அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9207 topics in this forum
-
02 Nov, 2025 | 12:20 PM (லியோ நிரோஷ தர்ஷன் ) ஒரு நாட்டின் கட்டமைப்பிலும், பாதுகாப்பிலும், அதன் இலக்குகளை அடைவதிலும், பொதுமக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வதிலும் அரச நிர்வாகம் ஒரு முக்கியப் பங்கை வகிக்கிறது என தெரிவித்த இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பலவீனமான அரச நிர்வாகமே இலங்கை, பங்களாதேசம் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளின் ஆட்சி மாற்றத்திற்கு காரணம் என்றும் குறிப்பிட்டார். ராஷ்டிரிய ஏக்தா திவாஸ் (தேசிய ஒருமைப்பாட்டு தினம்) நிகழ்வை முன்னிட்டு நேற்று உரையாற்றிய அஜித் தோவல், நிர்வாகத்தில் வளர்ந்து வரும் சவாலாக, பொதுமக்களைத் திருப்திப்படுத்த வேண்டியதன் அவசியம் அதிகரித்து வருவதை எடுத்துரைத்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், பொதுமக்கள் அதிக விழிப்…
-
- 0 replies
- 131 views
- 1 follower
-
-
'பழைய குருடி கதவைத் திறடி' என்ற நிலைக்கு வந்துள்ளோம்: விக்னேஸ்வரன் ஆதங்கம்! யாழ்ப்பாணம்: வடகிழக்கு தமிழ் மக்களின் உரிமைகள், எதிர்பார்ப்புகள், வருங்காலம் யாவும் இன்று ஒரு மயக்கமுற்ற நிலையை அடைந்துள்ளன என்றும், “பழைய குருடி கதவைத் திறடி” என்ற நிலைக்கு வந்துள்ளோம் என்றும் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஆதங்கத்துடன் கூறியுள்ளார். வடமாகாணசபையின் சிறப்பு கூட்டத்தில், தமிழர் தாயகத்தில் நடைபெற்றதும், நடைபெற்றுக் கொண்டிருப்பதும் இன அழிப்பு என சுட்டிக் காட்டும் தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய முதலமைச்கர் விக்னேஸ்வரன், "பலத்த சிரமங்களுக்கிடையே அந்த உறுதிமொழியை நிறைவேற்றச் சந்தர்ப்பம் கிடைத்ததற்காக மகிழ்ச்சியடைகிறேன். வடகிழக்கு தமிழ் மக்களின் உரித்துக்…
-
- 0 replies
- 547 views
-
-
'பாலை' மறவராவோம் தமிழீழம் பெறுவோம் [ கீற்று ] - [ Jan 06, 2012 15:10:05 GMT ] தமிழ் சினிமாவின் ஆராம்ப காலங்களில் புராணக் கதைகளும், தேசபக்தி இந்திய சுதந்திர போராட்ட கதைகளும் அதிக அளவில் ஆக்கிரமித்திருந்தன. அதன் பிறகு, திராவிட இயக்க உணர்வு பெற்றவர்கள் திரை உலகை ஆக்கிரமித்து, பிறகு பழைய மரபை உடைத்தனர். (பராசக்தி, நாடோடி மன்னன், வேலைக்காரி). நடுத்தர மற்றும் மேட்டுக்குடி வர்க்க நலன்களை மையப்படுத்தியும், குடும்ப உறவுகளுக்கிடையே ஏற்படும் பிரச்சனைகள் குறித்தும் திரைப்படங்களை வடிவமைத்தவர் கே.பாலசந்தர். இட ஒதுக்கீட்டை விமர்சிக்கும் அரசியலை திரையில் புகுத்தியதில் முன்னோடி இவரே. தமிழ்த்திரையை கிராமத்து மனிதர்களின் களமாகவும், கிராமங்களை தமிழ்த்திரையின் தவிர்க்கமுடியாத அங்க…
