அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
தேர்தல்களின் போது மக்கள் ஏன் ஏமாறுகிறார்கள்? எம்.எஸ்.எம். ஐயூப் / 2020 ஜூலை 01 வருகிறது, மற்றொரு தேர்தல். ஆனால், எமக்குத் தெரிந்த காலத்தில் இருந்து, ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் ஏமாற்றப்பட்டே வந்திருக்கிறார்கள். ஒவ்வொரு தேர்தலிலும் சில கட்சிகள், முக்கிய சில வாக்குறுதிகளை முன்வைத்து, தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளனவே தவிர, நாட்டு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீர்க்கும் ஆக்கபூர்வமான திட்டமொன்றை முன்வைத்து, எந்தவொரு கட்சியும் ஆட்சியைக் கைப்பற்றியதில்லை. சில சந்தர்ப்பங்களில்,சில கட்சிகள் அளித்த வாக்குறுதிகளில் சிலவற்றை நிறைவேற்றிய போதிலும், அதன் மூலம் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. அதாவது, எந்தவொரு கட்சியும் ஆட்சிக்கு வந்த…
-
- 0 replies
- 559 views
-
-
தமிழ்த் தேசியமும் அபிவிருத்தி அரசியலின் தேவையும் புருஜோத்தமன் தங்கமயில் / 2020 ஜூலை 01 கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாகப் பதவியேற்று, சில தினங்களுக்குள்ளேயே நாட்டிலுள்ள முக்கிய ஊடகங்களின் ஆசிரியர்கள், பிரதானிகளை அழைத்து சந்திப்பொன்றை நடத்தினார். அந்தச் சந்திப்பில், யாழ்ப்பாணத்திலிருந்து இயங்கும் ஊடக நிறுவனமொன்றின் முதலாளியும் கலந்து கொண்டிருந்தார். அந்த ஊடக நிறுவனத்தின் முதலாளி, 2010 முதல் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். எதிர்வரும் பொதுத் தேர்தலிலும் கூட்டமைப்பின் வேட்பாளராகப் போட்டியிடுகிறார். வழக்கமாக, ஊடக நிறுவனங்களின் ஆசிரியர்களும், பிரதானிகளுமே ஜனாதிபதிகளுடனான இவ்வாறான சந்திப்புகளுக்கு அழைக்கப்படுவதுண்டு. இது, ஜே.…
-
- 5 replies
- 1k views
-
-
வடக்கு தமிழ் மக்களின் எதிர்கால அரசியல் பயணம் யாருடன் அமையப்போகிறது ? பொதுத் தேர்தலுக்கான வடக்கு மாகாணத்தின் களம் போட்டிமிக்க ஒரு களமாக மட்டுமல்லாது சவால் நிறைந்த களமாகவும் மாறியுள்ளது. தெரிவுகள் அதிகம் உள்ளமையினால் வாக்குகள் சிதறி தமிழ் மக்களின் எதிர்கால அரசியல் பயணம் எவ்வாறு யாருடன் அமையப்போகிறது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. வடக்கு மாகாணத்தில் 13 நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்காக 8 லட்சத்து 58 ஆயிரத்து 861 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணம் மற்றும் வன்னி ஆகிய இரு தேர்தல் மாவட்டத்திலும் 5 நிர்வாக மாவட்டங்கள் உண்டு. இதில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்திற்கு உட்பட்ட யாழ்ப்பாணம் நிர்வாக மாவட்டத்தில் 4 லட…
-
- 0 replies
- 437 views
-
-
த. தே. ம. மு மாற்றுத் தலைமையாகுமா ? | கருத்தாடல் | நடராஜர் காண்டீபன்
