அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
பலம் இருந்தால் தான் இன்றைய உலகில் மதிப்பு இருப்பதாக, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கொழும்பு, வெள்ளவத்தையில், நடந்த மனோகணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணியின், தேர்தல் பரப்புரை கூட்டத்தில் நேற்று உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், கொழும்பில் வந்து தம்பி மனோ கணேசன் அவர்களின் கட்சிக்; கூட்டத்தில் பேசுவதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன். அரசியலே வேண்டாம் என்றிருந்த எனக்கு இப்பொழுது தான் அரசியல் சூடு பிடிக்கின்றது. அரசியல் மேடை என்பது ஒரு டெனிஸ் விளையாட்டு அரங்கம் போல. ஒருவர் அடிப்பதை மற்றவர் அடிப்பார். இருவரும் ஒரே பந்தைத்தான் அடிப்பார்கள். விடாமல் அடித்தால்த்தான் வெற்றி. அதேபோல் ஒர…
-
- 0 replies
- 587 views
-
-
நச்சு அரசியல் கலாசாரத்தின் எழுச்சி உலகளாவிய ஊடகப் பரப்பை, அண்மைக்காலத்தில் அவதானித்து வந்தவர்களுக்கு, “கடும்போக்கு வலதுசாரி அரசியலின் எழுச்சி” என்பது, அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட சொற்றொடராக இருக்குமென்பது தெரிந்திருக்கும். ஐக்கிய அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்ப் தொடக்கம், ஐக்கிய இராச்சியத்தில் பிரெக்சிற் (ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய இராச்சியம் விலகுதல்), பிரான்ஸிலும் ஜேர்மனியிலும் இன்னோரன்ன ஐரோப்பிய நாடுகளிலும் கடும்போக்கு வலதுசாரிகளின் எழுச்சி, இந்தியாவின் நரேந்திர மோடியின் கட்சிக்கு அதிகரித்துவரும் செல்வாக்கு என, கடும்போக்கு வலதுசாரி அரசியலின் செல்வாக்கு அதிகரிப்புக்கான உதாரணங்கள், தாராளமாக இருக்கின்றன. …
-
- 0 replies
- 429 views
-
-
திமுக தனித்துப் போட்டியிட்டு ஒரு சில தொகுதிகளில் வென்றாலும் அரசமைக்கும் கட்சியுடன் ஒட்டித் தன மக்கள் பேரப்பிள்ளைகளுக்கு மந்திரி பதவி கொடுக்கலாம் என்று கருணாநிதி கண்ட கனவில் மண் விழுந்துவிட்டது. அம்மா தன் சொந்த வாக்கு வங்கியை நம்பிக் களமிறங்கி பெருவெற்றியைப் பெற்றுள்ளார். பா ஜ கவின் பெருவெற்றி அவரின் பிரதமர் கனவில் பின்னடைவை ஏற்படுத்தியிருந்தாலும் மாநில அளவில் தன் செல்வாக்கை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார். பா ஜ கவின் வெற்றியைக் கணித்துக்க் கொண்ட தமிழ் நாட்டின் உதிரிக் கட்சிகள் அம்மாவின் பலத்தை சரியாகக் கணிக்கத் தவறிவிட்டார்கள் வைகோ என்றும்போல தனது கூட்டணியைத் தவறாக அமைத்துக்கொள்ளவில்லை. பா ஜ க வின் கூட்டணியில் வைகோ தோல்வியடைந்தாலும் நாடளாவிய ரீதியில் அவருடைய கூட்…
-
- 0 replies
- 1.1k views
-
-
