அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
[size=4]முள்ளிவாய்க்கால் தமிழினஅழிப்பு ஈழத்தமிழர் வரலாற்றில் இடம்பெற்ற மிகச்சோகமான நிகழ்வாகும். அந்த நிகழ்விலிருந்து நாமும், நமது பிற்சந்ததியினரும் கற்றுக்கொள்ளவேண்டிய பாடங்கள் பலவாகும். அதற்கு புலம்பெயர்ந்த நாடுகளிலுள்ள கற்றறிந்த, புலமைமிக்க தமிழர்களின் பங்களிப்பு, ஈடுபாடு என்பவை மிகமிகமுக்கியமாகும். எம்மவர்களின் எதிர்காலநல்வாழ்வு, விடுதலை, விமோசனம் என்பன அத்தகைய செயற்பாடுகளை வேண்டிநிற்கிறது. நாமும் நமது பிற்சந்ததியினரும், உள்ஊக்கமும் விழிப்புணர்வும்கொண்ட சமூகமாக உருவெடுக்க நமது வரலாற்றில் இடம்பெற்ற மிகமோசமான இந்தநிகழ்வை உரியமுறையில் ஆவணப்படுத்திப் பேணுவது நம் தலையாய கடமையாகும்.புலம்பெயர்தமிழர்கள் தாம் வாழ்ந்துவரும் மேலைநாட்டின்மக்கள், எப்படித் தம் வரல…
-
- 0 replies
- 588 views
-
-
பல்வேறு தளங்களிலும் பல்வேறு முனைப்புக்களும் எதிர்பார்ப்புக்களும் நிலவி வரும் ஒரு பரபரப்பான சூழ்நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் ஜெனிவாவில் ஆரம்பமாகியுள்ளது. அதில் இலங்கையில் போரின் இறுதிக்கட்டத்தில் இலங்கைப் படையினரால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவும், இலங்கையில் நீதித்துறை, ஊடகத்துறை என்பவற்றின் மீதான அச்சுறுத்தல் தொடர்பாகவும், பிரதான கவனம் செலுத்தப்படும் எனக் கருதப்படுகிறது. அதன் காரணமாக, அக்கூட்டத்தொடரிலும் அடுத்த காலப்பகுதியிலும் இலங்கை பெரும் நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய இக்கட்டான நிலை தோன்றக் கூடும். ஏற்கனவே கடந்த கூட்டத்தொடரில் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்று…
-
- 0 replies
- 588 views
-
-
தேர்தல் குறித்த ஆர்வம் வடக்கில் எப்படியுள்ளது? கலாநிதி ஜெகான் பெரேரா July 25, 2020 இடம்பெறவிருக்கும் பொதுத் தேர்தல்களுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் கடந்த வாரம் வெளியிடப்பட்டதேர்தல் விஞ்ஞாபன அறிக்கையில், தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்க ளின் ஒன்றிணைந்த வடிவத்தில் சமஷ்டி அடிப்படையிலான தீர்வுக்கு தமிழ் மக்களிடமிருந்து புதிய ஆணை கோரப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் ஒரு பிரிக்கப்படாத நாட்டில் நீடித்த அமைதியை உறுதி செய்ய முடியும் என்று அதில் கூறப்பட்டுள்ளதுஇது சுதந்திரம் பெற்ற ஆரம்ப நாட்களிலிருந்தும் பின்னர் மூன்று தசாப்த கால யுத்தத்திலிருந்தும் தமிழ் அரசியலில் முதலிடம் வகித்த சமூக சமத்துவ பிரச்சினைகளுடன் இணைந்த தொன்றாக…
-
- 1 reply
- 588 views
-
-