-
- 0 replies
- 575 views
-
-
தமிழ்த் தேசிய அரசியலின் ஆதரவுத் தளம் சரிந்து விட்டதா? -அதிரதன் பலூனை ஊதஊத அது பெரிதாகி, பின்னர் வெடித்துப் போனால், ஒன்றுமில்லை என்றாகிப் போய்விடுவதைப் போலதான், தமிழ்த் தேசிய எதிர்ப்பாளர்கள், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மீதான விரோதப் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். அரசியலில் கற்றுக்குட்டிகளும் கட்டாயம் தேவைதான். ஆனால், தமிழ்த் தேசிய எதிர்ப்பு அரசியலில் அவை, பன்றிக் குட்டிகளாக இருப்பதுதான் வினோதம். இவர்களை விடவும், “தமிழ்த் தேசியத்துக்காகவே எல்லாம்” என்று கூறிக்கொண்டே, தமிழ்த் தேசிய எதிர்ப்பைக் கக்கும் சிலரும் இருக்கத்தான் செய்கின்றார்கள். இவர்கள், பலூனுக்குள் காற்றை ஊதிக்கொள்ள முடியாத நிலைலேயே இருக்கிறார்கள். தமிழ்த் தேசிய அரசியல் சூழல், யுத்த…
-
- 4 replies
- 1.2k views
-
-
விக்கியால் தமிழருக்கு என்ன செய்ய முடியும்? காரை துர்க்கா / 2020 ஜூன் 30 தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், “தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் இருந்து விலகிச் சென்ற வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், கூட்டமைப்பை விமர்சிக்கலாம்; அதை விடுத்து, தமிழ் மக்களுக்கு அவரால் என்ன செய்ய முடியும்” எனத் தெரிவித்து உள்ளார். “விக்னேஸ்வரனை, நானே அரசியலுக்குக் கொண்டு வந்தேன். வடக்கு மாகாண சபைத் தேர்தலில், அவருக்கு வாக்களிக்க வேண்டும் எனக் கூறியிருந்தேன். ஆனால், அவர் தற்போது என்ன செய்கின்றார்? தமிழ்த் தேசிய கூட்டமைப்பைப் பொறுத்த வரையில், யாரையும் நாம் விலக்கவில்லை; சிலர் விலகினார்கள். அதற்கான காரணத்தை, அவர்கள் இன்றுவரை கூறவில்லை” என, இரா. சம்ப…
-
- 1 reply
- 673 views
-
-
வரலாறு எப்போதும் மையம் நோக்கிக் குவிகிறது. வரலாறு மையத்தில் உள்ளோர் நோக்கிச் சாய்வது. இலக்கியமோ வெளிநோக்கிச் சரிவது. அதிலும் முன்னதும் பின்னதும் உண்டு. உரத்ததும் மெலிந்ததும் உண்டு. இலக்கியத்தின் வகைகளிலும் கவிதையே மறக்கப்பட்டவர்களின் குரலாக இருக்கிறது. ஆப்பிரிக்க – அமெரிக்க கறுப்பினத்தவர் துயரங்கள் இலக்கியத்தில் இன்று புறக்கணிக்கப்படாத ஒரு வகை. அங்கிள் டாமின் கேபின் இன்றைக்குப் பாட நூல்களில் ஒன்று. ஒரு சமூகத்தின் பாட நூல்கள் என்பது அந்தச் சமூகம் எந்தெந்தக் குரல்களை அனுமதிக்கிறது என்பதற்கான ஒரு சாட்சியாகும். ஒருவகையில் அது பெரும்போக்குச் சரித்திரத்துக்கான நுழைவுச் சீட்டு. ஆனால் இன்னமும் இலக்கியத்தின் தெருக்களில் கூட அனுமதிக்கப்படாத மக்கள் இருக்கிறார்கள். அரசியல்சரி என…
-
- 7 replies
- 1.7k views
-
-
