கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3072 topics in this forum
-
புதிய குரல்கள் புதிய தடுமாற்றங்கள் :தமிழ்ச் சிறுகதை , இன்று… ஒன்று பத்துவருடம் முன்பு சொல்லப்பட்ட நகைச்சுவைத் துணுக்கு இது. நவீனச் சிறுகதையை எழுதுவது எப்படி? ”முதலில் சிறுகதையை ஒழுங்காக எழுதிவிடவேண்டும். அதன்பிறகு ஒன்று விட்டு ஒன்று வீதம் சொற்றொடர்களைப் பொறுக்கிச் சேர்த்து வரிசைப்படுத்தினால் நவீனச்சிறுகதை ஆகிவிடும்.” ஆம்,சொற்றொடர்ச்சிக்கல்களை உருவாக்குவதே நவீனச்சிறுகதை என்ற எண்ணம் எழுத்தாளர்களில் ஒருசாராரிடம் வலுவாகவே இருந்தது. உண்மையில் சிக்கலான சொற்றொடர்கள் கொண்ட படைப்புகள் உருவாவதற்கான காரணங்கள் பல இருந்தன. ஏராளமான எழுத்தாளர்களுக்கு தமிழில் போதிய பயிற்சி இல்லை. எளிய நேரடிச் சித்தரிப்பை அளிக்கவே திண்டாடக்கூடியவர்கள். திடீரென்று மனம் செயல்படும் சிடுக்குகள…
-
- 0 replies
- 1.3k views
-
-
மனக்கணிதம் - சுதாராஜ் - தாமரா வீட்டை விட்டுப் போய் பத்து நாட்களாகிறது! இன்றைக்கு வருவாளோ.. இன்றைக்கு வருவாளோ, என எண்ணி ஏமாந்த பொழுதுகளைப் போலவே இன்றைய நாளும் போய் விடுமோ என்ற ஏக்கம் மனதை ஆக்கிரமித்திருக்கிறது. சோகம் அவனைக் குப்புறப் போட்டு அழுத்தியது. படுக்கையிலிருந்து எழவும் மனதில்லை. அழவேண்டும் போன்றதொரு உணர்வு தொண்டையை அடைத்துக்கொண்டிருக்கிறது. அழுகை எதற்காக? தாமராவுக்காகவா? தாமரா வீட்டை விட்டுப் போன நாளிலிருந்து அவனுக்கு, தான் தனிமைப்பட்டுப்போனது போன்றதொரு விரக்தி மனதை எரித்துக்கொண்டிருந்தது. தன் உணர்வுகளை அவள் புரிந்து கொள்ளவில்லையே என மனம் வெதும்புகிறது. அப்படி அலட்சியப்படுத்தினால் அதற்கு அழுகை ஏன்? தாமரா தனக்கு யார்? என்ன உறவு? உறவு ஏதுமில்லையெனில் ஒன்றுமே இல்…
-
- 4 replies
- 1.5k views
-
-
வைர விழா (சவால் சிறுகதை) முன் குறிப்பு: மக்களே!!! சவால் சிறுகதையாம். ஏதோ நம்மால முடிஞ்சே இலக்கியப்பணி. சிகப்புல உள்ள வாசகங்கள் இடம் பெற்றிருக்கனுமாம். காமினி கெட்டவள் இல்லையாம். ப்ளாஷ் பேக் எழுதக் கூடாதாம். அப்பப்பா... எவ்வளவு நிபந்தனைகள். விறுவிறுப்பா(அப்படின்னு எனக்கு நினைப்பு) கதை ஒரே நாள்ல நடக்கற மாதிரி எழுதியிருக்கேன். முயற்சி எப்புடின்னு நீங்களே சொல்லுங்க. விடியற்காலை 5:45 மணி: அண்ணா நகர் 18th கிராஸ். சூரியன் மாமனைப் பார்த்து பேசுவோமா வேண்டாமா என்று வெட்கப்பட்ட பெண்போல் தொடுவானத்தில் எட்டிப்பார்த்தது. பால்காரர்களும் பேப்பர்காரர்களும் ஓசோன் காற்றை சுவாசித்தபடி கர்ம சிரத்தையாக வீடு வீடாக பாலிட்டார்கள், பேப்பரிட்டார்கள். "சொத்" என்று கதவில் மோதி படியில் விழுந…
-
- 1 reply
- 1.4k views
-
-
