அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
கிழக்கில் புதிய வடிவம் பெறும் தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறை 97 Views இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறை கிழக்கு மாகாணத்தில் புதிய வடிவம் பெற்றிருக்கின்றது. கால்நடை வளர்ப்போரே இந்த ஒடுக்குமுறைக்கு ஆளாகியிருக்கின்றார்கள். கால்நடைகளின் வாழ்வாதாரமாகிய மேய்ச்சல் தரையை சிங்களவர்கள் ஆக்கிரமித்திருப்பதே இதற்குக் காரணம். இந்த நிலங்கள் பல தசாப்தங்களாக மேய்ச்சல் தரையாகப் பயன்பட்டு வந்தன. கால்நடை வளர்ப்புக்குப் பயன்படுத்தப்பட்ட நிலத்தை ஆக்கிரமிப்பாளர்கள் பயிர் செய்யும் நிலமாக மாற்றியிருக்கின்றார்கள். இது கால்நடைகளை மேய்ச்சலுக்கு வழியில்லாத அவல நிலைமைக்கு உள்ளாக்கியிருக்கின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தின் நான்…
-
- 2 replies
- 578 views
-
-
ஆப்கன் தாலிபனுக்கு தண்ணி காட்டும் "துணிச்சலான" பள்ளத்தாக்கு - இந்த வரலாறு தெரியுமா? பால் கெர்லே & லூசியா பிளாஸ்கோ பிபிசி நியூஸ் பட மூலாதாரம்,ALAMY காபூலில் இருந்து சுமார் முப்பது மைல்களுக்கு அப்பால் குறுகிய நுழைவு வாயிலைக் கொண்ட ஒரு பள்ளத்தாக்குப் பகுதியில் தாலிபனை எதிர்க்கும் ஆயுதக் குழுவைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் காத்திருக்கிறார்கள். ஆப்கானிஸ்தானின் கொந்தளிப்பான சமகால வரலாற்றில் பஞ்ஷிர் பள்ளத்தாக்குப் பகுதி இப்படிக் கவனிக்கப்படுவது முதன் முறையல்ல. 1980-களில் சோவியத் ஒன்றியத்துக்கும், 90களில் தாலிபன்களுக்கு எதிராகவும் வலிமையான எதிர்ப்பு அரணாக திகழ்ந்திருக்கிறது. …
-
- 0 replies
- 578 views
-
-
நிறைவேற்று அதிகாரமும் பிரதமர் தலைமையிலான அமைச்சரவையும் தற்போது ராஜபக்சக்களின் கைகளில் இருக்கும் சூழலில்நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்துக்காக கோவிட்- 19 நிதியத்துக்குரிய நிதி பயன்படுத்தப்படாது என்பதற்கு என்ன உத்தரவாதம் என்று கேள்வி எழுப்பி உள்ளார் சிரேஸ்ட ஊடகவியலாளரும், இலங்கையின் பிரபல அரசியல் ஆய்வாளருமான அ. நிக்ஸன். இலங்கையில் 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி சுனாமிப் பேரலை ஏற்பட்டபோது பல்வேறு நாடுகள் நிதியுதவி வழங்கியிருந்தன. உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், ஆசிய அபிவிருத்தி வங்கி உள்ளிட்ட பல சர்வதேசப் பொது நிறுவனங்களும் உதவியளித்திருந்தன. அதனையும் தாண்டி அப்போது பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்ச சுனாமியால் பாதிக்கப்பட்டிருந்த தன்னுடைய சொந்த …
-
- 0 replies
- 578 views
-
-
சிங்கள, சீன உறவு ஆரம்பித்தது 60 களில் மகிந்தா தான் சீனத்து உறவுகளை தொடக்கி வைத்தவர் இல்லை. அது ஸ்ரீமாவோவினால் ஆரம்பிக்கப்பட்டது. கொழும்பிலுள்ள, பண்டாரநாயகே சர்வதேச மகாநாட்டு மண்டபம், இவரது முயல்வில், சீனாக்காரன் கட்டி கொடுத்தது.
