அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
"கோட்டா கோகம" சிங்களக் கூட்டு உளவியலை... முழுமையாகப் பிரதிபலிக்கிறதா? நிலாந்தன். கோட்டாவை வீட்டுக்கு போகுமாறு கேட்கும் ஆர்ப்பாட்டக்காரர்களில் ஒருபகுதியினர் சுதந்திர சதுக்கத்தில் கூடியிருந்த பொழுது அவர்கள் மத்தியில் ஒரு பெண் ஆங்கிலத்தில் உரையாற்றுகிறார். அந்த உரையில் நான் பார்க்கக் கிடைத்த ஒரு பகுதியில் அவர் பின்வரும் பொருள்பட பேசுகிறார். தமிழக முதல்வர் ஸ்டாலின் தமிழ் மக்களுக்கு உதவுவதற்காக பொருட்களை அனுப்பவிருப்பதாக ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் பரவியபொழுது டுவிட்டரில் அச்செய்தியின் கீழ் அபிப்பிராயங்களைத் தெரிவித்த பெரும்பாலான தமிழர்கள் எங்களுக்கு மட்டும் உதவி செய்ய வேண்டாம் பாதிக்கப்பட்ட எல்லா இனத்தவர்களுக்கும் உதவி செய்யுங்கள் என்று எழுதுவதை பார்க்கிறேன். இது ஒரு ம…
-
- 3 replies
- 682 views
-
-
அதிகாரப்போட்டியின் உச்சக்கட்டம்! நாட்டின் முதுகெலும்பாகிய அரசியலமைப்பை முறையாகப் பேணி ஆட்சி நடத்த வேண்டியது ஆட்சியாளர்களின் தலையாய கடமையாகும். அதேபோன்று அரசியல்வாதிகளும், பொதுமக்களும் அரசியலமைப்புக்கு உரிய மதிப்பளித்து, அதற்கேற்ற வகையில் ஒழுக வேண்டியதும் நல்லாட்சிக்கு அவசியமாகும். ஆனால் இத்தகைய போக்கை ஆட்சித் தலைவர்களிடம் காண முடியவில்லை. இந்த அரசியலமைப்பு நாட்டின் அனைத்து சமூகங்களையும் சேர்ந்த மக்களை முதன்மைப்படுத்தி, அவர்களுடைய இறைமைக்கு உரிய அங்கீகாரமளித்து, தீர்க்கதரிசனத்துடன் உருவாக்கப்பட வேண்டும். பல்லினங்களும், பல மதங்களையும் சேர்ந்த மக்கள் வாழ்கின்ற நாட்டில், அந்த அர…
-
- 3 replies
- 682 views
-
-
புலிகளும் எலிகளும் May 15, 2024 — கருணாகரன் — ஈழத் தமிழர்களின் “விடுதலைக்கான அரசியல்” இப்பொழுது வெறுமனே “தேர்தலுக்கான அரசியலாக” ச் சுருங்கி விட்டது. அப்படிச் சுருங்கியதன் விளைவுகளே இப்போது நடக்கும் தடுமாற்றங்களும் குத்துக் கரணங்களுமாகும். தேர்தலுக்கான அரசியல் என்பது தனியே தேர்தல் வெற்றியை மட்டுமே குறியாகக் கொண்டதாகத் தமிழ்த் தரப்பினரால் ஆக்கப்பட்டு விட்டது. இதை தமிழ் ஊடகவியலாளர்களும் அரசியற் பத்தியாளர்களும் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் ஆதரித்துச் செயற்படுகிறது. சரியாகச் சொன்னால், இந்தத் தரப்புகளும் தேர்தல் அரசியலில்தான் தங்களுடைய அடையாளங்களையும் இருப்பையும் பேணிக் கொள்கின்றன. (இதைப்பற்றி அடுத்த கட்டுரையொன்றில் விரிவாகப் பார்க்கலா…
-
- 1 reply
- 682 views
-
-
