விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7839 topics in this forum
-
இந்தியாவின் முதல் டெஸ்ட் வெற்றி எங்கு கிடைத்தது தெரியுமா?? #500testsofIndia வரும் 22 ஆம் தேதி கான்பூரில் நியூசிலாந்து அணியுடன் டெஸ்ட் போட்டி விளையாடுகிறது இந்திய அணி. இது இந்தியாவின் 500வது டெஸ்ட் போட்டி. 1932 ஆம் ஆண்டில் இருந்து சர்வதேச கிரிக்கெட்டில் பங்கேற்க ஆரம்பித்தது இந்தியா. 84 வருட டெஸ்ட் கிரிக்கெட் பயணத்தில் சாதித்தது என்ன? சறுக்கியது என்ன? படங்கள், தகவலுடன் ஒரு பிளாஷ்பேக் இங்கே ... 1. முதல் டெஸ்ட் :- 1932 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராகத்தான் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆடியது இந்திய அணி. முதல் டெஸ்ட் நடந்தது இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில். ஆம். அங்கிருந்து தான் இந்திய அணி தனது பயணத்தை துவக்கியது. இந…
-
- 3 replies
- 1.3k views
-
-
நாணய சுழற்சியில் இலங்கை வெற்றி 2022 ஆம் ஆண்டிற்கான ஆசிய கிண்ண மகளிர் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை மற்றும் இந்திய அணிகள் மோதிக் கொள்கின்றன. போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது. https://tamil.adaderana.lk/news.php?nid=166658 இந்திய அணிக்கு 66 ஓட்டங்கள் வெற்றியிலக்கு 2022 ஆம் ஆண்டிற்கான ஆசிய கிண்ண மகளிர் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை மற்றும் இந்திய அணிகள் மோதிக் கொள்கின்றன. போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்களை …
-
- 3 replies
- 844 views
-
-
Powerlifting போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதித்த தனலட்சுமி முத்துக்குமார குருக்கள்
-
-
- 3 replies
- 604 views
-
-
உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் அரையிறுதிக்கு முன்னேறும் நான்கு அணிகள் எவை? உலகக்கிண்ண தொடரில் அரையிறுதிக்கு முன்னேறும் நான்கு அணிகளை, இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், கிரிக்கெட் வர்ணணையாளருமான சுனில் கவஸ்கார் கணித்துள்ளார். கிரிக்கெட் இரசிகர்கள் தற்போது இங்கிலாந்தில் ஆரம்பமாகவுள்ள 50 ஓவர் உலகக்கிண்ண தொடரை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். இந்தநிலையில், இத்தொடரில் சம்பியன் பட்டம் வெல்லப் போகும் அணி எது, அரையிறுதிக்கு முன்னேறும் அணிகள் எவை என்பது குறித்து முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து கூறி வருகிறார்கள். இதற்கிடையில், அரையிறுதிக்கு முன்னேறும் நான்கு அணிகளை கவஸ்கார் கணித்துள்ளார். இதுகுறித்து அவர்…
-
- 3 replies
- 1.3k views
-
-
உலகக் கிண்ண வாய்ப்பு கத்தாருக்கு வழங்கப்பட்டமை தவறு: பீபா முன்னாள் தலைவர் பிளாட்டர் By DIGITAL DESK 3 09 NOV, 2022 | 11:14 AM 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டியை நடத்தும் உரிமை கத்தாருக்கு வழங்கப்பட்டமை ஒரு தவறு என சர்வதேச கால்பந்தாட்டச் சங்கங்களின் சம்மேளனத்தின் (FIFA - பீபா) முன்னாள் தலைவர் செப் பிளாட்டர் கூறியுள்ளார். 2018 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளின் உலக கிண்ணக் கால்பந்தாட்டப் போட்டிகளை நடத்தும் நாடுகளை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு 2010 ஆம் ஆண்டு ஏககாலத்தில் நடைபெற்றது. 2018 ஆம் ஆண்டு போட்டிகளை நடத்தும் உரிமையை ரஷ்யா பெற்றது. 2022 ஆம் ஆண்டின் போட்டிகளை நடத்தும் உரிமையைப் பெறுவதற்கு இறுதியாக கத்…
