Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கதை கதையாம்

சிறுகதை | தொடர்கதை | நாடகம்

பதிவாளர் கவனத்திற்கு!

கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.

  1. படிச்சன் பிடிச்சிருந்தது பாட்டி வடை சுட்ட கதை( 2020) 1.பாட்டி வழக்கம்போல் கடை போட புறப்பட்டாள்.கார்ப்பரேஷன் வண்டி வந்து நின்றது. அதிலிருந்து இறங்கினவன் " தா கெய்வீ .. ஒனக்கு இன்னியோட 60 வயசு முடியுது. உன்னை சாம்பலாக்கி உன் சொந்தக்காரவுங்களுக்கு கூரியர் அனுப்பனும் கெளம்பு கெளம்பு "என்றான் 2.பாட்டி வழக்கம்போல் கடை போட புறப்பட்டாள். தான் வழக்கமாய் கடை போடும் புளிய மரம் கருகிக்கிடப்பதை பார்த்து அதிர்ந்தாள். வேடிக்கை பார்க்கும் சோம்பேறி ஒருவனை கேட்டாள் " இன்னாச்சு நைனா ..மரம் இப்டி கருகி கிடக்குது?" .அவன் சொன்னான் "எனுக்கு இன்னா தெரியும்மே.. நேத்து கருப்பா மழை பேஞ்சுச்சாம். இந்த ஏரியால எல்லா மரமும் இப்படித்தான் ஆயிருச்சு. 3.பாட்டி வழக்கம்போல் கடை போட…

  2. வரலாற்றின் பக்கங்கள் சுவாரஸ்யமானவை மட்டுமல்ல.. பல பாடங்களைச் சொல்லிச் செல்பவை. பல நாட்டு மனித வரலாறுகளைப் படித்தாலும் ஐரோப்பிய வரலாற்றின் மேல் எப்போதும் தீராத ஆர்வம். காரணம் இருந்த வளங்களை அவர்களைப் போல வீணடித்தவர்களும் செம்மையாகப் பயன்படுத்தியவர்களும் அன்றைக்கு மட்டுமல்ல… இன்றைக்கும் யாருமில்லை. குறிப்பாக பிரெஞ்சுப் புரட்சி… இந்தப் புரட்சி மூலம் பிரான்ஸ் மக்கள் சுதந்திரம் பெற்ற விதம், பெற்ற சுதந்திரத்தை காப்பாற்றிக் கொள்ள அவர்கள் பட்ட பாடுகள், எதை எதிர்த்து அவர்கள் போராடினார்களோ, எதிலிருந்து விடுதலை பெற விரும்பினார்களோ அதற்குள்ளேயே மீண்டும் விரும்பிப் போய் மாட்டிக் கொண்டது… இப்படி ஒவ்வொரு நாட்டவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய படிப்பினைகள் ஏராளம். இங்கே ப…

  3. படிச்சன் பிடிச்சிருந்தது எங்க அம்மா செத்துப் போச்சு..(சிறுகதை) செருப்பைப் போட்டுக்கொண்டு வாசல் தாண்டி தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்தேன். நாம் எதிர்பார்ப்பதை விட காலம் வெகு வேகமாகத்தான் சென்றுவிடுகிறது, 2 வருடங்கள் கழித்து சொந்த ஊருக்கு வந்திருப்பதால், ஊருக்குள் நிறைய மாற்றங்கள் தெரிகிறது. பாவாடை சட்டையோடு வீட்டு வெளித்திண்ணையில் பல்லாங்குழி விளையாடிய பெண்கள் தாவணி பாவாடையோடு ஓரக்கண்ணில் பார்ப்பது போல இருந்தது எங்க ஊர் எனக்கு. காமாட்சி அம்மன் கோவில் தெரு தாண்டி பாப்பாத்தி அம்மன் கோவில் தெருவில் நுழைந்ததுமே "வா மாப்ள எப்ப வந்த..?" என்ற குரல் சற்றே துரத்தில் இருந்து வந்தது . குரல் வைத்தே அது கதிர் மாமாதான் என என்னால் யூகிக்க முடிந்தது, துரத்தில் இருந்து எ…

