விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
ருவான்டா கிரிக்கெட் வீரர் உலக சாதனை சிறிய ஆப்ரிக்க நாடான ருவாண்டாவின் கிரிக்கெட் அணியின் தலைவர் புதிய உலக சாதனை ஒன்றை படைத்துள்ளார். சாதனைப் படைத்துள்ள எரிக் துசீங்கிஸிமானா வலைப்பயிற்சியில் இதுவரை சாதனையாக இருந்த 51 மணி நேரத்தை எரிக் துசீங்கிஸிமானா முறியடித்துள்ளார். ருவாண்டாவில் முதலாவது சர்வதேச கிரிக்கெட் மைதானம் ஒன்றை கட்டுவதற்கு நிதி திரட்டும் நோக்கிலேயே தொடர்ச்சியாக அவர் வலைப்பயிற்சியில் ஈடுபட்டார். அந்த நாட்டில் கிரிக்கெட் விளையாட்டு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் மேலும் ஒரு நடவடிக்கையாக இது பார்க்கப்படுகின்றது. இப்படியான நடவடிக்கைகள் மூலமாக ருவாண்டாவில் மேலும் பலர் கிரிக்கெட் விளையாட்டை முன்னெடுக்க …
-
- 0 replies
- 606 views
-
-
ஆஸி. தொடருக்கு முன் சில சோதனை முயற்சிகளைச் செய்ய தோனி முடிவு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நாளை (புதன்கிழமை) கொச்சியில் முதல் ஒருநாள் போட்டி தொடங்கவுள்ள நிலையில், சில சோதனை முயற்சிகளை செய்து பார்க்க முடிவெடுத்திருப்பதாக கேப்டன் தோனி தெரிவித்துள்ளார். இன்று போட்டிக்கு முந்தைய வழக்கமான செய்தியாளர்கள் சந்திப்பில் தோனி கூறும்போது, “நாம் மிகப்பெரிய முன்புலத்தை பார்க்க விரும்புகிறோம். ஆகவே இந்தத் தொடரில் சில புதிய முயற்சிகளை முயற்சி செய்து பார்க்கவுள்ளோம். இப்போது செய்யாமல் ஆஸ்திரேலியாவுக்குச் சென்ற பிறகு இதனை அப்பொழுதே செய்திருக்கலாம் என்று நினைப்பதைவிட இப்போதே சில சோதனை முயற்சிகளை செய்து பார்க்கலாம் என்று தோன்றுகிறது. நம் வீரர்கள் என்ன வழங்குகிறார்கள் என்பதையும் என்ன…
-
- 0 replies
- 606 views
-
-
70 வயதிலும் இத்தனை பதக்கங்கள்... ஆசிய தடகளப் போட்டியில் அசத்திய கோவை வீராங்கனை! கடந்த மே மாதம் சிங்கப்பூரில் நடைபெற்ற 19 வது ஆசிய தடகளப் போட்டியில், இந்தியாவுக்காக 2 தங்கம் மற்றும் ஒரு வெண்கல பதக்கங்களை வென்று பெருமிதத்துடன் திரும்பியிருக்கிறார் கோவை, பீளமேடு பகுதியைச் சேர்ந்த லட்சுமி லோகநாதன். இவருக்கு வயது 70 என்பதுதான் இதில் ஹைலைட். ஆம், இவர் பங்குபெற்றது முதியோருக்கான தடகளப் போட்டிகள்! ''சாதிக்க முயற்சி மட்டும் இருந்தால்போதும், வயது என்பது ஒரு பொருட்டே இல்லை'' என உற்சாகம் பொங்கப் பேசுகிறார், லட்சுமி லோகநாதன். ''நான் என் வீட்டுக்கு ஒரே பெண். ஒவ்வொரு முறை விளையாட்டு போட்டிக்கு போகும்போதும் வீட்டில் போராட்டம்தான். பெண் என்பதைக் காரணம…
-
- 1 reply
- 606 views
-
-