அமெரிக்காவும்.... அப்பமும்...! [ திங்கட்கிழமை, 21 டிசெம்பர் 2015, 08:15.08 PM GMT ] இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளும் அமெரிக்க உயரதிகாரிகளுக்கு இப்போது அப்பம் ஒரு முக்கியமான உணவாக மாறிவிட்டது. இந்த ஆண்டில் இலங்கைக்கு வருகை தந்த நிஷா பிஸ்வால், சமந்தா பவர், தோமஸ் சானொன் என்று முக்கியமான அமெரிக்க இராஜதந்திரிகள் அனைவருமே அப்பத்தைச் சுவைத்து விட்டுத் தான் சென்றனர். அதுமட்டுமன்றி, இதனை அப்பம் இராஜதந்திரம் என்றும் கூட, வெளிப்படுத்தி வருகின்றனர். அப்பம் இராஜதந்திரம் என்ற பதம் இப்போது கொழும்பு இராஜதந்திர மட்டத்தில் மட்டுமன்றி, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வரை பிரபலமாகி விட்டது. இந்த அப்பம் இராஜதந்திரம் இலங்கைக்கு அறிமு…
-
- 0 replies
- 682 views
-
-
சுதந்திரம் பறிக்கப்பட்ட நாளில் விடுதலைக்காகத் திரள்தல் -புருஜோத்தமன் தங்கமயில் இலங்கையின் 73ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகின்றது. முதல் ஒன்றிரண்டு சுதந்திர தினங்களுக்குப் பின்னரான அனைத்துச் சுதந்திர தினங்களும், அதுசார் நிகழ்ச்சிகளும் ‘ஒரே இனம், ஒரே மதம், ஒரே தேசியம்’ என்கிற பௌத்த சிங்களப் பேரினவாத நிகழ்ச்சி நிரலின் போக்கிலேயே, முன்னெடுக்கப்பட்டு வந்திருக்கின்றன. நாட்டிலுள்ள தமிழர்கள், முஸ்லிம்கள் உள்ளிட்ட இன, மத சிறுபான்மை சமூகங்கள், இலங்கையின் சுதந்திர தினங்களோடு தங்களைப் பொருத்திப் பார்ப்பதற்கான கட்டங்கள், நிராகரிக்கப்பட்டு இருக்கின்றன. சுதந்திரம் என்கிற சொல்லின் அர்த்தமும் அதுசார் ஆ…
-
- 0 replies
- 682 views
-
-
கறைகளைக்கழுவ முற்படுகிறதா பிரித்தானியா? சுபத்ரா இலங்கையில் விடுதலைப் புலிகள் உள்ளிட்ட தமிழ் அமைப்புகளின் ஆயுதப் போராட்டம் முளைவிடத் தொடங்கிய 1978 - –1980 காலகட்டத்தில், புலிகள் மற்றும் இலங்கையில் பிரித்தானியாவின் எம்.ஐ 5 மற்றும் எஸ்.ஏ.எஸ். அமைப்புகள் பயிற்சிகளை அளித்தமை தொடர்பான, 200 ஆவணங்களை பிரித்தானிய வெளிவிவகாரப் பணியகம் அழித்து விட்ட தகவலை லண்டனில் இருந்து வெளியாகும் ‘தி கார்டியன்’ கடந்த வாரம் அம்பலப்படுத்தியிருக்கிறது. தேவையற்ற ஆவணங்கள் என்று, கூறி, இலங்கை தொடர்பான – முக்கியமாக இந்த மூன்று ஆண்டு காலப்பகுதியில் தமிழ்ப் புலிகள் மற்றும் தமிழ்ப் புலிகளின் ஆயுதப் போராட்டத்த…
-
- 1 reply
- 681 views
-
-
