நிகழ்தல் அறிதல்
நிகழ்வுகள் | கொண்டாட்டங்கள் | விழாக்கள் | சந்திப்புகள்
நிகழ்தல் அறிதல் பகுதியில் அவசியமான நிகழ்வுகள், கொண்டாட்டங்கள், விழாக்கள், சந்திப்புக்கள் பற்றிய தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் விளம்பர நோக்கிலான பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும். யாழ் களத்தில் விளம்பரம் செய்ய விரும்பின் கட்டண விபரங்களை அறிய நிர்வாகத்துடன் தொடர்புகொள்ளலாம்.
639 topics in this forum
-
தாய் மண்ணிலே பிறந்து... தாய் மண்ணிலே மடிவது, ஒரு வரம். அதைப் பெறுவதற்கு, நாங்கள்... தவம் செய்யவில்லையோ.... - சிவா தருஸ். -
-
- 0 replies
- 356 views
-
-
லண்டனில் பண்டாரவன்னியன் குறும்பட வெளியீடு
-
- 0 replies
- 666 views
-
-
ஊடகவியலாளர் சிவராமின் 12ஆவது ஆண்டு நினைவுநாள் இன்று! குளோபல் தமிழ் செய்தியாளர்:- இலங்கையின் மிக முக்கியமான ஊடகவியலாளர்களில் ஒருவரான சிவராம் படுகொலை செய்யப்பட்டு 12 ஆண்டுகள் கடந்துவிட்டன. இன்று அவரது நினைவு தினமாகும். பிரபல ஊடகவியலாளர் சிவராம் ஏப்ரல் 28, 2005ஆம் ஆண்டில் பாதுகாப்பு மிகுந்த இலங்கைத் தலைநகர் கொழும்பில் பாராளுமன்றத்திற்கு அருகில் வைத்து கடத்தப்பட்;டு சுட்டுக் கொல்லப்பட்டார். 1959, ஆகஸ்ட் 11, ஈழத்தின் கிழக்கே மட்டக்களப்பில் பிறந்த சிவராம் தராகி என்ற பெயரில் த ஐலன்ட் ஆங்கிலப் பத்திரிகையில் 1989இல் தன் முதல் கட்டுரையை எழுதினார். அரசியல், போரியல், பாதுகாப்பு சார்ந்த அவரது கட்டுரைகள் உள் நாட்டில் மாத்திரமின்ற…
-
- 1 reply
- 396 views
-
-
தந்தை செல்வாவின் 40ஆவது ஆண்டு நினைவு தினம் கொழும்பில் : அமைச்சர் ராஜித நினைவுப்பேருரை இலங்கை தமிழரசுக்கட்சியின் நிறுவுனர் தந்தை எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தின் 40ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 26ஆம் திகதி புதன்கிழமை மாலை 53.0மணிக்கு நினைவுப்பேருரை நிகழ்வு நடைபெறவுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் மௌன அஞ்சலி, தமிழ்த் தாய் வாழ்த்து, தந்தை செல்வாவின் உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தல் ஆகியவற்றைத் தொடர்ந்து சுமந்திரன் எம்.பி தலைமையுரை ஆற்றவுள்ளார். அதனைத்தொடர்ந்து நிழ்வில் கௌரவிருந்தினராக கலந்துகொள்ளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்ப…
-
- 1 reply
- 425 views
-
-
அனைவரையும் சிரிக்க வைத்த மனிதர்... சார்லி சாப்ளின் பிறந்த தினம் இன்று. அவர் நினைவாக சில ஒளிப்பதிவுகள்.