-
- 1 reply
- 578 views
-
-
தேர்தலுக்கு பணமா இல்லை; மனமா இல்லை? எம்.எஸ்.எம் ஐயூப் மார்ச் மாதம் ஒன்பதாம் திகதி நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல், பல மாதங்கள் வரை நடைபெறாது இருக்கவும் கூடும் என்றுதான் இப்போது தெரிகிறது. ஏனெனில், சட்டத்தின்படி தேர்தல் ஆணைக்குழுவே தேர்தல் திகதியை நிர்ணயிக்க வேண்டும் என்று இருந்தாலும், ஜனாதிபதியின் விருப்பப்படியே எல்லாம் நடைபெறப்போகிறது போலும்! தேர்தலுக்காக செலவழிக்க திறைசேரியில் பணம் இல்லை என்பதே, இப்போது அரசாங்கத்தின் பிரதான வாதமாக இருக்கிறது. நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி இருப்பதால், அதை எடுத்த எடுப்பில் நிராகரிக்கவும் முடியாது. ஆனால், அரசாங்கம் தேர்தல் விடயத்தில் நடந்து கொண்ட விதத்தைப் பார்த்தால், அது உண்மையாக இருக்கலாமா என்ற பலத்த சந்தேகம் …
-
- 0 replies
- 578 views
-
-
உக்ரேன்: மையம்கொள்ளும் புதிய போர்க்களம் - தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ போர்க்களங்கள் உருவாகிய காலம் கடந்து வெகுநாட்களாகி விட்டன. இப்போது போர்க்களங்கள் உருவாக்கப்படுகின்றன. போரின் வடிவங்கள் மாறியுள்ளது போல, போர்க்களங்களின் தன்மையும் உருவமும் மாறிக் கொண்டேயிருக்கின்றன. இப்போது போர்க்களங்கள் வலிந்து உருவாக்கப்படுவது அதன் சிறப்பம்பம். அமைதி வழியில் அடைய இயலாததை, அடாவடித்தனத்தின் வழியில் அடைவதற்கான திறவுகோலாக போர்க்களங்கள் பயன்படுகின்றன. உக்ரேனின் கிழக்குப் பகுதியில் கடந்த சில வாரங்களாக அதிகரித்துள்ள மோதலும் அதன் விளைவாக ஏற்பட்டுள்ள உலகளாவிய கவனமும் அமெரிக்க - ரஷ்ய மோதலினை இன்னொரு கட்டத்துக்கு அழைத்துச் செல்லும…
-
- 0 replies
- 578 views
-
-
இந்திய – இலங்கை ஒப்பந்தம், 13, தமிழர் அரசியல்! யதீந்திரா அனைவருமாக இணைந்து இந்தியாவிடம் ஒரு கோரிக்கையை முன்வைப்பது தொடர்பில், 11 தமிழ் கட்சிகளிடையே இணக்கப்பாடு ஏற்பட்டிருக்கின்றது. இது ஒரு வரலாற்று சம்பவம். இந்த முயற்சி ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து, இதனை குழப்புவதற்கும் பல முயற்சிகள் இடம்பெற்றிருந்தன. தேசியத்தை கைவிட்டுவிட்டனர், 13இற்குள் தமிழ் மக்களின் அபிலாஷைகளை முடக்க முற்படுகின்றனர், 1987இற்கு பின்னர் இத்தனை உயிர்கள் போனதெல்லாம் எதற்காக – இப்படியான பலவாறான அலங்கார நச்சு வரிகள் இதற்காக பயன்படுத்தப்பட்டன. எனினும் இந்த விடயத்தில் அனைத்து தரப்பினரும் உறுதியாக இருந்தமையால், இந்த முயற்சி இணக்கப்பாட்டை எட்டியிருக்கின்றது. ஆரம்பத…
-
- 0 replies
- 578 views
-
-
