயணிகள் உக்ரேய்னிலிருந்து இலங்கை வருகை தர உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் கொவிட் தொற்று ஏற்பட்டதனைத் தொடர்ந்து வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்குள் பிரவேசிப்பது தற்காலிக அடிப்படையில் இடைநிறுத்தப்பட்டது. மேலும் சுற்றுலாப் பயணிகள் பரீட்சார்த்த அடிப்படையில் இலங்கை…
-
- 37 replies
- 2.9k views
-
-
வரலாறு ஆவணமயப்படுத்தப்பட வேண்டும் – ‘அழிக்கப்படும் சாட்சியங்கள்’ நூல் வெளியீட்டில் விக்கினேஸ்வரன் 34 Views “எமது வரலாறுகள் நன்மையானதோ தீமையானதோ அனைத்தும் ஆவணமயப்படுத்தப்பட வேண்டும் என்பது அத்தியாவசியமாகின்றது. முன்னர் தான் நாம் எமது சரித்திரங்களை எழுதிவைக்கவில்லை. தொடர்ந்தும் அவ்வாறு வாளாதிருப்பது எமக்கு பலத்த பாதிப்பை ஏற்படுத்தும்” என தமிழ் மக்கள் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், யாழ். மாவட்ட எம்.பி.யுமான சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார். “அழிக்கப்படும் சாட்சியங்கள்” நூல் வெளியீடு யாழ் பொது நூலக மாநாட்டு மண்டபத்தில் இன்று மாலை நடைபெற்ற போது நிகழ்த்திய உரையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இங்கு அவர் முக்கியமாகக்…
-
- 0 replies
- 501 views
-
-
(இராஜதுரை ஹஷான்) ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 46ஆவது கூட்டத்தொடரில் இலங்கையின் பொறுப்புக் கூறலை வலியுறுத்தி அமெரிக்கா மற்றும் பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் கொண்டு வரவுள்ளதாக குறிப்பிடப்படும் புதிய பிரேரணை குறித்து அரசாங்கம் உரிய கவனம் செலுத்தும். நாட்டின் இறையாண்மையை சர்வதேச மட்டத்தில் எப்போதும் விட்டுக் கொடுக்க முடியாது. என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார். http://cdn.virakesari.lk/uploads/medium/file/141727/dadadada.jpg ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் எதிர்வரும் மார்ச் மாதம் இடம் பெறவுள்ள 46 ஆவது கூட்டத்தொடர் குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில், அமெரிக்கா ,பிரித்…
-
- 5 replies
- 900 views
-
-
கிண்ணியாவில் கொட்டும் கடும் மழையிலும் ஜனாசா எரிப்பினை எதிர்த்து கவன் சீலைப் போராட்டம் கிண்ணியா பிரதேச செயலகத்துக்கு முன்பாக இன்று (27) இடம்பெற்றது. கொரோனாவால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாசாக்களை நல்லடக்கம் செய்யாது எரிப்பது கண்டணத்துக்குரியது. இதனால் மத சுதந்திரம் மறுக்கப்படுகிறது. சிவில் சமூக ஒன்றியத்தினால் மேற்கொள்ளப்பட்ட இக் கவனயீர்ப்பில் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ள மகஜரும் கிண்ணியா பிரதேச செயலாளரிடம் இதன் போது கையளிக்கப்பட்டது. இதில் நூற்றுக்கும் அதிகமான மக்கள் பங்கேற்றதுடன் கிண்ணியா உலமா சபை, சூரா சபை,வர்த்தக சம்மேளனம், அனைத்து பள்ளிவாயல் சம்மேளனம் உட்பட உள்ளூராட்சி மன்ற தவிசாளர், உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டு வெள்ளை துணியிலான கவன் ச…
-
- 1 reply
- 593 views
-
-
