விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7844 topics in this forum
-
ஊக்கமருந்து குற்றச்சாட்டில் சிக்கிய இலங்கையின் முன்னணி கபடி வீராங்கனை By Mohammed Rishad - ஊக்கமருந்து பயன்படுத்திய குற்றச்சாட்டில் இலங்கை பெண்கள் கபடி அணியின் நட்சத்திர வீராங்கனையான சப்ரகமுவ மாகாணத்தைச் சேர்ந்த மனோரி ஜயசிங்கவுக்கு இலங்கை ஊக்கமருந்து பாவனை தடுப்பு முகவர் நிறுவனத்தினால் (SLADA) நான்கு வருட போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் பொலன்னறுவையில் நடைபெற்ற தேசிய விளையாட்டு விழாவின் போது குறித்த வீராங்கனையிடம் இருந்து சேகரிக்கப்பட்ட A மாதிரி சிறுநீரில் தடைசெய்யப்பட்ட டியுரடிக் என்ற ஊக்கமருந்து கலந்திருப்பது ஆய்வுகள் மூ…
-
- 0 replies
- 513 views
-
-
'நானும் ஹமில்டனும் சிறந்த நண்பர்கள் அல்லர்' மேர்சிடீஸ் அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஜேர்மனியின் நிக்கோ றொஸ்பேர்க், பெரிய பிரித்தானியாவின் லூயிஸ் ஹமில்டன் இருவருக்குமிடையிலான போட்டித் தன்மை குறித்து அனைவரும் அறிந்த நிலையில், தானும் அவரும் சிறந்த நண்பர்கள் அல்லர் என, றொஸ்பேர்க் ஏற்றுக் கொண்டுள்ளார். போர்மியூலா 1 காரோட்டப் போட்டிகளில் இவ்வாண்டுக்கான போட்டிகளின் ஆரம்பத்தில், றொஸ்பேர்க்குக்கும் ஹமில்டனுக்குமிடையில் 43 புள்ளிகள் வித்தியாசம் காணப்பட்டன. ஆனால், இறுதி 5 போட்டிகளில் நான்கில் வென்றுள்ள ஹமில்டன், புள்ளிகள் வித்தியாசத்தை ஒன்றாகக் குறைத்துள்ளார். அத்தோடு, அண்மைக்கால போட்டிகளில், இருவர…
-
- 0 replies
- 376 views
-
-
திண்டுக்கல்லில் அஸ்வின், கோவையில் முரளி விஜய்..! ஏலம் போன கிரிக்கெட் வீரர்கள் தமிழ்நாடு பிரிமீயர் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் வீரர்களின் ஏலம் இன்று நடைபெற்றது. அஸ்வினை திண்டுக்கல் அணியும், முரளி விஜயை கோவை அணியும், தினேஷ் கார்த்திக்கை தூத்துக்குடி அணியும் ஏலம் எடுத்துள்ளன. முதலாவது தமிழ்நாடு பிரிமீயர் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் 8 அணிகளுக்கான வீரர்கள் ஏலம், சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திண்டுக்கல், மதுரை, தூத்துக்குடி, காரைக்குடி, கோவை ஆகிய 8 அணிகளின் உரிமையாளர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு தங்களது அணிக்கான வீரர்களை தேர்வு செய்தனர். இந்திய கிரிக்கெட்…
-
- 0 replies
- 408 views
-
-
முன்னாள் சகாவான மார்ட்டினா ஹிங்கிஸை வீழ்த்தி இரட்டையர் தரவரிசையில் தொடர்ந்தும் முதலிடத்தில் சானியா 2016-08-25 10:35:47 மகளிர் இரட்டையர் டென்னிஸ் தரவரிசையில் இந்தியாவின் சானியா மிர்ஸா தொடர்ந்தும் முதலிடத்தை தக்க வைத்துக்கொண்டுள்ளார். அமெரிக்காவில் நடைபெற்ற சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டிகளின் இரட்டையர் பிரிவில் செக்.குடியரசின் பர்போரா ஸ்டிரைகோவாவுடன் இணைந்து சம்பியன் பட்டம் வென்றதன் மூலம் சானியா மிர்ஸா தனது முதலிடத்தை தக்க வைத்துக்கொண்டார். சானியாவின் முன்னாள் சகாவான சுவிட்ஸர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் மற்றும் அமெரிக்காவின் கோ…
-
- 0 replies
- 257 views
-
-
