Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. 43 ஆண்டுகளின் பின் வடக்கிற்கு பூப்பந்தாட்ட தொடரில் சம்பியன் May 1, 2022 தேசிய ரீதியில் நடத்தப்பட்ட பூப்பந்தாட்ட தொடரில் 43 வருடங்களின் பின்னர் வடக்கு மாகாணத்திற்கான சம்பியன் பட்டத்தை யாழ்.மாவட்டத்தை சேர்ந்த சற்குணம் காண்டீபன் பெற்றுக் கொடுத்துள்ளார். இலங்கை பூப்பந்தாட்ட சம்மேளனம் நடத்திய இவ்வாண்டுக்கான தேசிய ரீதியான 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான பூப்பந்தாட்ட தொடரின் இறுதி போட்டி சனிக்கிழமை நடைபெற்றது. இப் போட்டியில் வடமாகாணம் சார்பில் சற்குணம் காண்டீபன் மேல் மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தியவரை எதிர்த்து விளையாடி சம்பியன் பட்டத்தை தனதாக்கினார். அது வடமாகாணத்திற்கு 43 வருடங்களின் பின் கிடைத்த சம்பியன் பட்டம் என்பது கு…

    • 1 reply
    • 488 views
  2. ரஷ்ய, பெலாரஸ் வீரர்களுக்கு விம்பிள்டனில் விளையாடத் தடை (என்.வீ.ஏ.) ரஷ்யா மற்றும் பெலாரஸ் வீர, வீராங்கனைகளுக்கு விம்பிள்டனில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. உக்ரேன் மீதான படையெடுப்புக்கு ஆட்சேபமும் எதிர்ப்பும் தெரிவிக்கும் வகையில் அந்த இரண்டு நாட்டு வீர, வீராங்கனைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அகில இங்கிலாந்து லோன் டென்னிஸ் கழகம் அறிவித்துள்ளது. ஆண்களுக்கான தரவரிசையில் இரண்டாம் இடத்திலுள்ள ரஷ்ய வீரர் டெனில் மெட்வடேவ், பெண்களுக்கான தரவரிசையில் நான்காம் இடத்திலுள்ள பெலாரஸ் வீராங்கனை அரினா சபாலென்கா ஆகியோர் பாதிக்கப்படும் உயரிய நிலை வீர, வீராங்கனையாவர். ஐக்கிய இராச்சியத்தில் நடைபெறும் சகலவிதமான புல்தரை டென்னிஸ் போட்டிகளிலும் அந்த நாடுகளின் வீர, வீர…

  3. புதிதாக பிறந்த ஆண் குழந்தை உயிரிழப்பு - கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு ஆறுதல் கூறும் ரசிகர்கள் BBCCopyright: BBC பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு புதிதாக பிறந்த ஆண் குழந்தை உயிரிழந்துவிட்டதாக, அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள அவருடைய ரசிகர்கள், ரொனால்டோவுக்கும் அவருடைய மனைவிக்கும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். போர்ச்சுகல் சர்வதேச அணி மற்றும் பிரீமியர் லீகின் மான்செஸ்டர் யுனைடெட் அணியின் நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆவார். இவர் கடந்த அக்டோபர் மாதம் தனக்கும் தன் மனைவி ஜார்ஜினா ரோட்ரிக்ஸ்சுக்கும் இரட்டை குழந்தைகள் பிறக்க இருப…

  4. எம்.எஸ். தோனி - வெற்றிக்கும் தோல்விக்கும் இடையில் ஆயிரம் வழிகள் சென்னை அணியின் தலைமையில் இருந்து தோனி விலகுகிறார் என்பதைக் கேட்க பலருக்கும் நம்ப முடியாமல் இருக்கிறது, ஆனால் இதை பலரும் எதிர்பார்த்திருந்தனர் தான், இருந்தாலும் அதை ‘நம்ப முடியவில்லை’. அடுத்தொரு ஆண்டு, அதற்குப் பிறகு மற்றொரு ஆண்டும், தோனி தலைமை தாங்கி இருந்தாலும் அவரால் மற்றொரு கோப்பையை சென்னைக்கு வாங்கிக் கொடுத்திருக்க முடியும் என அவர்கள் அறிவார்கள். ஆனால் அவருக்கு வயதாகிக் கொண்டே போகிறது, ஆனாலும் வயதின் எதிர்பார்ப்புகளை மீறி தம்மை ஆச்சரியப்படுத்தும் திறன் படைத்தவரும் அல்லவா தோனி! கடைசியில், ஜடேஜா இனி தலைவராக இருந்தால் என்ன கீப்பராக இருந்து அவரை வழிநடத்துபவராக தோனி …