கொலனித்துவ கால பீரங்கிகளும், யாழ்ப்பாணத்தில் உருவாக்கப்பட்ட பீரங்கியும் – ஒரு வரலாறு திருகோணமலையில் உள்ள ஒஸ்ரென்பேர்க் கோட்டையானது வாய்திறந்து பேசுமேயானால், அது தான் இழந்து நிற்கும் தனது புகழைப் பற்றி பெருமையுடன் பேசும். அதாவது இங்கு இடம்பெற்ற போர்கள் மற்றும் இங்கிருந்து சுடப்பட்ட பீரங்கிகள் (கனோன்கள்) போன்றவற்றுக்கு இந்தக் கோட்டை சாட்சியமாக உள்ளது. இலங்கையை தமது கொலனித்துவத்தின் கீழ் வைத்திருந்த போர்த்துக்கேயர்கள், ஒல்லாந்தர்கள் மற்றும் பிரித்தானியர்கள் தமது கொலனித்துவத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்கான கரையோரப் பாதுகாப்பை விட்டுக்கொடுக்கவில்லை. இதற்காக பல கோட்டைகளை இவர்கள் உருவாக்கினார்கள். இங்கு வீரர்கள் பணியில் அமர்த்தப்பட்டனர். பீரங்கிகள் நிறுத்தி வைக்கப…
-
- 0 replies
- 578 views
-
-
சுமந்திரனோடு சுருங்கிவிட்ட தேர்தல் களம் புருஜோத்தமன் தங்கமயில் / 2020 ஜூலை 08 “...அனந்தியைக் கட்சியை விட்டு நீக்கிய உங்களால் (தமிழ்த் தேசிய கூட்டமைப்பால்), ஏன் சுமந்திரனைக் கட்சியை விட்டு நீக்க முடியவில்லை...” என்றொரு கேள்வி, யாழ்ப்பாணத்தில் சில நாள்களுக்கு முன்னர் இடம்பெற்ற பிரசாரக் கூட்டமொன்றில், புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தனை நோக்கி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “...அனந்தியை நீக்கியது தமிழரசுக் கட்சி; சுமந்திரன் விடயமும் அந்தக் கட்சி சார்ந்தது. வேணுமென்றால், தேர்தலில் அவரை மக்கள் தோற்கடிக்கலாம்...” என்றொரு பதிலை வழங்கினார். பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்ட பின்னர், கோவிட்-19 பொது முடக்கக் காலத்தில்…
-
- 1 reply
- 578 views
-
-
பிரித்தானியாவின் வட அயர்லாந்து மீதான சட்ட அதிகார எல்லையை முடிவுக்குக் கொண்டுவர முயன்று கொண்டிருந்த சின் பெயின் (Sinn Fein), ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கு ஆதரவாக பிரித்தானிய வாக்களிப்பு முடிவுகள் வெளிவந்ததையடுத்து, ஐக்கிய அயர்லாந்து உருவாக்கத்துக்கு மீண்டும் முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கியுள்ளது. இதன் அங்கமாகவே, குறித்த வாக்களிப்பு முடிவு தொடர்பான செய்திகள் வெளிவந்து குறுகிய நேரத்துக்குள்ளேயே, வட அயர்லாந்தின் ஜனநாயக திடசங்கற்பத்தை ஆங்கில வாக்குகள் தடம்புரள வைத்துள்ளன. இது, ஐக்கிய அயர்லாந்தின் தேவையை மீளவும் கோடிட்டு காட்டுகிறது என சின் பையினின் தலைமைத்துவம் தெரியப்படுத்தியுள்ளது. வட அயர்லாந்தின் 56% மக்கள் ஐக்கிய இராச்சியம் ஐரோப்பிய ஒன்றித்திற்குள் தொடர…
-
- 0 replies
- 578 views
-
-
