எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3795 topics in this forum
-
நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் மூனா 'நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம்' என்ற இந்த கட்டுரையானது எனது புனர்வாழ்வுப் பணியில் நான் பயணித்த பொழுது பெற்ற ஞானம். எதையுமே இலகுவாகத்தான் எடுத்துக் கொண்டேன். ஒற்றுமையாக நாம் இணைந்து பயணித்தால் நாங்கள் நலம் பெறலாம், நாடு வளம் பெறலாம் என்பது எனது இந்தப் பாதையினூடான அனுபவம். அந்தப் பாதையில் நீங்களும் இணைந்து கொண்டால் மகிழ்ச்சி அடைவேன். கட்டுரைக்கு வருவதற்கு முன், தமிழர் புனர்வாழ்வுக் கழக யேர்மன் கிளையின், வெண்புறா நிறுவனத்திற்கான யேர்மன் தொழில் நுட்பத்தை அறிமுகம் செய்து அதை நடைமுறைப்படுத்துவதற்கான வேலைத் திட்டத்தில் பலர் உழைத்திருக்கிறார்கள். அதில் முக்கிய பங்கு தமிழர் புனர்வாழ்வுக் கழக யேர்மனிக் கிளை தொண்ட…
-
- 33 replies
- 8.4k views
-
-
விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் அரசியல்துறை பொறுப்பாளர் தமிழினியின் மரணச் செய்தி, தமிழர்களின் விடுதலைப் போராட்டத்துடன் பிணைந்திருக்கும் அனைத்து மக்களுக்கும் ஒரு துயரச்செய்தியாக வந்திறங்கியிருக்கிறது. விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆரம்பகால உறுப்பினராகவும் அரசியல்துறை பொறுப்பாளராகவும் தான் சார்ந்த அமைப்பின் முகங்களில் ஒன்றாகவும் வெளித்தெரிந்த காரணத்தினால் 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் பெரும் கொடூரங்களை அனுபவித்த ஒரு போராளிகளில் ஒருவர் தமிழினி. இன்று சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் ஒரு விடயமாக மாறியிருக்கும் செய்தியையும் தமிழினியின் மரணம் தொடர்பான செய்தியையும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாகவே …
-
- 0 replies
- 461 views
-
-
-
- 9 replies
- 1.6k views
-
-
மனிதர்களிடையே மிகமிகச்சிலர்தான் மகா மனிதர்களாக உலகில் மாற்றமடைகிறார்கள். அவர்கள் மனிதகுல வாழ்வுப்போக்கில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கென்றே அயராது உழைப்பவர்கள். பிரபஞ்ச விசையின் செயலூக்கத் தூண்டுதல் இயங்கு முறைச் சிந்தனைகளை இவர்களுள் எழுப்புகிறது. செயற்கரிய செய்யும் பெரியவர்களாக இவர்கள் மேலெழுகிறார்கள். நேர்போக்குகளுக்கும் முரண்போக்குகளுக்கும் இடையே இவர்களது பணிகள் பயணிப்பதால் தாக்குதல்களுக்கும் மோதல்களுக்கும் விமர்சன விகாரங்களுக்கும் முகம்கொடுக்கவேண்டிய நிர்ப்பந்தங்களுக்கும் இவர்கள் விதிவிலக்கல்ல. தேடுதல் தாகமும் விடுதலை வேட்கையும் மேலெழ மேலெழ என்பும் உரியர் பிறர்க்கென்று எலலோருக்குமாக வாழ்கிற இயல்பு அவர்களில் மேலெழுகிறது. எளிமை இடம்பிடிக்கும் போது ஏழ்மையும் கூடவே சூழ்…
-
- 0 replies
- 935 views
-
-
