Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கதை கதையாம்

சிறுகதை | தொடர்கதை | நாடகம்

பதிவாளர் கவனத்திற்கு!

கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.

  1. விலக்கம் : உமாஜி ஆலமரம், வேப்பமரம், வில்வமரம் இன்னும் என்னென்னவோ பெருவிருட்சங்களால் நிறைந்த சோலைக்குள் உள்ளடங்கியிருந்தது ஐயன் கோவில். பனி விலகாத காலை. எதிரே சற்றுத்தள்ளி பனை வடலிகள். ஒருமுறை நுங்கு குடிக்கவேணும் என்று சொன்னபோது கணேசண்ணை சைக்கிளில் எங்களை இங்கேதான் அழைத்து வந்தார். வசதியாக நிழலுக்குள் உட்கார்ந்துகொள்ள வெள்ளையண்ணை மரத்தில் ஏறிக் குலை குலையாக இறக்கி, வெட்டிக் கொடுத்தார்கள். இனி அடுத்த சீசன் வரைக்கும் நுங்கு ஆசையே இல்லாத அளவுக்கு நானும் தம்பியும் குடித்தோம். வருடத்தின் முதல் திருவிழா. பூசைக்கு புது நெல்லு உடைத்து பொங்கலும், இன்னும் நிறைய பலகாரங்களும், பழங்களுமாகப் படையல் வைத்திருந்தார்கள். அங்கேயிருந்த சனத்துக்கு மட்டுமில்லாம, கிராமத்துக்கே …

  2. கதை சொல்லவா? 13/ தமிழ் புத்தன்/ திரு தியா காண்டீபன் - எழுத்தாளர்

    • 0 replies
    • 991 views
  3. தங்கமீன் : விஜய ராவணன் நண்பா! நம் இரு தரப்புக்கும் இடையேயான இந்தப் பல வருடப் போரில் நான் இரவை விட, பகலைக் கண்டு தான் அதிகம் அஞ்சுகிறேன். உனக்குத் தெரிந்தது தான். போர்க் காலத்தின் விடியல் பொழுது ஏமாற்றங்கள் நிறைந்தவை. இரவின் இருட்டில் நடந்தேறிய கொடுமைகளை பகல் அப்படியே திரைதூக்கிக் காட்டிவிடும். உயிர்வாழ இன்னுமொரு பொழுது போராட வேண்டியிருக்கும் என்ற அறிவிப்புதான் இங்கு விடியல். உள்ளங்கையில் மினுங்கும் தோட்டாக்களை ஆட்காட்டி விரலால் உருட்டியபடி மேலும் சொன்னான், யோசித்துப் பார்த்தால் போர் சூழ்ந்த இந்நிலத்தில் இரவு பகல் இரண்டுக்கும் பெரிய வித்தியாசமொன்றும் இருந்ததில்லை. ஆனால் அப்போது கண்ணாடித…

    • 0 replies
    • 740 views
  4. “நீங்கள் யார்?” பிறிடெகார்ட் இன் கேள்வியால் குமார் அதிர்ந்து போனான். அவன் தன் மனைவி சந்திராவைப் பார்த்தான். இமை வெட்டாமல் மெதுவாக திறந்திருந்த வாயுடன் அவளும் அதிர்ச்சியில் இருந்தாள். கேள்வி கேட்ட பிறிடெகார்ட் பதிலுக்காகக் காத்திருப்பது போன்ற பாவனையுடன் இருந்தார். ஒருவேளை பகிடி விடுகிறாரா என்று குமார் தனக்குள் நினைத்துக் கொண்டான். ஆனால் ஷோபாவில் அமர்ந்திருந்த பிறிடெகார்ட்டைப் பார்த்த போது, அவனுக்கு அப்படித் தெரியவில்லை. எப்பொழுதும் மற்றவர் மனம் கவலைப்படும் அளவுக்கு நடந்து கொள்ளாதவர். ஏதோ ஒரு தவறு இருப்பது அவனுக்குத் தெரிந்தது. “எப்பிடி இருக்கிறீங்கள் மம்மா?”நிலமையை சீராக்க குமார் முயற்சித்தான். “நீங்கள் யாரென்று இன்னும் சொல்லவில்லையே” பிறிட…

  5. கதை சொல்லவா? 10/ தியா காண்டீபன் - பவா செல்லத்துரை அவர்கள் எழுதிய "நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை" சிறுகதை.