    • 3 replies
    • 1.2k views
  4. என்ன அங்கிள் ஜிம்மியோட வாக்கிங் போறீங்கள் போல.... ஓமடா தம்பி. இந்தப் பார்க்கை யும் ஜிம்மியையும் விட்டா எனக்கு என்ன கதி.. சொல்லு பார்ப்பம். ஏன் அங்கிள் அப்படிச் சொல்லுறீங்க. ஊரில நீங்கள் டொக்டரா இருந்தனீங்கள் தானே. அந்த அனுபவத்தை வைச்சு.. இங்க சரிற்றி வேலை செய்தால் சனத்துக்கு நாலு நல்லது செய்ததாகவும் இருக்கும் உங்களுக்கும் ஓய்வு காலத்தில் நாலு பேரோட பழகின நட்பும் மனத் திருப்தியும் கிடைக்குமே..! நீ சொல்லுறது சரி தான் தம்பி. இப்ப பார் நான் லண்டன் வந்து 6 வருசம் ஆகிட்டுது. ஊரில உள்ள பென்சனைக் கூட எடுக்கப் போக முடியல்ல. மகனட்ட வந்ததோட அவன் கூடவே இருக்கிறன். அவனுக்கும் ஊருக்குப் போற நினைப்பில்ல. அட பென்சன் வருகுது வா ஒருக்கா போய் எடுத்துக் கொண்டு வரும் எண்டால்.…

    • 11 replies
    • 2.1k views
  5. Started by shanthy,

    பார்வதி (2007 ஜூன் 28, குமாரி கமகே இன் ”குறுங்கதையாக்கப்பட்ட பெருங்கதை” என்ற புத்தகத்திலிருந்து) தமிழில் :- ஃபஹீமாஜஹான்- “அவர்களின் ஆண்மையின் பலத்துக்கு எதிரில் தனது பெண்மையின் சக்தியை ஒன்றிணைத்து பார்வதி வாழ்வுப்போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்கிறாள், அழுகிறாள் , சிரிக்கிறாள், எங்களுக்கு கச கசா வித்துக்களைப் போட்டு சர்பத் செய்து தந்தாள். மிகவும் அழகான பெண்ணுடல் ஒன்று ஆணின் நடையில் செல்வதை நான் பார்த்திருந்தேன்.” பார்வதிக்கு 36 வயதுதான் ஆகிறது. EPRLF இலிருந்து விலகிய ஒருவரைத் திருமணம் செய்திருந்தாள். அந்தக் காலத்தில் அவள் கோராவலியில் வாழ்ந்தாள். குடும்பி மலையடிவாரத்தில் காணப்படும் ஒரு ஊர் இதுவாகும். 1990 ஆண்டுக் கலவரத்தின் போது வீடுவாசலைக…

    • 0 replies
    • 823 views
  6. அன்ரி எங்க சேன்ஸ்பரில இருந்தோ வாறீங்கள். என்ன ஒபர் (Offer) போட்டிருக்காங்கள்...?! என்ன வழமை போல.. வாழைப்பழமும்.. ஒரேஜ்சும்.. அப்பிள் பையும் தான்.. பை வன் கெட் வன் பிறி என்று போட்டிருக்கிறாங்கள். அவ்வளவு தானா. அது சரி அன்ரி.. இன்றைக்கு இரவு சனல் 4 இல ஊரைப் பற்றி வீடியோ காட்டப் போகினமாம்.. பார்க்கல்லையோ..??! பார்த்து என்னத்த தம்பி ஆகப் போகுது. அவங்களும் காட்டிறதை காட்டிறாங்கள்.. உலகம் ஒன்றும் உருப்படியா செய்யுதுல்லையே. இப்படியே இவன் காட்ட பதிலுக்கு அவன் தான் ஒன்றைக் காட்ட..எண்டு எங்கட பிரச்சனை இழுபட்டுக் கொண்டெல்லோ போகுது. நாங்கள் அவசரப்படுறது போல.. உலகம் ஆதாரமில்லாமல் எடுத்தேன் கவுத்தன் என்று ஒன்றும் செய்யேலாது தானே அன்ரி. இந்தியா.. சீனா.. ரஷ்சியா என்ற…

