கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3070 topics in this forum
-
வழித்துணை நகரத்தின் மிகவும் நெரிசல் மிகுந்த தெரு, எப்பொழுதும் கூச்சலும் குழப்பமும் குடிக்கொண்டு இருக்கும். தெருவின் இரு பக்கமும் அதற்க்கு காரணமாக இருக்கும் குடிசைகள், குழந்தைகள் அனைவரும் சமத்தாக அங்கே இருக்கும் சாக்கடையில் விளையாடி கொண்டு இருந்தனர். அந்த சின்ன சின்ன குடிசைகளுக்கு நடுவே மிகப்பெரிய துரு பிடித்து போன இரும்பு கேட், அந்த கேட்டை நோக்கி ஒரு பைக் வேகமாக வந்தது. சற்று திறந்து இருந்த கேட்டை பைக்கின் முன் சக்கரத்தால் திறந்துக்கொண்டு சென்றனர் பைக்கில் வந்த இருவரும். இவர்கள் உள்ளே நுழைந்ததும் அங்கே தாயபாஸ் விளையாடிக் கொண்டு இருந்த ஒரு கும்பலில் இருந்து இரண்டு பேர் இவர்களை நோக்கி வந்தனர், வேகமாக வண்டியில் வருபவார்களை நிறுத்துவது போல கையை அசைத்தனர். “சார் நிற…
-
- 5 replies
- 1.4k views
-
-
மனிதாபிமானம் காலை 6.30, ராஜு அவசர அவசரமாக குளித்து விட்டு பூஜை அறைக்கு வந்தான், சாமியை கும்பிட்டுக் கொண்டே “சுக்கலாம் பரதரம் விஷ்ணும் . . . . அம்மா டையம் ஆச்சு சீக்கிரம் டீபன் எடுத்து வை . . .சசிவர்ணம் சதுர்புஜம் . . .” “டேய் சாமி ரூம்ல சாமியை பத்தி மட்டும் நன” என்றாள் அம்மா புன்சிரிப்புடன். வீட்டு ஹாலில் தூக்க கலக்கத்தில் உக்கார்ந்து இருந்த சொந்தகாரர்கள் அனைவரும் சிரித்தனர். ராஜுவும் பொய் கோபத்தோடு “ஏன் சொல்லமாட்டிங்க இன்னைக்கு ஆபிஸ் வேலையா பாண்டி போணும், காலை சீக்கிரம் எழுப்ப சொன்னா எழுப்பாம நக்கல் வேற” என்று சாப்பிட டைய்னிங் டேபிலில் உக்கார்ந்தான். அதுவரை அமைதியாக இருந்த ராஜுவின் தங்கை மதி வந்து “இங்க பார்டா” என்று அவள் தலையை ராஜுவிடம் காட…
-
- 1 reply
- 1.1k views
-
-
பாவம் பைரவி இப்படி நடக்குமென்று அவள் நினைக்க கூடவில்லை .மனம் நிறைய சேர்த்து வைத்த சந்தோசங்களும் கனவுகளும் எதிர்பார்ப்புகளும் நேற்று நடந்து முடிந்த அந்த சம்பவத்தால் அப்படியே நொறுங்கி போனது. எங்கே அவள் அதிகம் நம்பிக்கை வைத்திருந்தாளோ யாருக்காக தன் பெற்றோரின் கனவுகளை ஒதுக்கிவிட்டு அவனே தன் உலகம் என்று எண்ணி இருந்தாளோ இன்று அவனே அவளிற்கு அன்னியனாகிப் போனான். நினைக்க நினைக்க அவளால் கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் போனது. பைரவி ஏழை குடும்பத்தில் பிறந்தவள்.எனினும் குடும்ப்பதோர் பாசத்தை பொழிந்து அவளை வளர்த்தனர்.படிப்பிலும் அவள் சுட்டி. நீண்ட கண்களும் அடர்ந்த கூந்தலும் அவள் அழகிற்கு மேலும் அழகூட்டின . பார்ப்பதற்கு ஒரு தேவதை போல் இருந்த அவளிற்கு…