[size=4]முன்னை இட்ட தீ முப்புரத்திலே பின்னை இட்ட தீ தென்னிலங்கையில் அன்னை இட்ட தீ அடி வயிற்றிலே விஜயன் இட்டதீ எங்கும் மூளவே[/size] [size=2] [size=4]காலம் முழுதும் கண்ணீரை உற்பவிக்கும் கரும்புகை போல எந்தப் பயனும் இல்லாமல் அலைபடுவதை விடவும் கணப்பொழுதேனும் தீப் பொறியாய் மின்னி பிறர்க்கு ஒளி கொடுத்துவிட்டு மறையும் ஆன்மாக்கள் இன்னமும் இருக்கவே செய்கின்றன. இந்த ஆன்மாக்களுக்கு, ஒரு மணிநேர உண்ணாவிரதத்தோடு தன் வாரிசுகளுக்கு அமைச்சுப் பதவி கேட்கத் தெரியாது. பணத்துக்காக உடலில் பெற்றோலை ஊற்றுவது போல பாசாங்கு பண்ணத் தெரியாது. அரசியல் தலைவர்களின் சுயநல ஊளையிடல்களுக்காக வாலாட்டத் தெரியாது. அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் பிறர் துன்பத்தைப் போக்கத் தன்னை ஆகுதியாக்குதல் மட்டுமே.…
-
- 0 replies
- 681 views
-
-
இலங்கை மக்களின் இதயத்தைத் தொடாத சுதந்திர தினக் கொண்டாட்டம்! February 6, 2018 Photo, Ishara S. Kodikara/ AFP, THE EDITION இலங்கை காலனித்துவ ஆட்சியில் இருந்து விடுபட்டு பெற்ற சுதந்திரத்தின் 75ஆவது வருட நிறைவை அரசாங்கம் பலத்த பாதுகாப்பின் கீழ் கொண்டாடியது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தக் கொண்டாட்ட நிகழ்வில் ஒரு உரையை நிகழ்த்தவில்லை. தயாரிக்கப்பட்ட உரை சிறப்பானதாக இருந்தது. ஆனால், அது பின்னரே விநியோகிக்கப்பட்டது. இராணுவ அணிவகுப்பு நடைபெற்ற கொழும்பு காலிமுகத்திடலில் பொது மக்களின் பங்கேற்பு தவிர்க்கப்பட்டமை சுதந்திர தின நிகழ்வில் அவதானிக்கக்கூடியதாக இருந்த இன்னொரு குறிப்பிடத்தக்க அம்சமாகும். வழமையான சூழ்நிலைகளில், சுதந்திர தினக் கொண்டாட்டங்களின் போது …
-
- 0 replies
- 681 views
-
-
தமிழர் பிரதேசங்களில் பௌத்த கொடியை ஏற்றுவது எதை வெற்றிகொண்டதன் கொண்டாட்டம்? இலங்கை வாழ் தமிழ் மக்களின் மனதில் இன்னும் மாறாத ரணமாய் இருக்கும் கறுப்பு ஜூலை சம்பவம் இடம்பெற்று 36 வருடங்கள் கடந்து விட்டன. ஜூலை கலவரத்தால் உயிர் மற்றும் பொருளாதார சேதங்களுக்கு முகங்கொடுத்த தமிழ் மக்களில் பலர் நாட்டின் பல பாகங்களுக்கு இடம்பெயர்ந்த அதே வேளை, பலர் குடும்பங்களுடன் தமிழ் நாட்டில் தஞ்சமடைந்து விட்டனர். கறுப்பு ஜூலை கலவரங்களில் சுமார் 3 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சேதமாக்கப்பட்ட அதேவேளை சிங்கள காடையர்களால் கொள்ளையடிக்கப்பட்ட சொத்துகளின் விபரங்கள் பூரணமாக வெளிவரவில்லை. இக்கலவரத்தில் சிறைக்குள் இருந்த தமிழ்க் கைதிகளும் கொடூரமாகக் கொல…
-
- 1 reply
- 681 views
-
-
விக்னேஸ்வரன் என்ன செய்யப் போகிறார்? வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இருவார கால ஆன்மீகப் பயணத்தை மேற்கொண்டு, இந்தியா சென்றிருக்கின்றார். வடக்கு மாகாண சபையின் முதலாவது பதவிக்காலம் முடிவதற்கு இன்னமும் ஐந்து மாதங்களே இருக்கின்ற நிலையில், அவர் இருவார கால விடுப்பில் சென்றிருப்பதானது, முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது. முதலமைச்சரின் பயணத்துக்கு, ஆன்மீக அடையாளம் வழங்கப்பட்டாலும், அது அரசியல் நோக்கங்களும் கொண்டதாகவே இருக்க முடியும். அவர், டெல்லி வரை சென்று வருவார் என்று தெரிகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு முன், வடக்கு மாகாண சபைத் தேர்தலைத் தமிழ் மக்கள் எதிர்கொண்…