-
- 1 reply
- 373 views
-
-
தமிழ் நவீன கவிதையின் முன்னோடி பிரமிளின் பிறந்தநாள் இன்று ஈழத்தில் பிறந்து தமிழ் கவிதைப் பரப்பில் பெரும் மாற்றத்தை உருவாக்கிய கவிஞர் பிரமிளின் பிறந்தநாள் இன்றாகும். பிரமிள் (ஏப்ரல் 20, 1939 – ஜனவரி 6, 1997) என்ற பெயரில் எழுதிய தருமு சிவராம், இலங்கையில் திருகோணமலையில் பிறந்தவர். ஈழத்தைப் பிறப்பிடமாக் கொண்டபோதும் தமிழகத்தின் முன்னணிக் கவிஞராக திகழ்ந்தவர். தமிழகத்து எழுத்தாளர். பாரதி, புதுமைப்பித்தனுக்குப் பிறகு தோன்றிய ஒரு இலக்கிய மேதை. தமிழின் முதன்மையான கவிஞர், விமர்சகர், சிறுகதையாசிரியர்.புதுக்கவிதை முன்னோடிகளுள் முக்கியமான ஒருவராக இவர் கருதப்படுகிறார். இவ…
-
- 0 replies
- 461 views
-
-
சிட்னி முருகன் கோயில் வருடாந்த தேர்திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.வரும் சனிக்கிழமை தேர் .முருகனின் முகப்புத்தகத்தில் மேலதிக தகவல்களை பெறலாம் https://www.facebook.com/search/top/?q=sydney murugan temple சிட்னி முருகனுக்கு அரோகரா
-
- 3 replies
- 957 views
-
-
தாய் மொழி இல்லையேல் தாய் நாடுமில்லை! உலக தாய்மொழி தினம் இன்று! – குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்:- மாசி 21, உலக தாய் மொழி தினம் இன்றாகும். தாய்மொழி மீதான ஒடுக்குமுறைக்கு எதிராக போராடி வரும் ஈழத் தமிழர்களுக்கு இது மிக முக்கியமானதொரு நாளாகும். தாய் மொழி என்பது ஒவ்வொரு மனிதரதும் பிறப்புரிமை. அதனை அதனை மனிதர்கள் தம் தாய் வழி சமூகத்திடமிருந்து கற்றுக்கொள்ளுகின்றனர். மொழியற்று பிறக்கும் ஒரு குழந்தை தன் தாயிடமிருந்து மொழியை பெறுகிறது. தாய் மொழியின் ஊடாக தன்னுடைய பண்பாட்டை, வரலாற்றை, வாழ்வை கற்றுக்கொள்வது எளியது என்பதால் ஒவ்வொருவருக்கும் தாய்மொழி மிக முக்கியமாகிறது. தாய்மொழியை எவரும் இழந்துவிடக்கூடாது என்பதற்காகவே இந்த நாள் வருடம…
-
- 0 replies
- 1.6k views
-
-
கருணா வின்சென்ட் :- ஈழத்து ஓவிய மரபின் தொடர்ச்சி. – எஸ் எம் வரதராஜன் -நியூசீலாந்து கனடாவில் தை 14 ,15 இல் இடம்பெறும் அவரது கண்காட்சியை முன்னிட்டு வெளிவரும் கட்டுரை இது. கலைகளில் அவள் ஓவியம் என்பது பிரபலமான திரைப்படப் பாடல் வரி. ஓவியக் கலைக்கு கவிஞர் கண்ணதாசன் கொடுத்த சிறப்பு அது. மனிதக் கண்கள் பார்க்கத் தொடங்கும்போதே ஓவியமும் இணைந்து விடுகிறது. அவள்தான் எனக்கு முதல் ஓவியம் என்பதுதான் கவிஞரின் கற்பனையாக இருக்கலாம். பொதுவாகவே கலைகளுக்கு இதுதானென்று ஒரு வரலாற்றைத் தீர்மானிக்க முடியாது. மனித சமூகத்தின் ஆரம்பகால வளர்ச்சியோடு அவை ஒவ்வொரு கட்டடத்தில் ஒவ்வொரு ரூபத்தில் இணைந்திருக்கின்றன. கூத்து, இசை, நாடகம் …
-
- 0 replies