-
- 17 replies
- 6.7k views
-
-
வீடே நிறைந்திருந்து.. எல்லாரும் கலகலப்பாய் பேசி சிரித்து கொண்டார்கள்.. ராகவனுக்கு பெண் பார்த்து விட்டு வந்து இருந்தார்கள் சுந்தரம் பிள்ளையின் குடும்பம்.. ராகவன் எத்தினை நாள் நிக்க போகுறாய்.. அப்பா நான் போகணும் கல்யாணம் முடிந்த உடன் பெண்ணை கூட்டி கொண்டு.. ஏன் ராகவன் இந்த அம்மாவோட ஒரு மாதம் நிக்க கூடாதா? இல்லை அம்மா வேலைக்கு போகணும் அம்மா அதுதான்.. அடுத்த முறை வரும் போது நான் நிக்குறன் அம்மா.. அப்ப மாதவியய் ஒரு மாதம் எங்க கூட விடன் ராகவன்.. நீ எங்களுக்கு ஒரே பிள்ளை எவ்வளவு காலம்தான் நாங்கள் உன்னை விட்டு பிரிந்து இருக்குறது... என்னம்மா நாடு சரி வந்தால் நான் உங்கள் கூடதான் அம்மா வந்து இருப்பன்..அதுதான் சொல்லுறன் நீ…
-
- 14 replies
- 6.1k views
-
-
வாதாபியை விழுங்கிய அகத்தியனின் தொப்பையாக.. ஆலகால விடத்தையுண்ட சிவனின் தொண்டைக்குழி போல மேனி கறுத்து.. பகலை விழுங்கி ஏப்பம் விட்டபடி இருண்டு கிடந்தது இரவு. ஆங்காங்கே சில்வண்டுகளின் சிங்கார ராகம்.. பாம்புகளின் ‘கிறிச்..கிறிச்’ சத்தம். ஊமத்தங்கூவைகளின் உறுமல் ஓசை.. அவள் தன் வாழ்நாளில் தனியாக இருளில் நடந்ததே கிடையாது. இன்று… தன்னந் தனிவழியே காட்டு நிலமேறி.. சுடலை வழிதாண்டி குளங் குட்டை - கோயில் வெளி கடந்து நின்று நிதானிக்க நேரமின்றி வேகமாக… மிகவேகமாக குன்றுங் குழியும் குறுக்கு வழியுமாக… இத்தனை இடம் தேடியும் கண்ட பலன் ஏதுமில்லை. குளக்கரையில் விழி அகலத் திறந்தாள் சுற்றிலெங்கும் நோட்டம் விட்டாள். மருதமரத்தின் அடி முதல் …
-
- 1 reply
- 914 views
-
-
தெளிவு ---------- துடியாய்த் துடிக்கிறார். இந்திய அமைதிப் படையின் ஷசெல்| தாக்குதலால் உடம்பெல்லாம் கிழிந்து போய் ஒரு கிழட்டு உயிர் சாவோடு போராடுகிறது. உரும்பிராயில் எல்லோருடனும் 'நல்ல மனிதராய்' வாழ்ந்துவிட்ட ஒருவர். செல்வா காலம் - சிவகுமாரன் காலம் - பிரபாகரன் காலம் மூன்றையும் தன் நீண்ட நெடிய வாழ்வில் நேரில் கண்டு, வீறு மிக்க விடுதலைப் போரில் தன்னையும் எங்கோ சேர்த்துக் கொண்ட பெருமை. நல்ல விடுதலை உணர்வாளர். அதிகம் பேசாத வாய். இத்தனை காலமும் சாவுக்குத் தப்பிய அந்த நல்லவர் இந்திய வெறிப்படையின் ஷ செல் | அடித்து இரத்த வெள்ளத்தில் கிடக்கிறார். கண்களில் நீர் பொங்கப் பக்கத்து வீடுகளின் சிறுவர்கள் - இளம…
