அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9226 topics in this forum
-
இலங்கையில் சீனாவின் செல்வாக்கு; கட்டுப்படுத்த முடியாத நிலையில் அமெரிக்கா Maatram Translation on November 6, 2020 பட மூலம், South China Morning Post தெற்காசியா மற்றும் தென்கிழக்காசியாவிற்கான (இலங்கை, இந்தியா, மாலைத்தீவு, இந்தோனேசியா, வியட்னாம்) அமெரிக்க இராஜாங்க அமைச்சர் மைக் பொம்பியோவின் விஜயத்தின் பிரதான குறிக்கோள் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் குடியரசுக் கட்சிக்கான ஆதரவை அதிகரிப்பதற்காகவே ஆகும். அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் பிரசாரங்கள் உச்சகட்டத்தில் இருந்த நேரத்தில் அவரது இந்த விஜயம் இடம்பெற்றமை – இதைத் தெளிவாகக் காட்டுகின்றமை, சீனாவிற்கு எதிரான கடுமையான தெற்கு/ தென்கிழக்காசிய பிரதிபலிப்பொன்று அமெரிக்க வாக்காளர்க…
-
- 1 reply
- 524 views
-
-
இந்த அன்ரி தமிழ்நாட்டில் ஏதிலிகளாக வாழும் எம்மவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் மற்றும் நடக்கும் சித்திரவதைகள் பற்றி நல்லா எடுத்தியம்பிறா!
-
- 4 replies
- 524 views
- 1 follower
-
-
இலங்கையின் வடமாகாணத் தேர்தல், அபிவிருத்திக்கும் அரசியல் உரிமைக்கும் இடையிலான போட்டியாகத் திகழ்கின்றது. யதார்த்தங்கள் குறைவு, எதிர்பார்ப்புகள் பெரிது இந்த மக்களிடம் இந்தத் தேர்தலில் அபிவிருத்தியை முன்னிறுத்தி ஆளும் கூட்டணியாகிய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி களத்தில் இறங்கியிருக்கின்றது. அதேநேரம் அரசியல் உரிமையை முதன்மைப்படுத்தி தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பிரசாரம் செய்து வருகின்றது. வடமாகாண சபை என்பது, 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் கீழ் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டதாகும். இதற்குப் போதிய அதிகாரங்களில்லை.தமிழ் மக்கள் எதிர்நோக்கியிருக்கின்ற இனப்பிரச்சினைக்கு இது தீர்வாகமாட்டாது என்பது தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடாகும். பிளவுபட்டுள்ள முஸ்லிம்…
-
- 0 replies
- 523 views
-
-
இலங்கை அரசு சர்வதேச இனப்படுகொலை விசாரணையைத் தவிர்ப்பதற்காக பல்வேறு சதித்திட்டங்களைத் தீட்டி அதைச் செயல்படுத்தி வருகிறது. இதற்காகத்தான் ”முன்னாள் விடுதலைப்புலி கைது?” என்ற செய்தியை இலங்கை அரசு சமீப காலமாக பரப்பி வருகிறது. அதன் நோக்கம் என்ன? அதன் பின்னணியில் இருக்கும் மேற்குலக சதி என்ன? அவைதான் அதிர்ச்சி தரும் செய்திகள். இலங்கையில் நடந்த போர்க்குற்றங்களுக்கு தன்னைத் தானே சரி செய்துகொள்ள கொடுக்கப்படும் வாய்பாக ஐ.நா தீர்மானம் உருவாக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. குறிப்பாக, இலங்கை தனது சட்டங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். நீதிமன்றம் குறித்தான நம்பகத்தன்மையைக் கொண்டு வரவேண்டும். தமிழர்களோடு நல்லிணக்கத்தைப் பேண வேண்டும் என்பன ப…
