ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143308 topics in this forum
-
கொரோனா வைரஸ் என்ற கொடிய நோய் இன்று சமூகத்துக்குள் ஊடுருவி பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தி வருகின்ற போதும், அரசோ நாட்டை முழுமையாக முடக்காமல் மௌனம் காப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில், மக்களை அமைதியாகச் சாகடிக்க அரசு முயல்கின்றதா என்ற கேள்வி எழுந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இன்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில், அரசு கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டது. கொரோனா வைரஸ் அதிவேகத்தில் பரவுகின்ற நிலையில் அரசு பொறுப்புணர்வில்லாமல் நடந்து கொள்கின்றது. தேர்தலுக்கு முன்னர் கோட்டாபய ராஜபக்சவிடம் காணப்பட்ட இரக்க உணர்…
-
- 0 replies
- 272 views
-
-
யாழ். பல்கலையில் இரண்டு பீடங்களை உள்வாங்க முன்மொழிவு! யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மேலும் இரண்டு பீடங்களை உள்வாங்குவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கான முன்மொழிவுகள் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பல்கலைக் கழகப் பேரவைக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன. மருதனார்மடத்தில் அமைந்துள்ள இராமநாதன் நுண்கலைக் கல்லூரியை நுண்கலைப் பீடமாகவும், கைதடியில் அமைந்துள்ள சித்தவைத்தியத்துறையை சித்த வைத்திய பீடமாகவும் தரமுயர்த்துவதற்கான முன்மொழிவுகளே இன்றைய பேரவைக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டன. யாழ். பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலைக் கல்லூரியை நுண்கலைப் பீடமாகத் தரமுயர்த்துவதற்கான சாத்தியப்பாடுகளை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கென முன்னாள் துணைவேந்தர் பேராசிரி…
-
- 0 replies
- 320 views
-
-
நாட்டின் கொரோனா நோய் தொற்றின் தீவிரம் காரணமாக, கொழும்பு-புறக்கோட்டை மெனிங் சந்தையை மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக மெனிங் சந்தை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. மேல் மாகாணத்தில் அமுலிலுள்ள ஊரடங்குச் சட்டத்தை எதிர்வரும் 9 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 5 மணி வரை நீடிக்க அரசு தீர்மானித்துள்ளமையும் குறிப்பிடதக்கது.
-
- 0 replies
- 237 views
-
-
மக்களின் உயிருக்கு தீங்கு விளைவிக்காமல், பொருளாதாரத்தை மோசமாக பாதிக்காமல் கொவிட்-19 பரவுவதைத் தடுக்கும் பொருட்டு கொவிட்-19 ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணி உறுப்பினர்களுடன் இன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடல்களின்போது பல முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி மக்களை தனிமைப்படுத்தப்பட்ட நிலையங்களுக்கு அழைத்துச் செல்வதற்கு பதிலாக, அவர்களை தங்கள் சொந்த வீடுகளில் தனிமைப்படுத்த அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள் வெற்றிகரமான முடிவுகளைக் கொண்டுள்ளன. இந்த செயல்முறையை சுகாதார மருத்துவ அதிகாரி, பொது சுகாதார ஆய்வாளர், காவல்துறை மற்றும் இராணுவம் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். வீட்டிலுள்ள தனிமைப்படுத்தப்பட்ட நபர்களுக்கு பி.சி.ஆர் சோதனை 10 ஆவது …
-
- 0 replies
- 180 views
-
-