இந்தியாவிற்கு அருகில் ஒரு கிளர்ச்சியா? - யதீந்திரா ராஜபக்சக்களை அதிகாரத்திலிருந்து அகற்றுதல் என்னும் இலக்குடன் ஆரம்பிக்கப்பட்ட தென்னிலங்கை கிளர்ச்சியானது, சற்றும் எதிர்பாராத வகையில் உத்வேகத்துடன் தொடர்கின்றது. கிளர்சியாளர்களின் முதலாவது இலக்கு நிறைவேறிவிட்டது. ராஜபக்சக்களின் ராம்ராஜ்யத்தை சரித்துவிட்டனர். கோட்டபாயவின் வெளியேற்றத்துடன் ராஜபக்சக்களின் ஆட்டம் முடிவுக்கு வந்துவிட்டது. ஆனாலும் கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்தும் முன்னேறிக் கொண்டிருக்கின்றனர். முதலில் கோட்டபாய ராஜபக்சவை இலக்கு வைத்து கிளர்ச்சியை ஒருங்கிணைத்தவர்கள் தற்போது, ரணில் விக்கிரமசிங்கவை இலக்கு வைத்து கிளர்ச்சியை தீவிரப்படுத்திவருகின்றனர். இதன் ஆரம்பக்கட்டமாகவே பிரதமர் அலுவ…
-
- 0 replies
- 408 views
-
-
பி.பி.சி. உலக சேவையைச் சேர்ந்த நண்பர் ஒருவர் கிழக்கிலங்கையில் தமிழ் முஸ்லிம் உறவுகள் குறித்த ஒரு நிகழ்ச்சிக்காக கிழக்கில் முஸ்லிம்களைப் பேட்டி கண்டிருந்தார். பல தரப்பட்ட மட்டங்களிலும் அவர் முஸ்லிம்களுடன் உரையாடியிருந்தார். இது தொடர்பில் யாழ்ப்பாணத்திற்கும் வந்தபோது அவர் சொன்னார் ''முஸ்லிம்கள் மிகவும் அரசியல் மயப்படுத்தப்பட்ட சமூகமாகக் காணப்படுகிறார்கள்... படித்தவர்கள், படிக்காதவர்கள் என்று எல்லாத் தரப்பினருடனும் நான் கதைத்தேன். தமது சமூகத்தைப் பாதிக்கக்கூடிய விவகாரஙகளில் எதைக் கதைக்க வேண்டும் எதைக் கதைக்கக்கூடாது என்பதில் அவர்கள் மிகவும் அரசியல் மயப்பட்டவர்களாகக் காணப்படுகின்றார்கள்...' என்று. அண்மையில் அளுத்கம மற்றும் பேருவளையில் நடந்த சம்பவங்களின் பின், இணையப் பரப்ப…
-
- 0 replies
- 643 views
-
-
ஒன்று படுமா தமிழ்த்தலைமைகள் ? 2000ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில், தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளை ஒன்றுபடுத்துவதற்கான அவசியம் எழுந்தது போன்ற சூழல் இப்போது வடக்கில் மீண்டும் தோன்றியிருப்பதான கருத்து வலுவடைந்திருக்கிறது. வடக்கு, கிழக்கில் ஓரிரண்டு தவிர, மற்றெல்லா உள்ளூராட்சி சபைகளிலும் யாருக்கும் பெரும்பான்மை பலமில்லாத ஊசல் நிலை ஒன்று தோன்றியிருப்பதும், தென்னிலங்கையில் மீண்டும் மஹிந்த ராஜபக் ஷ பலத்தை வெளிப்படுத்தியிருப்பதும் இத்தகைய கருத்து வலுப்பெற்றமைக்கு முக்கிய காரணம். தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் தமக்கிடையில் மோதிக் கொள்ளத் தொடங்கியுள்ளதன் விளைவாக, சிங்களத் தேசியவாத…
-
- 2 replies
- 383 views
-
-
பன்மைக்கு சவாலாக விளங்கும் ஒருமை இலங்கையின் வரலாற்றில் மீண்டும் ஒரு தடவை கசப்பான நிகழ்வுகள் இப்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. முஸ்லிம்களுக்கு எதிராக முடுக்கிவிடப்பட்டுள்ள இனவாத சிந்தனைகள் நாட்டின் ஐக்கியத்தை கேள்விக்குறியாக்கி இருக்கின்றன. நல்லாட்சிக்கு சவாலாக விளங்குகின்ற இத்தகைய நிகழ்வுகளின் காரணமாக நாடு பதற்றமடைந்திருக்கின்றது. ஏற்கனவே இந்தநாட்டில் விதைக்கப்பட்ட இனவாதம் இப்போது விருட்சமாக வளர்ந்து பல்வேறு சிக்கல்களையும் தோற்றுவித்திருக்கின்றன. இந்நிலையில் சிறுபான்மையினரின் இருப்பு மற்றும் எதிர்காலம் என்பன தொடர்பில் இப்போது சிந்திக்க வேண்டிய ஒரு நிலைமையும் மேலெழுந்…
