அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
-
- 0 replies
- 571 views
-
-
பொறுக்கிகளுக்கு போராளிகளின் சாயம் பூசப்படுகிறது: வாள்வெட்டு குண்டர் குழுக்களும் கதாநாயக பிம்பமும் கடந்த ஞாயிற்றுக்கிழமை, யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில், மோட்டார் சைக்கிளில் வந்த குண்டர் குழுவொன்று, இரு பொலிஸாரை வாள்களினால் வெட்டியிருக்கின்றது. தாக்குதலுக்குள்ளான பொலிஸாரில் ஒருவரின் நிலை கவலைக்கிடமானது என்று தெரிவிக்கப்படுகின்றது. இந்தத் தாக்குதல் சம்பவத்தை அடுத்து, கடந்த திங்கட்கிழமை யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர, தாக்குதல்தாரிகளைக் கைது செய்வதற்காக, இராணுவம் உள்ளிட்ட முப்படையின் ஒத்துழைப்போடு, தேடுதல் வேட்டை நடத்தப்படும் என்று அறிவித்திருக்கின்றார். கடந்த சில வ…
-
- 3 replies
- 571 views
-
-
-
- 2 replies
- 571 views
-
-
9/11 | 20 வருட நிறைவு – உலக ஒழுங்கு மாறியதா? – ஒரு மீள்பார்வை சிவதாசன் அமெரிக்காவில் இரட்டைக் கோபுரங்களுள் பயணிகள் விமானங்கள் புகுந்து இன்றுடன் இருபது வருடங்கள் பூர்த்தியாகின்றன. இச்சம்பவங்கள் யாரால், ஏன் நிகழ்த்தப்பட்டந எனப் பொதுமக்கள் அறிவதற்கு இன்னும் இருபது வருடங்கள் எடுக்கலாம். விசாரணைகள் நடைபெற்று முடிவுகள் பெட்டிக்குள் வைத்து மூடிப் பூட்டுக்கள் போடப்பட்டுள்ளன. சட்டத்தின் சாவியைக் கொண்டு ஜநாதிபதி பைடன் அவற்றைத் திறப்பதற்கு ஆணையிட்டுள்ளார் என்கிறார்கள். சுருக்கப்பட்ட அல்லது அழிக்கப்பட்ட சில பிரதிகள் வெளிவரலாம். எப்போது? தெரியாது. இச்சமபங்களின் காரணமாக உலகம் புதிய ஒழுங்கிற்குள் போகப்போகிறது (New World Order) என அமெரிக்கா, பிரித்தானியா உட்பட்ட, உலகச் சண்டி…
-
- 0 replies
- 571 views
-
-
தேசத்தின் தேசியகீதம் படும்பாடு -க. அகரன் முரண்பாடுகளை முரண்பாடுகளால் தீர்த்துக்கொள்ள முனைவதானது சாபக்கேடான விளைவுகளையும் விபரீதமான முடிவுகளையும் வழங்கும் என்பது யதார்த்தம். எனவே, முரண்பாட்டு நிலையில் இருந்து, யாரேனும் ஒரு தரப்பு, தீர்வு நோக்கிச் செல்ல வேண்டுமானால், அவர்கள் தமது நிலையில் இருந்து, விட்டுக்கொடுப்பு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்; இவ்வாறாக,பரஸ்பர விட்டுக்கொடுப்புகள் அற்ற, முரண்பாடான நிலைமையே இலங்கையில் தொடர்ந்தும் காணப்படுகின்றது. கடந்த பல தசாப்தங்களாக முரண்பாட்டு நிலையில் இருந்த இரு சமூகங்கள், இன்று ஒரே பாதையில் பயணிப்பதற்கு முனைப்புகள் மேற்கொள்ளப்பட்டாலும் அதற்கான இடர்பாடுகள் களையப்படாமை பெரும் பின்னடைவாகவே உள்ளது. காலத்துக்குக் காலம…
-
- 0 replies
- 570 views
-
-
இனவாத முற்றுகை அரசியல் ரீதியாகவும் மத ரீதியாகவும் சிறுபான்மை இனங்களைச் சேர்ந்தவர்களான தமிழ் மக்களையும், முஸ்லிம் மக்களையும் அடக்கியொடுக்கி வைத்திருக்க வேண்டும் என்ற ரீதியிலேயே இதுவரையில் காரியங்கள் இடம்பெற்று வந்திருக்கின்றன. நாட்டில் இனவாதத்தையும் மத ரீதியாக இனக் குழுமங்களுக்கிடையில் வெறுப்பையும் ஏற்படுத்துபவர்களுக்கு எதிராக தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்திருக்கின்றது. அது மட்டுமல்லாமல், முஸ்லிம்களுக்கு எதிராக இனத்துவேசத்தை ஏற்படுத்தியமைக்காக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரைக் கைது செய்வதற்காக விசேட பொலிஸ் குழுக்கள…