ஐபிஎல் சூதாட்ட வழக்கு: ஸ்ரீசாந்த் உள்ளிட்ட 19 பேருக்கும் பிணை ஐபிஎல் போட்டிகளில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கைதான இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஸ்ரீசாந்த் உள்ளிட்ட மூவர், மற்றும் இடைத்தரகர்கள், புக்கிகள் என்று மொத்தம் 19 பேருக்கு டெல்லி நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. பிணை வழங்காமல் இருக்கும்படியான போதிய ஆதாரங்கள் இல்லை என்றும் நீதிமன்றம் கூரியதாகத் தெறிய வருகிறது. நடந்து முடிந்த 6வது ஐபிஎல் போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த வீரர்கள் ஸ்ரீசாந்த் உள்ளிட்ட மூன்று பேர், ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட்டதற்கான வீடியோ ஆதாரங்கள், மற்றும் தொலை பேசி உரையாடல்கள் கிடைத்துள்ளதாக கூறி, டெல்லி போலீசார் மூவரையும் அதிரடியாக கைது செய்து விசாரித்து வந்தனர். இவ…
-
- 0 replies
- 606 views
-
-
டெஸ்ட கிரிக்கெட் வரலாற்றில் முதல் நான்கு வீரர்கள் சதம் குவித்து சாதனை (பாகிஸ்தானிலிருந்து நெவில் அன்தனி) இலங்கைக்கு எதிராக கராச்சி தேசிய விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் இரண்டாவதும் தீர்மானமிக்கதுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானின் முதல் நான்கு துடுப்பாட்ட வீரர்கள் சதங்கள் குவித்து பாகிஸ்தானுக்கான டெஸ்ட் கிரிக்கெட் சாதனை ஒன்றை நிலைநாட்டினர். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பாகிஸ்தானின் முதல் நான்கு வீரர்கள் சதம் குவித்தமை இதுவே முதல் தடவையாகும். மேலும் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பங்களாதேஷுக்கு எதிராக டாக்காவில் 2007 இல் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்தியாவின் முதல் நான்கு வீரர்களான தினேஷ் கார்த்திக் (129), வசிம் …
-
- 0 replies
- 606 views
-
-
ஜன.27ல் யு-19 உலககோப்பை 19 வயதுக்குட்பட்டோருக்கான உலககோப்பை கிரிக்கெட் வரும் ஜனவரி மாதம் 27ம் தேதி முதல் பிப்ரவரி 14ம் தேதி வரை வங்கதேசத்தில் நடைபெறுகிறது. இதற்கான போட்டி அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது. மொத்தம் 16 அணிகள் கலந்துகொள்கிறது. இவை நான்கு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. ஏ பிரிவில் நடப்பு சாம்பியன் தென் ஆப்ரிக்கா, வங்கதேசம், ஸ்காட்லாந்து, நமீபியா அணிகளும், பி பிரிவில் பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், கனடா ஆகிய அணிகளும் சி பிரிவில் இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், ஜிம்பாப்வே, பிஜி அணிகளும் டி பிரிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, நேபாளம் அணிகளும் இடம் பெற்றுள்ளன. 19 நாட்கள் நடைபெறும் தொடரின் முதல் ஆட்டத்தில் 27ம் தேதி நடப்பு சாம்பியன் தென்…
-
- 0 replies
- 606 views
-
-
ஏடிபி டூர் பைனல்ஸ் போட்டி: பெடரரை வீழ்த்தி 4வது முறையாக பட்டம் வென்றார் ஜோகோவிக் லண்டனில் நடைபெற்ற ஏடிபி டூர் பைனல்ஸில் சாம்பியன் பட்டம் வென்ற செர்பியாவின் ஜோகோவிக். படம்: ஏஎஃப்பி 2வது இடம் பிடித்த பெடரர். படம்: ஏஎஃப்பி ஏடிபி டூர் பைனல்ஸ் இறுதிப்போட்டி யில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் பெடரரை வீழ்த்தி நம்பர் ஒன் வீரரான செர்பியாவின் ஜோகோ விக் பட்டம் வென்றார். ஏடிபி டூர் பைனல்ஸில் அவர் தொடர்ச்சியாக பட்டம் வெல்வது இது 4வது முறை யாகும். லண்டனில் ஏடிபி டூர் பைனல்ஸ் போட்டி நடைபெற்றது. தரவரிசையில் முதல் 8 இடங்களில் உள்…