யாழ்ப்பாணம் கோட்டை பகுதியின் பின்புறமாகவுள்ள பண்ணை கடற்கரை பகுதி, அழகாக்கப்பட்டு பொழுதுபோக்கு இடமாக மாற்றப்பட்டுள்ளதால், மாலை வேளைகளில் பெருமளவான மக்கள் அங்குச் சென்று, கடற்கரை அழகை இரசிப்பதோடு அங்கு நடைபயிற்சிகளையும் உடற்பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். நகர அபிவிருத்தி அதிகார சபையின் வேலைத்திட்டத்தின் கீழ், பண்ணையை சுற்றுலா இடமாக மாற்றும் நடவடிக்கை கடந்த 2013ஆம் ஆண்டு 23 மில்லியன் ரூபாய் செலவில் முன்னனெடுக்கப்பட்டது. தற்போது பெரும்பாலான வேலைத்திட்டங்கள் பூர்த்தியடைந்துள்ள நிலையில், அங்கு பெருமளவான பொதுமக்கள் ஒன்றுகூடுகின்றனர். இந்நிலையில், பொதுமக்களுக்கு அசௌகரியங்கள் ஏற்படுத்தும் வகையில், பல சம்பவங்கள் இப்பகுதியில் இடம்பெற்று வருகின்றன. இப்பகுதிக்கு இரவு வேளைகளி…
-
- 5 replies
- 764 views
-
-
யாழ்ப்பாணம், தென்மராட்சியின் தென்திசையில் இருக்கும் ஒரு சிறிய கடல்நீரேரி. இதன் எல்லைகளாக சாவகச்சேரி, கச்சாய், கெட்பெலி, கிளாலி, பளை, ஆனையிறவு, பரந்தன், பூநகரி, சங்குப்பிட்டி, தனங்கிளப்பு ஆகிய ஊர்கள் உள்ளன. இக்கடல் நீரேரியின் துறைமுகமாக கச்சாய் உள்ளது. இக்கடல்நீரேரி 'சேத்துக்கடல்' எனவும் அழைக்கப்படுகிறது. இதிலிருந்து சங்குப்பிட்டி ஊடாக யாழ். கடல் நீரேரிக்குச் செல்லலாம். அங்கிருந்து ஆழ்கடலுக்குச் செல்லக்கூடிய வழியும் இந்த கடல்நீரேரியில் காணப்படுகின்றன. இங்கு கச்சாய், கெட்பெலி, கிளாலி, பளை, பூநகரி, போன்ற இடங்களைச் சேந்தவர்கள் மீன் பிடிப்பில் ஈடுபடுகிறார்கள். யாழ்ப்பாணம் - கண்டி ஏ9 நெடுஞ்சாலை ஆனையிறவுப் பகுதியில் பூட்டப்பட்ட பின், இந்த கடல் நீரேரியே தென் இலங்கைக்கான போக்குவ…
-
- 0 replies
- 538 views
-
-
கவிதையும் மெட்டும் யுகசாரதி பாடடியோர்: மாட்டின், சோபியா, யுகசாரதி, பார்த்தா இசை: சதீஸ் குழுவினர்
-
- 0 replies
- 5.4k views
-
-
கடைசி வரை சென்ற கமெரா- ஐ.நா மன்றில் அமரதாஸ் உரையாற்றினார். October 4, 2015 ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா மனித உரிமைகள் மன்ற அமர்வுகளின் தொடர்ச்சியாக, ஐ.நா பக்க அரங்கில் சுயாதீன ஊடகவியலாளரும் கலை இலக்கிய செயற்பாட்டாளருமான அமரதாஸ், தன் வசமுள்ள தமிழினப் படுகொலை சார்ந்த ஆதாரங்களை முன்வைத்து 2015.10.01 அன்று, உரையாற்றினார். போர்க்காலத்தில், தமிழின அழிப்புக் களத்தில், அவர் பதிவு செய்த ஒளிப்படங்கள் பலவற்றைக் காட்சிப்படுத்தி தமிழில் உரையாற்றும் போது ஆங்கில மொழியாக்கம் செய்யப்பட்டது. அமரதாஸ், யுத்த நெருக்கடிகளால் சூழப்பட்ட வன்னிப்பகுதிக்குள்ளிருந்து ஒரு கவிதைத் தொகுதியும், ஒரு ஒளிப்படத் தொகுதியும் வெளியிட்டிருக்கிறார். தனிநபர் ஒளிப்படக் காட்சியினையும் செய்திருக்கிறார். சினிமாத் துறைய…
-
- 0 replies
- 376 views
-
-
-
- 0 replies
- 604 views
-
-
