Jump to content

லயமும் கானமும் ஒரே கருவியில்


Recommended Posts

san.jpg

 

 

மென்­டலின் சிவ­கு­மாரின் லலித ஷேத்ரா" எனும் இசை ஒழுங்­க­மைப்பு நிறு­வனம் கடந்த மூன்று வரு­டங்­க­ளாக அற்­பு­த­மா­ன-­இ­த­யத்தே ஆழப் பதிந்து நிற்கும் கர்­நா­டக சாஸ்­தி­ரீய இசை நிகழ்­சி­களை நடத்தி வரு­கி­றது.

இது­வரை எமது நாட்டில் நடந்­தே­றா­த -­முற்­றிலும் புதி­யதும், புது­மை­யா­ன­து­மான நிகழ்­சிகள் நான்கு நிறை­வேறி விட்­டன.

ஜனார்த்­தனின் "saxovil fusion concert" ,விக்­கு­வி­நா­ய­க­ரானின்  "சதுர் கட லய சமர்ப்­பணம்", இரா­தா­கி­ருஷ்ணன் "scintillating strings",  ராக­வேந்­தி­ராவின்  "பிர­ணவம்" போன்­றவை ஆகும்.

இவை ஒவ்­வொன்றும் ஒன்­றி­லி­ருந்து மற்­றொன்று முற்­றிலும் வேறுபட்­டதே. இந் நிகழ்ச்­சி­களில் இந்­தி­யாவின் பிர­பல வித்­து­வான்கள் அணிசேர் கலை­ஞர்­க­ளாக பங்­கு­பற்­றி­யி­ருந்­தனர்.

இத்­தனை இசைநிகழ்ச்­சி­க­ளிலும் எமது ஈழத்துக் மென்­டலின் கலைஞர்  சிவ­குமார் இணைந்து இசை வழங்­கி­யது சிறப்­பம்­ச­மாகும்.

முதல் நிகழ்ச்­சியில் உலக தவில் மேதை தட்­ச­ணா­மூர்த்­தியின் புதல்வர்  உத­ய­சங்­கரும் இணைந்து சிறப்­பித்­தமை குறிப்­பிடத் தக்­கது.

இந் நிறு­வனம் ஆரம்­பிக்கப் பட்­டதன் நோக்கம், கலைப் பொக்­கி­ஷங்­களை தன்­ன­கத்தே கொண்டு உலக கலை­ஞர்­க­ளுக்­கெல்லாம் அதனை வாரிவழங்கும் பொக்­கிஷ பூமி­யான இந்­தி­யாவில் இன்று இசை பல்­வேறு பரி­மாணங்­க­ளுடன்  பாரம்­ப­ரிய சாஸ்­தி­ரீயத்துடன் மீறாது வளர்ந்து கொண்டு வரு­கி­றது. உதா­ர­ண­மாக,

கடம், மிரு­தங்கம் போன்ற பக்க வாத்­தி­யங்கள்  முதன்மை வாத்­தி­யங்­க­ளாக இசைக்­கப்­ப­டு­வதும்  உப பக்கவாத்­தி­ய­மான கடத்தை முதன்மை வாத்­தி­ய­மாக்கி அதில் நான்கு கடங்­களை இணைத்து தாள வடி­வ­மி­சைத்தல், பத்து கடங்­களை இணைத்து ஜல­த­ரங்க வடிவில் இசைக்கும் கடதரங்" ,fusion concert வடிவம்   போன்­ற­வற்றை குறிப்­பி­டலாம். அத்­துடன் விசே­ட­மாக  வடி­வ­மைக்­கப்­பட்ட இரட்டை வயலின் (double violin), 5 தந்­தி­களை உடைய வயலின், இரட்டை கெஞ்­சிரா போன்­ற­வற்­றையும் குறிப்­பி­டலாம்  இத்­த­கைய மாற்­றங்­க­ளு­ட­னான கச்­சே­ரி­களை அங்கு சென்று பார்ப்­ப­தற்கும், அவை பற்றி தெரிந்து கொள்­வ­தற்கும் ,அம் மாற்­றங்­களை உரு­வாக்­கிய ஜாம்­ப­வான்­களை நேரில் சந்­திப்­ப­தற்கும் இய­லாத மாண­வர்­க­ளுக்கும் ,இசை ஆர்­வ­லர்­க­ளுக்கும் இத்­தை­கைய கச்­சே­ரி­களை இல­வ­ச­மாக வழங்கி, மாண­வர்­களை அவை பயில ஊக்­கு­விப்­பதே இந் நிறு­வ­னத்தின் பிர­தான நோக்­க­மாகும்.

இந் நிகழ்ச்­சிகள்  அனைத்தும் அனு­ச­ர­ணை­யா­ளர்­களின் உத­வி­யுடன் கொழும்­பிலும்,யாழ்ப்­பா­ணத்­திலும் இல­வ­ச­மா­வ­கவே நடை பெற்று வரு­கின்­றது. இக் கச்­சே­ரிகள் மாண­வர்­களை மனதிற் கொண்டு, சாதா­ரண கச்­சேரி  போன்­றல்­லாது "கச்­சே­ரியும் கற்­பித்­தலும்"போன்றே ஒழுங்கு செய்­யப்­ப­டு­கி­றது.