-
- 0 replies
- 1.2k views
-
-
சுரேஸும், ரசிகாவும்ஒரு வாரமாக பேசவில்லை. சுரேஸ் அவளுடன் பேசுவதற்கு ஒருமுறை முயன்றும் அவள் முகம் கொடுக்காமல் போனதால், தனக்கே உரிய மிடுக்கில் அவனும் அதன் பின் அவளுடன் பேச முயலவில்லை. எப்போதும் மலரும் மகரந்தமும் போல் உல்லாவிய இவர்களின் புது நடத்தை இருவரின் நன்பர்களின் முகத்திலும் பல கேள்விகளை எழுப்பியது. சுரேஸின் நன்பர்கள் என்ன நடந்தது என்று குடைந்து கொண்டு இருந்தார்கள். சுரேஸோ "ஒண்டும் இல்லையடா சும்மா இருக்க பாப்பம்" என்று சினந்துகொண்டே அவ்விடத்தை விட்டு அகன்றான். ரசிக்காவும், சுரேஸும் பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டில் படிக்கும் மாணவர்கள். பல்கலைக்கழக வாழ்க்கையைத் தொடங்கிய காலத்தில் தான் இருவரும் ஒருவருக்கு ஒருவர் அறிமுகமானவர்கள். ரசிகா கொழும்பில் புறநகர் பகுதியில் …
-
- 6 replies
- 2.5k views
-
-
இப்போதெல்லாம் எம்மில் பலர் அதிகம் சொல்லும் வார்த்தையாகிவிட்டது 'கிளிநொச்சி'. இந்த பெயருக்குரிய இடத்திற்கு நான் பல தடவைகள் சென்றுள்ளேன். சில மாதங்கள் வாழ்ந்த்துள்ளேன். உலகத்தில் நான் சென்ற அத்தனை இடங்களிலும் பார்க்க எனக்கு அந்த வன்னி மண் தான் பிடித்திருந்தது. ஒரு தடவை சென்ற போது அதிகம் மக்கள் இல்லாத அமைதியை கண்டேன். பின்னர் சென்ற போது இடம்பெயர்ந்த மக்களையும், அவர்களை துரத்தும் மலேரியா காய்ச்சலையும், மரத்தடியே அவர்கள் தங்குவதையும் கண்டேன். பின்னொரு தரம் சென்ற போது வன்னிமண் அம்மக்களை ஒழுக்கமாய் வாழ வைப்பதை கண்டேன். இறுதியாக சென்ற போது ஒரு நேர்மையான அரசாங்கள் ஒழுக்கமாக நடப்பதை கண்டேன். இன்று அம்மண்ணில் எதிரியின் கால்கள் எனும் போது மனசு துடிக்கின்றது, கோபம் வருகின்றது. க…
-
- 10 replies
- 4.5k views
-
-
போத்தல் பித்தளை அலுமினியம். இந்தவார ஒரு பேப்பரிற்காக எழுதியது. பேத்தில் பித்தளை அலுமினியம். இந்த சத்தத்தை ஊரில் கேட்காதர்களே இருந்திருக்க மாட்டீர்கள். ஒரு சைக்கிளில் பின்னால் இரண்டுபக்கமும் சாக்கு அல்லது உரப்பையை கட்டியபடி போத்தில் பித்தளை அலுமினியம் இருக்கா என்று கத்தியபடியே வருவார்கள்.வீடுகளில் உள்ள பழைய உபோகிக்க முடியாத இரும்பு பித்தளை சாமான்களை நிறுத்து வாங்கி கொண்டு போவார்கள்.சிலர் பண்டமாற்று முறையில் வாங்கிய பொருட்களிற்கு பிளாஸ்ரிக் அல்லது அலுமினிய பாத்திரங்களை தருவார்கள். முன்னர் யாழ்சோனதெருவில் வசித்துவந்த சோனகர்களே பெரும்பாலும் இந்த வியாபாரத்தை செய்தனர்.இப்படி வேறு சில வியாபாரிகளின் கூவல் சத்தங்களையும் ஊரிலை கேட்கலாம் ஆடு இரிக்கா ஆடு.பழையகோட்.இ…