‘கிளிநொச்சியை’ சம்பந்தர் மீட்பாரா? - தெய்வீகன் புதிய ஆண்டுக்குள் நுழைந்திருக்கும் தமிழரது அரசியல் இயல்பான சோர்வுடனும் ஒருவித அயர்ச்சியுடனும் காணப்படுகிறது. 2016 ஆம் ஆண்டுக்குள் தீர்வொன்றை பெற்றுத்தரப்போவதாகத் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அவர்கள் கூறிய வார்த்தைகளைக் கடந்த 31 ஆம் திகதிவரை எண்ணிக்கொண்டிருந்த பல புத்திஜீவிகளுக்குப் பலத்த ஏமாற்றம். எல்லாவற்றையும் அரசாங்கத்திடம் இழந்துவிட்டுச் சரணாகதி அரசியல் நடத்திய தமிழ்த் தேசிய கூட்டமைப்பினை நம்பி, இனி ஏதாவது நடைபெறுவதற்கு சாத்தியம் உள்ளதா என்று இன்னும் பலருக்கு விரக்தி. அரசாங்கத்தைக் கூட்…
-
- 0 replies
- 588 views
-
-
இம்முறை தாயகத்தில் மாவீரர்நாள் ஒரு வெகுசன நிகழ்வாகவும் அனுஷ்டிக்கப்பட்டது. அரசியல்வாதிகளின் நிகழ்வாகவும் அனுஷ்டிக்கப்பட்டது. மே பதினெட்டுக்குப்பின் தாயகம் தமிழகம் டயஸ்பொறா ஆகிய மூன்று தரப்புக்களும் ஒரே நாளில் ஒரு விடயத்துக்காக உணர்வுபூர்வமாக ஒன்று திரண்ட மிக அரிதான நிகழ்வுகளில் அதுவும் ஒன்று. தாயகத்தில் அதை ஒரு வெகுசன நிகழ்வாக ஒழுங்குபடுத்திய அரசியல்வாதிகளே அதைத் தங்களுடைய நிகழ்வாகவும் வடிவமைத்திருந்தார்கள் என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். கடந்த ஏழாண்டுகாலப் பகுதிக்குள் தமிழ் மக்கள் துணிந்து காலடிகளை முன்வைத்த மற்றொரு நிகழ்வு அது. கடந்த ஏழு ஆண்டுகளில் தாயகத்தில் முதன்முதலாக ஒரு வெகுசன நிகழ்வாக அனுட்டிக்கப்பட்ட மாவீரர் நாள் இது. மாற்றத்தின் விரிவை தமிழ் மக்கள் வ…
-
- 0 replies
- 588 views
-
-
அமெரிக்க அரசியல் கட்சிகளின், சின்னமாக... யானை, கழுதை வந்தது எப்படி? அமெரிக்க அதிபர் டெனால்டு ட்ரம்பின் ஆட்சிக் காலத்தின் மீதான வாக்கெடுப்பாக கருதப்படும் இடைத்தேர்தல் அந்நாட்டில் நடைபெற்றுள்ளது. 435 மொத்த உறுப்பினர்களைக்கொண்ட செனட்டில் காலியாக இருந்த 35 இடங்களுக்கு இடைத்தேர்தல் 6 ஆம் தேதி நடந்துள்ளது. இரு சபையிலும் மைனாரிட்டியாக இருக்கும் ஜனநாயகக் கட்சி இந்த தேர்தலில் சில இடங்களை ஜெயிக்கும் என கருதுகிறது. குடியரசுக்கட்சி ஏன் யானை சின்னத்திலும், ஜனநாயக்கட்சி ஏன் கழுதை சின்னத்திலும் போட்டியிட்டுவருகின்றனர் எனத் தெரியுமா? இதில் ஒரு சுவாரஸ்யம் உள்ளது.1874 ஆம் ஆண்டு அமெரிக்காவின் கார்ட்டூன்களின் தந்தை என வர்ணிக்கப்படும் தாமஸ் நஸ்ட் குடியரசு கட்சியின் 3வது முறை வெற்றி…
-
- 0 replies
- 588 views
-
-