  7. என்ன பிள்ள சுமங்களா.. கொலிடேக்கே ஊருக்குப் போறியே. பவளம் அன்ரி லண்டன் முருகன் கோவிலில் கண்டு விசாரிக்க.. ஓம் அன்ரி. இவரும் வந்து அசைலம் கேட்டு இப்ப 12 வருசம் ஆகுது. இப்ப ஒரு வருசமாத்தானே எங்கள் எல்லோரும் பாஸ்போட் தந்திருக்கிறாங்கள். நானும் கனடாவில உள்ள அண்ணா அண்ணிட்ட கூடப் போக முடியாமல் இவ்வளவு காலமும் இந்த லண்டனுக்கையே சிக்குப்பட்டு கிடக்கிறன். அதுதான் இந்தக் கொலிடேக்கு என்றாலும் ஒருக்கா ஊருக்கும் கனடாவுக்கும் போகத்தான் இருக்கிறம். ஏன் அன்ரி.. ஏதேனும் விசயமே... இல்லப் பிள்ள.. ஊருக்குப் போறதுக்கு எனக்கும் விருப்பமா இருக்குது. ஒரு மாதமாவது போய் நின்றிட்டு வருவம் என்றிருக்கிறன். அதுதான் நீங்கள் போறதெண்டால் உங்களோட சேர்ந்து வந்தால் உதவியா இருக்கும் தானே.. என்று தான…

  8. “சும்மா போ அன …இனி வெறுங்கல்லு .. என்னால தோண்ட ஏலாது” “என்ற அச்சா குஞ்சல்லோ, இன்னும் ரெண்டு அடி தான் .. தோண்டினா .. குத்தி போட்டு மண்மூடை அடுக்கலாம்” “அப்ப பின்னேரம் லலித்தொட கிரிக்கட் விளையாட விடுவியா?” “சரி என்னத்தையும் போய் விளையாடு .. இப்ப இத கிண்டு” அம்மா கிரிக்கட் விளையாட பெர்மிஷன் தந்த சந்தோசத்தில் போட்ட பிக்கான் கொஞ்சம் ஆழமாகவே விழ, யாழ்ப்பாணத்து கல்லு “நங்” என்று சத்தம் போட்டது. கொஞ்சம் கையால் மண்ணை கிளறி, கல்லை க்ளீன் பண்ணிவிட்டு, மீண்டும் சரியான கொட்டு பார்த்து பிக்கான் போட்டேன். சர்க்கென்று பிக்கான் இறங்க, நான் பிடியை ஒரு எம்பு எம்ப சர்ர்க்க்க்க் என்று இன்னொரு சத்தம். பிக்கான் மரப்பிடி முறிந்துவிட்டது! என்னடா இது சிறுகதை போலே ஆரம்பிக்கிறே…

    • 26 replies
    • 5.5k views
  9. Started by ilankathir,

    அசோகா சக்கரவர்த்தி தன் ரதத்தில் பயணம் செய்து கொண்டிருந்தபோது எதிரே ஒரு புத்தத்துறவி வந்து கொண்டிருப்பதைக் கவனித்ததும் ரதத்திலிருந்து இறங்கி வந்து அவர் காலில் விழுந்து வணங்கினார். அதைக் கவனித்த அவரது தளபதிக்கு மாமன்னர் ஒரு பரதேசியின் காலில் விழுவதா என்று வருத்தம் ஏற்பட்டது. அதை அரண்மனைக்கு வந்ததும் மன்னரிடமே வெளிப்படுத்தினார். மன்னரோ அவரது வினாவுக்கு விடையளிக்காமல் ஒரு ஆட்டுத்தலை, ஒரு புலித்தலை, ஒரு மனிதத்தலை மூன்றும் உடனே வேண்டும் என ஒரு வினோதமான ஆணையிட்டார். மூன்று தலைகளும் கொண்டு வரப்பட்டன. மன்னர் மூன்றையும் சந்தையில் விற்றுவரச் சொன்னார். ஆட்டுத்தலை உடனே விலை போயிற்று.புலித்தலையை வாங்கப் பலரும் யோசித்தனர். இறுதியில் ஒரு வேட்டைக்காரர் தன் வீட்டு சுவற்றில் …