-
- 27 replies
- 7.2k views
-
-
என்னங்க இன்றைக்கு அம்மா ஊரில இருந்து போனில கதைச்சாங்க. என்னவாம். காசு கேட்டா போல. இல்லைங்க.. தங்கச்சிக்கு கனடாவில இருந்து ஒரு சம்பந்தம் பேசி வந்திருக்காம். அதுதான் விசாரிச்சுப் பார்க்கச் சொல்லிச் சொன்னா. நல்ல விசயம் தானே. விசாரிச்சாப் போச்சுது. உங்கட ஆக்கள் தானே கனடாவில புழுத்துப் போய் இருக்கினம். ஒருக்கா சொல்லி விசாரிக்கச் சொல்லுங்களன். அதென்ன உங்கட ஆக்கள் எங்கட ஆக்கள் என்று பிரித்துப் பேசிறீர். உம்மைக் கட்டினது துவக்கம் நான் எப்பவாவது உங்கட எங்கட என்று பிரிச்சுப் பார்த்திருக்கிறனே. இல்லையப்பா.. சும்மா சொன்னன். அப்படிச் சொன்னா தான் செய்வியள் என்று. அதுக்கேன் கோவிக்கிறியள். சரி சரி.. இப்ப நான் வேலைக்குப் போகப் போறன். இரவு வந்து கனடாவில இ…
-
- 10 replies
- 1.6k views
-
-
நேற்றுக் காலையில் என்னோடு கதைத்த கவிஞர் ஒருவர் "பிரபாகரனைப் பிடித்துவிடப் போவதாகச் செய்திகளில் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள
-
- 0 replies
- 2.4k views
-
-
ஈழத்து பிரபல சிறுகதை எழுத்தாளர் ரஞ்சகுமாரின் சிறுகதைகள்..எல்லாவற்றையும் இந்த ipaper மு்றையில் தொகுக்க பட்டிருக்கிறது ..விரும்பியளவில் பெருப்பித்தும் விரும்பிய பக்கங்களையும் பார்க்க கூடியதாயுள்ளது http://sinnakuddy.blogspot.com/2009/01/ipaper.html
-
- 0 replies
- 860 views
-
-
ஐஞ்சு சதத்துக்கு கடலைக் கொட்டையும் ஐநூறு பிறாங்குக்கு அன்ரி எயாக்கிறாவ் மிசைலும்........? ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- எங்கடை ஊரிலை ஒருத்தர். அம்பத்தைஞ்சு அறுவது வயதிருக்கும். பெரிய கமக்காரன். எந்த நேரமும் வாயிலை சுருட்டுக் கிடக்கும். அடிக்கடி நெருப்புப் பெட்டியைத் தட்டி அதை மூட்டிக் கொண்டிருப்பார். ஆனால் அதைத் தொடர்ந்து பத்தி முடிக்கிறேல்லை. விடிய வெள்ளாப்போட வாயில வைக்கிற சுருட்டு இரவு படுக்கைக்குப் போகும் வரைக்கும் வாயிலேயே கிடக்கும். அவர் பெரிய கமக்காரன் எண்டதோட ஆள் பெரிய பொயிலை வியாபாரியும், வீட்டில சுருட்டுக் கொட்டி…
-
- 2 replies
- 1.9k views
-
-
