எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3794 topics in this forum
-
யாழ்.பல்கலையின் உயரிய விருது பெறுகிறார் முள்ளிவாய்க்கால் மாணவன் சிறீ.! வன்னியின் இறுதிப்போரின் அடையாளமாக விளங்குகின்ற முள்ளிவாய்க்கால் மண்ணில் பிறந்து போருக்குள்ளேயே வாழ்ந்த யேசுரட்ணம் சிறீ என்ற மாணவன் யாழ்.பல்கலைக்கழகத்தின் உயரிய விருதாகிய துரைராஜா விருதினை வென்று சாதனை படைத்துள்ளார். யாழ் பல்கலைக்கழகத்தின் வருடாந்த பட்டமளிப்பு விழாவில் கல்வி, விளையாட்டு தலைமைத்துவம் முதலிய பல துறைகளிலும் சிறப்பாக செயற்பட்ட மாணவர்களில் ஒருவர் தெரிவுசெய்யப்பட்டு யாழ் பல்கலையின் உயரிய விருதாகிய துரைராஜா விருது வழங்கப்படுவது வழக்கமாகும். அதன் அடிப்படையில் எதிர்வரும் 24 மற்றும் 25 ம் திகதிகளில் யாழ் பல்கலையின் 35வது பொதுப்பட்டமளிப்பு விழா இடம்பெறவுள்ளது. குறித்த பட்டமளி…
-
- 0 replies
- 682 views
-
-
மட்டக்களப்பில் சிறப்பாக இடம்பெற்ற களவெட்டி பொங்கல் விழா 33 Views விவசாயிகள் அறுவடை நிறைவுபெற்றதும் தமிழர்களினால் பாரம்பரியமாக செய்யப்பட்டுவரும் களவெட்டி பொங்கல் விழா இன்று மட்டக்களப்பு, போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது. தமிழர்களின் கலைகலாசர பண்பாட்டு விழுமியங்களை எதிர்கால சந்ததிக்கு கொண்டுசெல்லும் வகையில் போரதீவுப்பற்று பிரதேச செயலகமும் கலாசார திணைக்களமும் இணைந்து இந்த நிகழ்வினை ஏற்பாடுசெய்திருந்தது. தற்போது அறுவடை காலம் நடைபெற்றுவரும் நிலையில் அறுவடையை பூர்த்திசெய்வோர் வயல் நிலத்தில் பொங்கிப்படைத்து பூமாதேவிக்கும் சூரியனுக்கும் நன்றி செலுத்தும் வகையில் அனுஸ்டித்…
-
- 0 replies
- 712 views
-
-
வடக்கு நீர் தேவைக்கான சுயமான தீர்வுகள் February 13, 2021 — சிக்மலிங்கம் றெஜினோல்ட் — Face Book இல் பகிர்வதை (Share)தவிர, வேறு எதையும் பகிர்வதென்பது மனிதர்களுக்குப் பெரிய சிரமமான காரியமாகவே உள்ளது. அது அதிகாரத்தைப் பகிர்வதாக இருந்தாலென்ன, உரிமைகளைப் பகிர்வதாக இருந்தாலென்ன, சொத்துகளை, பணத்தை, உடமைகளை என எதைப் பகிர்வதாக இருந்தாலும்தான். அப்படித்தான் தண்ணீரைப் பகிர்வதும் முடியாமலிருக்கிறது. இதனால், இனப்பிரச்சினை, சாதிப்பிரச்சினை, சமூகப் பிரச்சினை, மதப்பிரச்சினை போல தீராத – தீர்க்கக் கடினமாக உள்ள இன்னொரு பிரச்சினை, நீர்ப்பிரச்சினை என்றாகியுள்ளது. ஆனாலும் மனிதர்களால் எல்லாப் பிரச்சினையையும் தீர்க்க முடியும் –எதற்கும் தீர்வைக் காணவும் மு…
-
- 0 replies
- 644 views
-
-