புத்தரின் தொப்பி ஜீ.முருகன் இப்போது கனவுகள் அதிகம் வருகின்றன. நிம்மதியான தூக்கம் என்பது அரிதாகி விட்டது. இதற்கு நான் புதிதாக வாங்கியிருக்கும் கட்டில்தான் காரணம் என்றால் நீங்க நம்பமாட்டீர்கள். இடது பக்கம் சாய்ந்து படுத்தால் நல்ல கனவுகளும், வலது பக்கம் சாய்ந்து படுத்தால் கெட்ட கனவுகளும் வருகின்றன என்றால் மொத்தமாகவே நம்பமாட்டீர்கள். தயவு செய்து நீங்கள் நம்பவேண்டும். நான் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை. தூங்கிய சிறிது நேரத்திலேயே கனவுகள் தொடங்கிவிடுகின்றன. கனவுகளின் விபரீதமான கணத்தில் திடுக்கிட்டு விழித்துப் பார்த்தால் பத்து நிமிடம்தான் தூங்கியிருப்பது தெரிகிறது. ஆனால் பத்து மணி நேரம் நிகழக்கூடிய சம்பவங்களைக் கொண்டதாக இருக்கின்றன கனவுகள். சில கனவுகள் பன…
-
- 1 reply
- 1.2k views
-
-
வணக்கம் உறவுகளே! "விழுதல் என்பது" என்னும் தலைப்பில் உலகம் முழுவதிலும் உள்ள இருபதுக்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் இணைந்து எழுதும் தொடர் கதை நாளை பல இணையத் தளங்களில் ஒரே நாளில் ஆரம்பமாகின்றது. ஒவ்வொரு பகுதியும் வாரம் ஒருமுறை பிரசுரிக்கப்படும். திரு ஏலைய்யா முருகதாசனின் அவர்களின் கூட்டு முயற்சியில் இத்தொடர் ஆரம்பமாகிறது. நாளை பகுதி ஒன்று இங்கு பிரசுரிக்கப்படும். யாழ் இணையமும் இதற்கு ஒத்துழைப்புத் தந்துள்ளது. அதற்காகத் தயாரிக்கப்பட்ட ஒளி,ஒலிப் பேழையை என்னால் இங்கு போடா முடியவில்லை. யாராவது விடயம் தெரிந்தவர்கள் உதவ முன்வந்தால் அதனை மின்னஞ்சல் மூலம் உங்களுக்கு அனுப்பிவைக்கலாம்.
-
- 64 replies
- 17.9k views
-
-
சதா சண்டித்தனம் செய்யும் ஒருவனை வீட்டில் பூட்டி வைக்கலாம். நான்கு அடி கொடுத்து அடக்கப் பார்க்கலாம். பேசாமல் முறைத்துக்கொண்டு மௌன வதை செய்யலாம். அதிக பட்சம் சோறு போடாமல் கூட இருக்கலாம். யாராவது உணவகத்தில் வேலைக்குச் சேர்த்து விடுவார்களா? என் அம்மாவுக்கு இதுபோன்ற திட்டமெல்லாம் எங்கிருந்துதான் வருமோ. சபா மாமாதான் இனி உன்னை மேய்க்க லாயக்கு என கழுத்தைப் பிடித்து தள்ளாதக் குறையாக அனுப்பியே விட்டார். சபா மாமா என்றாலே எனக்கு நடுங்கும். சபா மாநிலத்தில் போலிஸ் வேலை செய்யப்போனவர், மேலதிகாரி ஏதோ திட்டினான் என்பதால் நான்கு அறையும் கூடவே வேலையையும் திரும்ப கொடுத்துவிட்டு தீபகற்பத்திற்கு வந்து சேர்ந்துவிட்டார். சபாவில் குறிப்பிட்ட ஒரு இன பெண்களுக்குக் கறுத்த கட்டை என்றால் கொள்ளை …
-
- 0 replies
- 1.2k views
-
-