அருணா அழகிய பெண்..அருணாவுக்கு ஒரு அண்ணன் றாஜ்..அம்மா சுந்தரி அப்பா தவம்.. அழகிய குடும்பத்தில் இனிமாயாய் வாழ்ந்தாள்... அருணா நீ தையல் படிக்க போக வில்லையா? ஐயோ அம்மா போகணும்.. அப்பாவை கூட்டி கொண்டு போவன் அம்மா நான் என்ன சின்ன பிள்ளையா? எனக்கு போக தெரியாதா? இல்லடி தெருவில் நம்ம பெடியங்கள் நிப்பார்கள்..பகுடி விடுவாங்கள் எதுக்கு தனியாய் போறாய்? என்னம்மா நீ அவங்கள் என்னை கடித்து தின்னவா போறாங்கள்.. இல்லடி பிள்ளை அப்பா என்றால் உனக்கு துணை இல்லை அதுதான்.. ஐயோ அம்மாஆஆஆஆ? சரி சரி பிள்ளை நீ கிழம்பு பாத்துடி சைக்கில் ஒட்டுறது சரிம்மா நான் வாறேன்... என்னங்க நம்ம பொண்ணை சிக்கிராமாய் கல்யாணம் பண்ணி குடுக்கணும்.. சரி சர…
-
- 8 replies
- 4.9k views
-
-
பிரியாவின் கன்னத்தில் பளார்...பளார் என்று அறைகிறார் அவள் அம்மா லட்சுமி ஏண்டி இப்படி குத்துக்கல்லாய் நிக்கிறாய் எத்தனை மாப்பிள்ளையை பார்த்தாச்சு வேண்டாம் என்றாய் இந்தப்பொடியன் நல்ல பொடியனடி நல்ல குணம்,நடை அதோடை சீதனம் ஒன்றும் வேண்டாமாம் நல்ல சம்பந்தம் வரும்போது ஏனடி மறுக்கிறாய்? நீ கட்டினால் தானேடி அவள் இளையவளையும் கட்டிக்கொடுக்கலாம். அப்பா இருந்தாலும் பரவாயில்லை அவரும் போய்ச் சேர்ந்திட்டார் நானும் சாகிறதுக்குள்ளை உங்களைக் கரையேத்திட்டுப் போவம் என்றால் ஏனடடி அடம்பிடிக்கிறாய்? உன் மனசிலை யாராவது காதலிக்கிறியா அதையாவது சொல்லேண்டி? கண்ணீரைத்துடைத்தவாறே தன் கதையை சொல்கிறாள் பிரியா... பிரியா உயர்தரம் படித்துக்கொண்டிருக்கும் போது அதே கலைப்பிரிவில் தான் மயூரனும் படி…
-
- 0 replies
- 972 views
-
-
தலை முடி போனாதால் மணமகனை வேண்டாம் என்று சொன்ன பெண்.. இந்த கதைக்கு உரியவங்கள் இதை படித்தால்...என்னை மண்ணிக்கவும்...யாரயும் கவலை படுத்த வேணும் என்று எழுத வில்லை... இதை படித்தாவது எனி வரும் நம்ம பெண்கள் திரிந்தட்டும்... நான் எல்லராயும் சொல்ல வில்லை.. பூஜா அவளின் பெயர்...பெயர் எவ்வளவு அழாய் இருக்கு..அவளும் அழகனா பெண்தான்..பூஜா அப்பா உனக்கு மாப்பிளை பார்த்து இருக்குறார் லண்டனில்... போடோ அனுப்பி வக்குறாராம் உன்னை பார்த்து விட்டு முடிவை சொல்ல சொன்னார்.. போடோவும் வந்தது பூஜா எனக்கு புடித்து இருக்கு அம்மா என்றாள் ... இரண்டு வீடும் சம்மதம் சொல்லி கால்யாணம் இந்த தேதி என்று முடிவு பண்ணினார்கள். ரவி போன் பண்ணினான்..பூஜா உனக்கு உண்மையிலே புடித்து இருக்கா? …
-
- 21 replies
- 5.1k views
-
-