அந்த வகையில் கச்­சேரி ஆரம்­பித்­த­வுடன் பிர­தான வாத்­தியக் கலைஞர் அவ் வாத்­தியம் சாதா­ரண வாத்­தி­யத்தில் இருந்து வேறு­படும் விதம்,அதன் வடி­வ­மைப்பு, கையாளும் விதம், பக்க வாத்­திய அறி­முகம், அன்­றைய இசை நிகழ்ச்­சியின் வடி­வ­மைப்பு போன்­ற­வற்றை விப­ரிப்­ப­துடன் ஒவ்­வொரு உருப்­படி ஆரம்­பிக்கும் போதும் அதன் இராகம், தாளம் போன்­ற­வற்றை தெரி­விக்­கிறார். கச்­சேரி முடிந்த பின்  மாண­வர்கள் தங்­க­ளது சந்­தே­கங்­களை வித்­து­வான்­க­ளிடம் கேட்டு தெளிவு பெறவும் உரிய வச­தி­களை ஏற்­பாடு செய்­கின்­றனர்.

முதலில் இந்­திய கலை­ஞர்­களை அழைத்து கச்­சே­ரி­களை நடத்தி புது வடி­வங்­களை உள்­வாங்கி பின் எமது கலை­ஞர்­க­ளையும் இணைத்து  அவர்­க­ளையும் இதில் ஈடு­பட வைப்­பதும் இதன் நோக்­க­மாகும் .

அந்­த­வ­கையில் "லலித ஷேத்ரா"வின் ஐந்­தா­வது நிகழ்ச்­சியும் முற்­றிலும் புது­மை­யான ஓர் நிகழ்ச்­சியே!   தமிழ் நல்­லு­லகம் போற்றி வணங்கும் தமிழ் தாத்தா  டாக்டர் . உ. வே. சாமி­நாத ஐயரின் வழித் தோன்­றலும், கிராமி விருது பெற்ற பத்­ம­பூஷண்  விக்கு விநா­ய­கராமின் பிர­தம மாண­வியும், கட வாத்தியம் வாசிக்கும் முதல் பெண்­ம­ணி­யு­மான திரு­மதி. சுகன்யா இராம்­கோபால் முதன் முறை­யாக நம் நாட்­டுக்கு வர­வி­ருக்­கிறார். 

இவர் இசை உலகின்  மிகப் பிர­ப­ல­மான வித்­வான்­க­ளுக்கும், வித்­வாம்­சி­னி­க­ளுக்கும் கடத்­தினை பக்­க­வாத்­ய­மாக வாசித்து  புகழ் பெற்­றுள்ளார் .

இசை மேடையில் ஐந்­தா­வது இடத்தில் இருந்த கடவாத்­தி­யத்­தினை முதல் இடத்­திற்குக்  கொண்­டு­வந்து , இசை உலகில் ஓர் புரட்­சி­யையும் ஏற்­ப­டுத்தி உள்ளார்.

லய­வாத்­தி­ய­மான கடத்தில் இசையை வாசிக்கும் "கட தரங்" எனும் புதிய முறையைக் கையாண்டு உரு­வாக்­கிய வடி­வமே "லய ராக சமர்ப்­பணம்". இந் நிகழ்ச்சி பல நாடு­க­ளிலும் ,மேடை­க­ளிலும்  இர­சி­கர்கள் வியந்து பராட்­டிய ஓர் நிகழ்ச்­சியே!

பல ராகங்­களில், பல தாளங்­களில் கட தரங்­கிற்கு ஏற்­ற­வாறு பல மெட்­டுக்­களை அமைத்து வாசிக்­கிறார்.

"ஸ்திரீ தாள் தரங்" என்ற பெண்கள் அடங்­கிய குழு­வி­ன­ருடன் பல நாடு­க­ளிலும் வாசித்து பாராட்­டு­தல்­களைப்  பெற்­றுள்ளார்.


இப்­பொ­ழுது  ஓர் புது முயற்­சி­யாக மென்­டலின் வாத்­தி­யத்­துடன்  கட தரங் நிகழ்ச்சியை அவர் நடத்த இருப்­பதும் இதுவே முதன் முறை­யாகும் . 

கட தரங் என்­பது ஜல­த­ரங்கம் போன்­ற­தொரு அமைப்பை உடை­ய­தாகும் . ஓவ்­வொரு இரா­கத்தின் ஆரோ­கணம் , அவ­ரோ­க­ணத்­திற்க்கு ஏற்­ற­வாறு கட வாத்­தி­யங்­களை தேர்ந்­தெ­டுத்து, வித வித­மான மெட்­டுக்­களை வாசிக்கும் ஓர் புது­மை­யான முயற்­சி­யாகும் . 

