ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143643 topics in this forum
-
கொழும்பு வருமாறு ஜெயலலிதாவுக்கு அழைப்பு அனுப்பினார் மகிந்த [ சனிக்கிழமை, 23 யூலை 2011, 02:43 GMT ] [ தா.அருணாசலம் ] தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதாவை சிறிலங்காவுக்கு வருமாறு மகிந்த ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார். அவரது தனிப்பட்ட அழைப்பை நேற்று முன்தினம் தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதாவிடம் இந்தியாவுக்கான சிறிலங்கா தூதுவர் பிரசாத் காரியவசம் கையளித்ததாக சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தகவல் வெளியிட்டுள்ளார். அலரிமாளிகையில் நேற்றுக்காலை ‘இந்து‘ நாளிதழின் ஆசிரியர் என்.ராம், சிறிலங்கா அதிபரைச் சந்தித்த போதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதாவுடன், இந்தியாவுக்கான சிறிலங்கா தூதுவர் பிரசாத் காரியவசம் சந்தித்துப் பேசியது குறித்து இந்து ஆச…
-
- 5 replies
- 545 views
-
-
புதிய பொலிஸ் ஊடகப் பேச்சாளராக உதவி பொலிஸ் அத்தியட்சகர் றூவான் குணசேகர நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. பொலிஸ் பேச்சாளராக நியமிக்கப்பட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன அண்மையில் வெளிநாட்டு விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார். அந்த இடத்திற்கு உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் றூவான் குணசேகர பதில் கடமைக்கு அமர்த்தப்பட்டிருந்தார். இந்தநிலையில் பொலிஸ் பேச்சாளராக றூவான் குணசேகர பொலிஸ் தலைமையகத்தினால் நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரையும் பொலிஸ் பேச்சாளராக கடமையாற்றிய அஜித் ரோஹண கொழும்பு – வடக்கு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக நியமிக்கப்பட்டுள்ளார். http://onlineuthayan.com/News_More.php?id=823313913212790482
-
- 0 replies
- 221 views
-
-
கண்காணிப்புக் குழுவின் தலைவர் இன்று கிளிநொச்சி செல்கிறார் கண்காணிப்புக் குழுவின் தலைவர் ஜெனரல் சொல் பேர்க் இன்று கிளிநொச்சிக்கு விஜயம் செய்கிறார். இன்றுகாலை தரை மார்க்கமாக கிளிநொச்சி வரும் அவர், விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வனுடன் பேச்சு நடத்துவார். போர்நிறுத்த உடன்பாடு, அண்மைக்காலத் தாக்குதல் கள் ஆகியன குறித்தே இன்றைய சந்திப்பின்போது பிர தானமாகப் பேசப்படும் என்று அறியவருகிறது உதயன்
-
- 4 replies
- 1.1k views
-
-
தோல்வியை அடுத்து; யாழ். உயர் அதிகாரிகளை இலக்கு வைக்கிறது அரசு; சிலர் வீட்டுக்கு; பலருக்கு இடமாற்றங்கள் Thursday, July 28, 2011, 9:38 சிறீலங்கா நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் வடக்கில் அரசு பெரும் தோல்வி அடைந்தது. இதனை அடுத்து வடக்கில் உள்ள அரச திணைக்களங்களின் உயர் அதிகாரிகளின் பதவிகளில் விரைவில் மாற்றங்கள் கொண்டுவரப்பட உள்ளன. முதல் நடவடிக்கையாக வடக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் ப.விக்னேஸ்வரன் கட்டாய விடுமுறையில் செல்லுமாறு ஆளுநரால் பணிக்கப்பட்டுள்ளார். வடமாகாண அமைச்சுக்களின் செயலாளர்களாகப் பணியாற்றுபவர்கள் உட்பட மீள் நியமனம் பெற்றுள்ள 60 வயதுக்கு மேற்பட்ட அதிகாரிகளையும் கூட உடனடியாகப் பணி நீக்கம் செய்வதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.…
-
- 1 reply
- 489 views
-
-