மக்களின் நலன்களை பாதுகாக்ககூடிய தனித்துவமான நாடாக இலங்கை இருக்கும் – டக்ளஸ் மக்களின் நலன்களை பாதுகாக்ககூடிய வகையில், தனித்துவமான நாடாக இலங்கை இருக்கும் என்று கடற்தொழில் மற்றும் நீரியல் வளங்கல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். வவுனியாவிற்கு இன்று விஜயம் செய்த அவர் வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவரின் காரியாலத்தை திறந்துவைத்துவிட்டு ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், “ஜனாதிபதி மற்றும் பிரதமரின் தலைமையில் மக்களின் நலன்களை பாதுகாப்பதற்கும், முன்னேற்றுவதற்கும் முழு முயற்சிகளை நாம் எடுப்போம். உலகளாவிய ரீதியில் இன்று பிரச்சனையாகவுள்ள கொரோனா தொற்றுநோயானது இலங்கையையும் பாதித்திருந்தது. அத…
-
- 0 replies
- 246 views
-
-
யாழில்.. கடல் நீர், உட்புகுந்தமை தொடர்பில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது – அரசாங்க அதிபர் யாழில் கடல் நீர் உட்புகுந்தமை தொடர்பில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது எனினும் உண்மையான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என யாழ் அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார் யாழ் மாவட்டத்தில் கடல் நீர் உட்புகுந்த நிலைமை தொடர்பில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபரிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் கடல் நீர் உட்புகுந்த சம்பவம் யாழ் கல்லுண்டாய்,ஊர்காவற்துறை,குருநகர், நாவாந்துறை பிரதேசத்தில் உணரப்பட்டுள்ளதாக மாவட்ட செயலகத்திற்கு தகவல் கிடைத்திருந்தது அதனைஉடனடியாக அனர்த்த முகாமைத்துவ பிரிவினருக்கு அறிவித்திருக்கிறோம் அதேபோல் நான் நேரடியாக அப்பகுத…
-
- 0 replies
- 191 views
-
-
கொரோனோ பரிசோதனை இயந்திரங்கள் பல பழுது..! சீன பொறியியலாளர் இலங்கை வருகிறார், தனிமைப்படுத்தலின் கீழ் புனரமைப்பு பணிகள்.. கொரோனா தொற்றை இனங்காணும் PCR பரிசோதனை இயந்திரங்கள் பல பழுதடைந்துள்ளதாக கூறியிருக்கும் இராணுவ தளபதியும், கொரோனா தடுப்பு செயலணியின் தலைவருமான சவேந்திர சில்வா, பழுதடைந்த இயந்திரங்களை திருத்துவதற்கு சீனா பொறியியலாளர் ஒருவர் நாட்டிற்கு வருகைதரவுள்ளதாகவும் இராணுவ தளபதி கூறியிருக்கின்றார். இது குறித்து மேலும் அவர் கூறியுள்ளதாவது, 20 நாள்களுக்கு 24 மணி நேரமும் இந்த இயந்திரம் பயன்படுத்தப்படுவதால் அவை செயலற்றதாக இருந்திருக்கலாம் இயந்திரங்களைச் சீர்செய்ய தொழில்நுட்பவியலாளர்கள் பெரும் முயற்சி செய்தார்கள், ஆனால் அது வெற்றிபெறவில்லை என்று அவர் …
-
- 5 replies
- 1k views
-
-
த.தே.கூட்டமைப்பின் செயலாளராக மாவை சேனாதிராசா: பங்காளிக் கட்சிகள் தீர்மானம்.! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளராக மாவை சோ. சேனாதிராஜா செயற்படுவார் எனத் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிப்பதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் இணக்கம் கண்டுள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான இலங்கைத் தமிழரசுக் கட்சி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்), தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) ஆகியவற்றின் தலைவர்கள் நேற்று யாழ். மாட்டீன் வீதியில் அமைந்துள்ள தமிழரசுக் கட்சியின் தலமையகத்தில் கூடி ஆராய்ந்தனர். இதன்போதே மேற்படி தீர்மானமும் நிறைவேற்றப்பட்டு இந்த முடிவை உடனடியாகத் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது. …
-
- 2 replies
- 422 views
-
-
