அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
‘கஜபா’க்களின் காலம்! இந்தியா புதிதாக பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி (கூட்டுப்படைகளின் தளபதி) என்ற பதவியை கடந்த ஜனவரி 1ஆம் திகதி உருவாக்கியிருக்கிறது. இந்திய இராணுவத் தளபதியாக இருந்த ஜெனரல் பிபின் ராவத், முதலாவது பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியாக நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர் சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுடன் பாரிய போர்களை நடத்தியிருந்த போதிலும், கிட்டத்தட்ட 72 ஆண்டுகளுக்குப் பின்னரே, பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி என்ற பதவியை உருவாக்கியிருக்கிறது. சர்வதேச அளவில், பாதுகாப்பு அதிகா…
-
- 0 replies
- 808 views
-
-
கிழக்கின் நிலை உணர்ந்த ஈ.பி.ஆர்.எல்.எப் -இலட்சுமணன் இன்றைய சமகால அரசியல் சூழ்நிலையில் தமிழர் தேசிய அரசியல் போக்குகளும் அதுதொடர்பான கருத்தாடல்களும் ஆரோக்கியமானதாகத் தெரியவில்லை. கட்சிகளுக்கு இடையில் நிலவும் அதிகாரப் போட்டிகளும் தனிப்பட்ட குத்து வெட்டுகளும் காழ்ப்புணர்வுகளும் தமிழ்த் தேசிய அரசியலில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது என்பது, இன்று தமிழ் மக்களுக்குள் எழுந்துள்ள அச்ச நிலையாக உள்ளது. இத்தகைய சூழலில், தமிழ்த் தேசிய அரசியலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராகப் பல்வேறு வியூகங்கள், பெரும்பான்மை அரசியல் கட்சிகளாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் போக்குகளுடனும் செயற்பாடுகளுடனும் ஒத்துவராத, முரண்பட்ட கட்சிகளாலும் அமைப்புகளாலும் வகுக்க…
-
- 0 replies
- 628 views
-
-
இந்தியாவுக்காக காத்திருத்தல் தமிழ் மக்களின் எதிர்காலம், தமிழ் மக்களின் கைகளில் அன்றி, வேறு யாருடைய கைகளிலும் இல்லை என்பதை, இப்போதாவது நாம் உணர்ந்திருக்க வேண்டும். எமது விடுதலையை, யாராவது வாங்கித் தருவார்கள் என்று, இனியும் நம்பி இருப்பது, முட்டாள்தனமன்றி வேறில்லை. “தீபாவளிக்குத் தீர்வு வரும்” என்று சொன்னவர்கள், இப்போது கதையைக் கொஞ்சம் மாற்றி, “இந்தியா தீர்வைப் பெற்றுத்தரும்” என்று சொல்லத் தொடங்கி இருக்கிறார்கள். இதில் மெச்சத்தக்க விடயம் யாதெனில், தாங்கள் பிரதமர் மோடியைத் தரிசிப்பதற்காகக் காத்துக் கிடப்பதாக, ஒத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆக, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று சொல்லிக் கொள்பவர்கள், யாருடைய நலன்களுக்காக வேலை செய்கிறார்கள…
-
- 0 replies
- 549 views
-
-
