வேரும் விழுதும்
கலைகள் | கலைஞர்கள்
வேரும் விழுதும் பகுதியில் கலைகள், கலைஞர்கள் சம்பந்தமான பதிவுகள் மாத்திரம் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் கலைகள், கலைஞர்கள் பற்றிய அவசியமான கட்டுரைகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
இசை சம்பந்தமான பதிவுகள் "இலக்கியமும் இசையும்" என்ற புதிய பகுதியிலேயே இணைக்கப்படல்வேண்டும்.
391 topics in this forum
-
‘உட்கனலின் வேகம் இயக்கிக்கொண்டு இருக்கிறது’ நேர்காணல்: தேவகாந்தன் நேர்கண்டவர்: கருணாகரன் (‘கனவுச் சிறை’ என்ற மகா நாவலின் மூலமாக தமிழ்ப் பரப்பில் அதிக கவனிப்பைப் பெற்றவர் தேவகாந்தன். இலங்கையில் சாவகச்சேரியில் பிறந்த தேவகாந்தன், சிலகாலம் (1968-74) யாழ்ப்பாணத்தில் வெளியான ‘ஈழநாடு’ பத்திரிகையின் ஆசிரிய பீடத்தில் பணியாற்றினார். பிறகு, 1984 முதல் 2003 வரை அநேகமாக தமிழ்நாட்டிலேயே வாழ்ந்தார். தமிழ்நாட்டில் இருந்தபோது ‘இலக்கு’ சிற்றிதழை நடத்தினார். இதுவரையில் ‘கனவுச் சிறை’, ‘யுத்தத்தின் முதலாம் அதிகாரம்’, ‘விதி’, ‘கதாகாலம்’, ‘லங்காபுரம்’ உள்பட ஆறு நாவல்கள், இரண்டு குறுநாவல்கள், மூன்று சிறுகதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. தமிழ்நாடு தமிழ் வளர்ச்சித்துறை நாவல் …
-
- 0 replies
- 923 views
-
-
"பொங்கும் பூம்புனல்" சுமார் 33 வருடங்களுக்கு முன்பு, ஒலிப்பதிவு செய்யப்பட்டது. கேட்டுப்பாருங்கள்.
-
- 1 reply
- 660 views
-
-
சர்வதேச ஊடகங்களை சொல்லிசையால் திரும்பி பார்க்க வைத்த ஈழத்து இளம் கவிஞர் ஈழத்து இளம் கவிஞர் ஒருவர் சர்வதேச ஊடகங்களை திரும்பி பார்க்க வைத்துள்ளார். அவர் யார்? என்பதை கீழே பார்ப்போம். இசையின் இப்போதைய உச்சமான வடிவம் சொல்லிசை. வார்த்தைகளை இசையுடன் இணைத்து வேகமுடன் ஆனால் அதிக அர்த்தத்துடன் கருத்து ஆழத்துடன் வெளிப்படுத்தும் ஒரு முறை. உலகம் முழுதும் இளைஞர்களால் அதிகம் விரும்பப்படும் ஒரு இசை முறை இது. ஈழத்தில் பிறந்து தற்போது டென்மார்க்கில் வாழ்ந்து வரும் இளம் சொல்லிசை கலைஞன் டேரியல் தன்னுடைய புத…
-
- 0 replies
- 479 views
-
-
நாடகர், ஊடகர், ஏடகர்: பவளவிழா காணும் தாசிசியஸ் எனும் பேராளுமை! கலாநிதி சர்வேந்திரா தாசிசியஸ் மாஸ்டர் தனது 75வது அகவையை இவ் ஆண்டில் (2016) நிறைவு செய்திருக்கிறார். இதனையொட்டி எதிர்வரும் 17.09.2016 அன்று இலண்டன் மாநகரில் பவளவிழா நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாம் சமகாலத்தில் கண்ட