-
- 3 replies
- 285 views
- 1 follower
-
-
இந்தியா மூன்றாவது டெஸ்ட்டிலும் ஒரு இன்னிங்ஸ் 43 ஓட்டங்களால் படுதோல்வி பேர்த்தில் நடைபெற்று வந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 43 ஓட்டங்களினால் படுதோல்வியைத் தழுவிக்கொண்டது. வெறும் இரண்டரை நாட்களில் முடிந்துப்போன இந்தப் போட்டியில் இந்தியா முதலாவது இன்னிங்ஸில் 161 ஓட்டங்களும் ரெண்டாவது இன்னிங்ஸில் 171 ஓட்டங்களும் பெற்ற நிலையில் தனது சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. ஒரு இன்னிங்ஸ் மட்டுமே துடுப்பெடுத்தாடிய அவுஸ்த்திரேலியா 369 ஓட்டங்களைப் பெற்றது. இதில் வோனர் கொவென் இணைப்பாட்டமாக ஆரம்ப விக்கெட்டுக்காக 214 ஓட்டங்களைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இதில் வோனர் 5 சிக்ஸர்கள் 20 பவுண்டரிகள் அடங்களாக வெறும் 159 பந்துகளை மட்டுமே முகங்கொண்டு 180 ஓட்ட…
-
- 3 replies
- 809 views
-
-
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த அதிரடி துடுபாட்ட வீரர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய வீரர் ஷிகர் தவான் அறிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி தொடக்க வீரராக களமிறங்கும் ஷிகர் தவான், 2010ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரின் மூலம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு அறிமுகமானார். தனது சிறப்பான அதிரடி ஆட்டத்தின் மூலம் டி20 மற்றும் டெஸ்ட் அணிகளிலும் இடம்பிடித்தார். 24 சதங்கள் இந்திய அணிக்கு சிறந்த ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கும் ஷிகர் தவான், இந்திய அணிக்காக 167 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 6,793 ஓட்டங்களை பெற்றுள்ளார். 68 டி20 போட்டிகளில் 1,759 ஓட்டங்களையும…
-
- 3 replies
- 396 views
- 1 follower
-
-
இன்று மே.இ.தீவுகள் டி 20ல் மோதல் ஜேசன் ஹோல்டர் தலைமையிலான மேற்கிந்தியத் தீவுகள் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை இங்கிலாந்து 2-1 என வென்றது. டெஸ்ட் போட்டி தொடரை தொடர்ந்து இரு அணிகளும் ஒரு டி 20 ஆட்டம் மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் மோத உள்ளன. இதில் டி 20 ஆட்டம் செஸ்டர் லீ ஸ்ட்ரிட்டில் இன்று நடைபெறுகிறது. இந்திய நேரப்படி இரவு 11 மணிக்கு இந்த ஆட்டம் நடைபெறுகிறது. கிறிஸ் கெய்ல், மார்லன் சாமுவேல்ஸ் களமிறங்குவதால் இந்த ஆட்டத்தை மேற்கிந்தியத் தீவுகள் அணி அதிக நம்பிக்கையுடன் எதிர்கொள்கிறது. அதேவேளையில் வெற்றி ஆதிக்கத்தை தொடரும் முனைப்பில் இங்கிலாந்து களமிறங்…
-
- 3 replies
- 343 views
-
-
மேற்கிந்திய தீவுகள் கிரிக்கட் அணியின் முன்னாள் வீரர்கள் மூவர் "சேர்" பட்டம் வழங்கப்பட்டு மதிப்பளிக்கப்பட்டுளனர். அன்டிகுவாவைச் சேர்ந்த ரிச்சி ரிச்சர்ட்ஸன், கேட்லி அம்ப்ரோஸ், அன்டி ரொபேர்ட்ஸ் ஆகியோரே இவ்வாறு மதிப்பளிக்கப்பட்டவர்களாவர். http://www.bbc.com/sport/0/cricket/26392726
