ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142919 topics in this forum
-
பாதுகாப்பு அங்கி அணிந்து பாராளுமன்றம் வந்த ரிஷாட்! விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் பாராளுமன்றிற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். சிறைச்சாலை அதிகாரிகளின் விசேட பாதுகாப்பின் கீழ் சுகாதார பாதுகாப்பு அங்கி அணிந்து அவர் பாராளுமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும். மேலும், சுகாதார பாதுகாப்பு வழிகாட்டல்களுக்கு அமைய பாராளுமன்றில் விசேட ஆசனமொன்றை அவருக்கு ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் பொது நிதியை மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் அண்மையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியல் உத்தரவிற்கு அமைய தனிமைப்படுத்தல் நில…
-
- 3 replies
- 786 views
-
-
கொவிட் 19 தாக்கங்கள் காரணமாக பதுளைக்கு வந்த வெளிநாடுகளைச் சேர்ந்த 25 பேர், மீண்டும் தத்தமது நாடுகளுக்கு செல்லமுடியாமல்,பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கிய வண்ணமுள்ளனர். மீளவும் தத்தமது நாடுகளுக்கு செல்லமுடியாமல், பதுளைப் பகுதியின் எல்ல சுற்றுலா பிரதேச ஹோட்டல்களில் தங்கியுள்ளனர். அவர்களிடமிருந்த பணமும் செலவாகியதினால், பெரும் பிரச்சினைகள் மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். அவர்களிடம் அன்றாட செலவுகளுக்கும் பணம் இல்லாதுள்ளன. குறிப்பிட்ட வெளிநாட்டாரிடம் பணம் இல்லாததால், அவர்கள் தங்கியிருந்த ஹோட்டல்களிலிருந்து வெளியேற்றப்பட்டு, அவ் ஹோட்டல்களும் மூடப்பட்டுள்ளன. செய்வதறியாமல் நடுத்தெருவில் இருந்துவரும் இவ்வெளிநாட்டு உல்லாசபிரயாணிகளை, எல்லப்பகுதியில் “சீல்”விடுதியிலும்,பிறித…
-
- 0 replies
- 351 views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாயிகளை ஊக்குவித்தல் என்னும் பேரில் கிழக்கு மாகாண ஆளுநர் அவர்கள் மேற்கொள்கின்ற திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்தை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு கோரி இலங்கை அரசுக்கு மு.கிழக்கு மாகாணசபை உறுப்பினர், பத்மநாபா-மன்றம்- ஈ.பி.ஆர்.எல்.எப் இரா.துரைரெத்தினம் பகீரங்க வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். இன்று வியாழக்கிழமை (22ம் திகதி பிற்பகல்) அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார் அவர் மேலும் குறிப்பிடுகையில், கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் 40வீதம் தமிழர்கள், 37வீதம் முஸ்லிம்கள், 23வீதம் சிங்களவர்கள் உள்ள நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் 75வீதம் தமிழர்கள், 23வீதம் முஸ்லிம்கள், அண்ணளவாக (1.10) சிங்க…
-
- 0 replies
- 262 views
-
-
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் – சந்தேகத்திடமான வாகனம் மீட்பு 16 Views உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் சம்பவம் தொடர்பாகக் கைதுசெய்யப்பட்டு தடுப்புக் காவலிலுள்ள நபரொருவர் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் மற்றுமொரு ‘வான்’ மட்டக்களப்பு மாவட்ட குற்றவியல் தடுப்பு பிரிவினால் இன்று அட்டானைச்சேனை பகுதியில் வைத்து மீட்கப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புபட்டதாகக் சந்தேகத்தின் பேரில், 2019 ஏப்ரல் 25ஆம் திகதி கைதுசெய்யப்பட்டு, மொனராகலை சிறைச் சாலையில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இந்த ‘வான்’ மீட்கப்பட்டுள்ளது. 2018ஆம் ஆண்டு குறி…