சிறுகதையா...........? தொடர்கதையா.......? கதவைத் திறப்பதற்கு முன்னரே சத்தம் வெளியாலே பெரிசாய்க் கேட்டது. ஞானமண்ணையின்ரை பெருத்த குரல் கோபக் கனலாய் வெடித்துப் சிதறிக் கொண்டிருந்தது. சந்திராக்கா ரெலிபோன் அடிச்சுக் கூப்பிட்டதால் தான் நான் இங்கே உடனே வந்தனான். வாடா வா... அப்ப சொல்லச் சொல்ல எல்லாத்தையும் பிழையெண்டு பேசுவாய்... இப்ப வந்து கேள்.... எல்லாம் எங்கே வந்து நிக்குதெண்டு. அண்ணை முதலிலே இந்தச் சத்தம் போடுறதை கொஞ்சம் நிப்பாட்டுங்கோ.. அக்கம் பக்கத்தவன் கேட்டிட்டு பொலிசுக்கு அடிச்சுச் சொல்லப் போறான். ஜயோ.... இப்ப எத்தனை தரம் சொல்லிப் போட்டன்... இந்த மனுசன் ஏதோ குடி முளுகிப் போனது போலே ஆர்ப்பாட்டம் செய்து உந்தத் துள்ளல் துள்ளிக் கொண்டிருக்கிறது. யேய்... சும்மா கதையாத…
-
- 0 replies
- 1.9k views
-
-
https://www.youtube.com/watch?v=ApUVBLDxITM எழுத்தாளர் புதுமைபித்தன் அவர்கள் கலைமகளில் எழுதிய செல்லம்மாள் என்ற சிறுகதையை மேலே உள்ள வீடியோவில் காட்சி படுத்தி இருக்கிறார்கள் . கீழே உள்ள இணைப்பில் அவர் எழுதிய செல்லம்மாள் என்ற சிறுகதை இருக்கிறது. இந்த சிறுகதையை இதுவரை படிக்காதவர்கள் வீடியோவை பார்க்கு முன் வாசித்தால் நன்றாக இருக்கும்<br /> http://azhiyasudargal.blogspot.co.uk/2009/07/blog-post_6534.html<br /> பொதுவாக தீவிர வாசிப்பு என்னிடம் இல்லை என்று எனது பால்ய நண்பர்கள் ஒரு குற்றச்சாட்டாக வைப்பதுண்டு ..ஆனால் எதையும் யாரும் விவரிக்கும் பொழுது உன்னிப்பாக கேட்க தவறுவதுவில்லை,, ஒரு ஜெயகாந்தன் ,ஒரு இந்திரா பார்த்தசாரதி போன்றவர்களுக்கு மேல் வாசித்த…
-
- 0 replies
- 3.2k views
-
-
மழலை தெளிவத்தை ஜோசப் திடீரென்று தான் அது நடந்தது! எத்தனை பேர் இருக்கின்றோம். யாருமே எதிர்பார்க்கவில்லை. மம்மி என்று அன்பொழுக அழைக்கப்படும் அம்மா மிம்மி என்று பாசத்துடன் அழைக்கப்படும் அம்மம்மா. பெரியம்மா, பெரியப்பா, குழந்தையைப் பார்த்துக் கொள்ளும் சாந்தி… எத்தனை பேர்! அந்த இரண்டு வயதுக் குழந்தையைச் சுற்றி இத்தனை பேர் இருந்தும் இது எப்படி நடந்தது! எப்படி நடந்தது… எப்படி நடந்தது… என்று எத்தனை தடவை கேட்டாலும் பதில் ஒன்றும் கிடைக்கப்போவதில்லை. எப்படி என்கின்ற விவரணங்களை எல்லாம் மீறி மேவிக் கொண்டு அது நடந்துதான் இருக்கிறது. அதுவும் திடீரென்று யாருமே எதிர் பார்த்திராத விதத்தில். இரண்டு வயதுப் பெண் பிஞ்சின் குஞ்சு விரல்களுக்கு எட்டும் உயரத்தில் குள…
-
- 0 replies
- 735 views
-
-
