அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9274 topics in this forum
-
அமெரிக்காவை மிரட்டும் சீனா ட்ராகன்.! அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் கடந்த சில வருடங்களாகவே சண்டை நடந்து கொண்டு தான் இருக்கிறது. வர்த்தகப் போரில் தொடங்கிய பிரச்சனை, இப்போது வார்த்தைப் போர் வரை வந்து இருக்கிறது. எப்போது பார்த்தாலும், சர்வதேச அரங்கில். இரு நாடுகளும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டே தான் இருக்கிறார்கள். அமெரிக்கா எகிறும் போதெல்லாம், ஓரளவுக்காவது மெளனம் காக்கும் சீனா, இந்த முறை "திருப்பி அடிப்பேன் பாத்துக்க" என்கிற ரேஞ்சில் தெனாவெட்டாக பேசி இருக்கிறது. அப்படி என்ன பிரச்சனை..? உய்கர் (Uighur) இஸ்லாமியர்கள் சிங் ஜியாங் (Xinjiang) என்கிற பகுதியில் தான் இந்த உய்கர் இஸ்மாலிமியர்கள் வாழ்ந்து வருகிறார்கள். 1949-ம் ஆண்டு சீனா தன்னை சுதந்திர நா…
-
- 0 replies
- 711 views
-
-
ஈழத் தமிழர்களின் எழுபது ஆண்டுகால அரசியல் போராட்டத்தை அழிக்க மேற்குலகை நம்பிய இரு பிரதான சிங்களக் கட்சிகளும் இன்று பிளவுபட்டுக் கிடக்கும் அவலம் முஸ்லிம்களையும் வெளியேற்ற வேண்டும் என்ற கோசத்தோடும், தற்போதைய அரசியல் நகர்வுகள் 1 2 நிருபர் திருத்தியது ஆசிரியர் திருத்தியது உறுதிப்படுத்தப்படக்கூடியது ஆசிரியபீட அங்கீகாரம் மொழி திருத்திய பதிப்பு …
-
- 0 replies
- 807 views
-
-
தமிழ்த் தேசிய தேர்தல் களத்தில் ’இரட்டைக் குழல் துப்பாக்கி’ Johnsan Bastiampillai / 2020 ஜூன் 20 இது தேர்தல்க் காலம். தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளரும், எவ்வாறு வாக்குகளை வாரி அள்ளிக் கொள்ளலாம் என்பதிலேயே, கவனம் செலுத்துவார். தேர்தல் அரசியலில், அதுதான் முக்கியமானதும் கூட! கட்சியொன்றிலோ, சுயேட்சையாகவோ தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரைத் தெரிவு செய்யும் முகமாகப் புள்ளடி இடும், வாக்காளர் ஒருவர், அந்த வேட்பாளரைத் தெரிவு செய்வது, அறிந்தவர், தெரிந்தவர், ஊரவர் என்ற முட்டாள்தனமான காரணங்களைத் தவிர்த்து, 'எனதும் எனது சமூகத்தினதும் வாழ்க்கையைச் செழிக்கச் செய்வார்' என்ற எதிர்பார்ப்பாகும். ஒவ்வொரு வாக்காளனும் ஏதோவோர் எதிர்பார்ப்பின் நிமித்தம், தான் சிந்தி…
-
- 1 reply
- 572 views
-
-
-