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளராகிய சுமந்திரனுக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ள பிரபல சட்டத்தரணி திருமதி.மனோன்மணி சதாசிவம், சுமந்திரன் உடனடியாக பதவி விலக வேண்டும் அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். திருமதி.மனோன்மணி சதாசிவம் வவுனியா உயர் நீதிமன்றத்தில் பணியாற்றும் இலங்கையின் மூத்த சட்டத்தரணி, பிரபல நொத்தாரிசு, பதில் நீதவான் என்பது குறிப்பிடத்தக்கது. சுமந்திரன் ஏன் பதவி விலகவேண்டும் என்ற தனது நியாயப்பாட்டை திருமதி.மனோன்மணி சதாசிவம் இவ்வாறு வெளிப்படுத்தியுள்ளார்: ஒரு இனம் தன்னிகரில்லா வளர்ச்சி அடைய வேண்டுமென்றால் அவ்வினம் ஐக்கியப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் தமிழீழத்தில் …
-
- 37 replies
- 3.5k views
- 1 follower
-
-
இனநெருக்கடித் தீர்வுக்கான வாய்ப்புகள் பிரகாசம்: தமிழர் தரப்பு செய்ய வேண்டியது என்ன? Johnsan Bastiampillai / 2020 ஜூன் 29 அடுத்து நடைபெறவுள்ள தேர்தலில், எந்தத் தரப்பு வெற்றிபெறும் என்பதை, ஓரளவு அனுமானிக்கக் கூடிய சூழ்நிலையே, தற்போது வரையில் நிலவுகின்றது. இத்தகைய அனுமானத்தின் மீது, பெருமளவில் மாற்றங்களை ஏற்படுத்தக் கூடிய காரணிகளோ சவால்களோ, வெற்றிபெறும் தரப்புக்கு முன்னால் இல்லை. எனவே, ராஜபக்ஷக்களின் தலைமையிலான இந்த அரசாங்கமே, தேர்தலுக்குப் பின்னரும் தொடர்ந்து நீடிக்கும் என்பதற்கான நிகழ்தகவுகள், அதிகமாகவே காணப்படுகின்றன. ஆனால், அந்த வெற்றி மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொண்டமையுமா என்பதுதான் கேள்விக்குறியாக அமைகின்றது. எது எப்படி இருந்தபோதிலும், தமிழ…
-
- 1 reply
- 449 views
-
-
இலங்கையின் அரசமைப்புச் சட்டத்தில் சுயநிர்ணய உரிமை என்.கே. அஷோக்பரன் / 2020 ஜூன் 29 இந்தப் பத்தியாளர், ஆங்கிலத்தில் எழுதிய ஆய்வுக் கட்டுரையின் ஒரு பகுதியின் தமிழாக்கம் இதுவாகும். இந்தக் கட்டுரையானது, இலங்கைத் தமிழ் மக்கள், சுயநிர்ணய உரிமை கோரலின் வரலாற்றையும் அதன் சூழலையும் சுருக்கமாக ஆராய்கிறது. அத்துடன், ‘சுயநிர்ணய உரிமை’க்கு உள்ளேயும் வெளியேயும் ஆக, இருவகைக் கருத்தாக்கங்களைச் சுருக்கமாக மறுபரிசீலனை செய்கிறது. அத்துடன், இலங்கைத் தமிழ் மக்களின், சுயநிர்ணய உரிமையை அங்கிகரிப்பது தொடர்பில், சந்திரசோமா எதிர் சேனாதிராஜா வழக்குத் தீர்ப்பின் அரசமைப்பு சார் முக்கியத்துவத்தை, மதிப்பீடு செய்யவும் முனைகிறது. இலங்கைத் தமிழ் மக்களின் உரிமை கோரல் இலங்கையில், 19…
-
- 1 reply
- 709 views
-
-