-
- 0 replies
- 714 views
-
-
ஏதோவொரு பிடிப்பில், நம்பிக்கையில், ஆதார அச்சில், எதிர்பார்ப்பில், காத்திருப்பில், ஒரு புள்ளியை நோக்கிய பயணமாக இருந்த வாழ்க்கை தேங்கிவிட்டது. இரவில் அடர்காட்டில் திசை தொலைத்த திகைப்பினை நினைவுறுத்துகின்றன இந்நாட்கள். முன்னைப்போல நண்பர்களின் முகங்களை எதிர்கொள்ள முடிவதில்லை. சந்திப்புகளைத் தவிர்த்துவிடுகிறோம். தொலைபேசி எண்களைக் கண்ணெடுக்காமலே நிராகரித்துவிடுகிறோம். எல்லாவற்றிலும் சலிப்பும் மந்தமும் படர்ந்துவிட்டிருக்கிறது. பிடிவாதமான சிறையிருப்புகளை மீறி யாரையாவது பார்த்துவிட நேரும்போது, ‘தயவுசெய்து அரசியல் பேசவேண்டாம்’என்று கேட்டுக்கொள்கிறோம். ஆனால், பேச்சு முட்டி மோதி அங்குதான் வந்து தரைதட்டுகிறது. பழகிய, புளித்த, சலித்த, விரும்பாத வார்த்தைகளை நாம் பேசவும் கேட்கவும் செய்…
-
- 2 replies
- 884 views
-
-
'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளையும் வரலாற்று சான்றுகளையும் அறிவோமா? / அறிமுகம் 01 சக்கரவர்த்தி அசோகன் செய்த தவறா, இல்லை புத்தரின் போதனைகளை சரியாக கடைப்பிடிக்காத அல்லது பரப்பாத தலைவர்கள் செய்த தவறா நான் அறியேன் ? ஏன் என்றால் புத்தர் 'கடவுளை மையமாகக் கொண்ட சமயங்களில் எது சரியானது, எது தவறானது, என்பதை அறிய அச்சமயவாதிகள் சொல்வதை நாம் செய்ய வேண்டும். ஆனால் மனிதனை மையமாகக் கொண்ட பௌத்த சமயத்தில் எது சரி, எது தவறு என்பதை அறிய நம்மை முழுமையாகப் புரிந்து கொள்ளவும், உணர்ந்து கொள்ளவும் வேண்டும். இவ்வாறு நம்மை உணர்ந்து கொள்வதால் எழும் நன்னெறி ஒரு கட்டளையினால் உருவாக்கப்படும் நன்னெறியை விட உறுதியானவையாகவும், பலம் வாய்ந்தவையாகவும் இருக்கும்' என மிக தெளிவாக…
-
-
- 53 replies
- 6.9k views
-
-
'மறைந்திருக்கும் உண்மைகள் - தமிழ்நாடு நாடாளுமன்ற குழுவின் இலங்கைப் பயணம் -1' இந்திய நாடாளுமன்றத் தூதுக்குழுவின் இலங்கை விஜயம் குறித்த சர்ச்சைகள் தமிழ்நாட்டில் எழுந்துள்ளன. இப்பயணம் வெறும் கண்துடைப்பு எனவும் இப்பயணத்தின் உண்மையான நிகழ்ச்சி நிரல் என்ன என்பது குறித்தும் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா வெளிப்படுத்தியுள்ள கருத்துகள் மிகவும் சரியானவை. இலங்கையில் இன்று தமிழ் மக்கள் எதிர்கொண்டு நிற்கும் அரசியல் சூழலை இந்திய நாடாளுமன்றத் தூதுக் குழு நேரடியாக விஜயம் செய்துதான் அறியவேண்டும் என்ற அவசியம் ஏதுமில்லை. இது தொடர்பான உண்மைகளை சர்வதேச ஊடகங்களும் மனிதவுரிமை அமைப்புக்களும் தமிழ் மக்களின் பிரதிநிதிகளும் பல ஆண்டுகளாகவே வெளிப்படுத்தி வந்துள்ளனர். அரைநூற்றாண்டுக்கும் மேல…
-
- 0 replies
- 1.4k views
-
-