கிழவனின் உயிர் சயந்தன் “பொழுதுவிடிந்து வெளிச்சம் பரவியதும், புதைத்த இடத்தில் பூ வைக்கலாமென்று போனால், ஆண்டவரே, பச்சைப் பிள்ளையை மூடிய குழியில் மண்ணைக் கிளறிப் போட்டிருந்தார்கள். என்னால் தாங்க முடியவில்லை..” மர்மக்கதையொன்றின், முதலாவது முடிச்சை இலாவகமாக முடிவதுபோல நடேசுக் கிழவர் ஆரம்பித்தபோது நான் நிமிர்ந்து உட்கார்ந்து தலையை அவரிடத்தில் சரித்தேன். இம்மாதிரியான திகில் கதைகளை – ஏழு மலை, தாண்டி ஒரு குகைக்குள் கிளியின் உடலில் உயிரைப் பதுக்கி வைத்திருக்கும், மந்திரவாதிகளின் கதைகளை – வெள்ளை இறகுகள் முதுகில் முளைத்த கேட்ட வரம் தரும் தேவதைகளின் கதைகளை இப்பொழுது யாரும் பிள்ளைகளுக்குச் சொல்வதில்லை. “வாயைத் திற.. அல்லது ஆமிக்காரனிடம் பிடித்துக்கொடுப்பேன்” என்று நேற்றுப்பி…
-
- 3 replies
- 1.1k views
-
-
காதலென்னும் கற்பிதம்.... அன்புள்ள ...... ( உன்னை மறந்து போனதற்கான கடைசி சாட்சியாய் இந்தக் கடிதம்.) தெரிந்தோ தெரியாமலோ காதல் ஒரு முடிவற்ற வேரைப் போல் உடல் முழுக்க சுற்றிப் படர்ந்திருக்கும் மரம் நான். என்னால் யாரையும் வெறுக்க முடியாது, காயப்படுத்துகிறவர்களையும் சேர்த்து காதலிக்கும் சாபம் பெற்றவன் நான். காதலின் மகத்துவம் காயப்படுதலில்தான் இருக்கிறதென நம்புகிறவன். அதனாலேயே நீ தந்த எந்தவொரு காயமும் எனக்கு பிரதானமாய் தெரிந்திருக்கவில்லை. நமக்கிடையிலான காதல் விளையாட்டுத் தனமாய் துவங்கி முடிந்ததில் நம்மைத் தவிர அதிகமும் வியப்பு கொண்டது வேறு யாராகவும் இருக்க முடியாது. அந்த நாட்களை திரும்பிப் பார்க்கையில் எப்படி வாழக் கூடாதென்பதற்கு உதாரணமாய் சில விசயங்களை நீ கற்றுக் கொள்வாய் என…
-
- 3 replies
- 2.3k views
-
-
விதியை வென்ற மதி! ஒரு நகரத்திற்கு சட்டமிருந்தது. அதன்படி யார் வேண்டுமென்றாலும் அந்த நகரத்திற்கு ராஜாவாக வரமுடியும். ஆனால், அந்தப் பதவி ஐந்தாண்டுகள் மட்டுமே! ஐந்தாண்டு முடிந்த அடுத்த நாளே மன்னனை ஆற்றின் கரைக்கு மறுபுறம் உள்ள காட்டில் விட்டுவிடுவார்கள். அந்தக் காட்டில் மனிதர்கள் கிடையாது. வெறும் கொடிய விலங்குகள் மட்டுமே! மன்னன் காட்டிற்குள் நுழைந்தால் போதும்;வனவிலங்குகள் கொன்று தீர்த்துவிடும். இந்த சட்டத்தை யாராலும் மாற்ற இயலாது. இந்த நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொண்டவன் மட்டுமே அரியணையில் அமரப் பொருத்தமானவன். ஆக, மன்னனாக முடிசூட்டிக் கொண்டவனின் தலையெழுத்து, ஐந்தாண்டுகளுக்குப் பின் கட்டாய மரணம். இந்தக் கடுமையான சட்டத்துக்கு பயந்தே யாரும் அந்தப் பதவிக்கு ஆசைபடாமலி…
-
- 4 replies
- 1.3k views
-
-
முகவரி தொலைத்த முகங்கள். மலைகள் இதளிற்காக.. சாத்திரி..பிரான்ஸ் ஸ்பெயின் நாட்டின் கலிலா என்கிற கடற்கரை நகரத்தின் அடுக்குமாடி குடியிருப்புக்களில் ஒன்றில்தான் வரதனின் வீடும் இருந்தது.அவரிற்கு இரண்டு பிள்ளைகள் மூத்தவன் வரதனைப் போலவே கப்பல் மாலுமி ஆனால் ஒரு உல்லாசப் படகின் மாலுமியாக இருக்கின்றான். மகள் பாசிலோனா நகரில் தங்கியிருந்து உயர் கல்வி பயில்கிறாள்.மனைவி இரண்டு வருடங்களிற்கு முன்னர் தான் நோய்வாய்ப் பட்டு இறந்து போயிருந்தாள். இப்போ இந்த வீட்டில் வரதனும் அவரது வளர்ப்பு நாயான புலி மட்டுமே. மகள் ஆசைப் பட்டு கேட்டதற்காக அந்த நாய்க்குட்டியை வரதன் வாங்கிக் கொடுத்திருந்தார். அதற்கு என்ன பெயர் வைக்கலாமென அனைவரும் ஆலோசித்தபொழுது மகள் ரைகர் என்று வைப்போம் என…