மன உளைச்சல். சில வருடங்களாகவே இது இருக்கிறது. வெளியே சொல்லவும் முடியாமல், உள்ளே வைத்திருக்கவும் முடியாமல், வேதனையும், இயலாமையும், வெறுப்பும், கையாலாகத்தனமும், கோபமும்....இப்படியே நேரத்திற்கொன்றாக மாறும் உணர்வுகளுடன் கழிகிறது பொழுது. விடை தெரியாத கேள்விகளில் ஆரம்பித்து, இப்படியிருக்கலாம் என்று சமாதானம் செய்து, இனி என்ன செய்யலாம் என்று யோசித்து, எதுவும் முடியாதுடா உன்னால் என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டு, அப்போதைக்கு மட்டும், என்னால என்னதான் செய்ய ஏலும் என்று கையாலாகத்தனத்துடன் கேட்டுவிட்டு நகர்ந்துவிடுவதோடு அப்போதைக்கு அந்தப் பிரச்சினை முடிந்துவிடும். ஆனால், சில நாட்களில் மீண்டும் அதே பிஒரச்சினை, அப்படியிருக்கேலாது, ஏதாவது செய்யவேணும். பார்த்துக்கொண்டிருந்தால் எ…
-
- 30 replies
- 3.5k views
-
-
புதிய இராகத்தில் பழைய பல்லவி மொஹமட் பாதுஷா இன்னுமொரு தேர்தல் சூடு பிடிக்கத் தொடங்கி இருக்கின்றது. ஒவ்வொரு தேர்தலும், நமக்குப் புதிய அனுவமே என்றாலும், அது பற்றி புதிதாக ஒரு பத்தியை அல்லது கட்டுரையை எழுத வேண்டியதில்லை. முன்னைய தேர்தல் காலத்தில் எழுதிய ஒரு பத்தியை எடுத்து, திகதியையும் வேட்பாளர்களின் எண்ணிக்கைகளையும் திருத்தினால் மட்டுமே போதுமானது என எண்ணத் தோன்றுகின்றது. ஏனெனில், பொதுவாக அனைத்துக் கட்சிகளின் வேட்பாளர்களும், குறிப்பாக முஸ்லிம் அரசியல்வாதிகள், பழைய பல்லவியைத்தான் மீண்…
-
- 0 replies
- 585 views
-
-
கொரோனாவிற்குப் பின்னரான ஒரு தேர்தல்: தமிழ் வாக்காளர்களே சிந்திக்க வேண்டும்..!! நியூஸிலாந்தில் வசிக்கும் ஒரு நண்பர், முன்பு கொழும்பில் ஊடகத்துறையில் வேலை செய்தவர். என்னிடம் கேட்டார், “ஜனாதிபதி தேர்தலின் போது நீங்களும் சேர்ந்து இயங்கிய சுயாதீனக் குழு போன்ற ஒன்றை இம்முறை நாடாளுமன்றத் தேர்தலின் போதும் உருவாக்கினால் என்ன? ” என்று. அவரிடம் நான் சொன்னேன் “உருவாக்கலாம் தான் ஆனால் அவ்வாறு உருவாக்கி கட்சிகளுக்கு என்ன சொல்வது?” ஏனென்றால் கடந்த 11 ஆண்டுகளாக கூட்டமைப்பு நாங்கள் எழுதிய எதையும் பேசிய எதையும் காதில் எடுத்துக் கொள்ளவில்லை. தமிழ் மக்கள் பேரவையின் ஜனாதிபதி தேர்தலுக்கான சுயாதீனக் குழு முதலில் சந்தித்தது சம்பந்தரை. இச…
-
- 0 replies
- 427 views
-
-
எருமை மாடு ஏரோப்பிளேன் ஓட்டிய கதை கடந்த வாரம், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இராஜவரோதம் சம்பந்தனின் நேர்காணலை, ‘தமிழ்மிரர்’ பத்திரிகையில் வாசிக்கக் கிடைத்தது. அது, ‘எருமை மாடு ஏரோப்பிளேன்’ ஓடுவதற்கான சாத்தியங்கள் குறித்து, ஆழமாக யோசிக்க வைத்தது. குறிப்பாக, மூன்று பதில்கள் இவ்வாறு யோசிக்க வைத்தன. “மக்களுக்கான தீர்வைப் பெற்றுக்கொடுக்க முடியவில்லையே என்ற குற்ற உணர்வு உண்டா” என்ற வினாவுக்கு அளிக்கப்பட்ட பதில் யாதெனில், “நல்லாட்சி அரசாங்கத்தை, நாங்கள் தான் ஆட்சியில் இருத்தினோம். தமிழ் மக்களுக்குத் தீர்வைத் தர அவர்களும் முயன்றார்கள்; அவர்களால் முடியவில்லை. ஆனால், நாங்கள் ஏமாந்து விட்டோம் என்பதை, நாம் ஏற்றுக்கொள்ளவில்லை” என்பதாகும். இது, பூவைப் பூ என்றும் ச…
-
- 0 replies
- 610 views
-
-