-
- 0 replies
- 523 views
-
-
தமிழரசுக் கட்சி எங்கே நிற்கிறது - கூட்டமைப்பு எங்கே செல்கிறது? விக்னேஸ்வரனின் அரசியல் எதிர்காலம் எவ்வாறு அமையப்போகிறது?? - யதீந்திரா முதல் கோணல் முற்றிலும் கோணல் என்று ஒரு தமிழ் கருத்துண்டு. வடக்கு மாகாணசபை குறித்து சிந்திக்கும் போது மேற்படி கருத்தே நினைவுக்கு வருகிறது. ஏனெனில், அந்தளவிற்கு குழப்பங்களினதும், உள் முரண்பாடுகளினதும் சாட்சியாக தற்போது வடக்கு மாகாணசபை காட்சியளிக்கின்றது. இத்தகைய குழப்பங்களையும், முரண்பாடுகளையும் கடந்து செல்லவேண்டிய நிலையில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் காணப்படுகின்றார். அவரால் அது முடியுமா? விடுதலைப் புலிகள் தமிழர் அரசியல் அரங்கிலிருந்து அகற்றப்பட்ட பின்னர், தமிழ் மக்களின் அரசியலை கையாளும் பொறுப்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வசமானது. கூட்டம…
-
- 0 replies
- 523 views
-
-
சிறிதரன் எதிர்நோக்கும் சவால்கள் எம்.எஸ்.எம். ஐயூப் தமிழர்களின் அரசியலைப் பற்றிய சில தென் பகுதி ஊடகவியலாளர்களின் அறிவு எந்தளவு என்பதை அவர்கள் இலங்கை தமிழ் அரசு கடசியின் புதிய தலைவர் தெரிவைப் பற்றி கடந்த 21 ஆம் திகதி எவ்வாறு அறிக்கையிட்டார்கள் என்பதன் மூலம் தெரிகிறது. அவர்கள் தமிழ்த் தேசியகடக கூட்டமைப்பையும் இலங்கை தமிழ் அரசு கட்சியையும் குழப்பிக் கொண்டே செய்தியை வெளியிட்டு இருந்தார்கள். 1949 ஆம் ஆண்டு அரம்பிக்கப்பட்டு சொற்ப காலம் சென்றதிலிருந்து இலங்கையில் பிரதான தமிழ்க் கட்சியாக இருக்கும் தமிழரசு கட்சி இலங்கை வரலாற்றில் முக்கிய திருப்பங்களை ஏற்படுத்துவதில் முக்கிய பங்காற்றியிருக்கும் நிலையிலேயே சில தென்பகுதி ஊடகவியலாளர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவ…
-
- 0 replies
- 523 views
-
-
மாலி: ஓநாய் அழுத கதை ஆடு நனைகிறதென்று ஓநாய் அழுத கதைகள் ஏராளம். உலக அரசியலிலும் இக்கதைகள் தொடர்ந்தும் அரங்கேறுகின்றன. ஓநாய்களின் மனிதாபிமானம் பற்றிய புகழுரைகளை, எல்லாவிடங்களிலும் கேட்கக் கிடைக்கிறது. ஆடுகள் மீது அவை காட்டும் அக்கறை, உயர் விழுமியங்களின் பாற்பட்டது என ஊடகங்கள் எழுத எழுத, அதைக் கேள்வியின்றி நம்பப் பழக்கப்பட்டிருக்கிறோம். அவ்வளவில், ஓநாய்கள் வெற்றிபெற்றுள்ளன. ஆடுகள், ஓநாயை நட்புப் பிடித்தால், ஏனைய கொடிய விலங்குகளில் இருந்து தப்பிக்கலாம் என்ற அபத்தங்களையும் கேட்கும் சூழலிலேயே நாம் வாழ்கின்றோம் என்பது, துயரம் நிறைந்த உண்மை. அண்மையில் பிரான்ஸின் ஜனாதிபதியாகப் பதவியேற்ற இமான…
-
- 0 replies
- 523 views
-
-