-
- 26 replies
- 3.4k views
-
-
லண்டன்அகதி இளைய அப்துல்லாஹ் லண்டனில் எறிக்கும் வெயில்தான் வெள்ளைக்காரருக்கு பிடிக்கும். ஆனால் எனக்கு குளிர்தான் பிடிக்கும். காரணம் பல. பகலில் அந்த வெக்கையில் கட்டிலில் படுக்க முடியாது வியர்த்து ஒழுகும். இரவில் யன்னலைத் திறந்தாலும் அவியும். கட்டில் சூடு கிளைமேட் எல்லாம் சேர்ந்து வேகும் நித்திரை வராது. சிலர் வேர்வை ஒழுக ஒழுக படுப்பார்கள். என்னால் முடியாது. இப்பொழுது குளிர்காலம். எல்லோரும் குளிர் உடுப்புக்கு மாறி விட்டார்கள். ஹவுன்ஸ்லோவில் இருந்து எமது வீட்டுக்கு போகும் பாதைக்கு செல்ல கொஞ்சம் வேகமாக நடந்தால் பத்து நிமிடம் நடக்க வேண்டும். நடந்து தான் போகிறேன். குளிர் முகத்தில் அறைகிறது. மழை தூறப்போகிறது. வெள்ளைக்காரர் சொல்லுவினம் வைபையும் வெதரையும் நம்ப முடியாது எண்டு. …
-
- 5 replies
- 1.8k views
-
-
நோக்கியாவும் கயல்விழியும்! நெல்சன் சேவியர் இந்தக் கதையை நான் என்றுதான் ஆரம்பிக்க வேண்டும் என்று எனக்கும் ஆசை. ஆனால் இந்தக் கதையில் வரும் நான் என்பது என்னைக் குறிக்கும் என்பதாலும் என்னை உங்களுக்கு முன்பே தெரியும் என்பதும்தான் என்னுடைய பிரச்சினை. மேலும் அடுத்து நிறையக் கதைகளை நான் எழுத வேண்டி இருப்பதால்தான் யோசிக்கிறேன். பரவாயில்லை, நான் என்றே சொல்கிறேன். ஏனெனில் இது என்னுடைய கதை. நான்தான் அதை சொல்லியாக வேண்டும். இந்தக் கதை முடிந்ததும் நீங்கள் என்னைப் பற்றி என்ன நினைப்பீர்கள் என்பதுதான் கவலை. இப்படிக் கவலைப்பட்டால் நான் எப்படி எழுத்தாளன் ஆக முடியும்? நான் உங்களுக்குத் தெரிந்த இளைஞன்தான். என்னுடைய வயது ஒரு நல்ல வயதுதான். என்னுடைய பிரச்சினையே நான் காதலிக்காமல் போய்…
-
- 0 replies
- 2.7k views
-
-
ஒரு மனிதன் பல கதைகள்! கே.எஸ்.சுதாகர் மனோகரன் மாலை நேரங்களில்தான் அங்கு போவான். விரிவுரைகள் இல்லாத புதன், வியாழன் மற்றும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அவனுக்கு அங்கு வேலை காத்திருக்கும். பெரியதொரு வளவிற்குள் அந்த வீடு தனிமையில் இருக்கும். காரை கேற்றுக்குச் சமீபமாக நிறுத்திவிட்டு கொழுவியிருக்கும் கேற்றைத் திறந்து கொண்டு உள்ளே போனால், முற்றத்திலே சாய்வணைக்கதிரையில் சரிந்தபடி ஆகாயத்தைப் பார்த்துக் கொண்டு நியூமன் இருப்பார். நியூமன் (Robert Newman) ஒரு வெள்ளைக்காரன். கேற்றிலிருந்து வீட்டின் வாசல்வரை செல்லும் பாதையின் இருமருங்கிலும் அழகாக புல் வெட்டப்பட்டிருக்கும். சாய்வணைக்கதிரைக்குப் பக்கத்தில் ஒரு குட்டி மேசையும், இவனுக்கான கதிரையும் இருக்கும். மேசைக்குக்கீழே விரிக்கப்பட்டி…