. அவுஸ்திரேலியாவிற்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணிக்கும், அவுஸ்திரேலிய அணிக்குமிடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் 3ஆவது போட்டியில் இலங்கை அணியின் சிறப்பான பந்துவீச்சால் இலங்கை அணி வெற்றிபெற்றுள்ளது. பிறிஸ்பேணில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 26.4 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 74 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. முதலாவது விக்கெட்டை 4 ஓட்டங்களுக்கே இழந்த அவ்வணி, ஒரு கட்டத்தில் 9 விக்கெட்டுக்களை இழந்து 40 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. இறுதி விக்கெட்டுக்காக மிற்சல் ஸ்ரார்க், ஷேவியர் …
-
- 15 replies
- 758 views
-
-
டி 20 கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணி உலகச் சாதனை டி 20 கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா உலகச் சாதனை ஒன்றை படைத்துள்ளது. கிளென் மேக்ஸ்வெல் அதிரடி ஆட்டம். இலங்கை அணிக்கு எதிராக கண்டி பலேகலே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலிய அணி தமது இருபது ஓவர்களில் மூன்று விக்கெட்டுகள் இழப்புக்கு 263 ஓட்டங்களை எடுத்து இந்தச் சாதனையை படைத்துள்ளது. இதற்கு முன்னர் கென்ய அணிக்கு எதிராக இலங்கை அணி ஒரு போட்டியில் பெற்றிருந்த 260 ஓட்டங்களே டி 20 சாதனையாக இருந்தது. சிறப்பாக ஆடிய கிளென் மேக்ஸ்வெல் 65 பந்துகளில் 145 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். சில நாட்கள் முன்னர்தான் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக இங்கிலாந்து அணி 4…
-
- 0 replies
- 476 views
-
-
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை சீர்குலைக்க ரஷ்ய ஹேக்கர்கள் முயற்சி: அமெரிக்கா- பிரித்தானியா குற்றச்சாட்டு டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை சீர்குலைக்கும் நோக்கில் ரஷ்ய ஹேக்கர்கள் செயற்பட்டுள்ளதாக பிரித்தானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் அமைப்புகளுக்கு எதிராக ரஷ்யாவின் ஜி.ஆர்.யு இராணுவ உளவுத்துறை, இணைய உளவு நடத்தியதாக வெளியுறவு அலுவலகம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக ஒலிம்பிக், எதிர்வரும் 2021ஆம் ஆண்டு வரை ஒத்திவைக்கப்படுவதற்கு முன்னர் இந்த தாக்குதல்கள் நடந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், சைபர் தாக்குதல்களின் தன்மை அல்லது அளவை அதிகாரிகள் விரிவாக குறிப்பிடவில்லை. அதே நேரத்தில், அமெரிக்க நீதித்துற…
-
- 0 replies
- 447 views
-
-
மெஸ்சியை விமர்சித்த அதிகாரியை நீக்குகிறது பார்சிலோனா பார்சிலோனா அணியின் அதிகாரி ஒருவர் மெஸ்சி இல்லாவி்ட்டாலும் அணி சிறப்பாக செயல்படும் என்று கூறியதுடன் விமர்சனமும் செய்திருந்தார். அவரை நீக்குகிறது பார்சிலோனா. ஸ்பெயின் நாட்டின் முன்னணி கால்பந்து கிளப் அணியான பார்சிலோனாவில் அர்ஜென்டினா அணியின் கேப்டன் மெஸ்சி தொடர்ந்து விளையாடி வருகிறார். கோபா டெல் ரெய் தொடரில் அத்லெடிக் பில்பயோ அணிக்கெதிரான போட்டியில் பார்சிலோனா அணி 4-3 என வெற்றி பெற்றது. இதற்கு 78-வது நிமிடத்தில் மெஸ்சி ப்ரீ ஹிக் மூலம் அடித்த கோல்தான் முக்கியமாக காரணமாக இருந்தது. அத்துடன் பார்சிலோனா காலிறுதிக்கு முன…
-
- 0 replies
- 377 views
-
-