Published By: RAJEEBAN 17 MAY, 2024 | 06:17 PM முள்ளிவாய்க்கால் கஞ்சியை தயாரித்து வழங்குவது ஏன் பிரச்சினைக்குரிய விடயம்? முள்ளிவாய்க்கால் கஞ்சி என்பது விடுதலைப்புலிகளுடன் தொடர்புபட்ட விடயமல்ல. இந்த விவகாரத்தை அரசாங்கம் தவறான விதத்தில் கையாள்கின்றது என சட்டத்தரணியும் மக்கள் பேரவைக்கான இயக்கத்தின் உறுப்பினருமான சிறீநாத் பெரேரா தெரிவித்தார். நேர்காணலின்போது இதனை தெரிவித்த ஸ்ரீநாத் பெரேரா கூட்டு வேதனை கவலை துயரம் என்பன பொங்கி பெருகி வெளியேறும் இடம் முள்ளிவாய்க்கால் எனவும் குறிப்பிட்டார். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் தொடர்ச்சியாக கலந்துகொண்டுள்ள ஸ்ரீநாத் பெரேரா, வலிந்து காணாமல் ஆக்கப்ட்டோரின் உறவுகளின் போராட…
-
-
- 34 replies
- 1.9k views
- 1 follower
-
-
'மோடியின் வெற்றி உலகிற்கும், இந்தியாவிற்கும் கெடுதியானதொரு செய்தியாகும்' இந்தியப் பொதுத்தேர்தலில் நரேந்திர மோடிக்குக் கிடைத்திருக்கும் பிரம்மாண்டமான வெற்றி இந்தியாவிற்கும், உலகிற்கும் நல்லதொரு செய்தியல்ல. குறிப்பாக இந்தியாவின் ஆன்மாவுக்குத் தீங்கானது என்று லண்டன் கார்டியன் பத்திரிகை இந்தியத் தேர்தல் முடிவு குறித்து எழுதிய ஆசிரியர் தலையங்கத்தில் குறிப்பிட்டிருக்கிறது. அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது, வரலாற்றில் மிகப்பெரிய தேர்தலில் மோடி என்ற ஒரு மனிதன் வெற்றி பெற்றிருக்கிறார். சுதந்திர இந்தியாவின் அரசியல் வரலாற்றில் 1971 ஆம் ஆண்டுக்குப் பிறகு தனியொரு கட்சியை அறுதிப் பெரும்பான்ம…
-
- 0 replies
- 319 views
-
-
பட மூலாதாரம், PMD SRI LANKA படக்குறிப்பு, ரணில் விக்ரமசிங்க கட்டுரை தகவல் ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 28 ஆகஸ்ட் 2025 புதுப்பிக்கப்பட்டது 29 ஆகஸ்ட் 2025 இலங்கையின் மூத்த அரசியல்வாதியும், 6 தடவை பிரதமர் பதவியை வகித்தவரும், ஒரு தடவை ஜனாதிபதியாக பதவி வகித்தவருமான ரணில் விக்ரமசிங்க அவ்வப்போது சர்ச்சைகளை எதிர்நோக்கி வருவதை கடந்த பல பத்தாண்டுகளாகவே காணக்கூடியதாக இருந்தது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தை தன்வசம் கொண்டுள்ள ரணில் விக்ரமசிங்க, கட்சியின் உள்ளக பிரச்னைகள் முதல் தேசிய அரசியலில் பிரச்னை வரை அவ்வப்போது பல்வேறு சவால்மிகுந்த பிரச்னைகளை எதிர்நோக்கி வந்துள்ளார். தனது கட்சியின் உள்ளக பிரச்னைகள், கூட்டணி கட்சிகளின் பிரச்னைகள் என சந்தித்து வந்த ரணில் விக்ரமசி…
-
- 0 replies
- 295 views
- 1 follower
-
-