தீவகம் வேலணை சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மாவீரர்களின் பெற்றோர் மற்றும் பிரதேச சபையின் உறுப்பினர்கள், தமிழ் அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள், சமூக மட்ட பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு மாவீரர்களின் கல்லறைகளிலும், மாவீரர்களின் சிதைவடைந்த நினைவிட சிதறல்களிலும் (நினைவிடத்திலும்) மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினர். https://newuthayan.com/story/14/தீவகத்தில்-மாவீரர்-நினைவேந்தல்.html
-
- 0 replies
- 391 views
-
-
யாழ்ப்பாணம் இளவாலைப் பகுதியில் இளம்பெண்ணொருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். இளவாலை கிழக்கைச் சேர்ந்த மயில்வாகனம் தர்ஷினி வயது 26 என்ற இளம் பெண்ணே கொல்லப்பட்டவராவர். ஊரின் ஒதுக்குப்புறத்தில் உள்ள பாழடைந்த கிணற்றிலிருந்து இவரின் சடலம் மீட்கப்பட்டது. இவரது சடலம் தற்போது மருத்துவப் பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தள்ளனர். My link
-
- 1 reply
- 771 views
-
-
பாராளுமன்ற விதிமுறைப்படி கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கு எதிர்க்கட்சி தலைமைப்பதவி போக வேண்டுமெனின் அதை தடுக்க முடியாது அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்றின் எதிர்க்கட்சியாகவும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆளும் தரப்பாகவுமே கடந்த காலங்களில் செயற்பட்டு வந்தன. எனினும் தற்போது ஏற்பட்டிருக்கும் தேசிய அரசாங்கத்தின் மூலம் எதிர்க்கட்சியினர் யார் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. யார் எதிர்க்கட்சி என்பதற்கு தேசிய அரசில் விடை கிடைப்பது கடினமானதே. இரு பிரதான கட்சிகளும் ஒன்றிணைந்தே தேசிய அரசாங்கத்தை அமைத்துள்ளன. தேசிய அரசு கலைக்கப்பட்டவுடன் மீண்டும் இரு கட்சிகளில் ஒன்று ஆளும் தரப்பாகவும் எதிர்க்கட்சியாகவும் அமைந்து விடும். ஆனா…
-
- 10 replies
- 942 views
-
-
ஞாயிறு 03-06-2007 06:51 மணி தமிழீழம் [மகான்] சீனாவிடமிருந்து 340 கோடி ரூபாக்கள் பெறுமதியான ஆயுதங்கள் கொள்வனவு சீனாவிடமிருந்து 340 கோடி ரூபாக்களுக்கான ஆயுத தளபாடங்களைக் கொள்வனவு செய்யவுள்ளது. வழமையாக சீனாவின் நொறின்கோ (Chinals North Industries Corporation ) நிறுவனத்திடம் ஆயுதக் கொள்வனவில் ஈடுபட்ட சிறீலங்கா அரசு தற்பொழுது அதனை நிறுத்தி சீனாவின் பொலி ரெக்னோலொஜி (Poly Technologies) நிறுவனத்தினம் இவ் ஆயுதக் கொள்வனவுக்கான உடன்படிக்கையைச் செய்துள்ளது. ஏற்கனவே நொறின்கோ நிறுவனத்திற்கு 2200 கோடி ரூபாக்கள் கொடுக்க வேண்டிய நிலையில் பிறிதொரு நிறுவனமான பொலி ரெக்னோலொஜியிடம் 340 கோடி ரூபாக்களுக்கான ஆயுதக் கொள்வனவு ஒப்பந்தம் ஒன்றைச் செய்துள்ளது. …
-
- 6 replies
- 1.2k views
-
-
December 7, 2018 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்க, மஹிந்த ராஜபக்ஸ என அனைவரையும் இனவாதிகளே என்றும் இவர்களில் யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழ் மக்களுக்கு நலன் கிட்டாது என்று ஜனநாயக மக்கள் காங்கிரசின் தலைவர் பிரபா கணேசன் தெரிவித்துள்ளார். ஜனநாயக மக்கள் காங்கிரசின் மன்னார் மாவட்டக் காரியாலயம் அங்குரார்ப்பண நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். நல்லாட்சி என கூறிக்கொள்ளும் அரசு தமிழ் மக்களுக்கு எதனை செய்துள்ளது? என்றும் கேள்வி எழுப்பினார். சமஷ்டியை தருகின்றோம் என்றார்கள், வடக்கு கிழ…