கொரோனாவுக்கு முடிவு கட்டுமா இலங்கை? கே. சஞ்சயன் / 2020 மார்ச் 20 நவீன உலகில் மனித குலத்துக்கு மாபெரும் சவாலாகவும் மனித இனத்தின் இருப்புக்கான பெரும் அச்சுறுத்தலாகவும் மாறியிருக்கிறது கொரோனா வைரஸ். குணப்படுத்த முடியாத உயிர்க் கொல்லி நோயாக இல்லாவிட்டாலும், இது பரவுகின்ற முறையும் வேகம்மும் உலகத்துக்கான பாரிய அச்சுறுத்தலாக உருவெடுத்திருக்கிறது. போக்குவரத்து, தொடர்பாடல் வசதிகளால் இன்றைய உலகம் சுருங்கி விட்டுள்ள நிலையில் இந்த நோய்ப் பரம்பலைக் கட்டுப்படுத்தவதற்கான வழிமுறைகள் தெரியாமல், நாடுகளின் அரசாங்கங்கள் தடுமாறிக் கொண்டிருக்கின்றன. பொருளாதார ரீதியாக வல்லமை வாய்ந்த அரசாங்கங்கள் கூட, என்ன செய்வதென்று தெரியாமல் திணறிக் கொண்டிருக்கின்றன. சீ…
-
- 1 reply
- 578 views
-
-
சீனாவின் இறுக்கமான பிடியில் சிறிலங்காவின் அமைதியான துறைமுகம் சிறிலங்காவின் தெற்கிலுள்ள அம்பாந்தோட்டைத் துறைமுகமானது ஆட்கள் நடமாட்டமில்லாத பாலைவனமாகக் காட்சியளிக்கின்றது. கடந்த மாத நடுப்பகுதியில் ஒரு நாள் பிற்பகல் இதன் வாயிலுள்ள தேநீர்ச் சாலையில் நின்ற போது ஒரு சில வாகனங்களை மட்டுமே காணமுடிந்தது. ‘முன்னர் பிற்பகலில் 10-15 வரையானவர்கள் தேநீர் அருந்துவதற்காக இங்கு வருவது வழக்கம். ஆனால் கடந்த டிசம்பர் மாதம் சிறிலங்கா அரசாங்கத்தால் இத்துறைமுகம் சீனாவிற்கு விற்கப்பட்டதை அடுத்து இங்கு எவரும் வருவதில்லை’ என தேநீர்ச்சாலையின் உரிமையாளரான வில்சன் தெரிவித்தார். இத்தேநீர்ச்சாலையானது சிறிலங்கா, அதாவது சிலோன், பிரித்தானிய கொலனித்துவத்திலிருந்து சுதந்திரமடைவதற்கு…
-
- 1 reply
- 578 views
-
-
ஜெயிக்கப் போவது யார்? எதிர்வரும் 4 வருட காலத்திற்கு அமெரிக்காவின் தலைவிதியை மட்டுமல்லாது உலகின் தலைவிதியையே தீர்மானிக்கப் போகும் முக்கியத்துவம் மிக்க தேர்தலில் வாக்களிக்க அமெரிக்க வாக்காளர்கள் தயாராகியுள்ளனர். அமெரிக்காவின் 58 ஆவது ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகின்றது. அமெரிக்காவினதும் உலகினதும் தலைவிதி வாக்காளர்களின் தோளில் முள் முனையில் நிற்பது போன்று ஊசலாடிக் கொண்டிருக்கிறது என இந்தத் தேர்தல் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்திருந்த கருத்து நிதர்சனமானது என்பது கண்கூடு. நேரத்துக்கு நேரம் தனது கருத்துகளை மாற்றி சலசலப்பை ஏற்ப…
-
- 0 replies
- 578 views
-
-
பாழ்நரகத்தில் தீர்மானிக்கப்படும் சில கூட்டணிகள் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் செயற்பாட்டால், கடந்த வாரம் ஐந்து தமிழ்க் கட்சிகள் இணைந்து செயற்பட உடன்பட்டனர். ஆறு கட்சிகளுடன் தொடங்கிய பேச்சுவார்த்தை, இறுதியில் ஐந்து கட்சிகள் உடன்பட்ட ஆவணம் ஒன்றில் கையொப்பமிடுவதுடன் நிறைவுற்றது. இந்த இணைவு எதைச் சாதிக்கப்போகிறது என்ற கேள்வி ஒருபக்கம் எழுந்தாலும் இதை ஒரு நல்ல தொடக்கமாகக் கருதியோரும் உண்டு. தமிழ்க்கட்சிகள் இணைந்து செயற்படுவதற்கான வாய்ப்பை உருவாக்கியுள்ளன என்று மகிழ்ந்தோரும் உண்டு. இந்த மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் அதிககாலம் நிலைக்கவில்லை. கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியான ‘சண்டே டைம்ஸ்’ பத்திரிகை, கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினரும…
