ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143643 topics in this forum
-
முப்படைத் தலைமையகங்களை கொழும்புக்கு வெளியில் மாற்ற நடவடிக்கை நவ 14, 2010 சிறீலங்காவின் முப்படையினரும் தற்போது பயன்படுத்திவரும் படைத்தலைமையகங்களை கொழும்பு நகருக்கு வெளியில் மாற்றுவதற்கு அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நடவடிக்கைக்காக பத்தரமுல்ல பகுதியில் உள்ள அக்குரகொட பகுதியில் 48 ஏக்கர் நிலப்பரப்பில் மிகப்பெரும் தளங்களை அமைக்கும் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இராணுவம், கடற்படை, வான்படை ஆகியவற்றின் தலைமையகங்களே கொழும்பு நகருக்கு வெளியில் மாற்றப்படவுள்ளன. தற்போது இந்த தளங்கள் அமைந்துள்ள இடங்களில் 500 மில்லியன் டொலர் செலவில் உல்லாசப்பயணத்துறை மையம் அமைக்கப்படவுள்ளது. மேலும் 100 மில்லியன் டொலர்கள் செலவில் ஆடம்பர கேளிக்கை விடுதி ஒன்றும…
-
- 1 reply
- 509 views
-
-
வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தில் நில அபகரிப்பு எவ்வளவு வேகமாகவும் எத்தகைய அநீதியாகவும் முன்னெடுக்கப்படுகிறது என்பதற்கு ஒதியமலையின் இன்றைய நிலமையும் பொருத்தமான எடுத்துக்காட்டு. ஒதியமலை வவுனியா மாவட்டத்தின் எல்லைப் பகுதி. அந்தப் பகுதியில் உள்ள சுமார் 3000 ஏக்கர் காணிகளை அபகரிக்க முற்ப்படுவதாகவும் அந்தப் பகுதியில் சிங்களக் குடியேற்றங்கள் செய்யத் திட்டமிடப்படுவதாகவும் செய்திகள் வெளிவந்த நிலையில் சமீபத்தில் ஒதியமலைக்குச் சென்றிருந்தேன். ஒதியமலையை நோக்கி குடியேற்ற நடவடிக்கை ஒன்று முன்நகர்ந்து கொண்டிருக்கும் அதிர்ச்சியை காண முடிந்தது. அந்த நடவடிக்கை ஒரு நில அபகரிப்பு யுத்தத்திற்கு ஒப்பானது. நில அபகரிப்பு யுத்தம் என்பது விமானங்கள் பறந்து குண்டுகளைக் கொட்ட யுத்த டாங்கிகளோடு யு…
-
- 0 replies
- 559 views
-
-
அழுதுபுலம்புவதை தவிர பாதிக்கப்பட்டவர்களிற்கு வேறு வழியில்லை- ஜெனீவாவில் சந்தியா By RAJEEBAN 14 SEP, 2022 | 04:15 PM இலங்கை அரசாங்கம் தண்டனையிலிருந்து விலக்களிப்பதை மனித உரிமைகள் தொடர்பான அதன் உத்தியோகபூர்வ கொள்கையாக பின்பற்றுகின்றது என ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா ஜெனீவா மனித உரிமை பேரவை அமர்வில் தெரிவித்துள்ளார். வறுமை மற்றும் தொடர்ச்சியாக பின்தொடரப்படுதல் துன்புறுத்தல்கள் மெதுவான மற்றும் பின்தங்கியசட்ட அமைப்பை கொண்ட நாட்டில் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களித்தல் என்பது அதிகாரபூர்வமற்ற ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கையாக காணப்படுகின்றது என சந்தியா எக்னலிகொட ஜெனீவாவில் தெரிவித்துள்ளார். அவ்வாறானஒர…
-
- 0 replies
- 267 views
- 1 follower
-
-