-
- 1 reply
- 681 views
-
-
இலங்கையில் சீனாவின் செல்வாக்கைக் கட்டுப்படுத்த அமெரிக்காவினால் முடியுமா? -தேவநேசன் நேசையா Bharati November 8, 2020 இலங்கையில் சீனாவின் செல்வாக்கைக் கட்டுப்படுத்த அமெரிக்காவினால் முடியுமா? -தேவநேசன் நேசையா2020-11-08T22:42:04+05:30Breaking news, அரசியல் களம் FacebookTwitterMore தேவநேசன் நேசையா தெற்காசிய மற்றும் தென்கிழக்காசியாவிற்கான (இலங்கை, இந்தியா, மாலைதீவு, இந்தோனேசியா, வியட்நாம்) அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பொம்பியோவின் விஜயத்தின் பிரதான குறிக்கோள் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக் கட்சிக்கான ஆதரவை அதிகரிப்பதற்காகவேயாகும். அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் பிரசாரங்கள் உச்சகட்டத்தில் இருந்த நேரத்தில் அவரது…
-
- 0 replies
- 680 views
-
-
அலையையும் எதிர்ப்பலையையும் சமாளிக்குமா அரசாங்கம்? Johnsan Bastiampillai / 2020 ஒக்டோபர் 20 , பி.ப. 12:40 - 0 - 11 AddThis Sharing Buttons -மொஹமட் பாதுஷா கொரோனா வைரஸூம் அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலமும் ஒட்டுமொத்தமாக, இலங்கை மக்களுக்கும் அரசாங்கத்துக்கும் பெரும் தலையிடியையும் எதிர்பாராத சவால்களையும் ஏற்படுத்தி இருக்கின்றன. உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களின் சாம்பலில் இருந்தும், மனவடுக்களில் இருந்தும் மீண்டெழுவதற்கு, இலங்கை முயற்சித்துக் கொண்டிருக்கையில், முதலாம் கட்டக் கொரோனா வ…
-
- 0 replies
- 680 views
-
-
அரசாங்கம் நியமித்திருந்த காணாமற் போனவர்கள் பற்றி விசாரிப்பதற்கான ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்க சர்வதேச மட்டத்தினை மனித உரிமைகள் மற்றும் யுத்தகுற்றங்கள் பற்றிய சட்ட நிபுணர்கள் மூவரை வரவழைக்க அரசாங்கம் தீர்மானித்திருப்பது சற்றும் எதிர்பாராத ஒன்றாகும். இத்தீர்மானம் அமைச்சரவையில் உள்ள சிரேஷ்ட அங்கத்தினர்கள் சிலருக்குமே வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐந்து வருடங்களுக்கு முன்பிருந்தே மனித உரிமைகள் மீறல்களும் யுத்தக் குற்றங்களும் இடம்பெற்றமை குறித்த குற்றச்சாட்டை பெருமளவுக்கு உறுதியான முறையில் அரசாங்கம் மறுத்து வந்திருக்கின்றது. அரசாங்கத்தால் இதுவரை நடத்தப்பட்ட அனைத்து விசாரணைகளிலுமே அவ்வாறான குற்றங்கள் எதும் இடம்பெறவில்லை, என்றும் அரசாங்கத்தின் நிலைப்பாடே தொடர்ந்தும் வலியுறுத்தப்பட்…