  10. புகைகளை கக்கி கொண்டு உறுமியபடி இருந்தன அந்த உந்துருளிகள். ஓட்டிகள் அனைவரின் முகத்திலும் வெல்லவேண்டும் என்ற வெறி அப்பட்டமாக தெரிந்தன. விசிலை வாயிலே வைத்தபடி அரவிந்தன் வாத்தி எந்த நேரமும் ஊதுவதற்கான ஆயத்த நிலையில் இருந்தார். இயக்கச்சி சந்தியில் ஆரம்பம். முடிவு கோடு பரந்தன் உப்பு உற்பத்தி நிலையம். எப்படியும் ரகுவை வென்றிட வேண்டும் இது மட்டும் தான் குகனின் மனதில் ஒலித்த வார்த்தைகள். எல்லாரிடமும் ஒரே மாதிரியான உந்துருளிகள். அன்றைய வன்னி இளைஞர்களின் கனவு உந்துருளிகள். குகன் மறுபடியும் வேக அழுத்தி, தடை அழுத்திகளை சரிபார்த்து கொண்டான். 1 ... 2 ... 3 ... ஊ ஊ ..ஊ .. வாத்தியின் விசில் சத்தம் கேட்டது தான் தாமதம்..புகை மட்டும் சூழ்ந்த அந்த …

    • 9 replies
    • 1.6k views
  11. கடற்கன்னி ஒருநாள் முழுவதும் பிரகாசித்து அன்றைய நாளை முடிக்க தென் மேற்கு திசையை நோக்கி நகர ......, நாள் முழுவதும் பறந்து திரிந்து தமது குஞ்சு களுக்கு இரைதேடி கொண்டு தமது கூட்டுக்கு திரும்பிக்கொண்டு இருந்தன ..... பறவைகள், இருள் மெல்ல ..... மெல்ல .... கவ்வ தொடங்கியது கடல் அலையின் ஓசையைவிட காகம் கத்தும் சத்தமே காதை கிழித்தது சுற்றும் முற்றும் பார்த்த வண்ணம் மோட்டர் சைக்கிளில் ராஜனும் ரஞ்சனுமாக முன்னே சென்றுகொண்டு இருக்கின்றனர் வோக்கியில் ரோமியோ ......ரோமியோ என கூப்பிடும் சத்தம் என்பக்கத்தில் நின்றவரின் வோக்கியில் கேட்டது அதக்கு ரகு ஓம் சொல்லுங்கோ ....... தங்கோ, என்ன வென்றால் இன்று நிலைமைகள் சரியாகவுள்ளது இன்றைக்கே அதை ஏற்பாடு செய்யலாம் என்று சொன்ன போது என்மனதில…

  12. அவள் என் பார்வையில் பட்டிருக்ககூடாது. ச்சே. ஏன் அவள் என் பார்வையில் விழுந்தாள் என்பது இன்றுமட்டும் புதிராகவே உள்ளது. அவளை காண்பதற்கு முன்னர் அவளை விட அழகான எத்தனையோ பெண்களை கண்டிருக்கிறேன். ஏன் கதைத்தும் இருக்கிறேன். இருந்தாலும் அவள் என்னை என்னவோ செய்தாள். திரும்ப திரும்ப பார்க்க வைத்தாள். காயத்திரி.. பெயரை போலவே அழகானவள். வட்ட முகம் எடுப்பான உயரம். சுடிதாரில் மிக அழகாக தெரிந்தாள். முதல் சந்திப்பே பல்கலைகல்லூரியில், எனக்கு கனிஷ்ட மாணவியாக... பகிடிவதையில், கம்பன் சொன்ன ராவணன் நிராயுதபாணியாக நின்றதை போல, எனக்கு முன்னால் நிலத்தை பெருவிரலால் கீறியபடி, தமிழ் பெண்களுக்கே உரித்தான நாணத்துடன்... நான் பாதி குடித்துவிட்டு கொடுத்த அந்த தேநீரை பருகவேண்டும் இத…