வாணி அவளின் பெயர்.அவளுக்கு முன்று தங்கைகள்.வாணி பொறுப்பான பெண்.அவள் அப்பா அவளுக்கு பத்து வயசாய் இருக்கும் போது ஆகும் போது இறந்து விட்டார்.அவள் அம்மா கூலி வேலை பண்ணிதான் தன்னோட நான்கு குழந்தையும் வழத்தாள்...வாணி தன்னோட தங்கைகள் பாக்கணும் என்று. தங்கைகளை பக்குறதுக்கக வாணியின் படிப்பய் அவங்கள் அம்மா நிறுத்தி விட்டார்...அம்மா என்னை பாடசாலைக்கு அனுப்பும்மா நான் போகணும் என்று அழுதாள்... வாணி இதோ பாரம்மா!வேலைக்கு போக தங்கைகளையும் யாரம்மா பாக்குறது என்று அம்மா அழ ஆரம்பித்தாள்..வாணி சொன்னால் அம்மாவிடம் .. அம்மா நான் போகலை.. அம்மாவும் சோகத்தை மகள் முன்னால் காட்ட வில்லை.தன்னோட பிள்ளைகளை கவலை பட விட கூடாது என்று... வாணி வழந்தாள் பருவம் அடந்தாள்..வாணி உள்ளுக்குள் அழ…
-
- 8 replies
- 46.7k views
-
-
என் காதலன்.. மதுசா அவளின் செல்ல பெயர் மது...மது இரவு எல்லாம் கண் முளித்து படித்ததில் விடிந்தும் துங்கினாள்.. மது என்று அம்மாவின் குரல் கேட்க துடி துடித்து எழும்பினாள்..மது நீ கோலம் போடலாயா? சாரிம்மா..கொஞ்சம் துங்கி விட்டேன்..இதோ வாறேன். மது வெளியில் வந்து பாத்தாள்..இயர்கை எவ்வளவு அழகாய் இருக்கு..என்று நினைத்து கொண்டே கோலம் போட்டாள்.. அம்மா நேரத்தோட போகணும் கல்லுரியிக்கு.. சரி மது சாப்பிட்டு இட்டு போட.. சரிம்மா.. மது என்றாள் கல்லுரியில எல்லாருக்கும் தெரியும்..மது குணத்தில் அவள் நடை வடிக்கயில் சீதை மாதிரி.. மது கல்லுயிரிக்கு வந்தாள்.. மது நீ இங்க வர முதல்லாயே நம்ம பசங்கள் சொல்லிடுறங்கள் மது வாறாள் என்று..ஹே சும்மா இருக்கடி …
-
- 0 replies
- 7.1k views
-
-
மயூரி அவளின் பெயர். பெயரே இவ்வளவு அழக இருக்கே அவள் எப்படி இருப்பாள்.அவளை பார்த்தால் யாருக்கும் புடிக்கும்.அவள் பணகாற விட்டு பொண்ணாய் இருந்தலும் நல்ல குணம் உள்ள பொண்ணு. யாரும் உதவி என்று கேட்டாள் இல்லை என்னு சொல்லமல் பண்ணுவள் அவளின் அம்மா ஒரு ஆசிரியர் அப்பா ஒரு தொழில் வத்து பெரிய அளவில் ஆக்களை வத்து நடத்தி வருகுறார்.மீனாட்சி நம்மளுக்கு ஒரு பொண்ணு மட்டும்தான் நமக்கு அப்புறம் அவள் தனிக்க போறாள் என்று அவள் அப்பா கவலை பட்டார்.மீனாட்சி நம்ம பொண்ணை வெகு விரைவில் கல்யாணம் பண்ணி குடுக்கணும்..சரியுங்க அதுக்கு என்ன மாப்பிளை பார்த்து விட்டிர்களா? மீனாட்சி நம்மளட்ட வேலை செய்யுறனே ரவி அவனை நம்ம பொண்ணுக்கு கேட்பமா?. அவன் நல்ல பெடியன்ந்தான் ஆனாள் ரவி ஒம் என்று சொல்லணுமே. நான்…
-
- 2 replies
- 1.5k views
-
-
