விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7858 topics in this forum
-
FIFA ஊழல் காரணமாக ஐம்பது சுவிஸ் வங்கிக் கணக்குகள் முடக்கம் December 18, 2015 சர்வதேச கால்பந்து சபையின் ஊழல் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய ஐம்பது சுவிஸ் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக சுவிஸ் நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த சுவிஸ் வங்கிக் கணக்குகளில் சர்வதேச கால்பந்து சபையில் இடம்பெற்ற ஊழல் பணம் நகர்த்தப்பட்டிருக்கலாம் என அமெரிக்க அதிகாரிகள் நம்புவதாகவும் இதன் காரணமாக குறித்த வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச காற்பந்து சபையில் கடந்த இருதசாப்தங்களுக்கும் மேலாக இடம்பெற்ற ஊழல்கள் குறித்த விசாரணைகள் தற்போது முழு வீச்சில் இடம்பெற்று வருகின்றன. உலகக்கிண்ண கால்பந்து போட்டிகளின் போது ஒளிபரப்பு உரிமம…
-
- 0 replies
- 728 views
-
-
FIFA கழக உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு ரியல் மெட்ரிட் தகுதி @Getty Images கரேத் பேல் மாற்று வீரராக வந்து கடைசி நேரத்தில் புகுத்திய கோல் மூலம் FIFA கழக உலகக் கிண்ண கால்பந்து தொடரின் அரையிறுதியில் அல் ஜஸீரா அணியை 2-1 என்ற கோல் வித்தியாசத்தில் வீழ்த்தி நடப்புச் சம்பியன் ரியல் மெட்ரிட் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்று வரும் 14ஆவது கழக உலகக் கிண்ணத்தின் இரண்டாவது அரையிறுதியிலேயே ஐரோப்பிய மண்டலத்தில் இருந்து தேர்வான ரியல் மெட்ரிட் அணி புதன்கிழமை (13) ஐக்கிய அரபு இராச்சியத்தின் அல் ஜஸீரா அணியை எதிர்கொண்டது. எனினும், பிரேஸில் முன்கள வீரர் ரொமரின்ஹோ போட்ட கோல…
-
- 2 replies
- 369 views
-
-
FIFA முன்னாள் துணைத்தலைவர் யூஜினியோ சிறையில் December 27, 2015 சுவிஸர்லாந்திலிருந்து உருகுவேக்கு நாடுகடத்தப்பட்ட முன்னாள் துணைத்தலைவர் யூஜினியோ ஃபெகரெய்டோ உருகுவேயில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். பிபா ஊழல் குற்றச்சாட்டில் கடந்த மே மாதம் சுவிஸர்லாந்து பொலிஸாரால் கைது செய்யப்பட்ட தென் அமெரிக்க கால்பந்து கூட்டமைப்பின் முன்னாள் துணைத்தலைவர் யூஜினியோ விசாரணைகளுக்காக நேற்று (வியாழக்கிழமை) உருகுவேக்கு நாடு கடத்தப்பட்டார். இந்நிலையில் உருகுவேயை வந்திறங்கிய யூஜினியோ நேரடியாக நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் தொடர்ந்தும் காவலில் வைப்பதற்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளதாக நீதிமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. யூஜினியோ ஃபெகரெய்டோ கடந்த 1997 ஆம் ஆண்டு முதல் 2006 ஆ…
-
- 0 replies
- 504 views
-
-
Hall of Fame விருதிற்குப் பாத்திரமானார் முத்தையா முரளிதரன் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் உயரிய விருதான Hall of Fame விருதுக்கு இலங்கையின் முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் முத்தையா முரளிதரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதனை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இன்று மாலை விடுத்த அறிக்கையில் உறுதிப்படுத்தியது. கிரிக்கெட் உலகில் அதீத ஆற்றலை வெளிப்படுத்திய வீரர்களுக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை Hall of Fame விருது வழங்கி கௌரவிக்கின்றது. அந்த வகையில், இலங்கையின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன் Hall of Fame விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளார். இதன் மூலம் Hall of Fame விருதைப் பெற்ற முதல் இலங்க…
-
- 2 replies
- 489 views
-
-
Hall of Fame விருதைப் பெற்று வரலாற்றில் பதிவானார் முத்தையா முரளிதரன் Hall of Fame விருதைப் பெற்ற முதல் இலங்கையராக முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன் வரலாற்றில் பதிவாகியுள்ளார். இதன் மூலம் சேர். பிரட்மன், இயன் செப்பல், காபில்ட் சோபர்ஸ், கர்ட்லி அம்புரோஸ் ஆகியோரின் வரிசையில் முரளிதரனும் இணைந்து கொண்டுள்ளார். கிரிக்கெட் உலகில் அதீத ஆற்றலை வெளிப்படுத்தி புகழ்பூத்த வீரர்களை சர்வதேச கிரிக்கெட் பேரவை Hall of Fame விருது வழங்கி கௌரவிக்கின்றது. அந்த வகையில், இலங்கையின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன் இன்றைய தினம் Hall of Fame விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட…