  13. இந்தக்கதை ஒரு போராளியால் 17.05.2011 அன்று எழுதப்பட்டது. 2009 முள்ளிவாய்க்கால் வரை வாழ்ந்து உயிர் போகிற கடைசித்துளியிலிருந்து உயிர் மீண்ட தோழன் இவன். ஆவன் செய்த அதிர்ஸ்டமோ என்னவோ இப்போ புலத்தில் உயிரோடிருக்கிறான். தனது சுய வாழ்வு அனுபவத்தை அப்படியே எழுத்தாக்கியிருந்தான். அதனைச் செப்பனிட்டு முழுமையாக்கி இங்கே தருகிறேன். இவனுக்கு இப்போது நான் சூட்டியிருக்கிற பெயர் வசந்தன். காலம் ஒருநாள் இவனை அடையாளம் சொல்லும் நிலமை வரும்போது சொந்தப் பெயரைச் சொல்கிறேன். இரும்பென நினைத்தவர்களுக்குள் இளையோடிய காதலும் களவாழ்வும் கடைசியில் இவன் நேசித்த காதலி காற்றோடு காற்றாய் முள்ளிவாய்க்காலில் கரைந்ததும் இவனை இன்றுவரை உயிரோடு வதைத்துக் கொண்டிருக்கிறது. நேசக்கரம் மூலம் அறிமுகமான …

    • 14 replies
    • 1.9k views
  14. Started by அபிராம்,

    இனிய உறவுகளே !. இன்று அருணா அண்ணாவின் நினைவு நாள். அவரை நினைத்து நான் எழுதிய தொடரின் சில பாகங்களை இங்கே இணைக்கிறேன். பாகம் பத்து புதுக்குடியிருப்பு - ஒட்டிசுட்டான் வீதி அதில் ஒரு நூற்றைம்பது மீற்றரில் சிங்கள ராணுவத்தை மறித்து வைத்திருந்தார்கள் புலிகள் . இண்டைக்கு பிடித்துவிடுவோம். நாளைக்கு பிடித்துவிடுவோம் என்று வாய் கூசாமல் சொல்லி சொல்லி ராணுவ பேச்சாளனின் வார்த்தைகள், பொய்யாகி போய் இரண்டு வாரங்கள். கடுமையான சண்டை. நெருப்பு சுவர்களாக புலிகள். சுடுகாடாக புதுக்குடியிருப்பு. புதுக்குடியிருப்பு.... அது ஒரு அழகான நகரம். பரந்தனையும் முல்லைத்தீவையும் ஒட்டிசுட்டானையும் இரணைப்பாலையும் இணைக்கும் நாச்சந்த…

  15. தலைமுறை நிழல்கள் இளைய அப்துல்லா ஓவியங்கள் : ஸ்யாம் லண்டனில் பனி பொழிந்து கொண்டு இருந்தது. ராமநாதன் தனது வலது கையைக் கன்னத்தில் வைத்தபடி ஒருக்களித்துப் படுத்திருந்தார். அவர் படுப்பதற்குப் பட்ட சிரமம் அவர் முகத்தில் தெரிந்தது. 'மகன் கூப்பிட்டபோது லண்டனுக்கு வந்திருக்கக் கூடாதோ’ என்று நினைத்துக்கொண்டார். லண்டனின் தட்பவெப்பம் அவரைப் பாடாய்ப்படுத்தியது. காற்று அதிகமாக அடித்தால் தொண்டைக் கரகரப் பும்; மழை பெய்தால் தும்மலும்; குளிர் வந்தால் இழுப்பும்; வெயில் வந்தால் தலைவலியும் வந்துவிடு கிறது. மார்கழி மாதம்தான் ராமநாதன் லண்டனுக்கு வந்து இறங்கினார். வந்த கையோடு அவருக்கு வந்த முதல் பிரச்னை... இரண்டு கைகளிலும் தோல் உரிய ஆரம்பித்தது. பின்னர், உடம்பு …