தலைவர் எடுக்கும் முடிவுகளை முழுமையாக நிறைவேற்ற எமது படையணிகள் தயார்-தயா மாஸ்ரர் எமது தேசியத்தலைவர் எடுக்கபோகும் சகல முடிவுகளையும் முழுமையாக நிறைவேற்ற எமது அனைத்து படையணிகளும் தயார் நிலையில் உள்ளன விடுதலைப்புலிகளின் வலிமை குறித்து எவரும் சந்தேககம் கொள்ளத் தேவையில்லை என மட்டக்களப்பு மாவட்ட அரசியல் துறைப்பொறுப்பாளர் தயாமாஸ்ரர் ஐ பி சி வானொலிக்கு அளித்த நேர் காணலில் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில் சிறீலங்கா அரசின் சகல படை எடுப்புக்களையும் முறியடிக்க புலிகள் தயார் நிலையில் உள்ள இவ்வேளையில் புலம்பெயர் மக்களை விரைவில் நல்ல செய்தி ஒன்று வந்து சேரும் என்ற நம்பிக்கையுடன் இருக்குமாறு உறுதிபட தெரிவித்துள்ளார். http://www.pathivu.com/index.php?subactio…
-
- 0 replies
- 790 views
-
-
மன்னாரில் சிங்களப்படைகளின் கூட்டுப்பயிற்சி வவுனியா நிருபர் ஞாயிற்றுகிழமை, நவம்பர் 21, 2010 மன்னார் சிலாவத்துறையில் முப்படையினரும் இணைந்து பயிற்சி நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர். இன்று தொடக்கம் எதிர்வரும் 9 நாட்களுக்கு இந்தப் பயிற்சி நடவடிக்கை இடம்பெறவுள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபய மெதவல தெரிவித்தார். இந்தப் பயிற்சி நடவடிக்கையில் முப்படைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தி 2500 படையினர் பங்குபற்றுவதாக அவர் குறிப்பிட்டார். இன்று மாலை 3 மணிக்கு இந்த பயிற்சி நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதோடு, யுத்தம் செய்யும்போது கையாளப்படும் யுத்தத் தந்திரோபாயங்கள் குறித்து பயிற்சியளிக்கப்படவுள்ளதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார். ஈழநாதம்
-
- 1 reply
- 416 views
-
-
அமெரிக்காவில் மருத்துவத் துறையின் உயர் பொறுப்பை வகிக்கும் முதல் ஆசிய கண்டத்தை சேர்ந்தவர் என்ற பெருமையை இந்தியர் பெற்றார்! [Monday 2014-07-28 16:00] அமெரிக்காவின் மிசிசிபி மாகாண மனநல மருத்துவ வாரியத்தின் தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சம்பத் சிவாங்கி நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் அமெரிக்காவில் மருத்துவத் துறையின் உயர் பொறுப்பை வகிக்கும் முதல் ஆசிய கண்டத்தை சேர்ந்தவர் என்ற பெருமையை சம்பத் சிவாங்கி பெற்றுள்ளார். அடுத்த ஓராண்டு அவர் இப்பதவியில் இருப்பார். முன்ன தாக மாகாண மருத்துவ வாரியத்தின் உறுப்பினர்களில் ஒருவராக சம்பத் சிவாங்கி இருந்தார். 2005 முதல் 2008-ம் ஆண்டு வரை அமெரிக்க சுகாதாரத் துறை அமைச்சகத்தின் ஆலோசகராக வும் சம்பத் சிவாங்கி பணியாற்றியுள்ள…
-
- 0 replies
- 455 views
-
-
நாட்டை வந்தடைந்தார் ஜனாதிபதி 21 SEP, 2022 | 09:55 AM லண்டனுக்கு சென்றிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (21) நாட்டை வந்தடைந்தார். மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் பங்கேற்க ஜனாதிபதி லண்டனுக்கு கடந்த 17 ஆம் திகதி சென்றிருந்த நிலையில், இன்று காலை நாடு திரும்பியுள்ளார். லண்டனுக்கு சென்ற ஜனாதிபதி அங்கு புலம்பெயர் இலங்கையர்களையும் சந்தித்து புலம்பெயர் அலுவலகப் பணிகள் உள்ளிட்ட இலங்கையில் உள்ள புதிய முதலீட்டு வாய்ப்புக்களைப் பயன்படுத்திக் கொள்ளுமாறும் அழைப்பு விடுத்துள்ளார். https://www.virakesari.lk/article/136083