-
- 0 replies
- 1.3k views
-
-
முதல் காதல் எத்தனை வயதில் என்று கேட்கும் நண்பர்களுக்கு மட்டுமல்ல எனக்கே என் கண்களில் தெறிக்கிறது ஒரு நக்ஷத்திர ஆச்சர்யம். 3 வயதில் என்ற என்னுடைய பதிலுக்கு வேறு என்ன செய்ய முடியும் ? நினைவுக்கே வராத அந்த வயதில் நான் பார்த்தாக இரண்டு பேர் மட்டுமே நினைவில் இருக்கிறார்கள். ஒன்று. அழ அழ அம்மாவிடம் என்னை விட்டு சென்ற அம்மாச்சி. மற்றொன்று, இலங்கை பயங்கரம் பற்றிய கண்காட்சி ஒன்றில் அப்பா கை நீட்டி சுட்டி காண்பித்த புலியுடன் நின்று கொண்டிருந்த இளம் வயது பிரபாகரன். பார்த்தவுடன் என்ன தோன்றியது என்று ஞாபகம் இல்லை. ஆனால் ஞாபகம் தெரிந்த முதல் நாளில் அன்பையும் தோன்ற வைத்த முதல் மனிதர். வயதானவர்கள் கூடி நிற்கும் கூட்டத்தில் வேடிக்கை பொருளாக என்னை வைத்து விளையாடும் சிறு வ…
-
- 0 replies
- 1k views
-
-
துணையானாள் எஸ். கருணானந்தராஜா தமிழ்நாடு காவியன் இலக்கியப் பரிசுத்திட்டத்தில் தெரிவான சிறுகதை இருளைக் கிழித்துக்கொண்டு, பொந்தில்; இருந்து சீறிவரும் பாம்பு போல அக்குழாய் ரயில் பிளாட்பாரத்தருகில் வந்து நின்றது. கதவுகள் திறக்கப்பட்டதும் முதியவர் தட்டுத்தடுமாறி ஏறினார். அவருக்கு வழிவிட்டுக்கொடுத்த சாரா அவரைப் பின்தொடர்ந்தாள். காலியாக இருந்த இருக்கையில்; அமர்ந்த கிழவரின் முன்னால் அவள் இருந்து கொண்டாள். ஏனோ! அந்தக் குழாய் ரயில் நிலையப் பிளாட்பாரத்தில் அவரைப் பார்த்ததிலிருந்து சாராவுக்கு அவருடன் சீண்ட வேண்டும் போலிருந்தது. எப்படி அவருடன் கதைகொடுப்பது அல்லது வம்புக்கிழுப்பது என்று தெரியாமலிருந்தவளுக்கு முதியவரின் பக்கத்திற்கிடந்த லண்டன் மெட்ரோ பத்திரிகை கைகொடுத்தது. முத…
-
- 1 reply
- 1.3k views
-
-
ஒட்டக மொழி சஞ்சயன் செல்வமாணிக்கம் இணைப்பு: http://visaran.blogspot.in/2014/03/blog-post_16.html வாழ்க்கை பல மனிதர்களை எனக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறது. எல்லோரும் ஏதோ ஒரு விதத்தில் தங்களின் நினைவுகளை, தாக்கங்களை என்னுள் செதுக்கிவிட்டே கடந்துபோகிறார்கள். மனிதர்களின் மனம் என்னும் இரகசியப் பெட்டியினுள் பலரின் நினைவுகளும் உரையாடல்களும் சம்பவங்களும் ரகசியமாகத் தமக்குள் உரையாடியபடியே உலாவித் திரிகின்றன. சிலர் அவற்றில் சிலவற்றை என்னிடம் நம்பிப் பகிர்ந்துபோகிறார்கள். நான் அவர்கள் தந்துபோனவற்றைச் சுமந்து திரிகிறேன்; சுகமான சுமை அது. இன்னொரு மனிதனின் நம்பிக்கையைப் பெறுவதும், அவன் பாதுகாப்புணர்வுடனும் நம்பிக்கையுடனும் என்னை அணுகுவதும் பரம ரகசியங்களைப் பகிர்வதும் மனத…