நேற்று மாலை (26 .12 .2020) யாழ்ப்பாணம் பிரதான வீதியில் அமைந்துள்ள “கலம்’ அமைப்பின் கட்டடத்தில் 6 வது யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழா எளிமையாக ஆரம்பமாகியது . 20 பேர் மட்டுமே கொள்ளக்கூடிதாக அரங்கு ஒழுங்கு படுத்தப்பட்டிருந்தது. கொவிட் 19 க்கு எதிரான சுகாதார நடவடிக்கைகள் இறுக்கமாக பேணப்பட்டிருந்தன. விழாவுக்கான ஒழுங்குகளை கிருதர்சன் நிக்கொலஸ் மேற்கொண்டு நிகழ்வை ஆரம்பித் வைத்தார். அகிலன் பாக்கியநாதன் உட்பட சபையிலிருந்த திரைப்பட ஆர்வலர்களள் மங்கள விளக்கேற்றியதைத் தொடந்து திரைப்பட காட்சி ஆரம்பமாகியது. முதலாவது Mug (2018) என்ற போலந்து திரைப்படம் காண்பிக்கப்பட்டது . இப்படம் 68 வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் வெள்ளிக் கரடி விருதுக்காக ஜுரிக…
-
- 0 replies
- 528 views
-
-
புதிய அரசியலமைப்புக்கான அரசாங்கத்தின் வெளிப்பாடுகள் நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை - சம்பந்தன் கவலை: (ஆர்.ராம்) புதிய அரசியலமைப்பு தொடர்பாக அரசாங்கத்தின் வெளிப்பாடுகள் எமக்கு நம்பிக்கை ஏற்படுத்துவதாக காணப்படவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். எனினும் தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யவல்லதான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்மொழிவுகள் அடுத்தவாரம் நிபுணர்குழுவிடத்தில் சமர்ப்பிக்கப்படும் என்ற முடிவில் மாற்றமில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். புதிய அரசியலமைப்புக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்மொழிவுகள் இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அதில் பரிந்துரைக்கப்பட்டுள்ள விடயங்கள் மற்றும் தற்போதைய ஆட்சியாளர்களின…
-
- 5 replies
- 754 views
-
-
வலுவான பொறுப்புக் கூறல் பொறிமுறைக்குள் இலங்கையை வைத்திருங்கள் – ஹனா சிங்கரிடம் சிறிதரன் வலியுறுத்து BharatiDecember 27, 2020 “ இலங்கையின் சமகால நிலைமைகளையும் இனவழிப்பின் நேரடிச் சாட்சியங்களையும் நேரடியாக கண்டிருப்பவர் என்ற அடிப்படையில் இலங்கை அரசாங்கத்தினை வலுவான பொறுப்புக்கூறல் பொறிமுறையொன்றினுள் வைத்திருப்பதற்கான அனைத்து ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டும்” என ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கருக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அனுப்பியுள்ள கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். அக்கடிதத்தின் முழு விபரம் வருமாறு: ஈழத்தமிழர்களாகிய நாங்கள் இலங்கை அ…
-
- 0 replies
- 521 views
-
-
இராணுவம் படுகொலை செய்த முதலாவது ஊடகவியலாளர் நினைவேந்தல் மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு By Ragavi இலங்கையில் முதலாவது படுகொலை செயட்யப்பட்ட மூத்த ஊடகவியலாளர் அமரர் கணபதிப்பிள்ளை தேவராசாவின் 35வது ஆண்டு நினைவு தினம் மட்டக்களப்பில் அமைந்துள்ள கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்தின் காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (25) இடம்பெற்றது. கிழக்கு ஊடகவியராளர் ஒன்றியத்தின் தலைவர் எல்.தேவஅதிரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரின் சகோதரரான கவிஞர் ஓய்வுபெற்ற அதிபர் அக்கரைப்பாக்கியன் என அழைக்கப்படும் கணபதிப்பிள்ளை பாக்கியராசா, மற்றும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது படுகொலை செய்யப்பட்ட …
-
- 0 replies
- 303 views
-
-