- 2k views
-
-
இன்று உலக "ஹலோ" தினம். அன்பை சொல்ல, அபிமானத்தை வெளிப்படுத்த ,நம்மை அறிமுகப்படுத்திக்கொள்ள, ஆசையாய் பேச, நலம் அறிய, இப்படி எத்தனையோ உணர்வு பரிமாறங்களுக்கான ஒரு மந்திரச்சொல்தான் ஹலோ. எகிப்து மற்றும் இஸ்ரேல் நாடுகள்இடையே போரை முடிவுக்கு கொண்டுவர, அந்நாட்டு மக்கள் இடையே சண்டைமறைந்து சமாதானம் ஏற்படும் விதமாக1973 ஆம் ஆண்டில் முதன் முதலாக உலக ஹலோ தினம் கொண்டாடப்பட்டது. இன்றைக்கு 180க்கும் மேற்பட்டநாடுகளில் இத்தினம் கோலாலகமாககொண்டாடப்பட்டு வருகிறது. பத்து பேர்களுக்கு ஹலோ சொல்வது மூலம் இருந்த இடத்தில் இருந்துக் கொண்டேஇந்த தின கொண்டாட்டத்தில் பங்கேற்று மகிழ முடியும். இத்தினம் தகவல் பரிமாற்றத்தின் சக்தியாகவும், அமைதியின் மறுவடிவமாகவும் இருக்கிறது. பலர் இத்தினத்தில் உலக த…
-
- 0 replies
- 1.3k views
-
-
கனடாவில் உயிரணை நூல் அறிமுகவிழா எதிர்வரும் 22. 10. 2016 நடைபெறவுள்ளது. கனடா வாழ் கருத்துக்களநண்பர்கள் மற்றும் யாழ் இணைய வாசகர்கள் இலக்கிய நண்பர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். ஒக்தோபர் 22ஆம் நாள், சனிக்கிழமை மாலை 5:30-8:00 கனடா கந்தசாமி கோவில் மண்டபம் (Birchmount & Lawrence) 1380 Birchmount Road, Scarborough. http:// தமிழினி, கலைஞன், நிழலி, யாயினி,சசிவர்ணம்,சகாரா,விவசாயிவிக்,இசைக்கலைஞன்,சபேஸ்,Hari நிதர்சன்,அருவி,கவிதன் மற்றும் அனைத்து நண்பர்களும் கலந்து கொள்ளுங்கள். கலந்து கொள்ள முடிந்தவர்கள் கலந்து கொள்வதோடு உங்கள் நண்பர்களையும் நிகழ்வில் கலந்து கொள்ள வையுங்கள். வேறு யார்யார் கனடிய நண்பர்கள் களத்தில் இருக்கிறீர்கள் என்பது தெரியாது. பெ…
-
- 12 replies
- 1.6k views
-
-
பாலசுப்பிரமணியம் மற்றும் கங்கை அமரன் கலந்து சிறப்பிக்கும் யாழ். இசை நிகழ்ச்சி - காணொளி. (09.10.2016)
-
- 0 replies
- 447 views
-
-
புங்குடுதீவை பிறப்பிடமாகக்கொண்ட இராமலிங்கம் ஞானசேகரன் அவர்களது இறுதி அஞ்சலி நிகழ்வு நேற்று (11-08-2016) நடாத்தப்பட்டது. புலத்தில் உறவுகள் யாருமற்றநிலையில் இவரது இறப்பு சம்பந்தமாக FRANCE - புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டதை தொடர்ந்து அது சம்பந்தமான அரச மற்றும் சட்ட நிர்வாகம் தொடர்பான விசாரணைகள் முடிவடைந்தததும் FRANCE - புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் அவரது இறுதி அடக்கம் சம்பந்தமான சகல விடயங்களையும் ஒழுங்கு செய்திருந்தது. ஊரவருக்கும் அறிவிக்கப்பட்டிருந்தது. எமது சகோதரர் ஒருவருக்கு செய்யவேண்டிய அத்தனை கிரிகைகளும் முறைப்படி செய்யப்பட்டு வந்திருந்தவர்…
-
- 1 reply
- 684 views
-
-