    • 2 replies
    • 917 views
  6. என்னமாதிரி ராஜா படகு ஒன்று வெளிக்கிடப்போகுது போவமா? என்று கேட்டார் குமார் அண்ண‌ ? எங்க அண்ண அவுஸ்ரேலியாதான் ம்கும் உங்களுக்கு செய்தி தெரியாதோ? இப்ப கடற்படை எங்க கப்பல் கிளம்பினாலும் அங்க வந்து அள்ளிக்கொண்டு போய் கோட்ஸ்ல ஒப்படைச்சு ஜெயிலில போட்டு கேச போடுறான் நாள் மாதம், வருசக்கணக்கா இழுபட என்னால முடியாது. இந்த முறை அப்படி நடக்காது என்ன நம்பு ம் உங்கள நம்பலாம் நீங்கதான் கடலையே கரைச்சு குடிச்சவர் ஆச்சே. ம் சொல்லுறன் குமார் அண்ண! என்று சொல்ல சரி ஆனால் இதைப்பற்றி மூச்சும் விடக்கூடாது சரி அண்ண யாரிட்டயும் சொல்ல மாட்டன் . இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்க நாட்டில் உள்ள மக்கள் நாட்டை விட்டு கடலாலும் , வானாலும் நாட்டை விட்டு ஓடிக்கொண்டே இ…

  7. வடமாகாணத்தின் யாழ் மக்களின் வாழ்வை முன்னிலை படுத்தும் ஒரு விடயம் கல்வி . என்ன கஸ்ட படடாலும் குழந்தை களுக்கு கல்வி மிகவும் முக்கியம் என என்னும் சமுதாயமாக வாழ்ந்தார்கள் .பள்ளிச் சீருடை முதல் கொப்பி பென் பென்சில் என தேவையான அத்தனையும் கடன் பெற்றாவது வாங்கி கொடுத்து விடுவார்கள். ஒரு குடும்பத்தில் ஐந்துக்கு மேற்படட பிள்ளைகள் இருப்பார்கள். குடும்ப வறுமையிலும் கல்வியை கைவிடுவதில்லை. பாலர் வகுப்பு முதல் உயர் வகுப்பு வரை கிராமத்துக்கு ஒன்றுக்கு மேற்பட்ட் பாடசாலைகளிருக்கும். கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பதுபோல சமூகத்தில்,ஆசிரியர்களை கல்விமான்களை மதித்தர்கள். நகருக்கு சற்று தொலைவில் பெண் பிள்ளைகள் மட்டுமே படிக்கும் பெண் ஆசிர்யர்களை கொண்ட அந்த பெண்க…

  8. மழை பெய்து வெள்ளம் வந்தால் அதை கடலுக்குள் கொண்டு சேர்ப்பதற்கான வாய்க்கால் எங்கள் ஊரிலே இருந்தது. எங்கள் ஊர் கிராமக்கோட்டுச் சந்தியில் இருந்த மதவின் கீழாக அந்த வெள்ளவாய்க்கால் வடிவமைக்கப்பட்டிருந்தது. கனமழை பெய்தால் அந்த வெள்ளவாய்க்காலில் வெள்ளம் கரைபுரளும். பலவிதமான பொருட்கள் அந்த வெள்ளத்தில் மிதந்து வரும். கூடைகள், பெட்டிகள், பாய்கள் என்று ஏகப்பட்ட பொருட்களுடன் சிலவேளைகளில் கோழிகள், பாம்புகளைக் கூட அந்த வெள்ள ஓட்டத்தில் காணலாம். கோடைகளில் தண்ணீர் இன்றி வாய்க்கால் காய்ந்திருக்கும். உடைந்த போத்தல் துண்டுகள், கற்கள் என பல குப்பைகள் அங்கே குவிந்திருக்கும். வெள்ளவாய்காலின் மேலே இருந்த சந்தி மதவை எப்பொழுது பார்த்தாலும் அழுக்காகவே தெரியும். எங்கள் ஊர் இளம் காளையர்கள் அதாவத…