-
- 0 replies
- 570 views
-
-
நவம்பர் 16 ஆம் திகதிக்குப் பின்னரான சூழலில் ஜெனீவா மனித உரிமைச் சபையின் குற்றச்சாட்டில் இருந்து வெளியேற இலங்கை முன்னெடுக்கும் நகர்வுகள் சீனத் தகவல் தொழினுட்பத்தைக் கைவிடுவதற்கான மீளாய்வில் கோட்டாபய ராஜபக்ச- இந்தியாவும் கரிசனை இந்தோ பசுபிக் பிராந்தியத்தில் அமெரிக்கா, இந்தியா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகள் போட்டியிட்டுக் கொண்டிருக்கும் நிலையில் சீனா, ரஷியாவுடன் இணைந்து ஈரான் இந்தியப் பெருங்கடலின் வடக்கு பகுதியில் கூட்டு இராணுவ பயிற்சி நடத்தியுள்ளது. இந்தத் தகவல் உலகம் முழுவதும் உள்ள இராணுவ ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அமெரிக்கா, ஈரான் நாடுகளிடையே பதற்றம் நிலவி வருகின்ற சூழலில…
-
- 2 replies
- 570 views
-
-
சமஷ்டி அடிப்படையிலான தீர்வுக்கு ஒன்றுபடுவோம் தமிழ் தேசியத்தை நேசிக்கும் தமிழ் மக்களும் தமிழ்கட்சிகளும் ஒன்றுபட்டு சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வு ஒன்றை ஒருமுகமாக முன்வைத்து போராடுவதற்கு நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தலின் முடிவுகள் வழிவகுத்துள்ளன. தென் இலங்கையிலும் அரசியல் மாற்றம் ஏற்படவுள்ளது. இலங்கை சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் நிறைவுற்ற நிலையில் 70 வீதமான சிங்கள மக்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி சிங்கள மக்களையும் சிங்கள நாட்டையும் முன்னேற்றி வருவதையும் தமிழ் மக்கள் எல்லா வழிகளிலும் இனரீதியாக ஒதுக்கப்பட்டு வருவதையும் அறிவீர்கள். எமது அடிப்படை உரிமைகளைப் ப…
-
- 0 replies
- 570 views
-
-
மோடிக்கு இரண்டாவது வாய்ப்புக் கிடைக்குமா? எம். காசிநாதன் / 2019 பெப்ரவரி 18 திங்கட்கிழமை, மு.ப. 12:38 Comments - 0 நாடாளுமன்றத்தின் இறுதி நாள் கூட்டத் தொடர் முடிவு பெற்று, அடுத்த கட்டத் தேர்தலுக்குத் தயாராகி விட்டது ‘இந்திய ஜனநாயகம்’. மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரண்டில் மக்களவையில் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கத்துக்கு அறுதிப் பெரும்பான்மை இருந்தது. வேறு கட்சிகளின் ஆதரவு தேவையின்றி, மோடியால் மக்களவையில் தான் நினைத்ததைச் சாதிக்க முடிந்தது. பா.ஜ.க தலைமையிலான அரசாங்கம் விரும்பிய எந்த மசோதாவையும் முதலில் மக்களவையில் கொண்டு வந்து நிறைவேற்றும் பலம், பா.ஜ.கவுக்குத் தனிப்பட்ட முறையில் கிடைத்தமை, 16ஆவது நாடாளுமன்றத்தின் தனிச் சிறப்பாகும். ஏறக்கு…
-
- 2 replies
- 570 views
-
-