    • 10 replies
    • 1.9k views
  16. யாழ் போதனா வைத்தியசாலை பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிற அந்தக் காலை வேளை.. சாரண இயக்கத்தின் பணியின் நிமித்தம்.. நானும் அங்கு. அங்கே இருந்த ஒரு வாங்கில்.. அந்த அம்மா. கவலை தோய்ந்த முகம். முடி கலைந்து முகத்தில் படர்ந்திருக்கிறது. அழகான அந்த நெற்றில் இருந்த குங்குமப் பொட்டுக் கலைந்து வியர்வையில் கலந்து வழிந்து நெற்றியில் குங்குமக் கோடுகள். பார்க்க கவலையாக இருந்தது. என்ன தான் பிரச்சனை என்று கேட்பமே.. ஏதேனும் உதவி தேவைப்படுமோ என்று நினைத்து அணுகினேன் அந்த அம்மாவை. ஏம்மா.. இப்படி தனிய யோசிச்சிட்டு இருக்கிறீங்க. என்ன முகம் எல்லாம் வாடிப் போய் சோகமா இருக்கு. என்ன பிரச்சனை.. ஏதேனும் உதவி தேவையாம்மா.. என்று பேச்சுக் கொடுத்தது தான் தாமதம். கண்களில் இருந்து தாரை தாரையாக கண்…

  17. Started by nunavilan,

    http://www.scribd.com/doc/2582447/-sujatha-Tamil-Ebook

  18. புதிய நாற்றுக்கள். நல்ல வளமான நெல் வயல். பச்சைப் பசேலெனப் பயிர்கள் ஆடி அசைந்து அழகு காட்டிக்கொண்டிருந்தன. அவற்றக்கு நடுவே, இடைக்கிடை, அங்கொன்றும் இங்கோன்றுமாய்க் காணப்பட்ட நெற்சப்பி களையும் கோரைப் புற்களையும், இனங் கண்டு. பிடிங்கி, வரம்பில் போட்டுக் கொண்டிருந்தார் வயலின் சொந்தக்காரர். வரம்பில் கிடந்த நெற்சப்பியையும் கோரைப் புற்களையும் ஷஷஉனக்கேன் இந்த வேலை|| எனச் சூரியன் தன் கதிர்களால் வாட்டி வதைத்துக் கொண்டிருந்தான். வரம்பால் நடப்பவர்களும் அவற்றை ஏறி மிதித்தக் கொண்டு சென்றார்கள். `எங்களுக்குள்ளேயே எங்களுக்குத் தெரியாமல் ஓட்டி உறவாடி, உறிஞ்சி உடல் வளர்த்தார்கள்;. இனம் கண்டு கொண்டதால் இப்போ வரம்பிலே கிடந்து தண்ணியும் இல்லாமல் சாப்பாடும் இல்லாமல் வாடி வதங்குக…

    • 12 replies
    • 1.7k views
  19. ஸ்ராலின் மரணமடைந்ததும் குருசேவ் பிரதம மந்திரியானார். கட்சியின் உயர் அதிகாரக்குழுவின் கூட்டத்தில் அவர் உரையாற்றினார். “ஸ்ராலின் ஒரு கைதேர்ந்த கிரிமினல் என்பதை நான் இப்போது ஒப்புக்கொண்டாக வேண்டும். நீங்கள் அவருடைய ஆதரவாளரா, எதிரியா என்ற ஒரே விடயம்தான் அவருக்குத் தெரியவேண்டும். எதிரியாக இருந்தால் மரணத்தைத் தவிர எதுவும் கிடையாது.” என்று குறிப்பிட்டார். அந்தக் கூட்ட அரங்கத்தில் பின்பக்கத்தில் இருந்து யாரோ ஒருவர் இப்படிக் கத்தினார், “இந்த நாற்பது வருடங்கள் முழுவதும் நீங்கள் அவருடன் இருந்து வந்தீர்கள். ஏன் வாய் திறக்காமல் இருந்தீர்கள்?” குருசேவ் சிரித்துக்கொண்டே சொன்னார், “இந்தக் கேள்வியை எழுப்பிய மதிப்பிற்குரிய அந்தத் தோழரை நான் பார்க்க விரும்புகிறேன். அவர் கொஞ்ச…