-
- 0 replies
- 606 views
-
-
கிரிக்கெட்டுக்கு அழிவு காலம்! இயான் சேப்பல் Written by Tamil // February 2, 2014 // டுவென்டி- 20 போட்டிகளால் கிரிக்கெட்டுக்கு பேரழிவு என அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் அணித்தலைவர் இயான் சேப்பல் தெரிவித்துள்ளார். சர்வதேச அளவில் டெஸ்ட்(5 நாள்), ஒருநாள் போட்டி(50 ஓவர்) மற்றும் டுவென்டி- 20 ஓவர் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் 3 மணிநேரத்திற்குள் முடியும் 20 ஓவர் போட்டியை தான் ரசிகர்கள் அதிகளவில் விரும்புகிறார்கள். துடுப்பாட்ட வீரர்கள் பந்தை சிக்சர், பவுண்டரிகளாய் அடிப்பதை தான் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள், இதனால் 20 ஓவர் போட்டிக்கு அதிக அளவில் ஆதரவு காணப்படுகிறது. இது கிரிக்கெட்டுக்கு மிகப்பெரிய பேரழிவு என அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் அணித்தலைவர் இயான் சேப்பல…
-
- 0 replies
- 605 views
-
-
போர்ச்சுகலுக்கு யூரோ கோப்பையை வாங்கிக் கொடுத்தது சிறைக் கைதி மகன்! அண்மையில் நடந்து முடிந்த ஐரோப்பிய கோப்பை கால்பந்து தொடரில், போர்ச்சுகல் அணி கோப்பையை வென்றது. பிரான்ஸ் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில், 109வது நிமிடத்தில் ஈடர் அடித்த கோலால், போர்ச்சுகல் அணி, ஐரோப்பிய கோப்பையுடன் நாடு திரும்பியது. இந்த ஒரே கோலால், ஒரே நாளில் போர்ச்சுகல் அணியின் கேப்டன் ரொனால்டோவுக்கு இணையாக ஈடரும் பிரபலமாகி விட்டார். ஆனால் ஈடர் வாழ்க்கையில் சந்தித்த இன்னல்கள் அதிகம். ஈடருக்கு 12 வயதாக இருக்கும் போது, அவரது தந்தை கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார். இங்கிலாந்தில் வசித்து வந்த அவர், ஈடரின் சித்தியை கொலை செய்த வழக்கில் 16 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.…
-
- 4 replies
- 605 views
-
-
யூனிஸ் கான் - புத்துயிர் தரும் சாதனை நாயகன் யூனிஸ் கான் தனது 14 ஆண்டு கால கிரிக்கெட் வாழ்க்கையில் சந்தித்த ஏற்ற இறக்கங்கள், விமர்சனங்கள், சர்ச்சைகள் ஏராளம். தனிப்பட்ட வாழ்க்கையை எடுத்துக்கொண்டால் தந்தை மற்றும் இரு சகோதரர்களின் மரணம் என நிறைய இழப்புகளைச் சந்தித்தவர். ஆனால் அவை எதுவும் தனது கிரிக்கெட் வாழ்க்கையை பாதிக்காமல் பார்த்துக்கொண்டவர் யூனிஸ் கான். அதுதான் இன்று அவரை பாகிஸ்தானின் தலைசிறந்த டெஸ்ட் வீரராக உருவாக்கியதோடு, உலக டெஸ்ட் அரங்கில் அவருக்கென்று தனியொரு இடத்தைப் பெற்றுத் தந்திருக்கிறது. தேர்வாளர்களுக்கு பதிலடி சில நேரங்களில் அவர் சர்ச்சையில் சிக்கியபோது அவரை நீக்கிய பாகிஸ் தான் கிரிக்கெட் வாரியம், பின்னர் அவர் இல்லாமல் பாகிஸ்தான் அணியால் வெற்றி பெற …
-
- 1 reply
- 605 views
-
-