-
- 0 replies
- 164 views
-
-
முன்னாள் வன்னி எம் பி காலமானார் முன்னாள் வன்னிப்பாராளுமன்ற உறுப்பினர் கே.பாலச்சந்திரன் இன்று (22.10.2020) மாரடைப்பால் காலமானார். வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அதிகாலை 2.30 மணியளவில் இவரின் உயிர் பிரிந்துள்ளது. கே.பாலச்சந்திரன் 1994 முதல் 2000 ஆம் ஆண்டு வரை தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் சார்பாக வன்னிப்பாராளுமன்ற உறுப்பினராக இருந்த கே. பாலச்சந்திரன் கண்டியை பிறப்பிடமாக கொண்டவராவார் வவுனியாவில் வசித்து வந்த இவர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தகாலப்பகுதியில் வவுனியாவில் பல்வேறு அபிவிருத்திப்பணிகளை மேற்கொண்டிருந்தார் 1951 ஆம் ஆண்டு பிறந்த இவர் தனது 69 ஆவது வயதில் மாரடைப்பால் காலமானார். https://www.virakesari…
-
- 1 reply
- 483 views
-
-
அமெரிக்க கொடியுடன் நளின் உரை A.Kanagaraj / 2020 ஒக்டோபர் 22 , பி.ப. 03:23 சபைக்குள் அமெரிக்க கொடியை தூக்கி காண்பித்து, ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பியான நளின் பண்டார உரையாற்றிக்கொண்டிருக்கின்றார். அரசியலமைப்பின் 20ஆவது திருத்த சட்டமூலம் மீதான இறுதிநாள் விவாதம், நடைபெற்றுகொண்டிருக்கின்றது. அதில், நளின் பண்டார எம்.பி, தற்போது உரையாற்றிக்கொண்டிருக்கின்றார். இதன்போதே, அமெரிக்காவின் கொடியை காண்பித்து, உரையாற்றிகொண்டிருக்கின்றார். http://www.tamilmirror.lk/செய்திகள்/அமரகக-கடயடன-நளன-உர/175-257294
-
- 0 replies
- 748 views
-
-
’20’ திருத்தம் குறித்து எந்த நாடும் அழுத்தம் பிரயோகிக்க முடியாது.! அரசமைப்பின் 20ஆவது திருத்தம் தொடர்பில் எந்த நாடும் இலங்கை அரசுக்கு அழுத்தம் எதையும் பிரயோகிக்க முடியாது.” இவ்வாறு வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிப்பதற்கான செய்தியாளர் மாநாடு நேற்று இணைய வழி மூலம் இடம்பெற்றது. இதன்போதே அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல மேற்கண்டவாறு கூறினார். கேள்வி:- 20ஆவது திருத்தம் தொடர்பில் இந்தியா ஏதேனும் அழுத்தங்களை பிரயோகித்துள்ளதா.? பதில்:- 20ஆவது திருத்தம் தொடர்பில் எந்த நாடும் இலங்கை அரசுக்கு அழுத்தம் எதையும் பிரயோகிக்க முடியாது. இலங்கை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வெளிநாடுகளின்…
-
- 1 reply
- 477 views
-
-
உங்கள் கண்களை உங்கள் விரல்களினாலேயே குத்திக்கொள்ளாதீர்கள் - சீ.வி.விக்னேஸ்வரன் (ஆர்.யசி.எம்.ஆர்.எம்.வஸீம்) தமிழ் மக்களின் போராட்டங்களை இரும்புக் கரம் கொண்டு நசுக்கும் திட்டம் 20 இன் பின்னால் இருக்கிறது. எமக்கு இடையேயான கட்சி வேறுபாடுகளை மறந்து 20ஆவது திருத்தம் நிறைவேற்றபப்டுவதை தடுக்கவேண்டும் என தமிழ் மக்கள் தேசிய கட்சியின் தலைவர் நீதியரசர் விக்னேஸ்வரன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், சிறுபான்மையினரை பயங்கரவாதிகள் என்று சிந்திப்பது பெரும்பான்மையினரிடம் இருந்து வாக்குகளைப் பெற்றுக் கொடுக்கும். ஆனால் ந…
-
- 0 replies
- 467 views
-
-