(உரையாடியவர் ஜெரா) பாலச்சந்திரன். பாலா என்ற பெயருடன் செல்லமாக அறியப்பட்டவன். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் கடைசி புதல்வன். ஈழத் தமிழினத்தின் மீது நடத்தப்பட்ட மொத்த அழிவின் சாட்சியாகவும் அவனது கண்களைக் கொடுத்துவிட்டுச் சென்றவன். இன்று அவனின் 19 ஆவது பிறந்த நாளும், சர்வசே சிறுவர் தினமும் ஆகும். பாலா என்ற இன்முகம் மாறாத குழந்தை எப்படி வளர்ந்தது? எப்பிடி வாழ்ந்தது? அவனின் மெய்க்காப்பாளருடனான உரையாடல்.. அவர் பாலாவின் மெய்ப்பாதுகாவலர். இப்போதிருக்கும் இடம், அவரின் பெயர் என அனைத்து சுய அடையாளங்களும் மறைத்துக் கொண்ட இனந்தெரியாத நபராகவே தனது அனுபவத்தை பதிவிடுகின்றார். ‘தலைவர்’ வீட்டுக்கு 1987 ஆம் ஆண்டுகளி;ல் மெய்ப்பாதுகாவலுக்காக போகின்றார். மட்டக்களப்பு, மலையகம் பகுதிகள…
-
- 1 reply
- 1.4k views
-
-
நாங்களும் குழப்படிகள் செய்திருக்கிறோமலே…. (மானிப்பாய் இந்துக் கல்லூரியின் 100வது ஆண்டு மலருக்கு எழுதியது.) பூபாலசிங்கம் மாஸ்ட்டரும் செவ்வரத்தை தடியும்; பாகம் 1/6 அப்பொழுது நான் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். பௌதிக வகுப்பு. பூபாலசிங்கம் ஆசிரியர் நடாத்திக் கொண்டிருந்தார். அங்கு ஏற்கனவே இன்னோர் பூபாலசிங்க மாஸ்டர் இருந்ததனால் இவரை பிசிக்ஸ் பூபாலசிங்கம் என அழைப்பது வழக்கம். வீட்டு வேலைகள் செய்யாத மாணவர்களை முழங்காலில் நிறுத்தி விட்டு, அவர்களின் கைகளில் அடிப்பதற்காக என்னை செவ்வரத்தை தடி பிடிங்கி வர அனுப்பினார். அவரது தமிழும் கொஞ்சம் செந்தமிழாய் இருக்கும். மற்ற ஆசிரியர்கள் ”ஜீவா போய் ஒரு தடி எடுத்துக் கொண்டு வா. இவங்களை உரிக்க வேண்டும்” என்று சொல்வதை இவரோ, ”ஜீவ…
-
- 6 replies
- 676 views
-
-
கொழும்பு மிரருக்காக எமது செய்தியாளர் ஜெரா நேற்று மண் சட்டியில சமைச்சு சாப்பிட்டு, மிஞ்சின மீன் கறிய விறகு அடுப்பில அப்பிடியே வச்சிற்று, அடுத்த நாள் காலம அவிக்கிற புட்ட, அந்த மீன் சட்டியில போட்டு பிரட்டி ஒரு பிடிபிடிச்சா எப்பிடியிருக்கும்..! ஈழத்தமிழர்கள் அதிகம் வாய் ஊறும் உணவுகளில் ஒன்றைத்தான் நான் மேலே நினைவுபடுத்தினேன். அந்த உணவில் பல்வேறு சுவையூட்டிகள் சேர்ந்திருக்கின்றன. அவற்றுள் விறகுக்கும் முக்கிய பங்குண்டு. காஸ் கொண்டு சமைக்கப்படும் உணவிற்கும், மின்னடுப்பினால் சமைக்கும் உணவிற்கும், விறகினால் சமைக்கப்படும் உணவிற்கும் சுவையளவில் வித்தியாசம் உண்டு. தமிழர்கள் விறகு சமையல் பாரம்பரியத்தைக் கொண்டவர்கள்தான். இப்போதுதான், அதுவும் 2009 ஆம் ஆண்டின் பின்னர்தான் தமிழ் பகுதி…
-
- 0 replies
- 1k views
-
-
தமிழீழ போராட்ட வரலாற்றில் ஒரு புரட்சிகரமான திருப்பத்தை ஏற்படுத்திய நிகழ்ச்சி தமிழீழ தேசிய ஆன்மாவை தட்டி எழுப்பிய நிகழ்ச்சி பாரத நாட்டை தலைகுனிய வைத்த நிகழ்ச்சி உலகத்தின் மனசாட்சியை தீண்டிவிட்ட நிகழ்ச்சி என்று தீர்க்க தரிசனமாக தமிழீழ தேசியத்தலைவர் அவர்கள் அன்று தெரிவித்துள்ளார். ஈகைச்சுடர் லெப்ரினன் கேணல் திலீபனின் 28ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். இந்திய அமைதிப்படைக்கு எதிராக ஜந்தம்ச கோரிக்கையினை முன்வைத்து சாகும்வரை உண்ணா நோன்பிருந்து காந்திதேசத்தின் முகத்தில் கரியை பூசிய இராசையா பார்த்தீபன் என்று அழைக்கப்படும் லெப்பரினன் கேணல் திலீபனின் 28ம் ஆண்டு நீங்கா நினைவுகளை எங்கள் மனதில் நிறுத்தி விடுதலை பயணத்தினை தொடர்வோம்.. அதேவேளை விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் தமிழீழ …