  9. Started by நிலாமதி,

    நாணயம் சில வருடங்களுக்கு முன் நண்பரொருவர் மூலம் அறிமுகமான சுந்தரம் பத்தர் அயல் ஊரில் வசிப்பவர் . அந்த குடும்பத்தில் இருந்த மாப்பிள்ளைக்கு பெண் பார்க்க ஆரம்பித்த பொது ..அயல் ஊரில் பெண் கிடைக்கவே ...திருமணம் நிச்சயமாகி கலியாணத்துக்கு நாள் குறித்தார்கள். மாப்பிள்ளை வீடடார் நகைகள் செய்வது சுந்தரம் பத்தரிடம். பெண் வீட்ட்ருக்கும் அறிமுகமாகி அவர்களும் அங்கு ஓடர் கொடுத்தனர். திருமணம் இனிதே நடந்தது . வாழ்க்கையும் ஆரம்பமாகியது . காலம் உருண்டோடியது . நாட்டில் ஏற்படட இன அழிப்பின் போது பல் கஷ்டங்களை தாண்டி .வெளிநாட்டுக்கு அகதியானார்கள் இந்த மாப்பிள்ளையும் பெண்ணும். அங்கம் காலங்கள் உருண்டோடின ஆணும்பெண்ணுமாய் இரு குழந்தைகளும் அவர்களுக்கு கிடைத்தனர். மிகுந்த கஷ்ட பட…

  10. என் நண்பனின் கல்யாண ரிசப்ஷன். தாமதமாக சென்றேன்.மண்டபம் கிட்டத்தட்ட காலியாக இருந்தது. மணமக்களின் குடும்பத்தினர் இருந்தார்கள்."இப்போ தான் சாப்பிட்டோம். நீங்க சாப்பிட்டு வாங்க"மாடியை காட்டினார்கள். மணமக்களை வாழ்த்திவிட்டு, போட்டோக்கு நின்றுவிட்டு படி ஏறிச்சென்றேன். வரிசைகள் காலியாக இருந்தது. கேட்டரிங் பணியாளர் ஒருவர் இலை போட்டார்.போட்டோ , வீடியோக்காரர்கள் 4 பேர் என் பக்கத்தில் வந்து அமர்ந்தார்கள்."சும்மா வெக்கப்படாம வாடா "ஒரு சிறுவனை அழைத்தார்கள். அவன் தயங்கி தயங்கி உட்கார்ந்தான்.அவன் வய…

  11. கதையாசிரியர்: பிரசன்னா நீலகண்டன் “இந்தா அம்மா.. என் முதல் மாத சம்பளம்.. 40 ஆயிரம் ரூபாய்.. அப்பா எப்பவாச்சும் இப்படி முப்பது ஆயிரம் சம்பாதித்து இருக்கிறாரா.. எனக்கு இன்னும் கூட பதவியும் சம்பளமும் கூடிக்கிட்டே போகும்..!” இதுவரை மகன் இப்படிப் பேசி அந்த தாய் கேட்டதே இல்லை. வீட்டில் அதிகம் பேசவே மாட்டான் . அப்பாவிடம் சுத்தமாக பேசுவதே இல்லை. அப்படிப்பட்டவன் வாயில் இருந்தா இப்படிப்பட்ட வார்த்தைகள்…? மனம் துணுக்குற்றாள் அம்மா . “என்னடா.. வார்த்தை எல்லாம் தடிப்பா வருது..? அதுவும் அப்பாவை பற்றி ரொம்ப ஏளனமாக பேசுற..!” “அவர் மட்டும் என்னை ஏளனமாக நடத்தலையா.. காலேஜ் போன புதுசுல ஒரு போன் வாங்கி தாங்கன்னு கேட்டதற்கு இழுத்தடிச்சு ஒரு வருஷம் கழிச்சுத் தா…

  12. ஜுன் 20 / உலக அகதிகள் தினம் ========================= ஈழத்தமிழ் அகதிகளின் வலிகளைக் சொல்லும் தமிழ்நதி அவர்களின் "என் பெயர் அகதி" சிறுகதை

    • 0 replies
    • 704 views
  13. ஒரு சிறிய கிராமத்திலே ஒரு ஏழைக் குடும்பம். அவர்களுக்கு ஒரே ஒரு மகன் . அவனை அவர்கள் கஷ்டப்பட்டு படி பித்து பெரியவனாக்கி விடவேண்டும் என கனவு கண்டார்கள். அவனும் சிறுவயதில் விளையாட்டுத்தனமாக் பள்ளிக்கு கு செல்ல கள்ளமடிப்பான். ஏழைத் தந்தையோ மிடடாய் வாங்க காசு கொடுத்து அவனும் அந்த சந்தோஷத்தில் பள்ளிக்கு சென்றான். சற்றுபெரியவனானதும் உயர் கல்வி கற்க படடணம் செல்ல வேண்டும் . செலவாகும் என்றாலும் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று தந்தை அனுப்பிவைத்தார். அவனும் படித்து முடித்து ஊருக்கு வந்தான். வேலைக்கு காக விண்ணப்பம் எழுதி போதுதான் . சில மாத தாமதத்தின் பின் நேர்முக பரீடசைக்கு அழைத்த்ர்கள் . படடணம் செல்லக் காசில்லை . அயலில்பெரியப்பாவிடம் கடன்பட்டு கொடுத்தார் தந்தை . அவனும…