-
- 0 replies
- 226 views
-
-
புலிகளின் நிபந்தனையை ஏற்க ஹன்சன் பெளயருக்கு உரிமை இல்லை: சிறிலங்கா அரசாங்கம் puthinam Monday, 07 August 2006 தமிழீழ விடுதலைப் புலிகள் முன்வைக்கும் நிபந்தனைகளை ஒப்புக்கொள்ள நோர்வே சிறப்புத் தூதுவர் ஹன்சன் பௌயர் மற்றும் நோர்வேக் குழுவினருக்கு எதுவித உரிமையும் இல்லை என்று சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது. ிறிலங்கா அமைச்சர் கேகலிய ரம்புக்வெல கூறியுள்ளதாவது: தமிழீழ விடுதலைப் புலிகள் விதித்த நிபந்தனைகளை ஒப்புக்கொள்வதற்கு முன்பாக சிறிலங்கா அரசாங்கத்திடம் நோர்வே பிரதிநிதிகள் தெரிவித்திருக்க வேண்டும். சிறிலங்கா அரசாங்கத்தின் கவனத்துக்குக் கொண்டுவராமல் நிபந்தனைகளை ஒப்புக்கொள்வதற்கு நோர்வேப் பிரதிநிதிகளுக்கு எதுவித உரிமையும் இல்லை. நீர், அ…
-
- 0 replies
- 806 views
-
-
குடாநாட்டுக் கோயில்களில் இன்றைய தினம் மணியடிக்கக் கூடாது: இராணுவம் உத்தரவு சனிக்கிழமை, 27 நவம்பர் 2010 05:00 எமது மண்ணுக்காக தமதுயிரைத் தியாகம் செய்த மாவீரர்களின் நினைவு நாளான இன்று கோயில்களில் மணியடிக்கக் கூடாது என்று இராணுவத்தினர் கடும் உத்தரவு விடுத்துள்ளனர். வலிகாமம் பகுதியிலுள்ள கோயில் அதிகார சபையினரிடம் யாழ்ப்பாண இராணுவத்தினர் இவ்வுத்தரவை விடுத்துள்ளனர். கோயில்களில் உள்ள மணிகளைக் கழற்றி வைக்கும்படி, அவ்வாறு கழற்ற முடியாத மணிகளைத் துணிகளால் கட்டி வைக்கும்படி இராணுவம் கூறியுள்ளதாம். அதோடு இன்றைய தினம் மக்கள் வெளியில் நடமாடுவதையும் குறைக்கச் சொல்லி உத்தரவு இடப்பட்டுள்ளதோடு, தென்மராட்சி உட்பட குடாநாட்டின் சகல பகுதிகளிலும் ஏராளமான இராணுவத்தினர் குவிக்கப்பட்டு வீதி…
-
- 0 replies
- 414 views
-
-
கோதபாயவின் யுத்தக் குற்றச் செயல்களுக்கு எதிராக அமெரிக்காவில் வழக்குத் தொடர முடியும்? ரயன் குட்மேன்:- 02 ஆகஸ்ட் 2014 பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவிற்கு எதிராக அமெரிக்க அரசாங்கம் யுத்தக் குற்றச் செயல் வழக்குத் தொடரக் கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடைபெற்று இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பிலான சம்பவங்களின் அடிப்படையில் கோதபாயவிற்கு எதிராக வழக்குத் தொடரத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. “ஜஸ்ட் சிக்கியுரிட்டி” என்ற அமெரிக்க இதழின் இணைப் பிரதம ஆசிரியர் ரயன் குட்மேன் என்பவரினால் இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையில் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் தொடர்பில் அ…
-