-
- 0 replies
- 259 views
-
-
-
முன்கதைச் சுருக்கம் .................... பத்துவயதுக் கிட்டினனுக்கு பசித்தது. ஹற்றனில் கடைசியாக அவனுக்குச் சொந்தமாக மிஞ்சியிருந்த தாயையும் நோய் கொண்டு போய் ஒரு கிழமையாகிவிட்டிருந்தது. அயலவர்கள் அவ்வப்போது கிட்டினனுக்கு கொடுத்து வந்த உணவும் நின்று போய்விட்டது. வீட்டிலும் எதுவுமில்லை. ஆனாலும் பசிக்கு இதெல்லாம் தெரியவில்லை. அவன் உயிரை எடுப்பது போல பசியின் வேதனை பெரிதாகிக் கொண்டே இருந்தது. " வவுனியாவுக்கு போனால் காசு சம்பாதிக்கலாம்" யாரோ இலவச ஆலோசனை கொடுக்க , அதை நம்பி ஒரு மாதிரி வவுனியா பஸ்ஸில் ஏறிவிட்டான். கையில் ஒரு சதம் கூட இல்லை. பஸ்காரர் பரிதாபப்பட்டு , காசு வாங்காமலே அவனை வவுனியாவில் இறக்கிவிட்டனர். பசியோடு வேலை தேடினான் கிட்டினன். ஒரு சாப்பாட்டுக் கடை முதலாளியின் கர…
-
- 0 replies
- 464 views
-
-
ஸ்பெஷல் ரிப்போர்ட்: கொழும்பு மிரருக்காக ஜெரா கடந்த வாரத்தில் ஓரிடம் உலகமயப் பிரபலத்தைப் பெற்றது. வவுனியா வடக்கில் இருக்கின்ற சின்னடம்பன் அது. குடியிருப்புத் தொகுதி ஒன்றுக்கான அடிக்கல் நாட்டு வைபவத்திற்கு தற்போதைய எதிர்க்கட்சியின் தலைவர் சம்பந்தன் ஐயாவும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையாரும் வந்திருந்தனர். இதனால் அந்த இடம் பிரபலமாகியது. அவ்விடம் பற்றியே இந்தக் கட்டுரை பேசப்போகிறது. அவ்வாறு சம்பந்தர் ஐயா வந்திறங்கிய இடம் காடும் வீடும் சார்ந்த பகுதி. இடையிடையே காடுகளும், வீடுகளும், தோட்டங்களும் அந்த நிலப்பரப்பை நிரப்பியிருக்கின்றன. உலங்குவானூர்தியில் பறந்தபடி பார்த்தபோது இந்தப் புவியியல் அமைப்பை அழகாக அவர் பார்த்திருக்கக்கூடும். அயர்வில் சயனித்திருப்பின் அந்த வ…
-
- 7 replies
- 853 views
-
-
''பாவா'' அக்காவும் நானும்… =================== பிள்ளையாரடி எனது அப்பாவின் ஊர். எனக்கும் அந்த ஊருக்குமான மிகவும் நெருக்கமான தொடர்பு சுமார் ஒருவருட காலந்தான். அம்மாவுக்கு கொக்குவில், பன்னிச்சையடி பள்ளிக்கூடத்தில் மாற்றலானதால், அருகே அப்பாவின் ஊரில் ஒருவருடம் சென்று வாழ்ந்தோம். நகரத்தில் இருந்து 3 மைல் தூரத்தில் இருந்தாலும் அப்போது பிள்ளையாரடி பெரிதும் கிராமத்தின் குணாதிசயங்களையே கொண்டிருந்தது. நாங்கள் அங்கு 70களில் வாழ்ந்தபோது அங்கு மின்சாரமும் கிடையாது. மண்ணெண்ணை விளக்குதான். ஆனாலும் அங்கு வாழ்ந்த நாட்கள் மிகவும் அருமையான நாட்கள்தான். அங்கு எல்லாம் அப்பாவின் உறவினர் என்பதால், எனக்கு பிடித்தவர்கள் மிகவும் அதிகம். பிடிக்காதவர் என்று எவரையும் ஞாபகமில்லை. அப்படி பிடித்த கு…