இலங்கைக்கு வெற்றியைக் கொண்டுவருமா இருபதுக்கு-20 போட்டிகள்? நியூசிலாந்து, இலங்கை அணிகளுக்கிடையிலான 2 போட்டிகள் கொண்ட இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகள் கொண்ட தொடர், நாளை இடம்பெறவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கவுள்ளது. டெஸ்ட் தொடரையும் ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரையும் இழந்த இலங்கை அணி, தான் உலகத் தரவரிசையில் முதலிடம் வகிக்கும் இருபதுக்கு-20 போட்டிகளிலாவது வெற்றிபெற எதிர்பார்த்துள்ளது. நாளைய போட்டியில், நியூசிலாந்தின் டிம் சௌதி பங்குபெற மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளதோடு, அவருக்குப் பதிலாக, ஒருநாள் தொடரில் இலங்கைக்குத் தலையிடியாக அமைந்த மற் ஹென்றி சேர்க்கப்பட்டுள்ளார். அவர், 3 போட்டிகளில் 13 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார். …
-
- 7 replies
- 605 views
-
-
ஆபாச வார்த்தை பிரயோகத்திற்காக ஜொஸ் பட்லர் மீது அபராதம் ; By Akeel Shihab - சர்வதேச கிரிக்கெட் பேரவையினுடைய ஒழுக்க விதிமுறையை மீறிய குற்றச்சாட்டில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் விக்கெட்காப்பு துடுப்பாட்ட வீரரான ஜொஸ் பட்லருக்கு ஐ.சி.சி இனால் போட்டி ஊதியத்தில் 15 சதவீத குறைந்தபட்ச தொகையும், ஒரு தகுதி இழப்பீட்டு புள்ளியும் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் டெஸ்ட் தொடர், ஒருநாள் சர்வதேச தொடர் மற்றும் டி20 சர்வதேச தொடர் ஆகிய மூவகையான கிரிக்கெட் தொடர்களிலும் பங்கேற்பதற்காக இங்கிலாந்து கிரிக்கெட் அணியானது தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி…
-
- 0 replies
- 605 views
-
-
ஜயசூரியவை பின்னுக்கு தள்ளிய சங்கா புதிய சாதனை இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரரும் சாதனை நாயகனுமான குமார் சங்கக்கார இன்று புதிய மைல்கல் ஒன்றை எட்டினார். சர்வதேச ஒரு நாள் அரங்கில் அதி கூடுதலாக ஓட்டங்களை பெற்றவர்கள் தரவரிசையில் இலங்கை அணியின் முன்னாள் வீரர் சனத் ஜயசூரியவை பின்னுக்குத் தள்ளி மூன்றாவது இடத்தை கைப்பற்றி குமார் சங்கக்கார சாதனை படைத்துள்ளார் . நியூசிலாந்துக்கு எதிரான இன்றைய நான்காவது ஒருநாள் போட்டியில் 76 ஓட்டங்களை பெற்றதன் மூலமே இந்த இலக்கை அடைந்துள்ளார். சர்வதேச ஒருநாள் அரங்கில் 394 போட்டிகளில் விளையாடியுள்ள குமார் சங்கக்கார, 20 சதங்கள் 92 அரைச் சதங்கள் அடங்கலாக 13490 ஓட்டங்களை பெற்றுள்ளார். மேலும் 40.63 சராசரியையும் கொண்டுள்ளார். சர்வ…
-
- 0 replies
- 605 views
-
-
மட்டக்களப்பு மாவட்ட கராத்தே சுற்றுப்போட்டி இன்று காலை மட்டக்களப்பு புனித மைக்கேல் தேசிய பாடசாலையின் உள்ளக அரங்கில் ஆரம்பமானது. மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் ஈஸ்பரன் தலைமையில் நடைபெற்ற இந்த விளையாட்டு நிகழ்வின் ஆரம்ப நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட செயலக உதவி மாவட்ட செயலாளர் ரங்கநாதன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். இந்த கராத்தே சுற்றுப்போட்டியில் மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் இருந்து ஒன்பது விளையாட்டு கழகங்களின் வீரர்கள் கலந்துகொண்டனர். இதன்போது ஆண்,வீராங்கணைகள் பெருமளவில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.