கஞ்சா காவிகள் கொரோனா வைரஸ் காவுவார்களா? கே. சஞ்சயன் / 2020 ஜூன் 20 இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றின் அடுத்த அலை, வடக்கிலிருந்தே ஆரம்பிக்கக் கூடும் என்ற எச்சரிக்கை, சுகாதார அதிகாரிகளால் விடுக்கப்பட்டிருக்கிறது. இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருப்பதற்கு, முக்கிய காரணியாக இருப்பது, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் உள்ள 'தொப்புள் கொடி உறவு'தான். காலம் காலமாக, இந்தியாவுடன் 'தொப்புள் கொடி உறவு' உள்ளவர்களாகத் தமிழர்கள் பெருமையுடன் கூறிக் கொள்வதுண்டு. பல சமயம் இந்த உறவு, பெருமையாகவும் பலமாகவும் கூட இருந்ததுண்டு. ஆனால், இப்போது இந்த உறவே ஆபத்தானதாகவும் மாறிவிடக் கூடிய சூழலும் உள்ளது. இந்தியாவையும் இலங்கையையும் பிரிக்கும் பாக்கு நீரிணை வழியாக, குறுகிய …
-
- 0 replies
- 588 views
-
-
-
- 2 replies
- 768 views
-
-
தமிழர்கள் எவரும் பேயர்கள் அல்லர் -இலட்சுமணன் கொரோனா தொற்றிலிருந்து நாடு வழமைக்குத் திரும்பி வருகின்ற வேளையில், அரசியலில் தேர்தல் அரங்கு சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கங்களை வழங்கியுள்ள தேர்தல் ஆணைக்குழு, தேர்தல் ஒத்திகைகளையும் மாவட்டம் தோறும் நடத்தி வருகிறது. இத்தகைய சூழலில், நாடு என்றும் எதிர்நோக்காத அளவு பொருளாதார வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதுடன், அதிலிருந்து மீண்டெழுவதற்கான மாற்று உபாயங்களைத் தேடிக்கொண்டிருக்கிறது. அதற்கேற்ற வகையிலேயே, மத்திய வங்கி மீதான ஜனாதிபதியின் கண்டனம் அமைந்துள்ளது. தேசிய அரசியல் சூழல் இவ்வாறிருக்க, தமிழ்ப் பிரதேசங்களின் அரசியல் நிலைமைகள் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளன. வழமையைவிட தமிழ் மக்களின் தேசிய அப…
-
- 0 replies
- 534 views
-
-
கருத்துக்களத்தில் சட்டத்தரணி தவராசா மற்றும் துரை ராஜசிங்கம்
-
- 1 reply
- 512 views
-
-
தமிழ்த் தேசிய வாக்குகளைக் குறிவைக்கும் பேரினவாதக் கட்சிகள் புருஜோத்தமன் தங்கமயில் / 2020 ஜூன் 17 'நித்திரையா தமிழா, நீ நிமிர்ந்து பாரடா, இந்த நிலத்தில் உனக்கும் உரிமையுண்டு, எழுந்து சேரடா...' என்று ஆரம்பிக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளின் பாடலொன்றை, ஜனவரி 12, 2018இல் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான பிரசாரக் கூட்டமொன்றில், ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஒலிபரப்பியது. அந்தப் பாடலின் இறுதி வரிகள், 'தலைவன் எங்கள் தலைவன் உண்டு நிமிர்ந்து பாரடா, தமிழ் ஈழம் எங்கள் கையில் என்று எழுந்து சேரடா...' என்றவாறாக அமைந்திருக்கும். இங்கு தலைவன் எனும் இடம், புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனைக் குறிக்கும். அப்போது, இலங்கையின் ஜனாதிபதியாகவும் சுதந்த…
-
- 1 reply
- 524 views
-
-