-
- 0 replies
- 6.1k views
-
-
மன்னார் வளைகுடா பகுதியில் எண்ணெய் அகழ்வுப் பணிக்காக சீனாவையும் சிறிலங்கா அரசாங்கம் அனுமதித்திருப்பதன் மூலம் இந்தியாவின் இறைமைக்கு சிறிலங்காவால் பாரிய நெருக்கடி கொடுக்கப்பட்டுள்ளது. மன்னார் பிரதேசத்தில் 2 ப்ளொக்குகளில் இந்தியாவும் சீனாவும் எண்ணெய் அகழ்வுப் பணிகளை மேற்கொள்ளலாம் என்று சிறிலங்கா அமைச்சரவை தற்போது ஒப்புதல் அளித்துள்ளது. தெற்காசிய பிராந்தியத்தின் இரு பெரும் போட்டி வல்லரசுகளாக சீனாவும் இந்தியாவும் உள்ளன. இராஜதந்திர களத்தில் மோதுநர்களாக உள்ள இந்த இரு வல்லரசுகளும் தங்களது ஆளுமையையும் வலுவையும் வெளிக்காட்டுவதற்கான வியூகங்களை தொடர்ச்சியாக கையாண்டு வருகின்றன. இப்படியான நிலையில் மன்னார் வளைகுடாவில் சீனாவை சிறிலங்கா இறக்கிவிட்டிருப்பது என்பது இந்த…
-
- 0 replies
- 1.3k views
-
-
ஐ.நாவின் மனிதஉரிமைச் செயற்பாடுகளைப் பலவீனப்படுத்தும் ரஷ்யா, சீனா அனைத்துலக நாடுகளில் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கான ஐக்கிய நாடுகள் சபையால் முன்னெடுக்கப்படும் முயற்சிகளை பலவீனப்படுத்தும் நடவடிக்கைகளை சீனா மற்றும் ரஸ்யா ஆகிய இரு நாடுகளும் வெற்றிகரமாக முன்னெடுத்து வருவதாக இராஜதந்திரிகள் மற்றும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர். சீனா மற்றும் ரஸ்யா ஆகிய இரு நாடுகளும் இணைந்து மனித உரிமைகள் கண்காணிப்பாளர்களுக்கான நிதி வழங்கலைத் தடுப்பதற்காக 5வது ஆணைக்குழு எனக் கூறப்படும் ஐ.நா சபையின் வரவு செலவுத் திட்டக் குழுவைப் பயன்படுத்தியுள்ளன. ஐ.நா செயலாளர் நாயகத்தின் அலுவலகத்தில் மனித உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கான உயர் அதிகாரிக்கான நிதியை நிறுத்துவதற்…
-
- 0 replies
- 755 views
-
-
எப்போதுதான் சாத்தியப்படும் மனிதாபிமானம் என்கிற நல்லிணக்கம்? எப்போதுதான் சாத்தியப்படும் மனிதாபிமானம் என்கிற நல்லிணக்கம்? மனித உரிமை மீறல்கள் உலகின் எல்லாப் பகுதிகளிலும் இடம்பெறுகின்றன.இதனைப் பல்வேறுபட்ட ஆய்வுத் தகவல்கள் வெளிப்படுத்தி நிற்கின்றன.குறிப்பாக இந்தப் பிரச்சினையை விசேட கவனத்துக்குரிய பேசு பொருளாக கொள்வதுடன், அது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு அனைத்து அரசுகளும் அக்கறை கொள்வது அவதானத்துக்குரியது. இது குறித்த…
-
- 0 replies
- 395 views
-
-
ஏற்றத்தாழ்வும் அரசியல் நெருக்கடியும் சிவப்புக் குறிப்புகள் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் காரணமாக ஏற்பட்ட விளைவுகள், அரசியல் நெருக்கடியாகத் தொடர்ந்த வண்ணமுள்ளன. முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை, நம்பிக்கையில்லாப் பிரேரணை, அதன் தோல்வி, ஆகியன, ஆட்சியமைப்பதற்குக் கடினமாக உணரும் அரசாங்கமொன்றின், சமீபத்திய வெளிப்பாடுகளாகும். அரசியல் சக்திகளின் மாற்றங்களுக்கும் அரசாங்கத்துக்குள் மாறி மாறிக் குறை சொல்லலுக்கும் நடுவில், இவ்வாண்டு பெப்ரவரியில், அரசாங்கத்துக்கு எதிரான வாக்குகள் அளிக்கப்பட்டமைக்குக் காரணமாக அமைந்த பொருளாதாரப் பிரச்சினைகள் அடையாளங்காணப்படுகின்றன. வடக்கில், தமிழ்த் த…
