ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143647 topics in this forum
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சேர்ந்த எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரும் வரவு செலவுத்திட்ட வாக்கெடுப்பில் கலந்துக்கொள்ளவில்லை 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நேற்று(வியாழக்கிழமை) மாலை இடம்பெற்றது.தொழிநுட்ப கோளாறு காரணமாக கை உயர்த்தும் அடிப்படையில் வாக்கெடுப்பு முன்னெடுக்கப்பட்டது.இதற்கமைய ஆதரவாக 151 வாக்குகளும் எதிராக 54 வாக்குகளும் வழங்கப்பட்டுள்ள நிலையில், 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட மூன்றாம் வாசிப்பு திருத்தங்களுடன் 97 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது.இந்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரும் வரவு செலவுத்திட்ட வாக்கெடுப்பில் கலந்துக்கொள்ளவில்லை என…
-
- 2 replies
- 442 views
-
-
'இது ஒரு தேவையற்ற கேள்வி' என கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்த சம்பந்தன்! தமிழ் தேசிய கூட்டமைப்பு எப்படி ஆரம்பிக்கப்பட்டது என்பது முக்கியமான கேள்வி அல்ல, தமிழ் தேசிய சுட்டமைப்பு என்ன செய்கிறது? இது எங்கே பயணிக்கின்றது? தமிழ் மக்களை எங்கே அழைத்துச் செல்கின்றது? இவைதான் முக்கியமான கேள்வி என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஊடவியலாளர் ஒருவருக்கு தொலைபேசியில் வழங்கிய செவ்வியின் போது அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பினை விடுதலைப் புலிகளின் தலைவர்தான் உருவாக்கினார் என்று ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு தெரிவித்துவிட்டு தொலைபேசியின் அழைப்பினைத் துண்டித்துவிட்டார். …
-
- 22 replies
- 2.2k views
- 1 follower
-
-
இந்தியா தொடர்ந்தும் 13 வது திருத்தத்தை வலியுறுத்துமா? இந்திய உயர்ஸ்தானிகரின் பதில் என்ன? ஒரு பிரிக்க முடியாத,வலுவான பாதுகாப்பான ஜனநாயக பன்மைத்துவ இலங்கை என்பது இலங்கையின் நலனிற்கு அப்பால் இந்தியாவின் நலனுடன் தொடர்புபட்டது என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார் பேட்டியொன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இந்தியா தொடர்ந்தும் 13 வது திருத்தத்தை வலியுறுத்துமா?இலங்கையில் அரசியல்ரீதியில் மிகவும் உணர்பூர்வமான விடயம் குறித்து ஏன் இந்தியா தொடர்ந்து கருத்துதெரிவித்து வருகின்றது என்ற கேள்விக்கு அவர் வழங்கியுள்ள பதிலில் தெரிவித்துள்ளதாவது நீங்கள் நன்கு அறிந்துள்ளதை போல இந்த விடயம் குறித்த இந்தியாவின் நிலைப்பாடு தெளிவானது…
-
- 2 replies
- 468 views
-
-
தமிழ் மக்கள் மிதிக்கப்படாமல் – மதிக்கப்படும் சூழலை உருவாக்குவோம் வாருங்கள் : டக்ளஸ் தேவானந்தா அழைப்பு பேரினவாத தீக்கு எண்ணெய் வார்க்கின்ற செயற்பாடுகளை போலித் தமிழ் தேசிய வாதிகள் குத்தகைக்கு எடுத்துள்ளனர் என்று குற்றஞ்சாட்டியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சில தரப்புக்களிடம் சலூன் கதவுகள் போன்று இருக்கும் பேரினவாதத்தினை திறக்கச் செய்வதால் எமது மக்களே பாதிக்கப்படுகின்றனர் எனவும் ஆதங்கம் வெளியிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(வியாழக்கிழமை) நடைபெற்ற வரவு செலவுத் திட்ட விவாதத்தின் இறுதி நாள் அமர்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “மக்கள் வாழ்வாதாரம் – சுகாதாரம் – பொருளாதார …
-
- 1 reply
- 327 views
-
-