  5. மிஸ்டர் ஐ.பி.எல் தினேஷ் கார்த்திக்… இந்திய அணிக்கு திரும்புவாரா? 2018-2019 காலகட்டத்தில் இந்தியாவுக்கு 6 ஆவது ஆர்டரில் களத்தில் இறங்கி 56.5 சராசரியை வைத்திருந்தவர் தினேஷ் கார்த்திக். ஸ்டிரைக் ரேட் 161.4 வைத்திருந்தார். witter (Opens in new window) Click to share on Facebook (Opens in new window) Click to share on WhatsApp (Opens in new window) பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள தினேஷ் கார்த்திக் அதிரடியாக விளையாடி அணியின் வெற்றிக்கு பங்களித்து வருகிறார். நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியை 16 ரன்கள் வித்தியாசத்தில் வ…

    • 0 replies
    • 284 views
  6. இலங்கை கிரிக்கெட் அணியில் நவீட் நவாஸ்! இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் உதவிப் பயிற்றுவிப்பாளராக இலங்கை டெஸ்ட் அணியின் முன்னாள் வீரர் நவீட் நவாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் பங்களாதேஷ் தொடருக்காக இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேபோல், வேகபந்து பயிற்சியாளராக இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சமிந்த வாஸும், சுழற்பந்து பயிற்சியாளராக பியல் விஜேதுங்கவும் நியமிக்கப்பட்டுள்ளது. மேலும், களத்தடுப்பு மற்றும் துணை பயிற்சியாளராக முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் மனோஜ் அபேவிக்கிரம நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. …

    • 0 replies
    • 400 views
  7. இருபதுக்கு 20 உலகக் கிண்ணத்தில் 20 அணிகள் மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரில் 20 அணிகளை தெரிவு செய்ய ஐ,சி,சி, தீர்மானித்துள்ளது. அதன்படி, 12 அணிகள் நேரடியாகத் தகுதிபெறும், மேலும் 8 அணிகள் தகுதிச் சுற்றுப்போட்டியின் பின்னர் தேர்ந்தெடுக்கப்படும். இந்த ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடைபெறும் இருபதுக்கு 20 உலகக் கிண்ணத்தில் முதல் எட்டு அணிகளில் போட்டியை நடத்தும் நாடுகளான மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்கா ஆகியவை அடங்கும். மேலும், மீதமுள்ள இரு அணிகளும் இந்த ஆண்டு நவம்பர் 14 ஆம் திகதி நடைபெறும் ஐ.சி.சி. கிரிக்கெட் உலகக் கிண்ணத்தில் விளையாடும். உலகக் கிண்ண இருபதுக்கு 2…

  8. அறுபதிகளிலும் எழுபதுகளிலும் ஆடிய பலமான பரி. யோவான் உதைபந்தாட்ட அணிகளிற்குக் கிட்டாத ஓரு அரிய சாதனையாக, யாழ்ப்பாண மாவட்ட பாடசாலைகள் உதைபந்தாட்டச் சம்பியனாகும் பெருமை, 1986ம் ஆண்டில் பார்த்திபன் தலைமை தாங்கிய பரி. யோவான் கல்லூரி உதைபந்தாட்ட அணிக்குக் கிட்டியது. இன்று பரி. யோவானின் Principal ஆகத் திகழும் துஷிதரன் அவர்களும், அண்மையில் காலமான நேசகுமார் அண்ணாவும் கூட அந்த உதைபந்தாட்ட அணியில் ஆடியிருந்தார்கள். 1986ல் பரி யோவானின் 1st XI உதைபந்தாட்ட அணியின் பயிற்றுவிப்பாளர் வேறு யாருமல்ல, 1979 இல் பரி. யோவானின் உதைபந்தாட்ட அணிக்குத் தலைமை தாங்கிய அருள்தாசன் மாஸ்டர் தான். விடுதலைப் புலிகளின் மாணவர் அமைப்பான SOLT (Students Organisation of Liberation Tigers), ய…