-
- 0 replies
- 360 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சிதைக்கும் தேவை இலங்கை ஆட்சியாளர்களுக்கு வரவர அதிகரித்துக் கொண்டேபோகிறது. [Tuesday 2014-10-07 21:00] இலங்கை அரசியலில் மஹிந்தராஜபக்ஷவுக்கு ஏனையோருக்கு இல்லாத சில தனித்திறமைகள் உண்டு. ஏனைய கட்சிகளைப் பதவிகளைக் காட்டி உடைத்து சின்னாபின்னப்படுத்துவதிலும் சிறுபான்மை இனங்களின் ஐக்கியத்தைச் சீரழித்து அவற்றைப் பலவீனப்படுத்துவதிலும் அவருக்கு நிகர் அவரே தான். அவ்வகையில் ஐ.தே.கட்சி, ஜே.வி.பி என்பவற்றை உடைத்து அவர்களின் அரசியல் பலத்தை நிர்மூலமாக்கினார். முஸ்லிம் கட்சிகளையும், மலையகத் தலைமைகளையும் ஐக்கியப்பட விடாது தங்களுக்குள்ளேயே மோதவைத்து அனைவரையுமே தனக்கு ஆதரவு தரும் நிலையை ஏற்படுத்தினார். ஆனால் அவரின் இந்தச் சதியை தமிழ் …
-
- 0 replies
- 727 views
-
-
வட பகுதி நினைவேந்தல்களும் தென் பகுதி அச்சங்களும் சுகாதார அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான டொக்டர் ராஜித சேனாரத்ன, முள்ளிவாய்க்கால் நினைவேந்தலைப் பற்றி, ஊடகவியலாளர் மாநாடொன்றின் போது கூறிய ஒரு கருத்து, தெற்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தக் கருத்துக்கு எதிராக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, நாட்டில் பல இடங்களில் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி வருகிறது. முள்ளிவாய்க்காலில், போரில் கொல்லப்பட்டவர்கள் நினைவு கூருவது தொடர்பாக, ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இந்தக் கருத்தை வெளியிட்டு இருந்தார். “அவ்வாறு போரில் கொல்லப்பட்டவர…
-
- 0 replies
- 547 views
-
-
விக்கி: நம்பிக்கைகளை சிதைக்கும் அவசர நாயகன் புருஜோத்தமன் தங்கமயில் “கைகளின் இரத்தக் கறை உள்ளவர்களுடன் என்னை என்னால் இணைத்துப் பார்க்க முடியாது; தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றில் இணைய வேண்டுமாக இருந்தால் தமிழரசுக் கட்சியில் இணைவேன்...” என்று சி.வி.விக்னேஸ்வரன், வடக்கு மாகாண முதலமைச்சராக பதவியேற்ற சில மாதங்களில் தெரிவித்த விடயம் பெரும் சர்ச்சையானது. இரா.சம்பந்தன் தலைமையில் இடம்பெற்ற கூட்டமைப்பின் பங்காளிக் கட்சித் தலைவர்கள், முக்கியஸ்தர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே விக்னேஸ்வரன் மேற்கண்டவாறு கூறினார். அப்போது, கூட்டமைப்பின் பேச்சாளராக ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் தலைவரான சுரேஷ் பிரேமசந்திரன் இருந்தார். அவர், விக்னேஸ…
-
- 2 replies
- 1.1k views
-
-