ஐ.நா. நிகழ்வுக்கு மஹிந்த அழைக்கப்பட்டமைக்கு கடும் சாடல் .! ஐக்கிய நாடுகள் சபையின் 75 ஆவது வருடப் பூர்த்தியை முன்னிட்டு இலங்கையிலுள்ள ஐ.நா அலுவலகம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வுக்குப் பிரதமர் மகிந்த ராஜபக்ச பிரதம விருந்தினராக அழைக்கப்பட்டமையானது, போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமைகள் மீறல்களினால் பாதிக்கப்பட்ட மக்களின் முகத்திலறையும் செயலாகும்.” இவ்வாறு சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் கடுமையாகச் சாடியுள்ளது. போர்க்குற்றங்களுடன் தொடர்புபட்டிருப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருப்பவர்களின் பொதுவான பிம்பம் துடைத்தெறியப்படுவதற்குத் துணைபுரியக்கூடிய செயல்களில் ஐக்கிய நாடுகள் சபை ஈடுபடக்கூடாது. ஆனால், கடந்த வாரம் அத்தகையதொரு செயலையே இலங்கையின் ஐ.ந…
-
- 1 reply
- 238 views
-
-
வெள்ளவத்தை உணவக உரிமையாளருடன் பேருந்தில் பயணித்தவர்களுக்கு சுகாதார அதிகாரிகள் அழைப்பு- யாழ்நகரில் பல வர்ததக நிலையங்களுக்கு பூட்டு October 31, 2020 கொரோனாவால் பாதிக்கப்பட்ட கொழும்பு வெள்ளவத்தையை சேர்ந்த உணவு உரிமையாளரும் அவரது கடையில் பணியாற்றியவர்களும் யாழ்ப்பாணம் சென்றதை தொடர்ந்து அவர் பயணித்த பேருந்தில் பயணித்தவர்களை தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ள அதிகாரிகள் பாதிக்கப்பட்டவரின் உறவினர்களின் வர்த்தக நிலையங்கள் பலவற்றை மூடியுள்ளனர் இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் கொழும்பில் உணவகம் நடத்தும் உரிமையாளருக்கு கோரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அவருடன் பேருந்தில் பயணித்தவர்களை தமது பிரதேச…
-
- 0 replies
- 555 views
-
-
பா.உ கோ.கருணாகரம் அவர்களின் முயற்சியில் கரடியனாறு கரடியன்குளம் மக்களின் காணி விடயத்திற்குத் தீர்வு! Dicksith மட்டக்களப்பு கரடியனாறு கரடியன்குளம் பிரதேச மக்கள் காலாகாலமாக விவசாயம் மற்றும் குடியிருப்புகளை மேற்கொண்டு வந்த காணிகளை கரடியனாறு விவசாயப் பண்ணைக்குச் சொந்தமானது என அளவீடுகளை மேற்கொள்ளும் பணிகள் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. பிரதேச மக்களின் வேண்டுகோளை அடுத்து பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் அவர்களின் நேரடி களவிஜயத்தின் மூலம் அளவீட்டுப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச செயலாளரின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டு மக்களுடனான கலந்துரையாலொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.அவ்வாறு ஒழுங்கு செய்யப்பட்ட கலந்துரையாடல் இன்றைய…
-
- 1 reply
- 610 views
-
-
வெளிநாட்டு கொள்கையில் நடுநிலை தவறினால் மிகப் பெரிய பின் விளைவுகள் ஏற்படும்.! சம்பந்தன் சுட்டிக்காட்டு.! ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான இலங்கை அரசு, அனைத்து நாடுகளுடனும் இணைந்து பயணிக்கக்கூடியவாறு புதிதாக - பக்கச்சார்பில்லாமல் சமாந்தரமான கொள்கைகளை வகுத்துக் கருமங்களை முன்னெடுக்க வேண்டும். இந்தக் கடமையிலிருந்து தவறினால் பாரிய பின்விளைவுகளை இலங்கை சந்திக்க வேண்டி வரும்." - இவ்வாறு எச்சரிக்கை விடுத்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன். உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு இலங்கை வந்திருந்த அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியா, 'நிலையான வளர்ச்சியுடன் இலங்கை மக்களுக்கு இறையாண்மையும் சுதந்திரமும் இருக்க வேண்டும் என்று அமெரிக்கா விரும…
-
- 5 replies
- 1.4k views
-
-