அரசாங்கத்துக்குள் வலுக்கின்றது மோதல்- விமலை தாக்க முயன்றார் பொதுஜனபெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் Rajeevan Arasaratnam October 22, 2020அரசாங்கத்துக்குள் வலுக்கின்றது மோதல்- விமலை தாக்க முயன்றார் பொதுஜனபெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்2020-10-22T00:04:52+05:30 FacebookTwitterMore பொதுஜனபெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கட்டகொட அமைச்சர் விமல்வீரவன்சவை தாக்க முயன்றார் என தேசிய விடுதலை முன்னணி குற்றம்சாட்டியுள்ளது. 20வது திருத்தம் குறித்த கருத்துவேறுபாடு காரணமாகவே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 20வது திருத்தத்தில் இரட்டை பிரஜாவுரிமை குறித்து காணப்படும் விடயம் குறித்து தனது கட்சியான தேசிய விடுதலை முன்னணி அதிருப்…
-
- 1 reply
- 476 views
-
-
ரிசாத் பதியுதீன் கைதுசெய்யப்பட்டது எப்படி ? இதுவரை வெளிவராத புதிய தகவல்கள் Rajeevan Arasaratnam நேற்று அதிகாலை , ஆறு நாட்களாக பொலிஸாரின் கண்களில் மண்ணைத் தூவிக்கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத்பதியுதீன் தெகிவளையில் வைத்து சிஐடியினரால் கைதுசெய்யப்பட்டார். அதுவரை அந்த ஆறு நாட்களாக அவர் எங்கிருக்கின்றார், யாருடன் தொடர்பைப் பேணுகின்றார், அவருடன் யார் யார் உள்ளனர்? அவர் எங்கு மறைந்திருக்கின்றார் என்ற விடயங்கள் எவருக்கும் தெரியாதவையாக காணப்பட்டன. இந்தக் கள்ளன்- பொலிஸ் விளையாட்டிற்குக் காரணம் ரிசாத் அரச நிதியை தவறாக பயன்படுத்தியதேயாகும். ஜனாதிபதித் தேர்தலின் போது இடம்பெயர்ந்து வாழும் …
-
- 2 replies
- 1.2k views
-
-
றோஹித ராஜபக்சவை அலரி மாளிகையைவிட்டு வெளியேறுமாறு ஜனாதிபதி உத்தரவு? பிரதம மந்திரி மஹிந்த ராஜபக்சவின் குடும்பம் இதுவரை காலமும் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட இரண்டு உத்தியோகபூர்வ மாளிகைகளில் வசித்து வந்தனர். முன்னாள் ஜனாதிபதி என்ற அந்தஸ்தில் விஜேராமா மாளிகையிலும், தற்போதைய பிரதமர் என்ற வகையில் அலரி மாளிகையிலும் மஹிந்த ராஜபக்ச, அவரது மக்களின் திருமண சம்பந்திகள் குடும்பம் என எல்லோரும் ஒரு கூட்டுக்குடும்பமாக, இரண்டு மாளிகைகளிலும் வாழ்ந்து வந்தனர். இருப்பினும், சமீபத்தில், மஹிந்த குடும்பம் அலரி மாளிகையை விட்டு, விஜேராமா மாளிகைக்கு குடிபெயர்ந்திருந்தது. ஆனால் அவரது மூன்றாவது மகன் றோஹித, மனைவி, மனைவியின் பெற்றோரின் குடும்பம் ஆகியோர் விஜேராமாவுக்கு குடிபெ…
-
- 7 replies
- 1.3k views
-
-
இரட்டைக் குடியுரிமை நாட்டுக்குத் தேவையில்லை- வாசுதேவ by : Litharsan http://athavannews.com/wp-content/uploads/2020/10/Vasudeva-Nanayakkara.jpg நாட்டின் இறையாண்மையைக் கருத்திற் கொண்டு, இரட்டைக் குடியுரிமை நாட்டுக்குத் தேவையில்லை என்பதே தனது நிலைப்பாடு என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (புதன்கிழமை) ஆரம்பமான 20ஆவது திருத்தத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் தெரிவிக்கையில், “ஜனநாயகம் தான் இன்று முக்கியமாகக் காணப்படுகிறது. எனினும், உலகில் எந்தவொரு நாட்டிலும் முழுமையான ஜனநாகம் இல்லை என்றே கூறவேண்டும். …
-
- 3 replies
- 707 views
-
-
கொரோனா தொற்றினை தடுக்க முகக்கவசங்களை அணிவதோடு மட்டுமல்லாது, டெங்கு நோய் பரவுகின்ற சூழ்நிலையினையையும் இல்லாது செய்யவேண்டும் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் சி.யமுனாநந்தா கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போதைய டெங்கு தொற்று நிலைமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே சி.யமுனாநந்தா இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது டெங்கு நோயானது யாழ்ப்பாண மாவட்டத்தில் மீள பரவ ஆரம்பித்துள்ளது, நேற்று மாத்திரம் 5 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் பாசையூர் ,சுழிபுரம் சுன்னாகம், அரியாலை மற்றும் கோப்பாய் பகுதியை…