-
- 0 replies
- 680 views
-
-
தமிழ் தேசியம் வீழ்ச்சியுறவில்லை நிலாந்தன். ஈழத்தின் அரிதான பல்துறை ஆளுமைகளில் ஒருவர். கவிதை, ஓவியம், நாடகம், விமர்சனம், அரசியல் பத்தி எழுத்து என பல தளங்களில் தீவிரமான செயற்பாடுடைய ஓர் அரசியல் போராளி. மண்பட்டினம், வன்னிமான்மியம், யாழ்ப்பாணமே.. ஓ..யாழ்ப்பாணமே என இதுவரை மூன்று கவிதை நூல்கள் வந்திருக்கின்றன. ஓவியம், மனிதகுல வரலாறு, கவிதைத்துறை சார்ந்து தலா ஒவ்வொரு புத்தகங்கள் அச்சுக்கு தயாராக இருக்கின்றன. ‘பிள்ளையார் ஓவியங்கள்’ என்ற போர் ஓவியங்களின் தொகுப்பை காட்சிப்படுத்தியுள்ளார். கலாச்சாரம், கலைஇலக்கியம், அரசியல் சார்ந்த ஏராளம் கட்டுரைகளை அனேகமான ஈழத்து சஞ்சிகைகள், பத்திரிகைகளில் மிக நீண்ட காலமாக எழுதிவருகிறார். இந்த பல்துறை சார்ந்த அனேக படைப்புக்கள் இன்னும் நூலா…
-
- 0 replies
- 680 views
-
-
அரசியல் ரீதியான சிக்கலை ஏற்படுத்தியிருக்கும் ‘வெசாக்’ பி.மாணிக்கவாசகம் வெசாக் பண்டிகை நாட்டின் பல பகுதிகளிலும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டிருக்கின்றது. இது பௌத்த மதத்தின் முக்கியமான பண்டிகையாகும். உலக நாடுகளில் பௌத்தர்கள் வாழும் இடங்களில் இது சிறப்பாகக் கொண்டாடப்;படுகின்றது. இலங்கையில் அதிக முக்கியத்துவம் மிக்கதாகக் கருதப்படுகின் இது. அரசாங்க பண்டிகையாக மிகப் பரந்த அளவில் கொண்டாடப்படுகின்றது. ஆனால், அந்தக் கொண்டாட்டம் பௌத்த மதக் கலாசாரத்தைப் பின்பற்றி அதனை, பேணி பாதுகாக்கும் வகையில் அமைந்துள்ள போதிலும், அது எல்லையைக் கடந்து அதனை சிறப்படையச் செய்கின்ற ஒரு நடவடிக்கையாக அமைந்திருக்கின்றது. நாட்டின் பிரதான மதத்தவர்கள…
-
- 1 reply
- 680 views
-
-
சமாதான காலத்தில் வன்னிக்கு சென்றவர்களுக்கு போரின் கதையையும் போர்ச் சூழலில் உள்ள பாடசாலைகளின் நிலவரங்களையும் இக்கட்டடம் எடுத்துச் சொன்னது. சமாதான காலத்தில் வன்னிக்கு சென்றவர்கள் பலரது கவனத்தை போர்வடு சுமந்த இக்கட்டடம் ஈர்த்தது. பலரும் இக்கட்டடத்தின் முன்பாக நின்று படம்பிடித்துச் சென்றுள்ளனர். இக்கட்டடத்தை போர் நினைவுச்சின்னமாக பாதுகாக்க வேண்டும் என்று பாடசாலை மாணவர்கள் தரப்பால் எதிர்பார்க்கப்பட்டது. எனினும் குறித்த கட்டடத்தை அழித்து புதிய கட்டடம் கட்டும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் எனக் கூறப்படுகின்றபோதும் அதற்கு எதுவித நிதி ஒதுக்கீடுகளும் மேற்கொள்ளப்படவில்லை என கவலை வெளியிடப்பட்டுள்ளது. இந்தக் கட்டடத்தை இடித்தழிப்பதற்காக மட்டும் கல்வி அமைச்சினால் நிதி ஒதுக்கப்பட்டு அத…