என்ன பேச வேண்டும் என் பிரதமர்?- நம் கிராமங்களையும் நகரங்களையும் மறுவரையறுப்போம் உலகின் பழமையான விவாதம் ஒன்று இந்தக் கொள்ளைநோய் காலகட்டத்தில் மீண்டும் உயிர் பெறுகிறது. ‘நகரமா, கிராமமா; எது நம் நீடித்த நிம்மதியான வாழ்க்கைக்கு உகந்தது?’ லண்டன், நியூயார்க், மாஸ்கோ, சாவ் பாவ்லோ, மும்பை என்று மனித குலம் நம்பும் கனவு நகரங்கள் பலவும் கரோனா தொற்றுக்கு அதிகம் இலக்காகி இருப்பதும், நகரங்களை ஒப்பிட நெரிசலும் நெருக்கடியும் அற்ற கிராமங்கள் பாதுகாப்பாக இருப்பதும் இந்த விவாதத்துக்குக் கூடுதல் உத்வேகம் தந்திருக்கிறது. உலகின் பல நாடுகளில் நகரங்களில் வாழ்வோர் இன்று அங்கிருந்து வெளியேற ஆர்வத்தோடு இருப்பதாகச் சொல்கிறார்கள். குறைந்தபட்சம் நகரின் மையத்திலிருந்து விளிம்புக்கு, புற…
-
- 0 replies
- 457 views
-
-
காக்கா எச்சமா, காக்கைக் கூடா? காரை துர்க்கா / 2020 ஜூன் 16 பருத்தித்துறைக் கடலில், சிறப்புப் பூஜைகள் நடத்தி, வெளி மாவட்ட மீனவர்கள், கடலட்டை பிடிக்க ஆரம்பித்து உள்ளனர். திருகோணமலை, வெருகல் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள 500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த நீலியம்மன் ஆலயம் அழிக்கப்பட்டு, அவ்விடத்தில் விகாரை அமைக்கப்பட்டு, அதற்குப் பொலிஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டு உள்ளதாக, பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இவை, கடந்த வாரப் பத்திரிகைச் செய்திகள் ஆகும். தமிழர் ஒருவர், கொழும்பில் மத்திய அரசாங்கத்தில் கடற்றொழில் அமைச்சராக இருந்த போதிலும், வெளி மாவட்ட மீனவர்கள், தமிழ்ப் பிரதேசங்களில் அத்துமீறிக் கடற்றொழில் செய்வதைத் தடுக்க முடியவில்லை. அடுத்து, அந்நியர் ஆட்சிக் காலத்தில் கூட…
-
- 0 replies
- 516 views
-
-
கிழக்கிற்கான தொல் பொருள் செயலணி தமிழ் தலைமைகளிடமுள்ள உபாயம் என்ன? - யதீந்திரா சில தினங்களுக்கு முன்னர், கிழக்கு மாகாணத்திலுள்ள புராதன அடையாளங்களை பாதுகாப்பதற்கென, ஒரு ஜனாதிபதி செயலணி உருவாக்கப்பட்டிருந்தது. (The Presidential Task Force for Archaeological Heritage Management in the Eastern Province). இந்தச் செயலணியின் நோக்கங்களில், எந்தவொரு இடத்திலும் பௌத்த அடையாளங்களை பாதுகாப்பது தொடர்பில் பேசப்படவில்லை. தொல்பொருள் பாரம்பரியத்தை முகாமை செய்வது தொடர்பில், பொதுவாகவே குறிப்பிடப்பட்டிருக்கின்றது. தமிழ்த் தலைமைகள், வழமைபோல் கண்டன அறிக்கைகளை வெளியிட்டிருக்கின்றன. அதே வேளை, சர்வதேச அமைப்புக்கள் சிலவும் இது தொடர்பில் கண்டனங்களை பதிவு செய்திருந்தன. ஆனால் இவ்வாறான கண்டனங்கள் எத…
-
- 0 replies
- 518 views
-
-