தர்மமதை சூது கௌவும் இறுதியில் தர்மமே வெல்லும் சிங்களப் பெருந்தேசிய வாத சிந்தனையின் வடிவமாக உருவெடுத்த ராஜபக்ஷவின் பொதுஜன பெரமுன கட்சியானது, அறுதிப் பெரும்பான்மையுடன் எதிர்வரும் தேர்தலில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் முயற்சியில் பல்வேறு உபாயங்களைக் கையாண்டு வருகின்றது. அது தனது தேர்தல் பிரசார வேலைகளை முடுக்கி விட்டுள்ள இவ்வேளையில், கருணா விவகாரம் பெரும் தலையிடியாக ராஜபக்ஷக்களுக்கு மாறியுள்ளது. ஏற்கெனவே பொருளாதார வீழ்ச்சி, பொருள்களின் விலை அதிகரிப்பு, அமெரிக்க தூதரக அலுவலரின் கொரோன வைரஸ் விவகாரம், அமெரிக்க வியாபார ஒப்பந்தம், தோட்டத்தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை, இனப்பிரச்சினைக்கான தீர்வு, முஸ்லிம்கள் விவகாரம், இராணுவ மயமாக்கல், இந்திய-சீன உறவு, முஸ்லிம் நா…
-
- 0 replies
- 987 views
-
-
தானாகவே பொறியில் சிக்கிய கருணா அம்மான் பல காலமாக, எவராலும் கண்டுகொள்ளப்படாத ஒருவராக இருந்த முன்னாள் பிரதியமைச்சர் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன், ஒரே நாளில் தலைப்புச் செய்திகளில் இடம்பெறும் அளவுக்குப் போய்விட்டார். அவர், மீண்டும் செய்தியின் மய்யப் பொருளாக மாறியதற்குக் காரணம், விடுதலைப் புலிகள் காலத்தைப் பற்றி அவர் வெளியிட்ட ஒரு கருத்துதான். ஆனையிறவில் ஒரே இரவில் 2,000 - 3,000 படையினரைக் கொன்றதாகத் தற்புகழ் தேடிக்கொள்ள முயன்ற விவகாரமே, அவருக்கு எதிராக எழுந்துள்ள விமர்சனங்கள், சர்ச்சைகளுக்குக் காரணம். இங்கு கருணா வெளியிட்ட தகவல்களும் தவறு; அதனை நியாயப்படுத்தி அவர் கூறுகின்ற கருத்துகளும் தவறு. அதுபோல, அவருக்கு எதிராக முன்வைக்கப்படும் கருத்துகளிலும் …
-
- 0 replies
- 444 views
-
-
இலங்கையில் சீனாவின் யுத்தக்கலை. Posted on June 26, 2020 by தென்னவள் 32 0 ஜூன் மாத நடுப்பகுதியில் இலங்கை சீனாவிடமிருந்து மற்றுமொரு தொகுதி முகக்கவசங்களையும் மருத்துவ உபகரணங்களையும் பெற்றுக்கொண்டது-இது சீனாவின் வெளிவிவகார கொள்கையின் முக்கிய இலக்காக இலங்கை காணப்படுவதையும்,நன்கொடை இராஜதந்திரத்தையும் வெளிப்படுத்தியுள்ளது. சீனா தொடர்ந்தும், இந்தோ பசுவிக்கில் தன்னை விஸ்தரிப்பதும்,அதன் புதிய பட்டுப்பாதை திட்டம் ஆரோக்கியமான பட்டுப்பாதைதிட்டமாக முடிவடைந்திருப்பதும்,அமெரிக்க-சீன பதட்டத்தினை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. இந்து சமுத்திரத்தில் முக்கிய கப்பல் பாதைகளின் அருகில் இலங்கையின் அமைவிடம் காரணமாக அமெரிக்க இராஜதந்திரி அலைஸ்வெல்ஸ் இலங…
-
- 0 replies
- 779 views
-
-
சுமந்திரனின் கூட்டத்தில் சுமந்திரனைக் கேள்விக் கணைகளால் திண்டாட வைத்த கலாநிதி
-
- 1 reply
- 666 views
-
-