- 0 replies
- 427 views
-
-
போர் என்பதே குற்றம். அப்படியானால் போர்க்குற்றம் என்பது யாது? ஒரு நாடு போர் புரிவதற்குக் கூட சட்டதிட்டங்கள் உள்ளனவா? அச் சட்டங்கள் யாவை? சிறீலங்கா அரசு மீறியுள்ள அனைத்துலக போரியல் சட்ட திட்டங்கள் எவை? எதன் அடிப்படையில் தமிழர்கள் வழக்குகளைத் தொடுத்துள்ளனர்? என்ற உங்களது அனைத்து வகையான வினாக்களுக்கும் சுவிஸ் ஈழத்தமிழரவையும், அனைத்துலகத் தமிழ்ப் பெண்கள் அமைப்பும் இணைந்து, இக் கைநூல் ஊடாக கருத்துத் தெளிவாக்கம் அளிக்கின்றனர். இது ஒரு முதல் முயற்சியே. தேவைக்கேற்ப இக்கைநூல் விரிவாக்கப்பட்டு மெருகூட்டப்படும். பின்வரும் முகவரியிற் சென்று குறித்த கையேட்டினைத் தரவிறக்கம் செய்துகொள்ளலாம்: http://www.scribd.com/doc/44855437/WAR-CRIMES நன்றி
-
- 1 reply
- 782 views
-
-
இன்று இந்தியா புறப்படுகிறார் சிறிலங்கா அதிபர் – அங்கிருந்து ஜப்பானுக்குப் பயணம் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, இந்தியா, மற்றும் ஜப்பானுக்கான அதிகாரபூர்வ பயணங்களை இன்று ஆரம்பிக்கவுள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரான்ஸ் அதிபர் இமானுவல் மக்ரோன் ஆகியோரின் அழைப்பை ஏற்று, அனைத்துலக சூரிய கூட்டமைப்பின் முதலாவது மாநாட்டில் பங்கேற்பதற்காக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, இன்று புதுடெல்லிக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இன்றும் நாளையும், அவர் புதுடெல்லியில் அரசுமுறைப் பயணமாக தங்கியிருப்பார். இந்தப் பயணத்தின் போது, இந்திய அரசியல் தலைவர்களை சிறிலங்கா அதிபர் சந்தித்துப் பேச்சு நடத்தக் கூடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.…
-
- 1 reply
- 258 views
-
-
சிறீலங்கா சிங்கள சிறப்பு அதிரடிப்படையினர் மீதான தாக்குதலை அடுத்து மைத்தானத்தில் நின்ற இளைஞர்களைச் சுட்டுக் கொன்ற படையினர்..அவர்களைப் புலிகள் என்று கூறுகின்றனர்..! மட்டக்களப்பு பாலமீன்மடுப் பகுதியில் 5 இளைஞர்கள் அதிரடிப் படையிரால் சுட்டுக்கொலை. மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்ட பாலமீன்மடு பகுதியில் விசேட அதிரடிப்படையினரால் 5 தமிழ் இளைஞகள் நேற்று வியாழக்கிழமை மாலை 7.30 மணியளவில் சுட்டுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். இவர்கள் பாலமீன்மடு பகுதியில் உள்ள விளையாட்டு மைதானமொன்றில் நின்ற போது இவர்கள் சுடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொல்லப்பட்டவர்களில் செங்கலடி பகுதியைச் சேர்ந்த தர்மராஜா ஆனந்தராஜா வயது 28 மற்றும் மட்டக்கள்பபு புண்ணச்சோலையைச் சேர்ந்…
-
- 7 replies
- 4.5k views
-
-
பிபிசி உலக சேவையின் இரவு செய்தியில் முக்கிய விடையமாக இலங்கை விவகாரம் ஆராயப்பட்டது. Today's BBC World News night headline is Srilanka's conflict. EU's failure in banning 1 party to the ceasfire.