-
- 0 replies
- 578 views
-
-
அரசியல் தீர்விற்கான வெளியாரின் அழுத்தங்களும் மகிந்தவின் தவறான புரிதலும் - யதீந்திரா சில தினங்களுக்கு முன்னர் பிரதமர் மகிந்த ராஜபக்ச பொங்கல் தினத்தை முன்னிட்டு, தமிழ் செய்தியாளர்களை சந்தித்திருக்கின்றார். இதன் போது அரசியல் தீர்வு தொடர்பான கேள்விகளுக்கு இவ்வாறு பதிலளித்திருக்கின்றார். வடக்கு கிழக்கு தமிழர் பிரச்சினைக்கான தீர்வை இந்தியா தரவேண்டும் என்பது போன்ற செய்திகளை ஊடகங்களில் பார்த்தேன். அதில் எனக்கு உடன்பாடில்லை – தீர்வு எம்மிடமே உள்ளது. அதனை உள்நாட்டுக்குள்தான் தேட வேண்டும் அதைவிடுத்து தீர்வை வெளியில் தேடுவதில் அர்த்தமில்லை என்றவாறு குறிப்பிட்டிருப்பதான, செய்திகளை பார்க்க முடிந்தது. இதில் பங்குகொண்ட ஒரு செய்தியாளர் தனது முகநூலில் பின்வருமாறு பதிவு செய்திருக்க…
-
- 2 replies
- 577 views
-
-
ஒரு கர்தினாலுக்குக் கிடைத்த வெற்றி? நிலாந்தன். சனல் நாலு வெளியிட்ட ஆவணப்படம் தொடர்பில் உரிய விசாரணைகளை நடத்த ஓய்வுபெற்ற சிரேஷ்ட அதிகாரிகள் மூவர் அடங்கிய விசேட குழுவொன்றை நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார். பொலிஸார், சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் அரச சேவை அதிகாரிகளை உள்ளடக்கியதாக இக்குழு அமையும்.இக்குழுவை நியமிக்கும் பொறுப்பு ஜனாதிபதி பணிக்குழாமின் பிரதானியும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான சாகல ரட்ணாயக்க மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித் பண்டார தென்னகோன் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும், சனல் நாலு வெளியிட்ட ஆவணப்படம் தொடர்பில் ஆராய பாராளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை அமைக்கவும் ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். ஆனால்,இலங்கையில் க…
-
- 0 replies
- 577 views
-
-
இருமுனைப்போட்டி வடமாகாண சபையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியானது, தமிழ் மக்களுடைய அரசியல் இரு முனைகளில் மிக மோசமாகக் கூர்மை அடைந்துள்ளதை வெளிப்படுத்தியிருக்கின்றது. மரபு வழியாகப் பேணப்பட்டு வந்த அரசியல் தலைமைக்கு ஏற்பட்டுள்ள மிக மோசமான சோதனையாகக் கூட இந்த நெருக்கடியை நோக்கலாம். தமிழ் மக்களின் அரசியல் தலைமையை முழு அளவில் ஏற்றுச் செயற்பட்டிருந்த விடுதலைப்புலிகளின் வீழ்ச்சியின் பின்னர், தமிழ் மக்களின் அரசியல் தலைமை தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தோள்களில் வந்திறங்கியது. விடுதலைப்புலிகளின் காலத்தில் பாராளுமன்ற அரசியல் தலைமையாக – ஓர் அரசியல் அலங்கார நிலையிலேயே தமிழ்த்தேசிய கூட…