  9. Warnie நாங்கள் வாழும் காலத்தில், வாழ்ந்து, எங்களை சர்வதேச கிரிக்கெட்டை ரசித்து ருசித்து, மகிழ்ந்திருக்கும் பொழுதுகளை படைத்த, கடந்த காலத்தின் கதாநாயகர்களில் ஒருவரான Shane Warne இன் இறுதி வணக்க நிகழ்வில். ,அதுவும் மெல்பேர்ண்காரனான Warne இன் backyard ஆன MCG இல் பங்குபெறும் வாய்ப்புக் கிட்டியது. MCG இல் நடைபெறும் Boxing Day Test போட்டிகளில் Warnie பந்து வீசுவது உண்மைலேயே ஒரு rock concert performance மாதிரித் தான் இருக்கும். Great Southern Stand அடியில், 3rd Man இலோ, Deep fine leg இலோ field பண்ணும் Warnie ஐ, பியர் அடித்துக் கொண்டு கும்மாளமடிக்கும் ரசிகர்களின் கூட்டம் பம்பலாகச் சீண்டும். Warnie உம் சிரித்துக் கொண்டே கையசைத்து திரும்பவும் ஏதோ சொ…

    • 1 reply
    • 469 views
  10. தமிழ்ப் பெண்ணை மணந்த கிரிக்கெட் வீரர்! (படங்கள்) னி செய்திகள் விளையாட்டு பிரபல கிரிக்கெட் வீரர் மேக்ஸ்வெல், அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வினி ராமனைத் திருமணம் செய்துள்ளார். அவுஸ்திரேலியத் தமிழ்ப் பெண் வினி ராமனை 2017 முதல் காதலித்து வருகிறார் மேக்ஸ்வெல். கடந்த வருடம் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்நிலையில் கடந்த வெள்ளியன்று இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணப் புகைப்படங்களை இருவரும் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்கள். இந்தியப் பெண்ணை மணந்த 2 வது ஆஸி. கிரிக்கெட் வீரர், மேக்ஸ்வெல். இதற்கு முன்பு ஆஸி. வீரர் ஷான் டைட், மஷும் சின்ஹா என்கிற இந்தியப் பெண்ணைத் திருமணம் செய்தார்.…

    • 10 replies
    • 822 views
  11. அவுஸ்திரேலிய சுழல் பந்துவீச்சாளர் ஷேன் வோர்ண் 52 வயதில் மாரடைப்பால் மரணம் Shane Warne: Australia legend dies aged 52 Legendary Australia leg-spinner Shane Warne, one of the greatest cricketers of all time, has died of a suspected heart attack aged 52. Warne took 708 Test wickets, the second most of all time, in 145 matches across a stellar 15-year international career. He had been found unresponsive in his villa on the Thai island of Koh Samui on Friday, said his management company. "It is with great sadness we advise that Shane Keith Warne passed away of a suspected heart attack," they added. "Despite the best efforts of medical st…

  12. ஐசிசி மகளிர் உலக கோப்பை: தென்னாப்பிரிக்காவுக்கு 275 ரன்கள் வெற்றி இலக்கை நிர்ணயித்தது இந்தியா 27 மார்ச் 2022, 03:22 GMT புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES உலகக் கோப்பை அரை இறுதிக்குள் நுழைவதற்கான போட்டியில், 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி தென்னாப்பிரிக்காவிடம் தோல்வியடைந்தது. தென்னாப்பிரிக்கா அணி அரை இறுதிக்குள் நுழைந்தது. தென்னாப்பிரிக்காவின் இறுதிக்கட்ட பேட்டிங்கின்போது, 48 ஓவர்கள் முடிந்திருந்த நிலையில், தென்னாப்பிரிக்கா அணி, 6 விக்கெட்களை இழந்து, 261 ரன்களை எடுத்திருந்தது. ஆட்டம் இறுதி கட்டத்தை நெருங்க நெருங்க, ஓவரின் ஒவ்வொரு பந்…