  14. மறதி என்பது பெரிய வரம் என்று சிலர் சொல்வதுண்டு. அதிலும் குறிப்பாக தேவையில்லாத குப்பைகளை மனச்சிறையில் பூட்டி வைத்துக்கொண்டு கவலைப்படுவதை விட மறப்பது மேல். வெகு சிலருக்கு மட்டுமே இந்த மறதி என்பது ஒரு வரமாக அமைகிறது. எல்லோருக்கும் இந்த வரம் கிடைப்பதில்லை. மறக்க வேண்டிய விஷயங்களை மனதில் போட்டு குழப்புவதை விட மறந்து விடுவது மேல் தானே. ஆனால் அது அத்தனை சுலபம் அல்ல. தேவையான விஷயங்கள் மறந்து விடுவதும் தேவையற்ற விஷயங்கள் மனதில் பசுமரத்தாணி போல பதிந்து விடுவதும் இயல்பு தானே. படம்: இணையத்திலிருந்து…. நண்பரின் தாயார்: நாங்கள் எப்போது நண்பரின் வீட்டிற்குச் சென்றாலும் அவரது தாயார் எங்களையும் அவரது மகன் போலவே பாவித்து, "சாப்பிட்டு போடா கோந்தே" என்று ச…

  15. கதை சொல்லவா? (08)/வெறும் நாய் - கு. அழகிரிசாமி/ திரு தியா காண்டீபன்

    • 0 replies
    • 937 views
  16. Started by ஏராளன்,

    கதையாசிரியர்: எஸ்.பொன்னுத்துரை கதைத்தொகுப்பு: குடும்பம் சிறந்த சிறுகதைகள் 100 (எஸ்.ரா.) ஈச்சேரில் விழுந்த” சந்திர சேகரம் கோழி உறக்கத்தை வாலாயம் பண்ணி, அதனைச் சுகிக்கின்றார். யாழ்தேவியிலே பகற் பயணம். அகோர வெயில். காட்டு வெக்கை. இத்தனைக்கும் மேலாகச் சிவசம்பு சாப்பாட்டுக்கடைச் சோற்றைக் கொறித்தார். மனசார ஒரு மயக்கம். சாய்வு நாற்காலியிற் தாம் தூங்குவதான நினைப்பே அவருக்கு யாரோ உடம்பைப் பிடித்து விட்டது போன்ற சுகத்தைக் கொடுத்தது. வள்ளிசாக மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர், அவருடைய குடும்பம் தாயடி வீட்டிலே வந்திருக்கிறது. பெத்துப் பெருகிய குடும்பம். அவருடைய மனைவி சரஸ்வதி மூலம் ஐந்து பிள்ளைகளையும் பெட்டைக்குஞ்சுகளாகவே பீச்சி விட்டாள். அரிய விரதங்கள் பிடித்து, இருக்காத த…

  17. கர்ப்பம்: நொயல் நடேசன் நான் ஒரு மிருகவைத்தியர். சனிக்கிழமை வேலைக்குச் சென்றபோது, வாசலில் வைத்தே கதவைத் திறந்தபடி “ இன்று ஒரு நாயை எக்ஸ்ரே எடுக்க வேண்டும்.” என்று எனது நேர்ஸ் சொன்னாள். வழக்கமாகவே சனிக்கிழமையில் அப்படி வேலை இருப்பதில்லை. வெளி நோயாளர்களைப் பார்ப்பது மட்டுமே. ஏதாவது அவசரமாக இருக்கலாம். அல்லது தன்னார்வத்தில் அவளே தீர்மானித்தாளா? எக்ஸ்ரே எடுக்க அரைமணியிலிருந்து முக்கால் மணிநேரம் எடுக்கும். மனிதர்கள்போல் இலகுவானதல்ல. ஒத்துழைக்காத அல்லது பயந்த பூனை , நாயானால் சில நேரத்தில் மயக்க மருந்து கொடுக்க வேண்டியிருக்கலாம். அதன்பின் அவை மயக்கம் தெளியும்வரை காத்திருக்கவேண்டும். நான்கு மணி நேரத்தில் இவை நடக்குமா? “என்னத்திற்காக எக்ஸ்ரே?” “பெண் நாய், கர…