-
- 1 reply
- 1.1k views
-
-
ஆத்மார்த்தியின் ஆன்மா! ஜெரா படம் | Laruwan Wanniarachi, AFP, blogs.ft | சிவில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த தமிழ் பெண்ணொருவருக்கும் சி்ங்கள சிப்பாய் ஒருவருக்கும் கிளிநொச்சியில் இடம்பெற்ற திருமணத்தின்போது எடுக்கப்பட்ட படம். ஆத்மார்த்தியின் கட்டில் அசைந்து கொண்டேயிருந்தது. தூக்கம் வரவேயில்லை. தாதியர் அடிக்கடி வந்து விசாரித்தனர். அவளுக்கு நாளை சுகப் பிரசவம் என்பதைத் தவிர வேறு எந்தப் பிரச்சினைகளும் இல்லை என்றே கட்டிலுக்கு கீழே படுத்திருக்கும் அவளின் அம்மா நினைத்துக் கொண்டிருப்பார். அங்குள்ளவர்களும் அப்படித்தான் நினைத்திருக்க வாய்ப்புண்டு. திடகாத்திரமான உடல் அவளுக்கு சுகப்பிரசவம் என்பதை உறுதிப்படுத்தியும் இருந்தது. “இன்டைக்கு கொஞ்சமாவது நித்திர கொள்ளவேணும்” என்ற எ…
-
- 0 replies
- 629 views
-
-
வேப்பம் பூ வாசம் ஸ்மெல் பண்ணிருக்கியா ?? வெயில் கால இரவின் நிலா பார்த்திருக்கியா ??? உதிர்ந்து கிடக்கிற மாம் பூவ எப்பவாது பொறுக்கி எடுத்த அனுபவம் இருக்கா உனக்கு ??? கலர் கலரா சேமியா ஐஸ் உறிஞ்சி இருக்கியா ??? வரிசையாக கேட்டு கொண்டே போகிறான். “இல்லை” என்ற என் ஒற்றை தலையாட்டலுக்கு பின் சொன்னான்…. “இதெல்லாம் தெரிஞ்சுக்கனும்னா வெயில் பழகனும். வெயில் அப்படி, வெயில் இப்படின்னு புலம்ப கூடாது. ஓகே வா ? என்று மெல் புன்னகையிட்டவன்… சட்டென்று சொன்னான் “வெயில்தான் அழகு. வெயில்தான் நம்மோட அடையாளம். வெயில் ஒரு இனத்தின் குறியீடு. வெயிலை பழகு…. சரியா ???? என்று. அவன் தலையில் தட்டி சொல்ல தோன்றியது “பக்கி…..மழை படிடா முதல்ல” என்று. அனால் சொல்லவில்லை. அவனுடனான முதல் சந்திப்பே எனக்கு …
-
- 4 replies
- 1.1k views
-
-
வாசிப்பு பழக்கத்தை ...எங்கள் தலைமுறையிடம் வலுப்படுதியத்தில் முக்கிய பங்கு இந்த ராணி காமிக்ஸ் முக மூடி வீரர் மாயாவி மற்றும் ஜேம்ஸ் பாண்ட் புத்தகங்களுக்கு உண்டு 1990 களின் நடுப்பகுதிகளில் சிறுவனாக இருந்த பொழுது யாழ்ப்பாணம் நாச்சிமார் கோயிலுக்கு பின்னால் ஒரு லைபிரரி இருக்கு அந்த குளத்தோடு சேர்ந்து...., அங்கு போய் படிக்கிறது இந்த புத்தங்களை தேடி ..... ஜேம்ஸ் பாண்ட்,தில்லான்,மாடஸ்டி பிளைசி,மாயாவி ,எல்லாம் அதில் தான் அறிமுகமானார்கள் ..இவளவு அழகாக ..ஒரே மாதிரி படங்கள் எப்படி வரையப்பட்டன என்பது இன்றுவரை எனக்கு ஆச்சர்யம் .மாயாவியின் மகன் ரெக்ஸ் ..மனைவி டயானா ..ஈடன் கார்டன் ..அங்குள்ள விலங்குகள் ..மாயாவியின் பொக்கீச அறை எல்லாம் கருப்பு ..வெள்ளை படத்திலும் நிஜமான தோற்ற உணர்…