-
- 0 replies
- 680 views
-
-
விடுதலைப் புலிகளின் தலைவரின் பத்திரிகையாளர் மாநாடு-ஒரு பார்வை (2002-2015) 2002 ஏப்ரல் மாதத்தின் 10ம் நாள் சிங்கள தேசத்தின் ஊடகங்கள் அனைத்தும், இந்தியாவின் அச்சு, ஓலி,ஒளி, இலத்திரனியல் ஊடகங்கள் முழுதும், சர்வதேசத்தின் மிக முக்கியமான ஊடக நிறுவனங்கள் எல்லாம் கிளிநொச்சியில் குழுமி இருந்தனர். தமிழர்களின் வரலாற்றில் ஒரு தமிழனின் செய்திக்காக, அவர் சொல்லப்போகும் பதில்களுக்காக, ஒரே நேரத்தில் இவ்வளவு பத்திரிகையாளர்களும் ஊடகங்களும் குழுமியது வரலாற்றில் முதலானது. அதனைவிட சிங்களதேசத்தின் அதிபர்கள் நடாத்திய எந்தவொரு ஊடகவியலாளர் சந்திப்பிலும் அதுவரை இவ்வளவு பெருந்திரளாக வந்ததே இல்லையென்றே சிங்கள ஊடகங்கள் கூட வர்ணித்திருந்தன அந்த சந்திப்பை. இந்த ஊடகவியலாளர் சந்திப்புக்கு திகதி கு…
-
- 0 replies
- 680 views
-
-
புலம்பெயர்ந்த தமிழர்களால் நாட்டை நெருக்கடியிலிருந்து மீட்கமுடியுமா? - நிலாந்தன் கடந்த இரு தசாப்தகால அனுபவத்தின்படி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக் காலத்தில் ஜனநாயகவெளி ஒப்பீட்டளவில் அதிகரிப்பதுண்டு.எனினும் இம்முறை அவர் அதிர்ஷ்டலாபச் சீட்டில் ஜனாதிபதியாக வந்ததும் தென்னிலங்கையில் ஜனநாயகவெளி ஒப்பீட்டளவில் சுருங்கியது எனலாம்.மக்கள் எழுச்சிகளின் காரணமாக அந்த வெளி கடந்த மூன்று மாதங்களாக குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அளவுக்கு அதிகரித்துவந்தது. ஆனால் ரணில் அதைச் சுருக்கி விட்டார்.அரகலயவை முறியடிப்பதில் அவர் முதற்கட்ட வெற்றியைப் பெற்றிருக்கிறார்.அதனால் அவசரகாலச் சட்டத்தைத் நீக்கப்போவதாகக் கூறியிருக்கிறார். இவ்வாறு தென்னிலங்கையில் மக்கள் எழுச்சிகளின் விளைவாக அதிகர…
-
- 2 replies
- 680 views
-
-
கொரோனா காட்டுகின்ற ஓட்டைகள் பூமிப்பந்து என்றும்போல உருண்டுகொண்டிருக்கின்றது. சூரியன் காலையில் உதிக்கின்றது. மாலையில் மறைகின்றது. இரவும் பகலும் மாறிமாறி வருகின்றன. கடல் அலைகள் உல்லாசமாக கரையில் மோதிவிட்டுக் கடலுக்குள் ஓடுகின்றன. ஆனால் இருபத்தியோராம் நூற்றாண்டின் அதிசயமாக மனிதவர்க்கம் முடக்கப்பட்டிருக்கின்றது. மனித வர்க்கத்தின் இயக்கத்தை கண்ணுக்குத்தெரியாத நுண்கிருமி பெருமளவில் கட்டிப் போட்டிருக்கின்றது. ஒன்றன்பின் ஒன்றாக நாடுகள் எல்லைகளை மூடின. நாடுகளுக்கு உள்ளே குறுநிலப்பரப்புக்களும் எல்லைகளை மூடிக்கொண்டன. நாலு சுவர்களுக்குள் மனிதர்கள் முடக்கப்பட்டனர். அதனால் அத்தியாவசியம் தவிர்ந்த நுகர்வுத் தேவைகள் முடங்கின. வர்த்தகப் பரிவர்த்தனைகள் தடைப்பட்டன. …