கைதிகளின் போராட்டம் வன்முறையாக மாறியதற்கான காரணம் வெளியானது மஹர சிறைச்சாலையில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதிலிருந்து தப்பிக்க கைதிகள் ஆரம்பித்த போராட்டத்தை, பாதாள உலகக் குழுக்களின் உறுப்பினர்கள் சிலரே வன்முறையாக மாற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மஹர சிறைச்சாலை விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய ஐந்து பேர் கொண்ட குழுவே இதனைத் தெரிவித்துள்ளது. குறித்த குழுவின் அறிக்கையை நீதியமைச்சர் நாடாளுமன்றில் தாக்கல் செய்திருந்தார். அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “சில கும்பல் தலைவர்கள் ஒருவருக்கொருவர் பழிவாங்க முயன்றதால், கைதிகள் நடத்திய ஆர்ப்பாட்டம் வன்முறைக்கு திரும்பியுள்ளது. மேலும், கைதிகள் யாரும் துப்பாக்கிகள் ஏதும் வைத்திருக்கவில்லை. அதிகாரி…
-
- 0 replies
- 227 views
-
-
மீண்டும் வறண்ட நிலத்தை அடையாளம் காண பிரதமர் ஆலோசனை கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு ஆழமான நிலத்தடி நீர் மட்டத்தை கொண்ட வறண்ட நிலத்தை அடையாளம் காணுமாறு சுகாதார அதிகாரிகளுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆலோசனை வழங்கியுள்ளார். இன்று (10) இடம்பெற்ற கூட்டத்தில் இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார். மத அல்லது இன அடிப்படையில் சுகாதார பிரச்சினைகளின் முடிவை எடுக்க முடியாது. எனவே சுகாதார வழிகாட்டுதல்கள் பின்பற்றப்பட வேண்டுமெனவும் பிரதமர் தெரிவித்தார். இதேவேளை கடந்த மாதம் 9ம் திகதி, ஜனாதிபதியும் கொரோனாவால் இறக்கும் முஸ்லிம்களின் உடல்களை புதைப்பதற்கான வறண்ட நிலத்தை ஒதுக்கும் சாத்தியம் பற்றியும், ஏனைய நாடுகளை போன்று உடல்களை அடக்கம் செய்வதற்கான சாத்தியக்க…
-
- 2 replies
- 637 views
-
-
(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) யுத்தத்தின் இறுதியிலே கிட்டத்தட்ட ஒரு இலட்சத்து 47 ஆயிரம் தமிழர்கள் இராணுவத்தினரிடம் அகப்பட்ட பின்னர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர் .இவர்களுக்கு என்ன நடந்தது என சபையில் கேள்வி எழுப்பிய தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் எம்.பி. செல்வராஜா கஜேந்திரன் ,நிதி அமைச்சின் நடவடிக்கைகள் ,நிதி ஒதுக்கீடுகள் அனைத்தும் முழுமையான இனவாத கோணத்திலானது எனவும் குற்றம் சுமத்தினார். http://cdn.virakesari.lk/uploads/medium/file/133663/selvarasa.jpg பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை, 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் இறுதி நாள் விவாதமான நிதி அமைச்சு மற்றம் நிதி இராஜாங்க அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார், …
-
- 1 reply
- 371 views
-
-
(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்) நாட்டின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க அரசாங்கம் புதிதாக 130 பில்லியன் ரூபாய்களை அச்சடித்துள்ளதாகவும், இந்த திட்டமானது இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்போவதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க சபையில் தெரிவித்தார். 2020 ஆம் ஆண்டை விடவும் 2021 ஆம் ஆண்டு மிக மோசமான ஆண்டாக அமையப்போகின்றதாகவும், பொருளாதார ரீதியில் பாரிய நெருக்கடி ஏற்படப்போவதுடன், கடன் நெருக்கடியில் நாடு விழப்போகின்றது எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார். பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை, 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் இறுதி நாள் விவாதமான நிதி அமைச்சு மற்றம் நிதி இராஜாங்க அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் …
-
- 27 replies
- 2.9k views
-
-
ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) இந்த நாட்டில் சிறுபான்மை மக்களுக்கான நீதி நிலைநாட்டப்படுவதில் நீண்டகாலமாக இழுத்தடிப்புகளே காணப்பட்டு வருகின்றது. இலங்கையின் நீதித்துறை சுயாதீனம் இல்லை என்பதை ஆட்சி செய்தவர்களும் ஆட்சி செய்கின்றவர்களும் முன்வைக்கும் விமர்சனத்தில் இருந்தே வெளியாகிவிட்டது. அதனால் தான் இந்த நாட்டில் இடம்பெற்ற மோசமான குற்றங்கள், சர்வதேச சட்டங்களை மீறும் குற்றங்கள் பல நடந்துள்ள காரணத்தினால் சர்வதேச நீதிமன்ற தலையீட்டை கொண்ட சர்வதேச விசாரணைகளை கேட்கிறோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் சபையில் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், அரசாங்கங்கள் உருவாகும், வீழும் ஆனால் நீதிமன்ற சுயாதீனம் பலமானதாக இருக்க வேண்டும். இந்த நாட்டில்…
-
- 46 replies
- 4.9k views
-
-
முஸ்லிம்களினால் உரிமை கோரப்படாத கொரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்களை தகனம் செய்யும் பணி நேற்று (09) முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் உயிரிழந்த முஸ்லிம் இனத்தை சேர்ந்த 19 பேரின் உடல்கள் அவர்களது குடும்பத்தினர் உரிமை கோர மறுத்து வந்தனர். இந்நிலையில் அவ்வாறு உரிமை கோரப்படாத சடலங்களையும் கொரோனா சட்டத்தின் கீழ் தகனம் செய்ய முடியும் என்று சுகாதார பணிப்பாளருக்கு சட்டமா அதிபரால் நேற்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் முதற்கட்டமாக நேற்று ஐந்து உடல்களும், இன்று மேலும் சில உடல்களும் தகனம் செய்யப்பட்டுள்ளது. உரிமை கோரப்படாத முஸ்லிம்களின் உடல்கள் தகனம்! | NewUthayan
-
- 16 replies
- 1.6k views
-
-
கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட உழவனூர் தம்பிராசாபுரம் காட்டுப்பகுதிகளில் பறவைகள் மற்றும் விலங்குகள் வேட்டையாடப்படுகின்றன என பொது மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். குறிப்பாக நாரைகள் மற்றும் பெரிய வகை கொக்குகள் என்பன இங்கு வருகின்றன. இவ்வாறு வருகின்ற வலசைப் பறவைகளையே இனந்தெரியாத நபர்கள் இரவில் வேட்டையாடுகின்றனர் என பொது மக்கள் தெரிவித்துள்ளனர். கொக்கு, மயில், மற்றும் விலங்குகளும் சுடப்படுகின்ற துப்பாக்கிச் சத்தங்கள் கேட்பதாக பொது மக்கள் மேலும் தெரிவித்துள்ளனர். கடந்த காலங்களில் அதிகளவில் தங்கள் பிரதேசங்களுக்கும் அங்குள்ள சிறிய நீர் நிலைகளை நோக்கியும் அதிகளவில் பறவைகள் வந்து சென்றன. ஆனால் தற்போது அவை மிகவும் குறைந்து விட்டது எனவும் வருகின்ற ஒரு …
-
- 0 replies
- 449 views
-
-
முல்லைத்தீவு கடற்கரையினை அண்மித்து, இந்திய இழுவைப் படகுகள் கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக கடற்கரையில் இருந்து சுமர் 2 கிலோமீற்றர் தூரத்திற்குள், அத்துமீறி நுழைந்து கடற்றொழில் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்தமையினை அவதானிக்கக் கூடியதாகவிருந்தது. இதுதொடர்பில், முல்லைத்தீவு மீனவர்கள் கடற்படையினருக்குத் தெரியப்படுத்தியபோதும், கொரோனா அச்சம் காரணமாக இந்திய இழுவைப் படகுகளுக்கு அருகே செல்லமுடியாதென கடற்படையினர் மறுப்புத்தெரிவித்துள்ளதுடன், மீனவர்களையும் இந்திய இழுவைப்படகுகளுக்கு அருகே செல்லக்கூடாது என உத்தரவிட்டுள்ளனர். இந்நிலையில் முல்லைத்தீவு கடற்றொழிலாளர் சமாசத்தலைவர் இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், இந்திய இழுவைப்படகுகள் …
-
- 1 reply
- 603 views
-
-