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையும் சமஷ்டியும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இல்லாமலாக்கும் ஒரு பிரேரணையை மக்கள் விடுதலை முன்னணி வெகுவிரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. எனினும் இச்செயற்பாட்டை ஆட்சேபித்து முன்னாள் எம்.பி.யும் கூட்டு எதிரணியின் முக்கியஸ்தருமான கெஹெலிய ரம்புக்வெல்ல மாகாண சபைகளை இரத்துச் செய்தாலன்றி நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவது சாத்தியமல்ல என்கிறார். இதற்கான காரணத்தை அவர் தெரிவிக்கையில் யாப்பின் 13 ஆம் ஷரத்தை நீக்காமல்அதைச் செய்வது ஆபத்து என்கிறார். இதை 20 ஆம் ஷரத்தாக மக்கள் விடுதலை முன்னணி கொண்டு வருவது பற்றி கூட்டு எத…
-
- 0 replies
- 587 views
-
-
தமிழீழ விடுதலைப்புலிகள் உறுப்பினர்களை.. நினைவு கூறுவதற்கு நான் தடையில்லை
-
- 0 replies
- 587 views
-
-
ஈழத் தமிழர் மனசாட்சியிலும் ஐக்கிய நாடுகள் சபையிலும் குற்றவாளியாக நிறுத்தப்பட்டிருக்கும் மகிந்த ராஜபக்ச, மூன்றாவது முறையாக இலங்கையின் ஜனாதிபதியாகத் துடிக்கிறார். அதற்காக சட்டத்தையே வளைத்துவிட்டார். 'செருப்பு ஆண்ட நாடு இது, எவன் ஆண்டால் என்ன?’ என தந்தை பெரியார் ஒருமுறை கேட்டார். மக்களும் மக்களாட்சித் தத்துவமும் மரணக் குழிக்குள் தள்ளப்பட்டுவிட்ட இலங்கையில், ஜனவரி 8-ம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்கவிருப்பதை நினைக்கும் போது இதுதான் நினைவுக்கு வருகிறது. ஈழத் தமிழர் மனசாட்சியிலும் ஐக்கிய நாடுகள் சபையிலும் குற்றவாளியாக நிறுத்தப்பட்டிருக்கும் மகிந்த ராஜபக்ச, மூன்றாவது முறையாக இலங்கையின் ஜனாதிபதியாகத் துடிக்கிறார். அதற்காக சட்டத்தையே வளைத்துவிட்டார். இலங்கையின் அரசியல் அமைப்புச…
-
- 0 replies
- 587 views
-
-
அரச தலைவர் தேர்தலில் மகிந்த தரப்பு வேட்பாளர்? அரச தலைவர் தேர்தலில் மகிந்த தரப்பு வேட்பாளர்? அடுத்த அரச தலைவர் பதவிக்கான தேர்தலுக்கு இன்னமும் 18 மாதங்கள் கால அவகாசமுள்ளது. ஆனால் அது குறித்த வாதப் பிரதிவாதங்கள், எதிர்வு கூறல்கள் என அரசியல் நிலமை இப்பொழுதே பரபரப்பாகி வருகின்றது. இன்றைய அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் அரச தலைவர் தேர்தலில் போட்டியிடுவாரா என்பது குற…
-
- 0 replies
- 587 views
-
-
உயிர் பிழைக்குமா இலங்கை? என்.கே. அஷோக்பரன் Twitter: @nkashokbharan கடந்த வாரம் இலங்கை சந்தித்த மிகப்பெரும் நெருக்கடி, எரிபொருள் தட்டுப்பாடுதான். எரிபொருள் தட்டப்பாட்டை, தனியார் வாகனம் வைத்திருப்பவர்களுக்கு ஏற்பட்ட வசதிக்குறைவுதான் என்று, குறுகிய பார்வையில் அணுகிவிடக்கூடாது. எரிபொருள் தட்டுப்பாடு என்பது, மிகப்பெரிய அடிப்படை வசதி சார்ந்த ஒரு பிரச்சினை. மனித சமூகத்தின் வளர்ச்சியில், விரைவுப் பிரயாணம் என்பது மிக முக்கிய அம்சம். மனிதனானவன் ஓர் இடத்திலிருந்து இன்னோர் இடத்துக்கு விரைவில் பயணிக்க முடியும் என்பது, மனித சமூகத்தின் பொருளாதார, சமூக வளர்ச்சியின் அடிப்படையாக உருவாகிவிட்டது. இன்றைய காலகட்டத்தில், நகரமயமாக்கலின் பின்னர் பயணம் என்பது, எமது வாழ்வியல…