36 வன்முறைக் கும்பல்களில்.... 24 குழுக்கள் இலங்கையில்..! நாட்டில் கட்டமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் 24 குழுக்கள் தொடர்ந்தும் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் இதுவரை நாட்டில் 36 குழுக்கள் இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அதில் பல குழுக்கள் செயலற்ற நிலையில் இருப்பதாகவும் பொலிஸார் பொதுப் பாதுகாப்பு அமைச்சருக்கு தகவல் வழங்கியுள்ளனர். இவ்வாறு அடையாளம் காணப்பட்ட வன்முறைக் கும்பல்களில் சில உறுப்பினர்கள் நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் இருந்து செயற்பட்டு வருகின்றனர் என்றும் பொலிஸார் அறிவித்துள்ளனர். இந்நிலையில் குற்றவியல் சம்பவங்களில் ஈடுபடும் கும்பல்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் பொலிஸ…
-
- 0 replies
- 291 views
-
-
கொழும்பு மக்களுக்கு முதலாவதாக கொரோனா தடுப்பூசி December 27, 2020 இலங்கைக்கு கொரோனா தடுப்பூசியை கொண்டு வருவது தொடர்பாக நாளை (28) நீண்ட பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக அதற்காக இணைப்பதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதியின் ஆலோசகர் லலித் வீரதுங்க குறிப்பிட்டுள்ளார். தடுப்பூசி வழங்கப்பட வேண்டிய பிரிவினரின் தேவை மற்றும் முன்னுரிமை அடிப்படையில் இது தீர்மானிக்கப்படவுள்ளதாகவும் அவா் தொிவித்துள்ளாா். அதேவேளை சுகாதார மற்றும் பாதுகாப்புப் பிரிவு, சனநெரிசல் மிகுந்த கொழும்பு மக்களுக்கு முதலாவதாக இந்தத் தடுப்பூசியை வழங்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார். அத்துடன் கொரோனா தடுப்பூசியை பெறுவதற்காக …
-
- 0 replies
- 443 views
-
-
மறைந்த மருதூர் ஏ மஜீத் பல்துறை வித்தகர் -அனுதாபச் செய்தியில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் இஸ்லாமியத் தமிழ் இலக்கியப் பரப்பில் கிழக்கிலங்கை, சாய்ந்தமருது மண்ணிலிருந்து கோலோச்சிய பெருந்தகை மருதூர் ஏ. மஜீத்தின் மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். அன்னாரின் மறைவு குறித்து விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, நண்பர் மருதூர் ஏ. மஜீத்தை பல்துறை வித்தகர் என்றால் மிகையாகாது. கல்வியலாளராகவும், கவிஞராகவும், எழுத்தாளராகவும், நூலாசிரியராகவும், மூலிகை மருத்துவத்தில் ஈடுபாடுடையவராகவும், தற்…
-
- 0 replies
- 324 views
-
-
சிறீலங்கா வங்கிகளை புறக்கணிக்க வெளிநாட்டு வங்கிகள் முடிவு 30 Views சிறீலங்கா வங்கிகளின் வர்த்தக நடவடிக்கைகள் தொடர்பான கடன் கோரிக்கைகளை வெளிநாட்டு வங்கிகள் புறக்கணிப்பதால் சிறீலங்காவில் உள்ள வியாபாரிகள் கடுமையாக நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் வர்த்தகர்களை இது அதிகம் பாதித்துள்ளது. இலங்கை வங்கியினால் வழங்கப்பட்ட கடன் உறுதி பத்திரத்தை பிரித்தானியா, சுவிற்சலாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளின் வங்கிகள் கடந்த வாரம் நிராகரித்துள்ளன. இது சிறீலங்காவானது மிகப்பெரும் பொருளாதார அழிவை நோக்கிச் செல்வதைக் காண்பிப்பதாக வர்த்தகப் பிரமுகர் ஒருவர் தெர…
-
- 0 replies
- 482 views
-
-