-
- 1 reply
- 324 views
-
-
Published By: RAJEEBAN 28 OCT, 2023 | 09:36 AM காசாவில் உடனடி போர் நிறுத்தத்தை கோரி ஐக்கியநாடுகள் பொதுச்சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்திற்குஇலங்கை ஆதரவளித்துள்ளது. ஐக்கியநாடுகள் பொதுச்சபை தீர்மானம் காசாவிற்குள் மனிதாபிமான பொருட்கள் செல்வதற்கு தடையற்ற அனுமதியை வழங்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது. பொதுமக்களை பாதுகாத்தல் சட்ட மற்றும் மனிதாபிமான கடப்பாடுகளை நிறைவேற்றுதல் என்ற இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 120 நாடுகள் வாக்களித்துள்ளன-12 நாடுகள் எதிர்த்து வாக்களித்துள்ளன. இந்தியா அவுஸ்திரேலியா கனடா ஜேர்மனி உக்ரைன் உட்பட 45 நாடுகள் வாக்களிப்பை தவிர்த்துள்ளன. அமெரிக்காவும் இஸ்ரேலும் எதிர்த்து வாக்…
-
- 0 replies
- 571 views
- 1 follower
-
-
ஒற்றையாட்சியின் கீழ் இனப்பிரச்சனைக்குத் தீர்வு: த.தே.கூ. நிராகரிப்பு. ஒற்றையாட்சியின் கீழ் இனப்பிரச்சனைக்குத் தீர்வு காணும் திட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிராகரித்துள்ளது. சிறிலங்கா நாடாளுமன்றத்தில் அவசரகாலச் சட்டத்தின் மீதான விவாதத்தின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் பேசியதாவது: அரசாங்கத்தின் இராணுவ வழித் தீர்வுத் திட்டத்தையே அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழு முன்வைக்கிறது. பெரும்பான்மை தேசிய இனத்தினரைத் திருப்திபடுத்தும் வகையில்தான் சுதந்திரக் கட்சியின் தீர்வுத் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. 1972 ஆம் ஆண்டு ஒற்றையாட்சி அரசாங்கம் அறிமுகப்படுத்தப்பட்டதால்தா
-
- 0 replies
- 938 views
-
-
மஹாராஜா குழும நிறுவனத்தின் மீது ரணில் குற்றச்சாட்டு 16 ஆகஸ்ட் 2011 இலங்கையின் முன்னணி வர்த்தக நிறுவனங்களில் ஒன்றான மஹாராஜா குழும நிறுவனத்தின் மீது எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க குற்றம் சுமத்தியுள்ளார். மஹாராஜா குழும நிறுவனம் ஐக்கிய தேசியக் கட்சியின் இரண்டு தேசியப் பட்டியல் ஆசனங்களைக் கோரியதாகவும் அதனை தர மறுத்த காரணத்தினால் தமக்கு எதிராக பிரச்சாரம் செய்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். எம்.பி.சீ. மற்றும் எம்.ரீ.வீ ஊடக நிறுவனம் மஹாராஜா குழும நிறுவனத்தின் ஓர் அங்கம் என்பது குறிப்பிடத்தக்கது. நாளைய தினம் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைக் காரியாலயத்திற்கு எதிரில் கட்சியின் கிளர்ச்சிக் குழு உறுப்பினர்கள் சத்தியாக்கிரக போராட்டமொன்றை நடத்த…
-
- 1 reply
- 992 views
-
-
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பூட்டான் பிரதமர் ஷெரிங் டொபே சற்றுமுன்னர் இலங்கை வந்தடைந்துள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார். மேலும் இவருடன் 12 பேர் அடங்கிய குழுவினர் வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/articles/2015/04/09/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D http://www.tamilmirror.lk/143758
-
- 3 replies
- 373 views
-
-