முகடு இதழ் (ஓலை12) சிறப்பு வெளியீடும், இலங்கை அரசியல் யாப்பு(மு.திருநாவுக்கரசு அரசியல் ஆய்வாளர்) உயிரணை(சாந்தி நேசக்கரம்) ஆகியோரின் நூல் அறிமுகமும், தமிழ் இலக்கிய இளைஞர் பேரவையின் வாசகருடனான கலந்துரையாடலும் . காலம்:-31-07-2016 நேரம் :- 14:30மணி இடம் :-இல 50 rue de torcy 75018 paris
-
- 8 replies
- 901 views
- 1 follower
-
-
உலகளாவிய ரீதியில் நீதிவேண்டி உரிமை வேண்டித் தமிழர் நடாத்தும் கறுப்பு யூலை நினைவின் மாபெரும் ஒன்றுகூடல் கனடா அல்பர்ட் கம்பல் சதுர்க்கத்தில் நடைபெறவுள்ளது. இடம்: Albert Campbell Square (Scarborough Civic Center)) காலம்: யூலை 23, 2016 சனிக்கிழமை நேரம்: மாலை: 6:30 மணி 1983 யூலை ஆரம்பித்த தமிழினப்படுகொலை இன்று 33 ஆண்டுகள் கடந்தும் தொடர்கின்றது. தனது பொறுப்பில் இருந்து தொடர்ந்தும் தவறி நிற்கும் சர்வதேசத்தை அதன் மனிதநேயக் கடமைகளை ஆற்ற வைக்க நாம் தொடர்ந்தும் கடுமையாக உழைக்க வேண்டும். இது நாம் துவண்டு கிடக்கும் நேரமல்ல விவேகத்துடன் விரைந்து செயற்படும் காலம். இலங்கை சுதந்திரம் அடைந்தத…
-
- 0 replies
- 674 views
-
-
33 வருடங்களின் முன் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களின் உயிரைப் பலியெடுத்தும்த மிழரின் பல கோடிக்கணக்கான உடைமைகளை சூறையாடி தமிழ் மக்களை இலங்கைத் தீவின் தென் பகுதியிலிருந்து துரத்தியடித்த சிங்கள இனவாதம் காலத்திற்கு காலம் தன்வடிவங்களையும் வியூகங்களையும் மாற்றிக் கொண்டு தமிழ் இனத்தைக் கருவறுக்கின்றது. சர்வதேச சமூகத்தின் அணுகுமுறையில் மாற்றங்கள் வராத வரை 1956, 1958, 1977, 1983, 2009 இற்குப் பின்னும் இன அழிப்பு தொடரத்தான் போகின்றது. 1983 இல் தமிழருக்கான சரியான பாதுகாப்புப் பொறிமுறை, அரசியல் அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தால் அதன் பின்னர் வந்த பல ஆயிரம் தமிழரின் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டிருக்கலாம். "NEVER AGAIN" என்று அடிக்கடி கூறும் சர்வதேச சமூகம் சிறிலங்கா அரசினைக் கையாள்வதில் ம…
-
- 0 replies
- 628 views
-
-
கனடிய தமிழர் தேசிய அவையின் மண்வாசனைத் திட்டம் என்பது 2010 ஆம் ஆண்டிலிருந்து தாயகத்தில்போரினால் பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு வாழ்வாதாரம், மருத்துவம், கல்வி, சுயதொழில், வேலைவாய்ப்பு,சிறியோர், முதியோர் காப்பகங்களுக்கான உதவி இயற்கை அனர்த்த உதவி என்று பல வகையில் கனடாவாழ் ஈழத் தமிழ் உறவுகளின் பங்களிப்புடன் செயலாற்றி வருகிறது. அந்த வகையில் முள்ளிவாய்க்கால் போரின்பின் அனைத்தையும் இழந்து இன்று மீள் குடியேற்றம்செய்யப்பட்டுள்ள எம் தாயக உறவுகள் பாரிய நெருக்கடிகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதுநாமறிந்த உண்மை. மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ள நம் உறவுகள் தமக்கான வாள்வாதரத்தேவைகளுக்காக புலம் பெயர்ந்த உறவுகளின் உதவியை நாடியுள்ளனர். அவர்களின் அத்தியாவசியதேவைகளைப் பூர்த்தி செய்த…