புலிகளையும் – அரசாங்கத்தையும்ஒரே தராசில் சமப்படுத்த முனைகிறாரா அம்பிகா.? தமிழ் மக்களையும் – இலங்கை அரசையும் பொறுத்துவரை அடுத்து வரும் நாட்கள் ஒவ்வொன்றும் முக்கியமானவை. ஜெனிவாவில் நடந்துவரும் மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் – தமக்கு இழைக்கப்பட்ட குற்றங்கள் – இன்னல்களுக்கு நீதி கிடைத்து விடாதா? என்ற எதிர்பார்ப்புடன் தமிழ் மக்களும் – தமிழர்களுக்கு இழைத்த குற்றங்களில் இருந்து தப்புவதற்கு தாம் நகர்த்திய இராஜதந்திர காய்கள் வெற்றியை தந்து விடதா? என்ற அங்கலாய்ப்புடன் இலங்கை அரசும் உள்ளன. இந்த வேளையில் தனது நிறைவேறாத அரசியல் கனவின் காழ்ப்புணர்வை 15 சுட்டுரை (twitter) பதிவுகள் மூலம் தீர்த்துள்ளார் திருமதி அம்பிகா சற்குணநாதன். திருமதி அம்பிகா சற்குணநாதனுக்கு அதி…
-
- 0 replies
- 570 views
-
-
"விடியலுக்கு காத்திருக்கிறேன்" இலங்கைக்கு 1948 ஆண்டு பெப்ரவரி மாதம், நாலாம் திகதி சுதந்திரம் கிடைத்ததாக நான் வரலாற்றில் படித்துள்ளேன். அன்று இலங்கை வாழ் தமிழர்கள் தமக்கு விடியல் கிடைக்கும் என்று அதை மகிழ்வாக, பெரும்பான்மையான சிங்களமக்களுடன் சேர்ந்து வரவேற்றனர். ஆனால், எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவால், 1956 ஆம் ஆண்டு கொண்டு வந்த சிங்களம் மட்டும் என்ற சட்டம் [ Sinhala Only Act] அவர்களின் விடியலை, இனக்கலவரத்துடன் சுக்கு நூறாக்கியது. அதை தொடர்ந்து தரப்படுத்தல் வந்து, மேலும் பல இனக்கலவரங்கள், யாழ் நூலக எரிப்பு என தமிழர்கள் எதிர்பார்த்த விடியல் இன்றுவரை ஏற்படவில்லை! சொல்லளவில் பிரித்தானியா அரசிடம் இருந்து சு…
-
-
- 2 replies
- 570 views
-
-
ஐ.எம்.எவ் கடன்: மூன்றாமுலகக் கடன் பற்றிய கதைகள் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ இலங்கையின் பொருளாதார நெருக்கடியை, இன்னும் கடனை வாங்குவதன் மூலம் தீர்த்து விடலாம் என்று பலரும் நம்புகிறார்கள். இலங்கையின் பொருளாதார நெருக்கடி, இரண்டு விடயங்களை அடிப்படையாகக் கொண்டது. முதலாவது, பொருளாதாரக் கொள்கை; இரண்டாவது, அதன்வழியமைந்த பொருளாதாரக் கட்டமைப்பு. இவை இரண்டிலும், அடிப்படையான மாற்றங்களைச் செய்யாத வரை, இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வில்லை. கடன் வாங்குவது, தற்காலிகமான ஆறுதலைத் தரும். ஆனால், வாங்கிய கடனையும் அதற்கான வட்டியையும் சேர்த்தே மீளச்செலுத்த வேண்டும் என்பதே யதார்த்தம். இன்று தனிமனிதர்கள் வாழ்வில், நிதிநிறுவனங்கள் எவ்வாறு செயற்படுகி…
-
- 0 replies
- 569 views
-
-
சிறிலங்காவில் தமிழர்களும் முஸ்லிம்களும் http://youtu.be/c-C-0oxRqM0
-
- 0 replies
- 569 views
-
-
கிழக்குக்கான தமிழர் அரசியல் முஸ்லிம் மக்களுக்கு எதிரானது அல்ல .. கிழக்குக்கான தனித்துவமான அரசியல் தேவைப்பாட்டை முன்னிறுத்துகின்றபோது அது தமிழ்த் தேசியத் துரோகமாகவும், பிரதேசவாதமாகவும் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதமாகவும் திரிவுபடுத்தப்பட்டு கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. கிழக்குக்கான அரசியலை தமிழ்த் தேசியவாதத்தின் ஆரோக்கியமான அம்சமாகப் பார்த்து தமிழ்த் தேசியத்தினை சுய விமர்சனம் செய்துகொண்டு முன்கொண்டுசெல்ல முடியாதவர்களாக தமிழ்த் தேசியவாதிகள் இருப்பதோடு கிழக்குக்கான அரசியலை முன்வைப்பவர்கள் தொடர்பாக மிகமோசமான விமர்சனங்களை சமூகப் பொறுப்பற்ற விதத்தில் முன்வைப்பதையும் காணக்கூடியதாக இருக்கின்றது. அவ்வாறான ஒரு விமர்சனத்துக்கான எதிர்வினையாகவே இப்பத்தி அமைகின்றது. …