இலங்கையின் பேரினவாத பரிணாம வளர்ச்சியில் தற்போதைய ஜாதிக ஹெல உறுமய (ஜா.ஹெ.உ) வந்தடைந்துள்ள பரிமாணத்தை உற்றுநோக்குவது இலங்கையின் இனப்பிரச்சினை குறித்த ஆய்வுகளுக்கு அத்தியாவசியமானது. வரலாற்றில் பேரினவாத அமைப்புகள் வெவ்வேறு முகமூடிகளுடன் வந்து அரசியல் அழுத்தக்குழுக்களாக இயங்கி அரசை இனவாத தீர்மானங்கள் மேற்கொள்வதற்கும், இனவாதப் பாதையில் வழிநடத்துவதற்கும் பின்னணியில் இருந்து வந்திருக்கின்றன. சிறுபான்மை இனங்களுக்கும், மதத்தவர்களுக்கும் எதிரான அரசியல் தீர்மானங்கள், சட்டங்கள், சட்ட அமுலாக்கம், மட்டுமன்றி இதுவரை நிகழ்த்தப்பட்ட இனக்கலவரங்களுக்கும், யுத்தத்தத்தின் பின்னணியிலும் இந்த சக்திகளின் பாத்திரம் விசாலமானது. இனத்தின் பேரால் மட்டுமல்ல கூடவே பௌத்த மதத்தையும் சமாந்தரமாக பயன்பட…
-
- 1 reply
- 736 views
-
-
பித்தலாட்டங்களும் கற்பனாவாதமும் மலிந்து கிடக்கும் தமிழர் அரசியல்... 08 நவம்பர் 2014 -குளோபல் தமிழ் செய்திகளிற்காக இனியவன்- எமது இனத்தின் இன்றைய சாபக்கேடு என்னவெனில், உண்மைநிலை மறைக்கப்பட்டு மறைக்கப்பட்டே மறந்து போன நிலை தான். உண்மைநிலையை மறந்தவர்கள் அமைப்புக்களின் தலைமைகளாகவும் முன்னணி செயற்பாட்டாளர்களாகவும் காகிதப்புலிகளாயும் தமிழர் அரசியல் கருத்து வெளியை ஆக்கிரமித்து நிற்பது, மூடர்கூடம் என தமிழர் அரசியல்வெளி குறிப்பிடப்பட வழி சமைக்கப்போகின்றது. சரி. மறக்கப்பட்டுக் கொண்டிருக்கும் எமது நிலையை இயன்றளவு சுருங்கக்கூறின் நாம் சிங்கள பௌத்த பேரினவாத அடக்குமுறையை எதிர்த்து அரசியல் வழியில் போராடத் தொடங்கி, பின் அந்த மென்முறை வழி சிங்கள கொடும் பேரினவாதத்திடமிருந்து…
-
- 0 replies
- 607 views
-
-
தேர்தல்கள் ஒத்திவைப்பு; முறைமை மாற்றத்துக்கான தேவையை தடுத்துவிடாது! Dr. Jehan Perera on March 2, 2023 Photo, THE HINDU உள்ளூராட்சி தேர்தல்கள் மிகவும் சாதுரியமான முறையில் ஒத்திவைக்கப்பட்டுவிட்டதாக அரசாங்க ஆதரவாளர்கள் திருப்திப்படுகிறார்கள் போன்று தெரிகிறது. ஒத்திவைக்கப்படுவதற்கு தேர்தல் ஒன்று இருக்கவேண்டும், அவ்வாறு எதுவும் இல்லை என்று அவர்கள் நிராகரிக்கிறார்கள். உள்ளூராட்சி தேர்தல்கள் தினமாக மார்ச் 9ஆம் திகதியை அறிவித்த கடிதத்தில் தேர்தல் ஆணைக்குழுவின் ஐந்து உறுப்பினர்களும் கைச்சாத்திட்டிருக்கின்ற போதிலும் கூட அந்தத் திகதி குறித்து தீர்மானிப்பதற்கு கூட்டப்பட்ட கூட்டத்தின் பதிவுகளை வைத்திருக்கவில்லை என்றும் கூட்டத்தில் …
-
- 0 replies
- 746 views
-
-
சவால்களை எதிர்நோக்கும் முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் இலங்கையில் தமிழரின் மரபுரிமை உட்பட்ட சுயநிர்ணய உரிமைக்காகப் போராடிய இயக்கங்களில் தனித்துவமானதொரு பேரியக்கமாகும். புலிகள் இயக்கம் ஆரம்பித்த காலம் தொடக்கம், இன்றுவரை இலங்கைத் தமிழர்கள் உரிமை, அரசியல், சகவாழ்வு, சமூகம் என்ற சகல சந்தர்ப்பங்களிலும் அவர்களது பெயர், பேச்சுக்குப் பேச்சும், வரிக்கு வரியும் உச்சரிக்கப்படாமல் இல்லை. ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும், வேண்டப்பட்ட விடுதலைக்காக…