-
- 0 replies
- 733 views
-
-
கிறிஸ்தவர்களின் தவக்காலம் புதன்கிழமை (பிப். 10) சாம்பல் புதன் தினத்துடன் தொடங்குகிறது. உலகெங்குமுள்ள கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுக் கூரும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய 40 நாள்களை தவக்காலமாக கடைப்பிடிக்கின்றனர். இந்தத் தவக்காலத்தின் தொடக்க நாள் சாம்பல் புதன் நாளாகும். சாம்பல் புதன் நாளில் கிறிஸ்தவ ஆலயங்களில் இறைமக்களின் நெற்றியில் அருள்பணியாளர்கள் உலர்ந்த குருத்தோலைகளை எரித்து எடுக்கப்பட்ட சாம்பலால் சிலுவை அடையாளம் பூசுகின்றனர். தொடர்ந்து சிறப்பு திருப்பலி நடத்தப்படுகிறது. சாம்பல் புதனை தொடர்ந்து வரும் நாள்களில் ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. குறிப்பாக வெள்ளிக்கிழமை தோறும் சிலுவைப் பாதை வழிப…
-
- 0 replies
- 1.5k views
-
-
கத்தோலிக்க திருச்சபையானது நவம்பர் மாதம் மூன்று விதமான ஆத்துமாக்களை நினைவு கூறுகின்றது ஒன்று வெற்றிக் கொண்ட ஆத்துமாக்கள் இரண்டாவது துன்புறும் ஆத்துமாக்கள் மற்றையது இவ்வுலகில் போராடும் ஆத்துமாக்கள். இவற்கமைய நேற்று முதலாம் திகதி கத்தோலிக்க திருச்சபையானது வெற்றிக் கொண்ட சகல புனிதர்களுடைய திருவிழாவைக் கொண்டாடியது. இன்று 2ந் திகதி துன்புறும் மரித்த ஆத்துமாக்களை நினைவு கூர்ந்து இம்மாதம் முழுதும் விஷேடமாக இவர்களுக்காக செபிக்கின்றது. இன்று திங்கள்கிழமை (02) அணைத்து சேமக்காலைகளிலும் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு மக்கள் தங்கள் உறவுகளின் கல்றைகளுக்குச் சென்று அவர்களுக்காக செபிப்பது வழமையாகும். இதற்கமைய மன்னார் மறைமாவட்டதில் கத்தோலிக்கர் செறிந்து வாழும் பேசாலை சேமக்காலையில்…
-
- 9 replies
- 5.5k views
-
-
• "சிறப்புமுகாம் என்னும் சித்திரவதை முகாம்" நூல் வெளியீடுநான் எழுதிய "சிறப்புமுகாம் என்னும் சித்திரவதை முகாம்" நூல் எதிர்வரும் 21.09.2015யன்று சென்னையில் வெளியிடப்படுகிறது.தமிழகத்தில் அமைந்துள்ள சிறப்புமுகாம் கொடுமைகளை இந் நூல் விபரிக்கிறது. சிறப்புமுகாமை மூடுவதற்கும் அதில் அடைத்துவைக்கப்பட்டிருக்கும் அகதிகள் விடுதலை பெறுவதற்கும் இந் நூல் உதவிட வேண்டும் என விரும்புகிறேன். சிறப்புமுகாம் கொடுமைகளை விபரிக்கும் முதலாவது நூலாக இது இருக்கிறது. சிறப்புமுகாம் பற்றி மேலும் பல நூல்கள் வெளிவருவதற்கு இது வழி சமைக்கும் என நம்புகிறேன். ஈழத் தமிழர்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்துவரும் தமிழ்தேச மக்கள் கட்சியினர் இந் நூலை வெளியிடுகின்றனர். அவர்களின் உணர்வுகளைப் பாராட்டுவதோடு விழா வ…