Published By: Rajeeban 04 Mar, 2025 | 12:01 PM விடுதலைப்புலிகள் பயன்படுத்திய ஆயுதங்களிற்கு என்ன நடந்தது என்பது குறித்து எந்த தகவலும் இல்லை என தெரிவித்துள்ள வன்னி மற்றும் கிழக்கு மாகாணத்திற்கான பாதுகாப்பு படைகளின் தளபதி மேஜர்ஜெனரல் பொனிபஸ் பெரேரா விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் சில தெற்கிற்கு கொண்டுவரப்பட்டு பாதள உலக குழுக்களின் கரங்களை சென்றடைந்துள்ளன என குறிப்பிட்டுள்ளார் டெய்லிமிரருக்கு வழங்கியுள்ள பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார் கேள்வி- யுத்தத்தின் பின்னரான சூழ்நிலையை நாங்கள் கருத்தில் கொள்வோம்இயுத்தம் முடிவடைந்த பின்னர் நாங்கள் பாதுகாப்பாக இருப்போம் என நினைத்தோம் எனினும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்றது. தற்போது சிறிய ரக ஆயுதங்களை பலர் பயன்படுத்துவது போல உள…
-
-
- 2 replies
- 310 views
- 1 follower
-
-
தமிழ் இன விடுதலைப் போராட்டம்” என்பது அது எவ்வகையில் அமைந்தாலும் குறித்த தமிழ் இன மக்களின் பூரண ஆதரவு இல்லாமல் மேற்கொள்ள முடியாத ஒன்று ஒட்டு மொத்த மக்களும் விடுதலையென்ற ஒரே இலட்சியத்துக்காகத் தமது பங்களிப்பைச் செய்ய முன்வர வேண்டும். அவ்வாறு முன்வரும் போது தான், விடுதலைக்கான மக்கள் புரட்சியும், அதன் மூலமான இன விடுதலையும் சாத்தியமாகும். தமிழர் நாம் ஆண்ட பூமி தமிழுக்கும், தமிழ் மக்களுக்குமான தனித்துவ வரலாற்றைக் கொண்டு வாழ்ந்த இனம். தமிழ் மக்களின் அபிலாசைகளான சுயநிர்ணய உரிமை, மரபுவழித் தாயகம், தமிழ்த் தேசியம் என்பன அங்கீகரிக்கப்பட “தனிநாடு தமிழீழம்” வேண்டும் எனப் பிரகடனப்படுத்தி சர்வதேச சமூகத்தைத் தமிழர் தேசத்தின் பால் திரும்பிப் பார்க்க வைத்த இன விடுதலைப் போராட்டம்.…
-
- 0 replies
- 467 views
-
-
‘300 கிராமங்கள்’ பற்றிய விக்கியின் கருத்தின் பாரதுரம் மொஹமட் பாதுஷா / 2019 ஜூலை 29 திங்கட்கிழமை, மு.ப. 11:54 Comments - 0 வட மாகாண முன்னாள் முதலமைச்சரும் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசருமான சி.வி. விக்கினேஸ்வரன் அண்மையில், “300 தமிழ்க் கிராமங்கள் அழிக்கப்பட்டு, அவை முஸ்லிம் கிராமங்களாக மாற்றப்பட்டுள்ளன” என்ற தொனியில் ஊடகங்களுக்குத் தெரிவித்த கருத்து, முஸ்லிம் அரசியல்வாதிகளிடையே மட்டுமல்லாமல் சாதாரண பொதுமக்களிடையேயும் பாரிய விமர்சனத்தைத் தோற்றுவித்து இருக்கின்றது. பொறுப்புள்ள பதவிவகித்த ஒருவரான விக்கி, உண்மைக்குப் புறம்பான ஒரு தகவலை, எந்த அடிப்படையில் முன்வைத்தார் என்பதுதான் இங்கு முன்வைக்கப்படுகின்ற முதலாவது கேள்வியாகும். இந்த வினாவுக்கு, அவர் இந்த நி…
-
- 0 replies
- 954 views
-
-