-
- 4 replies
- 877 views
-
-
Hobart Hurricanes அணியில் விளையாடும் சங்கா இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் குமார் சங்கக்கார முதல் தடவையாக அவுஸ்திரேலியாவில் இடம்பெறவுள்ள பிக் பாஷ் லீக் (Big Bash League) கிரிக்கெட் போட்டியில் ஹார்பட் ஹரிக்கன்ஸ் (Hobart Hurricanes) அணியில் விளையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குமார் சங்கக்கார ஹார்பட் ஹரிக்கன்ஸ் (Hobart Hurricanes) அணியில் இரண்டு வருடங்கள் விளையாடுவதற்கான ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/articles/2015/05/06/hobart-hurricanes-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%A…
-
- 1 reply
- 301 views
-
-
கிரிக்கெட் என்றில்லாமல் வேறு ஒரு கோணத்தில் நினைக்க முடியாத அளவு சந்தோசத்தை தருகின்றது. கடைசி ஓவரில் இன்று ஏபி வில்லியர்ஸ் அடித்ததை பார்த்துதான் இந்த கருத்து
-
- 2 replies
- 1.3k views
-
-
ICC மே மாதத்திற்கான சிறந்த வீரராக-மெத்தியூஸ்-தெரிவு! வரலாற்றில் முதல் தடவையாக இலங்கை கிரிக்கெட் வீரர் ஒருவர் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் மாதத்திற்கான சிறந்த வீரராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். சர்வதேச கிரிக்கெட் பேரவையின் மே மாதத்திற்கான சிறந்த வீரராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார். சர்வதேச கிரிக்கெட் பேரவை இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இதனை அறிவித்துள்ளது. அண்மையில் பங்களாதேஷில் இடம்பெற்ற டெஸ்ட் தொடரில் ஏஞ்சலோ மெத்தியூஸின் துடுப்பாட்டம் இந்தப் பெயரிடலுக்குக் காரணமாக இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. …
-
- 1 reply
- 417 views
-
-
PreviousNext ICC ரி20 உலகக்கிண்ணம் - பரிசுத் தொகை அறிவிப்பு அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள ஐசிசி உலகக்கிண்ண ரி20 தொடருக்கான பரிசுத் தொகையை சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது. அதன்படி, ஐசிசி ரி20 உலக்கிண்ணத்தை கைப்பற்றி சாம்பியனாகும் அணிக்கு 1.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பரிசுத் தொகையாக வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இறுதிப் போட்டியில் தோல்வியுற்று இரண்டாம் இடத்தை பெறும் அணிக்கு 8 இலட்சம் அமெரிக்க டொலர்கள் பரிசுத் தொகையாக வழங்கப்படவுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது. அதேபோல், அரையிறுதியில் வௌியேறும் அணிகளுக்கு தலா 4 இலட்சம் அமெரிக்க டொலர்கள் பரிசுத் தொகையாக வழங்கப்படவுள்…
-
- 1 reply
- 433 views
- 1 follower
-
-
Ind Vs Aus 2-வது டெஸ்ட் - ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா வெற்றி 28 டிசம்பர் 2020 பட மூலாதாரம், QUINN ROONEY/GETTY IMAGES மெல்பர்னில் நடந்த பார்டர் - கவாஸ்கர் கோப்பைக்கான தொடரின் இரண்டாவது போட்டியில் எட்டு விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வென்றுள்ளது. பொறுப்பு கேப்டனாக செயல்பட்ட அஜிங்க்யா ரஹானே ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்தத் தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வென்றது. இரண்டாவது போட்டியில் இந்தியா வென்றுள்ளதால் 1-1 எனும் அளவில் இப்போதைக்கு இந்தத் தொடர் சமநிலையை எட்டியுள்ளது. முதல் மற்றும் இரண்டாம் இன்னிங்சில் ஆஸ்திரேலியா முறை…
-
- 0 replies
- 545 views
-
-
IND Vs BAN இஷாந்த் ஷர்மாவின் பேய் ஆட்டத்தில் வங்கதேசத்தை ‘ஒயிட் வாஷ்’ செய்த இந்தியா 7 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்து வந்த வங்கதேச அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது. இதன் மூலம் வங்கதேசத்திற்கு எ…