-
- 0 replies
- 573 views
-
-
தூண்டில் இரைகள் கே.எல்.ரி.யுதாஜித் / இன்னமும் நாம் ஒற்றுமைப்படவில்லை; வாய்ப்பேச்சிலும் சரி, செயற்பாடுகளிலும் சரி நமக்குள் அடிக்கடி அடிபுடிகள்தான் நடந்து கொண்டிருக்கின்றன. எம்மை நம்பி வாக்களித்த மக்கள் எப்போக்கில் போனாலும் சரி, எக்கேடு கெட்டாலும் சரி, நாங்கள் அடுத்துவரும் தேர்தலைப் பற்றியே சிந்திப்போம் என்பதுதான், பெருமளவான அரசியல்வாதிகளின் மனஓட்டமாக இருக்கிறது. விலைவாசி ஏறிக்கொண்டிருக்கிறது. பஸ், ஓட்டோ, இனி ரயில்க் கட்டணமும் அதிகரிக்கப்படுகிறது. உணவகங்கள் எல்லாமே, தமது உற்பத்திகளுக்கு விலைகளை உயர்த்திவிட்டன. இந்த நிலையில் மாகாண சபைத் தேர்தல் முதலில் நடக்குமா, நாடாளுமன்றத் தேர்தல் முதலில் நடக்குமா, ஜனாதிபத்தித் தேர்தல் எப்ப…
-
- 0 replies
- 585 views
-
-
விஜயகலா கைது ஒரு அரசியல் நாடகமா? இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சராகப் பதவி வகித்த ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் கடந்த யூலை மாதம் 2 ஆம் திகதி இடம்பெற்ற இலங்கை அரசாங்கத்தின் நிகழ்வொன்றின்போது விடுதலைப் புலிகள் மீண்டும் உருவாக வேண்டும் என கூறியிருந்தார். இதனால் இலங்கைக் குற்றப்புலனாய்வுப் பிரிவிவு நடத்திய பல கட்ட விசாரணைகளின் பின்னர் இன்று திங்கட்கிழமை முற்பகல் கைதுசெய்யப்பட்டார். இந்த விவகாரம் குறித்து வாக்குமூலம் வழங்குவதற்காக இலங்கைப் பொலிஸ் திட்டமிட்ட குற்றத…
-
- 0 replies
- 770 views
-
-
பலஸ்தீன இஸ்ரேல் யுத்தம்: தமிழர்கள் யாருடைய பக்கம்? - நிலாந்தன் தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டம் வேகமெடுக்கத் தொடங்கியபோது 1970களின் இறுதியாண்டுகளிலும், 1980களின் முற்கூறிலும், தமிழ் இயக்கங்களான ஈரோஸ், ஈ.பி.ஆர்.எல்.எப், புளொட் போன்றன பாலஸ்தீனத்தில் படைதுறைப் பயிற்சிகளைப் பெற்றன. அவ்வாறு பயிற்சி பெற்றவர்கள் தாயகத்தில் “பிஎல்ஓ ரெய்னிஸ்” என்று அழைக்கப்பட்டார்கள். அவர்களிற் பலர் அந்த இயக்கங்களில் முக்கிய பொறுப்புகளை வகித்திருக்கிறார்கள். அவர்களிற் சிலர்-சுரேஷ் பிரேமச்சந்திரன், டக்ளஸ் தேவானந்தா போன்றவர்கள்- இப்பொழுதும் தமிழ் அரசியலரங்கில் செயற்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஆயுதப் போராட்டத்தின் ஆரம்பக் காலகட்டங்களில் பலஸ்தீனம் தமிழ் மக்களின் நட்பு சக்தியாக இருந்தது. அந்…
-
- 1 reply
- 713 views
- 1 follower
-
-
திடீரென்று போர் வெடிக்கக் கூடிய இரு மையங்கள் உலகில் இருக்கின்றன. ஒன்று காஷ்மீர் அடுத்தது கொரியத் தீபகற்பம். காஷ்மீர் பிரச்சனை 1947ல் ஆரம்பித்து 64 வருடம் சென்றாலும் இன்று வரை தொடர்கிறது.1950ல் ஆரம்பித்த வடக்குத் தெற்கு கொரிய தீபகற்ப முறுகல் 61 வருடம் சென்றும் இற்றை வரை தொடர்கிறது. 1947ல் சுதந்திரம் வழங்கியதோடு இந்தியா பாக்கிஸ்தான் என்ற இரு நாடுகளைப் பிரிட்டிசார் உருவாக்கினர். இந்திய உப கண்டம் முழுமையும் இருந்த 562 சிற்றரசுகள், ஜாமீன்கள், குறுநில ஆட்சிப்புலங்கள் விரும்பியவாறு இந்தியா, பாக்கிஸ்தானுடன் இணையலாம் என்று பிரிட்டிசார் ஆலோசனை கூறினர். அதன்படியே அவை இணைந்தன. இந்தியாவோடு இணைய மறுத்த ஜதரபாத் சமஸ்தானத்தை இந்தியா ராணுவ நடவடிக்கை மூலம் தன்னோடு இணைத்துக் கொண்…