நாட்டுப்பற்றாளர் ஊடகவியலாளர் புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி..! – மது நோமன் 20 Views இன்று சத்தியமூர்த்தியின் நினைவு நாளையொட்டி அவர் தொடர்பான கட்டுரை பிரசுரமாகின்றது. பெயருக்கேற்பவே சத்தியம் காத்த உத்தமனாக இந்த நாட்டுப்பற்றாளன் உறங்கிப்போக, பெற்றவர்களும் அவனைப் பெற்ற புண்ணியவான்களாக கால ஏட்டில் பதிந்துபோனார்கள் என்றால் அது மிகையாகாது தனது ஆற்றல்களால் மட்டுமன்றி தனது உயர் பண்புகளாலும் பலராலும் அறியப்பட்டு நேசிக்கப்பட்ட ஊடகவியலாளர் பு. சத்தியமூர்த்தி அவர்கள், ஒரு பல்துறை நாயகன். தாயக மண்ணில் காத்திரமான தடங்களைப் பதித்த அவரது சுவடுகள் அழகானவை மட்டுமல்ல ஆழமானவையுங்கூட. ஐப்பசித் திங்கள் 30ஆம் நாள் 1972 அன்…
-
- 1 reply
- 1.4k views
-
-
பெரும் ஊடகச் சமராடிய நாட்டுப்பற்றாளர் ஊடகவியலாளர் பு.சத்தியமூர்த்தி நினைவு சுமந்து ஒரு பெரும் ஊடகச் சமராடியை நாம் இழந்து நிற்கிறோம். எம்மினத்தின் அவலத்தை வானொலி’ ஊடாக உலகம் முழுவதும் தெரியப்படுத்திய அந்த அற்புதமான மனிதநேய ஊடகவியலாளர் பு.சத்தியமூர்த்தியின் பிரிவு எமையெல்லாம் துன்பத்தில் ஆழ்த்தியுள்ளது. அவர் ‘ஈழமுரசு’ வாரப்பத்திரிகையில் வாராந்த ஆய்வுக் கட்டுரைகளும், ‘தமிழீழத் தேசியத் தொலைக் காட்சி’ யில் தினமும் நடாத்திய நாளிதழ் நேரம் நிகழ்ச்சியும், நிலவரத்தில் கு.வீராவுடன் நிகழ்த்திய கலந்துரையாடல்களும் எமது நினைவை விட்டு நீங்காத விடயங்கள் எம் தேசத்தின் ஊடகக் குரல்கள் பலதடவை நசுககப்படடன. நிமலராஜன் முதல் தராகி சிவராம் வரையான இழப்புக்களின் வரிசையில் சத்தியமூ…
-
- 0 replies
- 577 views
-
-
பொட்டு அம்மானும் - இந்திய படைகளும்! | பாகம் 01 படுகாயமடைந்த பொட்டு அம்மானும் - கிட்டு அம்மாவும்! தமிழீழத்தை இந்தியப் படையினர் ஆக்கிரமித்து நின்ற காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த முக்கிய தளபதிகள் பல்வேறு இன்னல்களை அனுபவிக்கவேண்டி நேர்ந்தது. பின்னய நாட்களில் விடுதலைப்புலிகள் அமைப்பிலும் உலக அரங்கிலும் அதிகம் பிரசித்தி பெற்றுத்திகழ்ந்த சிலர், இந்தியப்படை ஆக்கிரமிப்பு காலத்தில் எப்படியான துன்பங்களை, சவால்களை அனுபவிக்க நோந்தது என்று மீட்டுப்பார்ப்பது காலத்தின் தேவையாகின்றது. இன்றைய பதிவில் தமிழீழத்தின் புலனாய்த்துறை பொறுப்பாளர் பொட்டு அம்மான் பற்றி விரிவாக பார்ப்போம். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இந்தியப் படையினருக்கும் இடையில் யுத்தம் ஆரம்பமானதைத் தொ…
-
- 1 reply
- 2.1k views
-
-