புரெவி புயல் காரணமாக ஏற்பட்ட காலநிலை மாற்றம் மற்றும் கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 2467 ஏக்கர் பெரும்போக நெற்செய்கை நீரில் மூழ்கி நாசமாகியுள்ளதாக மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள் உதவி பணிப்பார் எம்.ஜெகந்நாதன் தெரிவித்தார். வெள்ளம் காரணமாக விவசாய திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட 846 விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இம்மாவட்டத்தில் வவுணதீவு, வாகரை, கொக்கட்டிச்சோலை, வெல்லாவெளி கிரான், செங்கலடி, ஆகிய பிரதேச செயலகப்பிரிவுகளில் அதிகமான நெல் வயல்கள் நீரில் மூழ்கி அழிவடைந்துள்ளன. மாவட்டத்திலுள்ள 18 பெரும்பாக உத்தியோகத்தர் பிரிவுகளிலும் வயல் நிலங்களில் வெள்ளநீர் தேங்கியுள்ளது. தொடர்ந்து வேளாண்மை செய…
-
- 0 replies
- 411 views
-
-
பேரினவாத தீக்கு எண்ணெய் வார்க்கின்ற செயற்பாடுகளை போலித் தமிழ் தேசியவாதிகள் குத்தகைக்கு எடுத்துள்ளனர் என்று குற்றஞ்சாட்டியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சில தரப்புக்களிடம் சலூன் கதவுகள் போன்று இருக்கும் பேரினவாதத்தினை திறக்கச் செய்வதால் எமது மக்களே பாதிக்கப்படுகின்றனர் எனவும் ஆதங்கம் வெளியிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(10.12.2020) நடைபெற்ற வரவு - செலவுத் திட்ட விவாதத்தின் இறுதி நாள் அமர்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய கடற்றொழில் அமைச்சர், மக்கள் வாழ்வாதாரம், சுகாதாரம், பொருளாதார ரீதியாக பெரும் பாதிப்புகளுக்கு முகங்கொடுத்து வருகின்ற நிலையில், மக்களது பிரச்சினைகளை வ…
-
- 2 replies
- 388 views
-
-
கொரோனாவினால் உயிரிழந்த குழந்தையின் உடலை பொறுப்பேற்க பெற்றோர் மறுப்பு கொரோனா வைரசினால் உயிரிழந்த 20 நாள் குழந்தையின் பெற்றோர் குழந்தையின் உடலை பொறுப்பேற்க மறுத்துள்ளனர். பிசிஆர் சோதனை குறித்து தங்களிற்கு கரிசனைகள் உள்ளதாக அவர்கள் கொழும்பு கசட்டிற்கு தெரிவித்துள்ளனர். தங்களது மத நம்பிக்கையின் அடிப்படையில் குழந்தையின் உடலை அடக்கம் செய்யுமாறு தாங்கள் வேண்டுகோள் விடுத்ததாகவும் எனினும் அதனை அதிகாரிகள் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக குழந்தையின் உடலை பொறுப்பேற்க மறுத்துவிட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனாவினால் உயிரிழந்த குழந்தையின் உடலை பொறுப்பேற்க பெற்றோர் மறுப்பு – Thin…
-
- 26 replies
- 2.1k views
-
-
நிபுணத்துவமற்றவர்களை தொழில்நுட்பக் குழுவிலிருந்து நீக்கிவிடுங்கள் – நாடாளுமன்றத்தில் ஹக்கீம் சீற்றம் நிலைமை பாரதூரமானதாக இருப்பதால் எரிப்பது மட்டுமே ஒரே தீர்வு என்ற அரசாங்கத்தின் கொள்கையை மீளாய்வு செய்யுமாறும், அது சம்பந்தமான குழுவிலுள்ள நிபுணத்துவமற்றவர்களை நீக்கிவிடுமாறும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் பாராளுமன்றத்தில் வேண்டுகோள் விடுத்தார். வரவு – செலவுத் திட்டத்தின் நீதியமைச்சுக்கான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு புதன்கிழமை உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறினார். முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் அங்கு மேலும் தெரிவித்ததாவது, கொவிட் – 19 வைரஸ் தொற்றினால் இறப்பதாக காரணம் காட்டி, மரணிப்பவர்களை எரிப்பது மட்டுமே ஒரே தீர்வு என்ற …
-
- 0 replies
- 571 views
-
-
ஐ.நா மனித உரிமை ஆணையாளர் கள அலுவலகம் ஒன்றை வடக்கு – கிழக்கில் நிறுவ வேண்டும் என கோரிக்கை! by : Benitlas போரில் இறந்தவர்களுக்கு விளக்கேற்றக்கூட அனுமதி இல்லை என்றால் இங்கு எவ்வாறான மனித உரிமை மீறல் நடந்திருக்கும் என்பதை இலகுவாக கண்டறியலாம் என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பு குறிப்பிட்டுள்ளது. கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக இன்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற போராட்டத்தின் போது குறித்த விடயத்தினை அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். அவர்கள் மேலும் குறிப்பிடுகையில், “உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் அவனால் விட்டுக்கொடுக்க முடியாத உரிமைகளை மனித உரிமை என்று சொல்கிறோம். மனிதன் ஒவ்வொருவனும் தானும் வாழ்ந…