-
- 0 replies
- 569 views
-
-
இலங்கை அரசாங்கம் நியாயமான விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என பிரித்தானிய பாதுகாப்பு செயலர் கூறியுள்ளார். பிரித்தானியாவில் வெளிவிவகார செயலர் லியாம் பொக்ஸ் அவர்களுக்கு அவரது கட்சிக்குள்ளேயும், அதிகாரிகளினாலும் , மனித உரிமை வாதிகளினாலும் மிகப்பெரிய நெருக்கடிகள் அண்மையில் எழுந்தன. போரில் சிங்கள அரசு தமிழர்களை கொன்று குவிக்கும் வேளையிலும், அதன் பின்னர் போர்க்குற்ற விசாரணைகளினை இலங்கை அரசு புறம் தள்ளும் வேளைகளிலும் சிறிலங்கா இனவாத தலைவர் மஹிந்த இராஜபக்ஷவை லியாம் பொக்ஸ் அவர்கள் சந்தித்துவந்துள்ளார். இதற்கு ஒருபடி மேலே சென்று மஹிந்த இராஜபக்ஷவை இலண்டனில் வைத்து சந்தித்தார். இந்த வேளைகளில் மஹிந்த இராஜபக்ஷவின் போர்க்குற்றத்திற்கு எதிராக தமிழர்கள் திரண்டு இலண்டன் மா …
-
- 0 replies
- 569 views
-
-
இலங்கையின் பயணம்? யுத்தத்திற்குப் பிறகு அதிக நெருக்கடிகளைச் சந்திக்கத் தொடங்கியுள்ளது இலங்கை. உள்நாட்டு யுத்தத்தை முறியடித்த அரசாங்கம், வெளி நெருக்கடிகளை முறியடிக்க முடியாமற் தவிக்கிறது. யுத்தத்தினால் பெற்ற வெற்றியைப்பாதுகாக்க முடியாத ஒரு நிலையை நோக்கிக் கொழும்பு சென்று கொண்டிருக்கிறது. அதனால் சமாதானத்தை எட்டவும் முடியவில்லை. புதிய பொருளாதாரத் திட்டங்களை உருவாக்கவும் முடியவில்லை. அரசியற் தீர்வை முன்வைக்கவும் இயலவில்லை. எந்தப் பாதையிலும் பயணத்தைத் தொடர முடியாத நிலையில் இறுகித் தேங்கிப்போயுள்ளது அரசாங்கம். கடந்த இரண்டாண்டுகளில் கொழும்பு கொண்டாடிய விழாக்களையும் அது அடைந்த பெருமிதங்களையும் நினைத்துப் பாருங்கள். இன்றைய நிலையையும் …
-
- 1 reply
- 569 views
-
-
சர்வதேச மயமான இலங்கையின் இனப்பிரச்சினைத் தீர்வு போர்க்குற்றம் விசாரிக்கப்பட்டுத் தண்டனை பெற, போர் வீரர்கள் சம்மதிப்பார்களா? அரசு அவர்களைப் பயன்படுத்தி விட்டு விசாரணைக்கும் தண்டனைக்கும் கையளிக்க விரும்புமா? போர் வீரர்கள் உயிர்த்தியாகம் செய்து கைப்பற்றிய இடங்களை மீண்டும் தாரைவார்க்க அவர்கள் இடமளிப்பார்களா? தம்மோடு கலந்துகொள்ளாமல் தீர்வு காண இசைவார்களா எனும் நிலைப்பாடுகளே தற்போது பல்லின தேசிய இணக்கப்பாட்டுத் தீர்வுக்கு முட்டுக்கட்டைகளாக இருக்கின்றன. அப்படியானால் போர்க்குற்றத்திலிருந்து போர் வீரர்கள் விலக்கு அளிக்கப்பட்டு அதற்குப் பகரமாக கைப்பற்றிய இடங்களை மீளவும் வழங்கத் தமிழ் …
-
- 0 replies
- 569 views
-
-