கோட்டபாய அரசு ஜெனிவாவை எவ்வாறு எதிர்கொள்ளும்? -யதீந்திரா கோட்டபாய ராஜபக்சவிற்கும் இலங்கையின் முன்னைய ஜனாதிபதிகளுக்கும் அடிப்படையிலேயே ஒரு வித்தியாசமுண்டு. அதாவது, கோட்டபாய ஒரு ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி. 1971இல் இலங்கை இராணுவத்தில் இணைந்துகொண்ட கோட்டபாய, விடுதலைப்புலிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு முக்கிய தாக்குதல் நடவடிக்கைகளில் நேரடியாக பங்குகொண்ட ஒருவர். உதாரணமாக ஓப்பிரேசன் திரிவிட பலய, ஓப்பிரேசன் லிபரேசன் (வடமாராட்சி ஒப்பிரேசன்) போன்றவற்றை குறிப்பிடலாம். வடமாராட்சி ஓப்பிரேசன் விடுதலைப் புலிகளுக்கு எதிராக பெருமெடுப்பில் மேற்கொள்ளப்பட்ட ஒரு கூட்டு இராணுவ நடவடிக்கை. யாழ்குடாநாட்டை முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட ஒன்று. இந…
-
- 1 reply
- 635 views
-
-
ஒரு கொலை; ஒரு கதை: ஒரு முடிவின் தொடக்கம் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2020 ஜனவரி 09 சில செயல்கள் செய்யத்தகாதவை; அவ்வாறு செய்யத்தகாத செயல்களுக்குக் கொடுக்கும் விலை, இறுதியில் மிக அதிகமாக இருக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக, அச்செயலை ஏன் செய்தோம் என்று, என்றென்றைக்கும் வருந்தும் வகையில், செய்த செயல்களுக்கான எதிர்விளைவுகள் அமைந்து விடுவதுண்டு. இது, தனிமனிதர்களுக்கு மட்டுமல்ல, அரசுகளுக்கும் அரசாங்கங்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் பொருந்தும். இவ்வாறு செய்யத்தகாத செயல்களைச் செய்தவர்களை, வரலாறு மிக மோசமாகத் தண்டித்துள்ளது; சில சமயங்களில் வஞ்சித்தும் உள்ளது. கடந்த வாரம், அமெரிக்கா ‘ட்ரோன்’ தாக்குதல்களின் மூலம், ஈரானின் இராணுவத் தளபதி குவாசிம் சொலெய்ம…
-
- 0 replies
- 983 views
-
-
தமிழர் அரசியலில் கருத்து உருவாக்கிகளின் வகிபாகம் புருஜோத்தமன் தங்கமயில் / 2020 ஜனவரி 08 கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு ஒருசில வாரங்களுக்கு முன்னர், தமிழ்ப் பரப்பில் தொடர்ச்சியாக எழுதி வரும் சிரேஷ்ட அரசியல் பத்தியாளர்கள் சிலர், யாழ்ப்பாணத்தில் ஒன்றுகூடி இருந்தார்கள். ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில், தங்களுக்குள் பொது இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொண்டு, அதை நோக்கிய கருத்துருவாக்கத்தை உருவாக்குவதே, அந்த ஒன்றுகூடலின் அடிப்படையாக இருந்தது. பல்வேறு கருத்து முரண்பாடுகளுக்கு மத்தியிலும் அந்த ஒன்றுகூடலின் இறுதியில், ஓர் இணக்கப்பாட்டின் கீழ், அறிக்கையொன்றை வெளியிடுவது என்று தீர்மானிக்கப்பட்டது. அடுத்த சில நாள்களில், அறிக்கையின் ஒரு பகுதி வரையப்பட்ட போதிலும்,…
-
- 0 replies
- 411 views
-
-
ஜனாதிபதியின் கொள்கை உரை: சிறுபான்மையின அரசியல் தீவிரவாதமா? எம்.எஸ்.எம். ஐயூப் / 2020 ஜனவரி 08 சிறிய அரசியல் கட்சிகளினதும் சிறுபான்மை அரசியல் கட்சிகளினதும் இருப்புக்குப் பெரும் சவாலாகக் கூடிய வகையில், முன்னாள் அமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான விஜயதாஸ ராஜபக்ஷ சட்டம் ஒன்றைக் கொண்டு வர முயல்கிறார். தேர்தல்களின் போது, அரசியல் கட்சிகள், தாம் போட்டியிடும் மாவட்டங்களில், குறைந்த பட்சம் 12.5 சதவீத வாக்குகளைப் பெறாவிட்டால், அக்கட்சிகளை, அம்மாவட்டப் போட்டியில் இருந்து நீக்கும் வகையில், தாம் சட்ட மூலமொன்றைச் சமர்ப்பித்துள்ளதாக அவர் கூறியிருக்கிறார். தற்போது ஒரு கட்சி, ஒரு மாவட்டத்தில் ஐந்து சதவீதம் பெற்றால் போதுமானது. நாட்டில், 70 அரசியல் …