-
- 3 replies
- 2.4k views
-
-
இராணுவத் தளபதி சரத் பொன்சேகா இன்று தனது பிறந்த தினத்தை புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் தனது அன்புக்குரியவர்கள், ஆதரவாளர்கள், சட்டத்தரணிகளுடன் கொண்டாடினார். சரத் பொன்சேகாவுக்கு இன்று 60 ஆவது பிறந்த தினம் என்பது குறிப்பிடத்தக்கது. இரு வருட சிறைத்தண்டனை அனுபவிக்கும் சரத் பொன்சேகா இன்று நீதிமன்ற வளாகத்திற்கு வந்தபோது இச்சிறிய கொண்டாட்டம் நடத்தப்பட்டது. கேக் ஒன்றை வெட்டிய சரத் பொன்சேகா அதை தனது சட்டத்தரணிகளுக்கும் ஆதரவாளர்களுக்கும் பகிர்ந்தளித்தார். http://www.tamil.dailymirror.lk/index.php/2010-07-14-09-13-23/13209-2010-12-17-13-42-24.html
-
- 2 replies
- 424 views
-
-
(J.M.Hafees) கண்டி ஸ்ரீ தலதா மாளிகையிலிருந்து திருடப்பட்ட பெறுமதி மிக்க நான்கு புத்தர் சிலைகளையும், ஒரு தூபியையும் கட்டுகாஸ்தோட்டைப் பொலிஸார் கைப்பற்றி உள்ளனர். குறித்த திருட்டு சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். சந்தேக நபர்கள் இருவரையும் கண்டி நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். http://www.virakesari.lk/articles/2014/08/21/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%A…
-
- 0 replies
- 358 views
-
-
ஆனந்த சுதாகரனின் பிள்ளைகள் ஜனாதிபதிக்கு கருணை மனு : ஜனாதிபதி மாமா! கருணை உள்ளத்துடன் எமது தந்தையை விடுதலை செய்யுங்கள். அரசியல் கைதியாக ஆயுள்தண்டனை தீர்க்கப்பட்டுள்ள ஆனந்தசுதாகரின் பிள்ளைகள் பா ம உ அங்கஜன் இராமநாதன் ஊடாக ஜனாதிபதிக்கு சற்று முன் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர் கடந்த 2008 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு, மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு கடந்த வருடம் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் கைதியான சச்சிதானந்தம் ஆனந்தசுதாகரனின் மனைவி ஆனந்தசுதாகர் யோகராணி கடந்த 15 ஆம் திகதி சுகயீனம் காரணமாக மரணமடைந்திருந்தார். இன்று கிளிநொச்சி மருதநகர் கிராமத்தில் இடம்பெற்ற அவரின் இறுதி நிகழ்வுக்கு…
-
- 1 reply
- 627 views
-
-
தொண்டமான் தமிழரின் தலைவனா எட்டப்பனா...??? மலையாக மக்களின் ஏக பிரதி நிதி என்று தன்னை கூறிக் கொள்ளும் ஆறுமுகம் தொண்டமான் அந்த மக்களின் வாழ்வுரிமையை காற்ப்தற்க்கவே தான் அரசோடு கூட்டு வைத்து அந்த மக்களின் அவல வாழ்வை துடைத்து வருவதாகவும் கூறிய அவர் ஏன் இந்த அவசர கால சட்டத்திற்க்கு ஆதரவாக வாக்களித்தார்...?? கண்மூடித்தனமாக சிங்க படைகளால் ஈவ் இரக்கமின்றி புலிகள் என்று குற்றம் சாட்டப் பட்டு எத்தனை மக்கள் பரிதபகரமாக இன்று சிறையில் வாழ்கிறார்கள். எத்தனையோ குடும்பங்கள் தமது அன்றாட கடமைகளை கூட சரியான முறையில் செய்ய முடியாத துப்பாக்கிய நிலையில் வாழ்க்கை நடாத்தி கொண்டு இருக்கின்றார்கள் . வறுமையின் விழிம்பில் அந்த மக்கள் ஊசுலாடிக் கொண்டு இருக்கை…