கருணாவும் ஆனையிறவில் ஒரே இரவில் 2000-3000 படையினர் கொல்லப்பட்டமையும் - டி .பி .எஸ் ஜெயராஜ் இந்த விவகாரத்தின் முக்கிய அம்சம் என்னவெனில் புலிகளை அழித்ததில் கருணா அளித்த பங்களிப்பு அவர் அரசியலில் விமர்சித்தவர்களை விட மிக அதிகம். அவர் பெருமையாகப் பேசியது உண்மையாக இருந்தாலும், புலியாக அவர் என்ன செய்தார் என்பதை விட புலிகளுடன் போராடுவதில் அவர் வகித்த பங்களிப்பு மிக அதிகம். விநாயகமூர்த்தி முரளீதரன் அல்லது கருணா அம்மான் அல்லது கேணல் கருணா இப்போது அதிகளவு செய்திகளில் இடம்பிடித்திருக்கிறார். 2004 இல் விடுதலை புலிகள் அமைப்பிலிருந்தும் பிரிந்து வேலுப்பிள்ளை பிரபாகரன் தலைமையிலான புலிகளை எதிர்த்துப் போராடுவதில் இலங்கை ஆயுதப் படைகளுடன் ஒத்துழைத்த தமிழீழ விடுதலைப் புலிகளின…
-
- 1 reply
- 826 views
-
-
தமிழ் வேட்பாளர்களை நோக்கி முப்பது பகிரங்க கேள்விகள் ! – நிலாந்தன் June 28, 2020 நிலாந்தன் நீங்கள் எந்த கட்சியைச் சேர்ந்தவராக இருக்கலாம். ஆனால் ஆயுதப் போராட்டத்துக்குப் பின்னரான கடந்த 11 ஆண்டுகால அரசியலை முன்வைத்து உங்களிடம் சில கேள்விகளை கேட்க வேண்டியிருக்கிறது. உங்களுடைய அரசியல் நிலைப்பாடுகள் வேறுபடலாம். ஆனால் உங்களுடைய வாக்காளர்கள் பெரும்பாலானவர்கள் தமிழ் மக்களே. எனவே தமிழ் மக்களின் நிரந்தர பிரச்சினைகள் தொடர்பாகவும் அன்றாட பிரச்சினைகள் தொடர்பாகவும் உங்களிடம் இருக்கக்கூடிய வழி வரைபடம் என்ன ?அதை அடைவதற்கான அரசியல் உபாயம் என்ன ?என்பதை நீங்கள் பகிரங்கப்படுத்த வேண்டும் அந்த அடிப்படையிலேயே இக் கேள்விகள்கேட்கப்படுகின்றன. கேள்வி 1 - மி…
-
- 1 reply
- 590 views
-
-
வரலாற்றுப் பாடநூல்களில் பௌத்த சமயத்திணிப்பும் பல்கலைக்கழகத் தமிழ்ச் சமூகத்தின் கவனயீனமும் குருபரன் விடயத்திலும் உரியமுறையில் நியாயங்கள், சர்வதேச விதிமுறைகள் தொடர்பாகச் சுட்டிக்காட்டப்பட்டு அழுத்தங்கள் கொடுக்கப்படவில்லை. பேராசிரியர் விக்னேஸ்வரன் விலக்கப்பட்டபோதும், பல்கலைக்கழகப் பீடாதிபதிகள். பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் எவருமே அதற்கு எதிராகக் குரல் கொடுக்கவில்லை. பல்கலைக்கழகத் தொழிற்சங்கம் கூட போராட்டம் நடத்தவில்லை -அ.நிக்ஸன்- இலங்கை ஒற்றையாட்சி அரசின் கீழான இலங்கைத் தேசியம் என்பதற்குள், ஈழத்தமிழர்களையும் இணைத்துவிட வேண்டுமென்ற நோக்கம் 2009ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னரான சூழலில், சிங்கள அரசியல் கட்சிகளிடையே மேலோங்கி வருகின்றது. இதன் உச்சத்தை 2015ஆம் ஆண்ட…
-
- 0 replies
- 443 views
-
-