  13. ஐபிஎல் மூலம் இந்திய அணிக்கு புது கேப்டன்? இதை யாரும் எதிர்பார்க்கலயே.. ரவி சாஸ்திரி பரபர தகவல்.. இந்திய அணிக்கு புதிய கேப்டனை நியமிப்பது குறித்து ஐபிஎல் போட்டிகளை பிசிசிஐ உன்னிப்பாக கவனித்து வருவதாக ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விராட்கோலி சமீபத்தில் விலகினார். இதனை அடுத்து ரோகித் சர்மா இந்திய அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தலைமையிலான இந்திய அணி சமீபத்தில் நடந்த கிரிக்கெட் தொடர்களில் தொடர் வெற்றிகளை பெற்று வருகிறது. …

    • 0 replies
    • 393 views
  14. ISWOTY - பலக் முதல் அவ்னி வரை: இந்தியாவின் மாற்றுத்திறனாளி பெண் வீராங்கனைகளின் முன்னேற்ற பயணம் வந்தனா தொலைக்காட்சி ஆசிரியர், பிபிசி இந்திய மொழிகள் 24 மார்ச் 2022, 05:57 GMT முதல் பார்வையில், 19 வயதான பலக் கோலி எந்த ஒரு சாதாரண இளம் பெண்ணைப்போலவே தெரிகிறார். சுறுசுறுப்பான, விளையாட்டுத்தனமான - சமூக ஊடகங்களில் நிபுணராக திரையில் ஸ்க்ரோல் செய்யும் ஒரு பெண். ஆனால் பாட்மின்டன் மைதானத்தில் பலக்கைப் பார்க்காத வரையில் மட்டுமே உங்களின் இந்த என்ணம் இருக்கும். (பிபிசியின் இந்த ஆண்டின் சிறந்த விளையாட்டு வீராங்கனைக்கான வாக்களிப்பு முடிந்தது. முடிவுகள் மார்ச் 28 அன்று அறிவிக்க…

  15. மகளிர் உலகக் கோப்பை தொடர்:“ட்ரெஸிங் அறையில் ஒரு குழந்தை சூழலையே மாற்றிவிட்டது” ஸ்டீபன் ஷெமில்ட் கிரிக்கெட் எழுத்தாளர், க்ரைஸ்ட்சர்ச். 44 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பிஸ்மா மரூஃப், பாத்திமாவைப் பெற்றெடுத்து ஆறு மாதங்களே ஆகியுள்ள நிலையில், மகளிர் உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணியின் கேப்டனாக இருக்கிறார். மகளிர் உலகக் கோப்பை மீது நீங்கள் கவனம் செலுத்தியிருந்தால், இந்த தொடரில் அதிக கவனத்தை பெற்ற ஒரு நட்சத்திரத்துக்கு இன்னும் ஏழு மாதங்கள் கூட ஆகவில்லை என்பது உங்களுக்குத் தெரியும். மகளிர் உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்…

  16. எம். எஸ். தோனி: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினார் 7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலக தோனி முடிவு செய்துள்ளார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. Twitter பதிவை கடந்து செல்ல, 1 Twitter பதிவின் முடிவு, 1 இதுகுறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எம். எஸ். தோனி கேப்டன் பொறுப்பை ரவிந்திர ஜடேஜாவிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளார். இருப்பினும் இந்த தொடரில் மட்டுமல்ல இதற்கு பிறகும…