-
- 63 replies
- 9.9k views
-
-
புதன்கிழமை, 22, டிசம்பர் 2010 (23:33 IST) பிரபாகரன் பற்றிய கேள்வி : சீமான் ஆவேசம் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியின் போது விடுதலைப்புலிகள் இயக்க தேசியத்தலைவர் பிரபாகரன் பற்றிய கேள்விக்கு ஆவேசமாக பதிலளித்தார். பிரபாகரன் மரணமடைந்ததற்கு யார் காரணம் என்று குறிப்பிடுகிறீர்கள்? பிரபாகரன் மரணமடைந்துவிட்டார் என்பது உங்களுக்கு எப்படி தெரியும். பிரபாகரன் இறந்துவிட்டார் என்று அதற்கு சிங்களன் 20 கதை சொல்லுகிறான். அதை எல்லாம் நம்பாதீர்கள். ஈழத்துடன் நெருங்கிய தொடர்பு உள்ள நீங்கள் சொல்லுங்கள். பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா? ஈழ விடுதலைக்காக இவ்வளவு தூரம் போராடிய என் அண்ணன் அவ்வளவ…
-
- 3 replies
- 1.7k views
-
-
இந்தியாவுக்கான தூதுவர்களின் இடமாற்றங்களின் ஒரு பகுதியாக இலங்கைக்கான இந்தியத் தூதுவராக கொழும்பில் பணியாற்றிய நிருபமா ராவ் சீனாவுக்கான தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார். சிங்கப்பூரில் தற்போது இந்தியத் தூதுவராகக் கடமையாற்றும் அலொக் பிரசாத் இலங்கைக்கான புதிய தூதுவராக நியமனம் பெற்றுள்ளார். இதேவேளை, பாகிஸ்தானுக்கான இந்தியத் தூதுவரும் இடமாற்றம் பெறவுள்ளார். பாகிஸ்தானுக்கான தற்போதைய இந்தியத் தூதுவர் சிவசங்கர் மேனன், ஒக்ரோபர் முதலாம் திகதியிலிருந்து இந்திய வெளியுறவுத்துறை செயலாளராகப் பதவியேற்கவுள்ளார். தென்னாபிரிக்காவில் தற்போது இந்தியத் தூதுவராகவுள்ள சத்யபிரதா பால், புதிய பாகிஸ்தான் தூதுவராகவுள்ளார். பாகிஸ்தானின் புதிய தூதுவராக நியமனம் பெறவுள்ளா சத்யபிரதா ப்…
-
- 0 replies
- 798 views
-
-
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளராக ஜோர்தான் இளவரசர் ஷெயிட் அல் ஹூசைன் நாளை முதல் பொறுப்பேற்கவுள்ளார். ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளராக செயற்பட்டு வந்த நவநீதம்பிள்ளை இம் மாதத்துடன் ஓய்வு பெறுவதை அடுத்து, அந்தப் பதவிக்கு ஓய்வு ஷெயிட் அல் ஹூசைன் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. http://www.pathivu.com/news/33532/57//d,article_full.aspx
-
- 0 replies
- 372 views
-
-