இந்த சுற்றுப்போட்டியில் தெரிவுசெய்யப்படும் வீரர்கள் மாகாண போட்டிக்கு தெரிவுசெய்யப்படுவார்கள். இந்த கராத்தே சுற்றுப்போட்டிக்கா…
-
- 1 reply
- 605 views
-
-
தென்னாபிரிக்காவை வீழ்த்தி பங்களாதேஷ் அசத்தல் வெற்றி! நடைபெற்றுவரும் உலகக் கிண்ணத் தொடரின் 5ஆவது போட்டியில் பங்களாதேஷ் அணி தென்னாபிரிக்காவை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பெற்றது. அந்தவகையில் பங்களாதேஷ் அணி 21 ஓட்டங்களால் வெற்றியைப் பதிவுசெய்தது. லண்டன், ஹெனிங்ரன் ஒவல் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் களத்தடுப்பைத் தேர்வுசெய்தது. அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி, அனைத்து வீரர்களின் பங்களிப்புடன் சவாலான ஓட்டத்தை குவித்துள்ளது. அந்தவகையில், அவ்வணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 330 ஓட்டங்களைப் பெற்றது. அணி சார்பாக, ரஹிம் அதிர…
-
- 0 replies
- 605 views
-
-
By லவனிஸ் யாழ்ப்பாணம் தெல்லிப்பழை நாமகள் விளையாட்டுக்கழகம் நடாத்திய வடக்கின் நாயகன் வெற்றிக்கிண்ணத்துக்கான கால்பந்தாட்டதொடரில் இளவாலை யங் ஹென்றிஸ் விளையாட்டுக் கழக அணி கிண்ணம் வென்றது. தெல்லிப்பழை நாமகள் விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம் பெற்ற இறுதியாட்டத்தில் ஆனைக்கோகோட்டை யூனியன் விளையாட்டுக்கழக அணியை எதிர்த்து இளவாலை யங் ஹென்றிஸ் விளையாட்டுக் கழக அணி மோதியது.
-
- 0 replies
- 604 views
-
-
வீரர்களின் உடலில் ஜிபிஎஸ் கருவியைப் பொருத்தி உலகக்கோப்பைக்கு தயாராகும் இலங்கை அணி 2019-ம் ஆண்டு உலகக்கோப்பைக்கு தயார் செய்யும் வகையில்இ கிரிக்கெட் வீரர்களின் உடலில் ஜிபிஎஸ் கருவியைப் பொருத்தி அவர்களின் திறன்இ உடல்தகுதிஇ காயம் ஏற்படாமல் தடுத்துல் போன்ற பணிகளை இலங்கை கிரிக்கெட் வாரியம் மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது ஸ்பெயினின் பார்சிலோனா கால்பந்து அணியில் வீரர்களுக்காக செய்யப்பட்ட இந்த அதிநவீன முறை இப்போது இலங்கை வீரர்களுக்காக செய்யப்பட்டுள்ளது இதற்காக இலங்கை கிரிக்கெட் வாரியம் 75 ஆயிரம் அமெரிக்க டொலர்களை செலவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த ஜிபிஎஸ் கருவி இலங்கை வீரர்களின் முதுகுப்பகுதியில் பொ…
-
- 2 replies
- 604 views
-
-