  20. முதன்முதலாக அனொட்டமி.. செய்முறை வகுப்புக்காக பல்கலைக்கழகத்துக்குள் நுழைகிறான்.. கஜன்..! வரும் வழியில் என்னைக் கண்டிட்டு.. எப்படி மச்சான் போகுது வகுப்பு..... முதல் நாள் பதட்டத்தோடு கேள்வியாய் தொடுத்தான். ஒன்றும் பிரச்சனை இல்ல. எங்கட குறூப்போட இணைஞ்சுக்கோ.. என்று விட்டு போய்விட்டேன். கஜன் ஏதோ காரணங்களால் ஆரம்ப கால வகுப்புகளுக்கு வர முடியாது போக அன்றே தான் முதன்முதலாக செய்முறை வகுப்புக்கு வந்திருந்தான்... அது தான் அவ்வளவு பதட்டம். சிறிது நேரத்தில் எங்கட ஆய்வு கூட நுழைவாயிலில்... எக்ஸ்கியூஸ் மி என்ற குரலோடு.. கஜன் வந்து வாசலில் நின்று கொண்டு.. உள்ளே வர தயக்கத்தோடு எட்டிப்பார்த்துக் கொண்டிருந்தான்.. பிளீஸ் கம் இன்.. என்று எமது ஆசிரியர் அழைக்கவும் உள்நுழைந்த…

  21. “Bloody Indians...!” கத்திக்கொண்டே அவன் டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்று ட்ரில்லரால் துளைக்க, கனகரத்தினம் மாஸ்டர் அவமானத்தில் கூனிக்குறுகிப்போனார். அவசர அவசரமாக தபால் பெட்டியில் போட்டிருந்த விளம்பர பத்திரிகைகளை எடுத்து சுருட்டிக்கொண்டு வேகமாக அந்த இடத்தைவிட்டு நடக்கத்தொடங்கினார். கால்கள் நடுங்கின. அவன் அழைத்த தோரணையே மிரட்டலாக இருந்தது. “Hey Mister, Come here ..” ச்சே சனியனுக்கு நாற்பத்தைந்து தாண்டியிருக்குமா? நான்கு நாட்கள் ஷேவ் செய்யாத பிரவுன் தாடி. பியரும் சிகரட்டும் இன்னமும் நாசியில் அடித்தது. அவனும் அவனின்ட கலிசானும். நீலமும் பிரவுனுமாய் பெயிண்ட், மேலுக்கு பனியன் மட்டும். அதுவும் கிழிந்திருந்தது. பிச்சைக்காரன். கையில் டிரில்லர் மெசினை வைச்சுக்கொண்டு படம் காட்டி…

    • 0 replies
    • 1.5k views
  22. எல்லாருக்குமே தெரிஞ்ச ஒரு பழைய கதை தான் இது ஒரு ஆற்றம் கரையோரமாக ஒரு விறகு வெட்டி மரம் ஒன்றை வெட்டி கொண்டிருந்தான் எதிர்பாராத விதமாக அவனுடைய கோடாரி தவறி ஆற்றினுள் விழுந்து விட்டது தன்னுடைய கோடாரி விழுந்து விட்டதை நினைச்சு ஆற்றோரமாக இருந்து அழுது கொண்டிருந்தான் இவனை பார்த்து இரக்கப்பட்ட வனதேவதை ஒன்று அவனுக்கு உதவி செய்ய வந்தது அவனிடம் ஏன் அழுகிறாய் என கேட்க அவனும் தான் அழும் காரணத்தை சொன்னான் உடனே ஆற்றில் மூழ்கிய தேவதை கையில் பொன்னாலான கோடரியுடன் வந்து இதுவா உனது என்று கேட்டது விறகு வெட்டியும் இல்லை என்று தலை ஆட்டினான் பிறகு மூழ்கிய தேவதை வெள்ளி கோடரியுடன் வந்தது இதுவா என கேட்டிச்சு அவனும் இல்லை என தலை ஆட்டினான் பிறகு அவனின் இரும்பு கோடரியுடன் வந்த தே…