மாங்குளம் மாநகர் – கருகிய கனவு February 3, 2021 — சிக்மலிங்கம் றெஜினோல்ட் — கி.பி. 1990களில் நல்லூர் வளாகத்தில் விடுதலைப் புலிகளினால் தமிழீழக் கண்காட்சி நடத்தப்பட்டதைச் சிலராவது இன்னும் நினைவில் வைத்திருக்கக் கூடும். அதில் முக்கியமான ஒன்று மாங்குள நகர்த்திட்டம். வடக்கின் அபிவிருத்தி, சமனிலையான நிர்வாகப் பரவலாக்கம், தொடர்பாடல், குடிசனப்பரம்பல் ஆகியனவற்றை மனதிற் கொண்டு இந்தத் திட்டத்தைப் புலிகள் முன்மொழிந்திருந்தனர். முக்கியமாக, வடக்கிற்கான பெருநகரொன்றை உருவாக்குவதற்குரிய விரிந்த நிலப்பரப்பும் நீர்வளமும் மாங்குளத்தில் உண்டு. வடக்கிலுள்ள ஐந்து மாவட்டங்களையும் குறுக்கும் மறுக்குமாக இணைக்கும் (வவுனியா –கிளிநொச்சி – யாழ்ப்பாணம் மறுபக்கமாக முல்லைத்த…
-
- 1 reply
- 980 views
-
-
29.01.2006 அன்று சிங்கள பேரினவாத அரசால் கடத்தப்பட்ட தமிழர் புனர்வாழ்வுக்கழகப் பணியாளர்கள் . தமிழர் புனர்வாழ்வுக்கழகப் பணியாளர்கள் கடத்தல். 2006 ஜனவரி 29 ஆம்,30ஆம் நாட்களில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் 10 பணியாளர்கள் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் பொலநறுவ மாவட்டத்திலுள்ள வெலிக்கந்தப் பிரதேசத்திலிருந்து கடத்திச் செல்லப்பட்டனர்.அவ்வேளையில் அவர்கள் மட்டக்களப்பு அலுவலகத்திலிருந்து கிளிநொச்சியிலுள்ள அலுவலகத்திற்குச் சென்று கொண்டிருந்தார்கள்.ஒரு சில நாட்களின் பின்னர் இரு பெண்கள் விடுதலை செய்யப்பட்டனர்.இன்னொரு பெண்ணான எஸ் டோசினி என்பவரும் கடத்தல் காரர்களால் விடுதலை செய்யப்பட்டார். ஏனைய ஏழு பணியாளர்களும் இற்றைவரை காணாமலே போயுள்ளனர். இவர்களை விடுதலை செய்யுமாறு 2…
-
- 2 replies
- 1.5k views
-
-
விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளி ஒருவர் பௌத்த மதத்தை தழுவி, முல்லைத்தீவு எல்லைக்கிராமங்களில் பௌத்த மத கட்டுமானங்களிற்கு பல இலட்சம் ரூபாக்களை வழங்குவதாக அறிவித்துள்ளார். தமிழ் தேசத்தை விட, சிங்கள தேசம் சிறந்தது என்றும் கூறியுள்ளார், தற்போது, வெலி ஓயா பிரதேசத்திலுள்ள விகாரையொன்றில் 4 மில்லியன் ரூபா செலவில் தாதுகோபுரம் ஒன்றை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளாராம். இந்த தகவல்களை சிங்கள ஊடகங்களும், சமூக ஊடகங்களும் உற்சாகமாக பகிர்ந்து வருகின்றன. நமக்கு நல்லதொரு தமிழன் வாய்த்தான் என, சிங்கள சமூக ஊடகங்கள் அந்த நபரை புகழ்ந்து வருகின்றன. முல்லைத்தீவை சேர்ந்த கிருபாகரன் (38) என்ற நபரே இவ்வாறு பௌத்தத்தை வளர்ப்பதில் குறியாக உள்ளதாக கூறப்படுகிறது. …