தோனி 7, கோலி 18, அஸ்வின் 99 ஏன்! ஜெர்சி ரகசியம் சொல்லும் இந்திய கில்லிகள்! கிரிக்கெட் வீரர்களின் முக்கியமான அடையாளங்களில் ஒன்று ஜெர்சி எண். தோனியின் 7ம் நம்பர் ஜெர்சி துவங்கி, புதிதாக அணிக்கு அறிமுகமாகியுள்ள ஹர்திக் பாண்ட்யாவின் 228ம் நம்பர் ஜெர்சி வரை நம்பர் ரகசியம் என்ன என்பதை கூறியிருக்கிறார்கள். தோனி தனது பிறந்த தினமான 7ம் தேதியை குறிக்கும் வகையில் 7ம் நம்பர் ஜெர்சியையும், ரோஹித் ஷர்மா தனது அம்மா 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பைக்கு முன் ராசியான எண் என்று 45-ம் நம்பரை அளித்ததாகவும் கூறியுள்ளார். கோலி, "எனது ஜெர்சி எண்களுக்கு பின்னால் பெரிய ராசியெல்லாம் ஒன்றுமில்லை. 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் எனக்கு இந்த எண் வழங்கப்ப…
-
- 1 reply
- 604 views
-
-
சேவக், ஹர்பஜன், உத்தப்பா, பவுல் அவுட் நியாபகம் இருக்கா பாஸ். இன்று தான் அது நடந்தது. #BowlOut #IndVsPak இந்தியா பாகிஸ்தான் போட்டி என்றாலே, கண்டிப்பாக 2007-ம் ஆண்டு நடந்த டி20 போட்டிகள் நினைவிற்கு வரும்.ஃபைனலில் கோப்பை வென்றது ஒருபுறம் என்றால், அந்த பவுல் அவுட் போட்டி வேற லெவல். சமீபத்திய பேட்டி ஒன்றில் பாகிஸ்தானுக்கு எதிரான தனக்குப் பிடித்த போட்டி என பவுல் அவுட் போட்டியைத்தான் குறிப்பிட்டு இருந்தார் முன்னாள் வீரர் சேவக், "இரு பெரும் அணிகள் மோதும் முதல் போட்டி, இப்படி ட்ராவாகும் என யாரும் எதிர்பார்க்கவில்லை.போட்டிக்கு முன்னராகவே பலமுறை ஸ்டம்ப்புகளை அடித்து பயிற்சி செய்துகொண்டு இருந்தோம். நான், உத்தப்பா, ஹர்பஜன் மூவரும் அதிகமுறை பவுல் அவுட்…
-
- 0 replies
- 604 views
-
-
பெர்த்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் படுதோல்வி அடைந்த இந்திய அணியை அந்நாட்டு பத்திரிக்கைகள் கடுமையாக விமர்சித்து செய்திகள் வெளியிட்டுள்ளன. இதில் டெஸ்ட் போட்டிகளில் ரன் எடுக்க தவறிய பேட்ஸ்மேன்களை உதவாக்கரைகள் என்றும், கேப்டன் டோணியை செயலற்றவர் என்றும் பழித்துள்ளன. ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் 0-3 என்ற கணக்கில் படுதோல்வி அடைந்தது. பேட்ஸ்மேன்களின் மோசமான ஆட்டத்தால் இந்திய அணிக்கு தோல்வி ஏற்பட்டது. எனவே இந்திய பேட்ஸ்மேன்கள் உதவாக்கரைகள் என்றும், கேப்டன் டோணி செயலற்றவர் என்றும் ஆஸ்திரேலிய பத்திரிக்கைகள் செய்திகள் வெளியிட்டுள்ளன. இது குறித்து 'தி ஆஸ்திரேலியன்' என்ற பத்திரிக்கையில் வெளியான செய்தியில் கூறியிர…
-
- 1 reply
- 604 views
-
-
யூரோ 2020 பல ஐரோப்பிய நாடுகளில் நடாத்தப்படும் என மிசேல் பிளாட்டினி தெரிவித்துள்ளார். சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். Euro 2020 to be hosted across Europe, Uefa announces: http://www.guardian.co.uk/football/2012/dec/06/euro-2020-across-europe-uefa
-
- 0 replies
- 604 views
-
-
ஓய்வு பெற்றார் இந்தியாவின் ''தங்க மகன்'' அபினவ் பிந்த்ரா ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டிகளிலும் 100 கோடி மக்களைக் கொண்ட நாடு ஒரு தங்கப்பதக்கமாவது வெல்லாதா..? என்ற எதிர்பார்ப்பு அனைவரது கண்களிலும் இருக்கும். சிறிய நாடுகள் கூட இரட்டை இலக்கத்தில் தங்கம் அள்ளும். அப்படிப்பட்ட நாட்களில் ஒருநாள் தனி நபர் பிரிவில் ஒரு இந்தியர் தங்கப்பதக்கம் வென்றார். அதுவும் ஒலிம்பிக் போட்டியில் என்ற