எதிர்ப்பு அரசியலும் இரட்டை வேடமும் எதிர்ப்பு அரசியலும் தமிழ்த் தேசிய அரசியல் தலைமைகளின் இரட்டை வேடமும் இம்முறை இடம்பெற்ற வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் விக்கினேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் நழுவியிருந்தன. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மட்டும் எதிர்த்து வாக்களித்திருந்தது. ஏற்கனவே பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டு வாக்கெடுப்பின் போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும், ரெலோவும் எதிர்த்து வாக்களித்து இருந்தன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வாக்களிக்காமல் நழுவிச் சென்றிருந்தனர். இந்த விடயம் தமிழ் மக்கள் மத்தியில் பலத்த அதிருப்தியினை ஏற்படுத்தியுள்ளது. …
-
- 0 replies
- 523 views
-
-
o Siritharan MP. நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனுக்கு நண்பரே . தங்களது நிலைபாட்டின் உறுதியிலேயே தமிழ் அரசியல் கைதிகளின் இரத்தக் கண்ணீர் துடைக்கப்படுகிற விதி பிணைக்கபட்டுள்ளது என்பதை ஒருபோதும் மறக்க வேண்டாம். ஏற்கனவே கையொப்பமிட்டிருந்தாலும் நிபந்தனையை இணைக்காவிட்டால் திரும்ப பெற்றுவிடுங்கள். . இன்றைய அரசியல் சிக்கலில் முள்ளிவாய்க்கால மகிந்தவை எதிர்த்து வாகளிப்பது மட்டுமே மட்டுமே ஏற்றுக்கொள்ளபட முடியும். மற்றும்படி அதிபர் சிறீசேன ரணில் மோதலில் நிபந்தனையற்ற ஆதரவு தமிழ் மக்களின் நலனுக்கு எதிரான துரோகச் செயலாகும். கடந்த கால அரசியலில் காணி விடுப்பு கைதிகள் விடுதலை போன்ற விடயங்களில் சிறிசேனவைவிடவும் ரணில் கடும்போக்காளராக இருந்தார். இதை எப்படி மறப்பது? இதை எப்படி மன்னிப்ப…
-
- 0 replies
- 523 views
-
-
முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு யார் காரணம்? சிறிலங்காவில் 1983ல் இடம்பெற்ற ‘கறுப்பு ஜூலை’ கலவரத்தின் போது சிறிலங்கா அரசாங்கத்தால் தலைமை தாங்கப்பட்ட சிங்களக் காடையர்கள் மற்றும் சிங்கள அடிவருடிகளால் பல ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். அனைத்துலக சமூகத்தின் அழுத்தங்கள் காரணமாக இன மோதல்களைக் கைவிட்டு நாட்டில் அமைதியை ஏற்படுத்த வேண்டிய நிலை சிறிலங்கா அரசாங்கத்திற்கு ஏற்பட்டது. நாட்டில் யுத்தம் முடிவடைந்த பின்னரும் 2014ல், அளுத்கம கலவரம் இடம்பெற்றது. சிங்களக் காடையர்களால் மேற்கொள்ளப்பட்ட இக்கலவரத்தில் சில முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். சிங்கள பௌத்த அதிகாரத்துவத்தை முன்னுரிமைப்படுத்தி மகிந்த ராஜபக்ச குடும்பம் நாட்டை ஆட்சி செய்த நிலைய…
-
- 0 replies
- 523 views
-
-