-
- 0 replies
- 680 views
-
-
[size=6]சிறுபான்மையினரிடம் கையேந்தும் அரசு [/size] [size=4]கிழக்கு மாகாண சபையை இலகுவாகக் கைப்பற்றுவது என்ற அரசின் கனவு இம்முறை அங்கு பலிக்கவில்லை. அறுதிப் பெரும்பான்மையுடன் கிழக்கில் ஆட்சியை நிறுவுவோம் எனக் கங்கணம் கட்டிய ஜனாதிபதி மஹிந்த தலைமையிலான அரசுக்கு இந்தத் தேர்தல் ஒரு நல்ல பாடத்தைக் கற்பித்திருக்கிறது.[/size] [size=4]தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை என்ற கனவு கை நழுவிப் போனதால் ஆட்சியமைக்க சிறுபான்மைக் கட்சிகளிடம் கெஞ்சிக் கூத்தாட வேண்டிய நிலை அரசுக்கு ஏற்பட்டிருக்கிறது. சிறுபான்மை மக்களைத் தவிர்த்துக் கொண்டு எந்தவொரு விடயத்தையும் மேற்கொள்ளப் பெரும்பான்மைச் சமூகத்தினால் முடியாது என்ற பாடத்தைக் கிழக்குத் தேர்தல் அரசுக்குக் கற்பித்திருக்கிறது.…
-
- 0 replies
- 680 views
-
-
இது மகிந்த ராஜபக்சவின் அதிரடி ஆட்சியின் யுகம் அல்ல. ரணில் – மைத்திரியின் இராஜதந்திர ஆட்சி. தமிழர்களின் எதிர்கால அரசியலை, தமிழ் அரசியல்வாதிகளின் எதிர்கால இருப்பை கேள்விக்குள்ளாக்கப்போகும் ஆட்சி என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை. இலங்கையில் தமிழர்களின் இருண்ட காலம் என்று வர்ணிக்ககூடிய இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலம் முடிவிற்கு கொண்டுவரப்பட்டு எதிர்வரும் தை மாதம் 8ம் திகதியோடு ஓராண்டை பூர்த்தி செய்யும் நாள் நெருங்குகின்றது. அதாவது இதை பின்வரும் நிலைகளில் விளக்கலாம். ஒன்று மகிந்த ராஜபக்ச ஆட்சியிழந்த காலம், தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட அடக்குமுறைகளை தமிழர்கள் தங்கள் விருப்பு வாக்குகள் மூலம் தகர்த்தெறிந்த காலம், தமிழ் மக்…
-
- 0 replies
- 680 views
-
-
ரணிலின் துணிவும் ஏனைய போட்டியாளரும்! August 21, 2024 — கருணாகரன் — நெருக்கடி காலத்திலிருந்து நாட்டை – மக்களை மீட்டது தானே என்கிறார் ரணில் விக்கிரமசிங்க. அதாவது தானொரு மீட்பர், ஆபத்பாந்தகர் என்றெல்லாம் சொல்கிறார். “அன்றைய நெருக்கடிச் சூழலில் யாருமே பொறுப்பேற்க முன்வராதபோது தனியாளாக முன்வந்து அந்தப் பொறுப்பைத்துணிவுடன் ஏற்றேன். நெருக்கடியிலிருந்து நாட்டைமீட்பதற்கான தேசிய அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்காகச் சஜித்தையும் அநுரவையும் கூட அழைத்தேன். அதைப்போல தமிழ்த்தேசியக் கூட்டமைப்பையும் மலையக் கட்சிகளையும் முஸ்லிம்களையும் கேட்டிருந்தேன். யாரும் வரவில்லை. ஆனாலும், இணைந்து பணியாற்றக் கூடியவர்களைச் சேர்த்து ஆட்சியை அமைத்தேன். அதன் மூலம் பொருட்களுக்காகக் கா…