-
- 0 replies
- 356 views
-
-
எமது உரிமை பற்றி பேச பாராளுமன்றம் சென்றவர்கள் பேசாமலே இருக்கின்றனர் எமது உரிமை பற்றி பேசுவதற்கு பாராளுமன்றம் சென்றவர்கள் அது பற்றி பேசாமலே இருக்கின்றனர் என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க தலைவில் யோகராசா கலாரஞ்சினி தெரிவித்துள்ளார். சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினால் கிளிநொச்சியில் இடம்பெற்ற நடைபெற்ற கவனஈர்ப்பு போராட்டத்திலே் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கெண்டவாறு தெரிவித்துள்ளார். குறித்த போராட்டம் இன்று காலை 10 மணியளவிவ் கிளிநொச்சியில் அமைந்துள்ள மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டே உறவுகளின் சங்கத்திற்கு முன்பாக இடம்பெற்றது. இதனை அடுத்த …
-
- 0 replies
- 544 views
-
-
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை அச்சுறுத்தி விரட்டியடித்த பொலிஸார்!: மட்டக்களப்பில் பதற்றம்!! மட்டக்களப்பு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுக்கும் பொலிஸார் மற்றும் பொதுச்சுகாதார பரிசோதகர் ஆகியோருக்கு இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை கைது செய்து கொண்டு செல்ல பொலிஸார் முயற்சி செய்துள்ளனர். இது குறித்து மேலும் தெரியவருவதாவது. சர்வதேச மனிதவுரிமைகள் தினமான இன்று மட்டக்களப்பு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினால் நடாத்தப்பட இருந்த ஆர்ப்பாட்டத்தை தடுத்து நிறுத்தும் வகையில் பொலிஸாரும் புலனாய்வுத்துறையும் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள வந்த தாய்மாரை 14 நாள் தனிமைப்படுத்துவோம் என அச்சுறுத்தி அவர்களை பொலிஸார் கைது செய…
-
- 2 replies
- 462 views
-
-
காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி கிளிநொச்சியில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டம் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி கிளிநொச்சியில் 1,390 நாட்களாக சுழற்சி முறையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு இன்று காலை கந்தசுவாமி ஆலயம் முன்பு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற போராட்டத்தில் கடந்த பல ஆண்டுகளாக இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடுமையின் பிரதிபலிப்பு மரணங்கள், பாலியல் வன்முறைகள், நிலங்கள் மற்றும் உரிமைகள் பறிப்பு என இங்கு வாழும் தமிர்கள் கொன்று குவிக்கப்பட்ட இடம…
-
- 0 replies
- 325 views
-
-
தமிழ் அரசியல் கைதிகள் உருக்கமான வேண்டுகோள்.! அவர்களின் ஊடக அறிக்கை பின்வருமாறு நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் ஏற்பட்டிருக்கின்ற நெருக்கடி நிலைமையினையடுத்து, ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய அரசாங்கம் சில நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக அறிய முடிகிறது. அந்தவகையில் தகுந்த பொறிமுறையை இனங்கண்டு, சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள சுமார் 8000 கைதிகளை விடுவிப்பதற்கும் மரண தண்டனை மற்றும் ஆயுள்தண்டனைக் கைதிகளின் தண்டனைக் காலத்தை வரையறுப்பதற்குமாடன முன்னாயத்தங்களை மேற்கொண்டிருப்பதாக சிறைத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சில சிறுபான்மைப் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் அரசியல் கைதிகள் விடயம் தொடர்பில் கரிசனை காட்டத் தொடங்கி இருக்கி…