-
- 3 replies
- 695 views
-
-
விராட் கோலி புதிய சாதனை! சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 9,000 ரன்களைக் கடந்த வீரர் என்ற சாதனையை இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி படைத்தார். Photo Credit: BCCI கான்பூரில் நடந்துவரும் நியூசிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் அவர் இந்த மைல்கல்லை எட்டினார். இந்த போட்டியில் 83 ரன்களைக் குவித்த போது சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 9,000 ரன்களை எட்டினார். 194ஆவது இன்னிங்ஸில் 9,000 ரன்களைக் கடந்த விராட் கோலி, 205 இன்னிங்ஸ்களில் 9,000 ரன்களைக் கடந்து சாதனை படைத்திருந்த தென்னாப்பிரிக்காவின் டிவிலியர்ஸின் சாதனையை முறியடித்தார். இந்த பட்டியலில் 228 இன்னிங்ஸ்கள், 235 இன்னிங்ஸ்களுடன் முறையே கங்குலி மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆ…
-
- 3 replies
- 1.8k views
-
-
Published By: VISHNU 14 APR, 2024 | 10:18 PM (நெவில் அன்தனி) ஐக்கிய அமெரிக்காவிலும் மேற்கிந்தியத் தீவுகளிலும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு தெரிவாளர்கள் பெயரிட்டுள்ள 32 வீரர்களைக் கொண்ட இலங்கை முன்னோடி குழாத்தில் யாழ். மத்திய கல்லூரியின் முன்னாள் தலைவர் விஜயகாந்த் வியாஸ்காந்த் பெயரிடப்பட்டுள்ளார். இலங்கை கிரிக்கெட் தெரிவாளர்கள் ஏற்கனவே அறிவித்தவாறு வனிந்து ஹசரங்க அணித் தலைவராகவும் சரித் அசலன்க உதவித் தலைவராகவும் பெயரிடப்பட்டுள்ளனர். அண்மைக்காலமாக சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் திறமையை வெளிப்படுத்திவரும் சகலதுறை ஆட்டக்காரர்கள் உட்…
-
- 3 replies
- 493 views
- 1 follower
-
-
தோனியை வீழ்த்தும் ஐந்து எதிரிகள்! ஐ.சி.சி நடத்தும் சர்வதேச தொடர்களின் மூன்று கோப்பைகளையும் கைப்பற்றிய உலகின் ஒரே கேப்டன் என்ற பெருமைக்கு சொந்தக்காரரான தோனி, தற்போது தனது கேப்டன் கேரியரில் கிட்டத்தட்ட கிளைமாக்ஸ்க்கு வந்திருக்கிறார். இந்த ஆண்டில் தோனியின் தலைமையில் இதுவரை இந்தியா ஒரு தொடரைக் கூட வெல்ல முடியவில்லை. "தோனியை ஓரங்கட்டுங்கள், இளம் பாய்ச்சலை புகுத்துங்கள்...!" என ஆளாளுக்கு தோனியின் மீது சொற்கற்களை வீச ஆரம்பித்து விட்டனர். வழக்கமாக தன் மீதான விமர்சனங்களுக்கு தனக்கே உரிய பாணியில் பதிலடி கொடுக்கும் தோனியால், இந்த முறை சமாளிக்கவே முடியவில்லை. தென்னாப்பிரிக்க அணி கிரிக்கெட் சரித்திரத்தில், முதல் முறையாக இந்திய மண்ணில் இந்திய அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்ற…
-
- 3 replies
- 409 views
-
-