‘அச்சுறுத்தல்களுக்குள்ளாகும் கிழக்கின் கரையோரப் பிரதேசங்கள்’ – மட்டு.நகரான் June 18, 2021 வடகிழக்கு தமிழர்களைப் பொறுத்த வரையில், இலங்கையில் தொடர்ச்சியான அழிவுகளையும், இன்னல்களையும் எதிர்கொண்ட சமூகமாகவே தொடர்ந்தும் இருந்து வருகின்றது. இழப்புகளையும், வேதனைகளையும், மீளமுடியாத துன்பங்களையும் தொடர்ச்சியாக அனுபவிக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தமிழ் மக்கள் தள்ளப்படுகின்றனர். தமிழ் மக்களின் வாழ்க்கையில் இயற்கையும், செயற்கையான செயற்பாடுகளும் மாறிமாறி ஏற்படுத்தும் துன்பங்களை பேரினவாத அரசுகள் தங்களுக்குச் சார்பாக மாற்றிக் கொள்ளும் செயற்பாடுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக கிழக்கு மாகாணம் தொடர்ச்சியாக ஆக்கிரமிப்புப் பிரதேச…
-
- 0 replies
- 428 views
-
-
‘அடி மடியில் கை’ மாகாணசபைத் தேர்தலைப் பழைய முறையில் நடத்த வேண்டுமென்று, சிறுபான்மைக் கட்சிகள் முனைப்புடன் கோரிக்கைகளை முன்வைத்துக் கொண்டிருக்கின்றன. மாகாணசபைத் தேர்தல்கள் திருத்தச் சட்ட மூலத்துக்கு ஆதரவாக ‘கண்களைப் பொத்திக் கொண்டு’ கையை உயர்த்தியவர்கள்தான், இப்போது பழைய முறையில் மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு கடுமையாக வலியுறுத்துகின்றனர் என்பது கவனத்துக்குரியதாகும். மாகாணசபைத் தேர்தல்கள் சட்டம் திருத்தப்பட்டு, புதிய முறைமை உருவாக்கப்பட்டுள்ளமை பற்றி நாம் அறிவோம். அந்த வகையில் மூன்று முக்கிய திருத்தங்கள் அதில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவையாவன: 1. மாகாணசபைத் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்படும் நியமனப்பத்திரத்திலுள்ள மொத்த வேட்பாளர்களின…
-
- 0 replies
- 724 views
-
-
‘அதையும் தாண்டிப் புனிதமானது’ கடந்த ஆண்டு டிசெம்பர் மாதம் 29ஆம் திகதி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில், உள்ளூராட்சி சபைகளில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான தெளிவூட்டும் செயலமர்வு, யாழ். நகரில் உள்ள இலங்கைவேந்தன் கல்லூரியில் நடைபெற்றது. “புதிய அரசமைப்பில், சமஷ்டிக்கும் மேலான சமஷ்டித் தன்மைகள் இருக்கின்றன. அதைப் புரிந்து கொள்ளாதவர்களே, அதற்கு மாறாகக் கருத்து வெளியிடுகின்றனர்” எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எம். ஏ சுமந்திரன் தெரிவித்திருந்தார். ஆறு மாதங்களின் பின்னர், கடந்த மே மாத இறுதியில், கொழும்பு ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில் சட…
-
- 0 replies
- 487 views
-
-
‘அமெரிக்காவிடமிருந்து இலங்கை தப்ப முடியாது’ என சம்பந்தன் சொன்னது எதற்காக? அதன் அரசியல் விளைவுகள் எவ்வாறானதாக இருக்கும்? அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோவின் இலங்கைக்கான வருகையைத் தொடர்ந்து பிராந்தியத்தில் ஒரு பதட்டமான நிலைமை உருவாகி இருக்கின்றது. இதற்கு காரணம் இலங்கை தெளிவாக தன்னுடைய வெளியுறவுக் கொள்கையை மாற்றிக்கொள்வதான ஒரு சமிஞ்ஞையை வெளிப்படுதியிருப்பதுதான். இந்தப் பின்னணியில், “பொறுப்பு கூறும் விடயத்தில் இலங்கை அரசு அமெரிக்காவிடம் இருந்து தப்ப முடியாது ” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நேர்காணல் ஒன்றில் கூறியிருக்கின்றார். சம்பந்தன் எதற்காக அவ்வாறு சொன்னார்? அவரது நோக்கம் என்ன? இதனால் உருவாகப்போகும் அரசியல் விளைவு என்ன? தமிழ் தலை…