-
- 1 reply
- 679 views
-
-
புர்கா விவகாரம்: அச்சுறுத்தலாக மாறுகின்றதா முஸ்லிம்களின் பாதுகாப்பு ஆடை? மொஹமட் பாதுஷா உலகை ஆட்கொண்டுள்ள ‘இஸ்லாமோபோபியா’வும் மாறுவேடம் பூண்டுள்ள இனவாத சக்திகளும் அதேபோன்று, முஸ்லிம் பெயர்தாங்கிய பயங்கரவாத அமைப்புகளின் செயற்பாடுகளும், உலகெங்கும் பரவலாக வாழ்கின்ற சாதாரண முஸ்லிம்களின் அடையாளங்களைப் பறிகொடுக்கும் நிலைக்கு இட்டுச் சென்றுகொண்டிருப்பதைக் அன்றாடம் காண்கின்றோம். இந்தியா, இலங்கை தொட்டு மேற்குலக நாடுகள் வரை, பல தேசங்களின் அரசியல், இனவாதத்தின் முக்கிய மூலதனமாக, முஸ்லிம்கள் ஆக்கப்பட்டு இருக்கின்றார்கள். இலங்கையில் இனவாத சம்பவங்கள் பல கட்டங்களாக இடம்பெற்றிருக்கின்றன. எந்த அரச…
-
- 4 replies
- 679 views
-
-
முதல்வருக்கு வைக்கப்படும் செக் மழை விட்டாலும் தூவானம் நிற்காதது போன்று, வடக்கு மாகாணசபையில் ஏற்பட்ட பெருங் குழப்பம், பல்வேறு தலையீடுகளின் மூலம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டாலும், அதனைச் சார்ந்த பிரச்சினைகள் அவ்வப்போது எழுந்து கொண்டேயிருக்கின்றன. முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை என்ற பிரச்சினை மாத்திரம் தீர்க்கப்பட்டுள்ளதே தவிர, அதற்கு அடிப்படைக் காரணியான பல்வேறு பிரச்சினைகள் இன்னமும் தீர்க்கப்படவில்லை. அதில் முக்கியமானது, சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் இரண்டு அமைச்சர்கள் தொடர்பாக நடத்தப்பட வேண்டிய புதிய விசாரணை. சுகாதார மற்றும் போக்குவரத்து அமை ச்சர் …
-
- 0 replies
- 679 views
-
-
வடக்கிலும் கிழக்கிலும் தீவிரவாதப் போக்கின் செல்வாக்கு எம்.எஸ்.எம். ஐயூப் / “தற்போதைய தலைமை போய், மாற்றுத் தலைமை உதித்தால், மீண்டும் கூட்டமைப்பின் சார்பில், முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்குவதற்குச் சாத்தியம் உள்ளது” என, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூறியதாக, ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அதாவது, “விக்னேஸ்வரனை இனி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில், முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறக்குவதில்லை” என்று, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அதன் ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ சுமந்திரன் கூறி வருவதைப் போலவே, “இனி, கூட்டமைப்பின் கீழ், தேர்தலில் நிற்கப் போவதில்லை” என விக்னேஸ்வரனும் கூறுகிறார். …
-
- 0 replies
- 679 views
-