முதலாவது ஒரு நாள் கிரிக்கெட்: ஆஸ்திரேலியா - தென்ஆப்பிரிக்கா இன்று மோதல் பெர்த்தில் இன்று நடக்கும் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா-தென்ஆப்பிரிக்க அணிகள் மோதுகின்றன. #ODI #SouthAfrica #Austrialia #Perth பெர்த்: தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி குறுகிய கால சுற்றுப்பயணமாக ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளது. அங்கு மூன்று ஒரு நாள் போட்டி மற்றும் ஒரே ஒரு 20 ஓவர் போட்டியில் பங்கேற்கிறது. இதன்படி தென்ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி உலகின் அதிவேக ஆடுகளமான பெர்த்தில் இன்று நடக்கிறது. கடந்த 2 ஆண்டுகளாக ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலியாவின் செயல்பாடு மோசமாக இருந்து வருகிறது. அதுவும் …
-
- 3 replies
- 591 views
-
-
உலகின் அதிவேக வீரரென மீண்டும் நிரூபித்தார் உசைன் போல்ட் உலகின் மின்னல் வேக வீரரென ஜமைக்காவின் உசைன் போல்ட் மீண்டும் நிரூபித்தார். ரியோவில் இன்று இடம்பெற்ற ஆடவர்களுக்கான 200 மீற்றர் ஓட்டப்பந்தையத்தில் 19.78 செக்கனில் பந்தைய தூரத்தை கடந்து தங்கப்பதக்கத்தை சுவீகரித்தார். இது ஒலிம்பிக் போட்டிகளில் 200 மீற்றர் ஓட்டப்பந்தையத்தில் உசைன் போல்ட் பெறும் 3 ஆவது தங்கப்பதக்கம் என்பது குறிப்பிடத்தக்கது Virakesari
-
- 3 replies
- 568 views
-
-
பிரேசில் ஜாம்பவான் பீலேக்கு அறுவை சிகிச்சை பிரேசில் ஜாம்பவான் பீலே தனது பெருங்குடலில் இருந்து கட்டியை அகற்ற அறுவை சிகிச்சை செய்துள்ளார். "கடந்த சனிக்கிழமையன்று வலது பெருங்குடலில் சந்தேகத்திற்கிடமான கட்டியை அகற்ற அறுவை சிகிச்சை செய்தேன், என்று அவர் ஒரு சமூக ஊடக பதிவில்" குறிப்பிட்டார். அத்துடன் தான் உயிரிழந்து விட்டதாக வெளியான தகவல்களையும் மறுத்த அவர், நன்றாகவுள்ளதாகவும் உறுதிபடுத்தினார். பிரேசிலிய கால்பந்து ஜாம்பவான் பீலே வழக்கமான பரிசோதனைகளின் போது உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக சாவோ பாலோவில் ஆறு நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பல உள்ளூர் ஊடகங்கள் திங்களன்று செய்தி வெளியிட்டன. 80 வயதான அவர் ஆகஸ்ட் 31 முதல் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மரு…
-
- 3 replies
- 519 views
-
-
அவுஸ்திரேலிய தொடருக்கு பின்னர் அணித் தலைவர் பதவியிலிருந்து விலக போவதாக இலங்கை அணித் தலைவர் மஹேல ஜயவர்தன தெரிவித்தார். ஏற்கனவே இருபதுக்கு 20 போட்டியின் அணித் தலைவர் பதவியிலிருந்து விலகிய மஹேல ஜயவர்தன தற்போது ஒரு நாள் போட்டி மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான அணித் தலைவர் பதவியிலிருந்து விலக போவதாக அறிவித்துள்ளார். இதேவேளை இலங்கை அணியின் தலைவராக ஏஞ்சலோ மெத்தியூஸ் நியமிக்கப்படலாம் எனவும் தெரிய வருகின்றது. http://www.virakesari.lk/article/sports.php?vid=368
-
- 3 replies
- 456 views
-
-
தல்தெக்க புனித ரீட்டா கல்லூரிக்கு முதலாவது தங்கம்; மகாஜனவுக்கு 2 பதக்கங்கள், சா. இந்துவுக்கு ஒன்று 2016-10-14 10:07:14 (கண்டியிலிருந்து நெவில் அன்தனி) கண்டி போகம்பறை விளையாட்டரங்கில் நேற்று ஆரம்பமான 32ஆவது அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவில் முதலாவது தங்கப் பதக்கத்தை தல்தெக்க புனித ரீட்டா மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த எம். மதுஷன்க வென்றெடுத்தார். 21 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் 14.42 மீற்றர் தூரத்தைப் பதிவு செய்து மெய்வல்லுநர் போட்டிக்கான முதலாவது தங்கப் பதக்கத்தை வென்றெடுத்தார். பம்பலப்பிட்டி புனித பீட்டர் கல்லூரியின் எஸ். தமெல் (13.15 …