-
- 1 reply
- 759 views
-
-
‘அரசியல் ஆசை’ மொஹமட் பாதுஷா / 2019 ஜூலை 14 ஞாயிற்றுக்கிழமை, பி.ப. 07:18 Comments - 0 உலகில் நடந்து கொண்டிருக்கின்ற அனைத்து அரசியல், பொருளாதார, பாதுகாப்பு, இனத்துவ நகர்வுகளுக்குப் பின்னால், ஓர் அரசியல் ஆசையும் பதவி மோகமும் ஒளிந்து கொண்டிருக்கிறது. உலக அரசியலின் விளையாட்டுப் பொருள்களாகவே மக்கள் சமூகத்தைக் கருத வேண்டியிருக்கிறது. எனவே, அரசியல், மக்களுக்கு (நல்லது) எதையும் சாதிக்க முடியவில்லை என்றாலும் அரசியலுக்காக ‘அவர்கள்’ எதையும் செய்வார்கள் என்ற அடிப்படையில் புரிதல் இன்றி, உலக அரசியலையோ, இலங்கைச் சம்பவங்களையோ திறனாய்வு செய்ய முடியாது என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும். உலகில் நாமறிந்த நிதர்சனங்களின் அடிப்படையில் நோக்கினால், உரிமைகளுக்காக, இறையாண்…
-
- 0 replies
- 538 views
-
-
‘அரந்தலாவ படுகொலை’ விசாரணைகள்: ராஜபக்ஷர்களின் புதிய திட்டம் புருஜோத்தமன் தங்கமயில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம், ‘அரந்தலாவ படுகொலை’ தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக, சட்டமா அதிபர் திணைக்களம், உயர்நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (03) அறிவித்திருக்கின்றது. 1987ஆம் ஆண்டு, ஜூன் இரண்டாம் திகதி, அம்பாறை, அரந்தலாவ பகுதியில் வைத்து, இளம் பிக்குகள் அடங்கிய 33 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்தப் படுகொலையை, தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்டதாக, அரசாங்கம் குற்றஞ்சாட்டி வந்திருக்கின்றது. இந்த நிலையில், குறித்த படுகொலைச் சம்பவத்தில், மயிரிழையில் உயிர்தப்பிய ஒருவர் தொடர்ந்த வழக்கின் அடிப்படையிலேயே, 34 வருடங்களுக்குப் பிறகு, அரந்தலாவ படுகொலை தொ…
-
- 1 reply
- 691 views
-
-
‘அறகலய’ எனும் அரசியல் ஆயுதம் என். கே அஷோக்பரன் Twitter: @nkashokbharan சிங்களத்தில் ‘அறகலய’ என்றால், ‘போராட்டம்’ என்று பொருள். இந்தாண்டு இலங்கையில் இடம்பெற்ற ‘கோட்டா கோ ஹோம்’ போராட்டம் பெரும் மக்கள் எழுச்சியானது. இது, ‘அறகலய’ என்றே பொதுவில் இனங்காணப்படுகிறது. இந்தக் ‘கோட்டா கோ ஹோம்’ மக்கள் எழுச்சிக்கு, ஆரம்பத்தில் இலங்கை எங்கும் ஆங்காங்கே கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிக்கு எதிராக இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களே ஆரம்பப்புள்ளி. இவை கட்சி சார்ந்த அல்லது இடதுசாரி அமைப்புகள் சார்ந்த ஆர்ப்பாட்டங்கள் அல்ல! பொதுமக்கள், தாமாக வீதிக்கு இறங்கி, அமைதி வழியில் ஆரம்பித்த ஆர்ப்பாட்டங்கள். இப்படி, பொதுமக்கள் கொழும்பில் ஒன்று திரண்ட இடங்களில், ஆர்ப்பாட்டங்களுக்கு எ…