ஈழத் தமிழர் தேசத்தின் மிகப்பெரும் ஆளுமைகளில் தாசிசியஸ் மாஸ்டர் முக்கியமானதொருவர் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. அவரது வாழ்க்கையே இதற்கான சாட்சியமாக இருந்து வந்திருக்கிறது. ஒரு நாடகராக, ஊடகராக, ஏடகராக ஈழ தேசத்தின் வரலாற்றில் அவர் தன்னை நிலை நிறுத்தியுள்ளார். அவரது பல்பரிமாண ஆற்றலின் ஊடாக தமிழர் சமூகத்தின் பேராளுமைகளில் ஒன்றாக அவர் பரிமாணம் எடுத்துள்ளார். ஒரு சமூகத்…
-
- 1 reply
- 2k views
-
-
பவளவிழா காணும் பத்மநாப ஐயா: ஓர் அனுபவப் பகிர்வு! ரஞ்சித் ஈழத்து படைப்புலகில் மிகவும் ஆளுமை மிக்க மனிதரான பத்மநாப ஐயா அவர்கள் கடந்த 24ஆம் திகதி தனது 75ஆவது அகவையை நிறைவு செய்துள்ளார். ஈழத்து இலக்கிய உலகில் இலக்கியம், கலை மற்றும் படைப்புலகம் சார்ந்த பத்மநாப ஐயாவின் அளப்பரிய பங்களிப்பை அறியாதவர்கள் எவரும் இருக்கமாட்டார்கள். ஈழத்து தமிழ் இலக்கியத்தின் செழுமைக்கும், வளர்ச்சிக்கும் அயராது தொடர்ந்து தன்னை அர்ப்பணமாக்கியவர் அவர். அந்த வகையில், ஈழத்து தமிழ் இலக்கிய பரப்பில் இருந்து பிரித்துப் பார்க்க முடியாத ஒரு நபராக அவர் இருக்கின்றார். ஆயினும், அவரின் இந்த முகத்துக்கும் அப்பால் அவருடனான அறிமுகம் மற்றும் அனுபவங்களை பகிர்ந்து கொள்வது அவரின்…
-
- 0 replies
- 633 views
-
-
என் மதிப்புக்குரிய மாண்பு மிகு கவிஞர்களே .....வணக்கம் சில பாடல்களை இசை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் எனக்கும் ,அந்தப்பாடல்களுக்குரிய வரிகளை எழுதி தரும் கவியாளர்க்கும் ஏற்படும் உறவு நிலையின் யதார்த்தம் சில வேளைகளில் என்னால் புரிந்து கொள்ள முடியாமல் உள்ளது .இங்கே நான் குறிப்பிடும் கவிகள் யாரும் யாழ் களத்தில் இல்லாதவர்கள் ..........கவிகளாகிய உங்களிடம் இருந்து நான் சில யதார்த்தமான உண்மைகளை .எதிர்காலத்தில் ஓர் புரிந்துணர்வுடன் பல ஆக்கங்களை இணைந்து வழங்க வேண்டுமெனில் ஓர் தெளிவு நிச்சயம் தேவை . தற்சமயம் நான் மாவீரரின் வணக்க பாடல்களின் இசை முயற்சியில் ஈடு பட்டுக்கொண்டிருக்கிறேன் .அந்த வகையில் இங்குள்ள சில கவிகள் எனக்கு பாடல்களை வரிகளாக தந்துள்ளனர் ..........…
-
- 33 replies
- 4.7k views
-
-
பத்திரிகையுலகப் பிதாமகர் ( சாவி நூற்றாண்டு: 100 தகவல்கள் - பகுதி - 1) அன்பு வாசகர்களே... இன்று, ஆகஸ்ட் 10-ம் தேதி, பத்திரிகையுலகப் பிதாமகர் சாவியின் (சா.விஸ்வநாதன்) நூற்றாண்டு. அதையொட்டி, அவரைப் பற்றிய 100 தகவல்கள், ஐந்து பகுதிகளாக இங்கே பதிவிடப்பட்டுள்ளது. முதல் பகுதிக்கான 20 தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது... 