ஈழத்தமிழினத்தின் வாழ்வும் வளமும்மிக்க பாக்கு நீரிணை இந்தியா மற்றும் சீனாவின் பலப்பரீட்சைக் களமாக மாறுமாயின் முதலில் அழிவது ஈழத்திமிழர்கள்தான். நாங்கள் அதனை ஒருபோதும் கைகட்டி வேடிக்கை பார்க்க போவதில்லை என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளர் க.துளசி தெரிவித்துள்ளார். இலங்கை தொடர்பில் இந்தியா சீனாவின் ஆதிக்க நிலை குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இந்துசமுத்திர அதிகாரப்போட்டியில் மையப்புள்ளியாகும் பாக்கு நீரிணையும் தமிழர்களின் வாழ்வாதாரமும் 99 வருட ஓப்பந்த அடிப்படையில் அம்பாந்தோட்டையை கையகப்படுத்திய சீனா தமிழர்கள் நலன்சார்ந்து செயற்படும் என நினைப்பது சிறுபிள்ளைத்தனமானது. சீனா போ…
-
- 1 reply
- 354 views
-
-
மனித உரிமை மீறல் சம்பவங்கள் அரசு நடத்தும் விசாரணைகள் மீது வெளிநாட்டு நிபுணர்கள் அதிருப்தி படுகொலைகள் உட்பட பல்வேறு மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிப்பதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு வின் செயற்பாடுகள் குறித்து அதனைக் கண் காணிக்கும் சர்வதேச கண்காணிப்பாளர் குழு அதிருப்தி தெரிவித்திருக்கின்றது. ஆணைக்குழுவின் செயற்பாடுகள் சர்வ தேச தரத்தில் இல்லை என்றும் பல்வேறு குறைபாடுகளைக் கொண்டுள்ளன என் றும் சர்வதேச நிபுணர்குழு கடுமையாக விமர்சித்திருக்கின்றது. பிரான்ஸைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் பட்டினிக்கு எதிரான தொண்டர் அமைப்பின் பணியாளர்கள் 17 பேர் கடந்த ஓகஸ்டில் மூதூரில் கொல்லப் பட்டமை உட்பட பதினாறு மனித உரிமை மீறல் சம்பவங்கள் குறித்து விசாரிப்பதற்கு ஜனாதிபதி ஆணைக்…
-
- 0 replies
- 752 views
-
-
அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் சென்னையில் இலங்கைத் தமிழ் பிரமுகர்களுடன் சந்திப்பு APR 15, 2015by கார்வண்ணன்in செய்திகள் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிசப், சென்னையில் இலங்கைத் தமிழ்ப் பிரமுகர்களைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளார். சென்னையில் உள்ள அவுஸ்ரேலிய துணைத் தூதரகத்தில் இன்று நடந்த இந்தச் சந்திப்பு, ஆக்கபூர்வமானதாக அமைந்தது என்று அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிசப் ருவிட்டரின் சற்று முன்னர் வெளியிட்ட பதிவில் தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பில், ஈழ ஏதிலியர் புனர்வாழ்வு அமைப்பின் தலைவர் சந்திரகாசன் தலைமையிலான, இந்தியாவில் வசிக்கும் இலங்கைத் தமிழ்ப் பிரமுகர்கள் கலந்து கொண்டிருந்தனர். அவுஸ்ரேலிய வெளிவிவகார…
-
- 3 replies
- 730 views
-
-
செவ்வாய் 19-06-2007 15:19 மணி தமிழீழம் [சிறீதரன்] யாழ் மருத்துவமனையில் கப்பம் கேட்கும் காவல்துறை யாழ்ப்பாண மருத்துவமனையில் நிலைகொண்டுள்ள காவல்துறையினர் பொது மக்களிடம் கப்பம் கேட்டு துன்புறுத்திவருவதாக பலரும் குற்றம் சாட்டுகின்றார்கள். யாழ்ப்பாண மருத்துவமனையில் வளாகத்தில் ஒரு காவல்துறை நிலையம் அமைக்கப்பட்டு இயங்கி வருகின்றது குறிப்பிட்ட காவல் நிலையம் போதனா வைத்திய சாலைக்கு கொண்டுவரப்படும் திடீர் மரணங்கள் மற்றும் குற்றச் செயல்களுடன் கூடிய காணம் அடைந்தவர்களின் நலனுக்காக இந்த காவல் துறை நிலையம் இயங்குகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். ஆனாலும் கூட தற்போது யாழ் குடா நாட்டில் இடம் பெறும் இனம் தெரியாதவர்களின் துப்பாக்கிச் சூட்டு மரணங்கள் மற்றும் தற்கொலைகள்…
-
- 0 replies
- 1.2k views
-
-