பொதுவேட்பாளர் கண்டுபிடிப்பு: சிறுவர்களின் குரும்பட்டித்தேர்! August 15, 2024 — கருணாகரன் — தமிழ்ப்பொது வேட்பாளராக(?) ஒருவரை (பா.அரியநேத்திரனை) க் கண்டு பிடித்ததைப் பெருஞ்சாதனையாக தமிழ்ப்பொது வேட்பாளருக்கான(?) பொதுச்சபையினர் அறிவித்து, ஆரவாரப்படுகின்றனர். அரசியல் பெறுமானத்தில் இது நகைப்புக்குரியதாக (கோமாளிதனமாக) இருந்தாலும் அவர்களைப் பொறுத்தவரையில் இது பெரும் சாதனைதான். சிறுவர்கள், குரும்பட்டியில் தேர் செய்வதைப்போல (அது அந்தச் சிறுவர்களுக்கு படு சீரியஸான விடயமாகவே இருக்கும்) விளையாட்டாகத் தொடங்கப்பட்ட “பொதுவேட்பாளர்” விடயம், ஒரு மெய்யான தேராகுவதற்குப் பல சிக்கல்களைக் கொண்டதென்று அவர்கள் எண்ணியிருக்கவில்லை. போகப்போகத்தான் அதனுடைய சிக்கல்களும் சிரமங்கள…
-
- 0 replies
- 523 views
-
-
ஸ்ரீ லங்காவில் ஒரு CHI - LANKA நிக்ஸன் அமிர்தநாயகம் / Nixon Amirthanayagam (மூத்த ஊடகவியலாளர் / விரிவுரையாளர்) மகாசேனன் விக்னேஸ்வரன் / Makasenan Vigneswaran ( அரசறிவியல் பட்டதாரி / பத்தியாளர் )
-
- 0 replies
- 523 views
-
-
தமிழ்த் தேசிய வாக்குகளைக் குறிவைக்கும் பேரினவாதக் கட்சிகள் புருஜோத்தமன் தங்கமயில் / 2020 ஜூன் 17 'நித்திரையா தமிழா, நீ நிமிர்ந்து பாரடா, இந்த நிலத்தில் உனக்கும் உரிமையுண்டு, எழுந்து சேரடா...' என்று ஆரம்பிக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளின் பாடலொன்றை, ஜனவரி 12, 2018இல் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான பிரசாரக் கூட்டமொன்றில், ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஒலிபரப்பியது. அந்தப் பாடலின் இறுதி வரிகள், 'தலைவன் எங்கள் தலைவன் உண்டு நிமிர்ந்து பாரடா, தமிழ் ஈழம் எங்கள் கையில் என்று எழுந்து சேரடா...' என்றவாறாக அமைந்திருக்கும். இங்கு தலைவன் எனும் இடம், புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனைக் குறிக்கும். அப்போது, இலங்கையின் ஜனாதிபதியாகவும் சுதந்த…
-
- 1 reply
- 523 views
-
-
ஜெயலலிதாவை சந்தித்து என்ன பயன்? தமிழ் மக்களுக்குப் பயன்தருமோ இல்லையோ, அரசாங்கம் எதை விரும்பவில்லையோ, அதையே செய்வதில் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இன்பம் காண்கிறார் போலும். அதனால்தான், தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஜெயராமைச் சந்திக்க, அவர் பெருமுயற்சி எடுக்கிறார் என எண்ணத் தோன்றுகிறது. ஜெயலலிதா, தமது அரசியலுக்காக, எந்தக்கட்சி ஆட்சி செய்தாலும் இலங்கை அரசாங்கத்தை சாட ஏதாவது காரணத்தைத் தேடிக் கொண்டே இருப்பவர். ஒன்றில் மீனவர் பிரச்சினை, அல்லது கச்சதீவுப் பிரச்சினை, அதுவும் இல்லாவிட்டால் தமிழீழக் கோரிக்கை என, அவர் ஏதாவது ஒன்றை வைத்து இலங்கை அரசாங்கத்தைச் சீண்டிக் கொண்டே இருக்கின்றார். அதனால், தமிழக மக்களுக்கோ அல்லது இலங்கைத் தமிழர்களுக்கோ…
-
- 0 replies
- 523 views
-
-