-
- 1 reply
- 794 views
-
-
-
- 0 replies
- 1.4k views
-
-
இராணுவத்தையே அச்சத்திற்குள்ளாக்கிய வல்வெட்டித்துறை புகைக்குண்டு! JULY 27, 2015 COMMENTS OFF வல்வெட்டித்துறையில் நெடியகாடு இளைஞர்களால் காலம்காலமாக கோவில் திருவிழாக்கள் போன்ற முக்கிய நிகழ்வுகளிலும்… பல ஊர்களில் பல வகையான நிகழ்வுகளிலும் பல வகையான அளவுகளில் உருவாக்கி நெருப்பின் மூலம் வருகின்ற புகையின் சூடான காற்றினை நிரப்பி வானில் பறக்க விடுகின்ற காகிதத்தில் உருவான ஒரு பெரிய Baloon புகைக்குண்டு அல்லது புகைக்கூடு என்று அழைக்கப்படும். விடுதலைப் புலிகளின் ஆட்சிக் காலத்தில் மாவீரர் நாள் போன்ற முக்கிய நிகழ்வுகளுக்காக வன்னியில் பல இடங்களிலும் நெடியகாட்டு இளைஞர்களின் புகைக்குண்டு அடி வானம் தொட்டு மாவீரர்களுக்காக அஞ்சலிகள் செலுத்திய பல வரலாறுகளும் உண்டு. இந்தியா இராணுவம் வல்வ…
-
- 3 replies
- 2k views
-
-
குறும்பும் புன்னகையுமாக இப் படத்தில் இருக்கும் இச் சின்னஞ் சிறு தேவதையை பாருங்கள். உலகின் அனைத்து மகிழ்வுகளையும் ஒன்றாக சரம் தொடுத்து மாலையாக்கியவள் போன்று தோன்றும் இச் சிறுமி தீபிகா இன்று இவ் உலகில் இல்லை. Ewing Sarcoma எனும் அறிய வகை புற்றுநோயின் தாக்கத்திற்குள்ளாகி மூன்று வருடங்கள் போராடி இறுதியில் கடந்த மாதம் இவ் உலகை விட்டு பிரிந்து விட்டாள். ஒரு குழந்தையை கண் எதிரில் கொஞ்சம் கொஞ்சமாக இழப்பது என்பது எவ்வளவு கொடுமையானது.. இக் கொடுமையை அனுபவித்து மகளை இழந்து போன பின்னும் இவ் சிறுமியின் பெற்றோர்கள் எத்தகைய வேதனையை அடைந்து இருப்பார் ஆயினும் அவர்கள் வெறுமனே கண்ணீரிலும் துயரிலும் தோய்ந்து ஓய்ந்து போய்விடாது, இவ்வாறான நோய் பற்றிய ஆராச்சிக்காகவும், Sick Kids Hospital…
-
- 2 replies
- 934 views
-
-
யாழ்ப்பாணம் – திருநெல்வேலி நீலதட்சாயணர் சிவன் ஆலயத்தின் தேர் நிலத்தில் புதையுண்டது. இதனால் சில மணி நேரம் தேர்ப் பவனி தடைப்பட்டது. இன்று காலை பெய்த கடும் மழையின் மத்தியில் நீலதட்சாயணர் சிவன் ஆலயத்தின் தேர்த் திருவிழா இடம்பெற்றது. சுவாமி தேரில் உலா வந்து கொண்டிருந்த போது வெள்ளம் நின்ற நிலத்தில் தேரின் சில் புதையுண்டது. தேரை மீண்டும் இழுக்க பக்தர்கள் போராடிய போதும் அது பலனளிக்கவில்லை. இறுதியில் கிரேன் மூலமாக தேர் மீட்கப்பட்டுத் தொடர்ந்து தேருலா இடம்பெற்றது. www.yarlosai.com
-
- 4 replies
- 1.1k views
-
-
ae5566a4dfd347c73d65198797ce2eb1
-
- 0 replies
- 794 views
-