மட்டக்களப்பு BRANDIX ஆடைத் தொழிற்சாலை தற்காலிகமாக பூட்டு! By Sayanolipavan மட்டக்களப்பு- ஆரையம்பதியில் அமைந்துள்ள BRANDIX ஆடைத்தொழிற்சாலையை தற்காலிகமாக மூன்று நாட்களுக்கு மூடுமாறு கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் அறிவித்துள்ளார். மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி மற்றும் மாவடிமுன்மாரியில் கண்டறியப்பட்ட இரு கொரோனோ தொற்றாளர்களின் நெருங்கிய உறவினர்கள் ஆரையம்பதியில் அமைந்துள்ள BRANDIX ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்துவருவதையடுத்து குறித்த ஆடைத்தொழிற்சாலையை தற்காலிகமாக இன்று முதல் 3 நாட்களுக்கு மூடி கிருமிநாசினி விசிறி சுத்தப்படுத்துமாறு அறிவுரை வழங்கியுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அழகையா லதாகரன் தெரிவித்தார். …
-
- 0 replies
- 618 views
-
-
மனோகணேசன் தனது தவறை மூடி மறைப்பதற்கு முயற்சித்தார் – எம்.ஏ.சுமந்திரன் மனோகணேசன் தனது தவறை மூடி மறைப்பதற்கு, அரசியல் கைதிகளின் விடுதலையை, துமிந்த சில்வாவின் விடுதலையுடன் ஒப்பிட்டது தவறான ஒரு செயல் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது வீட்டில் இன்று ( வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ”ஓரிரு தினங்களுக்கு, துமிந்த சில்வாவின் விடுதலை தொடர்பில் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைச்சாத்திட்ட மனுவில் தானும் கைச்சாத்திட்டதாகவும், அது மூன்று வாரங்களின் முன்னர் இந்த சம்பவம் நடைபெற்றது. ஆனால், அத…
-
- 3 replies
- 1.1k views
-
-
மைக்பொம்பியோவை சந்திக்க பிரதமர் விரும்பவில்லை- விமல் Rajeevan Arasaratnam இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட அமெரிக்க இராஜாங்க செயலாளரை சந்திப்பதற்கு பிரதமர் மகிந்த ராஜபக்ச விரும்பவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. நான் அறிந்தவரையில் பிரதமர் மைக்பொம்பியோவை சந்திப்பது குறித்து ஆர்வம் காட்டவில்லை என அமைச்சர் விமல்வீரவன்ச தெரிவித்துள்ளார். இலங்கை;கான தனது விஜயத்தின் போது அமெரிக்கா இராஜாங்க செயலாளர் ஜனாதிபதியையும் வெளிவிவகார செயலாளரையும் சந்தித்த போதிலும் பிரதமரை சந்திக்காதது அரசியல் வட்டாரங்களில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. https://thinakkural.lk/article/84359
-
- 9 replies
- 1.4k views
-
-
ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக இலங்கையில் கொரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவி வருகின்ற பின்னணியில், பல்வேறு தரப்பினரும் இந்த தொற்றினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இலங்கையில் முதலாவது கொரோனா அலை ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் கடற்படை மற்றும் கந்தகாடு மறுவாழ்வு நிலையத்திலுள்ளவர்கள் மற்றும் அவர்கள் சார்ந்தவர்களே பாதிக்கப்பட்டிருந்தனர். எனினும், இந்த முறை ஆடைத் தொழிற்சாலையை சேர்ந்தவர்கள் முதலில் பாதிக்கப்பட்ட நிலையில், பின்னரான காலத்தில் மீன் விற்பனையாளர்கள், போலீஸார், ஊடகவியலாளர்கள் என பலரும் பாதிக்கப்பட்டுள்ளதை காண முடிகின்றது. மினுவங்கொட ஆடைத் தொழிற்சாலையில் ஏற்பட்ட கோவிட் கொத்தணி, பின்…
-
- 0 replies
- 718 views
-
-
இந்தியத் தூதுவர் - சம்பந்தன் திடீர் சந்திப்பு: எந்த நாடும் இலங்கைக்கு அழுத்தம் வழங்க முடியாது.! - கெஹலிய.! இலங்கையில் தமிழர்கள் மட்டுமன்றி சிங்களவர்கள், முஸ்லிம்கள் என மூவின மக்களும் வாழ்கின்றார்கள். இந்தநிலையில், தமிழர் விவகாரம் தொடர்பில் எந்த நாடும் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க முடியாது." - இவ்வாறு அமைச்சரவைப் பேச்சாளரும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையில் கொழும்பில் நேற்றுமுன்தினம் மாலை திடீரென முக்கிய சந்திப்பு நடைபெற்றது. இதன்போது தமிழர் தரப்பின் பல்வேறு விடயங்கள் குறித்து இருவரும் பேசினர். இது தொடர்பில் …