ஒரு அரசியல் கட்சியின் தலைவராக இருக்கவேண்டுமென்று நான் அரசியலுக்கு வரவில்லை சூரியன் FMன் விழுதுகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட எம். ஏ. சுமந்திரன் கோவிட்-19 பரவல் காரணமாக நாடு முடக்கப்பட்டமை, குருந்தூர்மலை விகாரை விவகாரம், துறைமுக நகர சட்டவரைபு மற்றும், இனப்பிரச்சியை தீர்ப்பதை பொருட்டு பௌத்த பீடங்களுடன் தமிழ்த் தலைவர்கள் உறவை பேணுவது குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்திருந்தார். மேலும், ஐ. நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான பிரேரணையின் அமுலாக்கம் மற்றும் சாட்சியங்கள் சேகரிப்பதற்கான அடுத்தகட்ட செயற்பாடுகள் தொடர்பிலும், இப் பிரேரணையையொட்டி தமிழ் அரசியல் தலைவர்களால் ஐ. நா.விற்கு ஜனவரி மாதம் அனுப்பப்பட்டிருந்த கடிதம் குறித்து எழுந்திருந்த சில சர்…
-
- 0 replies
- 568 views
-
-
இந்தியாவின் பங்களிப்பிருந்த போதிலும் தீர்வு இன்னமும் சாத்தியமாகவில்லை (நேற்றைய தொடர்ச்சி...) 2011 ஆம் ஆண்டு ஜுன் மாதம் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் கூறியவை இவைதான். 2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா லோக்சபாவில் வெளியிட்ட "சூ மொட்டு" (Suo Motu) அறிக்கையில் கூறியவையை நான் மேற்கோள் காட்டுகின்றேன். "இலங்கையில் மோதல்கள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டமை மூலம், தமிழர்கள் உட்பட இலங்கையில் வாழும் சிறுபான்மை மக்களது இதுவரை தீர்க்கப்படாதுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது என்பதை…
-
- 0 replies
- 568 views
-
-
நேற்று பிரித்தானியா; இன்று அவுஸ்திரேலியா ப. தெய்வீகன் பிரித்தானியாவில் ஏற்பட்ட அரசியல் ஸ்திரமற்ற நிலையை தொடர்ந்து உலகெங்கும் பாரிய பொருளாதார அதிர்வுகள் பரவும் என்ற அச்சம் உருவாகியிருக்கிறது. இதன் பின்னணியில், அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற இரட்டை தேர்தலானது மிகவும் உன்னிப்பாக அவதானிக்கப்பட்டது. பிரித்தானிய விடயங்களில் இருந்த முற்றிலும் வேறுபட்ட காரணங்களினால் குழப்பநிலையில் காணப்பட்ட அவுஸ்திரேலியாவின் நாடாளுமன்ற அதிகார சமநிலையை நேர் சீராக்குவதற்காக இந்த தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஆனால், தேர்தல் நடைபெற்று எட்டு நாட்களாக ஒரு முடிவை காணமுடியாமல் தேர்தல் திணைக்களம் திணறிக்கொண்டிருந்தது. கடந்த சனிக்கிழமை, இனிமேலும் பார்த்துக் கொண்டிராமல் நாட்டு மக…
-
- 0 replies
- 568 views
-
-
மாவீரர் நாள் 2023 உணர்த்துவது – நிலாந்தன். மட்டக்களப்பு, மாவடி முன்மாரி மாவீரர் துயிலுமில்லத்தில், மாவீரர் நாளன்று போலீசார் பெருமளவுக்குத் தடைகளை ஏற்படுத்தினார்கள்.அத் துயிலுமில்லத்தின் ஏற்பாட்டுக் குழுவைச் சேர்ந்தவர்களை அடிக்கடி கூப்பிட்டு விசாரித்தார்கள்.அக் குழுவிற்குப் பொறுப்பாக இருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரனைக் கூப்பிட்டு விசாரித்தார்கள். அந்த துயிலுமில்லத்தின் ஒரு பகுதியில் மலைக் கல்லில் பொறிக்கப்பட்டிருந்த கார்த்திகை 27 என்ற எழுத்தை அகற்றுமாறு கேட்டார்கள். கொடிகளை அகற்றச் சொல்லியும், பாடல்களை நிறுத்தச் சொல்லியும், ஒலிபெருக்கியை நிறுத்த சொல்வியும்,தொடர்ச்சியாக அறிவுறுத்தல்களை கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.சுடர் வணக்க நேரத்தின் போது ஒலிபெருக்கி…