1) பத்திரிகையுலகப் பிதாமகர் சா.விஸ்வநாதன் என்கிற சாவி பிறந்தது 10.08.1916-ல்; அமரர் ஆனது 9.02.2001-ல். 2) காஞ்சி மகா பெரியவா அவ்வப்போது போய்த் தங்கும் கலவை என்னும் ஊரிலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது மாம்பாக்கம் என்னும் கிராமம். அங்கே சாமா சுப்பிரமணிய அய்யர், மங்களம் அம்மாள் தம்பதியின் புதல்வராகப் பிறந…
-
- 4 replies
- 4k views
-
-
பத்மஸ்ரீ விருது மறுப்பு - ஜெயமோகன் January 24, 2016 இன்று மாலை ஆறரை மணிக்கு டெல்லியில் இருந்து கலாச்சாரத்துறை உயரதிகாரியான சௌகான் என்பவர் அழைத்தார். எனக்கு வரும் குடியரசுதினத்தில் பத்மஸ்ரீ அளிக்கப்படவிருப்பதாக அறிவித்தார். நான் ஒருமாதம் முன்னரே அதை அறிந்திருந்தேன். சென்னையிலிருந்து என் நெடுங்கால நண்பரும் மொழிபெயர்ப்பாளருமான காவல்துறை உயரதிகாரி கூப்பிட்டு பத்ம விருதுகளுக்கான நுண்ணோக்குப் பட்டியலில் என் பெயர் இருப்பதாகச் சொன்னார். உண்மையில் நான்காண்டுகளுக்கு முன் என் எழுத்துக்களின் தீவிர வாசகரான கலாச்சாரத்துறை உயரதிகாரி ஒருவரால் இந்த எண்ணம் முன்வைக்கப்பட்டது. அவரது முயற்சியால் அப்போது என்பெயர் பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால் அதை நான் ஒரு வேடிக…
-
- 6 replies
- 1.3k views
-
-
மற்றுமொரு ஈழத்து பாடகி லக்ஸ்மி (கனடா) டி. இமானின் இசையில் பாடி உள்ளார். படம் இன்னும் வெளிவரவில்லை. லக்ஸ்மிக்கு வாழ்த்துக்கள். D Imman Page Liked · 19 hrs via Facebook Mentions · Glad to introduce a Srilankan Tamil singing talent Luksimi Sivaneswaralingam from Toronto,Canada for #Bogan She rendered a Romantic number to Mrs.Thamarai's lyric! கர்நாடக சங்கீதத்தை முறையாக பயின்றவரும் மேற்கத்தையை இசையில் பல்கலைகளக பட்டம் பெற்றவர் என்பதும்( doing masters in waterloo) பரத நாட்டியத்தை முறையாக பயின்றவரும் சுப்பர்…
-
- 1 reply
- 602 views
-
-
நீங்கள் இளையராஜாவின் ரசிகரா… இசையின் ரசிகரா..? B.R. மகாதேவன் தமிழர்கள் குழந்தைகளைப் போன்றவர்கள். அவர்களுக்குப் பிடித்த விஷயத்தைப் பற்றி யாரேனும் ஏதேனும் நியாயமான சிறு விமர்சனத்தை முன் வைத்தால்கூட, பொம்மையைப் பறித்தால் அழும் குழந்தைகள்போல் கையையும் காலையும் உதைத்துக் கொண்டு அழுவார்கள். பிஞ்சுக் கைகளால் சட் சட்டென்று நம்மை அடிப்பார்கள். குழந்தைகளைப் போலவே தமிழர்களின் உலக அனுபவமும் வெகு குறைவு என்பதால் எதையும் சொல்லிப் புரியவைக்கவும் முடியாது. தமிழர்களின் இத்தகைய மனநிலை தெரிந்த பிறகும் சில உண்மைகள், சிலரால், சில நேரங்களில் சொல்லப்படுவதுண்டு. அப்படி ஓர் உண்மையைச் சொல்லும் முயற்சியே இது. தூளியிலே ஆட வந்த வானத்து மின் விளக்கே என்ற தாலாட்டுக்கும் லைஃப் ஆஃப் பை படத…