  23. காலை பசியாறலாம் என்று அந்த ஹோட்டல் வாசலில் வாசலில் பைக்கை நிறுத்திய செல்வத்தின் அருகில் அந்த குரல் கேட்டது. ”சாமி கைரேகை பார்க்கறீங்க?” கேட்டவனுக்கு வயது ஒரு முப்பத்தைந்து இருக்கலாம். “அடப்போப்பா...கைரேகை, ஜோசியம்ன்னு...இதிலெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை” “சாமி அப்படி சொல்லாதீங்க... நடந்தது, நடக்கப்போறது எல்லாமே சொல்வேன் சாமி” “ சொன்னா கேட்க மாட்டியா நீ.... முதல்ல உன் கைரேகையை பார்த்துட்டு எங்கே போனா நல்லா தொழில் நடக்கும்ன்னு போ...எனக்கு சொல்றது அப்புறம் இருக்கலாம்” “என்ன சாமி இப்படி கோபப்படறீங்க...உங்க முகத்தை பார்த்தா நல்லவராட்டம் தெரியுது... எனக்கு முதல் போணியை கொடுங்க சாமி” “ஏப்பா...இப்படி லோலோன்னு அலையறதுக்கு பதிலா எங்காச்சும் போயி …

    • 2 replies
    • 18.8k views
  24. முல்லா எல்லா விஷயங்களையும் ஆழ்ந்து ஆராய்ச்சி செய்பவர், எல்லா விஷயங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று மிகுந்த ஆர்வம் கொண்டவர். இப்படித்தான் ஒரு நாள் அவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது…. வழியில் எதோ ஒன்று கிடப்பதைக் காண்கிறார், அவர் அதனருகில் குனிந்து பார்த்தார். அவருக்கு அது என்ன வென்று தெரியவில்லை. அதை கையில் எடுத்து வைத்து கொண்டு ஆராய்ந்தார் அப்போதும் அவருக்கு விளங்கவில்லை. அதை தனது மூக்கின் அருகில் எடுத்துச் செனறு முகர்ந்து பார்த்தார். அவருடைய சந்தேகம் சிறிது தெளிவுபெற்றது. ஆனாலும் அவரால் அதை உறுதியாக்கிக் கொள்ள முடியவில்லை. பிறகு அதிலிருந்து சிறிது பகுதியை எடுத்து தனது வாயில் போட்டு கொண்டார் அவருடைய முகம் ஒரு தெளிவு பெற்றதைப் போல் பிரகாசித்தது. …

  25. மனிதர்களுடன் பேசுவது என்பது நினைப்பதைப் போன்று இலகுவானதன்று என்பதை இப்போது உணரக்கூடியதாகவிருக்கின்றது. உரையாடல் என்பது ஒரு பெரும் கலை. திரும்பிப் பார்க்கும் போது சில மனிதர்களுடனான எனது பேச்சுவார்த்தைகள் மனக்கசப்புகளுடன், பிரிவுகளுடன், கைகலப்புடன், எதிரி என்றான நிலைகளுடன் முடிவந்திருக்கின்றன. இப்போதெல்லாம் முன்பைப் போலல்லாது என் மனது கடந்து வந்த பாதைகளில் எங்கெங்கே தவறு விட்டேன், தவறுக்கான காரணம் என்ன, எப்படி அச் சிக்கலைத் தவிர்த்திருக்கலாம் என்று சிந்திக்கிறது. முன்பெல்லாம் பொதுவேலைகள், விளையாட்டுகள், சங்கங்கள், உன்று கூடல்கள் என்று ஓடித்திரிந்த காலங்களில் பல உரையாடல்களை நான் உரையாடலாகக் கொள்ளாமல் விவாதமாக - தர்க்கமாக மாற்றிக் கொண்டதனால் நட்புகளை மட்டுமல்லாமல் எ…

    • 4 replies
    • 904 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.