இழுத்தடித்தல் மொஹமட் பாதுஷா / 2019 பெப்ரவரி 17 ஞாயிற்றுக்கிழமை, பி.ப. 02:13 Comments - 0 முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, உரியகாலம் வருவதற்குக் கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு முன்னரே, ஜனாதிபதித் தேர்தலை நடத்தினார். ஜோசியக்காரரின் கதையைக் கேட்டே அவர், அவ்வாறு செய்து, தோற்றுப் போனார் என்றாலும், அவரது அரசாங்கம் தேர்தல்களுக்காகப் பின்வாங்கியதாக விமர்சிக்கப்படுவது மிகக் குறைவாகும். ஆனால், தற்போதைய ஐ.தே.மு அரசாங்கம், குறிப்பாக மாகாண சபைகளுக்கான தேர்தலை இழுத்தடித்து வருகின்றது என்ற விமர்சனங்கள், பரவலாக எழுந்திருக்கின்றன. 13ஆவது அரசமைப்புச் சீர்திருத்தத்தின் பிரகாரம், 1988ஆம் ஆண்டு அறிமுகமான மாகாண சபைகள் முறைமையானது, மத்திய அரசாங்கத்திடம் குவிந்து…
-
- 0 replies
- 523 views
-
-
முள்ளிவாய்காலில் ஈழத்தமிழினம் பேரழிவைச் சந்தித்தன் பின்னர், தமிழினத்தின் இருப்பையும் வாழ்வையும் உறுதிப்படுத்துவதில் புலம்பெயர்ந்த தமிழர்களைப் பொறுத்தவரை இரண்டு விடயங்கள் முன்னிலைப்படுத்தப்பட்டன. இதனைதான் தமிழரல்லாத கல்விமான்களும், அரசியல் தலைமைகளும், ஏன் தேர்ந்த தமிழர் தேசிய செயற்பாட்டாளர்களும் வலியுறுத்திவருகின்றனர். புலம்பெயர்ந்த தமிழர்கள் தாம் வாழும் நாடுகளில் அரசியல் பார்வையாளர்கள் என்ற நிலையில் இருந்து பங்காளிகள், தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் என்ற நிலையை அடைதல். தாயகத்தில் தேர்தல் களங்களில் இருந்து தம்மை விளக்கிக் கொண்டவர்கள் புலம்பெயர்ந்த தேசங்களில் அரசியல் மயப்படுத்தப்பட்ட ஒரு இனக்குழுமமாக தம்மை மாற்றிக் கொள்ள வேண்டிய தேவை. அதனுடன் சேர்த்து பொருளாதாரத்…
-
- 0 replies
- 523 views
-
-
திசைமாறி பயணிக்கும் தேசிய அரசாங்கம் ஜனாதிபதியின் கொள்கை விளக்கவுரையும் மேதின அறை கூவலும் தேசிய அரசாங்கத்துக்குள் எழுந்துள்ள சவால்களை வெளிப்படுத்திக் காட்டுவதுடன் ஜனாதிபதியும் அவர் தலைமையிலான அரசாங்கமும் எதிர்காலத்தில் எதை நோக்கி நகரப்போகிறார்கள் என்ற விவகாரத்தை விளக்குவதாகவே காணப்படுகிறது. ஜனாதிபதியவர்கள் கடந்த 8 ஆம் திகதி பாராளுமன்றில் நிகழ்த்திய கொள்கை விளக்கவுரையானது இன்றைய அரசாங்கத்தின் நிலைப்பாட்டு போக்கையும் அது செய்யத்தவறிய முக்கிய விடயங்களையும் தெளிவுபடுத்துவதாக காணப்படுகிறது. தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கிடையே காணப்படும் அதிகார மோதல்க…
-
- 0 replies
- 523 views
-
-
2009 க்குப் பின்னரான தமிழ்மக்களின் நிலைமை: விளக்குகிறார் பேராசிரியர் சிதம்பரநாதன் 2009 க்குப் பிறகு எம் சமூகத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டங்கள் எதுவும் நடக்கவில்லை. மாறாக எம் சமூகத்தை சீரழிக்கும் வேலைகள் தான் இடம்பெறுகின்றன. 2009 க்குப் பின்னரான தமிழர் தாயக நிலைமைகள் குறித்து விளக்குகிறார் யாழ். பல்கலைக்கழகத்தின் முதுநிலை விரிவுரையாளரான கலாநிதி சிதம்பரநாதன்.