  18. கதை சொல்லவா? (06)/ சிறுகதை/ யாழ் சுமந்த சிறுவன்- தீபச்செல்வன்/ திரு தியா காண்டீபன் தீபச்செல்வன் எழுதிய "யாழ் சுமந்த சிறுவன்" சிறுகதை

    • 0 replies
    • 667 views
  19. கதை சொல்லவா? (05)/ எழுத்தாளர் சாத்திரி அவர்களின் "அவலங்கள்" சிறுகதை தொகுப்பில் இருந்து / ராணியக்கா என்ற சிறுகதை / திரு தியா காண்டீபன் - எழுத்தாளர்

    • 0 replies
    • 781 views
  20. அக்கினிப் பிரவேசம் - ஜெயகாந்தன் மாலையில் அந்தப் பெண்கள் கல்லூரியின் முன்னே உள்ளே பஸ் ஸ்டாண்டில் வானவில்லைப் போல் வர்ண ஜாலம் காட்டி மாணவிகளின் வரிசை ஒன்று பஸ்ஸுக்காகக் காத்து நின்று கொண்டிருக்கிறது. கார் வசதி படைத்த மாணவிகள் சிலர் அந்த வரிசையினருகே கார்களை நிறுத்தித் தங்கள் நெருங்கிய சிநேகிதிகளை ஏற்றிக் கொண்டு செல்லுகின்றனர். வழக்கமாகக் கல்லூரி பஸ்ஸில் செல்லும் மாணவிகளை ஏற்றிக்கொண்டு அந்த சாம்பல் நிற ‘வேனு’ம் விரைகிறது. அரை மணி நேரத்திற்கு அங்கே ஹாரன்களின் சத்தமும் குளிரில் விறைத்த மாணவிகளின் கீச்சுக் குரல் பேச்சும் சிரிப்பொலியும் மழையின் பேரிரைச்சலோடு கலந்தொலித்து த் தேய்ந்து அடங்கிப் போனபின் - ஐந்தரை மணிக்கு மேல் இருபதுக்கும் குறைவான மாணவிகளின் கும்பல் …

  21. எங்கட கதைகள் வெளியிட்ட, எழுத்தாளர் வெற்றிச்செல்வி அவர்களின் பங்கர் தொகுப்பில் வெளிவந்திருந்த எழுத்தாளர் அருணா அவர்கள் எழுதிய கதையான “ அடங்கா தவனம்” இந்தவார கதை சொல்லவா? நிகழ்வில் இடம்பெறுகிறது #மே18 #முள்ளிவாய்க்கால் #தியா

    • 4 replies
    • 1.2k views
  22. எங்கட கதைகள் வெளியீடாக வந்த, "பங்கர்" தொகுப்பில் இருந்து எழுத்தாளர் வெற்றிச்செல்வி அவர்களின் கதையான "செல்வம் இழந்த கதை” இந்தவார கதை சொல்லவா? நிகழ்வில் இடம்பெறுகிறது.

    • 0 replies
    • 581 views
  23. ஒரு பெண்மணி நடு இரவில் தூக்கத்தில் எழுந்து தன் கணவர் அருகில் இல்லாததை உணர்ந்து அவரைத் தேடினார். வீடு முழுவதும் தேடி, கடைசியில் அவர் சமையலறையில் அமர்ந்திருந்ததைக் கண்டார். அவருக்கு முன்னால் காபி இருந்தது. அவர் ஆழ்ந்த சிந்தனையில், சுவரை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தார். இடையிடையே கண்ணில் வழியும் கண்ணீரைத் துடைத்தபடி காபியை அருந்திக் கொண்டிருப்பதைக் கண்டார். மனம் பதைபதைத்து அவர் அருகில் சென்று இதமாகக் கையைப் பிடித்து... “என்ன ஆயிற்று? இந்த நடு இரவில் இங்கே வந்து தனியாக அமர்ந்திருக்கிறீர்களே?” என்று கேட்டார். கணவன்: உனக்கு நினைவிருக்கிறதா? 20 வருடங்களுக்கு முன்னால் உனக்கு 18 வயதாகும் போது நாம் இருவரும் தனியாக பார்க்கில் சந்தித்தோமே?…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.