-
- 1 reply
- 783 views
- 1 follower
-
-
IND vs BAN: முதல் ஒருநாள் போட்டியில் இந்தியாவை வீழ்த்திய வங்கதேசம் பட மூலாதாரம்,MUNIR UZ ZAMAN/AFP VIA GETTY IMAGES படக்குறிப்பு, விராட் கோலியின் விக்கெட் வீழ்ந்தபின் தமது அணியுடன் கொண்டாடும் ஷாகிப் அல் ஹசன் 4 டிசம்பர் 2022 வங்கதேசத்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோல்வியைத் தழுவியுள்ளது. 187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் 46 ஓவரில் ஒன்பது விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டி, ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் வங்கதேசம் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. டா…
-
- 1 reply
- 315 views
- 1 follower
-
-
IND vs NZ: முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் பந்து வீச்சை தேர்வு செய்தது இந்தியா .det_ban_img img{width:100%;height:auto!important; max-height:400px;} நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, இந்தப் பயணத்தின் முதல் ஆட்டத்தில் இன்று நியூசிலாந்து அணியுடன் மோதுகிறது. இந்த சுற்றுப் பயணத்தின்போது ஐந்து டி20 போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் இரு டெஸ்ட் போட்டிகள் ஆகியவற்றில் இரு அணிகளும் மோதுகின்றன. இவை மட்டுமல்லாது ஒரு மூன்று நாள் பயிற்சி ஆட்டத்திலும் இரு அணிகளும் மோதுகின்றன. …
-
- 0 replies
- 833 views
-
-
Ind Vs Pak பெண்கள் கிரிக்கெட் உலக கோப்பை: 107 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வென்ற இந்தியா 7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,TWITTER/BCCI WOMEN இன்று நியூசிலாந்தில் நடைபெற்ற மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் இடையே நடந்த போட்டியில், பாகிஸ்தானை 107 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது இந்திய அணி.இந்திய அணி பாகிஸ்தானுக்கு 245 ரன்கள் இலக்காக நிர்ணயித்த நிலையில், பாகிஸ்தான் அணியால் 150 ரன்கள் கூட எடுக்க முடியாமல், 137 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது. இந்திய அணியில் விளையாடிய சினேகா ராணா, பூஜா வஸ்த்ரகர் ஜோடி அதிக ரன்களை எடுத்தது. பூஜா வஸ்த்ரகர் 58 பந்…
-
- 0 replies
- 269 views
- 1 follower
-
-
IND vs WI: 1000ஆவது போட்டியில் வெற்றி வாகை சூடிய இந்திய அணி: முக்கிய தகவல்கள் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு, கோப்புப் படம் மேற்கு இந்திய தீவுகள் மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற ஒருநாள் போட்டியில் இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரின் முதல் ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்று முன்னிலை வகிக்கிறது. இந்த போட்டி குறித்த சில முக்கிய தகவல்கள் இதோ: நேற்றைய போட்டியின் மூலம் கிரிக்கெட் வரலாற்றில் 1000வது ஒருநாள் போட்டியில் விளையாடும் முதல் அணி எனும் பெருமை…
-
- 1 reply
- 309 views
- 1 follower
-
-
இந்தியாவும் மேற்கிந்தியத் தீவுகளும் இரண்டாவது ஒருநாள் போட்டிக்கு விசாகப்பட்டினத்தில் தொடங்கியுள்ளது. சென்னை நடந்த முதல் போட்டியில் கீரோன் பொல்லார்ட் தலைமையிலான அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. https://sports.ndtv.com/tamil/cricket/live-scores/india-vs-west-indies-2nd-odi-visakhapatnam-inwi12182019190938?pfrom=insidearticle
-
- 3 replies
- 860 views
-
-
IPL 2011 போட்டிகளை பிரித்தானியாவின் ITV4 இலவசமாக நேரடி ஒலிபரப்பு செய்கின்றது... நாளை 08/04/2011 போட்டிகள் ஆரம்பிக்கின்றன... விருப்பமானவர்கள் பார்க்கலாம்... இதை பிரித்தானியாவுக்கு வெளியில் இணையத்தில் பார்க்க முடியுமா தெரியவில்லை... http://www.itv.com/sport/indianpremierleague/?intcmp=NAV_SPORT7_INDIANPR6 நேரடி ஒளிபரப்பு... http://www.itv.com/sport/indianpremierleague/watchlive/ இது இப்போ வேலை செய்தால் எப்போதும் வேலை செய்யும்...