எஃப்.ஏ. கோப்பை: மிடில்ஸ்ப்ரோவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது மான்செஸ்டர் சிட்டி எஃப்.ஏ. கோப்பைக்கான கால்பந்து தொடரில் மிடில்ஸ்ப்ரோ அணியை 2-0 என வீழ்த்தி மான்செஸ்டர் யுனைடெட் அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. இங்கிலாந்தில் உள்ள கிளப் அணிகளுக்கிடையிலான ‘கால்பந்து அசோசியேசன் சேலஞ்ச் கோப்பை’ கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு காலிறுதிப் போட்டியில் மிடில்ஸ்ப்ரோ- மான்செஸ்டர் சிட்டி அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கிய 3-வது நிமிடத்தில் மான்செஸ்டர் சிட்டி அணியின் டேவிட் சில்வா முதல் கோலை அடித்தார். கோல் கம்பத்தின் வலது பக்கம் 6 யார்டு தூரத்தில் இருந்து சபலேட்டா க…
-
- 0 replies
- 376 views
-
-
இலங்கை பாராலிம்பிக் வீரர் அனீக் அஹமட் காலமானார் யூ.எல். மப்றூக், இலங்கை BBCCopyright: BBC அனீக் அஹமட்Image caption: அனீக் அஹமட் புற்று நோய் காரணமாக தனது காலொன்றை இழந்த பின்னரும், விளையாட்டில் தேசிய ரீதியாக தங்கப் பதக்கங்களை வென்று சாதனைகள் படைத்த இலங்கை - கிழக்கு மாகாணம் காத்தான்குடியைச் சேர்ந்த அனீக் அஹமட் இன்று திங்கட்கிழமை காலமானார்.2019ஆம் ஆண்டு கொழும்பு சுகததாஸ மைதானத்தில் நடைபெற்ற தேசிய பராமெய் வல்லுனர்போட்டியில் கலந்து கொண்ட அனீக் அஹமட், அதில் 3 தங்க பதக்கங்களை வென்றிருந்தார். அவரின் அந்தச் சாதனை குறித்து அப்போது பிபிசி தமிழ் - கட்டுரையொன்றை வெளியிட்டிருந்தது.உதைப்பந்து விளையாடும் போது - காலில் ஏற்பட்ட…
-
- 0 replies
- 430 views
- 1 follower
-
-
புதிய ஒலிம்பிக் கோபுரம் 2016 - Solar City Tower அடுத்த ஒலிம்பிக் சர்வதேச விளையாட்டுக்கள் 2016 ல் பிரேசில் நாட்டிலுள்ள "ரியோ டி ஜெனிரோ" நகரத்தில் நடைபெற உள்ளது. அதற்கான ஒலிம்பிக் கண்காணிப்பு கோபுரம் ஒன்று அருகிலுள்ள "கடோந்துபா" தீவில் மிக பிரமாண்டமான முறையில் அமைக்கப்பட்டு வருகிறது. இது வான்வெளியாகவும், கடல் மூலமாகவும் நகருக்கு வருபவர்களை வரவேற்கவும் பயன்படும். இதில் சிறப்பம்சம் என்னவெனில், பகலில் சூரியஒளிச் சக்தி மூலம் இயக்கப்படும் இறைப்பாண்கள், கடல் நீரை மேலிருந்து அருவியாகக் கொட்டுவதன்மூலம் கிடைக்கும் உந்து சக்தியை விரயமாக்காமல் அதனைக் கொண்டு மின்சாரம் உற்பத்தி செய்ய "டர்பைன்"களை இயக்கி, இரவில் மின்சாரத் தேவையை பூர்த்தி செய்வதுதான். இதில் வணிக வளாகங்கள் கேளிக்கைக…
-
- 1 reply
- 1.2k views
-
-
ஒரே போட்டியில் முதலிடத்தை பெற்ற இலங்கை! சாதனை முறியடிப்பு! இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் நேற்று இடம்பெற்ற ஆசிய கிண்ண ரி20 போட்டியில் இலங்கை அணி 2 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்திருந்தது. இந்த வெற்றியை தொடர்ந்து இலங்கை அணி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள நிலையில் பங்களாதேஷ் அணி தொடரில் இருந்து வௌியேறுகிறது. இந்நிலையில், நேற்றைய போட்டியில் இலங்கை அணி 184 என்ற வெற்றி இலக்கை 19.2 ஓவர்களில் கடந்திருந்தது. இது ஐக்கிய அரபு அமீரகத்தில் இதுவரை இடம்பெற்ற ரி20 போட்டிகளில் அணியொன்று கடந்த பாரிய வெற்றி இலக்காகும் என ஐசிசி அறிவித்துள்ளது. இதற்கு முன்னர் 2016 ஆம் ஆண்டு ஐக்கிய …
-
- 2 replies
- 325 views
-
-
கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து வெற்றி: மியான்டட் முதல் தினேஷ் கார்த்திக் வரை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES பரபரப்பான கிரிக்கெட் ஆட்டம். ஒரு பந்து மீதமுள்ளது. வெற்றிபெறுவதற்கு 6 ரன்கள் அடிக்க வேண்டும். கடைசி பந்து சிக்ஸர் அடிக்கப்பட்டால், அதுதான் அந்த ஆட்டத்தின் மிக முக்கிய தருணமாக அமையும். இத்தகைய பரபரப்பான தருணங்களில் சிக்ஸர் …
-
- 0 replies
- 766 views
-
-
``ஏன் தடுமாறினேன்னு எனக்கே தெரியலை..!'' - பங்களாதேஷ் போட்டி பரபரப்பு சொல்லும் விஜய் ஷங்கர் #VikatanExclusive அந்தக் கடைசி பாலில் தினேஷ் கார்த்திக் மட்டும் சிக்ஸர் அடிக்கவில்லையென்றால், இந்திய ரசிகர்களிடம் சிக்கி படாதபாடுபட்டிருப்பார் தமிழத்தின் விஜய் ஷங்கர். கடைசி ஓவரில் ஒரு பெளண்டரி அடித்திருந்தாலும், 18-வது ஓவரில் தொடந்து நான்கு பந்துகளில் ரன் அடிக்காமல்விட்டதுதான் விஜய் ஷங்கர் மீது வைக்கப்படும் விமர்சனம். `பங்களாதேஷ் மேட்ச்சில் நடந்தது என்ன?' - விஜய் ஷங்கரிடம் பேசினேன். ``இந்தியாவுக்காக ஆடும் முதல் சீரிஸ். இறுதிப்போட்டியில் இந்தியாவுக்காக பேட்டிங் ஆடும் முதல் வாய்ப்பு. மிகவும் பதற்றமாக இருந்ததா?'' ``நிச்சயமா இல்லை. நான் மைதானத…
-
- 0 replies
- 724 views
-
-
யு.எஸ் ஓபன்: கலப்பு இரட்டையர் பிரிவில் சானியா சாம்பியன் இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, யு.எஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவின் இறுதிப் போட்டியில் வென்று தனது மூன்றாவது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தைக் கைப்பற்றினார். டை பிரேக் வரை சென்ற இந்த போட்டியில், 6—1 2—6 11—9 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் அமெரிக்காவின் அபிகெயில் ஸ்பியர்ஸ் மற்றும் மெக்சிகோவின் சாண்டியாகோ கொன்ஸாலஸ் ஜோடியை, பிரேசிலின் புருனோ சோர்ஸ், இந்தியாவின் சானியா ஜோடி வீழ்த்தியது. சோர்ஸ் மற்றும் சானியா கலப்பு இரட்டையர் பிரிவில் இணைந்திருப்பது இதுவே முதல்முறை. சோர்ஸ் உடன் ஆடியது மகிழ்ச்சியாக இருந்தது என்று கூறியுள்ள சானியா, ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டியிலும் இந்த ஜோடி தொடரும் என…
-
- 1 reply
- 438 views
-
-
ஓய்வு பெறும் திட்டம் இல்லை- ஷரபோவா உறுதி ஓய்வுக்கு என்று காலக்கெடு எதுவும் நான் நிர்ணயித்து கொள்ளவில்லை என உலகின் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான ரஷியாவின் மரியா ஷரபோவா கூறியுள்ளார்.#MariaSharapova மாஸ்கோ: உலகின் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான ரஷியாவின் மரியா ஷரபோவா ஊக்க மருந்து சர்ச்சையில் சிக்கி 15 மாத தடைக்கு பிறகு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் களம் திரும்பினார். ஆனால் அதன் பிறகு அவர் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. 31 வயதான ஷரபோவாவின் ஆட்டம் முன்பு போல் சிறப்பாக இல்லாததால் அவர் ஓய்வு பெறக்கூடும் என்று பேச்சு எழுந்த…
-
- 0 replies
- 385 views
-
-