-
- 0 replies
- 523 views
-
-
சம்பந்தரின் இலக்கு? யதீந்திரா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டமை மற்றும், கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளின் ஒன்றான தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் குழுக்களின் பிரதித் தலைவர் பொறுப்பை ஏற்றுக் கொண்டமை ஆகியன தமிழ்த் தேசிய அரசியல் சூழலில் பலவிதமான விமர்சனங்களை ஏற்படுத்தியிருக்கிறது. சம்பந்தர் ஒரு சிங்கள எதிர்க்கட்சித் தலைவரைப் போன்று செயலாற்றப் போகின்றார் என்று ஒரு சாராரும், அவரால் தொடர்ந்தும் தமிழ் மக்களின் உரிமைசார் அரசியலை வீரியத்துடன் முன்னெடுக்க முடியாதென்று இன்னொரு சாராரும், இல்லை - இன்றைய சூழலை சாதகமாக கையாளுவதற்கு மேற்படி பதவி நிலைகளை காத்திரமாக பயன்படுத்த முடியுமென்று இன்னொரு தரப்ப…
-
- 4 replies
- 523 views
-
-
தமிழ் மக்கள் என்ன செய்ய வேண்டும்.....? நிலாந்தன் 23 பெப்ரவரி 2014 தமிழர்கள் ஜெனிவாவில் ஒரு தரப்பாக இல்லைத்தான். ஆனால், தமிழர்களின் அரசியலை முன்னிறுத்தியே அந்த அரங்கு திறக்கப்பட்டுள்ளது. எனவே, தாம் ஒரு தரப்பாக இல்லாத ஓர் அரங்கில் தமது பேரம் பேசும் சக்தியைத் தமிழர்கள் உயர்த்திக்கொள்வது எப்படி? அல்லது தாம் ஒரு தரப்பாக இல்லாத ஒரு அரங்கில் ஏனைய சக்தி மிக்க தரப்புக்கள் தன்னை ஒரு பகடைக்காயாகப் பயன்படுத்தாத படிக்கு அரசியலை செய்வது எப்படி? அல்லது சக்திமிக்க நாடுகளின் நிகழ்ச்சி நிரலுக்குள் தமது சொந்த நிகழ்ச்சி நிரலைக் கொண்டு போய் பொருத்துவது எப்படி? உண்மையில் இக்கேள்விகள் தமிழ் டயஸ்பொறாவை நோக்கியே கேட்கப்படவேண்டும். ஏனெனில், ஜெனிவா அங்குதானிருக்கிறது. தவிர தற்பொழுது அதாவது…
-
- 0 replies
- 522 views
-
-
இருப்பதைவிட்டு பறக்க ஆசைப்படுமா தமிழ்க்கட்சிகள்! பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக, கூட்டு எதிரணியினரால் கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை மீது எதிர்வரும் புதன்கிழமை 12 மணி நேர விவாதம் நடத்தப்படவுள்ளது. காலை 9.30 மணிக்குத் தொடங்கும் இந்த விவாதம், இரவு 9.30 மணிவரை நீடிக்கும் என்றும், அதனைத் தொடர்ந்து 9.30 மணிக்கு மேல் வாக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் பாராளுமன்றத் தகவல்கள் கூறுகின்றன. இரகசிய வாக்கெடுப்பு நடக்குமா - பகிரங்க வாக்கெடுப்பு நடக்குமா என்று இன்னமும் முடிவு செய்யப்படவில்லை. இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை வெற்றிகரமாகத் தோற்கடித்து விடுவோம் …
-
- 0 replies
- 522 views
-
-
07 APR, 2025 | 04:14 PM டி.பி.எஸ். ஜெயராஜ் பாகம் 1 இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வார இறுதி இலங்கை விஜயம் பெருமளவுக்கு வெற்றிகரமாக அமைந்ததாக பத்திரிகைகள் மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள் மூலமாக அறியக்கூடியதாக இருக்கிறது ஏப்ரில் 4 வெள்ளிக்கிழமை தொடங்கி ஏப்ரில் 6 ஞாயிற்றுக்கிழமை வரையிலான அவரின் விஜயத்தின் முக்கிய அம்சங்களாக இரு நாடுகளினதும் தேசிய பாதுகாப்புக்கு இடையிலான பிணைப்பின் தன்மையை அங்கீகரிக்கும் பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கை, இலங்கை மக்களின் சார்பில் ஜனாதிபதி அநுரா குமார திசாநாயக்கவினால் இந்திய பிரதமருக்கு வழங்கப்பட்ட 'ஸ்ரீலங்கா மித்ர விபூஷண ' விருது ஆகியவை அமைந்தன. இணக்கபூர்வமான ஒரு சூழ்நிலையில் முரண்பாட்டுக்குரியதாக அமைந்தது வடபகுதி…