-
- 44 replies
- 3.4k views
-
-
தோனிக்கு ரூ. 12.5 கோடி:டாப்-5 வீரர்கள் விவரம் வெளியீடு புதுடில்லி: ஏழாவது பிரிமியர் தொடருக்கான சென்னை அணியில் கேப்டன் தோனி, ரெய்னா, அஷ்வின், ரவிந்திர ஜடேஜா, டுவைன் பிராவோ ஆகிய ஐந்து வீரர்கள் தக்க வைக்கப்பட்டனர். தோனிக்கு ரூ. 12.5 கோடி சம்பளம் கிடைக்கும். மும்பை, ராஜஸ்தான் அணிகளும் 5 வீரர்களை தக்க வைத்துக் கொண்டன. இந்தியன் பிரிமியர் லீக் நிர்வாகத்தின் சார்பில், பிரிமியர் ‘டுவென்டி–20’ போட்டிகள், கடந்த 2008 முதல் நடக்கின்றன. இந்த ஆண்டு ஏழாவது தொடர் வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடக்கவுள்ளன. இதற்கான வீரர்கள் ஏலம் வரும் பிப்., 12, 13ல் நடக்கும். இந்த ஏலம் முழுமையாக நடக்கவுள்ளதால், அனைத்து அணிகளும் ஏதாவது ஐந்து வீரர்களை தக்கவைத்துக் கொண்டு, மற்றவர்களை விடுவிக்க வேண்டும…
-
- 6 replies
- 1.5k views
-
-
X IPL 2019 வீரர்கள் விவரம்: யார் உள்ளே? யார் வெளியே? இந்த அணி பல மாற்றங்களை செய்துள்ளது. டிரேடிங் முறையில் ஆஸ்திரேலியா ஆல்-ரவுண்டர் மார்கஸ் ஸ்டோய்னிஸ் சேர்க்கப்பட்டுள்ளார் இந்தியன் பிரீமியர் லீக் 2019ம் ஆண்டிற்கான வீரர்கள் ஏலம் விரைவில் தொடங்க உள்ள நிலையில்; ஐபிஎல் அணிகள் தங்களுக்கு தேவையான வீரர்களை தக்கவைத்து கொண்டு, மற்ற வீரர்களை விடுவித்து விட்டனர். இந்த Retain லிஸ்டில் (தக்க வைத்த கொண்ட வீரர்கள் பட்டியலில்) ரசிகர்களுக்கு மிகப்பெரிய நியூஸ் – சென்ற ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க தடைவிதிக்கப்பட்ட ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார…
-
- 0 replies
- 569 views
-
-
IPL 2021 : நீங்க அடிக்கணும்... நாங்க ரசிக்கணும்... கமான் கெயில்! #ChrisGayle கார்த்தி கிறிஸ் கெயில் 41 வயதில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக இன்று களமிறங்குகிறார் கிறிஸ் கெயில். ''பஞ்சாப் அணியில் நம்பர் 3 வீரராக களமிறங்குவார்'' என்கிற செய்தியை கெயில் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். ஏனென்றால் கிறிஸ் கெய்ல் இல்லையென்றால் IPL-ல் என்டர்டெய்ன்மென்ட் இல்லை. 132 போட்டிகளில் விளையாடியிருக்கும் கிறிஸ் கெய்ல்தான் ஐபிஎல் போட்டிகளில் அதிக சதங்கள் அடித்தவர். 6 சதங்கள் அடித்து கெயில் முதல் இடத்தில் இருக்க கோலி 5 சதங்களுடன் இரண்டாம் இடத்தில் இருக்கிறார். கோலி, கெயிலை 61 போட்டிகள் கூடுதலாக விளையாடியும் சதங்கள் சாதனையை முந்தமுடியவில்லை.…
-
- 1 reply
- 781 views
- 1 follower
-
-
கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் 8-ம் தேதி ஐபிஎல் தொடக்க விழா ஐபிஎல் 9-வது சீசன் போட்டிகள் வரும் 9-ம் தேதி தொடங்கி மே 29-ம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. தொழில்முறை கிரிக்கெட் போட்டியான இந்த தொடரின் தொடக்க விழா வரும் 8-ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடக்க விழாவில் இங்கிலாந்தின் பாப் பாடல் இசைக்குழுவின் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பாலிவுட் நடிகைகளான கேத்ரினா கைஃப், ஜாக்குலின் பெர்னாண்டஸ், நடிகர் ரன்வீர்சிங் உள்ளிட்ட பிரபல நட்சத்திரங்கள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. மேலும் டெல்லி பாப் பாடகர் யோ யோ ஹனி சிங்கும் கலந்து கொண்டு பாடுகிறார். சுமா…