-
- 2 replies
- 1.3k views
-
-
கொரோனா அச்சுறுத்தல்: யாழ்.மக்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன வெளி மாவட்டங்களில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு வருகை தருவோர் அந்தப் பகுதி கிராம அலுவலகர் ஊடாக தங்களது முழு விபரங்களை பதிய வேண்டும் என அம்மாவட்ட கொவிட் -19 உயர்மட்டக் குழு அறிவித்துள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டத்தின் கொவிட்-19 தொடர்பான விழிப்புணர்வு கூட்டம், ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தில் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் க.மகேசன், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எம்.பிரதீபன், வட.மாகாண சுகாதார சேவைகள் பணப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன், வட.மாகாண உளநல சேவை பணிப்பாளர…
-
- 0 replies
- 504 views
-
-
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை கண்டுபிடிக்கும் அதிகாரம் அமெரிக்காவிற்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தெரிவித்தனர். http://cdn.virakesari.lk/uploads/medium/file/137249/IMG_20201026_134126.jpg இன்று வவுனியாவில் காணாமல் போனவர்களினால் மேற்கொள்ளப்படும் போராட்ட பந்தலில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அமெரிக்க வெளிவிவகார செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்ட மின்னஞ்சல் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தனர். அங்கு அவர்கள் மேலும் தெரிவிக்கையில், இலங்கையின் வன்னியில் நடந்த இனப் போரின்போது, 25,000 க்கும் மேற்பட்ட தமிழர்கள் காணாமல் ஆக்கப்பட்டனர். நாங்கள் 1347 வது நாளாக ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவு …
-
- 2 replies
- 692 views
-
-
பொலநறுவை கொரோனோ சிகிச்சை நிலையம்: யாழில் இருந்து 20 தாதியர்களை அனுப்ப நடவடிக்கை பொலநறுவையில் உள்ள கொரோனோ சிகிச்சை நிலையத்திற்கு யாழ்.போதனா வைத்தியசாலையில் கடமையாற்றிய 20 தாதியர்கள் அனுப்பி வைக்கப்படவுள்ளனர். கொரோனோ பெருந்தொற்றின் மூன்றாம் அலை காரணமாக கொரோனோ சிகிச்சை நிலையங்களில் நோயாளர்கள் நிரம்பி உள்ளனர். இந்நிலையில் சிகிச்சை நிலையங்களில் தாதியர் பற்றாகுறை நிலவுகின்றன. அதனால் கூடுதல் தாதியர்களை கடமைக்கு அமர்த்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் 4 தமிழ் தாதியர்கள் உட்பட 20 தாதியர்கள் பொலநறுவை கொரோனோ சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என வைத்தியசாலை வட்டார தகவல்க…
-
- 1 reply
- 825 views
-
-
கொவிட்-19 தகவல் திரட்டும் புதிய செயலி அறிமுகம் மருத்துவத் துறையிலும் கொவிட்-19 ஒழிப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினருக்கும் தேவையான தகவல்களை இலகுவாக அறிந்துகொள்ளக் கூடிய புதிய செயலி (APP) மேல் மாகாண சுகாதார சேவைகள் அலுவலகத்தினால் ஜனாதிபதிக்கு அறிமுகம்செய்து வைக்கப்பட்டது. கொவிட்-19 நோய்த் தொற்றாளர்கள், தொடர்புடையவர்கள், தனிமைப்படுத்தல், பி.சி.ஆர. பரிசோதனை சேவைகள், கண்காணிப்பு, தீர்மானங்களை மேற்கொள்தல், நோய்த்தொற்றாளர்களுக்கு கிட்டிய பிரதேசங்களுடன் தொடர்புடைய தகவல்கள் உள்ளிட்ட தேவையான பல தரவுகளை இந்த புதிய செயலியின் மூலம் பெற்றுக்கொள்ள முடியும். ஜனாதிபதி தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் தினமும் இடம்பெறம் கொவிட்-19 ஒழிப்பு செயலணி நேற்று முற…
-
- 0 replies
- 702 views
-
-