-
- 5 replies
- 1.7k views
-
-
வங்கியில் இருந்து வந்த கடிதத்தை மகன் ஜீவனிடம் கொடுத்து விட்டு மகனின் அறைக்கதவோடு சாய்ந்துகொண்டு நின்றான் சண்முகம். அப்படி நிற்பது கூட அவனுக்கு விருப்பமாகவும் பெருமையாகவும் இருந்தது. கனடாவுக்கு வந்தநாள் தொடங்கி வந்த எத்தனையோ கடிதங்களை எல்லாம் கீழ்வீட்டுச் சிற்றம்பல வாத்தியாரிடம் காட்டி விபரம் கேட்பதற்காக நாய்போல அவர்கள் வீட்டு வாசலிலே காத்திருந்ததும் வாழ்க்கை இரகசியங்களை ஆங்கிலம் வாசிக்கத் தெரியாத ஒரே ஒரு காரணத்துக்காக அவர்களோடு பங்கு போட்டுக்கொள்ள நேர்ந்ததும் போன்ற அவலங்கள் இப்பொழுது சண்முகத்துக்கு இல்லை. சண்முகம் படித்தவன்;. கணக்கிலும் உலக அறிவிலும் அவனும் கெட்டிக்காரன் தான். ஆங்கிலம் மட்டும் தான் அவனுக்கு தெரியாது. ஆனால் கனடாவைப் பொறுத்தவரை அதுவே அவனுக்கு பெரிய தலை வ…
-
- 2 replies
- 1.2k views
-
-
கட்டிலில் மல்லாந்து படுத்துக்கிடந்தார் கலியமூர்த்தி. ஒரு வாரம் ஓயாமல் அடித்த டைபாய்டு காய்ச்சல் அவர் உடம்பை உருக்குலைந்துப் போட்டிருந்தது. தலை விண்ணென்று தெறித்தது. காலைக் குளிருக்கு மதிக்கடைக்கு போய் ஒரு டீ குடித்தால் தேவலாம் போல இருந்தது. எல்லாவற்றையும்விட அடுத்தவாரம் ஆத்தங்கரை நாச்சிக்கு எப்படி நீர் மோர் வார்த்து ஊற்றப்போகிறோம் என்று நினைத்த போது, கவலைகள் ஓட்டமாய் ஓடிவந்து ஒட்டிக்கொண்டன. கலியமூர்த்தியின் சொந்த கிராமத்தில் இருக்கும் ஆத்தங்கரை நாச்சியம்மன் மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம். வருடந்தோறும் ஆடித்திருவிழா ஏக விசேஷமாக இருக்கும். ஏழு ஊர் கூடுகிற விழா அது. விழாவிற்கு முந்தின நாள் இரவே பக்கத்து ஊர்களில் இருந்து மக்கள் வர ஆரம்பித்து விடுவார்கள். நாற்பது வருடமாக அந…
-
- 0 replies
- 1.5k views
-
-
சஞ்சயன் செல்வமாணிக்கம் அவர்கள் எழுதிய அவரது கண்ணீர்த்துளிகள். வாசித்து முடிந்தும் இன்னும் தந்தையின் கண்ணீரை வெல்ல முடியாது தோற்றுப்போகிறேன். சில முடிவுகள், சிலநிமிடக்கோபம் சிலரது வாழ்வை எவ்வளவு துயரங்களால் நிரப்பியிருக்கிறது என்ற உண்மையை தனது வாழ்வை அப்படியே ஒளிவு மறைவின்றி பலருக்கான பாடமாக எழுதி துணிச்சலோடு வெளியிட்டுள்ளார். இனி சஞ்சயனின் எழுத்துக்களை வாசியுங்கள். அந்தரத்தில் உறைந்துபோன மழைத்துளி மாசி மாதம் 2014 ல் மலைகள் இணையத்தளத்தில் வெளிவந்த எனது பதிவினை இங்கு இணைத்திருக்கிறேன். ------------------------------------------------------------------------------------------- அன்பான எனது பூக்குட்டிக்கு! நாளை உனக்கு பிறந்தநாள். வாழ்க்கையின் அற்புதமான பதின்மக…
-
- 2 replies
- 867 views
-