-
- 1 reply
- 587 views
-
-
முள்ளிவாய்க்கால் நினைவுகளுடன் கடந்து போன நாளொன்றில், 'வன்னியுத்தம் " என்ற பொத்தகம் ஒன்றை வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. எழுத்தாளர் 'அப்பு" கண்ணீரையும் இரத்தத்தையும் சாட்சி வைத்து எழுதியிருந்த அப்பதிவில் எனது இதயத்தை ஊடுருவிய பக்கமொன்றை வாசகர்களுக்காக அப்படியே தருகின்றேன். 1998ம் ஆண்டு சிறிலங்கா இராணுவத்துடன் நடந்த ஒரு மோதலில் விசுவமடுவைச் சேர்ந்த ஒரு இளைஞன் வீரச்சாவடைந்தான்;. அந்த விபரத்தை அவனது குடும்பத்திற்கு அறிவிக்கும்படி விசுவமடு அரசியல் துறை பொறுப்பாளருக்கு அறிவிக்கப்பட்டது. உடனே அந்த விசுவமடு பொறுப்பாளர் தனது உந்துருளியில் அந்த மாவீரனின் வீடு நோக்கி புறப்பட்டார். அப்போதுதான் முதன் முதலாக அந்த பொறுப்பாளர் அந்த வீட்டுக்கு செல்கின்றார். அது வரை ஒரு போராளியின் வ…
-
- 5 replies
- 587 views
-
-
தமிழர் அரசியல்: கண்கட்டி வித்தையின் உச்சம் Editorial / 2019 ஏப்ரல் 02 செவ்வாய்க்கிழமை, பி.ப. 06:01 Comments - 0 -அ.அகரன் தனி மனித வாழ்வியலில், ஒருவனது நடத்தையின் பாங்கு, அவனது முன்னேற்றத்திலும் வெற்றியிலும் எவ்வாறு முக்கியத்துவம் பெறுகின்றதோ, அதனிலும் மேலாக, ஒரு நாட்டின் அதிகாரபீடத்தில் இருக்கின்றவர்களின் கருத்துகளும் செயற்பாடுகளும் அந்த நாட்டின் தலைவிதியைத் தீர்மானிக்கும் சக்திகளாக அமைகின்றன. இலங்கையில், நாட்டினுடையதும் மக்களினுடையதும் நலன்களைப் பின்னிறுத்தி, வெறும் சுயநல அரசியலை, கட்சி அரசியல் ஊடாகச் செய்துகொண்டிருக்கும் அரசியல்வாதிகளுக்கு இடையில் ஏற்படும் அரசியல் முரண்பாட்டின் வெளிப்பாடான காழ்ப்புணர்ச்சி கருத்துகள், சர்வதேச ரீதியாகப் பெரும் தா…
-
- 1 reply
- 587 views
- 1 follower
-
-
பலம் இருந்தால் தான் இன்றைய உலகில் மதிப்பு இருப்பதாக, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கொழும்பு, வெள்ளவத்தையில், நடந்த மனோகணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணியின், தேர்தல் பரப்புரை கூட்டத்தில் நேற்று உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், கொழும்பில் வந்து தம்பி மனோ கணேசன் அவர்களின் கட்சிக்; கூட்டத்தில் பேசுவதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன். அரசியலே வேண்டாம் என்றிருந்த எனக்கு இப்பொழுது தான் அரசியல் சூடு பிடிக்கின்றது. அரசியல் மேடை என்பது ஒரு டெனிஸ் விளையாட்டு அரங்கம் போல. ஒருவர் அடிப்பதை மற்றவர் அடிப்பார். இருவரும் ஒரே பந்தைத்தான் அடிப்பார்கள். விடாமல் அடித்தால்த்தான் வெற்றி. அதேபோல் ஒர…
-
- 0 replies
- 587 views
-