-
- 17 replies
- 3.2k views
-
-
கிழக்கிலங்கையின் பத்ததிச் சடங்குகளும் அவற்றில் பல்லுயிர் பேணுதலும்: ஓர் ஆய்வு – பகுதி 2 2 Views சடங்குகள் நடைபெறும் பருவ காலம் கிழக்கிலங்கையில் பத்ததிச் சடங்குகள் மிகப் பெரும்பாலும் நடத்தப்படும் பருவ காலமாக சித்திரை தொடக்கம் ஐப்பசி வரையான மாதங்கள் விளங்கி வருகின்றன. இக்காலப்பகுதி பெரும்பாலும் வரட்சியான காலமாகவே அமைந்து வருகின்றது. இக்காலத்தில் இயற்கையிலிருந்து வாழ்வாதாரங்களைப் பெற்றுக் கொள்வது கடினமானதாக இருப்பதுடன் மனிதர்கள் வழமைபோல் இக்காலத்திலும் இயற்கையினை நுகர்வு செய்ய முற்பட்டால் பிற ஜீவராசிகளுக்கான வாழ்வாதாரங்களைப் பெற்றுக் கொள்வதில் சவால்கள் எழுவது தவிர்க்க முடியாததாகி விடும். அதாவது வரட்சியான காலங்களில் இயற்கையான …
-
- 0 replies
- 906 views
-
-
இப்படி இருந்ததை எங்கட சட்டாம்பிகள்.. சிங்கள எஜமானத்துக்கு வால்பிடிச்சு.. இப்படி ஆக்கிட்டாய்ங்க..
-
- 9 replies
- 2k views
-
-
விஜயபா கொள்ளை : 500 ஆண்டுகள் | வரலாறு – நாவல் – சினிமா | என்.சரவணன் இலங்கையின் வரலாற்றை புரட்டிப்போட்ட வரலாற்று நிகழ்வுகளில் ஒன்றாக விஜயபா கொள்ளை நிகழ்வைக் குறிப்பிடுவது வழக்கம். அது நிகழ்ந்து 2021 ஆம் ஆண்டுடன் ஐந்நூறு ஆண்டுகள் ஆகிவிட்டன. தென்னிலங்கையின் மீதான யாழ்ப்பாணத்தின் ஆக்கிரமிப்பில் இருந்து தற்காத்துக்கொள்ளவே கோட்டை ராஜ்ஜியத்தின் உருவாக்கம் நிகழ்ந்தது எனலாம். யாழ்ப்பாணத்தை அப்போது ஆரியசக்கரவர்த்தி ஆட்சிபுரிந்துவந்தார். தனது படைப்பலத்தால் வடக்கில் இருந்து படிப்படியாக இலங்கையின் நடுப்பகுதியை நோக்கி தனது ஆட்சியை நகர்த்திக்கொண்டு வருவதை உணர்ந்த மூன்றாம் விஜயபாகுவின் தளபதியாக இருந்த அலகக்கோணார அதிலிருந்து தற்காத்துக்கொள்ள ஒரு பெரும் கோட்டையை அமைத்தான். அந…
-
- 1 reply
- 4.5k views
-
-
92 வயதிலும் துடிப்பாக இயங்கும் விவசாயியின் அன்றைய தற்சார்பு வாழ்வு அனுபவங்கள் 92 வயதிலும் துடிப்பாக இயங்கும் விவசாயியின் அன்றைய தற்சார்பு வாழ்வு அனுபவங்கள் யாழ்ப்பாணம் - வலிகாமம் தெற்கு பிரதேசத்தின் ஏழாலையில் வசிக்கும் தியாகராசா ஐயாத்துரை எனும் 92 வயதான விவசாயியின் அன்றைய தற்சார்பு வாழ்வின் சில பக்கங்களை ஆவணப்படுத்தும் முயற்சியே இது. இப்போதும் சிறிய அளவில் விவசாயம் செய்து வருவதோடு பயிர்களுக்கு தண்ணீர் கட்டுதல், புல்லு பிடுங்குதல் போன்றவற்றை தானே செய்தும் வருகின்றார். பல ஆடுகள், மாடுகளை பராமரித்து வந்த இவர் தற்போது ஒரு மாட்டை தானே பராமரித்து வருகிறார். இப்போது அவரது விவசாயம், கால்நடை வளர்ப்புக்கு மகள் ஒத்துழைப்பாக இருந்து வருகின்றார். தான் இன்…