-
- 3 replies
- 298 views
-
-
ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதிக்கு ஆஸ்திரேலிய அணி முன்னேறியது. நேற்று நடந்த காலிறுதியில் வெஸ்ட் இண்டீசை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. மற்றொரு காலிறுதியில், தென் ஆப்ரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில், ஆப்கானிஸ்தானை தோற்கடித்தது. ஐ.சி.சி., சார்பில், 19 வயதுக்குட்பட்டோருக்கான 10வது உலக கோப்பை (50 ஓவர்) கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,) நடக்கிறது. நேற்று துபாயில் நடந்த காலிறுதியில், ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ரமால் லீவிஸ், ‘பேட்டிங்’ தேர்வு செய்தார். பூரன் சதம்:வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஹெட்மியர் (1), டாஜினரைன் சந்தர்பால் (4) மோசமான துவக்கம் கொடுத்தனர். அடுத்து வந்த சோலோஜனோ (1…
-
- 3 replies
- 620 views
-
-
இலங்கைக்கு பயிற்சியளிக்க இப்போதைக்கு மஹேலவுக்கு முடியாது இலங்கை அணிக்கு பயிற்சியளிப்பதற்கு மஹேல ஜயவர்தனவால் தற்போதைக்கு முடியாது என்றும், தேசிய அணியொன்றுக்கு பயிற்சியாளராவதற்கு அவருக்கு வயது போதாது என்றும் இலங்கைக் கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார். அதேபோல் அவருடன் விளையடிய வீரர்கள் இன்னும் இலங்கை அணியில் விளையாடி வருவதால் அவரை உடனடியாக பயிற்சியாளராக்க முடியாது. அதற்கு இன்னும் சில காலம் செல்ல வேண் டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த தென்னாபிரிக்காவை சேர்ந்த கிரஹம் போர்ட் அந்த பொறுப்பிலிருந்து நேற்றும…
-
- 3 replies
- 544 views
-
-
அமைதியாக தூங்கு தம்பி.. நானும் ஒரு நாள் வருவேன்.. மைக்கல் கிளார்க் உருக்கம்! மாக்ஸ்வில்லி, நியூ செளத்வேல்ஸ், ஆஸ்திரேலியா: மறைந்த கிரிக்கெட் வீரர் பில் ஹியூக்ஸுக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் மைக்கேல் கிளார்க் உருக்கமான இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். பேச முடியாமல் துக்கம் தொண்டையை அடைக்க மிகுந்த சிரமத்துடன் தனது இரங்கல் செய்தியை வாசித்த கிளார்க்கின் நிலை மிகவும் சோகமாக இருந்தது. ஹியூக்ஸ் மரணமடைந்தது முதலே கிளார்க் சோகமாக காணப்பட்டார். தனது தம்பி போலவே ஹியூக்ஸுடன் நெருக்கமாக பழகி வந்தவர் கிளார்க். இதனால் ஹியூக்ஸின் மரணம், கிளார்க்கை உலுக்கி விட்டது. அமைதியாக தூங்கு தம்பி.. நானும் ஒரு நாள் வருவேன்.. மைக்கல் கிளார்க் உருக்கம்! இந்த நிலையில் ஹியூக்ஸ் இறுதிச்…
-
- 3 replies
- 1.3k views
-
-
முகமட் அலியை வென்ற முதல் வீரர் ஜோ விறேஸர் அண்மையில் நுரையீரல் கான்சரால் காலமானார்.அவர்களது குத்துச்சண்டை காட்சிகள் சில .... http://www.youtube.com/watch?v=QzG1WsCzXJk&feature=related
-
- 3 replies
- 1.2k views
-
-