-
- 209 replies
- 12.9k views
-
-
ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் ரூ.15.5 கோடிக்கு ஏலம் ஐபிஎல் போட்டியில் விளையாடும் வீரர்களை தேர்வு செய்வதற்காக நடைபெற்று வரும் ஏலத்தில் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் பேட் கம்மின்ஸ் பதினைந்தரை கோடி ரூபாய்க்கும், இன்னொரு ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல் 10 கோடியே 75 லட்சம் ரூபாய்க்கும் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளனர். கொல்கத்தாவில் நடைபெற்று வரும் ஏலத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியுடன் நிலவிய கடும் போட்டிக்கு பிறகு, இங்கிலாந்து வீரர் இயன் மோர்கனை 5 கோடியே 25 லட்சம் ரூபாய்க்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. ஆஸ்திரேலிய வீரர் ஆரோன் பிஞ்ச்சை ஏலம் எடுப்பது தொடர்பாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பெங்களூரு ராயல் சாலன்ஜர்ஸ் இடையே நீண்ட நேரம் போட்டி நிலவியது. முடிவில்…
-
- 6 replies
- 1.6k views
-
-
IPL ஒளிபரப்பும் உரிமத்தை பெற்றது ரூபவாஹிணி March 01, 2016 ஆறாவது உலகக்கிண்ண ‘டுவெண்டி-20′ போட்டி முதல் எதிர்வரும் நான்கு வருடங்களுக்கான சர்வதேச கிரிக்கட் போட்டிகளை ஒளிபரப்பு செய்வதற்கான உரிமையை தேசிய தொலைக்காட்சி சேவையான ரூபவாஹிணி பெற்றுள்ளது. இதன் பிரகாரம் எதிர்வரும் 8 ஆம் திகதி ஆரம்பித்து ஏப்ரல் 3 ஆம் திகதிவரை இந்தியாவில் நடைபெறவுள்ள ஆறாவது உலகக்கிண்ண ‘டுவெண்டி-20′ தொடர், ஐ.சி.சி. சம்பியன் கிண்ண போட்டிகள், மகளிர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டி, 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் போட்டிகள் என பல கிரிக்கெட் போட்டிகளையும் ஒளிபரப்பும் உரிமத்தை ரூபவாஹிணி பெற்றுக் கொண்டுள்ளது. இந்த போட்டிகள் இலங்கை நேரப்படி பிற்பகல் 3 மணிக்கும், இரவு 7.30 மணிக்கும் நேரடியா…
-
- 1 reply
- 388 views
-
-
-
- 1 reply
- 704 views
-
-
வீரர்களின் ரகசியங்களை வெளியிட்ட ஐ.பி.எல். நடன அழகி நீக்கம். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ரசிகர்களையும், வீரர்களையும் உற்சாகப்படுத்துவதற்காக ஒவ்வொரு அணிகளும் `சியர்ஸ் லீடர்ஸ்' என்ற அழகிகளின் நடனத்துக்கு ஏற்பாடு செய்துள்ளன. இதற்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு உள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் தென்ஆப்பிரிக்காவில் இருந்து 40 நடன அழகிகள் பணிக்கு அமர்த்தப்பட்டனர். இவர்களில் ஒருவரான கேப்ரியலா (வயது 22) திடீரென சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டார். அவர் வீரர்களின் அந்தரங்க விஷயங்களை கசியவிட்டதால் நீக்கப்பட்டது இப்போது தெரியவந்துள்ளது. போட்டிக்கு பிறகு நடக்கும் விருந்துகளில் வீரர்கள் அடிக்கும் கும்மாளங்களையும், தன்னை போன்ற நடன அழகிகளுடன் வீரர்கள் நெருங…
-
- 25 replies
- 3.1k views
- 1 follower
-