எல்லாவற்றிலும் வல்லவர்களின் அரசியல் என்.கே. அஷோக்பரன் / 2020 ஜூன் 15 பெரும் இழுபறிகள், தேர்தல் தொடர்பான அடிப்படை மனித உரிமை மீறல் மனுக்கள் மீதான, ஏறத்தாழ இரண்டு வாரங்கள் நீடித்த விசாரணை, தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்கள் தொடர்பான சர்ச்சைகள் என்பவற்றுக்குப் பிறகு, தேர்தல் ஆணைக்குழு 2020 நாடாளுமன்றத் தேர்தல் ஓகஸ்ட் மாதம் ஐந்தாம் திகதி, புதன்கிழமை நடைபெறும் என்று அறிவித்திருக்கிறது.இந்தத் தேர்தலில், அங்கிகாரம் பெற்ற அரசியல் கட்சிகள் சார்பில் 3,652 பேரும் 313 சுயேட்சைக் குழுக்கள் சார்பில் 3,800 பேரும் என, மொத்தமாக 7,452 பேர், 196 ஆசனங்களுக்காகப் போட்டியிடுகிறார்கள். ஏறத்தாழ ஒரு நாடாளுமன்ற ஆசனத்துக்கு 38 பேர் போட்டியிடுகிறார்கள். பெரும்பான்மை இனத்தின் தேசிய அரசிய…
-
- 1 reply
- 608 views
-
-
கையாள்தல் அரசுறவியல் (Engagement Diplomacy) உலகில் நீண்ட காலமாக இருந்துள்ளது. அமெரிக்க அதிபராக பில் கிளிண்டன் இருந்தபோது அது பரவலாக நடைமுறைப்படுத்தப்பட்டது. 2008-ம் ஆண்டு பிரித்தானிய வெளியுறவுத்துறை அதற்கு ஒரு கோட்பாட்டு வடிவம் கொடுத்தது. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா 2009இல் அதை தனது வெளியுறவுக் கொள்கையின் முக்கிய பகுதியாக்கினார். முன்னாள் அமெரிக்க அதிபர்களான பில் கிளிண்டனும் பராக் ஒபாமாவும் அமெரிக்காவிற்கு எதிரான ஆட்சியாளர்களுடன் மோதலை தவிர்த்து அவர்களை கையாளுதல் என்பதை தமது வெளியுறவுக் கொள்கையில் பாவித்தனர். அமெரிக்காவிற்கு ஒவ்வாத சர்வாதிகார ஆட்சியாளர்களுடன் முரண்படாமல் “கையாள்தல்” செய்ய வேண்டும் என்பது அவர்களது நோக்கமாக இருந்தது. அமெரிக்காவிற்கு ஒவ்வாத அரசுகளை அயோக்கிய …
-
- 0 replies
- 501 views
-
-
கொரோனாவின் விளைவுகள் என்ன? வைரஸ் தொற்றின் விளைவாக அரசியலில் இரண்டு பிரதான விளைவுகள் ஏற்பட்டிருப்பதாக ஒரு பொதுவான கருத்து நிலவுகிறது. முதலாவது அதிகாரம் மையத்தில் குவிக்கப்படுவது. இரண்டாவது தேசியவாதத்தின் எழுச்சி. இவை இரண்டையும் சற்று விரிவாகப் பார்க்கலாம். முதலாவது அதிகாரம் மையத்தில் குவிக்கப்படுவது. வைரஸ் தொற்று ஐரோப்பாவை உலுப்பிய பொழுது மொஸ்கோவில் நிலைகொண்டிருந்த ஒரு மேற்கத்திய ராஜதந்திரி பின்வருமாறு தெரிவித்தார் “வைரஸ் எதேச்சாதிகாரிகளுக்கு சுவர்க்கம்” என்று. ஏனெனில் வைரசை ஒரு சாட்டாக வைத்துக் கொண்டு எதேச்சாதிகாரத் தலைவர்கள் தங்களை மேலும் பலப்படுத்திக் கொள்வார்கள் என்ற பொருளில் தான் அவர் அவ்வாறு கூறினார் . வரலாற்றில் அனர்த்தங்கள் அல்லது இயல்பற்ற காலங்…
-
- 0 replies
- 872 views
-
-
முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் திரு பா.டென்னிஸ்வரன் அவர்களின் நேர்காணல்
-
- 0 replies
- 376 views
-
-