மகளிர் பிரீமியர் லீக்: ரூ.1.6 கோடிக்கு ஏலம் போன இந்த மதுரை வீராங்கனை யார்? 16 வயதில் எப்படி சாதித்தார்? பட மூலாதாரம்,SOCIAL MEDIA படக்குறிப்பு, கமலினி கட்டுரை தகவல் எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன் பதவி, பிபிசி தமிழுக்காக இந்திய பிரீமியர் லீக் (ஐபிஎல்) போன்றே மகளிருக்கு நடத்தப்படும் மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்) போட்டிக்கான ஏலத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 16 வயதான ஆல் ரவுண்டரான கமலினியை 1.60 கோடி ரூபாய்க்கு மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியுள்ளது. கமலினி மதுரை அருகே பொருளாதார ரீதியில் பின்தங்கிய சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர். மும்பை இந்தியன்ஸ் அணி இவ்வளவு பெரிய தொகைக்கு ஏலம் எடுத்திருப்பதால் இந்திய…
-
-
- 3 replies
- 456 views
- 1 follower
-
-
19 வயதுக்குட்பட்ட பெண்கள் ஆசிய கிண்ணம் : மலேசியாவை வீழ்த்திய இலங்கை, பங்ளாதேஷிடம் தோற்றது 16 DEC, 2024 | 05:23 PM (நெவில் அன்தனி) மலேசியாவின் கோலாலம்பூர், பெயுமாஸ் கிரிக்கெட் ஓவல் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 19 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான ஆசிய கிண்ண ரி20 கிரிக்கெட் போட்டியில் பி குழுவில் இடம்பெறும் இலங்கை பெரும்பாலும் அரை இறுதி வாய்ப்பை அண்மித்துள்ளது. இப் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் ஆகியன ஏ குழுவிலும் இலங்கை, பங்களாதேஷ், மலேசியா ஆகியன பி குழுவிலும் இடம்பெறுகின்றன. மலேசியாவுக்கு எதிராக நேற்று நடைபெற்ற தனது ஆரம்பப் போட்டியில் மிக இலகுவாக வெற்றிபெற்ற இலங்கை, இன்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் பங…
-
- 3 replies
- 393 views
- 1 follower
-
-
குறைந்த டெஸ்டுகளில் 300 விக்கெட்டுகள்: அஸ்வின் உலக சாதனை! இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் உலக சாதனை படைத்துள்ளார். இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இன்று அஸ்வின் இலங்கை அணியின் கடைசி விக்கெட்டை வீழ்த்தினார். இது, அந்த அணியின் 2-வது இன்னிங்ஸில் அவர் வீழ்த்தும் 4-வது விக்கெட்டாகும் இதையடுத்து டெஸ்ட் போட்டியில் 300 விக்கெட்டுகளை எட்டியுள்ளார் அஸ்வின். 31 வயது அஸ்வின், 54-வது டெஸ்டில் 300 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தி உலக சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்பு டென்னிஸ் லில்லீ, 56 டெஸ்டுகளில் 300 விக்கெட்டுகள் வீழ்த்தியதே சாதனையாக இருந்தது. அதை அஸ்வி…
-
- 3 replies
- 494 views
-
-
ரோஜர் பெடரர் 8-ஆவது விம்பிள்டன் வரலாறு படைக்க வாய்ப்பு 4 படத்தின் காப்புரிமைJULIAN FINNEY/GETTY IMAGES இன்று ஞாயிற்றுக்கிழமை லண்டனில் நடைபெறவுள்ள விம்பிள்டன் இறுதிப் போட்டியில் ரோஜர் பெடரர் வெற்றிபெற்றால், விம்பிள்டன் வரலாற்றில் 8 முறை இந்த கோப்பை வென்ற முதல் ஆடவர் என்ற பெருமையைப் பெறுவார். மரின் சிலிக்கிற்கு எதிராக இன்று மோதும் ரோஜர் பெடரர் விளையாடும் 11வது விம்பிள்டன் இறுதி ஆட்டத்தில்,வெற்றிபெற்றால் 2000-ஆவது ஆண்டு பீட் சாம்ப்ராஸூம், 1889 ஆம் ஆண்டு வில்லியம்ஸ் ரென்ஷாவும் படைத்திருக்கும் சாதனையை முடியடித்து வரலாறு படைக்கலாம். படத்தின் காப்புரிமைGARETH FULLER - POOL/GETTY IMAGES கடந்த ஆண்டு ரோ…
-
- 3 replies
- 905 views
-