ரஷ்யாவுடன் இராணுவ ஒத்துழைப்பு உடன்பாடு – சிறிலங்கா அமைச்சரவை அனுமதி ரஷ்யாவுடனான இருதரப்பு இராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையிலான உடன்பாட்டில் கையெழுத்திடும் யோசனைக்கு சிறிலங்கா அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில், அதிபர் மைத்திரிபால சிறிசேன இந்த யோசனையை அமைச்சரவையில் முன்வைத்திருந்தார். தேசிய பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கிலும், இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர நம்பிக்கையை வலுப்படுத்தும் நோக்கிலும், இந்த இருதரப்பு இராணுவ ஒத்துழைப்பு உடன்பாட்டு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்கு சிறிலங்கா அமைச்சரவை கடந்த செவ்வாய்கிழமை அனுமதி அளித்துள்ளது. http://www.puthinappalakai.net/2018/04/06/news/…
-
- 0 replies
- 124 views
-
-
அக்டோபர் 28 - 29 இல் ஜெனிவாவில் பேச்சு! என்ன நடக்கும்? இலங்கை அரசு இதற்கு சம்மதம் தெரிவித்ததுடன் புலிகளும் இணங்கியுள்ளனர். அனால் இது நடை பெறுமா? அல்லது பேச்சுகளுக்கு போய் முறியுமா? இலங்கை அரசு இந் மாத முடிவுக்குள் பேச்சுக்க போவகவிட்டால் உதவி கிடையுது என்ற மிரட்டலின் பின்னே அரசு இணங்கியுள்ளதாம்.
-
- 4 replies
- 1.7k views
-
-
யுத்தத்தில் வெற்றிபெற்றாலும் நிரந்தரமான, திருப்தியான நாட்டை கட்டியெழுப்பும் வரை சமாதானத்தை ஏற்படுத்த முடியாது. இலங்கையில் சுமார் 20 லட்சம் தமிழ் மக்கள் இருக்கின்றனர். நாட்டின் சனத் தொகையில் 10 சதவீதமான மக்கள் திருப்தியின்மையை மாத்திரமல்லாமல், கோபத்தையும் வெறுப்பையும் வலிகளையும் கொண்டிருக்கும்போது ஸ்திரமான நாட்டை கட்டியெழுப்ப முடியாது. நாட்டில் முன்னெப்போதுமில்லாதளவு ஊழல் மலிந்திருப்பதாகவும் அவர் குற்றம் சுமத்தினார். அரசாங்கத் திணைக்களங்களில் உயர் பதவிகளிலுள்ளோர் பலர் தகுதியற்றவர்கள் எனவும் அவர் விமர்சித்தார். தமது குழுவொன்று மேற்கொண்ட மதிப்பீடென்றின்படி, தேசிய ரீதியில் 40 சதவீதம் ஊழல் காரணமாக விரயமாகுவதாக தெரியவந்துள்ளதாகவும் ஊழலை நிறுத்த முடிந்தால் பெருந்தொகைப்…
-
- 1 reply
- 825 views
-
-
வரி சலுகையின் பயனை நாட்டு மக்கள் பெறவில்லை : இறக்குமதியாளர்கள் மாத்திரம் திருப்தி - ரோஹினி கவிரத்ன By DIGITAL DESK 2 07 DEC, 2022 | 03:44 PM (இராஜதுரை ஹஷான்) குறுகிய காலத்தில் அரச வருமானத்தை அதிகரித்துக் கொள்ள நடுத்தர மக்களை நெருக்கடிக்குள்ளாக்காமல், தவறான தீர்மானங்களினால் இழக்கப்பட்ட வரி வருமானத்தை மீள பெற்றுக்கொள்ள அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும். 25 சதமாக காணப்படும் சீனிக்கான விசேட வரியை நீக்கி, வரி தொகை 50 ரூபாவாக அதிகரிக்க வேண்டும். வரி சலுகையின்பயனை நாட்டு மக்கள்பெறவில்லை, ஒருசில இறக்குமதியாளர்கள்மாத்திரம் திருப்தியடைந்துள்ளார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன…
-
- 0 replies
- 252 views
- 1 follower
-