-
- 0 replies
- 336 views
-
-
கொட்டாஞ்சேனையிலும் கொள்ளுப்பிட்டியிலும் வாழ்பவர்களது பிரச்சினைகள் வேறு வேறு காரை துர்க்கா / 2020 ஜனவரி 07 தமிழரசுக் கட்சி தலைமையிலான கூட்டமைப்பு, வடக்கு, கிழக்கு பிரதேசங்களில், தமிழ் மக்களது கரங்களைப் பற்றிக் கொண்டு செல்லவில்லை என, தமிழ் மக்கள் உள்ளும் புறமும் வெதும்பிப் போய் உள்ளனர். அதற்கு உதாரணமாக, இந்தக் கதை பொருத்தமாக அமையும். ‘சிறுமி ஒருத்தியும் அவளது தந்தையும் பாலம் ஒன்றைக் கடந்து செல்ல வேண்டி இருந்தது. அவ்வேளையில், சிறுமியை நினைத்துப் பயந்த தந்தை, தனது கையைப் இறுக்கிப் பிடித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். அதற்கு அந்தச் சிறுமி, “வேண்டாம் அப்பா! நீங்கள் என் கையைப் பிடித்துக் கொள்ளுங்கள்” என்று கூறினாள். தந்தையோ,“ இரண்டும் ஒன்றுதானே” என …
-
- 0 replies
- 383 views
-
-
காலத்தின் கட்டாயம்… Published by Loga Dharshini on 2020-01-08 14:57:43 மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்கினால் அது பொலிஸ் பணிகளை அரசியல் மயமாக்குவதற்கு வழிவகுக்கும் என அவர் கருத்து வெளியிட்டுள்ளார். ஆனால் மொழிப்பிரச்சினை காரணமாக வடக்கு–கிழக்கு தமிழ்ப்பிரதேசங்களில் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் ஏற்படுகின்ற முரண்பாடுகளும் முறுகல் நிலைமைகளுமே பல்வேறு வன்முறைகளுக்கு கடந்த காலங்களில் வித்திட்டிருந்தன என்பதை கவனத்திற்கொள்ள வேண்டும். ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவின் கொள்கை விளக்க உரை தமிழ் அரசியலையும் தமிழ் மக்களையும் கையறு நிலை…
-
- 0 replies
- 919 views
-
-
பி.கே.பாலசந்திரன் - முன்னைய அரசாங்கத்தினால் கொண்டு வரப்பட்ட அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தினால் பலவீனப்பட்டுப் போன நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை மீளவும் பலப்படுத்துவதற்கு அரசியலமைப்பில் மாற்றங்களை கொண்டு வருவதற்கு வசதியாக 2020 ஏப்ரல் பாராளுமன்ற தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை பெறுவதை இலக்காகக் கொண்டு ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ செயற்படுகின்றார். மக்களினால் நேரடியாக தெரிவு செய்யப்படுகின்ற நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் அதிகாரங்களை மீளவும் கொண்டு வருவதற்கு 19 ஆவது திருத்தத்தை முற்றாகக் கைவிடுவதில் அல்லது அதில் பெருமளவுக்கு வெட்டிக் குறைப்பு செய்வதில் கோதாபய மிகுந்த அக்கறையாக இருக்கிறார…
-
- 0 replies
- 410 views
-
-