-
- 4 replies
- 1.3k views
-
-
பாட்டு, நடனத்தில் தங்கள் குழந்தைகள் ஜொலிக்க வேண்டும் என்று நினைக்கின்ற பெற்றோர்களுக்கு, குழந்தைகளை அந்தத் துறையில் எப்படி மோல்ட் செய்ய வேண்டும் என்ற தன் அனுபவத்தை ஆலோசனையாக சொல்கிறார் கர்நாட இசைப் பாடகி சுதா ரகுநாதன். "குழந்தைகளுக்கு இயல்பிலேயே இசை மீது விருப்பம் இருக்கும். அதன் காரணமாகவே ரேடியோ/ டி.வி/விழாவில் பாடல்கள் ஒலி, ஒளிபரப்பாகும்போது அதைக் கேட்டு தானாகவே பாடத் தொடங்குவார்கள். அப்போது அவர்களுக்குள் பாடுகிற ரசனை இருக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம். பொதுவாக பாடுகிற பயிற்சியை குழந்தைகளுக்கு 4 அல்லது 5 வயதில் தரலாம். குழந்தைகள் ஆர்வத்தோடு பாடினாலும், ஒரே இடத்தில் சில மணி நேரங்கள் அமருவதற்கு பொறுமை வேண்டும். அப்போதுதான் அவர்கள் கவனமாக பயிற்சிப் பெற முடியும்" என்ற…
-
- 1 reply
- 722 views
-
-
16 வயதுக்குள் 300இற்கும் அதிகமான நிகழ்ச்சிகளில் நாதஸ்வரம் வாசித்த அரிஹரசுதன் (சிலாபம் திண்ணனூரான்) “உங்களிடம் இருக்கும் சக்தியை முயற்சியின் ஊடாக செயல்படுத்தினால் அது முற்றுப்பெறும். அந்த சக்திக்கு அடிப்படையாக இருப்பது முயற்சியின் மூலக்கூறு. அதையே துணிவு என்கிறோம். துணிவு இருந்தாலே போதும். அதுவே இந்த உலகத்தை சிறிதாகக் காட்டும். தாழ்வு மற்றும் அச்சத்துக்கு தளர்வு கொடுங்கள். அப்போது துணிவு பிறந்துவிடும்” என்கிறார் நாதஸ்வர கலைஞர் என். அரிஹரசுதன். ஒரு திருமண நிகழ்வின் சுதன் நாதஸ்வர இசைக்கருவியை தன் வாயில் வைத்து, தன் இரு கைகளின் விரல்க…
-
- 1 reply
- 623 views
-
-
-
- 3 replies
- 881 views
-
-
வன்முறைக்குட்பட்ட பெண்ணை திருமணம் செய்கின்ற பக்குவம் நம் சமுதாயத்தில் எத்தனை பேருக்குண்டு? (கேஷாயினி எட்மண்ட், மீரா, இலங்கை) இலங்கையின் மீன் பாடும் தேன் நாடாம் மட்டக்கிளப்பைச் சேர்ந்த கேஷாயினி எட்மண்ட் "மீரா" என்ற புனைபெயரில் தமிழ் இலக்கியவெளியில் அறிமுகமானவர். , யங் ஏசியா ஊடகநிறுவனத்தில் தயாரிப்பாளராக பணியாற்றிய மீரா தற்போது பெண்ணியம் இணையத்தின் ஆசிரியர்களுள் ஒருவராகவும், சுதந்திர ஊடகவியலாளராகவும் பணியாற்றி வருகின்றார். திரைப்பட மற்றும் ஊடக கல்லூரியில் பட்டப்படிப்பினை பூர்த்தி செய்துள்ள மீரா பல்கலைக்கழகத்தில் கட்டடப்பொறியியல் மாணவியாக கல்விகற்று வருகின்றார். இசை , கவிதை எழுதுதல் சமூக நோக்கு ,ஊடகம் போன்ற துறைகளில் செயல்பட்டு வரும் பன்முக ஆற்றல் உள்…