-
- 0 replies
- 801 views
-
-
நேரு என்கிற மாவீரனின் மரணம். 214 Views ஈழப் போராட்ட முன்னோடிகளில் ஒருவரும், தேசியத் தலைவரின் வழிகாட்டலில் கடற் புலிகளுக்கு முன்னதான கடல் வழங்கலில் ஈடுபட்டவரும், ‘வெளிச்சவீடு’ இணையத்தள ஆசிரியருமான வாசுதேவர் என்றழைக்கப்படும் நேரு அண்ணா இன்று எம்மை விட்டுப் பிரிந்து விட்டார். அவருடன் பயணித்த உறவுகளின் அனுபவப் பகிர்வுகள் இங்கே: பரணி கிருஸ்ணரஜனி ஒருங்கிணைப்பாளர் – நந்திக்கடல் கோட்பாட்டுருவாக்க சிந்தனைப் பள்ளி. ஈழப் போராட்ட முன்னோடிகளில் ஒருவரும்/ தேசியத் தலைவரின் வழிகாட்டலில் கடற் புலிகளுக்கு முன்னதான அனைத்துலகக் கடல் வழங்கலில் ஈடுபட்டவரும்/ ‘வெளிச்சவீடு’ இணையத்தள ஆசிரியருமான வாசுதேவர் நேரு அண்ணா கொரோனா த…
-
- 0 replies
- 1.3k views
-
-
விமலசேன விமலாவதி அவர்களுக்கு ‘‘நாட்டுப்பற்றாளர்’’ மதிப்பளிப்பு. தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்குப் பல்வேறு வழிகளிலும் செயலாற்றிய விமலசேன விமலாவதி அவர்கள் நாட்டுப்பற்றாளராக மதிப்பளிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அனைத்துலகத் தொடர்பகம் ,விடுத்துள்ள அறிக்கை வருமாறு: 11.01.2021 விமலசேன விமலாவதி அவர்களுக்கு ‘‘நாட்டுப்பற்றாளர்’’ மதிப்பளிப்பு. தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்குப் பல்வேறு வழிகளிலும் செயலாற்றிய விமலசேன விமலாவதி அவர்கள், 06.12.2020 அன்று சுகவீனம் காரணமாகத் தாயகத்தில் சாவடைந்தார் என்ற செய்தி எம்மைப் பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்திய இராணுவத்துடனான போர்க்காலம் தொடங்கி முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை வரையிலும் பெரும…
-
- 0 replies
- 965 views
-
-
ஆனையும்...தமிழர், ஊர்களும். 01)ஆனையிறவு 02)ஆனைப்பந்தி 03)ஆனைக்கோட்டை 04)ஆனைவிழுந்தான் 05)ஆனைமடு ஆம், எங்கள் தொல்லூர்களில் எல்லாம் "ஆனை"யும் நெருக்கமாய் உறவாடி நிமிர்கின்றது. ஆனைக்கும் எமக்குமான இந்த நெருக்கம் தமிழர்தம் வீரக்கதைகள் சொல்வதாய் யான் இயம்பினேன். "மாடு கட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல் என்று, யானை கட்டி போரடித்த அழகான தென்மதுரை" என்ற அழகான வரிகள் மூலம் தமிழரின் தன்னிறவையும் ஆனையை அன்புடன் விவசாயத் தேவைக்காகவும் அரவணைத்து வீரவாழ்வுதனை கண்ட வீரவம்சத்தை ஆதாரமாக்கி துணை கொண்டேன். "ஆனை வியாபாரம்" காரணமாய் எழுந்த பெயர்கள் இவை என நண்பன் புலம்பி…