மென்­டலின் சிவ­குமார், வயலின் ஜ்யோத்ஸ்னா மஞ்­சுநாத் இரு­வரும் இசைக்கும் பாடல்­க­ளுக்கு பக்­க­வாத்­தி­ய­மாக லய கலா விபஞ்சி-  .என் . இரா­ம­கி­ருஷ்ணன் மிரு­தங்கம் , திரு­மதி சுகன்யா இராம் கோபால் கடம் ,மற்றும் திரு­மதி. பாக்கி­ய­லக் ஷ்மி கிருஷ்ணா மோர்­சிங்­குடன் இணைந்த ஒரு இனிமையான இசை விருந்தாகும். 

கட தரங் மெட்டுக்கள் வாசிக்கும் போது அதனுடன் மற்ற வாத்தியங்கள் பக்க வாத்தியமாக இணையும்.

கட தரங்கில் தாளம், பாடல், வெவ்வேறு நடைகளில் கற்பனா ஸ்வரங்களின் மூலம் கேள்வி கேட்க, மற்ற வாத்தியங்களில் அதற்கு தகுந்தவாறு பதில் அளித்து இறுதியில் ஒரு பெரும் முத்தாய்ப்பாக ஒலிக்கும். இதைத்  தொடர்ந்து மிருதங்கம், கடம், மோர்சிங் வாத்தியங்களின் தனி ஆவர்த்தனம், கொன்னக்கோல்

உங்கள் அனைவரது உள்ளத்தைக்கொள்ளை கொள்ளும் என்ப தில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. 

http://kalaikesari.lk/article.php?category=features&num=737

 

 

 

 


 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நெடுமாறன் அய்யா எமக்காக செய்தவற்றில் சில 1982ஆம் ஆண்டு இலங்கையில் தமிழ் நூல்கள் அதிகம் இருந்த யாழ் நூலகம் தீக்கிரையாக்கப்பட்டபோது, அவ்விடம் சென்று அதனை ஆவணப்படுத்தி, அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆரிடம் அறிக்கை சமர்ப்பித்தார். அதன்பின், எம்.ஜி.ஆர், இலங்கையில் தமிழர் போராட்டம் குறித்து அன்றைய பிரதமர் இந்திரா காந்தியிடம் பேசினார் என்பது வரலாறு. மேலும், 1985ஆம் ஆண்டு, சிங்களப் படைகளால் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழ்ப்பகுதிகளை, ரகசியமாக பயணம் செய்து காணொலியாகப் பதிந்து, உலகம் முழுக்க தெரியப்படுத்தினார். அதேபோல், 1991ஆம் ஆண்டு இந்திய அமைதிப்படை இலங்கையில் செய்த கொடூரங்களை, ஆவணப்படுத்தி, அன்றைய பிரதமர் வி.பி.சிங்கிடம் இதுகுறித்து பேசி,அவரை திரும்பப்பெற வலியுறுத்தினார். இப்படி தொடர்ந்து ஈழ ஆதரவுப் போராட்டங்களில் ஈடுபட்டார், பழநெடுமாறன்.  நாங்கள் என்ன செய்தோம்.  போராடமால் வெளிநாடு சென்று இணையத்தில் மட்டுமே போராடுகிறோம்.  2010 தேர்தலில் எம்மை அழித்த சரத் பொன்சேகாவுக்கு யாழில் எம்மவர்கள் வழங்கிய அதிக வாக்குகள்.  ஆனால் நாங்கள் தமிழக அரசியல்வாதிகளைப் பார்த்து துரோகிகள் என்கிறோம். இது வேடிக்கை இல்லையா?
    • இப்படி உறைக்க சொல்லுங்கோ பாஸ். அப்பதான் எனக்கும் உறைக்கும். ஏனென்றால், நானும் இப்படித்தான் நினைச்சுக் கொண்டு இருக்கின்றேன். என் மகள் உறைப்பு சாப்பிடவே மாட்டார், ஆனால் மகன் மகளுக்கு நேர் எதிர். இதனால், அவனுக்கு "எந்த சாப்பாட்டைக் கொடுத்தாலும், சாப்பிடுவான்' என்று ஒரே நற்சான்றிதழ் கொடுப்பதுடன், அவன் விரும்பிச் சாப்பிடும் சாப்பாடுகளில், உறைப்பை தூக்கலாக போட்டுத்தான் சமைப்பது. நானும் கடும் உறைப்பு சாப்பிட்டுக் கொண்டு இருந்தனார் - இந்த வருடம் பெப்ரவரி வரைக்கும். பெப் இல் வந்த நிமோனியாவுக்கு எடுத்த  நுண்ணுயிர் எதிர்ப்பியால் / Antibiotics , மிளகாய்த் தூள் கொஞ்சம் கூடப் போட்டு சமைத்தால்.... பிச்சுக் கொண்டு போகுது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.