பெரும் போரை நோக்கிய ஐரோப்பிய அரசியல் நகர்வுகள் – உலகப்போர் 2 முதல் உலகப்போர் நடைபெற்ற வருடங்கள் என்றால் 1914 முதல் 1918 வரை என்று அறுதியிட்டுச் சொல்ல முடியும். ஆனால் இரண்டாம் உலகப் போரை இப்படி ஒரு காலகட்டத்திற்குள் அடக்கி விட முடியாது. வரலாற்று ஆசிரியர்களும் ஆய்வாளர்களும் போரின் காலகட்டம் குறித்து மாறுபடுகிறார்கள். பொதுவாக ஏற்றுக்கொள்ளபட்ட கணக்கு 1939 முதல் 1945 வரை என்றாலும், சிலருடைய கூற்றுப்படி, இரண்டாம் உலகப் போரின் தொடக்கம் 1939 அல்ல 1931. சீனா மீது ஜப்பான் தாக்குதல் தொடுத்த ஆண்டு அது. 1931 தொடங்கி 1939 வரை ஐரோப்பாவில் நடைபெற்ற உள்நாட்டு போர்கள், கலகங்கள், யுத்தங்கள், ஆக்கிரமிப்புக்கள், அத்துமீறல்கள் அனைத்தும் இரண்டாம் உலகப்போருடன் நேரடியாக தொ…
-
- 1 reply
- 951 views
-
-
சுமந்திரனுடன் ஒரு "கருத்தாடல்" | M. A. சுமந்திரன்
-
- 0 replies
- 669 views
-
-
-
எழுத்தாளர் , ஊடகவியலாளர் எம் அண்ணன் Kuna Kaviyalahan அவர்களின்#முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில் யுத்தத்திற்கு பின்னான அரசியல் குறித்தும் #சுமந்திரன் வாதிக்கும் யுத்தத்திற்கு பின்னான அரசியல் குறித்த கேள்விகளுக்கு பதிலிறுப்பதாகவும் அமைந்த #IBC பேட்டி இது. பேட்டி கண்டவர் கோகுலன்.
-
- 2 replies
- 633 views
-
-
’படப்பிடிப்பு’ என்ற போராட்டத்தின் தேவை Johnsan Bastiampillai / 2020 ஜூன் 13 ஏறத்தாள 12 வருடங்களுக்கு முன்னர்.... பாலஸ்தீன பகுதிகளில் இஸ்ரேலியப் படையினரின் சுற்றிவளைப்புகள், வீதியில் போகும் இளைஞர்களைக் கைது செய்து துன்புறுத்தல், தடுத்துவைக்கப்பட்டவர்கள் மீதான சித்திரவதைகள் என, பாலஸ்தீன மக்கள் மீதான இஸ்ரேலிய இராணுவத்தின் ஆக்கிரமிப்புகள், அட்டகாசங்கள் நாள்தோறும் நிகழ்ந்த வண்ணம் இருந்தன. இவ்வாறு, நாள்தோறும் நிகழும் சம்பவங்கள் எல்லாம், செய்திகளாக வெளியுலகை எட்டுவதில்லை; அடக்குமுறையாளர்கள் மீது தொடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகளும் வெற்றி பெறுவதற்கு ஆதாரங்கள் இருக்கவில்லை. அப்போதுதான், பாலஸ்தீன இளைஞர்கள் புதுவகை ஆயுதமொன்றைக் கைகளில் எடுத்தார்கள். கற்களில் இருந்…
-
- 0 replies
- 644 views
-
-
ஓயும் குரலால் ஓங்கும் பேரினவாதம் கே. சஞ்சயன் / 2020 ஜூன் 12 முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர, நாடாளுமன்ற அரசியலில் இருந்து விலகிக் கொள்ள எடுத்துள்ள முடிவை, சிங்கள, பௌத்த தேசியவாத சக்திகளுக்குக் கிடைத்துள்ள ஒரு வெற்றியாகவே குறிப்பிடலாம். ஏனைய, சிங்களத் தலைவர்களை விட, ஒப்பீட்டளவில் தமிழ் மக்களின் பிரச்சினைகளை அதிகளவில் புரிந்து கொண்டவர் என்பதும், பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்பதில் ஆர்வம் கொண்டிருந்தவர் என்பதும், மங்கள சமரவீர தொடர்பாக, முக்கியமாகக் குறிப்பிடக் கூடிய விடயங்கள். சந்திரிகா குமாரதுங்க அரசாங்கத்தில், விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டத்தை, அரசியல் ரீதியாகத் தோற்கடிப்பதற்கான செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்திய மூவரணியில் முக்கியமானவர் மங்கள சம…