தகவலறியும் சட்ட மூலம் தொடர்பாக ஆய்வு தகவல் அறிந்து கொள்ளும் உத்தேச சட்டம் அரசியல் அமைப்பிற்கு உட்பட்ட வகையில் உருவாக்கப்பட்டுள்ளதா? என்பது தொடர்பில் உச்ச நீதிமன்றம் எதிர்வரும் 28ஆம் திகதி ஆராயவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஆராய்வதற்காக பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் தலைமையிலான மூவர் அடங்கிய நீதியரசர் குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில், பிரதம நீதியரசருடன், நீதியரசர்களான ரோஹினி மாரசிங்க மற்றும் பிரியந்த ஜயவர்தன ஆகியோர் இடம்பெறவுள்ளனர். மிக அவசரமாக நிறைவேற்றப்பட வேண்டிய சட்டமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த உத்தேச சட்டம் உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த நீதியரசர் குழுவினால் ஆய…
-
- 0 replies
- 240 views
-
-
சர்வதேச மனக்கணித போட்டியில் மட்டக்களப்பைச் சேர்ந்த 6 வயது மாணவி சாதனை ! மலேசியாவில் இடம்பெற்ற சர்வதேச மனக்கணித போட்டியில் மட்டக்களப்பைச் சேர்ந்த 6 வயதுடைய தமிழ்செல்வன் அக்ஷதா என்ற மாணவி 3ஆம் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார். கடந்த ஒகஸ்ட் மாதம் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற யுசிமாஸ் மனக்கணித போட்டியில் நாடளாவிய ரீதியில் பலர் பங்கு கொண்ட போட்டியில் முதலாம் இடத்தை பெற்ற தமிழ்செல்வன் அக்ஷதா சர்வதேச மனக்கணக்கு போட்டியில் தெரிவு செய்யப்பட்டார். சர்வதேச போட்டி கடந்த 3ஆம் திகதி மலேசியாவில் 80இற்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 2500இற்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் இலங்கையில் இருந்து 62 மாணவர்கள் கலந்து கொண்டனர…
-
- 5 replies
- 353 views
-
-
ஓய்வு வயதை அறிவித்தார் சுமந்திரன் வி.ரி. சகாதேவராஜா இலங்கை தமிழர் கட்சியின் காரைதீவு பொதுச் சபை உறுப்பினர்களின் சந்திப்பு, காரைதீவு தமிழரசுக் கட்சி கிளைத்தலைவரும் முன்னாள் தவிசாளருமான கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் தலைமையில் கட்சி கிளைப் பணிமனையில் நடைபெற்றது. பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் இரா. சாணக்கியன் மற்றும் இளைஞர் அணி துணைத் தலைவர் அருள். நிதாஞ்சன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் இலங்கை தமிழர் கட்சியின் ஊடக பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ சுமந்திரன் தெரிவிக்கையில், “எனக்கு இன்னும் இரண்டு மாதங்களில் 60 வயதாகிறது 65-ல் நான் ஓய்வு பெறுவேன்” என்றார். https://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/ஓய்வு-வயதை-அறிவித்தார்-சும…
-
- 2 replies
- 581 views
-
-
தொப்பிக்கல நடவடிக்கையும் தொடரப்போகும் தாக்குதல்களும்! [15 - July - 2007] *குடும்பிமலை (தொப்பிகல) அரச படைகளால் கைப்பற்றப்பட்டமை குறித்தும் அதன் பின்னர் தொடரக்கூடிய இராணுவ முன்னெடுப்புகள் குறித்தும் முன்னாள் இந்திய உளவுத்துறை அதிகாரி கேணல் ஆர்.ஹரிகரன் எழுதியுள்ள கட்டுரையின் சாராம்சத்தை இங்கே தருகின்றோம். இந்திய அமைதிப்படை இலங்கையில் நிலை கொண்டிருந்த பொழுது, ஹரிகரன் அதன் புலனாய்வுத்துறைத் தலைவராக கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில்: சோ.ஜெயமுரளி கிழக்கில் தமிழீழ விடுதலைப்புலிகளின் வசமிருந்த தொப்பிகல (Baron's Cap) எனும் கடைசி பலம்மிக்க தளத்தையும் தமது பாதுகாப்புப் படைகள் கைப்பற்றிவிட்டதாக இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு அலட்டிக்கொள்ளாத அறிவிப்…
-
- 0 replies
- 2.2k views
-
-