செய்தி அனைவரையுமே மகிழ்ச்சியிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தியது என்பதில் சந்தேகமே இல்லை! ஆம், அபினவ் பிந்த்ரா எனும் துபாக்கி சுடும் வீரர்தான் இந்தியாவிற்காகத் தங்கம் வெல்லும் முதல் தனிநபர். ரியோ ஒலிம்பிக்கில் நான்காவது இடம் பிடித்த இவர். தற்போது துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் இருந்து ஓய்வை …
-
- 0 replies
- 604 views
-
-
ஐபிஎல் போட்டியில் பங்கேற்பது கடினம்... சர்வதேச ஆட்டங்கள் காரணமாக மீதமுள்ள ஐபிஎல் ஆட்டங்களில் இங்கிலாந்து வீரர்களால் விளையாட முடியாமல் போகலாம் என ராஜஸ்தான் ராயல்ஸ் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் கூறியுள்ளார். கொரோனா சூழல் காரணமாக கடந்த வருட ஐபிஎல் போட்டி, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இந்த வருடப் போட்டி இந்தியாவிலேயே நடத்தப்பட்டது. சென்னை, மும்பை, கொல்கத்தா, ஆமதாபாத், தில்லி, பெங்களூர் ஆகிய ஆறு நகரங்களில் ஐபிஎல் போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆரம்பத்தில் சென்னை, மும்பையில் ஐபிஎல் ஆட்டங்கள் நடைபெற்றன. அடுத்ததாக ஆமதாபாத், தில்லியில் ஆட்டங்கள் நடைபெற்று வந்தன. கொரோனா பாதுகாப்பு வளையத்தில் இருந்தும் சில வீரா்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து ஐப…
-
- 0 replies
- 604 views
-
-
மெஸ்சியை வீழ்த்தி, தலைசிறந்த வீரர் விருதை வென்ற ரொனால்டோ! ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு, வருடத்தின் சிறந்த வீரரை ஒவ்வொரு ஆண்டும் தேர்ந்தெடுத்து விருது வழங்கி சிறப்பிக்கும். இந்த வருடத்தின் தலைசிறந்த வீரர் விருதை ரொனால்டோ பெற்றார். கால்பந்து உலகின் தலைசிறந்த வீரர்கள் பட்டியலில் போர்ச்சுகல் கேப்டனும், ரியல் மாட்ரிட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரருமான ரொனால்டோ -க்கு முக்கிய இடம் உண்டு. இந்த வருடம் தனது சிறப்பான ஆட்டத்தினால் ரியல் மாட்ரிட் அணியை தொடர்ந்து இரண்டாவது முறையாக சாம்பியன்ஸ் லீக் கோப்பையை கைப்பற்ற வைத்தார். இந்த தொடரில் மட்டும், அவர் 12 கோல் அடித்து ரசிகர்களை மகிழ்வித்தார். இந்த வருடத்திற்கான சிறந்த வீரர…
-
- 3 replies
- 603 views
-
-
முதல் ஒருநாள் போட்டி ; ஆப்கானிஸ்தானிடம் பங்களாதேஷ் அதிர்ச்சி தோல்வி (படங்கள் இணைப்பு) பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் 2 விக்கட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி சகல விக்கட்டுகளையும் இழந்து 208 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது. பங்களாதேஷ் அணி சார்பில் மொஷ்டைக் ஹுசைன் 45 ஒட்டங்களை பெற்றுக்கொண்டார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 49.4 ஓவர்களில் 212 ஓட்டங்களை பெற்று வெற்றிபெற்றது. ஆப்கானிஸ்தான் அணி சார்பில் அஸ்கார் ஸ்டனிக்ஷாய் 57 ஒட்டங்களை பெற்றுக்கொண்டார். http://www…
-
- 1 reply
- 603 views
-