-
அமைதியை விரும்பாத அமெரிக்கா,இங்கிலாந்து - War On Palestine
-
- 0 replies
- 587 views
-
-
சம்பந்தனின் கனவைக் கலைத்த கோட்டாவின் உரை புருஜோத்தமன் தங்கமயில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, செவ்வாய்க்கிழமை (18) பாராளுமன்றத்தை ஆரம்பித்து வைத்து, ஆற்றிய கொள்கை விளக்க உரை பல தரப்பினரிடமும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. நாடு பாரிய பொருளாதார நெருக்கடியில் இருக்கின்ற நிலையில், அதை மீட்டெடுப்பது பற்றிய எந்தவித சிந்தனையோ, திட்டங்களோ இல்லாமல், ஜனாதிபதி தன்னுடைய உரையை ஆற்றியிருப்பதாக எதிர்க்கட்சிகளும் தென் இலங்கை ஊடகங்களும் விமர்சிக்கின்றன. தமிழ் மக்களைப் பொறுத்தவரை, ஜனாதிபதி தனது உரையில் தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினை தொடர்பில் எதுவுமே குறிப்பிடாதது, பாரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது. ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரைக்காக, இம்முறை தமிழ்த் தேசிய கூட…
-
- 1 reply
- 587 views
-
-
சிறுபான்மையினரின் வாக்குகளில்லாமல் கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதியாகியிருக்க முடியுமா என்று கட்டுரையாளர் சகாதேவராஜா தனது கட்டுரையின் மூலம் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் மேலும் தமது கட்டுரையில், இலங்கையின் எட்டாவது ஜனாதிபதித்தேர்தல் முடிந்து நாட்டின் ஏழாவது நிறைவேற்று ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவாகி பதவியேற்பும் நடைபெற்று முடிந்துள்ளது. இந்தநிலையில் மழைவிட்டும் தூவானம் விடவில்லை என்ற பாணியில் அவர் ஜனாதிபதியானது வெறும் பெரும்பான்மையின வாக்குகளால் மட்டும்தானா? என்ற வாதம் தலைதூக்கியுள்ளது. அதற்கு விடைகாணும் நோக்கில் ஓரளவாவது இக்கட்டுரை அமையலாம். பெரும்பான்மையின வாக்குகளால்தான் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாகியுள்ளார் என்ற கருத்து சமகாலத்தில் பேசுபொருளாகவுள்…
-
- 0 replies
- 587 views
-
-
தேசியம் எனப்படுவது பல்வகைமைகளின் திரட்சி: March 10, 2019 மன்னார்ச் சம்பவத்தை – தமிழ் தேசிய நோக்கு நிலையிலிருந்து அணுகுவது – நிலாந்தன்… 2009 மே மாதத்தை உடனடுத்து வந்த காலகட்டத்தில் குரலற்ற தமிழ் மக்களின் சன்னமான ஒரு குரலாகத் திகழ்ந்தவர் முன்னால் மன்னார் ஆயரான வண. ராயப்பு யோசப். அக்காலகட்டத்தில் வேறு எந்த மதத் தலைவரும் துணிந்து பேசாத விடயங்ககைள அவர் பேசினார். தமிழ் மக்களின் நவீன அரசியலில் அவரைப் போல வேறெந்த மதத்தலைவரும் தீவிரமாகக் குரல் கொடுத்ததில்லை. 2009ற்குப் பின்னர் ஏற்பட்ட தலைமைத்துவ வெற்றிடத்தில் தமிழ் மக்களுக்கு நம்பிக்கையூட்டிய சில ஆளுமைகளில் ஒருவராக ஆயர் ராயப்பு ஜோசப் காணப்பட்டார். இப்போதிருக்கும் திருகோணமலை மறை மாவட்ட ஆயரும் பாதிக்க…