யாழ். மாவட்ட மக்களின் துயரங்களை உரிய அதிகாரிகள் மூலம் சர்வதேச சமூகத்திற்கு தெரிவிப்பேன் என்று தெற்காசிய விவகா ரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் ரொபேட் ஓ பிளேக் நேற்று யாழ்ப்பாணத்தில் கூறினார். யாழ்ப்பாணத்திற்கு நேற்று விஜயம் செய்த இவர் யாழ். மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளை யாழ். கோவில் வீதியிலுள்ள அலுவலகத்தில் சந்தித்து உரையாடியபோது இவ்வாறு கூறினார். அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் யாழ். மாவட்டத்தில் மக்கள் எதிர் நோக்கும் பல பிரச்சினைகள், துயரங்கள், யாழ்ப்பாணத்தின் இன்றைய நிலைமை, மக்கள் எதிர்பார்க்கும் அரசியல் தீர்வு என்பவற்றை விரிவாக எடுத்துக் கூறினர். பிரதிநிதிகள் யாழ். மாவட்டத்தின் இன்றைய நிலைமை பற்றி வ…
-
- 2 replies
- 790 views
-
-
அண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தமிழ் மொழியும் அரச கரும மொழியாக இருக்க வேண்டும் என்ற அடிப்படைக் கொள்கை மாற்றத்திற்கு உட்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம் .எ.சுமந்திரன் இலங்கை நாடாளுமன்றத்தில் பிரகடனம் செய்துள்ளார். இப்படியான மாற்றம் ஒன்றை ஏற்படுத்த எந்தவொரு நேரத்திலும் தமிழ் மக்கள் ஆணை பெறப்படாத போதிலும் இப்படி ஒரு முடிவு எப்படி எடுக்கப்பட்டதென தமிழ் மக்கள் மத்தியில் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. கடந்த 28 ஆம் திகதி 19 வது திருத்தச் சட்டம் தொடர்பான விவாதங்கள் இடம் பெற்ற வேளையில் கட்சித் தலைவர்களின் கோரிக்கைகள் காரணமாகச் சில மாற்றங்கள் மேற் கொள்ளப்பட்டன. அதன் பிரதிகள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விநியோகிக்கப்பட…
-
- 8 replies
- 853 views
-
-
3 நாள் விஜயம் மேற்கொண்டு வடக்கிற்கு செல்கிறார் ரணில் 30 DEC, 2023 | 06:44 PM ஆர்.ராம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மூன்று நாள் விஜயமாக எதிர்வரும் நான்காம் திகதி வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ளார். யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெறவுள்ள மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளார். இதன்போது காணிவிடுவிப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் சம்பந்தமான அறிவிப்பினை வெளியிடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து 250மில்லியன் ரூபா ஒதுக்கீட்டில் பாலியாற்று பாரிய குடிநீர் வழங்கல் திட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆரம்பித்து வைக்கவுள்ளார். இதனையடுத்து, அவர் கொழும்பு ரோயல் கல்லூரி மற்றும்…
-
- 23 replies
- 1.9k views
- 1 follower
-
-
[Monday, 2011-09-19 23:18:09] பிரிட்டனில் உள்ள முன்னணி சிங்கள பௌத்த பிக்கு ஒருவர் மீது ஒரு சிறுமியை பாலியல் வல்லுறவு கொண்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இதனை லண்டனில் மெட்ரோபொலிட்டன் பொலிஸார் உறுதி செய்துள்ளனர். லண்டனில் குரைடனில் உள்ள தேம்ஸ் பௌத்த விகாரையின் தலைமை பிக்குவான பகலஹம சோமரட்ண தேரோ என்பவர் மீது செப்டம்பர் 12 ஆம் திகதி பாலியல் துஷ்பிரயோகம் உட்பட 4 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 16 வயதுக்கு குறைவான ஒரு பெண்ணின் மீதான இந்த பாலியல் வல்லுறவும், மேலும் மூன்று பாலியல் ரீதியான தாக்குதல்களும் லண்டனில் செல்வந்தர்கள் வாழும் புறநகர் பகுதியான சிஸ்விக் பகுதியில், 1977 ஆம் ஆண்டுக்கும் 1978 ஆம் ஆண்டுக்கும் இடைப்ப…
-
- 1 reply
- 1.4k views
-