-
- 1 reply
- 577 views
-
-
தமிழ் மக்களின் சாபக்கேடு - செல்வரட்னம் சிறிதரன்:- 08 பெப்ரவரி 2014 இலங்கையில் இனப்பிரச்சினை காரணமாக முப்பது வருடங்களாக மோசமான ஒரு யுத்த நிலைமை நீடித்திருந்தது. இதில் பல்லாயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்துள்ளார்கள். எண்ணற்றவர்கள் அவயவங்களை இழந்தும், மனநிலை பாதிக்கப்பட்டும் இருக்கின்றார்கள். இதைவிட கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன. பரம்பரை பரம்பரையாகக் குடியிருந்து வசித்து வந்த பிரதேசங்களில் இருந்து மக்கள் அடியோடு பெயர்த்து வெளியேற்றப்பட்டார்கள். இவ்வாறு வெளியேற்றப்பட்டபோதும், யுத்தச் சூழலில் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் அவர்கள் பல்வகையான அவமானங்களுக்கு ஆளாகி சுயகௌரவம், தன்மானம் என்வற்றை இழக்கவும் நேரிட்டிருந்தது. இவ்வாறான கொடுமைகளுகு;கு மத்…
-
- 0 replies
- 577 views
-
-
யார் தலைமையேற்பது? சொல்லுங்கள், முதலமைச்சரே சொல்லுங்கள் கௌரவ முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கட்கு! பூரண சுகத்தோடு இருப்பீர்கள் என்று நம்புகின்றேன். ஓர் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசராக, ‘கவீரன்’ (க.வி.விக்னேஸ்வரன்) என்கிற கருத்தியலாளராக, கொழும்பு கம்பன் கழக மேடைகளில் முக்கிய பேச்சாளராக என்று, பல கட்டங்களிலும் தங்களைக் கண்டும், வாசித்தும், கேட்டும் வந்திருக்கின்றேன். தமிழ்த் தேசியப் போராட்டம் ஆயுத வடிவில் முனைப்புப் பெற்றிருந்த காலத்திலும், அந்தச் சூழலுக்கு அப்பால், தமிழ்ச் சமூகத்தினால் மரியாதையோடு கொண்டாடப்பட்ட ஒரு சிலரில் தாங்களும் ஒருவர். அது, தங்களை 2013ஆம் ஆண்டு ஜுலை நடு…
-
- 1 reply
- 577 views
-
-
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல்: தோற்றது யார்? தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ தேர்தல், ஜனநாயகத்தின் பிரதான அளவுகோலாகக் கொள்ளப்படுகிறது. இதுவரை தேர்தல் எதுவும் மக்களுக்கு ஜனநாயகத்தை வழங்கியிருக்கின்றதா என்ற வினாவுக்குச் சாதகமான பதிலை யாரும் தரக் காணோம். ஜனநாயக நோக்கிலே தேர்தல்கள் மெச்சப்படுகின்றன. ஆனால், தேர்தல்கள் ஜனநாயகமாக நடக்கின்றனவா? அவை ஜனநாயகத்தைப் பெற்றுத் தருகின்றனவா? என்பன ஜயத்துக்குரியவை. இருந்தும் தேர்தல்கள் திருவிழாக்கள் போல ஒரு புனிதத்தைப் பெற்றுவிட்டன. அதன் முக்கியம், அதன் உள்ளடக்கத்திலின்றி அதன் தோற்றப் பொலிவிலேயே உள்ளது. இல்லாவிடின் சினிமா நடிகர்களும் விளையாட்டு வீரர்களும் ஊர்ச் சண்டியர்களும் தேர்தலில் வென்று பிரமுகராக முடியுமா? இவை தேர்தல்…
-
- 0 replies
- 577 views
-
-
இனம் சார்பாக ஜனாதிபதியுடன் பேசுவதில் தவறில்லை...