-
- 4 replies
- 946 views
-
-
அனலைதீவில் பசுவதை அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு! அனலைதீவில் சட்டத்துக்குப் புறம்பாக பசு மாடு ஒன்றை இறைச்சிக்கு கொலை செய்த நிலையில் கும்பல் ஒன்று தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அண்மைக்காலமாக பசு வதை அதிகரித்து வரும் நிலையில் இந்தச் சம்பவம் நேற்று(புதன்கிழமை) அனலைதீவு 5ஆம் வட்டாரத்தில் இடம்பெற்றுள்ளது. பசு மாட்டை இறைச்சிக்காக கொலை செய்த நிலையில் அந்த வழியால் சென்றவர்கள் கண்ணுற்றதால் கும்பல் அங்கிருந்து தப்பித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தீவகத்தில் கட்டாக்காலிகளாக திரியும் கால்நடைகளை சில கும்பல்கள் இறைச்சிக்காக அவற்றை கொலை செய்து இறைச்சிகளை யாழ்ப்பாணத்திற்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். குறித்த கும்பல்களுக்கு எதிராக…
-
- 1 reply
- 555 views
-
-
அரசியல் கைதிகளை விவகாரத்தில் இணைந்த தமிழ்க் கட்சிகள் – ஜனாதிபதி, பிரதமருக்கு மகஜர் 14 Views அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமெனக் கோரி 15 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட மகஜர் நேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், பிரதமர் மகிந்த ராஜபக்சவிடமும் கையளிக்கப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர்களான, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் செல்வராசா கஜேந்திரன் சி.வி.விக்கினேஸ்வரன் இரா.சம்பந்தன் எம்.எ.சுமந்திரன் செல்வம் அடைக்கலநாமன் சாள்ஸ் நிர்மலநாதன் சிவஞனம் சிறீதரன் நோகராதலிங்கம் கோ.கருணாகரம் சாணக்கியன் இராசமாணிக்கம் தவராசா கலையரசன் சித்தார்தன் மனோகணேசன…
-
- 0 replies
- 415 views
-
-
இலங்கை பொலிஸ் அதிகாரியின் நெகிழ்ச்சியான செயல் : காலில் விழுந்த இளைஞன்!! காலில் விழுந்த இளைஞன்… தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு முன்னால் விழுந்து கிடந்த பேர்ஸினை தம்புள்ளை பொலிஸ் அதிகாரி ஒருவர் உரிய நபரிடம் வழங்கியுள்ளார். இதன் போது பேர்ஸின் உரிமையாளர் கண்களில் கண்ணீருடன் பொலிஸ் அதிகாரியின் காலில் விழுந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு முன்னால் போக்குவரத்து கடமையில் ஈடுபடும் சந்தர்ப்பத்தில் சிறிய லொறி ஒன்றில் இருந்து இறங்கி சென்ற இளைஞனின் பேர்ஸ் கீழே விழுந்துள்ளது. அதனை வேறு ஒருவர் எடுக்க முயற்சித்த போது பொலிஸ் அதிகாரி அதனை பெற்றுக்…
-
- 0 replies
- 359 views
-
-
விடுதலைப்புலிகளின் நடவடிக்கைகளை புகழும் பெருமைப்படுத்தும் செயற்பாடுகள் வெளிநாடுகளில் அதிகரித்துள்ளன – தினேஸ் குணவர்த்தன விடுதலைப்புலிகளின் நடவடிக்கைகளை பெருமைப்படுத்தி புகழும் நடவடிக்கைகள் கடந்த சில வாரங்களாக வெளிநாடுகளில் அதிகரித்துள்ளன என இலங்கை வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன பிரிட்டன் கனடா தூதுவர்களிடம் தெரிவித்துள்ளார். இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் தினேஸ்குணவர்த்தன இந்த வாரம் இலங்கைக்கான பிரிட்டனின் உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டனையும் கனடா தூதுவர் டேவிட் மக்கினனையும் சந்தித்து இருதரப்பிற்கும் முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து ஆராய்ந்துள்ளார் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. அமைச்சர் நாடுகளின் பரஸ்பர பாதுகாப்பு குறி…
-
- 11 replies
- 1.3k views
-