-
- 0 replies
- 777 views
-
-
பார்வையிழந்த நிலையிலும் இஞ்சி மற்றும் மஞ்சள் செய்கையில் வெற்றிகண்ட விவசாயி.! வவுனியா புளியங்குளம் கல்மடு கிராமத்தில் வசிக்கும் த. தவராசா என்ற 67 வயதுடைய பார்வையிழந்த விவசாயி தமது இயலாமையிலும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் மேற்கொண்ட விவசாயம் இன்று வெற்றியளித்துள்ளது. வட மாகாண விவசாய திணைக்களத்தினால் வழங்கப்பட்ட இஞ்சி மற்றும் மஞ்சள் விதைகளை கொண்டு தனது காணியில் சுமார் ஒரு பரப்பில் செய்த செய்கையானது இன்று வெற்றியளித்துள்ள நிலையில் அறுவடைக்காக காத்திருக்கின்றார். நாட்டில் மஞ்சலுக்கு ஏற்பட்டுள்ள சந்தை வாய்ப்பை கருத்தில் கொண்டு விவசாய திணைக்களத்தினை நாடிய இவர் அவர்களது ஆலோசனையின் பிரகாரம் மஞ்சலுடன் இஞ்சியையும் செய்கை பண்ணியிருந்தார்.பார்வை இழந்த நிலையிலும் த…
-
- 5 replies
- 1k views
-
-
அருட்பணி.மேரிபஸ்ரியன் 36 வது ஆண்டு நினைவாக…. 46 Views அன்று 1985 புதுவருட திருப்பலி வஞ்சியன்குளம் புனித இராயப்பர் ஆலயம் வழமையான நேரம் காலை 9.30 மணி மாமரத்தில் கட்டப்பட்ட மணி மிகையொலியூட்டி நறுவிலிக்குளம் புதுக்கமம் வஞ்சியன்குளம் ஊர்களின் மக்களை திருப்பலிக்கு ஒன்று கூட்டும் பணியை கோயில் மெலிஞ்சியார் பொறுப்புணர்வுடன் செய்து முடித்திடுவார். குறிப்பிட்ட நேரம் தவறாமல் அந்த இளநீல ஜமகா 125 மோட்டார் சைக்கிள் வங்காலைப்பங்கு இல்லத்தில் இருந்து வந்து நிற்கத்தவறுவதில்லை. புத்தாண்டின் புதுபொலிவுடன் மக்கள் மகிழ்ந்து நிற்கவேண்டிய அன்றைய புதுவருடம் நிறைவாக இல்லை. ஏனெனில் 04.12.1984 அன்று மன்னார் முருங்கன் பதினொராம் கட்டைப்பகுத…
-
- 0 replies
- 811 views
-
-
வறிய, ஆதரவற்ற சிறார்களுக்கு வாழ்வளித்த திருநாவுக்கரசு நாயனார் குருகுல ஆதீனம்.! " மனிதநேய சேவையில் 45 ஆண்டுகள் நிறைவு " நாட்டில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் காரணமாக கலை,கலாசாரம்,கல்வி மற்றும் ஆன்மீக ரீதியாக தடம்புரண்டு சென்று கொண்டிருந்த தமிழ் இளைஞர்களை நெறிப்படுத்தவென 1976இல் ஸ்தாபிக்கப்பட்ட சமய நிறுவனமே அம்பாறை மாவட்ட திருநாவுக்கரசு நாயனார் குருகுல ஆதீனமாகும். இந்த ஆதீனம் யாழ்ப்பாணம் சுன்னாகத்தைச் சேர்ந்த ஆங்கில ஆசான் இறைபணிச் செம்மல் அமரர் சுவாமிநாதன் தம்பையா அடிகளாரின் தீர்க்கதரிசனத்தில் உதித்து இன்று விருட்சமாக வளர்ந்து நிற்கிறது.யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் இருந்து 1976ஆம் ஆண்டு அம்பாறை மாவட்டம் பொத்துவில் பிரதேசத்திற்கு ஆங்கில ஆசானாக இடமாற்றம் பெ…