  17. கடைசி ஓவரில் த்ரில் வெற்றி! செய்திகள் விளையாட்டு ஐசிசி மகளிா் ஒருநாள் உலகக் கிண்ணத்தில் இந்திய அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கடைசி ஓவரில் த்ரில் வெற்றியைப் பெற்ற ஆஸி. அணி அரையிறுதிக்கும் தகுதி பெற்றது. நியூஸிலாந்தில் ஐசிசி மகளிா் ஒருநாள் உலகக் கிண்ண போட்டி நடைபெற்று வருகிறது. இதற்கிடையே ஆக்லாந்தில் சனிக்கிழமை நடைபெற்ற வாழ்வா, சாவா ஆட்டத்தில் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள ஆஸி. அணியை கட்டாயம் வென்றே ஆக வேண்டிய நிலையில் இந்திய அணி எதிா்கொண்டது. நாணய சுழற்சியை வென்ற ஆஸி. அணி களத்தடுப்பை தோ்வு செய்தது. நிா்ணயிக்கப்பட்ட 50 ஓவா்களில் இந்தியா 277/7 ஓட்டங்களை குவித்தது. ஆஸி. தரப்பில் டாா்ஸி பிரவுன் 3, அலனா…

    • 1 reply
    • 320 views
  18. இந்திய வீரர் கோலிக்காக.. பாகிஸ்தான் ரசிகர் செஞ்ச சர்ப்ரைஸ் சம்பவம் .. போட்டி நடுவே நெகிழ்ச்சி . , பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே கடந்த சில வாரங்களுக்கு முன் நடைபெற்ற போட்டியில், பாகிஸ்தானைச் சேர்ந்த கோலி ரசிகர் ஒருவர், உங்களின் சதத்தினை பாகிஸ்தான் மைதானத்தில் காண ஆவலாக உள்ளோம் என குறிப்பிட்டு பேனர் ஒன்றை கொண்டு வந்திருந்தார். “டியர் கோலி” இந்நிலையில், பாகிஸ்தானைச் சேர்ந்த வேறொரு கோலி ரசிகர், மீண்டும் கோலி குறித்த போஸ்டர் ஒன்றை, பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திர…

    • 1 reply
    • 299 views
  19. பொன் அணிகளின் போர்: புனித பத்திரிசியார் கல்லூரி 10 விக்கெட்களால் வெற்றி 105 ஆவது ஆண்டாக நடத்தப்பட்ட பொன் அணிகளின் போரில் யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி 10 விக்கெட்களால் வெற்றி பெற்றது. நேற்றைய தினம் ஆரம்பமான இந்த போட்டியில் முதல் இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரி 98 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. முதல் இனிங்ஸில் பதிலளித்தாடிய பத்திரிசியார் கல்லூரி அணி 08 விக்கெட்களை இழந்து 133 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது முதல் நாளாட்டம் நிறைவிற்கு வந்தது. துடுப்பாட்டத்தில் எஸ். கீர்த்தனன் 59 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். இன்று முதல் இனிங்ஸைத் தொடர்ந்த புனித பத்திரிசியார் கல்லூரி 156 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்களையும…

    • 0 replies
    • 347 views
  20. மகளிர் கிரிக்கெட் INDIA Vs WI: 155 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி 12 மார்ச் 2022, 06:17 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES நியூசிலாந்தின் ஹாமில்டனில் நடைபெற்ற மகளிர் உலக கோப்பை லீக் ஆட்டத்தில் இந்திய அணி 155 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஸ்மிருதி மந்தனா மற்றும் ஹர்மன்பிரீத் அடித்த தலா ஒரு சதத்தால் இந்தியா 317 ரன்கள் குவித்தது. இதையடுத்து ஆடிய மேற்கிந்திய அணி நிர்ணயித்த இலக்கை எட்ட முயன்றபோதும் 162 ரன்களிலேயே சுருண்டது. 12 ஓவர்களில் டாட்டின் மற்றும் மேத்யூஸி…

  21. ஜடேஜாவின் சகலதுறை ஆட்ட உதவியுடன் இலங்கையை இன்னிங்ஸால் வீழ்த்தியது இந்தியா (என்.வி.ஏ.) இலங்கைக்கு எதிராக மொஹாலியில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சுழல்பந்துவீச்சாளர்களான ரவிந்த்ர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின் ஆகிய இருவரின் அற்புதமான சகலதுறை ஆட்டத்தின் உதவியுடன் 3 நாட்களுக்குள் ஓர் இன்னிங்ஸ் மற்றும் 222 ஓட்டங்களால் இந்தியா அமோக வெற்றியீட்டியது. இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட ஐசிசி உலக டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியில் ஈட்டிய வெற்றியுடன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான 12 புள்ளிகளை இந்தியா பெற்றது. ஞாயிற்றுக்கிழமை (06) நிறைவுக்கு வந்த இந்த டெஸ்ட் போட்டி சில் மைல்கற்களை பதவுசெய்தமை விசேட அம்சமாகும். ஓரே டெஸ்ட் போட்டியில் 150க்…