-
- 1 reply
- 1k views
-
-
Published By: VISHNU 08 MAR, 2024 | 01:37 AM கடந்த காலத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வகிபாகத்தை இந்நாட்டு கேலிச்சித்திரக் கலைஞர்கள் சித்தரித்த விதத்தை பாராளுமன்ற உறுப்பினர் வஜீர அபேவர்தன “Press Vs. Prez” என்ற நூலாக வௌியிட்டார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் வியாழக்கிழமை (07) கொழும்பு நெலும் பொக்குண கலையரங்கத்தில் இந்த நூல் வௌியிடப்பட்டது. இவ்வாறான தொகுப்புகள் ஜனநாயகத்தின் ஒரு அங்கமாகும் எனவும், அதனால் நாட்டில் சுதந்திரம் நிலைநாட்டப்பட்டுள்ளமையை உறுதி செய்ய முடிந்துள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார் சர்வாதிகார ஆட்சியில் இவ்வாறான படைப்புகள் ஒருபோதும் பிறக்காது என்றும், குற்றவியல் அவதூற…
-
- 0 replies
- 516 views
- 1 follower
-
-
முடிவுறாத அரசியல் போரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் இலக்கும்? - யதீந்திரா ஆட்சி மாற்றத்தின் பின்னர் இடம்பெறவுள்ள ஒரு தேர்தல் என்னும் வகையில், நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலானது தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்பில் உள்ள அதிருப்திகளை காண்பிக்க இது பொருத்தமான தருணமல்ல. இவ்வாறு நான் குறிப்பிடும் போது, இது ஒரு வழமையான கதைசொல்லல் போன்று தெரியக் கூடும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்த வேண்டும் என்னும் அடிப்படையில் விமர்சனங்களை முன்வைத்து வந்த நானே, இவ்வாறு கூறும் போது இதனை சில வாசகர்கள் ஆச்சரியமாகவும் பார்க்கலாம். ஆனால் இங்கு விளங்கிக்கொள்ள வேண்டிய விடயமோ வேறு. அதாவது, எனது கருத்து…
-
- 0 replies
- 374 views
-
-
15 வருடங்கள் கடந்த போதிலும் முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்கான தீர்வு இதுவரை கிடைக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் (M. A. Sumanthiran) தெரிவித்துள்ளார். 15 ஆவது முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை வாரத்தின் முதல் நாளான நேற்று(12.05.2024) இலங்கை தமிழரசு கட்சியின் பருத்தித்துறை தொகுதியினரால் வல்வெட்டு வன்னிச்சி அம்மன் ஆலயத்தில் சிறப்பு ஆத்ம சாந்தி பிரார்த்தனைகள் இடம்பெற்றுள்ளன. இந்த பூஜை வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இந்நிலையில் முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலையின் வாரம் ஆரம்பமாகின்றது. யுத்தத்தின் கடைசி நாட்களில் எமது மக்கள் கஞ்சிக்கு கூட பறிதவிக்கின்ற நிலை காணப்பட்டது எனவும்…
-
-
- 3 replies
- 619 views
-