-
- 0 replies
- 568 views
-
-
விக்னேஸ்வரன் எந்த இடத்தை நோக்கி நகர்கிறார்? முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் உரைகள் அடங்கிய, ‘நீதியரசர் பேசுகிறார்’ எனும் நூலின் முதலாவது தொகுதி, அண்மையில் (24) யாழ்ப்பாணத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டது. அந்நிகழ்வில், விசேட அதிதியாகக் கலந்து கொண்ட இரா.சம்பந்தன், நூலை வெளியிட்டு வைத்தார். யாழ்ப்பாணத்தில் கடந்த வருடம் நடைபெற்ற பத்திரிகை அறிமுக நிகழ்வொன்றில், இருவரும் கலந்து கொண்டிருந்தனர். அந்த மேடையும் அப்போது, அதி முக்கியத்துவத்துடன் நோக்கப்பட்டது. ஏனெனில், முரண்பாடுகள் முற்றிய நிலையில், முதலமைச்சர் பதவியிலிருந்து விக்னேஸ்வரனை நீக்க வேண்டும் என்று, தமிழரசுக் கட்சி தூக்கிய போர்க்கொடியை, நேரடியாகத் தலையிட்டு, அப்போதுதான்…
-
- 0 replies
- 568 views
-
-
தமிழர்கள் கற்றுக்கொள்ள வேண்டியவை! Posted on July 11, 2023 by தென்னவள் 13 0 இன்று ஒன்பதாம் திகதி. கடந்த ஆண்டு இதே நாளில் கோட்டாபய ராஜபக்சவை பதவியில் இருந்து துரத்துவதற்காக தன்னெழுச்சி போராட்டக்காரர்கள் அவருடைய மாளிகையை சுற்றி வளைத்தார்கள்.முடிவில் அவர் 13 ஆம் தேதி பதவியைத் துறந்தார்.கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து ஜூலை மாதம் வரையிலும் இதுபோன்ற ஒவ்வொரு ஒன்பதாம் திகதியும் ராஜபக்ச குடும்பத்துக்கு கெட்ட நாட்களாக,ஆபத்தான நாட்களாகக் காணப்பட்டன. எந்தக் குடும்பத்துக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை சிங்கள மக்கள் வழங்கினார்களோ, அதே குடும்பத்தை அதே சிங்கள மக்கள் அவர்களுடைய சொந்த ஊர்களில் இருந்து துரத்தியடித்தார்கள். இலங்கைத்தீவின் நவீன வரலாற்ற…
-
- 1 reply
- 568 views
-
-
இணக்க அரசியல் என்ற பெயரில் தமிழர்களின் நலன்களைப் பலி கொடுக்காமல், சர்வதேச அரசுகளின் நிலைப்பாடுகளிடையே அரசுகளின் நலன்களையும்;, தமிழர்களின் நலன்களையும் இணைக்கும் அரசதந்திரம் கொண்டு, தமிழ்த் தேசியத்தை தமது சொல்லாலும் செயலாலும் உண்மையாக வலுப்படுத்துக்கூடியர்களை சிறிலங்காவின் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்மக்கள் தமது பிரதிநிதிகளாக தேர்வு செய்யவேண்டும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.சிறிலங்காவின் நாடாளுமன்றத்தில் தமிழர் தேசிய பிரச்சனைக்கு தீர்வினைக் காண முடியாது என்ற போதும், அத் தளத்தினை தமிழர் தேசத்தின் சுதந்திர வேட்கையினை வெளிப்படுத்தும் ஒரு மேடையாக, களமாக, கருவியாகக் கையாளக் கூடிய வாய்ப்பை தமிழர் தேசம் முடிந்த அளவு பயன்படுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ள நாடுகடந்த த…
-
- 3 replies
- 568 views
- 1 follower
-
-
இலங்கை அரசும் சரி.. தமிழக அரசும் சரி.. மதுவினால்.. கொரோனா தொற்று அதிகரிக்கக் கூடிய ஆபத்தான சூழல் இருந்தும்.. மதுக்கடைகளை திறப்பது ஏன்..?!
-
- 0 replies
- 568 views
-