தமிழனை மீட்கும் ஆண்டு 19/01/2009 -------------------------------------------------------------------------------- பல இன்னல்களையும், நெருக்கடிகளையும் தந்த ஆண்டாக 2008ஆம் ஆண்டு கடந்து 2009 என்னும் புதிய ஆண்டில் தடம்பதித்திருக்கிறோம். இந்த புதிய ஆண்டு பெரும்பாலும் தமிழர்களுக்கு ஒரு நிரந்தரத் தீர்வைப் பெற்றுத்தரும் ஆண்டாக அமையும் என பல்வேறுபட்ட தரப்பினராலும் எதிர்பார்க்கப்படுகின்றது. இது எந்தளவிற்கு சாத்தியப்பாடானதாக அமையும்? அவ்வாறு சாத்தியப்பாடானாலும் அது எந்தவகையில் அமையும்? என்ற கேள்விகள் எழுகின்றன. தற்பொழுது உலகமெங்கும் இருக்கும் கண்களும் உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கும், எமது விடுதலைப் போராட்டம் உச்சக்கட்ட நிலையை எட்டியிருக்கும் இந்த நிலையில், தம…
-
- 0 replies
- 812 views
-
-
இன்னமும் வலிக்கின்றது இந்தவருடம் எனது தாயார் ஊரிலிருந்து என்னிடம் வந்திருந்தார்.இதுதான் அவர் ஜரோப்பா வருவது முதற்தடைவை. பத்து ஆண்டுகளிற்குமுன்னர் இந்தியாவில் சந்தித்த பின்னர் மீண்டும் இப்பொழுதுதான் சந்திக்கக்கூடிய சந்தர்ப்பம் கிடைத்தசந்தோசம். அதைவிட எனது மனைவி மகளையும் அவர் நேரில் சந்தித்த சந்தோசம்அவரிற்கு. தற்சமயம் நத்தார் பண்டிகை காலமாகையால் எனது நகரமெங்கும் அமைத்திருந்து மின்விளக்கு தோரணங்களை அம்மாவிற்கு காட்டலாமென நினைத்து அவரை காரில் ஏற்றிக்கொண்டு ""அம்மா அங்கை பாருங்கோ ஒரே நீலக்கலரிலை பல்ப்பு பூட்டியிருக்கிறாங்கள் வடிவாயிருக்கெல்லோ ?? இஞ்சாலை இந்த றோட்டை பாருங்கோ என்று காட்டியவாறே நகரத்தை சுற்றிவந்திருந்துகொண்டிரு
-
- 26 replies
- 3.8k views
-
-
காலத்துயர் காலத்தைச் சபித்தபடி அதைக் கட்டித் தழுவினாலும் அது நகர்ந்து கொண்டேதானிருக்கும். ஏனோதான் அவன் பிரிந்த நேரம் அவனுக்குள் அப்படியே நிலைத்து நின்றுவிட்டது. தனிமை உணர்வைச் சதா புதுப்பித்துக்கொண்டே இருந்தது... உலகின் ஏதோ ஒரு மூலையில்... எங்கோ ஒரு நாட்டில்... தன்னுடைய வாழ்வு இப்படிப் போகுமென்று அவன் கனவு கூடக் கண்டதில்லை. ஒரு காகத்தின் கரைதல்... சேவலின் கூவல்... குருவிகளின் சங்கீத ஓசை... குயில்களின் இனிய பாடல் எதுவுமேயற்ற ஒரு பாலைவனச் சிறையில் அவனுடைய வாழ்வு... வெளிச்சமென்றால் என்னவென்று புரியாத யன்னலற்ற நான்கறைச் சுவரினுள் ஒவ்வொரு இரவுகளும் பேரிரைச்சலாக விரட்ட... மௌனப் பூதங்களுடன் அவனுடைய வாழ்வு... இனம்புரியாத ஒரு மரணப் பீதியுடன் வேற்…
-
- 3 replies
- 1.2k views
-
-