‘கோர்ட்’ போட்ட கோட்டாவின் சிங்கப்பாதை -விரான்ஸ்கி விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், சமாதான காலப்பகுதியில், இராணுவ சீருடை இல்லாமல், சாதாரண உடையில் சர்வதேச செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டது, அப்போது பரபரப்பாகப் பேசப்பட்ட விடயமாகும். செய்தியாளர் சந்திப்புக்குப் பின்னரும்கூட, பல அரசியல் தலைவர்கள், இராஜதந்திரிகள் உடனான சந்திப்பில், அவர் சாதாரண உடையிலேயே கலந்துகொண்டார். அதுபோல, தென்னிலங்கையிலும்கூட, அரசாங்கத்தின் தலைவர்கள், பாரம்பரிய உடையணிந்து கொண்டதற்கும் வேறு சிலர் மேற்கத்தேய உடையணிந்ததுக்கும் இலங்கை அரசியலில் பல்வேறு அரசியல், இராஜதந்திரப் பார்வைகள் உள்ளன. இந்த உடை விவகாரம், அரசாங்கத்தின் உயர்மட்டங்களில் மாத்திரமல்ல, படைகளிலும்கூட, பல ச…
-
- 2 replies
- 1.2k views
-
-
மொழி என்பது ஒரு இனத்தின் அடையாளமாகும். இன்னொரு வகையில் சொன்னால், மொழி ஒரு இனத்தின் குரல் அல்லது வார்த்தைகள் எனலாம். ஒரு இனத்தின் மொழி உரிமையை மறுத்தல் என்பது அந்த இனத்தை கழுத்தில் பிடித்து திருகுவதற்கு ஒப்பானது. அதாவது கொலை செய்வதற்கு ஒப்பானது. இலங்கைத் தீவில் தமிழ் மொழி அமுலாக்கம் என்பது தொடர்ந்தும் தோல்வியைத்தான் தழுவி வருகிறது. இலங்கையில் தனிநாடு குறித்த கோரல்கள் உருவாகுவதற்கு தனிச்சிங்கள சட்டம் முக்கிய காரணிகளில் ஒன்றாக கருதப்படுகின்றது. 1956 களில், அன்றைய காலத்தில் தனிச்சிங்களச் சட்டம் உருவானபோது அது தனிநாட்டுக்கு வழிவகுக்கும் என்று சிங்கள இடதுசாரித் தலைவர்கள் எச்சரித்தார்கள். தனிச்சிங்களச் சட்டம் என்பது இந்த தீவில் இரு நாடுகளை உருவாக்குவதற்கு அடிப்படையாக அமையும் என்…
-
- 1 reply
- 657 views
-
-
மழைக்காலத்து தவளைச் சத்தம்போன்று, தேர்தல் என்றவுடன் ஒற்றுமை பற்றிய ஆரவாரங்களும் ஆரம்பித்துவிடும். திரும்பிய இடங்களிலெல்லாம் ஒரே தவளைச் சத்தம். ஜனாதிபதித் தேர்தலில் கோட்டபாயிவின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் ஒற்றுமைபற்றிய சத்தம் தொடங்கிவிட்டது. நாங்கள் எல்லோரும் ஒன்றாக நிற்கவேண்டும் – இந்தக் காலத்தில் மாற்றுத் தலைமை கூடாது என்றவாறான அரசியல் வகுப்புக்களும் தொடங்கிவிட்டன. இது பற்றி முதலில் சுமந்திரன் பேசினார். பின்னர்சம்பந்தன் பேசினார். ஆனால் இதே நபர்கள்தான் கூட்டமைப்பிலிருந்து பலரும் வெளியேறுவதற்கு காரணமாக இருந்தவர்கள். ஓற்றுமைபற்றி பேசுவது தவறான ஒரு விடயமல்ல. அதுதமிழ் மக்களுக்கு அவசியமான ஒன்றுதான். ஆனால் ஒற்றுமைபற்றி பேசுபவர்கள் இதய சுத்தியுடன்தான் பேசுகின்றனரா? இ…
-
- 0 replies
- 693 views
-
-
தமிழ்த் தேசியக் கட்சிகள் ‘மீண்டும்’ ஒன்றிணைய வேண்டும் என்.கே. அஷோக்பரன் / 2019 டிசெம்பர் 16 இலங்கை அரசியல் வரலாற்றில் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் உருவாக்கம், மிக முக்கியமானதொரு மைல்கல்லாகும். 1971-1972இல், தமிழ் மக்களின் எந்தவொரு கருத்துகளும் உள்ளடக்கப்படாமலும் தமிழ் மக்களின் பங்களிப்பு இல்லாமலும், அதைவிடவும் இந்திய வம்சாவளி மக்களின் பிரதிநிதிகள் இல்லாமலும், சிறிமாவோ மற்றும் அவரது தோழர்களின் அரசாங்கத்தில், நாடாளுமன்றத்துக்கு வௌியில் அரசமைப்புப் பேரவை கூட்டப்பட்டது. இதன்போது, இலங்கையின் முதலாவது குடியரசு அரசமைப்பு நிறைவேற்றப்பட்டு, 1972இல் நடைமுறைக்கு வந்தது. முற்றாகச் சிறுபான்மையினரை, குறிப்பாகத் தமிழ் மக்களைப் புறக்கணித்து, அவர்களது அ…