-
- 0 replies
- 2.3k views
-
-
அன்று சூசையைத் தேடிய சந்திரிக்காவின் கணவர். AUGUST 29, 2015 COMMENTS OFF அரிய வீடியோ காட்சி. ( 4 ) சந்திரிக்காவின் கணவர் விஜயகுமாரதுங்க 1986ஆம் ஆண்டு யாழ் கோட்டையில் இருந்து வெளியில் வந்து விடுதலைப்புலிகளின் அன்றைய யாழ் மாவட்ட தளபதியாக இருந்த கிட்டண்ணாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய அரிய வீடியோ காட்சி. இதில் காணப்படும் தளபதிமார்கள் தியாகி திலீபன் அண்ணா. கேடி அண்ணா. சூசை அண்ணா .ஜொனி அண்ணா. மற்றும் கோட்டை ராணுவ முகாமுக்கு பொறுப்பாக இருந்த கொத்தலாவலை. asrilanka.com
-
- 20 replies
- 2.1k views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வந்தாறுமூலை பிரதேசத்துக்கு மேற்கே நான்கு கிலோமீற்றர் தொலைவிலுள்ள கிடாக்குழி எனும் பிள்ளையார் ஆலயத்தில். இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட நாகர் பற்றிய கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வந்தாறுமூலையைச் சேர்ந்த ஆசிரியரான செல்வநாயகம் பத்மநாதன். குறித்த ஆலயத்துக்கு சென்றிருந்த வேளை, ஆலயத்தின் முன் கிடந்த கல்லை அவதானித்தபோது இக்கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவித்தார். கண்டு பிடிக்கப்பட்ட கல்வெட்டினை புகைப்படம் எடுத்து வரலாற்றுத்துறை பேராசிரியரும், யாழ். பல்கலைக்கழக வேந்தருமாகிய சி.பத்மநாதன் அவர்களிடம் காட்டப்பட்டது. கல்வெட்டினை நேரடியாக ஆய்வு செய்வதற்காக கடந்த 08.04.2015 பேர…
-
- 12 replies
- 7.7k views
-
-
சம்பாஷனைகள் மற்றும் விவரணங்கள் சிங்கள மொழியில் மட்டுமே உள்ளது ( In Singala)
-
- 0 replies
- 450 views
-
-
பாலேந்திரன் ஜெயக்குமாரி இன்று மீண்டும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அநுராதபுர கெப்பற்றிக்கொல்லாவ பிரதேசத்தில் இடம்பெற்ற களவு ஒன்று சம்பந்தமாகவே கைது செய்யப்பட்டு, பதவியா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இவருடன் தொடர்புகொள்ள தொலைபேசியூடாக அழைப்பினை ஏற்படுத்தியிருந்தபோதும் அது பலனளிக்கவில்லை. கிளிநொச்சி தருமபுரம் பிரதேசத்தில் வைத்து கடந்த 2014 ஆண்டு மார்ச் மாதம் 13 ஆம் திகதி ஜெயக்குமாரியும் அவரது 13 வயது மகளான விபூசிகாவும் குற்றப்புலனாய்வு பொலிஸாரால் கிளிநொச்சியில் கைது செய்யப்பட்டிருந்தனர். கிளிநொச்சி நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைய அவரது மகள் விபூசிகா, கிளிநொச்சி மகாதேவா ஆச்சிரமத்தில் ஒப்படைக்கப்பட்ட நிலையில் ஜெயக்குமாரி பூசா தடுப்பு…
-
- 1 reply
- 841 views
-
-
களமுனையில் அன்று தளபதி லெப் கேணல் அமுதாப். வடபோர்முனை போரளிகளுக்கு உலர்உணவு கொண்டுவந்து கொடுத்து களமுனைபற்றியும் அறியவந்த மக்களுடன் சால்ஸ் அன்ரனி சிறப்புப்படையணியின் தளபதி லெப் கேணல் அமுதாப் களமுனை போரளிகளின் உணர்வுகளையும் களமுனைபற்றியும் மக்களுடன் உரைநிகழ்த்தும் போது. http://www.asrilanka.com/2015/09/02/29769