20 ஐ ஆதரித்த 9 எதிரணி உறுப்பினர் நீக்கம் – அரச தரப்பில் ஆசனம் ஒதுக்க கோரிக்கை 41 Views ஐக்கிய மக்கள் சக்தியின் 09 பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர் என எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல, சபாநாயகருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார். அதனால் அவர்களுக்கு பாராளுமன்றத்தில் ஆளும் கட்சியினர் பக்கம் ஆசனங்களை ஒதுக்குமாறும் லக்ஷ்மன் கிரியெல்ல, சபாநாகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இவ்வாறு கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களில் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிச்செயலாளர் டயானா கமகே உள்ளிட்ட 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்த 09 பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனர். …
-
- 0 replies
- 345 views
-
-
விடுதலைப்புலிகளின் ஆயுதம் தேடிய பொலிசாருக்கு... கிடைத்த ஆயுதம் வவுனியா- பெருமெடுப்பில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்களை தேடி நடத்தப்பட்ட அகழ்வில் அலவாங்கு ஒன்றினை பொலிஸார் மீட்டுள்ளனர். மட்டக்களப்பில் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் பொலிஸார் நீதிமன்ற அனுமதியுடன் வவுனியா விளக்குவைத்தகுளம் பகுதியில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்களை தேடி அகழ்வுப்பணி மேற்கொண்டிருந்தனர். இதன்போது வவுனியா நீதிபதி மற்றும் ஓமந்தை பொலிஸாரும் குறித்த பகுதிக்கு பிரசன்னமாகியிருந்த நிலையில், தீயணைப்பு வாகனங்கள் தரித்து நிற்க கனரக வாகனங்களின் உதவியுடன் சுமார் 10அடிக்கும் ஆழமாக நிலம், அகழ்வு செய்யப்பட்ட போது அலவாங்கு ஒன்றும் மதுசார வெற்று ரின் என்பனவும் காணப்பட்டுள்ளன. இதனையடுத்து தோண்டப்…
-
- 1 reply
- 809 views
-
-
‘பிரபாகரன் தமிழனே, அனைவரையும் கொல்வோம்’-மருத்துவர்களை மிரட்டிய பிரிகேடியர் 68 Views “பிரபாகரன், தமிழனே, நாங்கள் உங்கள் அனைவரையும் கொன்று விடுவோம்” என இலங்கை இராணுவ அதிகாரியான பிரிகேடியர் கே கே எஸ் பெராகும் பணியில் இருந்த மருத்துவர்களை மிரட்டியதாக இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கம் குற்றம்சுமத்தியுள்ளது. இலங்கை இயந்திர காலாட் படைப்பிரிவின் பிரிகேடியர் கே கே எஸ் பெராகும், மருத்துவ அதிகாரிகளை பார்த்து உங்களைக் கொன்ற விடுவேன் என்றும் இனவாத ரீதியிலும், “பற தெமிழா, பிரபாகரன், பயங்கரவாதிகள். உங்கள் எல்லாரையும் கொல்லுவேன். இது எனது ஏரியா” என்று தகாத வார்த்தைகளால் மிரட்டியதாகவும் இலங்கையின் மிக முக்கியமான மருத்துவ சங்கமான அரச மர…
-
- 4 replies
- 895 views
-
-
கொரோனா பாதிப்பு – சர்வதேச ரீதியில் 112 ஆவது இடத்திற்கு முன்னேறிய இலங்கை உலகை அச்சுறுத்தும் கொடிய கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை 112ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. கொரோனா வைரஸின் தாக்கம் உலகளவில் மக்களை அச்சுறுத்திவரும் நிலையில், இலங்கையிலும் அதன் பாதிப்பு தற்போதைய காலங்களில் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மினுவங்கொட மற்றும் பேலியகொட கொரோனா கொத்தணி காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துச் செல்கிறது. மினுவாங்கொட மற்றும் பேலியகொட கொரோனா கொத்தணியில் மாத்திரம் பதிவாகியுள்ள மொத்த வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை ஐயாயிரத்து 731 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், நாட்டில் இதுவரை பதிவாகியுள்ள கொரோனா …
-
- 4 replies
- 900 views
-