-
- 0 replies
- 587 views
-
-
யாழ்ப்பாணம், கொழும்பில் இருந்து லக்ஸ்மி சுப்ரமணியன் சிறிலங்கன் எயர்லைன்சின் சென்னை-கொழும்பு விமான சேவை தொடக்கம், சிறிலங்காவின் தலைநகரிலுள்ள சனத்தொகை நிரம்பிய தெருக்கள் வரை, தற்போது சிறிலங்காவில் பல்வேறு மாற்றங்களைக் காணமுடியும். 1975ல் தமிழீழ விடுதலைப் புலிகள் தனிநாடு கோரிப் போராடத் தொடங்கிய காலத்திலிருந்து தொடரப்பட்ட உள்நாட்டுப் போரானது முடிவுக்கு வரும்வரை சிறிலங்காவானது பல்வேறு பாதிப்புக்களைச் சந்தித்தது. ஆனால் போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட பின்னர் தற்போது சிறிலங்காவில் பல்வேறு அபிவிருத்திகள் மேற்கொள்ளப்படுகின்றன. சிறிலங்காவின் நகரங்களைத் தாண்டி அதற்கப்பால் இலங்கையர்கள் அனுபவிக்கும் துன்பங்கள் மற்றும் துயரங்கள் வேறுபட்டவை. 'நாங்கள் எமது சொந்த நாட்டை விட தம…
-
- 0 replies
- 586 views
-
-
-
- 3 replies
- 586 views
-
-
பொது வேட்பாளர் அறிவிக்கப்பட்ட பின்னர் “கண்ணா நீயும் நானுமா?” என்ற பாடல் அடிக்கொரு தடவை ஞாபகத்திற்கு வருகின்றது. நீங்கள் அத்தனை பேரும் உத்தமர்தானா சொல்லுங்கள் என்ற பாடலும் இடைக்கிடை மேற்கிளம்புகின்றது.ஜனாதிபதி தேர்தல் களம் இவ்வளவு சூடாக இருக்கும் என்று ஆளும் கட்சியினர் மட்டுமன்றி எதிரணி கூட்டுக் கட்சிகளும் கூட நினைத்திருக்க மாட்டார்கள். ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவது மிகச் சுலபமான காரியம் என்றும் அதற்கான ராஜதந்திரங்கள் எல்லாம் தம்மிடம் கைநிறைய என்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு நினைத்துக் கொண்டிருந்தது. மறுபுறத்தில் கிட்டத்தட்ட ஒரு தசாப்தகாலம் ஆட்சி செய்துவிட்ட ஒரு ஜனாதிபதியை தோற்கடிப்பதற்கு எதி…
-
- 0 replies
- 586 views
-
-
தமிழர் விடுதலைக் கூட்டணியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திரு. அருணாசலம் தங்கத்துரை அவர்கள் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 20 வருடங்கள் ஆகின்றன. அவரது படுகொலை நடைபெற்ற போது நான் 7ஆம் வகுப்பிலே யாழ்ப்பாணத்திலே படித்துக்கொண்டிருந்தேன். படுகொலைக்குச் சில நாட்களுக்கு முன்னர் தான் இடப்பெயர்வினை அடுத்து வவுனியாவில் ஒன்றரை வருட காலம் வாழ்ந்த பின்னர் மீளவும் திருகோணமலை ஊடாகக் கப்பலிலே யாழ்ப்பாணம் வந்தடைந்திருந்தேன். திருகோணமலையில் உள்ள சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் பாடசாலை மாணவிகள் பார்த்துக்கொண்டிருக்கும் போது இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் சண்முகா இந்து மகளிர் கல்லூரியின் அப்போதைய அதிபர், நாமகள் வித்தியசாலை அதிபர் உள்ளடங்கலாக வேறு சிலரும் கொல்லப்பட்டனர். இந்தச் சம…