(பிரித்தானியாவில் அகதி புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட சுமார் நூற்றுக்கும் அதிகமான தமிழர்கள் அந்நாட்டு அரசாங்கத்தினால் இலங்கைக்கு நேற்று நாடு கடத்தப்பட்டுள்ளனர். - நன்றி: புதினம் 17.01.2009) "என்ன கண்ணெல்லாம் சிவப்பாய்க் கிடக்கு? சுகமில்லையே?" என்று சந்திரனிடம் கேட்டான் சோதி. "ஆள் "றெயினா"லை வந்து இறங்கின உடனை நல்லாய் அழுதுபோட்டார்...." என்று முந்திக்கொண்டு கூறினான் குமார். சந்திரன் பொங்கியெழுந்த துயரத்தை அடக்க முற்பட்டவனாய் புன்னகைக்க முயன்றான். அவனால் முடியவில்லை என்பது அப்பட்டமாகவே தெரிந்தது. புகையிரத நிலையத்தில் இருந்து சந்திரனை குமார்தான் அழைத்து வந்திருந்தான். சந்திரன் கிழக்கு ஜேர்மனியிலுள்ள ஒரு சிறிய கிராமத்தில் குடியிருப்புகளை விலத்தி தனிய…
-
- 1 reply
- 921 views
-
-
அன்புள்ள மனோ உனது கடிதம் கிடைத்தது. உன்னைப்போலவே வேறு பலரும் "சேடம் இழுக்கும் பெரியவரின் வீட்டு சுகவிசாரிப்பு" போல விசாரிக்கிறார்கள். இன்று முன்னிரவில் அக்காவும் தொலைபேசியில் பேசினார். சிலரது விசாரிப்பு உண்மையில் என்னிடமிருந்து ஏதேனும் நம்பிக்கை தரும் வசனங்கள் வந்து தெம்பு தரலாம் எனும் ஆசையில் விளைந்தது. வேறு பலதின் பின்னால் உள்ள குரூர முகங்கள் என் அகக்கண்களுக்கு தெரியாமலும் இல்லை. சென்றல் - சென்ஜோன்ஸ் கிரிக்கெட் ஆட்டத்தில் தோற்றுப்போன அணிக்கு கைதட்டியவருக்கு ஏற்படும் நிலையை, எனக்கு உண்டு பண்ணும் குரூரம் நிறைந்தது அது. ஆனாலும் நான் மிகவும் நம்பிக்கையுடனும், மிகத்தெளிவுடனும் இருக்கின்றேன். இந்த நிலையில் சில விடயங்களை பேசிவிட வேண்டும் என்றே தோன்றுகின்றது. இன்று …
-
- 3 replies
- 1.3k views
-
-
அன்று ஒரு நாள் நான் எனது விட்டு அருகில் நடந்து போயுட்டு இருந்தேன்.என் பின்னால் ஒரு அழைப்பு கிர்த்தீ என்று நானும் யாரு என்று திரும்பி பார்த்தேன் என் பின்னால் ஒரு அழகனா வாலிபன் அவன் வேற யாரும் இல்லை என் பள்ளி நண்பன்..என்ன புதுசாய் பார்வை இருக்கே நான் ஜோசித்து கொண்டே அவன் முகத்தை பார்த்தேன்.. நானும் என்ன என்பது போல் அவன் முகத்தை பார்த்தேன்.என்ன மாதவா என்ன வேணும் ஏன் என்னை அழைத்தாய்.கிர்த்தீ நான் ஒன்று சொல்லுவன் நீ கோப பட கூடாது..இல்லை சொல்லு... நான் உன்னை காதலிக்கிறேன்..உன்னிடம் வெகு நாளாய் சொல்லணும் என்று வருவேன் ஆனால் என்னால் பேச முடியல.என்னை மண்ணிச்சுடு.. என்னால் துங்க முடியல சாப்பிட முடியல..அதான் இன்னைக்கு சொல்லிவிட்டேன்...மாதவ நீ சொல்லுறாய்.. நான்…
-
- 1 reply
- 1.6k views
-