  22. ஜடேஜா அதிரடி...! முதல் இன்னிங்சில் 574 ஓட்டங்களை குவித்த இந்தியா! இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 574 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி போட்டியின் இரண்டாவது நாளான இன்று 8 விக்கெட்டுக்களை இழந்து 574 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது ஆட்டத்தை இடைநிறுத்தியது. இந்திய அணி சார்பில் ஆட்டமிழக்காமல் துடுப்பெடுத்தாடிய ரவீந்திர ஜடேஜா 175 ஒட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் …

    • 2 replies
    • 418 views
  23. Ind Vs Pak பெண்கள் கிரிக்கெட் உலக கோப்பை: 107 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வென்ற இந்தியா 7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,TWITTER/BCCI WOMEN இன்று நியூசிலாந்தில் நடைபெற்ற மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் இடையே நடந்த போட்டியில், பாகிஸ்தானை 107 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது இந்திய அணி.இந்திய அணி பாகிஸ்தானுக்கு 245 ரன்கள் இலக்காக நிர்ணயித்த நிலையில், பாகிஸ்தான் அணியால் 150 ரன்கள் கூட எடுக்க முடியாமல், 137 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது. இந்திய அணியில் விளையாடிய சினேகா ராணா, பூஜா வஸ்த்ரகர் ஜோடி அதிக ரன்களை எடுத்தது. பூஜா வஸ்த்ரகர் 58 பந்…

  24. சுதந்திரக் கிண்ணத்தை சுவீகரித்து வடக்கு இரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்திய வட மாகாணம் (யாழ். துரையப்பா அரங்கிலிருந்து நெவில் அன்தனி) யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் சனிக்கிழமை (05) நடைபெற்ற தென் மாகாணத்துக்கு எதிரான இறுதிப் போட்டியில் மிக இலகுவாக 3 - 1 கோல்கள் கணக்கில் வெற்றிபெற்று வட மாகாணம் அங்குரார்ப்பண சுதந்திர கிண்ணத்தை சுவீகரித்தபோது சுமார் 7,000 வடக்கு இரசிகர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்து அரங்கை அதிரவைத்தனர். மேலும் இந்த சுற்றுப் போடடியில் வழங்கப்பட்ட வீசேட விருதுகள் நான்கில் இரண்டை வட மாகாணமும் மற்றைய இரண்டை கிழக்கு மாகாணமும் வென்றெடுத்தமை விடேச அம்சமாகும். அது மட்டுமல்லாமல் இலங்கையில் வட மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்திய அணிக்கு 3 மாதங்களில…

  25. ரஷ்யா - உக்ரேன் போர் - சர்வதேச பராலிம்பிக் குழுவின் அதிரடி அறிவிப்பு 2022 ஆம் ஆண்டு பீஜிங்கில் நடைபெறவுள்ள குளிர்கால பராலிம்பிக் போட்டியில் ரஷ்யா மற்றும் பெலாரஸ் விளையாட்டு வீரர்கள் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என சர்வதேச பராலிம்பிக் குழு தெரிவித்துள்ளது. இதற்கமைய, சீனாவின் பீஜிங்கில் நடைபெறும் குளிர்கால பாராலிம்பிக் போட்டியில் அவர்களுக்கு கலந்து கொள்ள முடியாது. குளிர்கால பராலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழா நாளை (04) நடைபெறவுள்ளதுடன் அதன் போட்டிகள் எதிர்வரும் சனிக்கிழமை முதல் ஆரம்பமாகவுள்ளன. மற்ற உறுப்பு நாடுகளின் எதிர்ப்பால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக சர்வதேச பாராலிம்பிக் …

    • 0 replies
    • 281 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.