-
- 0 replies
- 586 views
-
-
விக்னேஸ்வரனுக்கான காத்திருப்பு புருஜோத்தமன் தங்கமயில் / 2018 ஒக்டோபர் 10 புதன்கிழமை, பி.ப. 12:23Comments - 0 வடக்கு மாகாண சபையின் முதலாவது பதவிக்காலம், இன்னும் இரண்டு வாரங்களில் நிறைவுக்கு வருகின்றது. அது, கடந்த ஐந்து ஆண்டுகளாக “வடக்கின் முதலமைச்சர்” என்கிற அடையாளத்தோடும் அங்கிகாரத்தோடும் வலம்வரும் சி.வி.விக்னேஸ்வரனுக்கும், தன்னுடைய எதிர்கால அரசியல் நடவடிக்கைகள், தெரிவுகள் தொடர்பில் உறுதியான நிலைப்பாடொன்றை எடுக்க வேண்டிய நெருக்கடியை வழங்கியிருக்கின்றது. மக்கள் பிரதிநிதிகளோ, போராளிகளோ யாராக இருந்தாலும், அவர்கள் அதிகாரத்தில் இருக்கும் வரைக்கும்தான் மரியாதை. அதிகாரத்தை (அல்லது பதவியை) இழந்து “முன்னாள்” என்கிற அடையாளத்தைப் பெற்ற தருணத்திலிருந்து, அவர்களுக்கா…
-
- 1 reply
- 586 views
-
-
ஜனாதிபதியானால் சிறையிலுள்ள கைதிகளை விடுதலை செய்வேன் - கோத்தா உறுதியளித்தாக நல்லை ஆதினம் தெரிவிப்பு Published by T. Saranya on 2019-10-28 15:40:24 முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ச ஜனாதிபதியாக வந்தால் சிறையில் உள்ள அனைத்து கைதிகளையும் புனர்வாழ்வு அளித்து விடுதலை செய்வேன் என தம்மிடம் உறுதியளித்ததாக நல்லை ஆதின குரு முதல்வர் தெரிவித்தார். யாழ்ப்பாணத்துக்கு இன்று தேர்தல் பிரசாரத்துக்காக வருகை தனத்திருந்த பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச முதலாவதாக நல்லூர் ஆலயத்திற்கு பின்பாக உள்ள நல்லை ஆதின குருமுதல்வரை சந்தித்து ஆசி பெற்றதுடன் அவருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். இந்த கலந்துரையாடலின் பின்னர் குரு முதல்வர் ஊடகங்க…
-
- 1 reply
- 586 views
-
-
பொலிகண்டிப் பிரகடனம் : அடுத்தது என்ன? - நிலாந்தன் பொத்துவிலில் தொடங்கி பொலிகண்டி வரையிலும் மக்களை திரட்டி ஒரு பேரணியை நடத்தியாயிற்று;அதன் நினைவாக ஒன்று அல்லது இரண்டு நினைவுக் கற்களை வடமராட்சியில் நடுகை செய்தாயிற்று. அடுத்தது என்ன? ஒரு மக்கள் எழுச்சி இயக்கத்தை தொடங்கியிருப்பதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்திருக்கிறார்கள். இது அந்தப் பேரணியை அவர்கள் ஒரு தொடக்கமாக கருதுவதைக் காட்டுகிறதா? அந்த ஆர்ப்பாட்டத்தை ஒழுங்குபடுத்திய சிவில் சமூகப் பிரதிநிதிகளில் ஒருவராகிய சிவகுரு ஆதீனத்தின் முதல்வர் ஐபிசிக்கு வழங்கிய ஒரு பேட்டியில் ஒரு குறுகிய காலத்தில் திட்டமிடப்பட்ட ஒரு போராட்டம் இதுவென்று கூறினார். எனவே அரசியல்வாதிகளின் ஒத்துழைப்பின்றி இதனை இவ்வளவு ப…
-
- 1 reply
- 586 views
-