-
- 0 replies
- 563 views
-
-
துணிச்சல் மிக்க அரசியல் போராளி மாமனிதர் குமார் பொன்னம்பலம் – இன்று 21 ஆவது நினைவு தினம் 27 Views ஈழத் தமிழர் போராட்ட வரலாற்றில் மறக்கமுடியாத ஓர் அத்தியாயம் மாமனிதர் குமார் பொன்னம்பலம் 2000 ஆண்டு ஜனவரி 5 ஆம் திகதி கொழும்பில் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு. இன்று இருபது ஆண்டுகள் கடந்து 21 வருடங்களாகிவிட்ட நிலையிலும் அவரை தமிழ் பேசும் மக்கள் எளிதில் மறக்க மாட்டார்கள். சிங்கத்தின் குகைக்குள் இருந்துகொண்டு புலியாக உறுமிய குமார் பொன்னம்பலத்துக்கு அவர் மரணமடைந்த பின்னர் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் மாமனிதர் விருதுவழங்கிக் கௌரவித்தார். குமாரின் மனைவியும், பிள்ளைகள் இருவரும் நேரில் சென்று அதனைப் பெற்றுக்கொண்டார்கள். …
-
- 0 replies
- 901 views
-
-
எமது மக்களை பிடித்த துன்பமும் துயரமும் அகன்று எமது மக்களுக்கு விடிவு பிறக்கும் ஜனவரி 1, 2021/தேசக்காற்று/தமிழீழத் தேசியத் தலைவர் எண்ணத்திலிருந்து/0 கருத்து எமது மக்களை பிடித்த துன்பமும் துயரமும் அகன்று எமது மக்களுக்கு விடிவு பிறக்கும். எமக்கு முன்னால், காலவிரிப்பில், ஒரு புது யுகம் எமக்காகக் காத்திருக்கிறது. எமக்குப் பின்னால் கடந்த காலத்தில், இரத்தம் தோய்ந்த விடுதலை வரலாறு நீண்டு செல்கிறது. மானிடத்தின் விடுதவைக்காக மாபெரும் தியாகங்கள் புரிந்த வரலாற்றுப் பெருமையுடன், எமது விடுதலை இயக்கம் பிறக்கப்போகும் புது யுகத்தில் காலடி வைக்கிறது. இப்புது யுகம் எமக்குச் சொந்தமானது. அநீதியையும், அடக்குமுறையையும் எதிர்த்து, நீதிக்கும் சுதந்திரத்திற்க…
-
- 0 replies
- 772 views
-
-
கோவிட் -19 இன் தாக்கத்தால் வருமானமிழந்த ஒரு சிற்பக் கலைஞரின் இன்றைய நிலை…! -கோ.ரூபகாந் January 1, 2021 தமிழ் மக்களின் வாழ்வியலில் கலைகளுக்கும் சிறப்பான இடமுண்டு. நடனம், நாட்டியம், சிற்பம் செதுக்கல், ஓவியம் என கலைகள் நீண்டு செல்கின்றன. புராதன மன்னராட்சிக் காலத்தில் இருந்து இந்த கலைகள் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளதுடன், ஆலயங்களை மையமாக கொண்டும் கலைகள் வளர்ச்சியடைந்துள்ளன. ஒவ்வொரு கலைகளிலும் கைதேர்ந்தவர்கள் இருந்து வந்ததுடன், அவர்கள் பரம்பரை பரம்பரையாக அதனை தமது சந்ததிக்கு கொண்டும் சென்றுள்ளனர். கலைஞர்களின் திறமையும், நுணுக்கமும் பலரையும் கவர்ந்துள்ளதுடன், கலைகள் கலைகளுக்காக அல்ல. மக்களுக்காகவே கலைகள் என்ற சிந்தனைக்கு அமைவாக அவர…