-
- 0 replies
- 917 views
-
-
2009 இனப்படுகொலை யுத்தத்தில் மிகவும் கோரமாக அழிக்கப்பட்ட புதுக்குடியிருப்பு நகரம் உயிர் பெற்றுக் கொண்டிருந்தாலும் இன்னமும் அதன் முகத்திலிருந்து பேரழிவின் காயங்கள் மாறவில்லை. ஆங்காங்கே குண்டுகள் சல்லடையாக துளைத்த வீடுகளும் கடைகளும் கொடும் யுத்தத்தின் சாட்சிகள் போல நிற்கின்றன. ஆனாலும் பேரழிவிலிருந்து அந்த நகரம் மீண்டது என்ற அல்லது மீண்டு வருகிறது என்று சொல்லத் தக்க வகையில் புதுக்குடியிருப்பு நகரம் மெல்ல மெல்ல உயிர்த்தெழுந்து வருகிறது. புதுக்குடியிருப்பிலிருந்து கேப்பாபுலவுக்கு செல்லும் வழி ஆரம்பித்ததும் நகரத்திலிருந்து சுமார் 200 மீற்றர் தூரத்தில் இருக்கிறது மலரம்மாவின் வீடு.வீடு என்று சொல்ல முடியாது. மீள்குடியேற்றத்தின் தொடக்கத்தில் கட்டப்பட்ட கூடாரம். அது உக்கி உடைந்து கல…
-
- 1 reply
- 512 views
-
-
அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம்: சுதர்சன் 08/27/2015 இனியொரு... தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் தேர்தலில் போட்டியிட்டு இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவரான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் பிறந்த நாள் நிகழ்வு நேற்று -26/08/2015- தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்டக் கிளையின் இன்று நடத்தப்பட்டது. 1949 ஆம் ஆண்டு புதிதாக ஆரம்பிக்கப்பட்ட தமிழரசுக் கட்சியில் இணைந்துகொண்ட இளைஞன் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் 1952 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டையில் பாராளுமன்றம் செல்வதற்காகத் தமிழரசுக் கட்சியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். எஸ்.ஜே.வி.செல்வநாயகம் மற்றும் ஜீ.ஜீ.பொன்னம்பலம் போன்ற கொழும்புசார் அரசியல் தலைவர்கள் செல்வாக்குச் செலுத்திய காலத்தில் நடுத்தரவக்கக் குடும்பத்திலிருந்து தோன்றிய உள்ளூ…
-
- 0 replies
- 636 views
-
-
வடமாகாணம் ஒரு காலத்தில் கல்வியில் சிறந்த விளங்கியது. ஆனால், இன்று அந்நிலை மாறியுள்ளது. இலங்கையில் வடக்கு மாகாணமே பாடசாலையிலிருந்து விலகியர்கள் அதிகளவானவர்கள் உள்ள மாகாணமாகவுள்ளது. அடுத்தாக கிழக்கு மாகாணம் உள்ளது என யாழ்ப்பாணம் வணிகர் கழகத் தலைவர் இ.ஜெயசேகரம் தெரிவித்தார். பாடசாலையிலிருந்து இடைவிலகிய மாணவர்களை மீண்டும் பாடசாலை செல்ல ஊக்கப்படுத்தும் நோக்கில் அவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு, வியாழக்கிழமை (27) யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற போது, அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில், "பாடசாலைகளிலிருந்து இடைவிலகிய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இதனைத் தடுப்பதற்கு பல திட்டங்களை வ…
-
- 0 replies
- 385 views
-