-
- 0 replies
- 447 views
-
-
‘அவதந்திரம் தனக்கு அந்தரம்’ காரை துர்க்கா / 2018 நவம்பர் 20 செவ்வாய்க்கிழமை, மு.ப. 01:46 Comments - 0 ‘திருகோணமலை பன்குளத்தில் புலிகளின் கண்ணிவெடியில் சிக்கி, 11 பொலிஸார் கொல்லப்பட்டனர். மேலும் எட்டுப் பேர் காயமடைந்தனர். வவுனியா, ஓமந்தையில் படையினரின் எறிகணை வீச்சில், புலிகளில் எட்டுப் பேர் மரணமடைந்துள்ளனர்’. இவை, பத்து ஆண்டுகளுக்கு முற்பட்ட அன்றாடச் செய்திகள் ஆகும். ஆனால், நாடாளுமன்றத்தில் மஹிந்த அணியினரின் தாக்குதலில் 11 பொலிஸார் காயமடைந்தனர் என்பது, இன்றைய செய்தி ஆகும். கலைகளை வளர்க்கும் கலா மன்றங்கள், வாசிப்பு, பொது வேலைகளை ஊக்குவிக்கும் சனசமூக நிலையங்கள், கிராமங்களை அபிவிருத்தி செய்யும் கிராம அபிவிருத்தி மன்றங்கள் எனப் பல அமைப்புகள் நாட்ட…
-
- 0 replies
- 954 views
-
-
‘ஆடு’ நனைகிறதென்று ‘அமெரிக்கா’ அழுததாம்... ‘கேட்கிறவன் கேனயனாய் இருந்தால்....’ என்று தொடங்குகிற பழமொழி ஒன்றுண்டு. சில நாள்களாகவே அது, என் மனதில் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக்கிறது. இலங்கை இராணுவத் தளபதிக்கு, அமெரிக்கா பயணத் தடை விதித்திருக்கிறது. இது, இரண்டு வகையான எதிர்வினைகளை உருவாக்கியுள்ளது. ஒருபுறம், உள்நாட்டில் அமெரிக்காவுக்கு எதிரான மனோநிலை தீவிரமடைந்துள்ளது. இது, எதிர்வரும் பொதுத்தேர்தலில், ஆளும் கூட்டணி எதிர்பார்த்திருக்கும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை நோக்கி, அவர்களை நகர்த்தும். மறுபுறம், தமிழ்த் தரப்புகள் அமெரிக்கா, இன்னமும் தமிழர்கள் பக்கம் நிற்கிறது என்ற ‘புருடா’வை, இன்னொரு முறை எந்தவொரு வெட்கமும் இல்லாமல் சொல்வதற்கும் வழ…
-
- 2 replies
- 1.2k views
-
-
‘இதய பூமி’; இன்று ‘இருள் நிறைந்த பூமி’ சங்ககால குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்ற நிலத்துக்கே உரித்தான சகல பண்புகளையும் தன்னகத்தே கொண்ட பெருமைகளையுடைய மாவட்டமாக, முல்லைத்தீவு மாவட்டம் விளங்குகின்றது. வடக்கு மாகாணத்துக்குட்பட்ட வவுனியா மாவட்டத்தின் பெரும் பகுதியையும் மன்னார் மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களின் சிறு பகுதிகளையும் கொண்டு, 1978ஆம் ஆண்டடில் உருவாக்கப்பட்டதே, இந்த முல்லைத்தீவு மாவட்டமாகும். கரைதுறைப்பற்று, ஒட்டுசுட்டான், புதுக்குடியிருப்பு, மாந்தை கிழக்கு, துணுக்காய், மணலாறு (சிங்கள குடியேற்றத்தால் வெலிஓயா) என ஆறு (06) பிரதேச செயலாளர்கள் பிரிவுகளையும் 136 கிராம சேவையாளர்கள் பிர…