-
- 4 replies
- 970 views
-
-
2019 இல் தமிழ் மக்கள் பெற்றவை பெறாதவை – நிலாந்தன்… January 5, 2020 கடந்த ஆண்டில் தமிழ் மக்கள் பெற்றவை பெறாதவை பற்றிய ஓர் ஐந்தொகை கணக்கைக் கணிப்பது என்றால் முதலில் தமிழ் மக்கள் மத்தியிலுள்ள தரப்புக்களை வகைப்படுத்த வேண்டும். தமிழ் மக்கள் மத்தியில் மூன்று பிரதான தரப்புக்கள் உண்டு. முதலாவது கூட்டமைப்பு. இரண்டாவது கூட்டமைப்புக்கு எதிரான அணி மூன்றாவது சிவில் சமூகங்கள் இவைதவிர தென்னிலங்கை மையக் கட்சிகளோடு இணங்கிச் செயற்படும் கட்சிகளும் உண்டு. முதலில் கூட்டமைப்பு கடந்த ஆண்டு பெற்றவை எவை பெறாதவை எவையெவை என்று பார்ப்போம். கடந்த ஆண்டு கூட்டமைப்பைப் பொறுத்தவரை கம்பெரலிய ஆண்டுதான். தனது யாப்புருவாக்க முயற்சிகள் பிசகி விட்ட காரணத்தால…
-
- 0 replies
- 443 views
-
-
பழிவாங்கும் படலத்தின் சுழற்சி பட மூலம், counterpoint.lk எமது எதிர்த்தரப்பினரைப் பழிவாங்கும் தன்மையானது பழங்குடியினர்களிடமிருந்து எமக்கு கிடைக்கப்பெற்ற பழக்கமொன்றாகக் குறிப்பிடலாம். அது இலங்கை அரசியலில் ஆழமாக பதிந்திருக்கிக்கும் ஒன்றாகவும் குறிப்பிடலாம். இலங்கையானது ஜனநாயக நாடாக இருப்பது அதன் வெளித்தோற்றத்தில் மாத்திரமே என்பது இதன் ஊடாகத் தெளிவாகின்றது. இலங்கையில் தொடராக தேர்தல்கள் நடாத்தப்படுகின்றபோதிலும் ஜனநாயகம் குறித்த ஆழமான புரிதல் இருக்கின்ற நாடொன்றாக குறிப்பிட முடியாமலுள்ளது. இலங்கையில் மக்கள் மத்தியில் அபிமானம் பெற்ற லிபரல் முறையிலான அமைப்புக்கள் எந்தக் காலப்பகுதியிலும் இருந்ததாகத் தெரியவில்லை என்பதுடன் இலங்கையின் அரசியல் தலைவர்களிலும் லிபரல் சிந்தனைய…
-
- 0 replies
- 778 views
-
-
கத்தி மேல் நடக்கும் பயணம் கே. சஞ்சயன் / 2020 ஜனவரி 03 சீனப் பயணத்துக்கான ஒழுங்குகள் முடிவு செய்யப்பட்ட சூழலில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் இருந்து, புதன்கிழமை (01) தொலைபேசி அழைப்பொன்று வந்தது. 2020 புத்தாண்டு தினமான அன்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடனும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடனும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தொலைபேசியில் உரையாடி இருக்கிறார். சம்பிரதாயபூர்வமான புத்தாண்டு வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்ட பின்னர், அரசியல் விவகாரங்கள் குறித்தும் அவர் மென்போக்காகப் பேசியிருக்கிறார். குறிப்பாக, 2020ஆம் ஆண்டில் இலங்கையுடனான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கு எதிர்பார்த்திருப்பதாக அவர் குறிப்பிட்டிருக்…
-
- 1 reply
- 693 views
-
-