நிதானம், அதிரடி என சுப்மான் கில் காட்டிய கிளாசிக் 'மாயாஜாலம்' பட மூலாதாரம்,BCCI 41 நிமிடங்களுக்கு முன்னர் தன் இருப்பை உறுதி செய்துகொள்ள இதைவிட வேறு எதையும் செய்துவிட முடியாது. முதலில் இவருக்கு ஒரு நாள் அணியில் இடம் கிடைக்க வாய்ப்பில்லை என்றார்கள். ஏனென்றால் இவருக்குப் பதிலாக அணியில் சேர்க்கப்பட்டவர் திடீரென இரட்டைச் சதமடித்துவிட்டார். இப்போது தம்மை நிலைநிறுத்திக் கொள்வதற்காக அதே சாதனையைச் செய்திருக்கிறார், சுப்மான் கில்! இத்தனை வீரர்கள் நன்றாக ஆடினால், யாரைத்தான் தொடக்க நிலையில் களமிறக்குவது என்ற குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கிறது, சுப்மன் கில்லின் அதிரடியான இரட்டைச் சதம். ஒரு காலத்தில் இரட்டைச் ச…
-
- 23 replies
- 1.1k views
- 1 follower
-
-
33 வயதில் 20 வயது வீரருக்குரிய ஃபிட்னஸ்... கெத்துக் காட்டும் ரொனால்டோ! 33 வயதில் 20 வயது வீரருக்குரிய உடல் திறனுடன் ரொனால்டோ உள்ளார். ரஷ்ய உலகக் கோப்பைத் தொடரில், மணிக்கு 33.98 கிலோமீட்டர் வேகத்தில் ஓடிய ஒரே வீரர் 33 வயதுடைய ரொனால்டோ! வேறு எந்த வீரரும் இந்த வேகத்தை எட்டவில்லை. ஏன்... 20 வயது கிலியன் எம்பாப்பேகூட இவ்வளவு வேகத்தில் ஓடவில்லை. ஆனால், போர்ச்சுகல் கேப்டன் ரொனால்டோ, அதிகபட்சமாக 33.98 கிலோமீட்டர் வேகத்தில் ஓடி கால்பந்து நிபுணர்களை வியக்கவைத்துள்ளார். ரொனால்டோவின் உடல்திறன் குறித்துப் பார்ப்பதற்கு முன், ஐரோப்பியக் கால்பந்து தொடர்கள் பற்றி அறிந்துகொள்ள வேண்டும். 1990-களில், உல…
-
- 0 replies
- 444 views
-
-
யாழ் மாவட்ட கிரிக்கெட்டில் புதிய முயற்சி “ ஜெப்னா சுப்பர் லீக்” யாழ். மாவட்டத்தில் கழகமட்ட கிரிக்கெட் விளையாட்டினை மக்கள் மத்தியில் பிரபல்யப்படுத்தும் நோக்குடன் T20 லீக் போட்டித் தொடர் ஒன்றினை யாழ் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தினர் ஏற்பாடு செய்துவருகின்றனர். “Jaffna Super League” என பெயரிடப்பட்டிருக்கின்ற இந்த போட்டித் தொடரிற்கு யாழ் மாவட்டத்தின் பிரதான நகரங்களை மையமாகக்கொண்ட 08 அணிகள் உருவாக்கப்படும். போட்டித் தொடரில் அணியின் உரிமையாளராக ஆர்வமுள்ளவர்கள் தமது கேள்வித் தொகையினை யாழ். மாவட்ட கிரிக்கெட் சங்கத்தினரிடம் முன்வைக்க வேண்டும். கேள்வித் தொகையின் அடிப்படையில், அதிகூடிய தொகையினை முன்வைத்த முதல் 08 விண்ணப்பதாரிகளும் அணிகளின் உரிமையாளர்…
-
- 0 replies
- 511 views
-
-
Time out for Sri Lanka's civil war COLOMBO, April 25, 2007 (AFP) - Tamil Tiger rebels and Sri Lankan soldiers held a truce as their national side marched to the World Cup final, but violence broke out soon after stumps were drawn. Five hours after the semi-final against New Zealand ended in Jamaica early Wednesday, two policemen were killed in a roadside blast. Suspected Tiger rebels set off the bomb in the eastern district of Ampara, the defence ministry said. Police and military officials said there were no clashes reported during the live broadcast of the match, which Sri Lanka won to qualify for Saturday's final in Barbados. A military sou…
-
- 7 replies
- 2.2k views
-
-
Powerlifting போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதித்த தனலட்சுமி முத்துக்குமார குருக்கள்
-
-
- 3 replies
- 608 views
-
-