-
- 0 replies
- 299 views
-
-
(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) கொவிட்-19 வைரஸ் பரவல் நாட்டில் சமூக பரவலாக மாறிவிட்டது. இது மிகவும் மோசமான நிலைமையை உருவாக்கும், எனினும் அரசாங்கம் உண்மைகளை மூடி மறைக்கின்றது என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சபையில் குற்றம் சுமத்திய போதிலும் அதனை முழுமையாக நிராகரித்த சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, கொரோனா வைரஸ் பரவல் சமூக பரவலாக மாறவே இல்லை, என அடித்துக் கூறினார். இதனை அடுத்து சுகாதார அமைச்சருக்கும் எதிர்க்கட்சி தலைவருக்கும் இடையில் சபையில் கடுமையான வாக்குவாதம் இடம்பெற்றது. பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை சபை அமர்வுகளின் போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் பரவல் குறித்த அச்சுறுத்தல் நிலைமை தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் சஜித்…
-
- 0 replies
- 263 views
-
-
தனக்கு கிடைத்த பதவி தொடர்பில் யோசிதவின் கருத்து பிரதமர் அலுவலகத்தின் பிரதானியாக கடமையாற்ற தனக்கு அனுபவம் இருப்பதாக யோசித ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அரசியல் பழிவாங்கல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராக வருகை தந்த சந்தர்ப்பத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்த பதவி தனது சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். http://tamil.adaderana.lk/news.php?nid=135406
-
- 2 replies
- 1.1k views
-
-
தமிழர்களின் கருத்தை உள்ளடக்க வேண்டும், 20 ஆவது திருத்தம் இறையாண்மையை மீறுகிறது – சம்பந்தன் by : Jeyachandran Vithushan http://athavannews.com/wp-content/uploads/2020/10/sampanthan.jpg அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் நாட்டு மக்களின் இறையாண்மையை மீறுகிறது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அரசியலமைப்பின் 20 வது திருத்தம் குறித்த இரண்டு நாள் விவாதம் நாடாளுமன்றில் இன்று (புதன்கிழமை) ஆரம்பமாகியுள்ள நிலையில் 20 ஆவது திருத்தம் குறித்து கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். ஆணைக்குழுக்களின் உறுப்பினர்கள், நீதிபதிகள் போன்றோரை நியமித்தல் மற்றும் நீக்…
-
- 2 replies
- 710 views
-
-
கலைப்பீட மோதல் குறித்த விசாரணை நாளை ஆரம்பம்! யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களிடையே கடந்த 8 ஆம் திகதி இடம்பெற்ற மோதல் சம்பவம் குறித்து, விசாரணைகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட தனி நபர் ஆயத்தின் விசாரணைகள் 21 ஆம் திகதி, புதன்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளன. கடந்த 8 ஆம் திகதி கலைப்பீடத்தின் இரண்டாம், மூன்றாம் வருட மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறு முற்றி மோதலாகியிருந்தது. அன்று மாலை வளாகத்தினுள் இடம்பெற்ற மோதலின் போது சமரசம் செய்ய முற்பட்ட பல்கலைக்கழகத் துணைவேந்தர் உட்பட அதிகாரிகளுடன் முரண்பட்டுக் கொண்ட மூன்றாம் வருட மாணவர்கள், துணைவேந்தர் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் தம்மைத் தாக்கியதாக ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தனர். எனினும், உடனடியாகவே மாணவர்கள் மத்…
-