-
- 1 reply
- 1k views
-
-
-
தவில் மேதை யாழ்ப்பாணம் தெட்சணாமூர்த்தி ஆவணப் படம் மற்றும் நூல் வெளியீடு சிட்னியில் வெகு சிறப்பாக நடந்தேறியது. ஒரு நீண்ட வார இறுதியின் விடுமுறை நாளின் காலை முழுதும் நிகழ்வரங்கம் மக்கள் கூட்டத்தால் நிறைந்திருந்தது இந்த முயற்சியால் கிடைத்த பெரும் நிறைவு. நிகழ்ச்சிக்குச் சிறப்பு விருந்தினர்களாக சிட்னியில் மங்கல நாதஸ்வர, மேள இசை பரப்பும் திரு.மாசிலாமணி.சத்தியமூர்த்தி, திரு.ராகவன் சண்முகநாதன், திரு.கனகசபாபவதி வைத்தீஸ்வரன், திரு.சுப்ரமணியம் முருகதாஸ் ஆகியோரோடு, ஈழத்தில் இருந்து வருகை தந்த தெட்சணாமூர்த்தியின் மகன் திரு.உதயசங்கர், திரு.நாகேந்திரம் பஞ்சாபகேசன், திரு.ரஜீந்திரன் பிச்சையப்பா, திரு.பிரசன்னா நடராஜசுந்தரம். இந்த நிகழ்வில் காணொளி இறுவட்டு, நூல் விற்பனையில் திரட்டி…
-
- 0 replies
- 536 views
-
-
"இவர்களிடம் பேனைகளும் அவர்களிடம் துப்பாக்கிகளும் இருந்தன." - லெ.முருகபூபதி நேர்காணல் – கோமகன் ஈழத்து ,புகலிட இலக்கியப்பரப்பில் லெ.முருகபூபதி தனக்கெனப் பல முத்திரைகளைப் பதித்துக்கொண்டவர். தாயகத்தில் உள்ள எக்ஸ்பிறஸ் நியூஸ் பேர்ப்பர்ஸ் சிலோன் பிறைவேற் லிமிட்டெட் (Express News Papers (Cey) (Pvt) Limited) நிறுவனத்தின் தமிழ் பத்திரிகைகளில் ஒன்றான வீரகேசரியில் 1972 ஆம் ஆண்டு தொடங்கிய இவரது ஊடகப்பணி மற்றும் இலக்கியப்பணி இன்று வரை தொடர்கின்றது. லெ.முருகபூபதி சமூக, கலை இலக்கிய செயற்பாட்டாளராக இருந்து வருகின்றார். நீர்கொழும்பு இலக்கிய வட்டத்தின் செயலாளராகவும், இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தேசியசபை உறுப்பினராகவும், அதனது கொழும்புக் கிளையின் செயலாளராகவும்…
-
- 2 replies
- 1.4k views
-
-
ஈழத்துப் பாடல்கள் - பகுதி ஒன்று எழுபதுகளில் இலங்கையில் இருந்து ஒலித்த தமிழ் பொப்பிசை பாடல்கள் அந்த நாட்டின் கடல்களைக் கடந்தும் அந்த சின்னத் தீவை திரும்பிப் பார்க்க வைத்தவை. துள்ளல் இசை என்றால் இலங்கை இசைதான் என்ற அளவுக்கு அவை பலரையும் ஈர்த்திருந்தன. ஆனால், மேற்கத்தை பாணி இசையாக கருதப்படும் பொப் இசையை மையமாகக் கொண்ட இப்படியான பாடல்கள் மாத்திரந்தான் இலங்கை தமிழர்களின் இசையின் அடையாளம் என்று சொல்லிவிட முடியாது. அங்கு வாழும் தமிழர்களின் இசை முயற்சிகள் என்பன அவற்றையும் கடந்து அவர்களின் வாழ்வின் பல அம்சங்களோடும் கலந்தவை. அவர்களின் தெய்வ வழிபாடுகளை அடிப்படையாகக் கொண்ட சடங்குப் பாடல்கள் அவற்றில் ஓரளவுக்கு மூத்தவை, அதேவேளை…