தொடர்ச்சியாக 98 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி டி வில்லியர்ஸ் சாதனை! தென்ஆப்ரிக்க அணியின் கேப்டன் டி வில்லியர்ஸ் தொடர்ச்சியாக 98 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று புதிய சாதனை நிகழ்த்தியுள்ளர். தென்ஆப்ரிக்க அணியின் கேப்டன் டி வில்லியர்ஸ் கடந்த 2004ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் அறிமுகம் ஆனார். அது முதல் இந்த ஆண்டு ஜனவரி மாதம் வரை டி வில்லியர்ஸ் தொடர்ச்சியாக 98 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றிருந்தார். ஆனால் வங்கதேச சுற்றுப்பயணத்தின் போது, அவரது மனைவி கர்ப்பிணியாக இருந்த காரணத்தினால், தாய்நாடு திரும்பினார். இதனால் வங்கதேச அணிக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளில் அவர் பங்கேற்கவில்லை. இதன் காரணமாக தொடர்ச்சியாக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற சாதனையை அவரால் படைக்க முடியாமல் போ…
-
- 0 replies
- 301 views
-
-
உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் அரையிறுதிக்கு முன்னேறும் நான்கு அணிகள் எவை? உலகக்கிண்ண தொடரில் அரையிறுதிக்கு முன்னேறும் நான்கு அணிகளை, இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், கிரிக்கெட் வர்ணணையாளருமான சுனில் கவஸ்கார் கணித்துள்ளார். கிரிக்கெட் இரசிகர்கள் தற்போது இங்கிலாந்தில் ஆரம்பமாகவுள்ள 50 ஓவர் உலகக்கிண்ண தொடரை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். இந்தநிலையில், இத்தொடரில் சம்பியன் பட்டம் வெல்லப் போகும் அணி எது, அரையிறுதிக்கு முன்னேறும் அணிகள் எவை என்பது குறித்து முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து கூறி வருகிறார்கள். இதற்கிடையில், அரையிறுதிக்கு முன்னேறும் நான்கு அணிகளை கவஸ்கார் கணித்துள்ளார். இதுகுறித்து அவர்…
-
- 3 replies
- 1.3k views
-
-
சிரேஷ்ட கிரிக்கட் பயிற்றுவிப்பாளர் லயனல் மெண்டிஸ் காலமானார். இலங்கையின் சிரேஷ்ட கிரிக்கட் பயிற்றுவிப்பாளர் லயனல் மெண்டிஸ் காலமானார். நேற்றிரவு கொழும்பு தனயார் வைத்தியசாலை ஒன்றில் அவர் உயிரிழந்ததாக அவரின் குடும்ப உறவினர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 5 தகாப்த காலமாக இலங்கை கிரிக்கட் துறைக்கு பாரிய சேவைகள் ஆற்றியுள்ள இவர் கடந்த சில தினங்களாக நோய்வாய்ப்பட்டிருந்தார். ரொஷான் மகானாம, அர்ஜுன ரணதுங்க, ப்ரண்டன் குறுப்பு, மஹேல ஜயவர்தன உட்பட முன்னணி கிரிக்கட் வீரர்கள் பலர் இவரிடம் ஆரம்ப பயிற்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. http://tamil.adaderana.lk/news.php?nid=73352
-
- 0 replies
- 285 views
-
-
இங்கிலாந்து முதலிடம் ; இலங்கை எட்டாமிடம் ஐ.சி.சி. ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் புள்ளிகள் அடிப்படையில் முதல் இடங்களை பிடித்த அணிகள், பந்து வீச்சாளர், துடுப்பாட்ட வீரர் மற்றும் சகலதுறை ஆட்டக்காரர்களுக்கான பட்டியலை வெளியிட்டுள்ளது. 12 ஆவது சர்வதேச ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரானது நிறைவடைந்துள்ள நிலையிலேயே மேற்படி பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது. அந்தப் பட்டியலில் 125 புள்ளிகளுடன் இங்கிலாந்து அணி முதலில் இடத்திலும், துடுப்பாட்டத்தில் 886 புள்ளிகளுடன் விராட் கோலியும், பந்து வீச்சில் 809 புள்ளிகளுடன் பும்ரா முதலாவது இடத்திலும் உள்ளனர். * ஒருநாள் அணிப் பட்டியில் : 1. இங்கிலாந்து - 125 2. இந்தியா - 122 3. நியூஸிலாந்து - 122…
-
- 0 replies
- 556 views
-