-
- 1 reply
- 687 views
-
-
இயற்கை வனப்புடைய கிழக்கு மாகாணம் சுற்றுலாத் தளமாகுமா? – மட்டு.நகரான் 104 Views கிழக்கு மாகாணம் இயற்கையின் உறைவிடமாகவும், சுற்றுலாத்துறையினரைக் கவரும் பகுதியாகவும் கருதப்படுகின்றது. குறிப்பாக வடகிழக்கு பகுதியென்பது இயற்கை அன்னையின் கொடையாக கருதப்படுகிற போதிலும், இன்னும் உலகின் கண்களுக்கு தெரியாத பகுதியாகவே காணப்படுகின்றது. தமிழர்கள் தங்களது இயற்கையைப்பேணி, அதனை ஏனையவர்கள் கண்டு ரசிக்கும் நிலையினை ஏற்படுத்துவதன் மூலமாக எதிர்காலத்தில் பாரிய வருமானங்களை இப்பகுதி ஈட்டுவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக வலுப்பட்டு வருகின்றது. வடகிழக்கில் …
-
- 0 replies
- 1.2k views
-
-
ஈழம் என்கின்ற சொல்லை ஈந்த ஈழவூர் - சர்மிளா வினோதினி ஈழம் என்கின்ற சொல் இலங்கையின் பூர்வீகப் பெயராக இருந்து வருகின்ற போதும் இலங்கை அரசைப் பொறுத்தவரை அது பயன்பாட்டிற்கு மறுதலிக்கப் படுகின்ற பெயராக மாறி இருக்கிறது. இந்த நிலையில் ஈழம் என்கின்ற சொல் தோன்றுவதற்குக் காரணமாக இருந்த ஈழவூர் என்கின்ற கிராமத்தைப்பற்றி அனேகமானவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. தொன்மங்களை சுமந்த நிலம். கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் பொன்னாவெளி கிராம அலுவலர் பிரிவின்கீழ் அமைந்திருக்கிறது ஈழவூர் என்னும் பழம் பெரும் கிராமம். பெயருக்கு என்றால் போல் ஆதி இரும்புக்கால எச்சங்களைத் தன்னகத்தே கொண்டிருக்கின்ற நிலமாக அடையாளப் படுத்தப்படுகின்ற ஈழவூரில் அமைந்துள்…
-
- 1 reply
- 1.3k views
-
-
தமிழ் இறைமைச் சிந்தனைப் பள்ளியே தேசியத் தலைவரின் வழிகாட்டி – தமிழ்நெற் நிறுவக ஆசிரியர் ஜெயா National Leader Hon. V.Pirabaharan 62 Views மாமனிதர் சிவராம், தேசியத்தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் இராணுவ-அரசியல் நடவடிக்கைகளைத் தனது போராட்ட, தென்னிலங்கை சார் பட்டறிவோடும் உலகளாவிய புவிசார் அரசியலின் சர்வதேச வியூகங்களோடும் பார்க்கத் தலைப்பட்டபோது, தலைவர் பிரபாகரனுக்கென்றோர் அரசியற் சிந்தனைப் பள்ளி இருக்கிறது என்பதை அடையாளங் கண்டுகொண்டார். தலைவர் பிரபாகரனின் ஐம்பதாவது பிறந்தநாளைக் குறியீடாக வைத்து தென்னிலங்கையையும் சர்வதேசத்தையும் நோக்கிச் சிவராம் வரைந்த கட்டுரை ஒன்று டெய்லி மிரர் என்கிற கொழும்பில் இருந்து வெளியாகும் ஆங்க…
-
- 1 reply
- 928 views
-