- 0 replies
- 402 views
-
-
நானாட்டானில் மேலும் சில புராதன பொருட்கள் கண்டுபிடிப்பு நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பள்ளங்கோட்டை கிராம அலுவலகர் பிரிவில் உள்ள புறண்டிவெளி கிராமத்தில் உள்ள புறண்டி வெளி குளக்கட்டுக்கு அருகாமையில் உள்ள மேட்டு நிலப்பகுதி விவசாய நடவடிக்கைக்காக துப்பரவு பணியில் ஈடுபட்ட போது புராதன பொருட்கள் சில கண்டு பிடிக்கப்பட்டு நானாட்டான் பிரதேசச் செயலாளர் எஸ்.கிறிஸ்கந்த குமாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கண்டு பிடிக்கப்பட்ட பொருட்கள் கிறிஸ்துவிற்கு முற்பட்ட புராதனப் பொருட்கள் என அப்பகுதி மக்கள் தெரிவுத்துள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை விவசாய நடவடிக்கைக்காக துப்பரவுப் பணியில் ஈடுபட்ட விவசாயிகள் 2 கத்தி வடிவிலான வெட்டும் உபகரணத்தையும், உயிர்ச் சுவடி கவாட்டி கடல் வ…
-
- 0 replies
- 380 views
-
-
அவசர கால சட்டத்தை வரையறை செய்துள்ளோம் – அலி சப்ரி by : Benitlas http://athavannews.com/wp-content/uploads/2020/10/Ali-Sabry-720x450.jpg மக்களுக்கு செவிசாய்த்து அவசர கால சட்டத்தை வரையறை செய்துள்ளோம் என நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் தொடர்பான நாடாளுமன்ற விவாதம் ஆரம்பமாகியுள்ளது. இன்று(புதன்கிழமை) காலை 10 மணிக்கு சபாநாயகர் தலைமையில் சபை நடவடிக்கைகள் ஆரம்பமாகியிருந்தன. இதன்போது 20வது திருத்த சட்டமூலம் குறித்த விவாதத்தினை ஆரம்பித்து வைத்து, உரையாற்றிய போதே நீதியமைச்சர் அலி சப்ரி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “அரசியலமைப்…
-
- 0 replies
- 459 views
-
-
முல்லையில், கடலுக்குச்சென்ற மீனவர்களை இரண்டு நாட்களாகக் காணவில்லை; மக்கள் பதற்றம் Bharati October 21, 2020முல்லையில், கடலுக்குச்சென்ற மீனவர்களை இரண்டு நாட்களாகக் காணவில்லை; மக்கள் பதற்றம்2020-10-21T04:29:48+05:30 FacebookTwitterMore முல்லைத்தீவு – மணற்குடியிருப்பு கடற்றொழிலாளர், சங்கத்திற்குட்பட்ட மீனவர்கள் இருவர் நேற்று முன்தினம் திங்கட்கிழமை அன்று அதிகாலை 05.00மணியளவல் கடலுக்குச் சென்றநிலையில் இதுவரையில் கரைதிரும்பவில்லை. குறித்த சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களம், கடற்படையினர் போன்றோருக்குத் தெரியப்படுத்தியிருந்த நிலையிலும் அவர்கள் இது தொடர்பில் எதுவித நடவடிக்கைகளையும் எட…
-
- 1 reply
- 385 views
-
-
வடமராடசி கிழக்கு மக்களை அப்பகுதியிலிருந்து வெளியேற்ற அரசு முயல்கின்றதா? October 21, 2020 மாற்று ஏற்பாடுகள் எதுவுமின்றி மருதங்கேணி வைத்தியசாலை கொறோனா சிகிச்சை நிலையமாக மாற்றப்பட்டுள்ளது. கொறோனோ பாதிப்பு ஏற்படும் என்று பிரதேச மக்கள் மத்தியில் பெரும் பீதி எழுந்துள்ளது. மண்டைதீவில் கடற்படையினருக்காக சுவீகரிக்கப்படவிருந்த காணிகள் பொது மக்களிடம் மீளவும் கையளிக்கப்படல் வேண்டும். பரந்தன் கொக்குளாய் பிரதான வீதியில் இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுள்ள ஒன்பது சோதனைச் சாவடிக்களும் உடனடியாக அகற்றப்படல் வேண்டும். இந்த உயர்வான சபையில் வரிகளைக கூட்டுவதும் குறைப்பதும் தொடர்பாக விவாதங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்த வரிகளை கூட்டுவத…
-
- 1 reply
- 506 views
-
-
யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மோதல் – விசாரணைகள் ஆரம்பம்! October 21, 2020 யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களிடையே கடந்த 8 ஆம் திகதி இடம்பெற்ற மோதல் சம்பவம் குறித்து, விசாரணைகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட தனி நபர் ஆயத்தின் விசாரணைகள் நாளை 21 ஆம் திகதி, புதன்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளன. கடந்த 8 ஆம் திகதி கலைப்பீடத்தின் இரண்டாம், மூன்றாம் வருட மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட தகறாறு முற்றி மோதலாகியிருந்தது. அன்று மாலை வளாகத்தினுள் இடம்பெற்ற மோதலின் போது சமரசம் செய்ய முற்பட்ட பல்கலைக்கழகத் துணைவேந்தர் உட்பட அதிகாரிகளுடன் முரண்பட்டுக் கொண்ட மூன்றாம் வருட மாணவர்கள், துணைவேந்தர் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் தம்மைத் தாக்கியதாக ஊடகங்களுக்குத் தெரிவி…
-
- 0 replies
- 333 views
-
-
பல பணி இழப்புகளை ஏற்படுத்திய யாழ். பல்கலைக்கழகம்:மூதவை கூட்டத்தில் வெளிவந்த அதிர்ச்சி தகவல் வடக்கில் தொழில் வாய்ப்புகளை வழங்கக்கூடிய மிகப்பெரும் நிறுவனங்களில் ஒன்றாகிய யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், வெற்றிடங்களை நிரப்புவதில் அசமந்தப் போக்குடன் இருப்பதனால் இளஞ் சந்ததிதியினர் பாதிக்கப்பட்டிருப்பதாகப் பல்கலைக்கழக மூதவையில் (செனற்) பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மூதவை நேற்று செவ்வாய்க்கிழமை துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையில் இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தின் போதே பல்கலைக்கழகத்தில் வெற்றிடங்களை நிரப்புவதில் நிர்வாகம் காட்டும் அசமந்தப்போக்குகள் குறித்துப் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது. பல பீடங்கள் மற்றும் துறைகளில் வெற்றிடமாகவ…
-
- 0 replies
- 616 views
-
-
இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டவர்களின் 33 ஆவது நினைவு தினம் இந்திய இராணுவத்தினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டவர்களின் 33 ஆவது நினைவு தினம் யாழ் போதனா வைத்தியசாலையில் இன்று (புதன்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது. இதன்போது யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி ஈகைச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினார். அதனைத் தொடர்ந்து பிரதி பணிப்பாளர், பிரதம கணக்காளர் தாதியர்கள், உயிரிழந்தவர்களின் உறவினர்கள் என பலரும் படுகொலை செய்யப்பட்டவர்களின் உருவப்படத்துக்கு மலர் மாலை அணிவித்து ஈகைச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினர். இலங்கைக்கு அமைதிப் படையாக வந்த இந்திய இராணுவத்தினர் யாழ்ப்பாணத்தில் நிலை கொண்டிருந்த வேளையில், கடந்த 1987ஆம் ஆண்டு யாழ். போதனா …
-
- 1 reply
- 378 views
-
-
பொதுச் சுகாதார அவசர சட்டம் தனிநபர் வரைவு; பாராளுமன்றில் நேற்று சமர்ப்பித்தார் சுமந்திரன் Bharati October 21, 2020பொதுச் சுகாதார அவசர சட்டம் தனிநபர் வரைவு; பாராளுமன்றில் நேற்று சமர்ப்பித்தார் சுமந்திரன்2020-10-21T06:48:54+05:30 FacebookTwitterMore பொதுச் சுகாதார அவசர சட்டம் இயற்ற தனிநபர் சட்ட வரைவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சபையில் சமர்ப்பித்துள்ளார். இந்த சட்ட வரைவில் பொதுச் சுகாதார அவசரநிலை அறிவிக்கப்படுவதற்கும் பொதுச் சுகாதார அவசர சபை அமைப்பதற்குமான ஏற்பாடுகள் காணப்படுகின்றன. பொதுச் சுகாதார அவசரகால நிலையின் இருப்பு அல்லது உடனடித் தன்மையைக் கருத்தில் கொண்டு,…
-
- 0 replies
- 663 views
-