-
- 0 replies
- 546 views
-
-
ஈழத்தில் கவிதைச் செயற்பாடுகளால் அறியப்பட்டவர் கருணாகரன். ஊடகவியலாளராகவும் செயற்பட்டு வருகிறார். ‘ஒரு பொழுதுக்குக் காத்திருத்தல்’, ‘ஒரு பயணியின் நாட்குறிப்புகள்’, ‘பலியாடு’, ‘எதுவுமல்ல எதுவும்’ என நான்கு கவிதை நூல்கள் இதுவரையில் வெளிவந்திருக்கின்றன. பத்திரிகைகளிலும் இணையங்களிலும் தொடர்ச்சியாக அரசியல்ப்பத்திகள் எழுதி வருகிறார். ‘வெளிச்சம்’ என்ற கலை, இலக்கிய ஏட்டின் ஆசிரியராகவும், காட்சி ஊடகத்திலும் பணியாற்றியுள்ளார். ஈழப்போராட்டத்தின் ஆரம்பகாலத்தில் ஒரு போராளியாகச் செயற்பட்ட அவர் எழுச்சியும் வீழ்ச்சியும் கொண்ட அந்த வரலாற்றின் கணிசமான காலத்தில் அதனுடன் பயணித்திருக்கிறார். அரசியல், இலக்கியம் மற்றும் சமூகச் செயற்பாடுகளில் தொடர்ச்சியான அவதானிப்பையும் பங்கேற்பையும் கொண்டிருக்கும…
-
- 6 replies
- 1k views
-
-
‘இந்த அரசாங்கம் எல்லா இலங்கை மக்களுக்குமான அரசாங்கம் அல்ல’ -க.வி.விக்னேஸ்வரன் 51 Views ‘இந்த அரசாங்கம் எல்லா இலங்கை மக்களுக்குமான அரசாங்கம் அல்ல’ என நாடாளுமன்ற உறுப்பினரும் நீதியரசருமாகிய க.வி.விக்னேஸ்வரன் நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினரும் நீதியரசருமாகிய க.வி.விக்னேஸ்வரன் மேலும் உரையாற்றுகையில், “இந்த அரசாங்கம் எல்லா இலங்கை மக்களுக்குமான அரசாங்கம் அல்ல என்பதை சொல்லிலும் செயலிலும் நிரூபித்து வருகின்றது. தங்களுக்கு வாக்களித்த பௌத்த சிங்கள மக்களின் விருப்பங்களுக்கு அமைவாகவே செயற்படமுடியும் என்று ஜனாதிபதி மற்றும் அரசாங்க உறுப்பினர்கள் வெளிப்படையாகவே கூறிவருகின்றனர். …
-
- 0 replies
- 374 views
-
-
‘இந்திராவின் முழக்கம்’ தேர்தல் களத்தைத் திசை திருப்புமா? எம். காசிநாதன் / 2019 ஏப்ரல் 01 திங்கட்கிழமை, பி.ப. 12:14 Comments - 0 ‘வறுமை ஒழிப்பு’ இந்தியாவில் தேர்தல் பிரசாரமாகி இருக்கிறது. மாநிலக் கட்சிகளில் இருந்து, தேசியக் கட்சியான காங்கிரஸ் வரை, தேர்தல் விஞ்ஞாபனத்தில் முக்கிய அங்கமாக, ‘வறுமை ஒழிப்பு’ இருக்கின்றது. 1971இல் ‘வறுமை ஒழிப்பு’ முழக்கத்தை கையிலெடுத்து, அமோக வெற்றியைப் பெற்றார் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பிரதமர் வேட்பாளராகக் களத்தில் நின்ற இந்திரா காந்தி. பிறகு ‘இந்தியாதான் இந்திரா; இந்திராதான் இந்தியா’ என்ற முழக்கங்கள் நாட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம் கேட்கத் தொடங்கியது. பாரதிய ஜனதாக் கட்சி போன்ற வலுவான தேசியக் கட்சி ஒன்று, அப்போது க…
-
- 0 replies
- 527 views
-