மதகுருமாரின் அரசியல் பிரவேசமும் ஆதிக்கமும் மொஹமட் பாதுஷா / 2020 ஜனவரி 03 , மத போதகர்களின் வாழ்க்கை என்பது, அர்ப்பணிப்புகள் நிறைந்தது. அதுவும், இல்லறமும் இன்னபிற இன்பங்களும் அற்ற துறவுநிலை, மிகவும் உன்னதமாகவே கருதப்படுகின்றது. அந்தவகையில், எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும், மத போதகர்கள், துறவிகள் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரியவர்கள். இந்த மதிப்பு, எதுவரைக்கும் என்றால், அவர்கள் தமது மதக் கடமைகளையும் போதனைகளையும் முன்மாதிரியாகவும் கண்ணியமாகவும் முறையாகவும் செய்வது வரைக்குமானதாக இருக்கும். ஆனால், இலங்கையில் மத போதகர்களாகத் தம்மைக் காட்டிக் கொள்வோரில் சிலர், செய்கின்ற அபத்தமான காரியங்களின் காரணமாக, அவ்வாறனவர்கள் மீதான விமர்சனப் பார்வையொன்று, எழ…
-
- 0 replies
- 514 views
-
-
நவம்பர் 16 ஆம் திகதிக்குப் பின்னரான சூழலில் ஜெனீவா மனித உரிமைச் சபையின் குற்றச்சாட்டில் இருந்து வெளியேற இலங்கை முன்னெடுக்கும் நகர்வுகள் சீனத் தகவல் தொழினுட்பத்தைக் கைவிடுவதற்கான மீளாய்வில் கோட்டாபய ராஜபக்ச- இந்தியாவும் கரிசனை இந்தோ பசுபிக் பிராந்தியத்தில் அமெரிக்கா, இந்தியா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகள் போட்டியிட்டுக் கொண்டிருக்கும் நிலையில் சீனா, ரஷியாவுடன் இணைந்து ஈரான் இந்தியப் பெருங்கடலின் வடக்கு பகுதியில் கூட்டு இராணுவ பயிற்சி நடத்தியுள்ளது. இந்தத் தகவல் உலகம் முழுவதும் உள்ள இராணுவ ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அமெரிக்கா, ஈரான் நாடுகளிடையே பதற்றம் நிலவி வருகின்ற சூழலில…
-
- 2 replies
- 570 views
-
-
புத்தாண்டின் பெரும் எதிர்பார்ப்புகளும் சிறிய நற்செயல்களும் புத்தாண்டு வாழ்த்துகள்! பிறக்கின்ற இவ்வாண்டு, எதிர் பார்ப்புகளுடன் அல்லாது, கேள்விகளுடனே பிறக்கிறது. மக்களிடம் இருக்கின்ற சூதாடி மனநிலை, பிறக்கின்ற ஆண்டு குறித்த ஏராளமான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அதில் தவறில்லை. எதிர்பார்ப்புகளுக்கும் கற்பனைகளுக்கும் கனவுகளுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. தனி மனிதர்களிடம் இருக்கின்ற கனவுகளுக்கும் நனவுகளுக்கும் இடையிலான இடைவெளியும் யதார்த்தம் பற்றிய தெளிவுமே, இவற்றின் அளவுகோல்களைத் தீர்மானிக்கின்றன. தமிழ்ச் சமூகம், கடந்த அரை நூற்றாண்டுகளாக எதிர்பார்ப்புகளின் கயிற்றில் தொங்கியபடி, ஏமாற்றங்களைச் சுமந்து பயணிக்கிறது. எதிர்பார்ப்புகள…
-
- 0 replies
- 451 views
-
-
திசைவழிகளை திசைகாட்டல் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2020 ஜனவரி 02 இன்னோர் ஆண்டு, எதிர்பார்ப்புகளுடன் பிறந்திருக்கிறது. கடந்தாண்டு போலவே, இவ்வாண்டும் ஏராளமான பெரும் மாற்றங்களைத் தன்னுள் பொதிந்து வைத்திருக்கிறது. ஆனால், ஆச்சரியங்களையும் அதிசயங்களையும் தருவதற்காய் இவ்வாண்டு காத்திருக்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லை. புதிய ஆண்டு புதிதாய்ப் பிறந்தாலும், கடந்த காலத்தின் தொடர்ச்சியும் எதிர்காலத்தின் எதிர்பார்ப்பும் இந்த நிகழ்காலத்தில் நிரம்பி இருக்கிறது. கடந்த காலத்தின் சுமைகளையும் எதிர்காலத்தின் எதிர்பார்ப்புகளையும் தன்னகத்தே உள்வாங்கிச் சிரித்து, விருட்சமாய் வளர்வதற்காகப் புதிய காலங்களையும் புதிய கோலங்களையும் உருவாக்கிச் செல்ல 2020 காத்திருக்கிறது. …