-
- 0 replies
- 439 views
-
-
பூகோள அரசியலுக்கு ஏற்ப ரணில் விக்கிரமசிங்கவை அணைக்க முற்படும் ராஜபக்ச ஆட்சி Posted on June 11, 2020 by தென்னவள் 11 0 கோட்டாபயராஜபக்சஜனாதிபதியாகத்தெரிவுசெய்யப்பட்டு,மகிந்தராஜபக்ச பிரதமராகப் பதவியேற்றதும் 2009ஆம் ஆண்டு இறுதிப் போரை நடத்திய ராஜபக்சக்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட்டனரெனத் தமிழர்கள் அங்கலாய்க்கின்றனர். முற்போக்கான சிங்கள மக்கள் மத்தியில் அதிகாரத் துஸ்;பிரயோகத்தில் ஈடுபட்ட ராஜபக்சக்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட்டனர் என்ற கவலையும், இஸ்லாமியர்கள் என்ற காரணத்தால் தம்மை ஒரங்கட்ட முற்பட்டவர்கள் மீண்டும் பதவிக்கு வந்துவிட்டனர் என்ற அச்சம் முஸ்லிம் மக்கள் மத்தியிலும் உருப்பெற்றதுவிட்டது எவ்வாறாயினும் தமிழ் முஸ்லிம் மக்களைவிட சிங்கள ம…
-
- 0 replies
- 454 views
-
-
தமிழ் மக்கள் யார் பக்கம்? விடுதலை பற்றியும் போராட்டம் பற்றியும் பேசிவந்த தமிழ்த் தலைவர்கள் யாவரும், இப்போது அமெரிக்காவில் இடம்பெற்ற கொலையை அடுத்து, இடம்பெற்றுவரும் போராட்டங்கள் குறித்து, வாய் திறக்கவில்லை. பல சமயங்களில், மௌனம் சொல்கின்ற செய்தி வலுவானது. அமெரிக்கா என்பது, ஆட்சியாளர்களும் அரச எதிர்ப்பாளர்களும் இலகுவாக ஒன்றிணையும் புள்ளி ஆகும். அந்தப் புள்ளியில் இன்னமும், எல்லோரும் ஒன்றிணைகிறார்கள். அரசு அடக்குமுறையைப் பிரயோகிக்கிறது. யோகர் சுவாமிகளின் வழியில், 'எந்தப் பொல்லாப்பும் இல்லை' என்று இவர்கள், அமைதி காக்கிறார்கள். தமிழ் மக்கள், மேற்குலகை நம்பினால் தீர்வுகிடைக்கும் என்று, இன்றும் சொல்லப்படுகிறதுளூ அன்றும் சொல்லப்பட்டது. ஆனால், என்ன கிடைத்…
-
- 8 replies
- 1.6k views
-
-
அதிகாரத்துக்கு எதிரான போராட்டத்தின் குறியீடு தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2020 ஜூன் 11 அதிகாரம், என்றென்றைக்கும் ஆனதல்லளூ மாற்றங்கள் வந்தே தீரும். உலக வரலாற்றில், நிலைத்திருந்த சாம்ராஜ்யங்கள் என்று எதுவும் இல்லை. கிரேக்கர் தொடங்கி, அமெரிக்கர் வரை யாரும் விதிவிலக்கல்ல. மாற்றங்கள் வருவதற்குக் காலமெடுக்கும். ஆனால், அந்த மாற்றங்களை, ஒரு சிறுபொறி தொடக்கி வைக்கும்; அது, காட்டுத் தீயாகப் பரவும்; ஆதிகார அடுக்குகளை அசைக்கும்; மக்களைச் சிந்திக்க வைக்கும். நியாயத்துக்கும் அநியாயத்துக்கும் இடையிலான பிரிகோடு, மிகத் தெளிவாக இருக்கும். இது, மக்களின் தெரிவை மிக இலகுவாக்கும். அவ்வாறான ஒரு சிறுபொறியே, இப்போது பற்றியுள்ளது. ஆனால், இது காட்டுத் தீயாகுமா, காணாம…
-
- 0 replies
- 428 views
-