ஈழத் தமிழ் லொபியின் தோல்வி? - யதீந்திரா யுத்தம் நிறைவடைந்து ஒரு தசாப்தம் கழிந்துவிட்டது. இந்தக் காலகட்ட தமிழர் அரசியலை எடுத்து நோக்கினால், பாரபட்சமில்லாமல் அனைத்து தமிழ்த்தேசிய தரப்பினரும் சர்வதேச சமூகம் தொடர்பிலேயே தமது கரிசனையை வெளிப்படுத்தி வந்திருக்கின்றனர். ‘சர்வதேச சமூகம் எங்களை கைவிடாது’ – என்பதுதான் அனைவரதும் சுலோகமாக இருந்தது. இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் – கூட்டமைப்பின் கொள்கையை விமர்சித்து வேறு வழியில் சென்றவர்களுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை. அதே போன்று ஜரோப்பிய மைய தமிழ் புலம்பெயர் அமைப்புக்களான நாடுகடந்த அரசாங்கத்திற்கும் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவிற்கும் கனடிய தமிழ் காங்கிரஸ் (CTC) மற்றும் USTAG போன்ற தாராளவாத புலம்பெயர் அமைப்புக்களுக்கும் இடையி…
-
- 0 replies
- 456 views
-
-
தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான ஏபிரகாம் சுமந்திரன் அவர்களும் ஒரு தராசின் சம எடைகளா?முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் அன்ரன் பாலசிங்கம் அவர்களுக்கு நிகரானவர்தான் சுமந்திரன் அவர்களும் என்ற பொருள்பட ஆற்றிய உரை தொடர்பாகத் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் அவர்களிடம் டான் தொலைக்காட்சி வினவியபோது அவர் அளித்த பதிலின் காணொளி வடிவம்
-
- 4 replies
- 621 views
-
-
துரோகத்திற்கு துணைபோகும் வால்பிடி அரசியல்.! வீரத்திற்கும் தியாகத்திற்கும் பெயர் பெற்ற ஒரு மகோன்னதமாக விடுதலைப் போராட்டம் முன்னெடுக்கப்பட்ட இடம்தான் கிளிநொச்சி. தமிழீழ விடுதலைப் புலிகளின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த கிளிநொச்சி மண் அன்றைக்கு பலரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. அந்த மண்ணையும் அந்த மண்ணில் நடந்த விடுதலைப் போராட்டத்தையும் கேவலப்படுத்தும் வால்பிடி அரசியல் இன்று அங்கே நடப்பதுதான் பலருக்கும் வேதனை தருகின்ற விடயம். மற்றவர்களை நம்ப வைத்த கழுத்தறுப்பதும் நம்பிக்கைக்கு எதிராக செயற்படும் மாத்திரம் துரோகம் அல்ல. பெரும் துரோகங்கள் நடக்கின்ற சமயத்தில் எதையும் பேசாமல் கள்ளமாக இருப்பதும் துரோகம்தான். உலகமே முகம் சுழிக்கும் ஒரு விடயத்தை முன்னாள் பாராளும…
-
- 1 reply
- 601 views
-
-
ஈழத் தமிழ் மாணவர்களின்- வரலாற்றுப் பாடநூல்களில் பௌத்த சமயத்திணிப்பும் பல்கலைக்கழகத் தமிழ்ச் சமூகத்தின் கவனயீனமும் குருபரன் மீதான தடையுத்தரவு இலங்கை இராணுவத்துக்கு வழங்கப்பட்ட மரியாதை இலங்கை ஒற்றையாட்சி அரசின் கீழான இலங்கைத் தேசியம் என்பதற்குள், ஈழத்தமிழர்களையும் இணைத்துவிட வேண்டுமென்ற நோக்கம் 2009ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னரான சூழலில், சிங்கள அரசியல் கட்சிகளிடையே மேலோங்கி வருகின்றது. இதன் உச்சத்தை 2015ஆம் ஆண்டு மைத்தரி- ரணில் அரசாங்கத்தில் காணமுடிந்தது. இலங்கைத் தேசியத்தை மையமாகக் கொண்டு தமிழ்த்தேசிய அரசியல் நீக்கத்துக்கான முதற்கட்ட ஏற்பாடாகவே ஜெனீவா மனித உரிமைச் சபையில் நிறைவ…
-
- 0 replies
- 505 views
-