-
- 1 reply
- 968 views
-
-
இச்சிறுவர்களுக்கு உங்கள் ஆதரவை வழங்குங்கள்
-
- 0 replies
- 562 views
-
-
கவிஞர் காசி ஆனந்தன் அவர்களின் நேர்காணல் சிறகு சிறப்பு நிருபர் கேள்வி: உங்கள் பிறப்பு, இளமைக்காலம், பூர்வீகம் பற்றி கூறுங்கள்? பதில்: நான் தமிழீழத்தின் தென்பகுதியில் மீன்பாடும் தேன்நாடு என்று அழைக்கப்படுகின்ற மட்டக்களப்பு பகுதியில் நாவற்குடா என்னும் சிற்றூரில் பிறந்தேன். சித்திரை மாதம் 4ம் நாள் 1938ம் ஆண்டு நான் பிறந்தேன். 4.4.1938 என்னுடைய பிறந்த நாள். நாவற்குடா என்னுடைய அம்மாவினுடைய ஊர். அதே மட்டக்களப்பில் அமிர்தகலி எனது தந்தையாருடைய ஊர். அங்கேதான் நான் வளர்ந்தேன். இந்த அமிர்தகலி என்கிற சிற்றூரையும், நாவற்குடா என்கிற சிற்றூரையும் இணைப்பதுபோல, மீன்கள் பாடுவதாகச் சொல்லப்படும் அந்த அழகிய நீல உப்பேரி, 15 கல் தொலைவுக்கு நீண்டு நெடிதாகிக் கிடக்கிறது.…
-
- 1 reply
- 1k views
-
-
வணக்கம் உறவுகளே! மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் இலங்கை தமிழர்கள் சில திரைப்படங்களை தயாரித்து இருந்ததும், பின்னர் அந்த படச்சுருள்கள் கலவரங்களின் போது எரிக்கப்பட்டதும் யுத்தகாலத்தில் வன்னிப்பகுதகளிலிருந்து படைப்புகள் வெளியானதும் வரலாறு. 2009க்கு பின் அவ்வப்போது துளிர்விட ஆரம்பித்த ஈழசினிமா துறை தற்போது மெல்ல தவள ஆரம்பித்துள்ளது. இங்கும் தரமான ஒளிப்பதிவு, இந்திய தரத்திலான இசை, வெள்ளித்திரை தரத்திலான படத்தொகுப்பு என நவீன வளங்களுமன் படைப்புகள் வெளிவந்தாலும், எதுவித துறைசார் கல்விகளுமின்றி உலகத்தரமான படைப்புகளை தருவது சவாலானதாகவே இருந்து வருகிறது, நமது கலாசாரம், நமது வாழ்க்கை முறைகள், நமது பேச்சுவழக்கு, நமது வரலாறு, நமது அடையாளம், நமது பிரச்சினைகள போன்ற பல விடையங்கள் நமது …
-
- 5 replies
- 1.7k views
-
-
சிறகிலிருந்து பிரிந்த இறகு... 'பிரமிள்'! இருபதாம் நூற்றாண்டில் தமிழிலக்கியம் கண்ட மாமேதைகளான பாரதிக்கும், புதுமைப்பித்தனுக்கும் பின் தோன்றிய மிக முக்கியமான, ஆனால் கவனிக்கப்படாத ஒரு ஆளுமை தருமு சிவராம் பிரமிள். சிவராமலிங்கம் என்னும் இயற்பெயர் கொண்ட பிரமிள் இலங்கையின் கிழக்கு மாகாணமாகிய திரிகோணமலையில் ஏப்ரல் 20, 1939-ல் பிறந்தார். மிக இளமையிலேயே படைப்பாற்றல் மிக்கவராக விளங்கிய பிரமிள் கவிதை, சிறுகதை, நாடகம், விமர்சனம், தத்துவம், மொழிபெயர்பு, ஓவியம், களிமண் சிற்பம், ஆன்மீகம், ஜோதிடம், எண் கணிதம் என சகல துறைகளிலும் மேதையாக விளங்கினார். சி.சு.செல்லப்பா நடத்திய தமிழின் முன்னோடி சிறுபத்திரிகையான 'எழுத்து' பத்திரிகையில் தன் இருபது வயதில் எழுதத்தொடங்கிய பிரமி…