இந்திய வம்சாவழி இலங்கைத் தமிழர்கள், அந்தமான் - நிக்கோபாரில் எதிர் கொள்ளும் துன்பியல் வாழ்வு. இலங்கையின் மலையகப் பகுதிகளில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டு, அந்தமான் மற்றும் நிக்கோபாரின், தொலை தூர கச்சல் தீவில் கட்டாயமாக குடியேற்றப்பட்ட, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இலங்கைத் தமிழ் சமூகம், கடந்த ஐந்து தசாப்தங்களாக பாரிய இன்னல்களை எதிர்கொள்கின்றனர். முறையான மீள்குடியேற்றம் மற்றும் அடிப்படை வாழ்வாதார வசதிகளை கோரி, கடந்த ஒரு மாதமாக இவர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளதாக கலாநிதி எஸ் வெங்கடநாராயணன் எழுதிய பதிவில் குறிப்பிட்டுள்ளார். 1964 ஆம் ஆண்டில் ஸ்ரீமாவோ-சாஸ்திரி ஒப்பந்தத்தின் அடிப்படைய…
-
- 1 reply
- 802 views
-
-
வைத்தியசாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் 14 பேரின் விபரம் வெளியாகியது BharatiDecember 26, 2020வைத்தியசாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் 14 பேரின் விபரம் வெளியாகியது2020-12-26T19:13:52+05:30 FacebookTwitterMore கொரோனாத் தொற்று உட்பட்ட நோய்த் தாக்கங்களால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் 14 பேரின் விபரங்களை குரலற்றவர்களின் குரல் அமைப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் அந்த அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வைத்தியர் சிவரூபன், இரகுபதி சர்மா உட்பட 14 தமிழ் அரசியல் கைதிகள் வெலிக்கடை சிறை மருத்துவமனையில் அனுமதி நாட்டில் கொரோனாத் தொற்று பல கொத்தணிகளாக உருவெடுத்த…
-
- 1 reply
- 412 views
-
-
முஸ்லீம் சமூகத்தினை அவர்களது அடிப்படை மத நம்பிக்கைகளை மீறும் நடைமுறைகளை பின்பற்றுமாறு கட்டாயப்படுத்துவது மனிதாபிமானமற்ற செயல்- உலக தமிழர் பேரவை அறிக்கை முஸ்லீம் சமூகத்தினை அவர்களது அடிப்படை மத நம்பிக்கைகளை மீறும் நடைமுறைகளை பின்பற்றுமாறு கட்டாயப்படுத்துவது மனிதாபிமானமற்ற ஈவிரக்கமற்ற செயல் உலக தமிழர் பேரவை தெரிவித்துள்ளது. அறிக்கையொன்றில் உலக தமிழர் பேரவை இதனை தெரிவித்துள்ளது. கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதில் இலங்கை அடைந்துள்ள குறிப்பிடத்தக்க வெற்றியை பாராட்டும் அதேவேளை கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்கள் என கருதப்படுபவர்கள் அனைவரினதும் உடல்களையும் கட்டாயமாக தகனம் செய்வதற்கு கடும் கண்டனத்தை வெளியிடுவதாக உலக தமிழர் பேரவை தெரிவ…
-
- 5 replies
- 595 views
-
-
மட்டக்களப்பில் மாமனிதர் ஜோசப்பரராஜசிங்கம் அவர்களின் நினைவு தினம் அனுஸ்டிப்பு December 25, 20205:02 pm மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான மாமனிதர் ஜோசப்பரராஜசிங்கத்தின் 15வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுஸ்டிக்கப்பட்டது. மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்தில் வைத்து இயேசு பாலகன் பிறந்த நத்தார் தினமன்று மட்டக்களப்பில் இடம்பெற்ற நத்தார் திருப்பலி ஆராதானையின் போது 2005 ஆம் ஆண்டு இனந்தெரியாத நபர்களினால் இவர் சுட்டுக் கொலைச் செய்யப்பட்டார். தமிழத் தேசிய கூட்டமைப்பின் உருவாக்கத்திற்கு முன்னின்று உழைத்த தலைவர்களில் மிகவும் முக்கியமானவராக கருதப்பட்ட இவர், 1934 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் திகதி பிறந்தார். …
-
- 0 replies
- 293 views
-
-