-
- 1 reply
- 577 views
-
-
‘நாடகம் விடும் நேரம்தான் உச்ச காட்சி நடக்குதம்மா’ என்.கே. அஷோக்பரன் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் பதவியிலிருந்து விலகச்செய்துவிட்டு, எல்லாக் கட்சிகளில் இருந்தும் ஆதரவைப் பெற்று, ஓர் அரசை அமைக்க, ஜனாதிபதி கோட்டா துடித்துக்கொண்டிருப்பதை அறிக்கைகள் சுட்டி நிற்கின்றன. மறுபுறத்தில், “நான் ஒருபோதும் பிரதமர் பதவியிலிருந்து விலகப்போவதில்லை; வேண்டுமானால் என்னைப் பதவி நீக்கவும்” என வௌிப்படையாகவே சவால் விட்டிருக்கிறார் மஹிந்த. ஏற்கெனவே பசில், சமல், நாமல் ஆகிய ராஜபக்ஷர்கள், தங்கள் அமைச்சரவைப் பதவிகளிலிருந்து விலகியுள்ள நிலையில், இன்றைய அமைச்சரவையைப் பொறுத்தவரையில் கோட்டாவும் மஹிந்தவும் ஆகிய இரண்டு ராஜபக்ஷர்கள் மட்டுமே அமைச்சரவையில் அங்கம் வகிக்கிறார்கள். இதில் மஹிந்த…
-
- 0 replies
- 576 views
-
-
புதிய அரசமைப்பும் சிறுபான்மையினரின் எதிர்காலமும் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2020 ஓகஸ்ட் 30 புதிய அரசமைப்பாக்க முயற்சிகள் இலங்கைக்குப் புதியனவல்ல. 1994ஆம் ஆண்டு தொட்டு, இதற்கான பலமுயற்சிகள் எடுக்கப்பட்டு வந்துள்ளன. ஆனால், இன்றுவரை முழுமையாகச் சாத்தியமாகவில்லை. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின் முடிவுகள், புதிய அரசமைப்பு உருவாக்க முயற்சிகளைச் சாத்தியமாக்கும் வல்லமையைக் கொண்டுள்ளன. அரசாங்கம், நாடாளுமன்றின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொண்டிருப்பதும் வலுவற்ற எதிர்க்கட்சி ஆகிய இரண்டு காரணிகளும் இங்கு பிரதானமானவை. புதிய அரசமைப்பு எவ்வாறு அமையப்போகிறது என்பதைக் கூறுவது கடினம். அதில், சிறுபான்மையினரின் குரல்கள் எடுபடப்போவதில்லை என்பதை மட்டும்…
-
- 1 reply
- 576 views
-
-
‘கிங் மேக்கர்’ முகம்மது தம்பி மரைக்கார் / 2019 ஒக்டோபர் 09 புதன்கிழமை, பி.ப. 01:26Comments - 0 ஏகப்பட்ட ஆச்சரியங்கள், அதிர்ச்சிகள், ஏமாற்றங்கள், எதிர்பார்ப்புகளோடு, ஜனாதிபதித் தேர்தலுக்கான ஆயத்தங்கள் ஆரம்பித்திருக்கின்றன. * பதவியில் இருக்கும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியொருவர், அடுத்துப் போட்டியிடாத தேர்தலாக இது அமைந்துள்ளது. * அதிகமானோர் போட்டியிடும் ஜனாதிபதித் தேர்தலாகவும் இது உள்ளது. * அதிக சிறுபான்மையினத்தவர் போட்டியிடும் தேர்தல் இது. * இந்திய வம்சாவழித் தமிழர் ஒருவர் முதன்முதலாகப் போட்டியிடும் ஜனாதிபதித் தேர்தல் எனும் அடையாளத்தையும் இந்தத் தேர்தல் பெற்றுள்ளது. * இந்த நாட்டின் பிரதான கட்சிக…
-
- 0 replies
- 576 views
-
-
ஐ.நா.வில் பிரித்தானியா தலைமையில் புதிய பிரேரணை : அமெரிக்காவும் இணை அனுசரணை By VISHNU 28 AUG, 2022 | 03:20 PM -ஆர்.ராம்- · சாட்சியங்களை திரட்டும் பொறிமுறை நீடிப்பு · உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவமும் உள்ளீர்ப்பு · வரைவு தயாரிப்பு பணிகளில் சுமந்திரன் பங்கேற்பு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 12 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமைகள், மனிதாபிமானச் சட்ட மீறல்கள் தொடர்பில் நீதி மற்றும் பொறுப்புக்கூறலைச் செய்வதற்கான புதிய பிரேரணையொன்று கொண்டுவரப்படவுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டள்ளது. பிரித்தானியா தலைமையில் கொண்ட…
-
- 4 replies
- 576 views
- 1 follower
-