-
- 1 reply
- 522 views
- 1 follower
-
-
தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு? - யதீந்திரா தமிழர்களுக்கு எப்படியானதொரு அரசியல் தீர்வு வரப்போகிறது? இப்படியொரு கேள்வியை எழுப்பினால் இரண்டு விதமான பதில்களை காணலாம். ஒரு சாரார் ஒன்றுமே நடக்கப்போவதில்லை என்பார்கள். இன்னொரு சாராரோ ஏதோ ஒன்று வரத்தான் போகிறது, ஆனால் அது என்னவென்றுதான் தெரியவில்லை என்பார்கள். ஒப்பீட்டடிப்படையில் ஒன்றுமே நடக்கப்போவதில்லை என்று சொல்வோரே அதிகம். சிறிலங்காவின் கடந்தகால வரலாற்றின் அடிப்படையில் நோக்கினால் ஒன்றுமே நடக்கப்போவதில்லை என்று சொல்வோரின் வாதம் தர்க்கரீதியில் வலுவுடையதாகும். ஏனெனில் கடந்த காலத்தில் இலங்கைத் தீவை வெற்றிகரமாக ஆட்சிசெய்த எந்தவொரு அரசாங்கங்களும் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற முயற்சிக்கவில்லை…
-
- 0 replies
- 522 views
-
-
முள்ளிவாய்க்கால் என்னும் ஊர்ப்பெயர் தமிழர் அரசியலில் ஒரு குறியீடாகிவிட்டது. அதேவேளை, தமிழர் அரசியலும் முள்ளிவாய்க்காலுக்கு முன்னரான அரசியல், முள்ளிவாய்க்காலுக்கு பின்னரான அரசியல் என்றவாறான அவதானத்தைப் பெறுகிறது. ஆனால், இது தொடர்பில் ஆக்கபூர்வமான விவாதங்கள் இடம்பெற்றிருக்கின்றனவா என்றால் வழமைபோல சோர்வு ஒன்றே எஞ்சிக்கிடக்கிறது. முள்ளிவாய்க்காலை முன்னிறுத்தி ஒவ்வொரு வருடமும் பலவாறான வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றிருக்கின்றன. இப்போதும் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. இன்றும் ஒரு நினைவுச் சின்னம் கட்டப்பட வேண்டுமென்று வாதிடுவோர் இருக்கின்றனர். அவ்வாறானதொரு நினைவுச் சின்னத்தை கட்டினால், அது தமிழ் மக்களின் கூட்டுணர்வை வெளிப்படுத்துவதற்கான தளமாக அமையும் என்றும் அவ்வாறானவர்கள் கூறுகி…
-
- 0 replies
- 522 views
-
-
ஜெனிவாப் போர்க்களம் புஸ்வாணமாகுமா? நல்லிணக்க ஆணைக்குழு விவகாரம் அரசிற்கு பொல்லைக் கொடுத்து அடிவாங்கிய கதையாகிவிட்டது. அதன் சிபார்சுகளை உடனடியாக அமுல்படுத்த வேண்டும் என்ற அழுத்தம் அரசிற்கு வரத்தொடங்கி விட்டது. ஏற்கனவே போர்க்குற்ற விசாரணை விடயம் நிலுவையாக உள்ள நிலையில் இது புதிய தலையிடிதான். நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை போர்க்குற்ற விவகாரத்தை சிறிதளவுகூட சாதகமான வகையில் அணுகவில்லை என மனிதஉரிமை நிறுவனங்கள் தொடக்கம் மேற்குலக சக்திகள் வரை உறுதியாகக் கூறிவிட்டன.இதுவிடயத்தில் உள்நாட்டு முயற்சிகள் தோல்வியடைந்துவிட்டதால் சர்வதேச பொறிமுறை தேவை என்ற குரலும் சற்று தீவிரமாக மேலெழும்ப ஆரம்பித்துள்ளன. அமெரிக்கா இந்த விடயத்தில் உறுதியாக நிற்பதுதான் அரசிற்கு புதியதலையிடி. போ…
-
- 1 reply
- 522 views
-