சர்வதேச அளவில் இலங்கை தனிமைப்படுத்தப்படலாம்! பகிரங்க அறிவிப்பு கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்வது என்ற பிடிவாதமான கொள்கையால் சர்வதேச அளவில் இலங்கை தனிமைப்படுத்தப்படலாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் தெரிவித்தார். இவ்வாறு பிடிவாதமான நிலைப்பாட்டினை அரசாங்கம் முன்னெடுப்பது துரதிஸ்டவசமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரசின் நிலைப்பாடு குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், நாங்கள் முஸ்லிம்கள் நாட்டின் சட்டத்தை பின்பற்றுவது குறித்து கற்றுக்கொடுக்கப்பட்டவர்கள், சமூகத்திற்கு ஏதாவது பாதிப்பு ஏற்படுத்துகின்றது என்றால் நாங்கள் அதனை தவிர்க்கவேண்டும். ஆனால் இந்த விடயத்தில் கொரோனா காரணமாக உயி…
-
- 0 replies
- 656 views
-
-
மறக்க முடியாத அழிவுகளை விட்டுச் சென்ற சுனாமி பேரனர்த்தத்தின் 16ஆம் ஆண்டு நினைவு இன்று BharatiDecember 26, 2020 மறக்க முடியாத அழிவுகளை விட்டுச் சென்ற சுனாமி பேரனர்த்தத்தின் 16ஆம் ஆண்டு நினைவு இன்று2020-12-26T05:39:05+05:30Breaking news, கட்டுரை FacebookTwitterMore சுனாமி பேரனர்த்தம் ஏற்பட்டு இன்றுடன் 16 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இந்தப் பேரனர்த்தத்தில் காவு கொள்ளப்பட்ட உறவுகள் நினைவாக தமிழர் தாயகத்திலும் – நாடு முழுவதும் நிகழ்வுகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 2004 டிசெம்பர் 26 ஆம் திகதி சுமத்ராதீவின் அருகே கடலில் ஏற்பட்ட 9.2 ரிக்டர் அளவிலான நில நடுக்கத்தால் ஆழிப்பேரலை உருவானது. இந்தப் பேரலை இலங்கை, இந்தியா, இந்தோனே…
-
- 4 replies
- 1.3k views
-
-
கேகாலை ஆயுர்வேத வைத்தியர் கைதுசெய்யப்படுவார்- சுகாதார அமைச்சின் சிரேஸ்ட அதிகாரி எச்சரிக்கை Rajeevan ArasaratnamDecember 25, 2020 கேகாலை ஆயுர்வேத மருத்துவர் தம்மிகபண்டார மருந்துவிநியோகத்திற்காக பெருமளவு மக்களை ஒரே இடத்தில்; பெருமளவில் காணப்படும் நிலையை ஊக்குவித்தால் அவர் கைதுசெய்யப்படுவார் என கேகாலை சுகாதார மருத்துவ அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார். விதிமுறைகளை மீறியமைக்காக கேகாலை வைத்தியருக்கு எதிராக எதிhகாலத்தில் நடவடிக்கை எடுக்கப்படலாம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணரட்ண தெரிவித்துள்ளார். மருந்தினை பெறுவதற்காக பெருமளவு மக்கள் வைத்தியரின் வீட்டின் முன்னாள் காணப்பட்டமை இது இரண்டாவது தடவை என தெரிவித்துள்ள அசேல குணவர்த்தன இதன் காரணமாக…
-
- 0 replies
- 365 views
-
-
வடக்கில் சுனாமி நினைவேந்தல் நிகழ்வுகளை சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நடாத்துவதற்கு அனுமதி கடந்த 2004 ஆம் ஆண்டு பாதிப்பை ஏற்படுத்திய ஆழிப்பேரலை சுனாமி இயற்கை அனர்த்தத்தினால் காவு கொள்ளப்பட்டோரின் 16 ம் ஆண்டு நினைவு நிகழ்வு நாளை இடம்பெறவுள்ளது.இந்நிலையில் தற்போது நாட்டில் உள்ள கொரோனா தொற்று அச்ச நிலைமை காரணமாக ஒன்று கூடல்கள் மற்றும் பொது நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த சுனாமி இடரால் உயிரிழந்தோரை நினைவு கூரும் நிகழ்வுகளை அப்பகுதி சுகாதார பிரிவினரின் அனுமதியுடன் மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையான மக்களுடன் குறித்த நிகழ்வுகளை நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். இதேவேளை தற்போதுள்ள…
-
- 1 reply
- 392 views
-