-
- 0 replies
- 1.2k views
-
-
- ஈழத்துத்தமிழ் இலக்கிய உலகில் முக்கியமான பெண் படைப்பாளிகளிலோருவர் அருண் விஜயராணி. அவர் இன்று மறைந்துள்ளதாக எழுத்தாளர் கே.எஸ்.சுதாகர் முகநூலில் அறிவித்திருந்தார். அவரது மறைவையொட்டி எழுத்தாளர் முருகபூபதி எழுதிய இந்தக்கட்டுரை வெளியாகின்றது. - கன்னிகளின் குரலாக தனது எழுத்தூழியத்தை தொடர்ந்த அருண். விஜயராணியின் வாழ்வும் பணிகளும் இலங்கை வானொலி ‘ விசாலாட்சிப்பாட்டி ‘ இலக்கியத்துறையில் ஆற்றிய பங்களிப்பு ” வணக்கம்…. பாருங்கோ…. என்னத்தைச் சொன்னாலும் பாருங்கோ, உங்கடை விசாலாட்சிப்பாட்டியின்ர கதையைப்போல ஒருத்தரும் சொல்லேலாது. இந்தக்குடுகுடு வயதிலையும் அந்தப்பாட்டி கதைக்கிற கதையளைக் கேட்டால் பாருங்கோ…. வயதுப்பிள்ளைகளுக்கும் ஒரு நப்பாசை தோன்றுது. என்ன இருந்தாலும் திங்கட்…
-
- 0 replies
- 858 views
-
-
அ.கலைச்செல்வன், சிட்னி, அவுஸ்திரேலியா "மதனோற்சவம் ரதியோடுதான்" - 1978 இல் வெளியான சதுரங்கம் என்ற ரஜினியின் படப்பாடலிது. இந்தப் பாடலைக் கேட்டு எத்தனையோ வருடங்களாகின்றன. ஆனால் பாலுவின் குரல் அப்படியேதான் இருக்கின்றது. பாடலின் முதலாவது சரணத்தில் மீனாடும் கண்ணிலிருந்து நானாடவோ.. தேனாடும் செவ்விதழ் தன்னில் நீராடவோ.. என்று பாலு இரண்டு தடவை பாடுகிறார். இரண்டு தடவையும் வித்தியாசமாகப் பாடுகிறார். அதற்குள் இரண்டாவது தடவை நீராடவோ என்று பாடும்போது அதை நீ...ரா..டவோ என்று சில்மிஷம் வேறு வைக்கிறார். அது மட்டுமல்ல.. பாலு உச்சஸ்தாயியில் பாடி முடிக்கவும் வாணி அம்மா , .. புரியாத பெண்மையிது . பூப்போன்ற மென்மையிது.. பொன்னந்தி …
-
- 7 replies
- 4.4k views
-
-
மென்டலின் சிவகுமாரின் லலித ஷேத்ரா" எனும் இசை ஒழுங்கமைப்பு நிறுவனம் கடந்த மூன்று வருடங்களாக அற்புதமான-இதயத்தே ஆழப் பதிந்து நிற்கும் கர்நாடக சாஸ்திரீய இசை நிகழ்சிகளை நடத்தி வருகிறது. இதுவரை எமது நாட்டில் நடந்தேறாத -முற்றிலும் புதியதும், புதுமையானதுமான நிகழ்சிகள் நான்கு நிறைவேறி விட்டன. ஜனார்த்தனின் "saxovil fusion concert" ,விக்குவிநாயகரானின் "சதுர் கட லய சமர்ப்பணம்", இராதாகிருஷ்ணன் "scintillating strings", ராகவேந்திராவின் "பிரணவம்" போன்றவை ஆகும். இவை ஒவ்வொன்றும் ஒன்றிலிருந்து மற்றொன்று முற்றிலும் வேறுபட்டதே. இந் நிகழ்ச்சிகளில் இந்தியாவின் பிரபல வித்துவான்கள் அணிசேர் கலைஞர்களாக பங்கு…
-
- 0 replies
- 766 views
-