-
- 0 replies
- 880 views
-
-
சிறுபான்மையினர் தீண்டத்தகாதவர்களா? -இலட்சுமணன் சுபீட்சத்தையும் அதற்கு ஆணிவேரான இனஒற்றுமையையும் இலங்கைத் தீவில் கடைப்பிடிக்க, யாரும் தயாராக இல்லை. பேரினவாதிகளின் ஆதிக்கத்தின் அடிமைகளாக, சிறுபான்மையினர் இத்தீவில் வாழவேண்டும் என்ற இனவாத சிந்தனை, மேலும் வீரியத்துடன் பரவத் தொடங்கியுள்ளது. அதன் எதிரொலியே, 2020 ஆம் ஆண்டு நடைபெற இருக்கின்ற சுதந்திர தினத்தில் சிங்கள மொழியில் மாத்திரமே தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்ற உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சரின் கருத்தும் அதையொட்டிய பௌத்தத் துறவிகளின் கருத்துகளும் ஆகும். இன்றைய அரசியல் சூழலில், இந்தக் கருத்துகள், மற்றுமொரு பூகம்பமாக வெடித்துள்ளன. உண்மையில், இலங்கையின் அரசமைப்பையும் அதை ஒட்டிய திருத்தச் சட்டங்களை…
-
- 0 replies
- 786 views
-
-
ராஜபக்ஷர்களைப் புதிய ஆண்டில் எதிர்கொள்தல் புருஜோத்தமன் தங்கமயில் / 2020 ஜனவரி 01 அனைவருக்கும் மற்றுமொரு தேர்தல் வருட வாழ்த்துகள். ஆம், இன்று பிறந்திருக்கும் 2020, பொதுத் தேர்தல், மாகாண சபைத் தேர்தல் என இரண்டு தேர்தல்களுக்கான ஆண்டாக இருக்கப்போகின்றது. மக்களின் அத்தியாவசியத் தேவைகள், நாட்டின் சமாதானம், சௌபாக்யம் குறித்தெல்லாம் அக்கறை கொள்வதற்கான வாய்ப்புகளைச் சூடுபிடிக்கப்போகும் தேர்தல்களுக்கான களம் அனுமதிக்கப் போவதில்லை. ஊடகங்கள் தொடங்கி அனைத்துப் பொதுத் தொடர்பு சாதனங்களும், தேர்தல்களைப் பற்றியே பேசப்போகின்றன. மைத்திரியின் ‘ஒக்டோபர் 26 சதிப்புரட்சி’யில் இருந்து நாடு மீண்ட தருணத்தில், 2019ஆம் ஆண்டு பிறந்தது. முதல் காலாண்டு, மைத்திரி - ரணில் ஆட்சி இழு…
-
- 0 replies
- 600 views
-
-
அதிகாரத்தைக் கொடுத்து அடி வாங்கும் ஐ.தே.க எம்.எஸ்.எம். ஐயூப் / 2020 ஜனவரி 01 2015ஆம் ஆண்டில், எதிர்க் கட்சிகளின் பொது ஜனாதிபதி வேட்பாளரான மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டவுடன், அவர் அது வரை பிரதமராகவிருந்த டீ.எம். ஜயரத்னவை முன்னறிவித்தல் இல்லாமலே பதவி நீக்கம் செய்துவிட்டு, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமராக நியமித்தார். அப்போது, ஐ.தே.கவிடம் 54 எம்.பி ஆசனங்கள் மட்டுமே இருந்தன. இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ வெற்றி பெற்றவுடன், அது வரை பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க பதவி விலகி, புதிய ஜனாதிபதி விரும்பிய ஒருவரைப் பிரதமராக நியமிக்க வசதி செய்துகொடுத்தார்.…
-
- 0 replies
- 495 views
-
-